Fans of *A R Rahman* and *Prabhudeva* were in a celebratory mood, overjoyed by the exciting updates surrounding *Moonwalk*. In a historic first, the musical maestro has *sung all five tracks of the Moonwalk album* and is also *making his acting debut* in this feature film.

The much-awaited *grand audio launch event of the feature film Moonwalk*, held yesterday (Jan 4), turned into a musical night to remember. The evening featured *electrifying live performances by A R Rahman and Prabhudeva*, along with several dance and singing tribute performances that enthralled the massive audience.

*Director Manoj NS* thanked the entire cast and crew for making the film truly memorable and expressed his confidence that *Moonwalk* will bring immense joy and happiness to audiences in theatres.

The excitement reached its peak when *A R Rahman made his first appearance on stage* and immediately went on to *live perform all five Moonwalk songs,* back-to-back, sending fans into a frenzy and transforming the evening into a true celebration of music.

India’s *Michael Jackson, Prabhudeva*, was seen as ever-energetic and high-spirited as he delivered a *spectacular 10-minute dance tribute to A R Rahman*, performing to all five *Moonwalk* songs. His passion, precision, and unmatched energy proved that time has not diminished his magic, leaving the audience wanting more. He also danced along his co-stars *Yogi Babu, Aju Varghese, Arjun Asokan, Satz*, and choreographer *Sekhar*, making the night even more vibrant and electrifying.

Actor *Yogi Babu* shared his excitement about portraying *16 different roles* in the film, calling it one of the most important characters that drives the story forward. Fans are already thrilled by the *three looks released so far*, with more exciting getups set to be revealed in the coming days.

Actors *Aju Varghese* and *Arjun Asokan* impressed the crowd with their fluent Tamil speeches, expressing their joy at being part of this special comeback film alongside *Prabhudeva and A R Rahman*. Arjun Asokan’s Moonwalk dance step received special applause from the audience.

Actors *Satz, Nishma, Sushmitha, Deepa Akka, Dr. Jacob,* and *Ramkumar* also shared their experiences of working in the film and expressed their happiness for their respective roles.

Prominent personalities including *Actor Raghava Lawrence, Producer Kalaipuli S. Thanu, Producer Ishari K. Ganesh,* and *Director Mysskin* attended the event and conveyed their best wishes for the film’s success.

Singing and dance tribute performances by *Sivamani, Baba Baskar, Sanvee Meghna, Uthara Unnikrishnan, Parvathi Meenakshi, V Unbeatables, Keshavi Chetri, Baba Jackson, KMJ Simson, JR Prabhudeva Chakri, Noble Master, Johny Master, Ashok Raja Master,* and *Sridhar Master* added immense entertainment value to the grand event.

The evening concluded on a high note as *Prabhudeva brought A R Rahman back on stage*, getting the maestro to *shake a leg to the iconic ‘Mukkala’*, followed by a *grand cake-cutting ceremony** celebrating *A R Rahman’s birthday*, along with the entire cast and crew of *Moonwalk* and an audience of over *10,000 fans*.

The audience was overjoyed to experience *all five Moonwalk songs performed live*, and the official tracks will be released online one by one in the coming days. With promotions now set to go into full swing, *Moonwalk* is gearing up for its *grand theatrical release in May 2026*.

 

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. 

படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.


இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியாரியவாதி சுபா. வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. 


தொழில்நுட்பக் குழு:

கதை & இயக்கம் : தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு : எம்.வி. பனீர்செல்வம் தொகுப்பு : வி. பூபதி 

இசை & பின்னணி இசை : தர்புகா சிவா 

கலை இயக்கம் : அன்பு 

மேக்கப் : குப்புசாமி 

உடை வடிவமைப்பு : ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம் : மாரியப்பன், குட்டிகிருஷ்ணன் 

மக்கள் தொடர்பு : ரேகா


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’, படம் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.


முதல் பார்வையை வெளியிட்டு, படக்குழுவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ படக்குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகள்.

 

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.


‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. 


அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். 


‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் , கிரைம் த்ரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளில் இருக்கிறது. 


ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா 

படதொகுப்பு : ஜான் அபிரகாம் 

இசை : அரன் ரே 

CEO : டாக்டர் D. அலிஸ் ஏஞ்சல் 

ஆக் ஷன் : மிராக்கிள் மைக்கேல் 

கலை இயக்கம் : ஜகன் நந்தகோபால் VFX : சந்தகுமார் (Hocus Pocus Studios) ஆடை வடிவமைப்பு : தீப்தி RJ 

தயாரிப்பு கட்டுப்பாடு : தனலிங்கம் 

DI : பிரசாத் ஸ்டூடியோஸ் 

கலர் கிரேடிங் : ரங்கா 

ஒலி வடிவமைப்பு : ஆனந்த் ராமச்சந்திரன் 

விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக் 

மக்கள் தொடர்பு : ரேகா டிஜிட்டல் விளம்பரங்கள் : Digitally Powerful

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்ட ‘ROOT – Running Out of Time’  பட முதல் பார்வை காரணமாக படத்தின் மீதான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

 

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ஜாக்கி'. 


பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது. 


'ஜாக்கி' திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான 'மட்டி' திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். 


'ஜாக்கி' திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 


இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா. 


பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம்  " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ". 


இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.  கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.


இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில், படக்குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


மேலும் இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. 


இந்நிகழ்வினில் 


கலைப்புலி தாணு  பேசியதாவது.., 

99/66 பிரம்மாண்டமான படைப்பு. இயக்குநர் எந்த நேரத்திலும் வியாபார சிந்தனையுடன் இருப்பதால் தான் இவ்வளவு பெரிய படைப்பு தந்துள்ளார். நான் முதன் முதலில் தயாரிப்பாளராக திகில் படம் தான் ஆரம்பித்தேன், தம்பி மூர்த்தியும் அதைத்தான் செய்துள்ளார். இப்படம் படக்குழுவுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரும். மூர்த்திக்கும் அவரது துணைவிக்கும் என் வாழ்த்துக்கள் 



மாண்புமிகு வள்ளிநாயகம் பேசியதாவது.., 

தம்பி மூர்த்தி அவர்களின் திரைப்பட சேவை இன்று துவங்கியுள்ளது. பிள்ளையார் வைத்து அழகாக பாடலை எடுத்திள்ளார். உலகமெங்கும் அவர் படம் ஒளிபரப்பாகும், இன்று நாம் சந்திரனுக்கு செல்கிறோமே அந்த  சந்திரனும் சூரியனும் வாழ்த்தி மகிழ்வார்கள்.  இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறட்டும். மூர்த்தி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 

ஒரே மேடையில் மூன்று விழாவை நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். நாயகி ரக்‌ஷிதா ரசிகன் நான். தயாரிப்பாளர் பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார்.  விளம்பர படம் எடுக்க வந்து, இப்போது கதை கேட்டு படம் செய்கிறார். இவர் என்னையும், பேரரசையும் மீண்டும் இயக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார். அவர் மூன்றாவது படத்திற்கு இங்கேயே பூஜை போட்டுவிட்டார். பாடலும் டிரெய்லரும் அட்டகாசமாக உள்ளது. நடிப்பு ராட்சசி ரக்‌ஷிதா கலக்கியிருக்கிறார். படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


திரு ஞானசம்பந்தம் பேசியதாவது… 

இந்த விழா அழைப்பிதழே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் கருப்பண்ண சாமி அரிவாளுடன் இருக்க, இன்னொரு பக்கம் புத்தர் முகம் இருக்கிறது. இது எல்லாமும் சேர்ந்து, மிக வித்தியாசமனா படைப்பாக இப்படம் இருக்கும். இயக்குநர் மூர்த்தி மற்றும் படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 


இயக்குநர் பேரரசு பேசியதாவது.., 

ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். தயாரிப்பாளர் தாணுவையே மிஞ்சிவிட்டார் மூர்த்தி வாழ்த்துக்கள். ஆர் வி உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவு தீவிர ரசிகராக இருக்கிறார். ரக்‌ஷிதா எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பேய்ப்படம் என நினைத்தால் பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது. அமைதிக்கான கடவுள் புத்தர் அவர் பற்றி தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறட்டும். நன்றி. 


இயக்குநர் அகத்தியன் பேசியதாவது.., 

டிரெய்லர் பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. இங்கு படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் தனித்தனியாக புரமோ ஒளிபரப்பியது மகிழ்ச்சியாக இருந்தது. எந்த புதுப்படத்திலும் அதை செய்ய மாட்டார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மூர்த்திக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


நடிகை ரக்‌ஷிதா பேசியதாவது.., 

உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொள்வது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு ஷீட்டிங்கின் போது சின்னப்படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. மூர்த்தி சார் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொள்வார். புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். பட ஷீட்டிங் மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 


இயக்குநர் தயாரிப்பாளர் மூர்த்தி பேசியதாவது.., 

நான் சினிமாவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன். படம் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.  


அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் - சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக்குழு படமாக்கியுள்ளது.


மற்றும் படத்தில் AI-CG -  காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா

ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

 

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார். 


இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு. 


நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார். 

இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.


நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்‌ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.


சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.

