மகுடம் திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பை இன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறோம்.
நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரணப்படம் அல்ல படைப்பை நேசிக்கும் ஒருவரின் உள்ளங்கனிந்த பயணம். நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள்.
படக்குழுவினர்கள் இந்த 17நாட்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குறித்து,
“ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலிக்கும்
“சூப்பர் குட் ஃபிலிம்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் மகுடம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம், 2026-இல் வெளியாகும் மக்களின் மனதில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை, தி.நகர், வாணி மஹாலில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. எஸ்.இளங்கோவன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு, எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் அவர்களின் மகனும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர், திமுக தலைமை நிலைய செயலாளர், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான கலைமாமணி பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா, முன்னாள் ஐஜி சந்திரசேகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ், நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினரும் மூத்த நடிகையுமான சச்சு, லதா நடிகர்கள் எஸ்.எஸ். ராஜேந்திர குமார், ஆனந்த் பாபு, பொன்வண்ணன், போஸ் வெங்கட், ஶ்ரீமன், பெப்சி விஜயன், லலிதா குமாரி, குட்டி பத்மினி, தாசரதி உள்பட திரளான அரசியல், திரை பிரபலங்கள் கலந்துகொண்டு கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் திருவுருவப் படத்துக்கு மரியாதை செய்தனர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் வழக்கறிஞருமான மீனாட்சி முருகன் வரவேற்புரை ஆற்ற, நிகழ்ச்சியை வழக்கறிஞர் அருணா அசோக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைமாமணி எஸ் எஸ் சிவசூரியன் பேரனும் வழக்கறிஞருமான சிவசூரியன் முருகன் செய்திருந்தார்.
எஸ் எஸ் சிவசூரியன் கலைக்கூடம் நாடகக் கலைக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் தேவையான களம் அமைக்கவும் நாடகங்கள் தயாரிப்பு மற்றும் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட இருக்கிறது. அதன் தொடக்கமாக திரை நாடகக் கலைஞர் அனந்த குமார் என்பவரின் கலைஞன் என்னும் தனி நபர் நாடகம் நிகழ்த்தப்பட்டது. மேலும், கலைக்கூடம் சார்பாக, 5 கலைஞர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்.கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.
வரும் நம்பர் 21ஆம் தேதி ‘இரவின் விழிகள்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் மூலம் உலகமெங்கும் வெளியிடுகிறார் ஜெனிஷ்.
'இரவின் விழிகள்' படத்தின் படப்பிடிப்பின் போது சவாலான திகில் நிறைந்த சம்பவங்களை நேரடியாக படக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். அப்படி ஒரு சம்பவத்தை சந்தித்த திகில் இன்னும் கூட விலகாத நிலையில் அதுபற்றி விவரிக்கிறார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.
“இப்படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்தபோது நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த காட்டுப்பகுதியில் கொஞ்சம் உள்நோக்கி இன்னும் புதிதாக ஏதாவது லொகேஷன்கள் கிடைக்கிறதா என தேடியபடி படக்குழுவுடன் சென்றோம். அங்கே ஒரு குகை ஒன்று தென்படவே அதற்குள் சென்று காட்சிகளை படமாக்க முடிவு செய்தோம். அதற்கு இன்னும் லைட்டிங் மற்றும் ஜெனரேட்டர் போன்ற உபகரணங்கள் தேவைப்பட்டதால் படக்குழுவினரில் இருந்து இரண்டு பேரை அவற்றைக் கொண்டு வருவதற்காக அனுப்பி வைத்தோம்.
இதற்கிடையே குகைக்குள் சில காட்சிகளை படமாக்குவதற்காக கொஞ்ச தூரம் சென்று காட்சிகளைப் படமாக்கினோம். அதே சமயம் உபகரணங்களைக் கொண்டு வருவதாக சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று அவர்களைத் தேடி நாங்கள் குகையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சித்தோம். ஆனால் அந்த குகையில், எந்த வழியாக நாங்கள் சென்றோம், திரும்பி எந்த பக்கம் போவது என எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒரு வழியாக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் போராடி அந்த குகையை விட்டு வெளியே வந்தோம்.
