இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். 


புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் 'அவதார்' படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவுகளில் 'அவதார்: ஃபயர் & ஆஷ்' திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


'அவதார்: ஃபயர் & ஆஷ்' திரைப்படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், 'ஆஷ் பீப்பிள்' குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்.


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்த படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியீடு செய்கிறது.

 

முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார்.  இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன்  மகேந்திரா, நாயகி நீமா ரே  இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில்  இருவரையும் புதிய கடையை திறந்து வைக்க அழைப்பு வருகிறது. இந்நிலையில் புதிய கடையை திறந்து வைப்பதற்காக  மகேந்திரா,  நீமா ரே  இருவரும் அந்த அடைந்த காட்டு வழியாக செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகிறது. நாயகன் மகேந்திரா மயக்கத்தில் இருக்க  நாயகி  நீமா ரேவை முகமூடி அணிந்த மர்ம நபர் தூக்கி சென்றுவிடுகிறார். முடிவில் முகமூடி மனிதரிடம் இருந்து நாயகி  நீமா ரேவை மகேந்திரா காப்பாற்றினாரா ?  இல்லையா ? முகமூடி அணிந்த மர்ம மனிதர் யார் ? அந்த மர்ம மனிதர்  யூடியூப்  பிரபலங்களை  கொலை செய்வதற்கான காரணம் என்ன ?  என்பதே படத்தின் மீதிக்கதை. 


கர்ணா கதாபாத்திரத்தில் மஹேந்திரன், முதல் படமே என்றாலும் நிச்சயமாக கவனிக்க வைக்கும் நடிப்பை கொடுத்துள்ளார்.  நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் போன்ற அனுபவசாலிகள் தங்கள் வேடங்களில் நம்பகத்தன்மையை கூட்டியுள்ளனர்.


இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாஸ்கர் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. இயக்குநர் – சிக்கல் ராஜேஷ் சோசியல் மீடியா புகழுக்காக எல்லை மீறும் இளைஞர்களின் போக்கை கண்டிக்கும் வலியமான கருத்தை அதிரடி த்ரில்லர் வடிவில் சொல்லியிருக்கிறார். 

 

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.


பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது.


கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை தேர்வு செய்துள்ளது படக்குழு. பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாமல் கூட வலுவான திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை தக்கவைக்க முடியும் என்பதை நிரூபிப்பதே குறிக்கோளாக உள்ளது.


இந்த கதையின் தனித்துவத்தை நம்பிய தயாரிப்பாளர்கள் தீபா ராணி மற்றும் இஸ்மாயில், இதனை தயாரிக்க முன் வந்துள்ளனர். எதிர்மறை முன்னணி பாத்திரத்தில் நடித்த இஸ்மாயில், இந்த திட்டத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பட்ஜெட் வரம்புகள் மற்றும் பெரிய சவால்கள் இருந்தபோதிலும், குழு வெற்றிகரமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து, மெருகூட்டப்பட்ட தியேட்டர் அனுபவத்தை அடைந்தது.


பலராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர் சி. சத்யாவின் (எங்கேயும் எப்போதும், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அரண்மனை 3) ஈடுபாடு படத்தின் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. படக்குழுவின் வித்தியாசமான முயற்சியை உணர்ந்து, இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்டுள்ளார். இது படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.


படத்தொகுப்பு ஸ்ரீநாத், ஒளிப்பதிவு ஸ்டான்லி ஜான், டிஐ ஆனந்த் கிருஷ்ணன், சவுண்ட் என்ஜினியர் பாலாஜி மற்றும் இணை இயக்குநர் ஹரிஷ் உட்பட பல்வேறு திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் பணி புரிந்துள்ளனர்.


செர்பன்ட்டின் ஃபர்ஸ்ட் லுக்கை மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார். இது குழுவிற்கு ஒரு மைல்கல்லாகவும், திரைப்படத் தயாரிப்புக்கான அவர்களின் புதிய அணுகுமுறையின் அங்கீகாரமாகவும் நிற்கிறது. பாம்பை போல விஷமுள்ள மற்றும் கணிக்க முடியாத ஒரு பாத்திரத்தை டைட்டில் குறிக்கிறது, இப்போது படம் அதன் டீஸர் வெளியீடு மற்றும் இறுதி திரையிடலை நோக்கி முன்னேறுகிறது.


