ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் " ஆகாயம் " படம் குறித்து இயக்குனர்

தினந்தோறும் நாகராஜ்.


டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு "ஆகாயம் " என்று பெயரிட்டுள்ளனர்.


"தினந்தோறும்" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே", "காக்க காக்க"  போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.


அவர் தற்போது "ஆகாயம்" திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


"கன்னி மாடம்" திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.


மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், "மெய்யழகன்" படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, "மகாராஜா" திரைப்படத்தில் நடித்ததற்காக  தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


"சென்னை டு சிங்கப்பூர்", "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


"நீர்ப்பறவை", "அயோத்தி" உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க,  


பாடல்களை "நூறு சாமிகள் இருந்தாலும்" என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் "காற்றோடு பட்டம் போல", "நீலோத்தி" உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.


"ஒரு நொடி", "ஜென்ம நட்சத்திரம்" ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.


சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.


நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.


மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்


தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்


தயாரிப்பு : ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - தினந்தோறும் நாகராஜ்.


படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை...


"கதையாகச் சொன்னால் 'ஆகாயம்' குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன்.  தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன.


படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.


 'ஆகாயம்' அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.


விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



 இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்

தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார்.


இன்றைய விழாவில்


தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,  


“இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி அல்லது கருத்து ஒரு விஷயத்தையே ஒரே நாளில், சில நேரங்களில் ஒரு நொடியில் கூட மாற்றக்கூடியது. அந்த மீடியாவை நம்பித்தான் என்னுடைய முதல் படைப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.





எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,


“தினந்தோறும் நாகராஜை நான் சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் கதை சொல்லும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே நடப்பது போல் மிக நுணுக்கமாக விவரிப்பார். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் அவரைச் சுற்றி இருந்து, அவர் கதை சொல்வதைக் கேட்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்போம். அந்த அளவுக்கு அவரது கதை சொல்லும் திறமை எங்களை வசீகரித்தது” என்றார்.


மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். அன்றைக்கு நாகராஜ் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அதன்பிறகு நடந்தது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு நாகராஜ் சென்றார். அவருடைய திறமை இருந்தும், தனது திறமையைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை” என்று கூறினார்.


தொடர்ந்து, “நாங்களும் சசியும் கூட ஒரு கட்டத்தில் நாகராஜ் முடிந்துவிட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எவ்வளவு கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். ஒருகாலத்தில் நாங்கள் ஹீரோவாகப் பார்த்த நாகராஜ், இன்று மீண்டும் தனது படைப்புடன் வந்திருக்கிறார். இந்த விழா மற்றவர்களுக்கு ஒரு சாதாரண விழாவாக இருக்கலாம்; ஆனால் நாகராஜைப் பொறுத்தவரை இது ஒரு புதிய பிறப்பு போன்றது” என்றார். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



இயக்குநர் பாலசேகர் பேசியதாவது.., 

“நாகராஜ் அண்ணாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். பார்த்தவுடனேயே அவரது பேச்சு, பழகும் விதம், கதை சொல்லும் திறன், காட்சிகளை விவரிக்கும் விதம் என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களையும், பெண்களுக்கான வசனங்களையும் மிகவும் நாகரிகமாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பார்” என்றார்.


மேலும், “‘தினந்தோறும்’ படத்தில் நாகராஜ் சார் நடித்த கதாபாத்திரம் தெலுங்கில் ‘மனிஷி’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர்தான் இன்று மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் ரவிதேஜா. அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயர் பெற வேண்டிய திறமை கொண்டவர் நாகராஜ் சார். இடையில் அவரது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தாலும், அவர் சினிமாவை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை. சினிமா ஒருவரை கடைசி வரை கைவிடாது என்பதற்கு நாகராஜ் சாரே மிகச் சிறந்த உதாரணம். இன்று ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி அனைவரையும் அழைத்து அமர வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.


