அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. 

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு 'தி கேரம் குயின்' என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார்

விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட் பேசியது: அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.

தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில் பேசியது:
நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஜிமா கதை என்னிடம் சொன்னார்கள் அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்து, நானே அந்த கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன் என்றார். 

இயக்குனர் முரளி பேசும் போது: நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மை சம்பவத்தை படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையை திரைக்கதையை உருவக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான் படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்.

உண்மையான கேரம் குயின் ஆன காஜிமா பேசும் போது: நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை கொண்டு என்னை விளையாட அழைத்து செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லாராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும். 

நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா பேசியது: கேரம் குயின் கதையை கேட்டபோது அப்படியோ என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!!

விஜய் அஜித்துடன்  பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

 

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.


 ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்  சேர்ந்து,  ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.


நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.


மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி  நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில்  முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.


ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள  இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க,  கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.


குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.


இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும்  பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “  படமும்  பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.


இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..

 

உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும்  உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது.

 

‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது. 


படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான மிதுன் பாலாஜி மற்றும் நடிகரும் இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “படத்திற்கு இந்த வாரம் கிடைத்துள்ள வரவேற்பு நம்பமுடியாத அளவும் மொத்த அணியினருக்குமே ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்தப் படத்தை உருவாக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய நேர்மை, முயற்சி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு சரியான வெகுமதியை பார்வையாளர்கள் கொடுத்துள்ளனர். படத்தின் கதை, அதன் தீம், கதாபாத்திரங்கள் என பார்வையாளர்கள் பொதுவெளியில் இதைப்பற்றி பேசுவதும் விவாதிப்பதும் எங்களை அங்கீகரிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து தரப்பு பார்வையாளர்களும் 'ஸ்டீபன்' படம் மீது செலுத்தும் அன்பு நெகிழ்ச்சியாக உள்ளது. 'ஸ்டீபன்’ மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றனர். 


புதிய பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் கடைசி ஃபிரேம் வரை பரபரப்பான உளவியல் த்ரில்லர் கதையாக ‘ஸ்டீபன்’ வெளியாகியுள்ளது. இதுபோன்ற புதுமையான உளவியல் த்ரில்லர் கதைகளை கொடுத்து புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் களமாக நெட்ஃபிலிக்ஸ் உள்ளது.


‘ஸ்டீபன்’ படத்தை இப்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் பாருங்கள்!


சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய அளவில் கூட பெரும் ஆவல் நிலவி வருகிறது.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.

நடிகர்கள்
சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்ஷன்
தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசையமைப்பு & இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே.எம். பிரகாஷ்
சண்டை பயிற்சி : டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா
நடன இயக்குனர்: ஜானி பாஷா
வசனம் : அனில் குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

வணக்கம்,

இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் - நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் - நாகார்ஜுனா - விஜய் சேதுபதி - ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.‌
இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் நாம் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம். முதல்முறையாக இந்த மாற்றம் ஒரு சாதனத்தினாலோ அல்லது வடிவமைப்பினாலோ ஏற்பட்டதல்ல. மாறாக இந்த மாற்றம் பார்வையாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 
இன்று, கதைகள்- உண்மையிலேயே திரை -அஞ்ஞானவாதமாக திகழ்கிறது. அவை பார்வையாளர்களுடன் பயணிக்கின்றன. அதனால் பார்வையாளர்களே தளமாகிவிட்டனர். இது நிகழும் போது ஊடகத்திற்கும், செய்திக்கும் இடையிலான உறவு என்றென்றும் மாற்றம் பெறுகிறது. கதைகள் என்பது எந்த திரைக்கும் சொந்தமானவை அல்ல. அவை எப்போதும் கேட்பவருடன் பயணிக்கின்றன. அத்துடன் அவை மக்களுக்கு சொந்தமானவை. திரைகள் அவற்றை பின்பற்றுகின்றன. 
டெக்டோனிக் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த மாற்றம்- ஜியோ ஸ்டாரின் முன் மாதிரியான முயற்சியை தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது. இது அதன் லட்சியத்திற்காக மட்டுமல்ல... வாய்ப்பிற்கும், கட்டமைப்பிற்கும் திறவுகோலாகவும் உள்ளது. இந்த புதிய உலகில் ஒவ்வொரு தமிழ் படைப்பாளி - தயாரிப்பாளர் மற்றும் கதை சொல்லியும்... ஒவ்வொரு இந்தியரையும் .... ஒவ்வொரு திரையிலும்.... ஒவ்வொரு நாளும்.... அடைய இயலும். 

