இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.


 இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.


 நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.



இந்த 'ரெட் லேபில்' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.


 இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 


விழாவில்  கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும்போது, 


"தயாரிப்பாளர் முதலில் என்னிடம் கதை கேட்டார். நான் இரண்டு கதைகளைச் சுருக்கமாகச் சொன்னேன். அதில் ஒன்றை தேர்வு செய்தார். ஹாலிவுட் திரையுலகத்தில் முதலில் கதையைத் தேர்ந்தெடுத்து பிறகு தான் மற்றவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பாணியில் இந்த தயாரிப்பாளர் முதலில் கதாசிரியரை அணுகி என்னிடம் கதை கேட்டார். பிறகு தான் இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் .அந்த வகையில்  இந்தப்படம் முறையாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அவர்கள் காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சில மாற்றங்களை யோசனையாகக் கூறினார். அதன்படி  ஒரு காட்சி கூட புதிதாக எடுக்காமல் அந்த மாற்றங்களைச் செய்தோம். பெரிய ஆச்சரியமாக இருந்தது ,அது ஒரு வேறு ஒரு விதத்தில் இருந்தது. அந்த வகையில் அவரது அனுபவம் தந்த உதவி மறக்க முடியாதது "என்றார்.


 நடன இயக்குநர் விஜி சதீஷ் பேசும்போது, 


" இந்தப் படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் லெனின் கட்டிப் பிடித்து நடிக்க மாட்டேன் என்றார். நான்தான் அப்படி நடிக்க வைத்தேன்.அவரது மனைவி தவறாக நினைக்கக் கூடாது" என்றார்.


 நடிகர் கார்மேகம் சசி பேசும்போது, 


"  வளர்ந்து வரும் இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்றார்.


 நடிகை அனுஷா பேசும் போது, 


" நான் இரண்டும் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுதான் எனது முதல் மேடை. படத்தை ஊடகங்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவுங்கள் "என்று கேட்டுக் கொண்டார்.


நடிகர் கெவின் பேசும்போது, 

குரல் தழுதழுத்தது .


"என்னை வைத்து இயக்குநர் முதலில் 'குப்பை' என்ற குறும்படம் எடுத்தார். அது  திரைப்பட விழாக்களில் 50 விருதுகளைப் பெற்றது. எனக்கு 6 விருதுகள் கிடைத்தன. அந்த இயக்குநரின் தந்தை இன்று இல்லாதது வருத்தம்" என்று கண் கலங்கினார்.


இயக்குநர் அனுமோகன் பேசும்போது, 


" நாங்கள் யாரும் சிரமப்பட்டு படம் எடுக்கவில்லை. நாங்கள் ஜாலியாகவே படப்பிடிப்பில் இருந்தோம்" என்றார்.


கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது, 


"டியர், டீசல்  படங்களுக்குப் பிறகு இது எனக்கு மூன்றாவது படம். படப்பிடிப்பில் நான் கேட்டதைக் கொடுத்தார்கள். தேவையானதைச் செய்தார்கள் "என்றார்.


உடை அலங்கார நிபுணர் திரிபுரசுந்தரி பேசும்போது, 


" இந்த படத்தில் அனைவரும் நண்பர்கள் போல் இருந்தார்கள்.சம்பளம் தாமதமின்றிக் கிடைத்தது. மிகவும் சரியாக இந்தப் படக் குழு இருந்தது" என்றார்.


இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது, 


" நான் மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். தமிழில் இது எனக்கு முதல் படம். இது நல்லதொரு படக் குழு .இயக்குநர்  எது வேண்டும் எது வேண்டாம் என்பதில்  தெளிவாக இருந்தார். தயாரிப்பாளரும் இயக்குநரும் சினிமா மீது பெரிய மோகம் கொண்டவர்கள் .எனக்கு மிகவும் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்கள்" என்றார்.


 நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசும் போது, 


"  இந்தப் படத்தின் கதாநாயகன் கெத்தாக மாசாக இருக்கிறார்.

 படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில்  நானும் என் மகளும் இணைந்து ரீல்ஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறோம். படத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் அவை இருக்கும் என்று நம்புகிறோம் .படத்தில் உள்ள இரண்டு பாடல்களும் பெரிய வெற்றி பெறும். " என்றார்.


இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசும்போது , 


"ஆர்.வி. உதயகுமார் 90களில் பிஸியான இயக்குநர். இப்போது நடிகராக பிஸியாக இருக்கிறார்.

வாழ்த்துக்கள் .இந்தப் படக் குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.


 இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, 


" இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது புதிதாக இருக்கிறது. கதையை நம்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கதையை நம்பி வருவது வரவேற்கத்தக்கது.  நம்பிக்கைக்குரிய இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்"என்றார்.


இயக்குநர் பேரரசு பேசும்போது, 


" இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத்  தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி ,ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும். 


ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.


பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால்  நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.


இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி  ஒரு படத்தில்  பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார் ,வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள்  என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். இந்தச் சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல.ஒவ்வொரு இயக்குநருக்கும்  அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள் .ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள் .எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள்.அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?


குறிப்பாக  இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது தொந்தரவு தருவது தவறானதாகும்" என்றார்.


 இயக்குநர் எழில் பேசும்போது, 


"இவர்களுக்கு இது முதல் படம் போலத் தெரியவில்லை. நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இயக்குநருக்குச் சுதந்திரம் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். தயாரிப்பாளர் நடிக்க வந்துவிட்டால் சில கிறுக்குத்தனங்கள் வந்துவிடும். ஆனால் இந்த தயாரிப்பாளர் லெனின் அப்படி எல்லாம் செய்யாமல் இதை முறையாக உருவாக்கி இருக்கிறார். இயக்குநரிடம் சௌகரியமாக நடந்து கொண்டிருக்கிறார். எனவே படம் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துகிறேன்" என்றார்.


 படத்தின் இயக்குநர் கே. ஆர். வினோத் 

 

பேசுவதற்கு முன் தனது 12 உதவி இயக்குநர்களையும் மேடையில் ஏற்றி  அறிமுகப்படுத்தி சபையினரின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொடுத்தார். இது ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.


இயக்குநர் தொடர்ந்து பேசும்போது,


"நாங்கள்  வளர்ந்து வரும் படக் குழுவினர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனவே தான் பலரும் நேரம் காலம் பார்க்காமல் அனைவரும் உழைத்தனர். இது ஒரு தனி மனித முயற்சியல்ல. அனைவரும் சேர்ந்து உழைத்ததால் தான் படம் நன்றாக வந்துள்ளது. உதயகுமார் சார் ஒரு வழிகாட்டி போல் இருந்து தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி அனைத்தையும் செய்தார். அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநரைப் போல கற்றுக் கொண்டேன்.கதாநாயகன் படப்பிடிப்பில்  முதல் இரண்டு நாள் சுமாராக நடித்தார். மூன்றாவது நாளிலிருந்து முழு நடிகராக அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்.அப்படி நடித்து இப்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்து விட்டார். படம் நன்றாக வந்துள்ளது. இது நாகரிகமான படம். நிச்சயமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் "என்றார்.


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது, 


" முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு  வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் ,எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த 'உன் கூடவே' என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார்.  கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.


ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து  பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து  படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்" என்றார்.


 கதாநாயகி அஸ்மின் பேசும்போது, 


" நான் கேரளாவில் இருந்து வந்து இருக்கிறேன். அங்கே எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது என் முதல் மேடையாக உணர்கிறேன். பதற்றமாக இருக்கிறது. கதாநாயகியாக எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் நல்ல நண்பராகவும் என்னை ஊக்கப்படுத்துபவராகவும் இருந்தார் .அனைவருக்கும் நன்றி "என்றார்.


 கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசும் போது, 


"பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது .இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது  போட்டோவைக் காட்டினார்கள்.  முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார்.

உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.


இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் .அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் .