தொடர்ந்து, “நாகராஜ் சாரின் திறமையை மட்டுமே பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் சாருக்கும் கார்த்திகா தேவி அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். மற்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களைத் தேடிப் பார்க்கிறோம்; ஆனால் சினிமாவில் மட்டும் அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர்ப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தாண்டி நாகராஜின் திறமையை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது. அவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறையும், சமூக விஷயங்களைப் பேசும் வசனங்களும் இருக்கும். சும்மா ஒரு படத்தை உருவாக்காமல், ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பார். அவரது வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருந்த குடும்பத்தின் ஆதரவும் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ‘ஆகாயம்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்; நாகராஜ் சார் மீண்டும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.




இயக்குநர் சற்குணம் பேசியதாவது..,


“‘ஆகாயம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி எனது தம்பியும், உறவினரும் ஆவார். எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு உள்ளது. தனது முதல் தயாரிப்பாக ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தம்பியை தமிழ் சினிமா சார்பாக வரவேற்று வாழ்த்துகிறேன்” என்றார்.


மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தினந்தோறும் நாகராஜ், ‘ஆகாயம்’ படத்தின் மூலமாகவும் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும். இந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு முக்கியமான வெற்றியாக அமைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.


இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்  “‘ஆகாயம்’ படத்தின் வெற்றி ஆகாயம் போல உயரமாக இருக்கட்டும்” அனைவருக்கும்  தனது வாழ்த்துக்கள்.



 நடிகர் ஶ்ரீராம் கார்த்திக் பேசியதாவது.., 


“நாகராஜ் சார் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு நேசித்து உருவாக்கியிருக்கிறார் என்பதை அவர் ஸ்கிரிப்ட் சொல்லும்போதே உணர்ந்தேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னை பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சிறிய வசனங்கள்கூட ஒரு காட்சியை எப்படி உயர்த்துகின்றன என்பதை இந்தப் படத்தில் நேரடியாகப் பார்த்தேன்” என்றார்.


மேலும், “தயாரிப்பாளர்கள் ஜெய் சார், கார்த்திகா தேவி மேம் இருவரும் மிகவும் நல்ல மனம் கொண்டவர்கள். அவர்களுடைய நல்ல மனதிற்காக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் லாபத்தையும் கொடுத்து, அவர்கள் தொடர்ந்து பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களுக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் இசையமைக்கும் படத்தில் நான் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் சார் முதல் நாளிலிருந்து நாகராஜ் சாருடன் இணைந்து இந்தப் படத்திற்காக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். டிரைலர் மற்றும் பாடல்களில் அவரது உழைப்பு தெரிகிறது” என்றார்.


தொடர்ந்து, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், அனைவருக்கும் நன்றி. ஆலிஷா மிராணி சிறப்பாக நடித்திருக்கிறார்; அவர் நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவார். கனிகா மேமுடன் எனக்கு நிறைய காட்சிகள் உள்ளன. தீபா அக்காவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கன்னி மாடம்’ படத்திலிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் அளித்து வரும் பத்திரிகை நண்பர்கள் இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். ‘ஆகாயம்’ அன்பை மட்டுமே வளர்க்கும் அழகான படம். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் ஆதரித்து வெற்றிப் படமாக்குவீர்கள் என்று நம்புகிறேன். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த திரையுலகினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.




இயக்குநர் கிருஷ்ணா பேசியதாவது..,


“நாகராஜ் சாரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகை வந்துகொண்டே இருக்கும். அவ்வளவு பாசிட்டிவான மனிதர். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவருடனான எனது நட்பு ‘மின்னலே’ படத்திலிருந்து தொடங்கியது. அந்தப் படத்தில் அவர் வசனகர்த்தா, நான் இணை இயக்குநர். அதன்பிறகு என்னுடைய எல்லா கதைகளையும் முதலில் அவரிடம் சொல்லி, அவரது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். அவர் மிகவும் கிரியேட்டிவான மனிதர்” என்றார்.


