ஆகஸ்ட் 15 முதல் Sony LIV செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தலாம்
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Tamil Idol’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் Sony Vizha அறிமுகப்படுத்துகிறது.
Sony vizha மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தற்போது ‘Tamil Idol’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இது இசை மற்றும் திறமையை மையமாகக் கொண்ட ஒரு புதிய பயணமாக இருக்கும். சிறந்த குரல் வளம், மேடை நிகழ்த்தும் திறன், தனித்துவமான திறமை ஆகியவற்றை கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தேடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கின்றார்..தமிழகத்தின் சிறந்த குரலை கண்டுபிடித்து அதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ' Tamil Idol ’ உருவாகிறது. சோனி விழாவின் முக்கியமான உலகளாவிய நிகழ்ச்சியாக உருவாகும் Tamil Idol, உலக அளவில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி வடிவங்களை தமிழர்களிடம் கொண்டு வருவதோடு தமிழகத்தின் உள்ளூர் திறமைகளையும் கலாச்சாரத்தையும் முன்னிலையில் வைக்க உதவுகிறது.
Fremantle India நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கின்றது...இந்த நிகழ்ச்சி Sony Vizha மற்றும் Sony LIV ஆகிய இரு தளங்களிலும் ஒளிபரப்பாகும்...இதன் மூலம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகத் தரத்தில் நிகழ்ச்சிகளும் தமிழ் கதைகளும் ஒரே இடத்தில் ரசிகர்களை சென்றடையும் வகையில் உள்ளது.
'Tamil Idol' நிகழ்ச்சிக்கான Audition ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள பாடகர்கள், Sony LIV செயலி மூலம் பதிவு செய்து ஆடிஷனில் பங்கேற்கலாம்.
ஏ ஆர் ரகுமான் கூறுகையில்..,
புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இசையின் முக்கியமான பயணம்...அந்தக் குரல்கள் ஒருநாள் பல லட்ச மக்களைச் சென்றடையலாம். இந்த பயணத்தின் மூலம் புதிய திறமைகள்..புதிய கோணம் மற்றும் பல தலைமுறைகளின் சொல்லப்படாத கதைகளை நாம் கண்டுபிடிக்கின்றோம்.
'Tamil Idol' மூலம், முதன்முறையாக தமிழ்நாட்டின் Extraordinary குரல்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமையை கொண்டாடுவதற்கான ஒரு மேடையை வழங்குகின்றோம்.
தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், Sony LIV செயலி மூலம் Tamil Idol ஆடிஷனில் பங்கேற்கலாம்.
பங்கேற்பது எப்படி?
Sony LIV செயலியில் உள்ள Tamil Idol Audition பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும் முதலில்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பல வகையான பாடல்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் 3 வீடியோக்களை அதில் பதிவேற்ற வேண்டும்.
முதல் ‘Tamil Idol’ யார்?
அதற்கான தேடல் தற்போது தொடங்குகிறது..
தமிழகத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் நினைவில் நிற்கும் அடுத்த குரல் இருக்கிறது.. அந்தக் குரல் உங்களுடையதாக கண்டிப்பாக இருக்கலாம்
Sony Vizha என்பது Sony Pictures Networks India (SPNI) நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தளமாகும்.
தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் ரசிகர்களுக்காக Sony Vizha உருவாக்கப்பட்டுள்ளது.
‘விழா’ என்ற தமிழ் சொல்லின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சேனல், அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.
'Celebrity MasterChef Tamil' மற்றும் 'Tamil Idol' போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, தரமான புதிய தலைமுறைக்கு ஏற்ற வித்தியாசமான பொழுதுபோக்கை வழங்க சோனி விழா உறுதியாக உள்ளது.
Sony Pictures Networks India Private Limited (SPNI) என்பது ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும்.
SPNI நிறுவனம் SD மற்றும் HD என மொத்தம் 29 பிரீமியம் சேனல்களை கொண்டுள்ளது. இதில் Sony Entertainment Television, Sony SAB, Sony PAL, Sony Marathi, Sony AATH, Sony VIZHA, Sony MAX, Sony MAX 1, Sony MAX 2, Sony WAH உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட சேனல்கள் இடம்பெற்றுள்ளன.
அதனைப்போல, Sony Sports Network மூலம் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் Sony YAY மூலம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும்..,Sony PIX மூலம் ஆங்கில திரைப்படங்களையும், Sony BBC Earth மூலம் அறிவியல் மற்றும் ஆவணப்பட நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.
இதனுடன் Sony LIV என்ற டிஜிட்டல் OTT தளமும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான அசல் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் Studio NEXT நிறுவனமும் SPNI-யின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த network இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றது.SPNI தனது 31-வது ஆண்டு செயல்பாட்டை இந்தியாவில் நிறைவு செய்து வருகிறது. மேலும் ஊழியர்களுக்கான சிறந்த பணிச்சூழல் மற்றும் நிறுவன கலாச்சாரத்திற்காக பல்வேறு விருதுகளை SPNI பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்ச்சியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற ராபர்ட் டவுனி ஜூனியர் (விக்டர் வான் டூம்/டாக்டர் டூம்), கிறிஸ் எவன்ஸ் (ஸ்டீவ் ரோஜர்ஸ்) மற்றும் ஹேலி அட்வெல் (பெக்கி கார்டர்) ஆகியோர் மேடையில் இந்த ஸ்பெஷல் புரோமோவை அறிமுகப்படுத்தினர்.
