வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்
"ஆல் பாஸ் " (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார்.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார்.
' நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும்
மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
' பாண்டியநாடு', 'எதிர்நீச்சல்' போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, 'பாபநாசம்' படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், 'பைசன்' படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.
'கலகத் தலைவன்', 'அண்ணாதுரை' , 'தகராறு' போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .
பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
'பசங்க' படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் ராதிகா நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைத்துள்ளார்.
ஒப்பனை - எல்.வி.ராஜா,
உடைகள் - ஏ.எஸ்..வாசன்,
ஸ்டில்ஸ் - அண்ணாதுரை,
விளம்பர வடிவமைப்பு - கிப்சன் UGA,
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்,
தயாரிப்பு - மோகனா. ஆர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.
படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,
" இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது.
வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் அன்பு, பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு சோதனை வைக்கிறது. அது என்ன சோதனை?அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.
குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த 'ஆல் பாஸ்' படமும் இருக்கும் "என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மைதீன்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களிடம் கவனம் பெற்று, பார்வைகளை அள்ளி வருகிறது.
பலத்த மழையில் நிவாரணப் நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற, சாலையோரத்தில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக களமிறங்கினார்.
இதற்கான நிகழ்வு, 1.12.2025 திங்கள் கிழமையன்று சென்னை முழுவதும் சிறிது நேரம் கூட விடாமல் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கோயம்பேட்டில் நடந்தது.
10க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு காய்கறி வியாபாரம் செய்வதற்கான தள்ளுவண்டிகள், நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு ராட்சத குடைகள், பாய்கள், 200 பேருக்கு ரெய்ன் கோட்டுகள், போர்வைகள் என 500 பேருக்கு பலவித பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற பி டி செல்வகுமார், அந்த மக்கள் பயன்பெறும் வகையில் , ஏராளமான மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தார்.
கோயம்பேட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பி டி செல்வகுமார், ''மழைக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் செய்வதே சரியாக இருக்கும். மழையெல்லாம் ஓய்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து செய்வது பயனுள்ளதாக இருக்காது. அதனால்தான் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மழைக்கால நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும்'' என்றார்.
'கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதை வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?' என்ற கேள்விக்கு,
''இப்போகூட பாருங்க. இந்தளவு கொட்டுற மழையில யாராச்சும் ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்காங்களா? இல்லையே. ஆனா, நாங்க எதையும் பொருட்படுத்தாம இறங்கி சேவை செய்றோம். அப்படியெல்லாம் மக்களைப் பத்தி யோசிச்சு செயல்படுற நான் தேர்தல்ல போட்டியிட ஆசைப்படுறதுல தப்பில்லையே?
நாங்க இந்த மாதிரியான மக்களுக்கான சேவைகளை இன்னைக்கு நேத்து செய்யல. பத்து வருஷமா செய்துக்கிட்டிருக்கோம். அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறை, கலையரங்கம்னு கட்டிக் கொடுத்திருக்கோம். கஜா புயல் காலத்துல, கொரோனா காலகட்டத்துலன்னு பார்த்துப் பார்த்து மக்கள் சேவை செய்திருக்கோம். போன மாசம் பெண் ஆட்டோ ஒட்டுநர்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்தோம். மக்களுக்கு சேவை செய்ற எத்தனையோ பேருக்கு முன்னுதாரணமா இருக்கோம். அதையெல்லாம் பார்த்து அவங்க பிரதிநிதியா என்னை தேர்ந்தெடுத்தா இதே சமூக சேவையை இன்னும் நல்லா செய்யலாம்'' என்றார்.
'நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் சேர்ந்திருக்கிறாரே? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு ''அவருக்கு 80 வயசு நெருங்குது. இந்த வயசுல அவரு என்னத்த செய்யப் போறாரு? விஜய் இதுவரை நடந்த ஆட்சிகளுக்கு மாற்றா, ஊழல் இல்லாத, சுத்தமான ஆட்சி நடத்த வர்றோம்னு சொல்றாரு. அப்படியிருக்கிறப்போ ஊழல் வழக்குல தண்டிக்கப்பட்ட செங்கோட்டையனை கட்சில சேர்த்திருக்கிறது சரியான அணுகுமுறையில்லைன்னு சொல்வேன். ஆதவ் அர்ஜுனாவும் குற்றச் செயல்கள்ல ஈடுபட்டவர்தான். அவரை மாதிரியான ஆட்களை கூட வெச்சுக்கிட்டா அவர் எதை அடையணும்னு நினைக்கிறாரோ அதை அடைய முடியாது.