பிராந்தியம் என்பது இன்று புதிய தேசியமாகவும்... இனம் புதிய சர்வதேசமாகவும் மாறி வருகிறது. மதுரை - மலப்புரம் - மாண்டியா அல்லது மசிலிபட்டினத்தில் பிறந்த கதைகள் இனி பிராந்திய சினிமா அல்ல. அவை தேசிய கலாச்சார நிகழ்வுகள். 

' காந்தாரா' போன்ற கடலோர கர்நாடகாவின் நாட்டுப்புற கதைகளில் வேரூன்றிய ஒரு திரைப்படம் - முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடிகிறது. 

ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சக்தியை விஞ்சும் த்ரிஷ்யம் போன்ற ஒரு மலையாள மர்மம்- அனைத்து எல்லைகளையும் எளிதாக கடக்கிறது. 

'பாகுபலி' அல்லது 'புஷ்பா' போன்ற ஒரு தெலுங்கு கதை - மும்பையில் இருந்து மலேசியா வரை அன்றாட பேச்சு வழக்கு ஆகிறது. 

மேலும் தமிழ்நாட்டில் இருந்து விக்ரமின் இடைவிடாத மனித வேட்டை அல்லது அமரனின் மென்மையான தைரியம் - உண்மையில் பயணிப்பது பட்ஜெட்டால் அல்ல. ஆனால் நேர்மை மற்றும் வேரூன்றிய மக்களின் மனங்களை எதிரொலிக்கும் கதைகள் என்பதை காட்டுகிறது. 

இந்த வெற்றிகள் ஒரு எளிய உண்மையை உறுதிப்படுத்துகின்றன. நம்பகத்தன்மை என்பது ஒருபோதும் பணமதிப்பிழக்கச் செய்ய முடியாத ஒரு நாணயம்.‌

இயல், இசை, நாடகம் மற்றும் சேர நாட்டின் கூத்தம்பலம் ஆகியவற்றின் தொடர்ச்சியின் மூலம் தமிழ்நாடு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மையில் வாழ்ந்து வருகிறது. அங்கு இலக்கியம், இசை, நாடகம் ஆகியவை ஒரே கலாச்சாரத்தின் இதயத் துடிப்பில் இணைகின்றன.‌ இன்றைய படைப்பாளிகள் புதிய கருவிகளை பயன்படுத்தலாம். ஆனால் உள்ளுணர்வு அப்படியேதான் உள்ளது. உங்கள் கதையை சொல்வதில் தைரியமாக இருக்க வேண்டும். 

இது சாதாரண இந்திய நிகழ்வு அல்ல. ஸ்க்விட் கேம் போன்ற எண்பது மில்லியன் மக்களால் பேசப்படும் பிராந்திய பேச்சு வழக்கிலான ஒரு கொரியன் தொடர் - உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானவர்களை சென்றடைந்தது. தென்னிந்திய மொழியில் 275 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பேசுவது அதன் உள்ளடக்கத்தின் ஆற்றலை விட மிகப் பெரியது. 

ஆனால் கதை சொல்லல் என்பது திறமையால் மட்டும் செழிக்க முடியாது. படைப்பாற்றல் பொருளாதாரம் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளான - படைப்பாளிகள்- தொழில்நுட்ப வல்லுநர்கள் -தளங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் சீரமைப்புடன் ஒன்றாக நகரும் போது மட்டுமே செழித்து வளர முடியும்.

அதனால் தான் தலைமை என்பது முக்கியமானது. ஸ்ரீ கெவின் வாஸ் 'சவுத் அன்பாண்ட்'க்கான நோக்கத்தை இங்கு தெளிவாக வழங்கியுள்ளார். தென்னகத்தை ஒரு சந்தையாக அல்ல.. மாறாக ஒரு படைப்பு சார்ந்த ஈர்ப்பு மையமாக வழி நடத்துகிறார். திரு. சுஷாந்த் ஸ்ரீ ராம் மற்றும் திரு. கிருஷ்ணன் குட்டி ஆகியோர் தளம் சார்ந்த உத்தியிலான இந்த கண்ணோட்டத்தை நிலை நிறுத்த உதவியுள்ளனர். இது பிராந்திய படைப்பாளர்களுக்கான உண்மையான வாய்ப்புகளை விரிவு படுத்தும்.