கதைசொல்லலில் இந்த தனித்துவமான பரிசோதனை பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் மற்றும் முன்னால் பெரிய வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


நடிகர்கள்:

இஸ்மாயில், ராஜேஷ் VGR, வெற்றி, விக்னேஷ் ராமமூர்த்தி, விக்கி சந்திரன், குணா ஆறுமுகம், கார்த்திகேயன், ஆமோத் சக்ரபாணி


குழுவினர்:

கதை மற்றும் இயக்கம்: பாபி ஜார்ஜ்

தயாரிப்பு: தீபா ராணி, இஸ்மாயில்

ஒளிப்பதிவு: ஸ்டான்லி ஜான்

படத்தொகுப்பு: ஸ்ரீநாத்

இசை: சி. சத்யா

டிஐ: ஆனந்த் கிருஷ்ணன்

சவுண்ட் என்ஜினியர்: பாலாஜி

இணை இயக்குநர்: ஹரிஷ்

PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

 

Manchu Manoj announces the launch of his new music project  “Mohana Raga Music",. This announcement marks an emotional milestone for Manoj and his family as Manoj embarks his Journey into the Music Industry. 


Manchu Manoj, known for his versatility and strong screen presence, has built a distinct identity in Telugu cinema from his early days as a child artist to his rise as a leading actor known for mass entertainers like Bindaas, Current Theega, and Potugadu, as well as intense dramas and experimental roles. His passion for cinema is reflected not only in his acting but also in his commitment to performing his own stunts, creative involvement on sets, and shaping memorable characters with individuality.


Music has always been a deep part of Manchu Manoj’s life. Over the years, he has showcased his musical talent by singing “Pyar Mein Padipoya” in Potugadu, releasing the uplifting “Antha Baguntamra” during the COVID pandemic, and writing lyrics for “Pistha Pistha” from Mr. Nookayya. He also wrote the lyrics for “Yenno Yenno” from Nenu Meeku Thelusa and “Pranam Poye Badha” from Mr. Nookayya. His expressive, raw, and emotional singing style reflects his natural musical instinct.


Beyond playback singing, he has contributed significantly behind the scenes. Manoj has worked in music and directed action sequences in several films of his father Dr. Manchu Mohan Babu, brother Manchu Vishnu, and sister Lakshmi Manchu since the beginning of his journey. He has also rapped in multiple songs across his family’s films. Adding to his global footprint, he collaborated with composer Achu Rajamani to compose music for the Hollywood film 'Basmati Blues', starring Brie Larson (Captain Marvel) in the lead role.


With “Mohana Raga Music" Company, Manchu Manoj begins a new creative chapter one that combines legacy, innovation, and heartfelt emotion. The label aims to support emerging talent, encourage fresh and experimental sounds, and produce original music that resonates with Indian and international audiences. The name itself carries deep significance. And it’s both father and son’s favourite Raga 


The label’s upcoming lineup includes original singles, collaborations, and innovative music projects. Wait for more details soon on the biggest international collaboration with "Mohana Raga  Music", marking a major step toward taking Telugu music to the global stage.

 

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மணை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. 


மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறித்து மாலதி லக்ஷ்மண் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த மாலதி லக்ஷ்மண், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தன்னை நியமித்ததற்காக நன்றி தெரிவித்து முதல்வரின் வாழ்த்துகளை பெற்றார். 


நியமனம் குறித்து பேசிய அவர், "அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத் துறைக்கு வலுவூட்ட என்னால் ஆன அனைத்து பங்களிப்பையும் வழங்கி, அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன்," என்று தெரிவித்தார். 


திரைப்பட பின்னணி மற்றும் மேடைப் பாடகியான மாலதி லக்ஷ்மண், பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளதோடு, தன்னுடைய கணவர் லக்ஷ்மண் கடந்த நான்கு தசாப்தங்களாக‌ வெற்றிகரமாக நடத்தி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவில் முக்கிய அங்கமாக திகழ்கிறார்.

 


நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார். 

நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் 'சூப்பர்ஹீரோ' பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர். 

’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சாண்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும், ரெடின் கிங்ஸ்லி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் மூலம் சினிஷூடன் நீண்டகாலம் பயணித்தவரான விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். ’ஹிருதயம்’ மற்றும் வெளியாகவிருக்கும் ’ஒன்ஸ் மோர்’ படங்களில் பணியாற்றிய ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு தரமான இசையை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை கே.எஸ். சினிஷ் வழங்குகிறார் மற்றும் ஷாஞ்சன் ஜி உடன் இணைந்து தயாரிக்கிறார்.