இன்னொரு பக்கம் படப்பிடிப்பு உபகரணங்களை கொண்டு வர சென்றிருந்த அந்த இரண்டு நபர்களும் திரும்பி, மீண்டும் குகைக்கு வருவதற்கு வழி தெரியாமல், அங்கிருந்த ஊர் மக்கள் சிலரை உதவிக்கு அழைத்துக் கொண்டு இந்த குகைப்பகுதியை நோக்கி வந்தார்கள். வழியில் எங்களைப் பார்த்ததும் உடன் வந்த ஊர்மக்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்? இது ஆபத்தான பகுதி... காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமாக உலா வரும் இடமாயிற்றே என்று கூறியதும் எங்களுக்கு இன்னும் பயம் அதிகமானது.
அதன்பிறகு மீண்டும் அந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறும் வரை யாரும் எந்த சத்தமும் காட்டாமல் நடந்து வாருங்கள்.. இல்லையென்றால் சத்தம் கேட்டு வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உண்டு என எச்சரித்ததால் யாரும் எதுவும் பேசாமல் திகிலுடனேயே அந்த பகுதியைக் கடந்து, இரவு எட்டு மணிக்கு ஊருக்குள் திரும்பினோம்.
இவ்வளவு சிரமப்பட்டு திகிலுடன் நாங்கள் படப்பிடிப்பு நடத்தியதை, ரசிகர்கள் படம் பார்க்கும்போது அதே திகிலை தியேட்டரிலும் உணர்வார்கள்.
அதுமட்டுமல்ல காட்டுக்குள் வழிபடும் கருப்பண்ண சாமியை இந்தக் கதையுடன் பிணைத்து உருவாக்கியுள்ளோம். அதற்கேற்ற மாதிரி அந்த பகுதி மக்களும் பங்கேற்க ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்றையும் அங்கே படமாக்கினோம். படத்தில் இப்பாடல் காட்சி பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்பது உறுதி” என்று கூறினார்.
வரும் 21 ஆம் தேதி இரவின் விழிகள் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
மக்கள் தொடர்பு ; A.ஜான்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,
நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 'கொம்புசீவி' படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகியுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் நிறைவுற்றது.
புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார். நிர்வாக தயாரிப்பு: ஜெயசங்கர், செல்வராஜ்.
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்.
சென்னையில் உள்ள தாகூர் அரங்கில் (தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி) நவம்பர் 15 (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ப. சிதம்பரம், "சிங்கப்பூர் தமிழர்களுக்கு 200 ஆண்டு கால வரலாறு உண்டு. இரு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அதில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். சிங்கப்பூர் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் தமிழர்கள் தான் தலையாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை.
அங்குள்ள லிட்டில் இந்தியா வசதியாக, செழிப்பாக இருக்கிறது. நம்மை போல் தான் வாழ்கிறார்கள், ஆனால் நம்மை விட வசதியாக, செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இங்கிருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்லாமல் இருக்க முடியாது. சிங்கப்பூர் வாழ்க்கையில் இந்தியர்களின் மிகப்பெரிய பங்கு உண்டு. மத வேறுபாடு இல்லாமல் இந்திய மதங்கள் அனைத்தையும் அங்கு பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். மாரியம்மன் கோவில் தான் அங்கு முதல் கோவில், தண்டாயுதபாணி கோவில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனர்கள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு மத ஒற்றுமை அங்கு ஓங்கி வளர்ந்துள்ளது.
லிட்டில் இந்தியாவை பற்றிய செளந்தரநாயகியின் நூல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காரணம் நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய வரலாற்றையும் அது பிரதிபலிக்கிறது. இந்நூலை நான் பாராட்டுகிறேன். பல பேரை தொடர்பு கொண்டு தகவல்கள், தரவுகளை அவர் சேகரித்தார். இந்த புத்தககம் லிட்டில் இந்தியாவை படம் பிடித்து காட்டுகிறது, செளந்தரநாயகி தொடர்ந்து எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்றார்.
சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் திரு. எட்கர் பாங் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வீ. சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
இப்புத்தகம் சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 25 அன்று வெளியீடு கண்டது. அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் யோ இதனை வெளியிட்டார்.