கொள்கை ரீதியாக நமது மரியாதைக்குரிய துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின், நமது மரியாதைக்குரிய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் திறமை மேம்பாடு -பயிற்சி மற்றும் நீண்ட கால படைப்பு சார்ந்த உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது இந்தத் துறைக்காக பகிரப்பட்ட எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. 

இந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசுக்கும், ஜியோ ஸ்டாருக்கும் இடையே இன்று கையெழுத்திடப்பட்ட 'சவுத் அன்பாண்ட்' எனும் திட்டத்திற்கான புரிந்துணர்வு கடிதம் ஒரு முழக்கம் அல்ல, மாறாக தெற்கின் கதை சொல்லலுக்கான 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உறுதிப்படுத்தப்பட்ட உடன்பாடாகும். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.‌

இந்த எதிர்காலத் திட்டத்தை நாம் கட்டமைக்கும் போது இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் முன்னோடி ஊடக ஆய்வுத் திட்டங்களில் ஜியோவை கூட்டாளி ஆக்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எழுத்து - ஒளிப்பதிவு - ஒலியமைப்பு - படத்தொகுப்பு - அனிமேஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பயிற்சியை விதைக்க முடிந்தால் உள்ளடக்கத்தை மட்டும் அல்ல தொழில் சார்ந்த வாழ்க்கையையும் உருவாக்குவோம். நமது இளைஞர்கள் தங்களது திறமைகளுடன் பொருந்தக்கூடிய பாதைகளுக்கு தகுதியானவர்கள். அதை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நாம் மேம்படுத்த வேண்டும். உண்மையிலேயே செயல்பாட்டின் திறன் மேம்பாடு என்பது இதுதான். 

எனவே பெண்களே! தாய்மார்களே! இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை இன்று எந்த நிலையில் உள்ளது..?

* வரம்பற்ற ஆர்வமுள்ள இளம் பார்வையாளர்கள்.... 

* வரலாறு காணாத வேகத்தில் விரிவடையும் டிஜிட்டல் பிரபஞ்சம்...

* தேசிய அளவிலான ரசனையை வடிவமைக்கும் ஒரு பிராந்திய இயக்கம். 

" தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் ஏராளமான திறமைசாலிகளை வழிநடத்தவும் இவை உறுதி கொண்டுள்ளது. 

* புதிய எண்ணங்களால் இந்தியாவிலிருந்து சர்வதேச அளவிலான சந்தையை நோக்கிய நகர்வு 

இத்தனை அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் ஒரு கதை சொல்லியாக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருந்ததில்லை. 

மேலும் இந்தத் தருணத்தை நாம் கைப்பற்றவில்லை என்றால்.. இதைப் போன்ற மற்றொரு நேரத்தை நாம் ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை நூறு பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட சந்தையாக - எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்வோம் என தைரியமாக உறுதி அளிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பயணத்தை வலுப்படுத்துவோம். நாம் அப்போது கனவு கண்டது.. அதை நாம் இப்போது செயல்படுத்தும் நேரம். 

இன்று இங்கு கூடியுள்ள ஒவ்வொரு படைப்பாளி- தயாரிப்பாளர் மற்றும் அதற்கான கனவு காண்பவர்களுக்கு நான் இதை சொல்ல விரும்புகிறேன்.‌ தடைகள் இல்லை. கருவிகள் உங்கள் கைகளில் உள்ளன. அனுமதி பொருத்தமற்றது. தைரியம் தான் வேறுபடுத்துகிறது. தமிழ்நாடு படைப்பாற்றல் மிக்க துணிச்சலுடன் வழி நடத்தட்டும்.‌ மொழி, ஒலி, நடிப்பை ஒன்றிணைத்து உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் கதைகளாக மாற்றுவோம். 

புதியதொரு துறையை உருவாக்குவோம். அங்கு கூட்டு ஒத்துழைப்பு பயத்தை மாற்றும். 

சூத்திரத்தை பரிசோதனை மாற்றும். 

வரம்புகளை கற்பனை மாற்றும்.


நம்மை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தளம் தயாராக உள்ளது. பார்வையாளர்களும் காத்திருக்கிறார்கள். 
தமிழ்நாட்டிற்காக... இந்தியாவிற்காக... உலகத்திற்காக... தைரியமாக- நேர்மையாக- அச்சமின்றி- உருவாக்குவோம். 