மேலும், “‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா தொடர்பான ஒரு முக்கியமான காட்சியில், அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாகராஜ் சொன்ன ஒரு சிறிய யோசனைதான் பின்னர் திரையரங்கில் கைதட்டலைப் பெற்றது. அந்தக் காட்சிக்குப் பின்னால் நாகராஜின் யோசனை இருந்ததை இத்தனை காலமாக சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை; இன்று அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு சிறந்த இயக்குநர், எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகரும் கூட. ‘தினந்தோறும்’ படத்தில் அவரது கதாபாத்திரம்தான் ஷோ ஸ்டீலர். அவருடன் நடித்துவிட்டு அவரைத் தவிர்த்து யாரும் பெயர் வாங்கிவிட முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும்” என்றார்.


,“ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாகராஜ் மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அவரது எழுத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா இருவரும் மிகவும் சிறப்பாகவும் எக்ஸ்பிரஸிவாகவும் நடித்திருக்கிறார்கள். கனிகா மேம் மற்றும் தீபா அக்காவின் நடிப்புக்கும் நான் ரசிகன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.





இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது..,


“இந்தப் படத்தில் என்னை இசையமைக்க அழைத்த தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இயக்குநர் நாகராஜ் சாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நாகராஜ் சாரை முதன்முதலில் சந்தித்தபோது, அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் அவர் வாழ்ந்தது போல உணர்வார். அதனால் அவர் கதை சொல்லும்போது முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றார்.


மேலும், “பாடல்கள் உருவாக்கத்திலும் நாகராஜ் சார் முழுமையாக ஈடுபட்டார். ரெக்கார்டிங்கின்போதும் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, சரியானதை தேர்வு செய்தார். பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும், நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் பின்னணி இசையிலும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.


“நாகராஜ் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘தினந்தோறும்’ படத்திலிருந்தே அவரது படைப்புகளுக்கு நான் ரசிகன். இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருது பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்கள், இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.




இயக்குநர் சசி பேசியதாவது..,


“என்னுடைய நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு நண்பனாக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களை நான் நிறைய கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் நிச்சயம் மக்களைச் சென்றடையும். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.


“நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் ஒரு கதையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படி கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து, அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.


“சில இயக்குநர்கள் தப்பாக படங்களை ஆனால் படங்களை எடுக்கவே மாட்டார்கள்; அப்படி தவறான படமே எடுக்க முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். சில படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும்; ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்தான் நாகராஜ். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பாருங்கள். நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.


சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,


“‘ஆகாயம்’ படத்தை தயாரித்துள்ள ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி இருவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞனை, ஒரு முக்கியமான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ரகுநந்தன். அவரது இசைக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர். அவருக்கான மிகப்பெரிய உயரத்தை தொடும் நேரம் நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன்” என்றார்.


மேலும், “நாகராஜை ஒரு காலகட்டத்தில் சந்திக்கும்போது மிகவும் சங்கடமாக இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கையில் சில தவறுகள் நடந்தன; அதில் குடிப்பழக்கமும் ஒன்று. குடி நிச்சயமாக தவறுதான். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்திருக்கிறார். நான் அவரை நேர்காணல் செய்தபோது, தனது வாழ்க்கையை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வாழ்க்கையில் விழாதவர்கள் யாரும் இல்லை; விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன். அதை நாகராஜ் சாதித்துக் காட்டியிருக்கிறார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்”.


தொடர்ந்து, “நாகராஜின் திறமையை சசி, கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் இங்கே பாராட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திறமைசாலிக்கு நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததுதான் எனக்கு புரியாத விஷயம். இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிகச் சிறந்த ஒரு யூனிட்டை அவர் அமைத்திருக்கிறார். நல்ல கதாநாயகன், அழகாகத் தமிழ் பேசக்கூடிய கதாநாயகன் என இந்தப் படத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று; அவருக்கு தேவைப்பட்டது மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் எனது நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஜெயச்சந்திரன் தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்” என்று வாழ்த்தினார்.




இயக்குநர் பேரரசு பேசியதாவது..,


“‘ஆகாயம்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கும் நாகராஜை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, சினிமா மீதான அவரது ஆர்வமும், கதை சொல்லும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி. அவரது ‘தினந்தோறும்’ படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரத்தை கையாண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடையில் அவரது வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து அவர் மீண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.