எனக்கு எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும். நானும் எனது தரப்பில் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து விடுவேன். யாருக்கும் பாக்கி வைப்பதில்லை.பணம் இருந்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.பணம் இல்லாவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவோம்.யாருக்கும் பாக்கி வைக்க மாட்டோம்.


ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில்  நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100% உத்திரவாதம் தருகிறேன்" என்றார்.


இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


 விழாவை பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன்  தொகுத்து வழங்கினார்.

 

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது. 


பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர் குமார் மங்கத் பதக் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தங்களுக்கு உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும் அவர் கூறுகையில், "’த்ரிஷ்யம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி இந்திய சினிமாவில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று என சொல்வேன். அசல் மலையாள ஃபிரான்சைஸின் உலகளாவிய உரிமைகளை நாங்கள் பெற்றிருப்பது பெருமையான, உணர்ச்சிபூர்வமான தருணம். எங்கள் உலகளாவிய விநியோக வலிமையுடன் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தை இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


பென் ஸ்டுடியோஸ் இயக்குனர் டாக்டர் ஜெயந்திலால் கடா கூறுகையில், "இந்தியக் கதைகளை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியை நாங்கள் தொடர்கிறோம். பனோரமா ஸ்டுடியோஸுடன் நாங்கள் இணைந்திருப்பதன் மூலம் இந்தத் திரைப்படம் உலகளவில் பார்வையாளர்களை சென்றடைவதை உறுதி செய்கிறது" என்கிறார். 


தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மேலும் கூறுகையில், “பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்துள்ளதால் நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் ஆதரவுடன் இந்தப் படம் அடுத்தடுத்த உயரத்தை சென்றடைவது மகிழ்ச்சி” என்றார். 


நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டதாவது, “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார். 


இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது, “’த்ரிஷ்யம்’ போன்ற கதைகளைக்கு முடிவு என்பதே கிடையாது. அவை அடுத்தடுத்து வளரும். இந்த கூட்டணி அமைந்திருப்பது எங்கள் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்தக் கதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தகுதியானது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், இந்தக் கூட்டணியுடன் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜார்ஜ்குட்டியின் அடுத்த நகர்வு என்ன என்பதைப் பார்க்க தயாராகி விட்டார்கள்” என்றார். 


மலையாள சினிமாவில் நீண்டகால பயணத்திற்கான வலுவான அடித்தளமாக பனோரமா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை அறிவித்துள்ளது. மலையாள சினிமாவை தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் திறமையாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவும் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

 

உதயா தீப், அவரது மாமன் மகள் கவிதா சுரேஷூம் காதலர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், முறையாக இருந்தாலும் மறுப்புத்தெரிவிக்கிறார், உதயா தீப்பின் மாமா, பிரேம் கே சேஷாத்திரி. உதயா தீப்பின் மீதும், அவரது தந்தை மீதும் தீராத பகையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரேம் கே சேஷாத்திரி  ஒரு சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அது கொலையாக இருக்குமோ? என சந்தேகம் நிலவி வரும் நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் தகனம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கிவிடுகின்றனர். காலை, கண் விழித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. இறந்தவரின் உடல் காணாமல் போயிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா, விசாரணை செய்ய வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ‘சாவீ’ படத்தின் மீதிக் கதை.


கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் உதயா தீப். கலகலப்பாக காட்சிகளை கடத்திச் சென்றிருக்கிறார், காட்சிகள் ஒவ்வொன்றிலுமே ஒரு காமெடியை கொடுத்து நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி கவிதா தனக்கான பாத்திரத்தை தெளிவாக செய்து முடித்திருக்கிறார். இவர்களுடன் ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாஸ்த்ரி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறை செய்கிறார்கள்.


இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம், குறைந்த விளக்குகளைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், எளிமை மற்றும் இயல்புத்தன்மையுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். 


இயக்குனர் ஆண்டன் அஜித், ஒரு சாதாரண “பிணம் காணாமல் போனது” என்கிற லைனை வைத்து, அதுக்குள் சஸ்பென்ஸ், வீட்டுக்குள் குழப்பம், பிளாக் காமெடி, சமூக மெசேஜ் — எல்லாத்தையும் மெல்ல மெல்ல சேர்த்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக, இன்றைய இளைஞர்களை பாதிக்கிற போதை பிரச்சனையை ஒரு நகைச்சுவை திரைக்கதையிலேயே டச் பண்ணியிருப்பது நல்ல முயற்சி.