இந்த வருடம் சிங்கப்புர் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு இப்புத்தகத்தை சிங்கப்பூர் நாட்டுக்கு தனது சிறு காணிக்கை என்று எழுத்தாளர் திருமதி. செளந்தரநாயகி வயிரவன் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !!
ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்..,
ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா
ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் : ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ்
இசை : ட்யூனர்ஸ்
ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்
எடிட்டிங் : சுந்தர் S & ராகேஷ் லெனின்
கலை இயக்கம் : ராஜேஷ் கண்ணா முருகேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் ஸ்டூடியோ : சவுண்ட் வைப்ஸ் ஸ்டூடியோஸ்
சவுண்ட் மிக்ஸ் : T. உதய் குமார்
சவுண்ட் டிசைன் : ரஞ்சித் வேணுகோபால் மற்றும் M. சரவணகுமார்
டிஐ & வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோ : ஐ-மாட் மீடியா
வி.எஃப்.எக்ஸ் : வெற்றி செல்வன்
வஸ்திர வடிவமைப்பு : பொன்னி R
மேக்கப் : ஐஸ்வர்யா
டைட்டில் டிசைன் : போவாஸ்
ஸ்டில்ஸ் : மார்டின்
பப்ளிசிட்டி டிசைன் : ஜின் ஸ்டூடியோஸ் / மோனிக்
புரடக்சன் மேனேஜர் : கே.என்.ஆர். சாமி
மக்கள் தொடர்பு : ஆர். மணி மதன்
இணையத்தை அதிரவைத்த 'தேரே இஷ்க் மே' டிரெய்லர்; தனுஷ் 'தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றிவிட்டார்' என்று சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்!
இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த டிரெய்லரால் கவரப்பட்டவர்களில், உணர்ச்சிகரமான மற்றும் சக்திவாய்ந்த கதைகளுக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் ஒருவர். ரசிகர்களின் பாராட்டு குரல்களுடன் இணைந்து, அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீவிரமாக இருக்கிறது!!! தனுஷ் தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றியது போல் உணர்கிறேன்.... வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பாராட்டு, டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள பரவலான உணர்வை பிரதிபலிக்கிறது; இது அனைவரின் இதயங்களையும் வென்று, எதிர்பார்ப்பை அதிகரித்து, இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனந்தா என்பது ஒரு திரைப்படைப்பு இல்லை ஒரு இறை படைப்பு. என்னுடைய திரையுலக பயணத்தில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இறைவனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே எழுதிய பாடல் என்றால் அது இந்த படத்தில் தான். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இது ஒரு பட வாய்ப்பு என்பதை விட, ஒரு காலத்தின் பதிவு இந்த அனந்தா திரைக்காவியம். இதில் எனக்கும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது என்பது இறைவன் கொடுத்த வரம். என்னுடைய திரை பயணத்தில் கருப்பு தான் என்ற பாடல் தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது தேவா அவர்களின் இசையில் வந்தது. இது அவருடன் ஒரு முழுக்க முழுக்க ஆன்மீக பயணமாக அமைந்தது. இறைவனைப் பற்றி எழுதியதை விட இறைவனுக்கே எழுதிய ஒரு படைப்பு. கிரிஷ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாபாவை பற்றி முழுமையாக எனக்கு புரிய வைக்க மிகவும் சிரமம் கொண்டார். அவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டு தான் இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுத ஆரம்பித்தோம். கிரிஷ் அவர்கள் என்னையும், தேவா அவர்களையும் ஒரு ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது இவர்கள் பாபாவை வணங்குபவர்கள் மட்டும் இல்லை, அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை ஒரு கமர்சியல் ரீதியாகவும் சிறப்பாக கையாண்டு உள்ளார். ஒரு இறைவன் ஒரு மனிதரிடம் பேசும் காட்சி படத்தில் உள்ளது. அதற்கு வசனம் எழுதுவது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த படத்தை பார்க்கும்போது பாபாவின் அருளைப் பற்றி நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா படத்தை இயக்கினார், அதன் பிறகு பாபா படத்தை இயக்கினார். தற்போது சத்ய பாபாவை பற்றி எடுத்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். ஒரு அற்புதத்தையே படமாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதுபோல ஒரு பெரிய முயற்சி எடுத்து செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா சார் எதை தொட்டாலும் அது அழகாக அமையும். அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு அதிக முயற்சி செய்தேன். அவருடைய தீவிர ரசிகன் நான். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை அபிராமி வெங்கடாசலம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நிறைய லெஜன்ட் இங்கே பேசிவிட்டு சென்றுள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாய் பாபா அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி உடன் உள்ளேன். எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு வியாழக்கிழமை தான் வந்தது. இந்த படத்தில் நான் டான்ஸ் ஆட வேண்டி இருந்தது. ஆனால் நான் கடந்த இரண்டு வருடமாக டான்ஸ் ஆடியதில்லை. இருப்பினும் அனைவரும் எனக்கு ஊக்கமளித்தனர். அனைவரிடமும் இரக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, சாய்ராம். இப்போது எனக்கு இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை சாத்தியப்படுத்திய கிரிஸ் அவர்களுக்கு நன்றி. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கமர்சியல் படம் எடுப்பவன், ஆனால் என்னை சாய்பாபா பற்றி படம் எடுக்க சொன்னார்கள், அதுவும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். 2009 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. என் நண்பர் ஒருவர் பாபாவை பற்றி பயோபிக் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அப்போது முதல்முறையாக புட்டபர்த்தி சென்றேன். அங்கு சாய்பாபா அவர்கள் தெலுங்கில் என்னிடம், இத்தனை வருடமாக எங்கிருந்தாய்? ஏன் வரவில்லை? என்று கேட்டார்கள். அந்த இடத்திலேயே நான் அழுதுவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு சாமி அவர்கள் இறந்து விட்டார்கள். அதன் பிறகு நான் என்னுடைய வழக்கமான சினிமா பணிகளை தொடர்ந்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாலை கனவில் பாபா அவர்கள் தோன்றினார். உடனடியாக என் நண்பருக்கு இதைப்பற்றி சொன்னேன். ஆனால் அவர் உங்களை வைத்து பாபாவின் படத்தை எடுக்க நேற்று தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னார். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. அதன் பிறகு கிரீஸ் வந்தார்கள், பாபாவின் பக்தர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும், பாபாவை பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அது போல் ஒரு கதை செய்ய சொன்னார். நான் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். அடுத்த நாள் மூன்று மணிக்கு திடீரென முழிப்பு வந்தது உடனடியாக கதை எழுத ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் மொத்த கதையும் எழுதி விட்டேன்.
இந்த படத்தில் நிறைய பேரின் கதைகளை சொல்லி உள்ளோம். அதில் பாபாவின் பங்கும் இருக்கும். இந்த படத்திற்கு தேவா அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெறும் பத்து நிமிடத்தில் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் அதிசயத்திற்கு மேல் அதிசயம் நடந்தது. எனக்கு இந்த படத்தில் ஒரு அருமையான டீம் செட் ஆனது. அவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
பாடகர் மனோ பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் சிறு வயதில் சாய்பாபா நாடகத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளேன். பாபா அவர்கள் எனக்கு ஏதாவது கையில் கொடுக்க மாட்டாரா என்று ஆசைப்பட்ட பக்தர்களின் நானும் ஒருவன். இந்த படத்தில் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
தயாரிப்பாளர் S தாணு பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சென்னையில் சத்ய சாய்பாபா அவர்களை பார்த்து ஆசி பெற்றேன். அவருடைய பாடல்களும் நினைவுகளும் என்றும் என் மனதில் உள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்ற சொல்லுக்கு உதாரணம் பாபா அவர்கள் தான். பல மருத்துவமனைகளையும் கல்லூரிகளையும் உருவாக்கினார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் இருக்க வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டும். தேவா மற்றும் பா விஜய் அவர்களின் பணி மிகச் சிறந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும். கடவுள் நிச்சயம் அருள் புரிவார். பாபா அவர்களின் அன்பு உங்களை கவசம் போல் காக்கும் நன்றி.