மேலும், “சினிமாவில் வெற்றியடைவதற்கு ஒரு திறமை வேண்டும்; அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னொரு திறமை வேண்டும். பலர் வெற்றியை அடைகிறார்கள், ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகிறார்கள். ஒருவர் தனது வெற்றிக்கான காரணத்தையும், தோல்விக்கான காரணத்தையும் தானே ஆராய வேண்டும். அந்த வகையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வந்திருக்கும் நாகராஜ் இன்று ஒரு தெளிவான மனிதராக நிற்கிறார். ‘தினந்தோறும்’ நாகராஜ் வெற்றியை அடைந்தவர் என்றால், ‘ஆகாயம்’ நாகராஜ் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறமையுடன் வந்திருக்கிறார்” என்றார்.


தொடர்ந்து, “தமிழ் சினிமாவில் இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்களின் வளர்ச்சிக்குப் பின்னால் நாகராஜின் பங்களிப்பும் இருக்கிறது. பலருக்கு தனது திறமையின் மூலம் உதவியிருக்கிறார். ‘தினந்தோறும்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தபோதே, இயல்பான வசனம், எதார்த்தமான நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு கலைஞர் மீண்டும் ‘ஆகாயம்’ மூலம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நாகராஜ் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். இனிமேல் அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.




இயக்குநர் நாகராஜ் பேசியதாவது..,


“மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி அவர்கள், நான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான் பல படங்கள் செய்திருக்கலாம், நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். டிரைலரைப் பார்த்தவுடனேயே அவர் படத்தின் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது” என்றார்.


மேலும், “என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


தொடர்ந்து, “இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு நிச்சயமாக ரசிப்பீர்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். என்னை நம்பி உடன் நின்ற கார்த்திக் நல்லமுத்து அவர்களுக்கு நன்றி. 



‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, ‘மகாராஜா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, ‘ஆகாயம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏக்நாத், சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார். நடன அமைப்பை மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.


இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக நடைபெற்ற நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Gautham Ram Karthik has consistently gravitated towards unique, content-driven films, establishing himself as an actor who chooses distinctive stories. His upcoming film ‘Bloody Politics’ has been generating curiosity right from its inception, with the film’s spectacular title announcement glimpse grabbing considerable attention. Adding further to the anticipation, the much-awaited teaser has now been unveiled by none other than ‘Makkal Selvan’ Vijay Sethupathi.


The 107-second teaser offers a glimpse into the world of the film, establishing Gautham Ram Karthik as an aggressive youngster aspiring to become a politician. The teaser also introduces several intriguing characters who add depth and intensity to the narrative, complemented by hard-hitting dialogues. Directors P. Vasu and Selvaraghavan emerge as instant attractions, while the technical aspects further enhance the promise of a compelling theatrical experience.


Within minutes of its launch, the teaser has garnered a phenomenal response, with the intriguing glimpse finding a place on the watchlists of film enthusiasts.


Ganesh K Babu is presenting the film under Draft by GKB, with Sanjay Muthukumar V serving as co-producer. The film features dialogues by Raju Murugan, music by Sam C.S., cinematography by Pradeep Kaliraja, art direction by Tha. Ramalingam, and editing by Deepak S.


The official announcements regarding the film’s trailer, audio launch and worldwide theatrical release date will be made soon.

 

காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.


முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.


கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம்  வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருபவர் நடிகை விஜயலட்சுமி வீரமணி. ‘மாவீரன்’, ‘செம்பி’, ‘கஜானா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஆபீஸ்’ தொடரிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.


தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் விஜயலட்சுமி வீரமணி, தற்போது சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுப்பூர்வமான பாலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையையும், இதுவரை அவர் ஏற்று நடித்திராத மாறுபட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பையும் பார்க்க முடிகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்துள்ளார்.


நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்து கொண்டதாவது, “உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு கிடைத்த வரம். உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டிருக்கிறேன். ‘என்ன விலை’ படத்தின் மூலம், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத என்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தக்கூடிய தனித்துவமான கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


பாலம்மா கதாபாத்திரம் ஒரு நடிகையாக என்னிடம் நிறைய எதிர்பார்த்தது. மிகச் சிறந்த கலைஞரான கருணாஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்துவரும் அவரைப் போன்ற ஒரு கலைஞர், என்னுடைய நடிப்பை ஊக்குவித்து பாராட்டியது எனக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. நிமிஷா சஜயன் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் நடித்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.


மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. சஜீவ் சார் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். மிகவும் எளிமையான தருணங்களைக்கூட கூர்ந்து கவனித்து, அவற்றை சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொடுப்பவர். கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உணர்வுகள் குறித்து அவருக்கு இருந்த தெளிவு, எனக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வளவு வலுவான கதைக்களத்துடனும், சமூக முக்கியத்துவம் வாய்ந்த மையக்கருத்துடனும் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்திருப்பது அதிர்ஷ்டம்" என்றார்.


சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் மேற்கொள்ளும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, சாஷா, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’, செப்டம்பர் 17, அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இன்றைய நவீன சூழலில், ஒரு திரைப்படத்தின் ஆயுட்காலம் என்பது இனி திரையரங்குகளில் அது ஓடும் காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக, பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ அமைந்துள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது சர்வதேச அளவில் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.


ஆர். மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டுகளாலும், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக மாதவனின் சிறப்பான நடிப்பைப் பாராட்டிய ரசிகர்களின் வாய்மொழிப் பரிந்துரைகளாலும் நான்கு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. 


ஜி.டி. நாயுடுவின் காலத்திற்கே ரசிகர்களை அழைத்து சென்ற படத்தின் விரிவான காலக்கட்டமும் பின்னணியும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக தடைகளை எதிர்த்து நின்ற ஜி.டி. நாயுடுவின் துணிச்சலான செயல்பாடுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.


செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானபோது, வர்த்தக ரீதியிலான இதன் இரண்டாவது அத்தியாயம் தொடங்கியது. பல்வேறு பிராந்திய மொழிகளில் ஓடிடியில் வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள், திரையரங்குகளில் படத்திற்குக் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு டிஜிட்டல் திரைகளிலும் பல மடங்கு அதிகரித்தது. தொடர்ந்து கிடைத்த வாய்மொழிப் பாராட்டுகளால், இப்படம் இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் முன்னேறியது. இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜி.டி.என்.’ மாறியது.


இந்த வெற்றி இந்திய எல்லைகளுடன் நின்றுவிடவில்லை. ‘ஜி.டி.என்.' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமும், உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களிடமும் இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.


தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் டாப் 5 தரவரிசைக்குள் இப்படம்  இடம்பெற்றுள்ளது.


தொழில்துறை ஆய்வாளர்களின் கருத்துப்படி, வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட, வலுவான கதைக்களம் கொண்ட இந்தியத் திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்பதற்கு ‘ஜி.டி.என்.’ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்கின்றனர். 


வலுவான விமர்சனங்கள் இப்படத்திற்கு திரையரங்குகளில் சிறப்பான தொடக்கத்தை வழங்கிய நிலையில், நெட்ஃபிளிக்ஸில் கிடைத்த அபாரமான வரவேற்பு, டிஜிட்டல் தளங்கள் நல்ல கதைகளுக்கு இரண்டாவது வாய்ப்பை மட்டுமல்லாமல், பல நேரங்களில் மிகப் பெரிய உலகளாவிய மேடையையும் வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

'எந்திரன்', 'நஞ்சுபுரம்', 'வேலாயுதம்', 'கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ராகவ். இவரது நடிப்பில் அடுத்ததாக 'பீப்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. 


இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது. 


படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தும், படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராகவ்.


“நாம் ஒரு விஷயம் கேட்க வேண்டாம் அல்லது கேட்கக் கூடாது என அதை கட் பண்ண நினைத்தால் அந்த இடத்தில் ஒரு 'பீப்' போடுகிறோம் அதாவது துண்டிக்கப்பட்ட குரல்கள் என்று சொல்வார்களே அதுபோல சொல்லப்படாதவை என்று இந்த 'பீப்' டைட்டிலுக்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். 