 

கட்டிடப் பொறியியல் படித்த சாக்க்ஷி அகர்வால், ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கேயே பணியாற்றும் விஜய் விஸ்வாவுடன் காதல் வயப்பட்டு, திருமணத்திற்குத் தயாராகிறார். ஆனால், திடீரென நிறுவன காவலாளி ரோபோ சங்கர், சாக்க்ஷியை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கு முன்பே, அனைவருக்கும் கோமாளியாகத் தோன்றும் சாதாரண தொழிலாளி செல்லகுட்டி, சாக்ஷி, விஜய் உள்ளிட்டோரை கடத்திவிடுகிறார். சாக்ஷி, விஜய் விஸ்வாவை ஏன் கடத்தினார் ? பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.


நாயகியாக சாக்க்ஷி அகர்வால் தனது பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காதல், பயம், அதிர்ச்சி என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


காதலராக வரும் விஜய் விஸ்வா, ஆரம்பத்தில் ஹீரோ போல எண்ட்ரி கொடுத்தாலும், பின்னர் படத்தில் காணாமல் போகிறரர், கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். தங்கதுரை, ரோபோ சங்கர்  மற்றும் யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. இருவரும் அடிக்கும் காமெடிகள் கலகலப்பை கொண்டு வருகின்றன. செல்லக்குட்டியின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா, தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சாக்‌ஷியின் தந்தையாக நடித்திருக்கும் பொன்வண்ணன், குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பு. 


படத்தில் பின்னணி, ஒளிப்பதிவும் ஓகே ரகம். 


மொத்தத்தில் படத்தின்  இயக்குனர் செல்லக்குட்டி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோவும் இவரே வில்லனும் இவரே என்ற கோணத்தில் இவரின் கதாபாத்திரம் நகர்கிறது. நல்லதொரு கதையை கையில் எடுத்த செல்லக்குட்டி அதனை காட்சிப்படுத்தும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

கார்த்தீஸ்வரன், ஆதவன் உட்பட ஐவர் சேர்ந்து மக்களிடையே ஆன்லைன் மூலம் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆன் லைன் செக்ஸ் மோசடி, குறைந்த பணத்திற்கு அதிகமான வட்டி, 250 ரூபாய்க்கு மொபைல் போன் என பல விதங்களில் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறது இந்த கும்பல். இந்த கும்பலை பிடிப்பதற்காக களம் இறங்குகிறது ஸ்ரீநிதி தலைமையிலான போலீஸ் படை. இறுதியில் கார்த்தீஸ்வரன் பிடிபட்டாரா இல்லையா என்பது படத்தின் மீதிக் கதை.


இந்த சுவாரஸ்யமான கதையை எழுதி படத்தை இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன். கச்சிதமாக நடித்து கோலிவுட்டில் தனக்கொரு முத்திரையை பதித்துள்ளார். அவரது மோசடி குழுவில் இடம்பெற்றுள்ள லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, ஆதவன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.


ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாக அமைந்து ஆட்டம் போட வைக்கிறது.


மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும் தான் சொல்ல வந்த கருத்தை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

 

'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். 


சமீபத்தில் வெளியான 'நிர்வாகம் பொறுப்பல்ல' மற்றும் 'கிணறு' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது விஷால் நடிக்கும் 'மகுடம்' மற்றும் 'லைப் டுடே' உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதி வருகிறார்.