முதன்முறையாக டாக்டர் டூம் இந்த புரோமோவில் முக்கியத்துவம் பெறுகிறார். இதன் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியர், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய சூப்பர் வில்லனாக உருவெடுப்பது தெளிவாகிறது. வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம், டாக்டர் டூமின் வில்லன் கதைக்களத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறார். அதே நேரத்தில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் வில்லனான டாக்டர் டூமுக்கும் தோருக்கும் இடையே நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான மோதலையும் இந்த புரோமோ காட்டுகிறது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தை ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி'எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பேக்ராக், வயாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான் கேமன், ரெபெக்கா ரோமிஜன், மேபெல் கேடனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தில், மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த பிரபல சூப்பர் ஹீரோக்கள், இதுவரை எதிர்கொண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஒன்றிணைகின்றனர். அவர்களின் உலகங்கள் ஒன்றோடொன்று மோதும் நிலையில், உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய போராட்டம் தொடங்குகிறது.
’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்தை தருகிறது. இதன் மூலம் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
சுதீர் யாதுவன்ஷி தனது ஈர்க்கும் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார். ‘துரந்தர்’ படத்தின் டைட்டில் பாடல் மற்றும் ’துரந்தர்: தி ரிவென்ஜ்’ படத்தின் ‘ஆரி ஆரி’ பாடல் மூலம் பிரபலமான அவர், ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தீவிர கதை களத்திற்கும் ஏற்ற வகையில் இந்தப் பாடலை பாடியுள்ளார். இர்ஷாத் தலால் எழுதியுள்ள பாடல் வரிகளில் தேசப்பற்று நிறைந்துள்ளது. படத்தின் இயக்குநரான ரதீஷ் வேகா, இசை மற்றும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.
ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கும் 'ஆபரேஷன் டிரால்’, தேசிய புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் உருவாகியுள்ள புலனாய்வு திரில்லர் திரைப்படமாகும். ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் வலுவான தேசப்பற்று நிறைந்த கதைக்களம் ஆகும்.
ஜெயசூர்யாவுடன் முரளி ஷர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சார், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ’ஆப்ரேஷன் டிரால்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.
ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார். ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.
’ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் இசை வெளியீடாக வந்துள்ள ‘ஜெய் ஹோ’, படத்தின் தேசப்பற்று மற்றும் அதிரடி நிறைந்த உலகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்
மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. 'காட்டாளன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து மகிழலாம்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சிறப்பான நடிப்பு மற்றும் இசை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘காட்டாளன்’ திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகத்தை மையமாகக் கொண்ட மோதலின் பின்னணியில் இப்படத்தின் கதை நகர்கிறது. அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சக்திகள், பழிவாங்குதல் மற்றும் உயிர்வாழ்தலுக்காக கடுமையாக மோதுகின்றன. இரக்கத்திற்கு இடமில்லாத இந்தப் போரில், கொடூரமானவர்களே இறுதியில் நிலைத்திருக்கின்றனர்.
இப்படத்தில் ஆண்டனி (பெப்பே) வர்கீஸ், சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பால் ஜார்ஜ், ஷரீஃப் முஹமது மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் வெளியாகியுள்ளதன் மூலம், ‘காட்டாளன்’ திரைப்படத்தை அதன் தாய்மொழியைத் தாண்டி ரசிகர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பை மனோரமாமேக்ஸ் வழங்குகிறது. அதே நேரத்தில், படத்தின் பிராந்திய அடையாளத்தையும் தக்கவைத்துக் கொண்டு, மேலும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையவும் இந்த முயற்சி உதவுகிறது.
‘காட்டாளன்’ திரைப்படம் தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்!
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது.
பிரபு தேவாவின் ஸ்டைலான தோற்றமும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மாஸ் அம்சத்தை கொடுக்க, வடிவேலுவின் காமெடி அதற்கு நேர்மாறான சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த இருவரின் கூட்டணி ஜாம்பி கதைக்களத்துடன் எப்படி பயணிக்கிறது என்பதே படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூட்டணியாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள டீசர், படம் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியிருப்பதை காட்டுகிறது.
சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கம் செய்கிறார்.
இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மொத்தத்தில், பிரபு தேவா – வடிவேலு கூட்டணி, ஜாம்பி களம், எரிமலை பின்னணி, ஆக்ஷன் மற்றும் அதற்குள் கலக்கும் வடிவேலுவின் காமெடி என “பேங் பேங்” டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.







