டூரிஸ்ட் ஃபேமிலி திரை விமர்சனம்

 

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், படகில் ஏறி கடல் வழியாக தமிழக எல்லையான ராமேஸ்வரம் வந்தடைகிறது. 

சசிகுமாரின் மனைவி சிம்ரன். இவர்களது மகன்களாக மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் என நால்வரும் ராமேஸ்வரம் வகின்றனர். சிம்ரனின் சகோதரனாக வரும் யோகிபாபு, இவர்களை அழைத்துச் செல்ல அங்கு காத்திருக்கிறார். 

இவர்கள் அனைவரும் அங்கிருக்கும் போலீஸால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அதில் போலீஸாக இருக்கும் ரமேஷ் திலக், இவர்களது கதையை கேட்டு, அங்கிருந்து பாதியில் இறக்கி விடுகிறார். தொடர்ந்து அங்கிருந்து சென்னை வரும் சசிகுமாரின் குடும்பம். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். அங்கிருக்கும் நபர்களிடம் தங்களது அன்பை வெளிப்படுத்தி நல்லதொரு நட்பில் இருந்து வருகிறது சசிகுமாரின் குடும்பம். 

சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்தில் வந்திறங்கிய சமயத்தில், அங்கு ஒரு பாம் வெடிக்கிறது. இந்த பாம் வெடித்ததற்கு காரணம்சசிகுமாரின் குடும்பம் தான் என்று போலீஸ் நினைக்க அவர்களைத் தேடி சென்னை வருகிறது ராமேஸ்வரம் போலீஸ். 

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.


செண்டிமெண்ட், மனிதம், எமோஷன்ஸ், என பல பரிணாமங்களில் சசிகுமாரின் நடிப்பு நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. இவருக்கு மனைவியாக வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை 90-களுக்கு இழுத்துச் சென்று விட்டார் நடிகை சிம்ரன். மகன்களாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் படத்திற்கு மிகப்பெரும் தூண் தான். எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி என படத்தில் நடித்த அனைவருமே மிக கச்சிதமாக அவர்தம் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றனர்.


அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமான ஒரு சூழலில் கதை நடப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பு ஷார்ப். ஷான் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை அழகாக கடத்துகிறது. 


இந்த படத்திற்கு பெரிய பலமே எமோஷனல், ஹியூமரும் தான். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதைக்களமும் அதை கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் சிறப்பாக செய்திருக்கிறார். பொதுவாக இலங்கை தமிழர்களை வைத்து எடுக்கும் படம் எல்லாம் சோகமாக தான் இருக்கும். ஆனால், இந்த படத்தை இயக்குனர் கொஞ்சம் காமெடி பாணியில் எடுத்து சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

0 comments:

Pageviews