தனது பயணத்தை பற்றி பேசிய கவிஞர் கருணாகரன், "எனது கலை உலக பயணம் போராட்டம் நிறைந்தது. மாற்றுத்திறனாளி இவர் என்ன எழுதுவார் என்று பல பேரின் கண்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பிடும். அவர்களின் வார்த்தை மழுப்பலான பதில்களை கொடுக்கும். இவற்றைத் தாண்டி என் மீது பலர் வைத்த நம்பிக்கையும் நான் என் மீது கொண்ட தன்னம்பிக்கையும் எனக்கு இந்த இடத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. இறைவனையும் கண்ணதாசனையும் வழிகாட்டிகளாக கொண்டு எனது முயற்சி, தேடல், திறமை மூலம் திரைத்துறைக்கு வந்தவன் நான். கவிஞர் வாலி எனக்கு மிகப்பெரும் உந்து சக்தி. என்னை நேசிக்கும் இயக்குநர்கள்,  இசையமைப்பாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.


விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தில் பாடல் எழுதிய வருகிறேன். அவரது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் நானும் ஒரு ஆஸ்தான பாடலாசிரியர் என்ற இடத்தை எனக்கு கொடுத்த விஷால் சார் அவர்களுக்கு எனது நன்றிகள். இயக்குநரின் பாடல் ஆசிரியராக, இசையமைப்பாளரின் பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளரின் பாடல் ஆசிரியராக, நடிகரின் பாடல் ஆசிரியராக, மக்கள் ரசிக்கும் பாடல் ஆசிரியராக. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சமாக இருந்தால் மட்டுமே இங்கு தடம் பதிக்க முடியும். இவற்றை நான் முழுமையாக பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.


அவரது சமீபத்திய பாடல்கள் குறித்து பேசிய கவிஞர் கருணாகரன், "இந்த ஆண்டு வெளியான 'பீனிக்ஸ்' படத்தில் ஒரு அருமையான பாடலை இசையமைப்பாளர் சாம் சி எஸ் கொடுத்தார். விஜய் சேதுபதிக்கு 'மாமனிதன்' திரைப்படத்தில் எழுதியதும் அவரது மகன் சூர்யா சேதுபதிக்கு 'பீனிக்ஸ்'  திரைப்படத்தில் எழுதியதும் மறக்க முடியாத அனுபவம்.


இமான் இசையில் 'சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்' படத்தில் ஒரு காதல் பாடல் எழுதினேன். 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் நான் எழுதிய பாடலை தேனிசைத் தென்றல் தேவா மற்றும் நடிகர் ஜெய் பாடியது மிக்க மகிழ்ச்சி. மேலும், ஒரு மலையாள படத்தில் இடம்பெறும் தமிழ் பாடலை நான் எழுதியிருக்கிறேன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தமிழில் பாடல் மற்றும் வசனம் எழுதி வருகிறேன் என் தமிழாலும் இறைவன் கருணையாலும் திரை உலகைச் சார்ந்த படைப்பாளிகளின் ஆதரவினாலும் ரசிகர்களின் விருப்பத்தாலும் எனது பாதையின் பயணத்தில் வெற்றியின் முகத்தினை காண்கிறேன். 


அதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு எனது நன்றிகளை கூறுகிறேன்," என்று தெரிவித்தார்.

 

தேசிய தலைவர் தேவர்பெருமான் திரைப்படம் கடந்த அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 


இதன் 50வது நாள் விழா வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேசிய தலைவர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தேவரின் ஆன்மீக வாழ்கையை இரண்டாம் பாகமாக பசும்பொன் சித்தர் என்ற தலைப்பில் டிரன்ட் சினிமா நிறுவனம் சார்பில் ஜெ. நஷீர் சுல்தான் தயாரிக்க இணைந்து தயாரிக்கிறார் கோவை RS புரம் ஆர்.ராதாகிருஷ்ணன்.


இதில் தேவராக பஷீர் நடிக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம்: R.அரவிந்ராஜ், BA., D.F.Tech., இசை: தேனிசை தென்றல் தேவா. முக்கிய கதாபாத்திரங்களில் பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிக வாழ்க்கையையும் முருகக் கடவுளின் மறு அவதாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்பதையும் கூறும் திரைக்காவியம் முக்குலத்தோர் பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் மதுரை ரத்தினவேல் பாண்டியன் ஒருங்கிணைப்புடனும் விரைவில் பசும்பொன்னில் துவங்க உள்ளது.