சுகாசினி மணிரத்னம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த கதையைப் பற்றி சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் என்னிடம் சொன்ன போதும், இந்த படத்தில் பணியாற்றும் போதும் ஒரு மாய வலையில் இருந்து விலகி தூய்மை கிடைத்தது போல் உணர்வு ஏற்பட்டது. அனைவருக்கும் ஈகோ இருக்கும் ஆனால் நாம் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கும்போது ஒரு அதிசயம் நடக்கும். இந்த கதை மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த படம் முழுக்கவே ஒரு ஆன்மீக அதிர்வலை இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்க சுரேஷ்கிருஷ்ணா மற்றும் கிரீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
இசையமைப்பாளர் தேவா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபா அவர்களுக்கு உள்ளனர். அவருடைய படத்திற்கு நான் இசையமைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பூர்வ ஜென்மத்து பாக்கியம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. ரீ ரெக்கார்டிங் பணிகளுக்காக படத்தைப் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளனர். அனைவரும் அற்புதமான நடிகர்கள். இந்த படத்திற்கு வியாழக்கிழமை அன்று இசைப்பணிகளை ஆரம்பித்தோம். இந்த படம் மிகப்பெரியதாக வளர்ந்ததற்கு காரணம் பாபாவின் அருள் தான். ஒவ்வொரு பாடலையும் பாடகர்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா அவர்களுடன் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் அல்ல பாடலை சாய்பாபா அவர்களின் பக்தர்கள் அனைவரும் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அன்பு, அகிம்சை, அமைதி போன்ற பல விஷயங்களை சொன்னவர் தான் சாய்பாபா அவர்கள். அவர் மக்களிடமிருந்து எந்த காலத்திலும் விலகி இருந்ததில்லை. மக்களோடு தான் பயணித்து இருப்பார். அவருடைய திரைப்படம் ஜெனரஞ்சகமாக இருப்பது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களை அனந்தா படத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன். இது ஒரு மிகப்பெரிய குருவைப் பற்றிய படம். யார் ஒருவர் குருவின் மீது அதிக மரியாதை வைத்துள்ளாரோ அவரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும். தன்னுடைய குருவான பாலச்சந்தர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டுவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. தனது குருவை அதிகமாக மதித்தார் என்பதால் தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சுரேஷ் கிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் சினிமாவின் சூப்பர் ஸ்டாரையும், ஆன்மீகத்தின் சூப்பர் ஸ்டாரையும் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்கள். எனக்கு வேண்டப்பட்ட அனைவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். தேவாவை போன்ற இசையமைப்பாளரை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவரைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை நீங்கள் பார்க்க முடியாது. திறமை இருந்தால் இந்த திரையுலகம் உங்களை கைவிடாது என்பதற்கு நடிகை சுகாசினி ஒரு உதாரணம். ஏற்கனவே வெற்றி என்று உறுதி செய்த படம் தான் அனந்தா. நன்றி
தயாரிப்பாளர் கிரிஷ் பேசும்போது, இந்த படத்தின் முழு பயணமும் ஒரு அதிசயம் தான். என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பாபா அவர்கள் தான் நிகழ்த்துகிறார். சாய்பாபா அவர்களின் பக்தர்கள் இந்த படம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் சுரேஷ் கிருஷ்ணா அவர்களை இந்த படத்திற்கு தேடவில்லை, எல்லாம் அதுவாக நடந்தது. இந்த படம் கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு பதிலாக இருக்கும். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்த படம் பார்த்த பிறகு சாய்பாபா பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 150 நாடுகளுக்கு மேல் உள்ள மக்கள் சாய்பாபா அவர்களை வணங்குகிறார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர்கள்
ஜெகபதி பாபு
சுஹாசினி மணிரத்னம்
Y Gee மகேந்திரன்
தலைவாசல் விஜய்
நிழல்கள் ரவி
ஸ்ரீ ரஞ்சனி
அபிராமி வெங்கடாசலம்
தொழில்நுட்பக் குழுவினர்
எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
வசனம் & பாடல்கள்: பா. விஜய்
இசை: தேவா
ஒளிப்பதிவு: சஞ்சய் BL
படத்தொகுப்பு: S. ரிச்சர்ட்
தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்
நடன அமைப்பு: கலா
ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்
விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்











