ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து "ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா" எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய உயரங்களை எட்டுவது குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றில் செயற்கை தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாடலும், செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றூம் உலகளாவிய தாக்கத்தை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.
பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி எஃப் எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப் எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.
இவர்களது கருத்தாழம் மிக்க சிந்தனைகள் மற்றும் உரைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைத்துறையினர் இடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றூம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக இதில் பங்கேற்றவர்கள் ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
The Indian National Cine Academy (INCA) was officially announced today in Mumbai as a national cinematic institution aimed at bringing together all Indian film industries on a single, unified platform. Envisioned as a long-term institution for Indian cinema, INCA seeks to foster collaboration, knowledge-sharing, transparency, and credible recognition across languages, regions, and crafts.
The announcement was made in the presence of leading filmmakers, producers, artists, and cultural voices from across the country, including Rohit Shetty, Anand L Rai, Prosenjit Chatterjee, Dil Raju, Manoj Tiwari, Navraj Hans, Manmohan Shetty, Khushbu Sundar, Lakshmi Manchu, Ankur Garg, Vishnu Vardhan Induri, Shibasish Sarkar, among several other eminent voices from across a broad spectrum of professions along with the Producers Guild of India coming on board as the Chief Patron of the initiative.
Speaking at the announcement, Vishnu Vardhan Induri, Founder of INCA, said, “INCA it is being built with intent, integrity, and purpose. Our goal is to create a permanent national institution that enables collaboration across industries, celebrates excellence fairly, and builds a universal talent database for Indian cinema.”
Commenting on the association, Shibasish Sarkar, President, Producers Guild of India, said, “INCA represents an important step towards institutionalising collaboration, credibility, and transparent processes in building an unified Awards platform that celebrates all Indian languages equally and credibly. The Guild is pleased to support this initiative as Chief Patron.”
The first edition of the INCA Awards has been announced to be held on March 9 in Mumbai, marking a significant milestone in the journey of this new national institution.
Indian National Cine Academy goes beyond being an awards platform and is structured as a national ecosystem for Indian cinema, comprising an annual Cinema Conclave, a transparent and process-driven awards framework, and the creation of a universal database of actors, technicians, and creative professionals across twelve Indian film industries. This database aims to enable cross-industry and cross-regional collaboration, strengthening the Indian film ecosystem.
இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளரான ரிலையன்ஸ் டிஜிட்டல், இன்று சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சிறப்பு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் இந்த புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் சென்னையின் முதல் அதிகாரப்பூர்வ அறிமுகமாகும்.
14 மாடலின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ், இந்த பிராண்டின் நவீன தொழில்நுட்பத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த வரிசையில் ஓப்போ ரெனோ 15, ஓப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் முற்றிலும் புதிய ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மூன்று மாடல்கள் உள்ளன. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் இவை முன்கூட்டியே கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி போன்களை ரூ.45,999/- என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இத்துடன் ஏராளமான கூடுதல் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்குகிறது.
சென்னை நெக்ஸஸ் விஜயா மாலில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழா, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ஓப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனை நேரில் பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டார். இது அங்குள்ள அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இது வெறும் தயாரிப்பு அறிமுக விழாவாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில், வாடிக்கையாளர்கள் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் போன்களை பயன்படுத்திப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் இந்த போனின் சிறந்த கேமரா வசதி, டிஸ்பிளே மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்ற. பரிசோதித்துப் பார்த்தனர். அதே சமயம், ரிலையன்ஸ் டிஜிட்டலின் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் 'AI Portrait Glow', 'AI Pop Out', 'AI Eraser 2.0' மற்றும் 'AI Mind Space' போன்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை விளக்கிக் காட்டினர்.
அறிமுக விழாவில் ஓப்போ நிறுவனத்தைச் சேர்ந்த வில் லி கூறுகையில், "இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான ஓப்போ பயனர்கள் உள்ளனர். சிறந்த கேமராக்கள், எளிமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மாறி வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். ரெனோ 15 சீரிஸ், மேம்படுத்தப்பட்ட இமேஜிங், சிறந்த செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயல்திறனுடன் இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சென்னை போன்ற பரபரப்பான, தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ள நகரத்தில் இதை அறிமுகப்படுத்துவது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இதில் பேசிய நடிகை மிர்னாளினி ரவி, "என்னைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் டிஜிட்டல் என்பது எப்போதும் புதிய மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தைக் காணக்கூடிய ஒரே இடமாகும். இன்று இங்கு ஓப்போ ரெனோ 15 5ஜி-யை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த அழகிய புதிய போனின் சிறப்பு அம்சங்களை வந்து பார்க்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்," என்று கூறினார்.
ஓப்போ ரெனோ 15 இப்போது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், அஜ்மல் பிஸ்மி, ஜியோ மார்ட் டிஜிட்டல் மற்றும் www.reliancedigital.in இணையதளத்திலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுகள், முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் எளிதான தவணைமுறை வசதிகளையும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் போனை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியும் கிடைக்கும்.
திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கே. பாக்யராஜ் அவர்கள் பேசுகையில், அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள், எனது தாயார் என அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்து நான் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சொன்னார்கள். 16 வயதினிலே படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் கமல் அவர்கள் கூட, இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது, இதுவரை எந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கும் இப்படி நடந்தது இல்லை என்று கூறினார்கள். வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரை சொல்லாமல் கோவை ராஜா என்று கெத்தாக சொல்லிக் கொள்வேன். 16 வயதினிலே படத்தில் தான் என்னுடைய பெயரை பாக்கியராஜ் என்று வைத்தேன். என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு யார் இந்த பெயர் என்று என்னுடைய இயக்குனர் கேட்டார்கள். பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று அனைவரும் சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே. பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன். நான் துணை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே பத்திரிக்கை நண்பர்கள் என்னை பற்றி எழுதி உள்ளீர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தில் போது என்னுடைய இயக்குனர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார்கள். துணை இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன். கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனை கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. அதனை பார்த்து எனது குடும்பத்தினர் கழுதை இழக்கவா சினிமாவிற்கு சென்றாய் என்று கிண்டல் அடித்தனர். அந்த சமயத்தில் எனது தாயார் உன்னுடைய இயக்குனரே உன்னை வரும் காலத்தில் வைத்து ஹீரோவாக படம் எடுப்பார் என்று சொன்னார்கள். பிறகு அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்தில் வில்லனாக நடித்தேன். பிறகு இயக்குனராக அறிமுகமானேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவிற்கு வரும் முன்பு சினிமா பார்த்த அனுபவம் மட்டும் இருந்தது. மற்றபடி சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இங்குள்ள இயக்குனர்களின் படங்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் நான் பள்ளி முடித்து வந்தவுடன் எனது தாயார் தேன் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார். அதனை அருகில் உள்ள கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருநாள் நான் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தேன், என் தாயார் இல்லை. உடனே நான் பெட்டியை திறந்து காசை எடுத்துக் கொண்டு தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் அன்று மாலை தான் எனக்கு தெரிந்தது நான் கொடுத்தது காசு இல்லை, தங்க மோதிரம் என்று. கடைக்காரர் நினைத்திருந்தால் மோதிரத்தை எடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதனை எனது தாயாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இந்த சம்பவம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு சிறுவயதிலேயே உணர்த்தியது.
எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்கு செய்யும் நல்லதை பார்த்து அவருடைய குணாதிசயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தது. சிவாஜி அவர்களும் இயக்குனர் எவ்வளவு புதிது என்றாலும் அவருக்கான மரியாதையை கொடுப்பார்கள். இவை அனைத்தும் என் மனதில் இருந்தது. கமல் அவர்களின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார். பத்திரிகையாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான, மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா, “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட, இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை, பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார்.
மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்களான திரு. K. T. வெங்கடேசன் மற்றும் திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் மரியாதைக்குரிய விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் 108 வெள்ளி வேல்களின் திருவிழாவை திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா அவர்கள் துவங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில்,
The Jewellers & Diamond Traders Association-வின் தலைவர் திரு. ஜெயந்திலால் சல்லாணி – மகாவேல் வேல் லோகோவினை வெளியிட்டார் .
Government of Tamil Nadu-வின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) – மகாவேல் இணையதளத்தினை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வினில்
மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா பேசியதாவது..,
இந்த 108 தெய்வீக வேல்கள் தங்கம்–வெள்ளியில் உருவான நகைகள் மட்டுமல்ல, உலகத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஆசீர்வாதங்கள். பத்து குகையில் முருகப்பெருமானின் அருள் பெற்றதும், இப்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதும், 108 மகாவேலுக்கு அளவற்ற ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை வழங்குகிறது. இது உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்கான எங்களின் பணிவான அர்ப்பணிப்பு. இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி.
திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) பேசியதாவது…,
வேல் என்றால், தெய்வீக சக்தி, ஞானம் மற்றும் பாதுகாப்பு. தமிழ் நாட்டில் எல்லோரும் முருக பக்தர்கள் தான். ஒரு ராசிக்கு ஒரு வேல் என 108 தனித்துவமான வேல்களை ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கியிருக்கிறார் கிஷோர் கட்டாரியா. மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு சென்று ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார். இவரின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.
திரு. ஜெயந்திலால் சல்லாணி பேசியதாவது..,
கிஷோர் கட்டாரியாவின் குல தெய்வம் முருகர் அல்ல, கும்பிடும் தெய்வமும் முருகர் அல்ல, ஆனால் முருகன் மீதான பிரியத்தால், பெரிய ஆராயச்சிகள் செய்து, இந்த 108 வேலை உருவாக்கியிருக்கிறார். இது கின்னஸ் ரெக்கார்டுக்கு தகுதியான சாதனை. அவரது ஆன்மீக பயணம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.
திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா பேசியதாவது..,
இந்த நாளை வடிவமைத்து தந்த இறைவனுக்கு நன்றி. இந்த நாளின் சிறப்பாக முருகன் தெரிகிறார். திருச்செந்தூர் முருகன் தான் அனைத்துக்கும் துணை நிற்கிறார். நான் முருகரின் தீவிர பக்தன் ஆனால் எனக்கே தெரியாத பல விசயங்களைத் தேடி, இப்படி 108 வேலை வடிவமைத்து, ஒரு புதிய முயற்சியை செய்துள்ள கிஷோர் கட்டாரியா ஆச்சரியப்பட வைக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான கடவுளான முருகனுக்கு, இப்படி ஒரு அஞ்சலி செய்துள்ள உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் கிடைக்கட்டும். இன்னும் சிறப்பாக பல சாதனைகள் நீங்கள் செய்ய வேண்டும்.
South Asia Book of Records சார்பில், திரு பாலவிநாயகம் பேசியதாவது…,
South Asia Book of Records சார்பில் எவ்வளவோ பேருக்கு விருது வழங்கியுள்ளோம். ஆனால் இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது..,
மகாவேல் விழாவிற்கு அழைத்ததற்கு என் நன்றிகள். முருகனை மிக ஆழமாக நேசித்து, சிந்தித்து, இந்த சாதனையை செய்துள்ள நண்பர் கிஷோர் கட்டாரியா அவர்களுக்கு என் வாழ்த்துகள். என் தந்தை பேர் கதிர்வேலன் சினிமாவில் நடித்த பிறகு, ஐசரி வேலன் என மாறியது. அப்பாவின் பேரில் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் வேல்ஸ் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது. 58 கல்வி நிலையங்கள் வெளிநாடு முதலாக நடத்தி வருகிறோம். அதற்கு காரணம் நான் ஒரு முருக பக்தன். அது மட்டுமல்ல என் அப்பா பெயருடன் முருகன் பெயரும் உள்ளது தான் காரணம். என்னை எப்படி கிஷோர் அழைத்தார் எனத் தெரியவில்லை. 108 வேல் பற்றி அவர் விளக்கி சொன்ன விசயம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. முருகருக்கு உகந்த இந்த நன்நாளில் இவ்விழா நடப்பது மகிழ்ச்சி. கிஷோர் அவர்களின் முயற்சி உலகம் போற்றும் பெரிய முயற்சியாக மாற என் வாழ்த்துகள்.
இந்த சாதனையின் ஆன்மீகப் புனிதத்தன்மையை மேலும் உயர்த்தும் வகையில், 108 தெய்வீக வேல்களின் முழுத் தொகுப்பும், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 29.12.2025 அன்று சிறப்பு பூஜைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. இந்தியா வெளியே உள்ள மிக சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பத்து குகை, இந்த முயற்சிக்கு மிகுந்த தெய்வீக மகிமையைவழங்குகிறது.
108 தெய்வீக மகாவேல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வேலும் தனித்தனியாக ஆன்மீக ஆய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டு, ஆலய ஆசீர்வாதம் பெற்றதாகவும், புனித எழுத்துகள், ரத்தினங்கள், ராசி குறியீடுகள் மற்றும் புராண அர்த்தங்களுடன் அலங்கரிக்கப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பு, இந்துத் தத்துவம், ஜோதிடம், வானியல்மற்றும் ஆன்மீக அறிவியலில் மிக முக்கியமான “108” என்ற புனித எண்ணை அடிப்படையாகக் கொண்டது.
இந்த புனிதமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நிகழ்வு, பக்தி, தெய்வீகம் மற்றும் அசாதாரண கைவினைத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 108 மகாவேல்கள் ஆன்மிக உலகில் ஒரு புதிய மைல்கல்லாக உருவெடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 108 வேல்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது.
கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தற்போதைய தமிழ்ப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய தமிழ் படத்தில் ஐஸ்வர்யா KS நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது திரையுலகப் பயணம் குறித்து பேசும் ஐஸ்வர்யா KS..,
“சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.
மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் தன்னை பெரிதும் ஈர்த்துள்ளதாக கூறிய அவர்,
“அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதே நேரத்தில், புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ மூலம் கிடைத்த அங்கீகாரம், நடிகை ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, தெளிவான கனவுகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சி – இவை அனைத்தும், அவரை அடுத்த கட்ட உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான 'டாக்ஸிக்' பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ' என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.
' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!' யாஷ்ஷின் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது
'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.
யாஷ் 'டாக்ஸிக்' திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா - ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் 'டாக்ஸிக்' திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.
அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.
ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்... அசைக்க முடியாத உறுதியுடனும்... முழுமையான கட்டுப்பாடுடனும்... ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun) அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.
அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல... அவர் நோக்கம் - தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.
அதன் முதல் காட்சியிலிருந்து' டாக்ஸிக்' ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.
இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது... 'டாக்ஸிக்' ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல... அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.
பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்... சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான... அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.
'டாக்ஸிக்' அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.
நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்... இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம் பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும், நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ் ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் 'டாக்ஸிக்' படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.
இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது









