*‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி; வைரலாகும் விஷ்ணு விஷால் நட்பு தருணம்*

மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு… வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.

உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.

விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா & கோ திரைப்படம் ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது.

இந்தியா, ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பரிமளா & கோ திரைப்படத்தின் பிரத்யேக வெளியீட்டின் மூலம் பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை ஜூலை 10 முதல் வழங்கத் தயாராக உள்ளது. பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜெயராம், ஊர்வசி ஆகியோருடன் மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான கொலை மர்மம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்ட பரிமளா & கோ, எதிர்பாராத விதமாக ஒரு விசித்திரமான விசாரணையின் மையத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. சந்தேகங்கள் அதிகரித்து, ரகசியங்கள் வெளிவரத் தொடங்கும் நிலையில், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ச்சியான கலகலப்பான தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். பாண்டிராஜின் தனித்துவமான குடும்ப பாசத்தையும், சூழ்நிலை நகைச்சுவையையும், சஸ்பென்ஸையும் இணைக்கும் இப்படம், அனைத்து வயதினருக்கும் மகிழ்ச்சியான திரையரங்கு அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

பிரிமியர் குறித்து பேசிய ZEE5-ன் தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ், மலையாளம் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறியதாவது:
"ZEE5-ல், மொழிகள் மற்றும் பிராந்தியங்களைத் தாண்டி குடும்பங்களின் மனதைத் தொடும் கதைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நகைச்சுவை, உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றை புத்துணர்ச்சியூட்டும் வகையில் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு பரிமளா & கோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஜெயராம் மற்றும் ஊர்வசி தலைமையிலான சிறப்பான நட்சத்திர பட்டாளமும், பாண்டிராஜின் தனித்துவமான கதை சொல்லலும் இணைந்துள்ள இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்."

சிரிப்பு, மர்மம் மற்றும் குடும்ப கொண்டாட்டம் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்திற்கு தயாராகுங்கள். பரிமளா & கோ ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக வெளியாகிறது.

திரைப்பட விவரங்கள்

தலைப்பு: பரிமளா & கோ.
ஸ்ட்ரீமிங் தேதி: ஜூலை 10, 2026
மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு & இந்தி
நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம்: பாண்டிராஜ்
தயாரிப்பு: சுபாஸ்கரன் (லைகா புரொடக்ஷன்ஸ்) & பாண்டிராஜ் (பசங்கா புரொடக்ஷன்ஸ்)
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ISC
இசை: Foxn
எடிட்டர்: பிரதீப் இ. ராகவ்
கலை இயக்குநர்: டி. ராமலிங்கம்


தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்'-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஹாட்ஸ்டார் தமிழ், 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், "காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்" என இந்த நிகழ்ச்சியின் கேப்ஷனை ரம்யா கிருஷ்ணன் சொல்கிறார். 

கடந்த காலத்தை விட்டு விலகி, வாழ்க்கையில் புதிய உறவையும், புதிய காதலையும் தேடும் நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக 'செகண்ட் லவ்' இருக்கும். உணர்வுப்பூர்வமான தருணங்கள், நம்பிக்கை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளை இணைக்கும் இந்த நிகழ்ச்சி, நவீன கால உறவுகளையும், மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும் புதிய கோணத்தில் வழங்க இருக்கிறது. 

பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தரமான மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பனிஜாய் ஆசியா கூட்டணி. தற்போது 'செகண்ட் லவ்' மூலம் மீண்டும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. 
 
'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் மூலம், நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தனது ஒரிஜினல்ஸில் இணைத்துள்ளது ஜியோஹாட்ஸ்டார்.

'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகும் புதிய அப்டேட்களை அறிய, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள்.

ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 13 முதல் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி தமிழில் ஸ்ட்ரீம் ஆகும்.

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திறனும் இயல்பாக ஒன்றிணைந்த கலைஞர் அவர். திரையில் அவர் வெறுமனே வந்துபோகாமல், மென்மையான தென்றலாய், தலைமுறைகள் கடந்தும் மனதில் நிற்கும் நினைவுகளை விட்டுச் சென்றார். அவரது அமைதியில் கம்பீரம் இருந்தது. அவரது புன்னகையில் மகிழ்ச்சி இருந்தது. அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் தங்களை உணர்ந்தார்கள்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வெற்றிகரமான திரைப்பயணத்தைத் தொடர்வது என்பது திறமையால் மட்டும் சாத்தியமல்ல. அதற்கு அசாதாரண ஒழுக்கம், தொழில்முறை அர்ப்பணிப்பு, காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை அவசியம். சிறந்த இல்லத்தரசி, அன்பான தாய், வெற்றிகரமான தொழில்முனைவோர் என ஒவ்வொன்றிலும் அதே அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதுதான் அவரது வெற்றிக்கு காரணம். அதனால்தான், அவரது வசீகரம் காலப்போக்கில் குறையாமல் மேலும் மெருகேறியுள்ளது. 

கதாநாயகியாக பல வெற்றிகளை பார்த்திருந்தாலும் கூட, காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை இன்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைக்கிறார். தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டதாவது, "சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' திரைப்படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று 'தர்மன்' படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஊக்கம்தான் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு உதவுகிறது. 'கேளுங்கள்... நம்புங்கள்... இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்' என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்றார். 

தனது வசீகரத்தாலும் நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தது முதல் பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது வரை காலத்திற்கேற்றாற்போல தன்னை புதுப்பித்துக்கொள்ள என்றுமே நடிகை சிம்ரன் தயங்கியதில்லை. தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் அவர் நிலைத்து நிற்க இதுவே காரணம்.1997, ஜூலை 4 அன்று வெளியான 'ஒன்ஸ் மோர்' மற்றும் 'வி.ஐ.பி.' ஆகிய படங்களின் மூலம் தனது தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் முன்னணி நாயகியாக தன்னை திரையுலகில் நிலைநிறுத்தியுள்ளார்.
சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர். 

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, "‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார். 

*நடிகர்கள்:* ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளராக அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளராக பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, கலை இயக்குநராக ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பாளராக வியாகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 'மொத ராத்திரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Starring - Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others. 

Written and Directed by - Chella Ayyavu
Produced by Vels Film International, Vishnuu Vishal Studioz. 
Producers : Dr Ishari K Ganesh & Vishnuu Vishal 
Co- Producers : Shubhra, Aryan Ramesh & Ishan Saksena
Music : Sean Roldan 
DOP : KM Bhaskaran 
Editor : Barath Vikraman
Art Director : Jayachandran
Costume designer : Ruchi Munoth
Subtitles - Sajid Ali 
Publicity Designer : Viyaki
Marketing and Promotions : Siddarth Srinivas
Executive Producer : Seetharam
Creative Producer : Shravanthi Sainath
PRO - Sathish (AIM)

It is well known that Munishkanth, Kaali Venkat, and Karunakaran shine as both character actors and comedians. However, even Gajaraj—who has previously garnered attention primarily as a character actor—makes the audience roar with laughter by seizing the comedic opportunities that come his way.

Just as in the first part, Karunas maintains a stiff, authoritative demeanor—preaching about male honor and the importance of keeping women under control—yet the unexpected situations he finds himself in leave the audience laughing to the point of tears.

Moksha, who plays a teacher, appears alongside Cheevelesh Jack; while one might expect her character to trigger a major plot twist, she simply makes a dignified appearance and exits without unnecessary drama—a choice that works to the film's advantage.

Ramya Krishnan and Yogi Babu, appearing in special roles, deliver satisfying performances and provide plenty of laughs, despite their limited screen time at the end.

Cinematographer K.M. Bhaskar has captured the visuals with high quality and vibrant color, effectively conveying the screenplay's lively spirit and joyful atmosphere to the audience. Among Sean Roldan’s compositions, the "Sambavakkari" track is catchy enough to have viewers humming along, while the father-daughter song is a soothing melody that touches the heart. Editor Bharath Vikraman’s work is also flawless.

Although it is a sequel to the first film, director Chella Ayyavu has crafted a screenplay featuring even more comedy and scenes that highlight the importance of women, delivering an entertaining movie that families can enjoy together. Director Chella Ayyavu has achieved great success in delivering a wholesome entertainer that families will cherish; while the film keeps the audience laughing for two and a half hours, it also addresses the occasional differences of opinion between a husband and wife—and the consequences of failing to handle them properly—conveying these insights through humorous domestic antics rather than preachy advice, thereby prompting both laughter and reflection.

Verdict : Gatta Kusthi 2 Pakka Family Entertainer.
Rating: 5/5

- NithyaSana

 

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது..,


“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ  நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.


மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர்  பீட்டர் ஹெய்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரின் பணியையும் பாராட்டிய அவர், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. “அங்கீகாரம்” யாரும் தவறவிடக் கூடாத படம் என்றும், அனைவரும் திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு இன்னும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.



நடிகை இசபெல்லா பேசியதாவது..,


“அங்கீகாரம்" எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறி பேசியதில்லை. முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.


இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து, இந்தப் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். கே ஜெ ஆர் சார் மிகவும் கம்ஃபர்ட்டாக நடிக்க வைத்தார். படத்தில் எனக்கு ‘தங்கமயில்’ என்ற பெயர் வைத்ததற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற கலைஞருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஊக்கப்படுத்தினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை இவ்வளவு அழகாக திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”



நடிகை வசுந்தரா பேசியதாவது,


“அங்கீகாரம் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். சினிமாவுக்காக தேவையில்லாத மிகைப்படுத்தல்களை சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தை இயக்குநர் தென்பாதியான் சொல்லியிருக்கிறார்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய மாற்றமும், அர்ப்பணிப்பும் மிகவும் பிரமிக்க வைத்தது. பீட்டர் ஹெயின் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜிப்ரான் சாரின் இசை எப்போதும் போல அற்புதமாக அமைந்துள்ளது.


அருண், பிரசாந்த், அஜித் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒரு கதையை நம்பி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால்தான் இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாகும். இந்தப் படத்தையும் உங்கள் மனதில் இடம் கொடுத்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”



இசையமைப்பாளர்  ஜிப்ரான் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த விமர்சனங்களும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக அனைவருக்கும் என் நன்றி. கே.ஜெ.ஆர் தயாரிப்பாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அடுத்த படமும் அதுபோன்ற முக்கியமான கருத்தை பேசும் படமாக இருக்கும்.


ஒரு கதைக்குள் மனிதர்களின் உணர்வுகளை இயல்பாக கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கதையின் எழுத்து மிகவும் வலுவாக உள்ளது. இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாக, உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். குறிப்பாக இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி.”



சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த பாராட்டும், நேர்மையான விமர்சனங்களும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. புதுமுக ஹீரோவான கே.ஜெ.ஆர் மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்திற்காக அவர் எடுத்த உழைப்பும், உடல்மாற்றமும், அர்ப்பணிப்பும் சாதாரணமானது அல்ல. ஒரு தடகள வீரராக திரையில் இயல்பாகத் தோன்றுவதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.


இந்தப் படத்தின் பின்னால் இயக்குநர் தென்பாதியான் , கே.ஜெ.ஆர், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பு இருக்கிறது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காக இயக்குநருக்கு என் பாராட்டுகள்.


இந்தப் படத்திற்காக நாங்களும் பல மாதங்கள் ஆய்வு செய்து பணியாற்றினோம். படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். குறிப்பாக மூன்று தயாரிப்பாளர்களின் ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அங்கீகாரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான படம். அனைவருக்கும் நன்றி.”


ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் பேசியதாவது..,


“இயக்குநர் தென்பாதியான் காட்சிகளை முன்கூட்டியே தெளிவாக கற்பனை செய்து வைத்திருப்பார். அதனால் பல சவாலான இடங்களில்கூட, கஷ்டங்கள் இருந்தாலும் அதே இடத்தில் படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கையால்தான் படத்தின் காட்சிகள் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளன.


ஸ்போர்ட்ஸ் காட்சிகளை படமாக்கும்போது பீட்டர் ஹெய்ன் மாஸ்டருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அவர் ஒரு ஜாம்பவான் ஆனால் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை ஒரு மென்டராகவும், வழிகாட்டியாகவும் இருந்து ஒவ்வொரு காட்சியையும் விரிவாக விளக்கி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். இந்தப் படத்தின் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு அவருடைய பங்களிப்புதான் முக்கிய காரணம்.


படத்தின் முதல் கியூப் திரையிடலை பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இயக்குநரை கட்டிப்பிடித்து ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று சொன்னேன். ஜிப்ரான் சாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. பத்திரிகையாளர்கள் படத்தை பாஸிடிவாக எழுதி மக்களிடம் கொண்டு சென்றது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.


படத்தில் நடித்த நடிகர்கள், கலரிஸ்ட், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் முதல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”



எடிட்டர் தினேஷ்குமார் பேசியதாவது..,


“முதலில் அங்கீகாரம் படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தென்பாதியான் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஜிப்ரான், பீட்டர் ஹெய்ன், சம்பத் ஆழ்வார், ஏ.விஸ்வநாத் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காட்சிகள் சினிமாத்தனத்தை மீறாமல் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் அமைந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாகும். அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.”


இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது…,


“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.


இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.”


தயாரிப்பாளர் அருள் முருகன் பேசியதாவது..,


ஸ்வஸ்திக் விஷன்ஸ்  நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கே.ஜி. சார் வந்திருக்கிறார். எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன். அதற்கு ரொம்ப நன்றி சார்.


அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் தொழில் நுட்ப  கலைஞர்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் அண்ணா என ஒளிப்பதிவாளர் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளனர். இப்படத்தை எப்படியாவது நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  நன்றி.



தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பேசியதவது..,


முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.) அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முக்கிய காரணமே அவர்தான். இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார்.


அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கே ஜெ ஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர்


“அங்கீகாரம்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னும் இப்படத்திற்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.


தயாரிப்பாளர் நடிகர் கே ஜெ ஆர் பேசியதாவது..,


முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.


இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.



இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.


இப்படம் மக்களின் பேராதரவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார்.  ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .


கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..


அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட..  கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.


‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. 

இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.


எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.


படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், "உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்" என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன். 


பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன். 


படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது 


இயக்குனர் மிலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். "நோவா" அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்


படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா" வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

 

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.


யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.


டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, "'ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான உழைப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தொடரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ’ஹைக்கூ’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் வெளியிடுவதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்" என்றார். 

 

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.


படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே, 'ஹைக்கூ' திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது. இதன் மூலம் இப்படத்தின் கதை மற்றும் உணர்வுப்பூர்வமான களம் மீது அந்நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகியுள்ளது. 

தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'ஹைக்கூ' திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.


இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.


நடிகர்

என்.டி.ஆர்


தொழில்நுட்பக் குழு


தயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்

தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்

கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

Pageviews