நன்றி.


 இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளமாக INDIAN FILM MARKET  தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். 


பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான்  INDIAN FILM MARKET  தளம் உருவாகியுள்ளது.


இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market)  தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.


சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த,  சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில், இந்திய சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார். 


INDIAN FILM MARKET வழங்கும் முழுமையான சேவைகள்:

கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை

பட்ஜெட்டிங் & திட்டமிடல்

தயாரிப்பில்  A–Z  வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்

மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன்  மேற்பார்வை திட்டங்கள். 

     •   ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள். 

தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை


மேலும் அவர் கூறுகையில் 


இந்திய சினிமாவை உலகளவில் வளர்க்க, ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன்   நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும்  மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்பு தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம் . மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் கலாசார பரிமாற்றத்தையும், பரந்த விநியோக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.


ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.


நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. இளம் படைப்பாளர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய திரைப்பட உலகிற்கு வலுவான, எதிர்காலத்திற்கு  படைப்பாற்றலில் சிறந்த   சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.


புதிய இளம் படைப்பாளிகளுக்கு,  “ரைட்டர்ஸ் ரூம்” உருவாக்கி அதன் மூலம் திரைக்கதை உருவாக்குவதற்கான உதவிகளும், அதை விற்பனை செய்வதற்கும் அதை திரைப்படமாக்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும். 


புதிய தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.


ஒவ்வொரு படமும் லாபகரமானதாக மாறும் எதிர்காலத்தையும், இந்திய சினிமாவின் உலகளாவிய பெருமையையும் நாம் இணைந்து உருவாக்கலாம்.


INDIAN FILM MARKET — இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய சக்தி.


https://indianfilmmarket.in/


தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டாண்மை தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. 

இந்த சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். “JioHotstar-உடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை 1,000 நேரடி வேலைகளும் 15,000 மறைமுக வேலைகளும் உருவாக்கும். சினிமாவுடன் இணைந்து வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் JioHotstar-ன் தென்னிந்திய பொழுதுபோக்கு பிரிவிற்கான 25 புதிய தலைப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். கேரளா கிரைம் ஃபைல்ஸ் S3, சேவ் தி டைகர்ஸ் S3, குட் வைஃப் S2 போன்ற பிரபல தொடர்கள் 2026 JioHotStar சிறப்பாக வரவிருக்கின்றன. கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ், லிங்கம், விக்ரம் ஆன் டியூட்டி, ROSLIN போன்ற புதிய அசல் படைப்புகளும் அறிவிக்கப்பட்டன. விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான், நிவின் பாலி நடிக்கும் பார்மா, இந்தி தொடரான ஆர்யாவின் தென்னிந்திய வடிவான ‘விஷாகா’ உள்ளிட்ட பல படைப்புகளும் அடுத்த வருடம் வரவிருக்கின்றன. மேலும் பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் நிலையில் ‘ரோடீஸ்’ தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகிறது.

“இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்த மொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும். காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என கமல்ஹாசன் உரையாற்றினார். “தெற்கு என்றுமே படைப்பாற்றல் மையம்,” என கிருஷ்ணன் குட்டியும் குறிப்பிட்டார். மோகன்லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டுவரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கை மறுவரையறை செய்யும் என JioHotstar நம்பிக்கை தெரிவித்துள்ளது.

₹4,000 கோடி முதலீட்டுடன் தமிழ் மாநிலத்துடன் தொடங்கிய இந்த கூட்டாண்மை, தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளையும், உலகளாவிய விரிவாக்கத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Link - https://www.instagram.com/reel/DSC3VbKjI-g/?igsh=Z3c4M2ZicHV5OTM0

 

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில்,  பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும்  ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.


அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில்,  ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.


தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன்,  மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப்  பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.


இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.



தொழில்நுட்ப குழு


இயக்கம் - ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு - பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு - அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங் - அருள் மோசஸ்.A

இசை - ஷான் ரோல்டன்

கலை இயக்கம்- ராஜ் கமல்

உடை வடிவமைப்பு - நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட் - Action சந்தோஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

 

தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், '96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். 


அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். 


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்'' என்றார்.

Pageviews