BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார்.

வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ் மற்றும் எல்.எம். மனோஜ் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

பேசிய ஜி. தனஞ்செயன், “தினேஷ்ராஜ் சிறந்த தயாரிப்பாளர். திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான படைப்புகளை உருவாக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிக்கும் படங்கள் தரத்திலும், பிரம்மாண்டத்திலும் தனித்துவம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் பேசுகையில், “ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ எங்களுக்கு மிகவும் சிறப்பான படம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்களும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றுகின்றனர். நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வாலிபால் வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விளையாட்டின் துடிப்பையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான திரைப்படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும்” என்றார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட “அட்டாக்கர்” படத்தின் புரோமோ வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக “அட்டாக்கர்” உருவெடுத்துள்ளது.

______________

நடிகர்கள்: பவிஷ், அவந்திகா சுந்தர்

பேனர்: ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட்

தயாரிப்பு : தினேஷ்ராஜ்

கதை, திரைக்கதை, இயக்கம்: தாமோ நாகபூஷணம்

ஒளிப்பதிவு: சாய் முனிஷ்

படத்தொகுப்பு : அருள் மோசஸ்

ஆடை வடிவமைப்பு: நௌஷாத்

உதவி ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா ஜெஸ்ஸி

கலை இயக்கம் : ராமு தங்கராஜ்

விளம்பர வடிவமைப்பு : தில்லிப் டாக்ஸி

மக்கள் தொடர்பு : குணா

மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் : என். எஸ். ஜெகதீசன்

தயாரிப்பு மேலாளர்: பரத்

ஜினிமா குழு

அகான்ஷா முரளி

ஸ்வித்ரா தேவி

 

The excitement surrounding the upcoming romantic entertainer "Love Oh Love" continues to soar as the makers have now unveiled the film’s first single, “Broke Boy”, following the phenomenal response received by the recently released teaser.


Produced by Zinema Media and Entertainment Ltd. along with Creative Entertainers & Distributors, "Love Oh Love" is written and directed by Magesh Rajendran and stars Pavish Narayan and Naga Durga in the lead roles alongside an impressive ensemble cast featuring director Selvaraghavan, director K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Ashwath, Soundarya, Adithya Kathir and many others in pivotal roles.


The film’s teaser, launched recently, created a strong buzz among audiences for its refreshing blend of romance, humour, youthful energy, and quirky characters. Adding to the momentum, the teaser has now crossed an impressive 1 million views, further strengthening expectations surrounding the film and its release.


Capitalising on this growing excitement, the makers have released the film’s first single, “Broke Boy,” a vibrant and relatable track that perfectly captures the emotions, aspirations, and struggles of today’s youth. Packed with catchy beats, playful lyrics, and an energetic presentation, the song is expected to resonate strongly with youngsters and music lovers alike.


“Broke Boy” has been composed and produced by the dynamic music duo FOXn (Pradeep PJ & Wayne Pavey). The song is sung by Pradeep PJ, while the lyrics have been penned by Pradeep PJ and Jothi Kanna. The track showcases FOXn’s signature contemporary sound, blending urban rhythms with youthful storytelling to create an instantly engaging listening experience.


Music has already emerged as one of the major strengths of "Love Oh Love", and with the release of “Broke Boy,” the team has given audiences a glimpse of the fresh and energetic soundtrack that awaits them in the film.


Set against a lively urban backdrop, "Love Oh Love" promises a fun-filled journey through romance, friendships, relationships, heartbreaks, and the chaos that comes with modern-day love. The teaser and first single together have significantly heightened curiosity about the film among audiences across age groups.


Adding further excitement to the film’s promotional campaign, the makers have officially announced that the trailer of "Love Oh Love" will be released on June 26, 2026. Following the overwhelming response to the teaser and first single, expectations are high for the trailer, which is expected to offer a deeper glimpse into the film’s entertaining world and colourful characters.


The film’s technical team comprises cinematographer P.G. Muthiah, National Award-winning editor N.B. Srikanth, and art director Pa. Mahendran, whose collective expertise has helped shape the film’s vibrant visual identity.


Produced by Dinesh Raj and G. Dhananjheyan, "Love Oh Love" is currently in the final stages of post-production and is gearing up for its theatrical release in July 2026.


With the teaser continuing to attract viewers, “Broke Boy” already generating positive reactions across digital platforms, and the trailer launch scheduled for June 26, the momentum surrounding "Love Oh Love" continues to grow steadily. The team is confident that the film will emerge as one of the most entertaining youthful romantic comedies of the year.

