சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!!
விஜய் அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.
ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும் பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “ படமும் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.
இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..
உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது.
‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது.
படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான மிதுன் பாலாஜி மற்றும் நடிகரும் இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “படத்திற்கு இந்த வாரம் கிடைத்துள்ள வரவேற்பு நம்பமுடியாத அளவும் மொத்த அணியினருக்குமே ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்தப் படத்தை உருவாக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய நேர்மை, முயற்சி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு சரியான வெகுமதியை பார்வையாளர்கள் கொடுத்துள்ளனர். படத்தின் கதை, அதன் தீம், கதாபாத்திரங்கள் என பார்வையாளர்கள் பொதுவெளியில் இதைப்பற்றி பேசுவதும் விவாதிப்பதும் எங்களை அங்கீகரிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து தரப்பு பார்வையாளர்களும் 'ஸ்டீபன்' படம் மீது செலுத்தும் அன்பு நெகிழ்ச்சியாக உள்ளது. 'ஸ்டீபன்’ மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றனர்.
புதிய பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் கடைசி ஃபிரேம் வரை பரபரப்பான உளவியல் த்ரில்லர் கதையாக ‘ஸ்டீபன்’ வெளியாகியுள்ளது. இதுபோன்ற புதுமையான உளவியல் த்ரில்லர் கதைகளை கொடுத்து புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் களமாக நெட்ஃபிலிக்ஸ் உள்ளது.
‘ஸ்டீபன்’ படத்தை இப்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் பாருங்கள்!
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக INDIAN FILM MARKET தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் INDIAN FILM MARKET தளம் உருவாகியுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த, சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில், இந்திய சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.
INDIAN FILM MARKET வழங்கும் முழுமையான சேவைகள்:
• கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை
• பட்ஜெட்டிங் & திட்டமிடல்
• தயாரிப்பில் A–Z வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்
• மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன் மேற்பார்வை திட்டங்கள்.
• ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள்.
• தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை
மேலும் அவர் கூறுகையில்
இந்திய சினிமாவை உலகளவில் வளர்க்க, ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும் மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்பு தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம் . மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் கலாசார பரிமாற்றத்தையும், பரந்த விநியோக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.
நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. இளம் படைப்பாளர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய திரைப்பட உலகிற்கு வலுவான, எதிர்காலத்திற்கு படைப்பாற்றலில் சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
புதிய இளம் படைப்பாளிகளுக்கு, “ரைட்டர்ஸ் ரூம்” உருவாக்கி அதன் மூலம் திரைக்கதை உருவாக்குவதற்கான உதவிகளும், அதை விற்பனை செய்வதற்கும் அதை திரைப்படமாக்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும்.
புதிய தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒவ்வொரு படமும் லாபகரமானதாக மாறும் எதிர்காலத்தையும், இந்திய சினிமாவின் உலகளாவிய பெருமையையும் நாம் இணைந்து உருவாக்கலாம்.
INDIAN FILM MARKET — இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய சக்தி.
https://indianfilmmarket.in/
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தொழில்நுட்ப குழு
இயக்கம் - ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு - பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு - அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங் - அருள் மோசஸ்.A
இசை - ஷான் ரோல்டன்
கலை இயக்கம்- ராஜ் கமல்
உடை வடிவமைப்பு - நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட் - Action சந்தோஷ்
மக்கள் தொடர்பு - யுவராஜ்
தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், '96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்'' என்றார்.