அந்த வகையில் வழக்கமாக நிறைய சொல்லப்படாத விஷயங்களை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். அதாவது படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை குறிவைக்கும் ஒரு க்ரைம் திரில்லர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.


படத்தின் ஹீரோவுக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கு என்றாலும் அவர் சூப்பர் மேன் கிடையாது. நான்கு டிஜிட் பெருக்கல் கணக்கைக் கூட சிலர் உடனடியாக விடை சொல்கிறார்களே.. அதுபோல இந்த ஹீரோவுக்கும் ஒருவிதமான சூப்பர் பவர் இருக்கு. அதேசமயம் சூப்பர் பவர் என்பது நார்மலான ரியல் லைஃப்பில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இதில் அழகாக உருவாக்கி இருக்கிறோம்.


என்னுடைய கதாபாத்திரத்தின் மேனரிசம் எதுவுமே எனது சொந்த உருவாக்கம் இல்லை.  அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநர் உருவாக்கியதை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். படத்தை பார்த்த என் மனைவியே உன்னை வேறு மாதிரி காட்டி இருக்கிறார் இயக்குநர் என்று ஆச்சரியப்பட்டார்.


இரண்டு பாடல்கள் தான் படத்தில் இருக்கிறது ஆனால் ஒரு க்ரைம் திரில்லர் என்பதால் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்திற்கு ஒரு ஆன்மாவாக அமைந்திருக்கிறது. 


குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்தி செல்வதில் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.


ஒரு புதிய இயக்குநரின் படம் என்பதால் அதை அலட்சியமாக ஒதுக்காமல் படத்தில் கொஞ்ச நேரமாவது ஊன்றி கவனித்தால் நிச்சயமாக படம் உங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும்.


ஒரு க்ரைம் த்ரில்லர் என்கிறபோது படம் பார்க்கும் ரசிகர்களும் அவர்களே கதைக்குள் இறங்கி சில விஷயங்களை கணக்கு போட்டு கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியம் இந்த படத்தில் இருக்கிறது.


ஒரு முக்கிய காட்சிக்காக 17 வது மாடியில் இருந்து கயிறு கட்டி பத்தாவது மாடி வரை இறங்குவது போல படமாக்கினார்கள். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த அளவுக்கவாது நாம் ரிஸ்க் எடுத்து தான் ஆகவேண்டும்.


என்னைத் தேடி ஒரு கதாபாத்திரம் வரும்போது இது ஈசியாக பண்ணி விடலாமே என்பது போல இருந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் ? அதே சமயம் அதை என்னால் பண்ண முடியும் என்கிற கதாபாத்திரமாகவும்,  என்னால் முடியுமா? என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் அது சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது. 


தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி செய்தது போல ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்ப நாளாக ஆசை.. இது தவிர நானும் சொந்தமாக சில ஸ்கிரிப்ட்டுகள் எழுதி வைத்திருக்கிறேன்.. அதை எல்லாம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது” என்று கூறினார் ராகவ்..


தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் 


இயக்கம் ; இல.சண்முக சுந்தர்

இசை ; பிரசாந்த் விஹாரி 

ஒளிப்பதிவு ; பிரதீப் பத்மகுமார் 

படத்தொகுப்பு ; அபிஷேக் மற்றும் விக்னேஷ் 

ஆக்சன் காட்சிகள் ; ராம்குமார்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

 

தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. C. பிரபுராம் இயக்கியுள்ள இப்படத்தில் டாக்டர் A. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


மதுவுக்கு அடிமையான குமரனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரது தாயார் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி அமுதா, குமரனின் குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும் குமரனை அந்தப் பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார். 


இதற்கிடையே, குமரனைப் போலவே மதுவை விரும்பும் சிலர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி, குமரனை அதன் தலைவராகத் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவிக்கிறது. இதனால், தனது வாழ்க்கையாக இருந்த மதுவின்றி எப்படி வாழ்வது என்ற மிகப்பெரிய சவாலை குமரன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அதன்பிறகு குமரனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், புதிய சூழலை சமாளிக்க அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே ‘நல்லபடம்’.