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இசை ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பப் பாடலாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் தவறுவதே இல்லை. இந்த முறையும் அவர் தனது மாயாஜாலமான இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவரது வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று, படத்தின் முழு இசை ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


இந்தப் பாடலை பாடியுள்ள சுபலக்ஷினி, சமீபத்திய பிளாக்பஸ்டர் பாடல்களின் வெற்றியால் இன்று மிகவும் பாராட்டப்படும் பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதிய வரிகள் காதலின் அப்பாவித்தனம், உற்சாகம் மற்றும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரம்மாண்டமான அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், குடும்பம், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களால் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்தப் படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர், சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments)  நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios)  நிறுவனம் படத்தை வழங்குகிறது. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்ததன் மூலம் பெரும் பாராட்டுகளை பெற்ற நாக வம்சி, மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட சக்திவாய்ந்த கூட்டணியை ஒன்றிணைத்துள்ளார்.


2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகப்பெரிய மற்றும் அதிகம் கொண்டாடப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக “விஸ்வநாத் & சன்ஸ்” உருவாகி வருகிறது.


இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் :  சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

கலை இயக்கம் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

 

சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.


#VenkyAnil5 & #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


நடிகர்கள்:

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி


தொழில்நுட்பக் குழு:

கதை, இயக்கம்:அனில் ராவிபூடி

தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி

வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா

இசை: G.V பிரகாஷ் குமார்

நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா

ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி

படத்தொகுப்பு: தம்மிராஜு

கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

 

சமந்தா நடிப்பில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம், குடும்ப உறவுகளையும் அதிரடி ஆக்‌ஷன் அம்சங்களையும் கலந்து சொல்லியிருக்கும் படம்.


ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா, கௌதமி, ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார். பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில்  இருக்கும் உறுப்பினர்கள்  அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்  கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.  விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான், இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான். இறுதியில் சமந்தா தான் யார் ? என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன?  கணவரின் தங்கை திருமணம் நடந்ததா ? இல்லையா ?  என்பதே  ‘எங்கள் தங்கம்’ . படத்தின் மீதிக்கதை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்‌ஷன் அவதாரத்தில் சமந்தா மிரட்டியுள்ளார். அனைவரின் அன்பை பெறுவதக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்க முடிகிறது. வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, மருத்துவராக சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். 


இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி குடும்ப திரைப்படத்தை ஆக்ஷன், காமெடி  கலந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். எங்கள் தங்கம் திரைப்படம் சமந்தாவின் அதிரடியான கம்பேக்.  குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்.

 

பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் மகன்கள் எல்.வி முத்து கணேஷ் (இசையமைப்பாளர்கள்) சென்னையில் புதிய பதிவு மற்றும் ஹைப்ரிட் மிக்சிங் ஸ்டுடியோவைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கி முனை, மதில், ஆயன மனே, மாரிகல்லு, ராட்சசா, பூச்சம்மா, காந்தாரி போன்ற புகழ்பெற்ற படைப்புகளுக்கு தற்போதைய இசையமைப்பாளர்களாக எல்.வி முத்து கணேஷ் உள்ளனர்.


எல்.வி ஸ்டுடியோஸ் சென்னையில் அதிநவீன பதிவு ஸ்டுடியோ வசதியைத் திறக்கிறது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கே.டி. குஞ்சுமோன் தொடங்கி வைத்தனர்.


ஆடியோ போஸ்ட் புரொடக்ஷனுக்கான முன்னணி இடமான எல்.வி ஸ்டுடியோஸ், தனது கிராண்ட் ஓபனிங்கை பெருமையுடன் அறிவிக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் திறப்பு விழாவை நடத்தினார். எடிட்டர் பி. லெனின் மற்றும் ஜீ தமிழ் கிரியேட்டிவ் ஹெட் குளோபல் சர்வீஸ் மற்றும் சீனியர் புரோகிராமிங் ஹெட் கௌசிக் பிளேபேக் விழாவை நடத்தினர்.


திரைப்பட மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த மற்ற முக்கிய விருந்தினர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்: டி. ராஜேந்தர், இயக்குனர் கலா பிரபு, தெற்கு சாரேகமா தலைவர் டி. ஆனந்த், லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் தமிழ் மற்றும் மலையாள உள்ளடக்கத் தலைவர் எம். முருகன், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பா. விஜய் மற்றும் பலர் இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

 

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'KA16' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. 


ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார்.


மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது. 


வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், இந்திய திரைப்படத் துறையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அதேபோல், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட பிரேர்ணா அரோரா, இந்தத் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


கிரண் அப்பாவரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக்குழு குறித்தான விவரங்கள்

மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

 

மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான 'வீர ஜெயதீரா' வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்சுமி மேகனா பாடியுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலின் காட்சிகள் அழகுடனும் பிரம்மாண்டத்துடனும் அமைந்துள்ளன.