 

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன்,  மீண்டும் திரைக்கு வருகிறது.


தலைவர் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார்.  அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா”  படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.


1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ்,  என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.


1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படையப்பா படம் அன்றைய  காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து,  இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.


பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன்,  புத்தம் புது பொலிவுடன்,  தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A
Behindwoods Productions proudly announces the official launch of the five songs’ posters of the feature film Moonwalk, the much-awaited full-length comedy entertainer that brings together AR Rahman and Prabhudeva after 27 years, produced and directed by Behindwoods - Founder & CEO - Mr. Manoj Nirmala Sreedharan.
Speaking at the event, *Director Manoj* shared the vision behind the songs and the film: “Moonwalk is a full-length comedy film. Our idea is simple - to make theatres the happiest place for families for the 2.5 hours. With Rahman sir’s music and Prabhu sir’s dance, we wanted families to enjoy it to the fullest.
The album of Moonwalk is builentirely around the concept of ‘happiness’, with each song exploring a distinct flavour of joy through dance, visuals, and emotions. ‘Yethu’ - A Celebration of Happiness, ‘Macarena’ - A Celebration of Friendship, ‘Mayile’ - A Celebration of Hard Work, ‘Tinga’ - A Celebration of Love & ‘Jiger’ - A Celebration of Life are the names of the five songs composed by AR Rahman and performed by Prabhu Deva in uniquely crafted dance sequences.

We have created VFX Worlds for 2 songs - ‘Mayile’ and ‘Jiger’ which will be an unique experience, but please do not expect Director Shankar sir level CG, but we have tried our best within our budget. Most importantly Prabhu sir has rehearsed 15 days for Yethu and Macarena, whereas he rehearsed for 30 days for the song Mayile, which will be one of its kind experience to the fans hopefully.

In a rare and emotional milestone, AR Rahman sir has sung all five songs in the album — something unprecedented in his career. The scratch versions sung by Rahman sir carried a happiness that no other voice could replicate. I have nothing against any singers, but for 4 months I kept telling him, sir, you are a symbol of happiness and a symbol of inspiration. When you sing, that happiness multiplies threefolds. He finally agreed, and that’s how all five songs were sung by him in this album for the very first time. A big thanks to him.

*AR Rahman:* “Working with Prabhu Deva again is an absolute joy. The only difference between the Prabhudeva of the old days and now is just a little bit of grey hair, but his energy is exactly the same. Watching him dance still gives me an incredible boost of excitement. I’ve never seen a legendary choreographer rehearse for an entire month for a single song — that kind of dedication is truly inspiring.

As a composer, it is my responsibility to choose the right singer for each song, but Manoj calmly refused to accept my reasons, he was convinced that I should sing every track myself. When he insisted the same thing for all five songs, I finally decided, ‘Alright—just for this one film, I will sing all of them.’  It was the love I saw on Manoj’s face, and his passion to bring back the same energy of my earlier collaborations with Prabhudeva, that made me say ‘Yes’. I agreed even without listening to the story.”

*Prabhudeva:* “Rahman sir’s music has always energized me, from the very beginning of my career. I’m extremely excited for audiences to experience Moonwalk and the happiness it brings.”

A Grand Musical Journey begins, with the release of these five songs’ posters, Moonwalk sets the stage for one of the most awaited soundtracks of 2026. The film is scheduled for a Summer 2026 theatrical release.

JioHotstar South has released a high-impact teaser announcing the arrival of “South Unbound”, signalling a bold new phase for the platform's regional content. 

The teaser, featuring a striking “COMING SOON” visual, is accompanied by the caption:
“A new era is unfolding, bringing stories that break boundaries! ✨
South Unbound, coming soon.”

With this announcement, JioHotstar South hints at a refreshed, elevated storytelling vision rooted in innovation, culture and limitless creativity. “South Unbound” is positioned to celebrate narratives that push past conventions and redefine entertainment across the southern markets.

Further details, formats, and reveals are expected in the coming rollout.

https://www.instagram.com/reel/DR35hZYjHae/?igsh=dXUyZmw4aWY4aTIy

Pageviews