’ஜமா’, ’வே டு ஹோம்’, மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸின் எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து ’நிஞ்சா’ படத்தை தயாரித்து வழங்குகிறார் கே.எஸ். சினிஷ். இந்தப் படத்தை முருகா இயக்குகிறார். இந்தப் படத்தில் பாரத் கதாநாயகனாகவும், பிராத்தனா நாதன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் படத்தின் தலைப்பை வெளியிட, நிகழ்வில் நடிகர்கள் ஆர்யா, கவின், சந்தீப் கிஷன், ரியோ ராஜ், மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், கலையரசன் மற்றும் கௌஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இயக்குநர்கள் ரவிக்குமார், அபிஷன் ஜீவிந்த், கலை அரசன், சாம் ஆண்டன், டான் சாண்டி, ஸ்ரீ கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன், பிஎஸ் மித்ரன், தமிழரசன் பச்சமுத்து, மடோன் அஷ்வின், ரத்தின சிவ விருமாண்டி, ’பேச்சுலர்’ சதீஷ், ராம்குமார் பாலகிருஷ்ணன், அஷ்வின் ராம், கார்த்திக், நித்திலன் சுவாமிநாதன் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மேலும், தயாரிப்பாளர்களான ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன் சாகர், சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, எஸ்.கே. புரொடக்‌ஷன் கலை, ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மற்றும் கல்யாண், தயாரிப்பாளர் கே.வி. துரை மற்றும் தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் தேவா, எடிட்டர் பிலோமின் ராஜ், ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

’பலூன்’ திரைப்படம் இயக்கிய சினிஷ், தனது உதவி இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். முன்னதாக ’டிக்கிலோனா’ படம் மூலம் கார்த்திக் யோகியையும், ’பார்க்கிங்’ படம் மூலம் ராமையும் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் இப்போது சோல்ஜர்ஸ் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் விக்னேஷ் வேணுகோபாலை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.



 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் 'திரெளபதி' ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். 


நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் 'திரௌபதி 2' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'திரௌபதி' திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது.  14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது. 


முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது. 


ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர். 


போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும். 


நடிகர்கள்:

ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயாணி ஷர்மா, அருணோதயன்.


தொழில்நுட்பக் குழு:

வசனங்கள் - பத்மா சந்திரசேகர், மோகன் ஜி.,

இசை - ஜிப்ரான் வைபோதா,

ஒளிப்பதிவு - பிலிப் ஆர்.சுந்தர்,

எடிட்டிங் - தேவராஜ்,

கலை இயக்கம் - கமல்நாதன்,

நடனம் - தணிகா டோனி,

சண்டைக்காட்சி - ஆக்‌ஷன் சந்தோஷ்,

தயாரிப்பு - நேதாஜி புரொடக்ஷன்ஸ் (ஜி. எம் பிலிம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து),

இயக்கம் - மோகன் ஜி.

 

யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் 'டெக்சாஸ் டைகர்' – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.


யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், 'ஃபேமிலி படம்' புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'டெக்சாஸ் டைகர்'. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் ('ட்யூட்', ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', 'முரா' ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.


படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதும் இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 



தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு: பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித்,

தயாரிப்பு பேனர்: யுகே ஸ்குவாட்,

எழுத்து, இயக்கம்: செல்வகுமார் திருமாறன்,

இசை: ஓஷோ வெங்கட்,

ஒளிப்பதிவு: விஷ்ணு மணி  வடிவு (ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் அசோசியேட்),

படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,

கலை இயக்கம்: கே.பி. நந்து,

சண்டைப் பயிற்சி: சுகன்,

பாடல் வரிகள்: கெலித்தி, ஆதவன் தமிழ், ரிதுன் சாகர், ஆ.பா. ராஜா,

பாடல்: தெருக்குரல் அறிவு, கெலித்தி, சுபலாஷினி, ஆதவன் தமிழ் மற்றும் அந்தோணி தாசன்,

ஆடை வடிவமைப்பு: மரியா மிலன்,

பப்ளிசிட்டி: தினேஷ் அசோக்.

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!


பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.


வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு  நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.


இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB  Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான  இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில்  தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


நடிகர்கள் :


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார். 


தொழில்நுட்பக் குழு: 


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா

வழங்குபவர் : சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects

இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

CEO : விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா


*கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் 'லாக்டவுன் ' திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்துகள்*

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாக் டவுன்' திரைப்படம் - கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் “லாக்டவுன்” திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. 

அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'லாக் டவுன்' திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் - சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே எம் தமிழ்குமரன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் திரு.சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில்.. தற்போது கோவாவில் நடைபெற்று வரும் 56 ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சர்வதேச பார்வையாளர்களுக்கான பிரத்யேக திரையிடலில் 'லாக் டவுன்' திரையிடப்பட்டது. அந்த அரங்கம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது. இப்படத்தை பார்வையிட்ட சர்வதேச பார்வையாளர்கள்- விருந்தினர்கள்- விழா குழுவினர்- திரை ஆர்வலர்கள்- என அனைவரும் படத்திற்கும், படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தனர். இதற்கு படக்குழுவினர் தங்களது நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 05 இல் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Pageviews