 

பெரிய ரவுடியான நவீன் சந்திரா, தனது தம்பி விக்ராந்த் ஒரு பெண்ணுடன் ஓடி விட்டதை அறிந்து மிகுந்த கோபம் கொள்கிறார். அவரை தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார். பணத்திற்காக குழந்தைகளை கடத்தி, யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து விடுகிறார் விக்ராந்த். குழந்தைகளை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான கிச்சா சுதீப். அதே நேரம், விடிந்தால் முதல்வராக பதவியேற்கும் அரசியல்வாதியின் கொலை வீடியோ ஒன்று கடத்தப்பட்ட சிறுவனிடம் இருக்கும் போனில் இருக்கிறது. அதற்காக அந்த சிறுவர்களை கொல்ல போலீஸ் படையை அனுப்புகிறார் அரசியல்வாதி. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.


சுதீப் தனது அதிரடியான நடிப்பு மூலம் முழு படத்திலும் பரபரப்பை பற்ற வைக்கிறார். படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி விடுகிறார். இவரது தந்தையாக ஜி.எம் குமார், தம்பியாக விக்ராந்த் தனித்துவ நடிப்பால் தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். கொஞ்சம் காமெடி கலந்த வில்லனாக சோமசுந்தரம் தன் பங்குக்கு சிக்சர் அடிக்கிறார். மற்றொரு காமெடியனாக யோகி பாபு வந்து போகிறார்.


இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் மாஸையும், ஹீரோயிஸத்தையும் தெறிக்க விட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் தெரிய வைத்திருக்கிறார்.


விஜய் கார்த்திகேயா எழுதி இயக்குகிறார். தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள் வசனங்கள் பில்டப்கள் எல்லாம் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.

 

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 


இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்” என்றார். 


படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


நடிகர்கள்: ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: ஸ்ரீதர், 

படத்தொகுப்பு: ராமர், 

இசை: அஜீஷ் அசோகன்.


Zee Studios has announced the release date of its most ambitious and unconventional cinematic offering, Gandhi Talks, slated to hit theatres on 30th January 2026. Designed as a rare silent film in modern Indian cinema, Gandhi Talks stands as a bold creative leap where silence becomes the strongest form of storytelling.

At a time when cinema is often defined by scale and sound, Gandhi Talks chooses restraint, emotion, and stillness to communicate its message. The film brings together an extraordinary ensemble featuring Vijay Sethupathi, Arvind Swamy, Aditi Rao Hydari, and Siddharth Jadhav, all of whom have consciously stepped into a form of storytelling that relies purely on performance and expression.

For actors like Vijay Sethupathi and Arvind Swamy, the decision to headline a silent film reflects their unwavering belief in craft-driven cinema. Known for consistently choosing roles that challenge convention, their involvement underlines the film’s artistic integrity. Aditi Rao Hydari and Siddharth Jadhav further enrich the narrative with deeply nuanced, expression-led performances embracing vulnerability and emotion without the support of dialogue.

Adding an exceptional layer to the film is A.R. Rahman’s music, which becomes the emotional voice of Gandhi Talks. In the absence of spoken words, Rahman’s score acts as the narrator, guiding the audience through the film’s emotional landscape. His music transforms silence into a powerful, immersive experience elevating the film to a global, festival-ready canvas.

Speaking about the vision behind the film, director Kishore Belekar shared,
“Gandhi Talks is a film about trusting silence. As Indian cinema marks over a century of storytelling, we wanted to return to the medium’s most elemental form pure performance and emotion. The actors embraced that vulnerability completely, and A.R. Rahman’s score became the film’s voice. With Zee Studios’, Meera Chopra’s support, we were able to make a bold, honest piece of cinema.”

With Gandhi Talks, Zee Studios once again reinforces its commitment to supporting path breaking, prestigious storytelling films that challenge cinematic norms and expand the language of Indian cinema.

Set to release on 30th January 2026, Gandhi Talks promises to be a cinematic experience that speaks volumes without saying a word.

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில்,  பிரகாஷ் ராஜ்,  
டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. 

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் ,  திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன்,  ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். 

அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. “கப்சா” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிப்பு:
பிரகாஷ் ராஜ்
டார்லிங் கிருஷ்ணா

தொழில்நுட்பக் குழு 

தயாரிப்பாளர்கள் - R . சந்துரு , யமுனா சந்திரசேகர்
இயக்கம் - இராஜா மோகன் 
நிர்வாக தயாரிப்பாளர் - தயால் பத்மநாபன்
ஒளிப்பதிவு - சுகுணன்
இசை - நகுல் அப்யங்கர்
படத்தொகுப்பு - ரகுநாத் A
கலை இயக்கம் - ஸ்ரீகாந்த்
இசை வெளியீடு - ஆனந்த் ஆடியோ
PRO - சதீஷ் (AIM) - தமிழ்

Pageviews