ஒருத்தர கடசில சேர்க்குறதுக்கு முன் டிடெக்டிவ் வெச்சு அவர் யாரு, பேக்ரவுண்ட் என்னன்னு அலசி ஆராயணும். திறமையானவங்களா, இளம் வயதுக்காரர்களா, புதியவர்களா, பொருளாதாரம் தெரிஞ்சவங்களா, உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கத் தயாரா இருக்குறவங்களா பார்த்து கட்சில சேர்த்துக்கணும். அதை விட்டுட்டு குற்றவாளிகளை சேர்த்து வெச்சிக்கிட்டா நல்லதில்ல. இதோ பாருங்க, பணம் படைச்ச எத்தனையோ பெரிய பெரிய நடிகர்கள்லாம் இருக்காங்க. அவங்கள்லாம் செய்யாத நலத்திட்ட உதவிகளை நாங்க களமிறங்கிச் செய்றோம். எங்களையெல்லாம் விஜய் கண்ணுக்குத் தெரியாது'' என்றார்.
'வரும் சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்பீர்கள்?' என்ற கேள்விக்கு ''சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அது பற்றி சொல்கிறேன்'' என்றார்.
நிகழ்வை துவக்கி வைத்துப் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 10 வருடங்களில் ஆற்றிய சமூகப் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
அடை மழையிலும் விடாது மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.
Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும்.
‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான *‘கராத்தே பாபு’*வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி பணிகள் வரை வேகமாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எனும் இந்த முயற்சியின் மூலம், அவர் தனது படைப்புத் துறையை விரிவாக்கி, வலுவான கதைகள் மற்றும் புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கணேஷ் கே பாபு கூறியதாவது,
படத்தின் நாயகன் கௌதம் ராம் கார்த்திக் குறித்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
கௌதம் ராம் கார்த்திக் தனது கரியரில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளார். சாமானியனின் அரசியல் வாழ்வை காமெடி கலந்து எடுத்துரைக்கும் இந்த படத்துக்குத் தேவையான ஆழமும் திறனும் அவரிடம் உள்ளது. சுவாரஸ்யத்தையும் எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் சமநிலைப்படுத்தும் அவரின் திறமை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றார்.
மேலும், கௌதம் ராம் கார்த்திக்கை பார்வையாளர்கள் நீண்டநாள் நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
இந்தப் படத்தில் செல்வராகவன் சார் இதுவரை காணப்படாத, புதிய பரிமாணம் கொண்ட கதாபாத்திரத்தில் தோன்றி, பார்வையாளர் அனைவரின் கவனத்தையும் நிச்சயம் இருப்பார்.
இப்படத்தின் மூலம் இயக்குனராக தினா ராகவன் அறிமுகமாகிறார்.
இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளராக பணியாற்றிய தினா ராகவன், தெளிவான பார்வை, மற்றும் புத்துணர்ச்சி மிக்க படைப்பாற்றலை கொண்டவர். இந்த வகை படத்தை உருவாக்குவதற்கு சரியான தேர்வாக அவர் திகழ்கிறார் என்றார்.
நடிகர்கள்,
கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு :
இசை – சாம் சிஎஸ்
வசனம் – ராஜு முருகன்
ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா
கலை இயக்கம் – தா. ராமலிங்கம்
படத்தொகுப்பு – தீபக் எஸ்
பாடல்கள் – யுகபாரதி, கணேஷ் கே பாபு, சௌமியா பாரதி D
சண்டை – அபிஷேக் ஸ்ரீநிவாஸ்
ஆடை வடிவமைப்பு – காயத்ரி பாலசுப்ரமணியன்
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – கார்த்திக் துரை
ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – அமிர்தராஜ்
லைன் புரொடியூசர் – பாலாஜி பாபு S
டிசைன்ஸ் – சாயப்பட்டரை
மக்கள் தொடர்பு – ரேகா
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா R தயாரித்துள்ள படத்திற்கு " All Pass " ஆல் பாஸ் " என்று பெயர் சூட்டியுள்ளனர்.
நிறங்கள் மூன்று,தருணம், போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மற்றும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா R, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பாண்டியநாடு, எதிர்நீச்சல் போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லொகிட்ஷவா இந்த படத்தின் வில்லனாக நடிக்க, பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், பைசன் படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி காமெடியனாக நடித்துள்ளனர்
மற்றும் மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கலகத் தலைவன், அண்ணாதுரை தகராறு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
பசங்க படத்திற்கு எடிட்டிங் செய்த S.பாஸ்கர் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.
பிரபல நடன இயக்குனர் ராதிகா இந்த படத்திற்கு நடனம் அமைத்துள்ளார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளார்.
மேக்கப் - L.V.ராஜா
உடைகள் - A.S.வாசன்
ஸ்டில்ஸ் - அண்ணாதுரை
விளம்பர வடிவமைப்பு -
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு - மோகனா. R
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.
படம் பற்றி இயக்குனர் மைதீன் பகிர்ந்தவை...
ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த படம் இது.
வடசென்னை என்றாலே அடிதடி வெட்டு குத்து, ரத்தம் பகை கொலைன்னு தமிழ் சினிமாவில் காட்டி இருக்காங்க முதல்முறையா இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள் ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன டெஸ்ட் அதில் பாஸ் ஆனார்களா இல்லையா என்பதே இந்த படத்தின் திரைக்கதை.
குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளது அந்த வரிசையில் இந்த ஆல் பாஸ் படமும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் மைதீன்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர் அது தற்போது இணையதளத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களே இந்த பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.
சத்ய பிரகாஷ் மற்றும் ஆனந்தி ஜோஷி இப்பாடலை பாடியிருக்கிறார்கள்.
படத்தில் குணசேகரன் (கிஷோர்) டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார். பின் ஏதோ சில காரணங்களால் இவர் வேலையை இழந்து விடுகிறார். டெலிவரி வேலை செய்யும் வாசன் பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. கிஷோர் தனது காதலியின் அண்ணன் என்பது டிடிஎஃப் வாசனுக்கு தெரிய வந்து கிஷோரை காப்பாற்ற முயல்கிறார். வாசன் கிஷோரை காப்பாற்றினாரா ? அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை
டிடிஎஃப் வாசன் இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவு நடித்திருக்கிறார். இந்த முழு படத்தையும் கிஷோர் தான் தாங்கி செய்து இருக்கிறார். படத்தில் கிஷோர் பேசப்படும் வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அபிராமி, போஸ் வெங்கட், நரேன், குஷிதா தங்களது கதாபாத்திரங்களை இயக்குனர் சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஹரிஷ் பெராடி கொடூர வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தி பின்னணி இசை ஓரளவுக்கு கை கொடுக்கிறது.
எஸ் பிச்சுமணி ஒளிப்பதிவு ஓகே ரகம். கதைக்களம் நன்றாக இருந்தாலும் மேக்கிங்கில் கொஞ்சம் சொதப்பியிருக்கும் இயக்குனர் கருணாநிதி இப்படத்தில் அரசியல்வாதிகளின் கோர முகத்தையும், காவல் துறையின் ஈரமற்ற இதயத்தையும் கிழித்தியிருக்கிறார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பிரமாண்டமாக வழங்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தற்போது ராம் சரண் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த ஃபைட் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் என்ற முறையில் கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதராபாத் அலுமினியம் பேக்டரியில், கலை இயக்குநர் அவிநாஷ் கொல்லா அமைத்துள்ள மிகப்பெரிய செட்டில் இந்த ஆக்சன் காட்சிகள் படமாகி வருகிறது.
பாலிவுட் ஸ்டார் விக்கி கௌஷலின் தந்தை மற்றும் தங்கல் போன்ற பல படங்களுக்காக பிரபலமான ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் இந்த அதிரடி சண்டைக்காட்சிகளை மேற்பார்வை செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக நவகாந்த் பணியாற்றுகிறார். இந்த சீன் படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருப்பதால், மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது.
பெர்பெக்சனுக்கு பெயர் பெற்ற இயக்குநர் புஜ்ஜி பாபு சனா ஒவ்வொரு ஆக்சன் காட்சியையும் மிக அதிக கவனத்துடன், தனித்துவமான அணுகுமுறைகளில் வடிவமைத்து வருகிறார்.
பெத்தி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சிக்கிரி சிக்கிரி ” பாடல் 110 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய சார்ட் பஸ்டர்களில் ஒன்றாகவும் வெற்றியடைந்துள்ளது.
கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.
“பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.
நடிகர்கள் :
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா
தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவிநாஷ் கொள்ள
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.
ஹரிஷ் ஒரி கடன் தொல்லை தாங்க முடியாமல் நிதி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக ஊரை விட்டு வெளியேறி அவரது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக மலை கிராமத்துக்கு தன் மனைவி, மகனுடன் வருகிறார். அங்கு வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் மூட்டை சுமக்கும் வேலைகளை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். மலை கிராமத்துக்கு வந்து சாதாரண கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையில் அந்த ஊர் பெரிய மனிதர் ஊரில் இருக்கும் மக்களிடம் இருக்கும் நிலங்களை தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை மலையை விட்டு கீழே அனுப்பும் வேலையை செய்கிறார். அவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவியின் அபிராமி போஸ். மலை கிராமத்தில் காய்ச்சும் மூலிகை ரசத்துக்கு ஊரில் கடும் கிராக்கி. அரை தெரிந்து கொள்ளும் ஹரிஷ் ஓரி சாராயம் காய்ச்சுவதையே தன் தொழிலாக்கி பெரும் பணம் சம்பாதிக்க துவங்குகிறார். அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறியது? அந்த ஊர் மக்களின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹரிஷ் ஓரி, மலைகிராம மனிதராகவே மாறி யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவே மாறி கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் உதிரி விஜயகுமார், அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். ரெஜின் ரோஸ், ஜெயலட்சுமி, என்.எஸ்.டி.அறிவு ஆகியோர் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் நன்று.
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.