முன்னதாக வெளியான டைட்டில் கிளிம்ப்ஸில், நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் ஒரு போர்வீரராக டி. கோபிசந்தின் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


புதுமையான கதை சொல்லும் முறையிலும் தொழில்நுட்ப திறமையிலும் பெயர் பெற்ற சங்கல்ப் ரெட்டி, இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு வருகிறார். உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் கண்ணைக் கவரும் பிரமாண்ட காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், தனது திரைப்பயணத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் டி. கோபிசந்த் நடித்து, தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் நிரூபிக்கிறார்.


நடிகர்கள்: டி. கோபிசந்த், ரிது வர்மா மற்றும் பலர். 


தொழில்நுட்பக்குழு விவரம்:


இயக்குநர்: சங்கல்ப் ரெட்டி,

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,

தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,

வழங்குபவர்: பவன் குமார்,

இசை: அனுதீப் தேவ்,

ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்,

படத்தொகுப்பு: சோட்டா கே. பிரசாத்,

சண்டைப் பயிற்சி இயக்குநர்கள்: வெங்கட், ப்ருத்வி, ரியல் சதீஷ்,

நடன இயக்குநர்கள்: சங்கர், விஜய் போலங்கி

 

சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதை நிரூபித்தன.


அந்த வரிசையில், சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து புதிய சுவாரஸ்யமான கதைக்களங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று இந்திய சினிமாவில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் புதுமையான கதைக்களங்களை தொடர்ந்து ஆதரிப்பதோடு புதிய திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. தற்போது, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தங்களின் அடுத்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்திற்கு ‘லவ்வர் பாய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  


சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையுடன் ’லவ்வர் பாய்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ புகழ் மதன்  உள்ளிட்ட இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்‌ஷய், விநியோகஸ்தர்கள் அழகர் மற்றும் சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டாரின் பிரசன்னா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழாவின் சிறப்பம்சமாக இயக்குநர்- நடிகர் அபிஷன் ஜீவிந்த், பாரத், பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன், தேவ், '5 ஸ்டார்' செந்திலின் மகன் அஜய் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அர்ஜித்துடன் நெருங்கிய நட்பு கொண்ட ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையிலும் நேரில் வந்து படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


இந்தத் திரைப்படம் மற்றும் வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “பேஷன் ஸ்டுடியோஸில் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் புதிய தரமான கதைகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ‘லவ்வர் பாய்’ படத்தின் கதையை முதன்முறையாக கேட்டபோதே இயக்குநராக அசோக் மீது நம்பிக்கை வந்த்விட்டது. அவரது நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் தெளிவு ஆகியவை இந்தத் படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. பார்வையாளர்களுக்கும் இந்தக் கதை நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும். அசோக் கதை சொல்லும்போது, கேவிஎன் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே நாராயணா அங்கு எதேச்சையாக வந்தார். படத்தின் மையக் கருவும் கதை சொல்லும் விதமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. அதனால் இந்தத் திரைப்படத்தில் இணைய அவர் முடிவெடுத்தார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்க நாங்கள் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம். அர்ஜித் மிகுந்த அர்ப்பணிப்புள்ள வளர்ந்து வரும் நடிகர் மட்டுமல்ல, அவருக்குத் திரையுலகம் குறித்த ஆழமான அறிவும் உள்ளது. பல படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கிருத்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ’லவ்வர் பாய்’ படத்தில் திறமையான இளம் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.


நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் ஏற்கனவே சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டிமாண்டி காலனி 3' திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.


The title announcement event of #D55, one of the biggest anticipated films in Tamil cinema, was held in a grand manner today. The film has been titled "OM."

In this film, jointly produced by R Take Studios and Wunderbar Films, National Award-winning actor Dhanush plays the lead role. Following the success of Amaran, this new creation directed by Rajkumar Periasamy had its title announcement event held recently in a grand manner in the presence of members of the press and media, along with the film's team.

At the event,

Speaking on behalf of Wunderbar Films, Sreyas said:
“First of all, I would like to express my gratitude to the director and Dhanush sir. I will always remain indebted to you, sir. This film is one of the biggest-budget films being made in the industry. I think this is the biggest-budget film in my cinematic journey. Furthermore, I am very happy to have collaborated with R Take Studios. This is their first film in Tamil. I believe this will be the beginning of many successful collaborations in the future. This is once again an old-school Dhanush sir mass commercial film. I believe this film will definitely fulfil your expectations. I hope that the teaser and all other updates of this film will delight you. This will be a creation that satisfies everyone. We will meet all of you in theatres on October 16. Thank you!”

Speaking on behalf of R Take Studios, Shraddha said:
“Rajkumar sir, thank you very much. This has truly been a wonderful experience. I am eagerly looking forward to October 16. I am extremely happy to be working with you. This is a wonderful collaboration. For that, I would like to express my heartfelt gratitude to you. Thank you to Dhanush sir. This film will entertain everyone. Thank you.”

Speaking on behalf of R Take Studios, Azmat said:
“Other than what Sreyas and Shraddha have already said, there is nothing new for me to add. Rajkumar sir, my heartfelt thanks to you for including us as a part of this project. Being a part of this creation gives us immense pride and humility. We hope to contribute as much love and dedication as possible to this film. Thank you very much.”

Director Rajkumar Periasamy said:
“This film has begun with the title ‘OM’. From the selection of the title to the casting of the actors and actresses, the first schedule of shooting has now been successfully completed. Looking at every single thing that has happened around this film and every person who has become a part of it, I have complete confidence that this will be a very important and special journey for everyone.

Everyone associated with this film is working with the same feeling and commitment. Starting from Dhanush sir, Sreyas, and all the artists who are acting in the film, everyone is creating this film with great dedication.

In particular, Mammootty sir, Sai Pallavi, Sreeleela, Indran sir, and many other talented actors have joined this film. With the contribution of everyone, the film is shaping up very well.

A huge technical team is working behind this film. The cinematographer, camera crew, and technical artists have all given their best contributions. Cinematographer Ezhilarasu has done an excellent job. Kalaivanan, the editor of Amaran and the recently released Karuppu, is working as the editor of this film as well. He is also the one who edited this title announcement video. This video should not be viewed merely as a title announcement video. Instead of releasing a poster, we created this as an attempt to introduce the character played by Dhanush sir to the audience for the very first time. The film’s teaser, introduction teasers for each major character, and the main trailer will be released in the coming weeks and months.

October 16 will be a very important day for this film. That is the day the film is set to release. Furthermore, we have titled the film ‘OM: Chapter 1’. This is not merely a spiritual title; it is a very special title with multiple layers of meaning. There are many interesting aspects and various layers hidden within this title. I believe the audience will gradually understand them. My heartfelt thanks to everyone.”

Speaking on behalf of Divo Music, Vishu said:
“Being a part of this journey gives us immense happiness and pride. From the day this project began, we would like to thank everyone for the support and trust that has been extended to us at every stage. Being associated with any film starring Dhanush sir is always a matter of pride. We are extremely happy to be a part of this film. Director Rajkumar Periasamy sir’s Amaran, became a huge success. Following that, being associated with this film, which is being created through the collaboration of Dhanush sir and Rajkumar sir, gives us even more excitement. Our heartfelt thanks to the producers, the film team, and everyone who included us in this project as the music label. With the divine faith of ‘Om Namashivaya,’ I say this: it is my firm belief that OM will become a massive blockbuster. I believe this film will remain in the hearts of audiences through 2026, 2027, and beyond. Thank you very much.”

Speaking on behalf of Warner Music Group - India Jay Mehta said:
“Many months ago, when discussions about this film first began, my first conversation was with this team. About six months before that, we had met Dhanush sir at a hotel in Delhi. The fact that the journey which began then has today taken such a huge form is something that cannot be described in words. Everything associated with this film is extremely special. Director Rajkumar Periasamy sir is an extraordinary talent. Not only in Indian cinema, but even in world cinema, true geniuses are very rare. In that sense, I believe Rajkumar sir is a genuine genius.

I do not have enough words to speak about Dhanush sir. From Kadhal Kondein to the biggest Hindi films he has acted in, he stands as a powerful artist who has proven his talent on a global scale. Furthermore, a very strong star cast including Sreeleela, Sai Pallavi, and Mammootty sir has joined this film. It is very rare to witness such a huge ensemble of stars in a single film. This film possesses all the elements required to become a massive blockbuster. I firmly believe that it has every qualification to become a huge success not only across India but also on a global level. According to my personal belief, this will not only be one of the biggest films in the history of Tamil cinema, but it will also become a landmark work that will be spoken about for all time. My heartfelt wishes to the entire team. Thank you, everyone.”

Sai Pallavi and Sreeleela are playing the female leads alongside Dhanush in this film. Malayalam cinema superstar Mammootty’s presence in a pivotal role has increased expectations for the film even further.

Having gained nationwide recognition through Amaran, director Rajkumar Periasamy is this time creating a grand action film with an innovative screenplay that is expected to captivate audiences. This marks the first collaboration between Dhanush and Rajkumar Periasamy, and the combination has already received tremendous response from fans.

The film’s music is composed by young sensation Sai Abhyankkar, who has captured the hearts of the younger generation. While the first schedule of shooting has already been completed, work on the next stages of production is progressing at a rapid pace.

With the title officially announced as OM, fans are eagerly awaiting the film’s upcoming updates and shooting-related announcements. Created by the grand combination of Dhanush, Rajkumar Periasamy, Sai Pallavi, Sreeleela, and Mammootty, the film is emerging as one of the most anticipated projects in Tamil cinema.

The film is scheduled for a worldwide theatrical release on October 16.

Pageviews