மதுவால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இப்படம் பேசுகிறது. அதேசமயம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சமூக விழிப்புணர்வு மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் சமூக, வணிக அணுகுமுறையுடன் உருவாகியுள்ள இப்படம், பொழுதுபோக்கு அம்சத்திற்கு குறைவில்லாமல் சமூகக் கருத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவில் இனியன் J ஹாரிஸ் ஒளிப்பதிவாளராகவும், B.R. பிரகாஷ் படத்தொகுப்பாளராகவும், சகிஷ்ணா சேவியர் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். அஸ்மின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.


ஹரிஷ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் A. அழகுபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஹரிஷ் சினிமாஸ் நிறுவனமே விநியோகம் செய்து வெளியிடுகிறது.


C. பிரபுராம் இயக்கியுள்ள ‘நல்லபடம்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 18 அன்று வெளியாகிறது.

 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


மேலும், பிரபாஸின் எளிமை மற்றும் தாராள மனப்பான்மை மட்டுமின்றி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்துள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார் குறிப்பாக பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த மட்டன் குறித்து பேசிய அவர், “பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


ஜிதின் குலாட்டியின் முழுமையான பேட்டி – Variety India


பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

 

அன்பிற்கினிய பத்திரிக்கை மீடியா மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம். பெரும் கனவுடன் தொடங்கி பல்வேறு தடங்கல்கள் வந்த பொழுதும்  ONE MAN படத்தை நிறைவு செய்து திரைக்குக் கொண்டு வந்தேன்.  படம் பார்த்தவர்களும் பத்திரிக்கையாளர்களும் வெகுவாக பாராட்டிய பொழுதும் பார்வையாளர்களைச் சென்றடையும் முன்பே  படம் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. 


 ஒவ்வொரு நாளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில்  நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சிறப்புக் காட்சிகளுக்கு

படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணித்து  படம் பார்க்க வருகிறார்கள். 


இந்நிலையில் படம் பார்க்க நினைக்கும் பார்வையாளர்களுக்கு எளிமையாக கிடைக்கும் வகையில் யூடியூப் தளத்தில் படத்தை வெள்ளிக்கிழமை 11 9/2026 மாலை 7 மணி முதல் பார்க்கும்படி தயார் செய்திருக்கிறேன்.  119 ரூபாய் கட்டணம் செலுத்தி படத்தை பார்க்கலாம். 


 மேலும் இந்த கட்டணத்தின் மூலம் ONE MAN படத்தில் ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தேன் என்கின்ற மேக்கிங் காட்சிகள்  ஒவ்வொன்றையும் அதே தளத்தில் பார்க்க முடியும்.


 பார்வையாளர்களுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கும் இரும்புச் சுவற்றை உடைக்கும் முயற்சியாகவும் இது அமையும்.   பலரும் படத்தை பார்க்க ஆவலாக இருந்த பொழுதும் அவர்களுக்கு சென்றடையாமல் தடுத்த இந்த இரும்புச் சுவர்களை தாண்டி நேரடியாக மக்களைச் சென்றடைவது இனிமேல் உருவாகும் புதிய முயற்சிகளை தாங்கி வரும் சினிமாக்களுக்கும், தற்சார்பு சினிமாக்களுக்கும் நேரடியாக மக்களைச் சென்றடையும் இந்த புதிய வழி ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று கருதுகிறேன். 



வலிய கரங்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் மக்களின் எளிய கரங்களால் ஏந்திக் கொள்ளப்பட்ட வரலாறை கண்டிருக்கிறேன். ( வெங்காயம் உட்பட) 



உலகில் யாரும் செய்யாத முயற்சியாக தனி நபராக ஒரு  எடுத்து முடிக்கப்பட்ட ONE MAN திரைப்படத்தை அரசாங்கமும் திரையுலகமும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற எனது எண்ணம் கை கூடாமல் போனாலும் மக்கள் சக தமிழனின் படைப்பை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பார்கள் என்று பெரும்  நம்பிக்கையுடன் மக்கள் கையில் ஒப்படைக்கிறேன்.


ONE MAN படத்தின் லிங்க்:

https://youtu.be/J8y_i64kazU


11-9-26 . 7PM முதல் பார்வைக்கு கிடைக்கும்

Pageviews