பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார்.


பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோடிவ் குளோபல் புரொடக்‌ஷன் சார்பில் உருவாகிறது. இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். 


தென்னிந்திய திரையுலகில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது. தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு முக்கிய கூட்டணிகள் மூலம் மலையாளத் திரையுலகில் தனது செயல்பாடுகளை இந்நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. பனோரமா ஸ்டுடியோஸின் மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் 'அனோமி', 'உன்மதம்' மற்றும் 'டிக்கி டாக்கா' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ’புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ’முன்பே’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பஹத் பாசில் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் முக்கிய படங்களில் கூட்டணி அமைத்துள்ளது . தற்போது தனது முதல் தமிழ் படத்தயாரிப்பின் மூலம், இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் துடிப்பான திரையுலகங்களில் ஒன்றான தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதிக்கிறது.


பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருகிறது. எங்களின் முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். மிகவும் சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட  வித்தியாசமான திரைப்படம் இது. இயக்குநர் ராஜா சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார். இத்தகைய திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார். 


இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் ’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக உளவியல் திரில் ஜானரில் களமிறங்குகிறார். இருண்ட மற்றும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மூலம், ராஜா கிருஷ்ண மேனன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் புதிய களத்தை கொண்டு வருகிறார்.


இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக ஒருமுறை குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக இப்படம் அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம் மற்றும் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம், அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் ஜி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. அதேபோல், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், அது சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இத்தகைய சிறந்த குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.

 

லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில், மனித உணர்வுகளை வலுவாக சொல்லும் கதைகளே லோகோமோட்டிவ் குளோபலின் தேர்வு. திகில், மிஸ்ட்ரி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் கதை எங்களை உடனடியாக கவர்ந்தது. த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லண்டனில் படமாக்கப்படும் இப்படம், நாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக மாறியுள்ளது. 


ராஜா கிருஷ்ண மேனன், குமார் ஜி மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோரை ஒரே படத்தில் இணைத்து, இத்தகைய தனித்துவமான கதையை உருவாக்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்" என்றனர்.


சுவாரஸ்யமான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் என, இப்படம் பெரிய திரையில் ரசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து  வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ - கிருஷ்ணா விஜய் சந்திரன்-  ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்ட் கால்'  திரைப்படம்.. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். 


இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்ட் கால்' திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் - Walkthrough Entertainment நிறுவனம் சார்பில்  கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபீல் குட் என்டர்டெய்ன்மென்ட்டாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ஜென் ஸீ தலைமுறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு ஜாலியாக ரசிப்பார்கள். விற்பனை பிரதிநிதிகளான நால்வர் நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல்- மோதல்- காமெடி- ஆகியவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்'' என்றார். 


இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.


BEHINDWOODS PRODUCTIONS proudly announces that MOONWALK, featuring the iconic combination of Prabhudeva and A R Rahman, will hit theatres worldwide this DIWALI 2026, promising audiences a spectacular festive celebration filled with laughter and unforgettable family moments.

Designed to transform theatres into a true festival of joy, MOONWALK aims to create an experience that audiences of all ages can cherish together.

With A R Rahman's chartbuster soundtrack, MOONWALK stars Prabhudeva in the lead, supported by an exciting cast featuring Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma, Sushmitha, Redin Kingsley, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Dr. Santhosh Jacob, Deepa Shankar, and Ramkumar Natarajan. More importantly, A R Rahman makes his acting debut in a fun cameo. Another highlight of the movie is Yogi babu appearing in 16 different roles. 
Positioned as one of the most anticipated Tamil family entertainers of 2026, MOONWALK seamlessly blends comedy, music and dance into a vibrant cinematic celebration. At a time when families are looking for wholesome entertainment that can be enjoyed together, MOONWALK arrives as a refreshing theatrical experience created exclusively for the festive season.

MOONWALK is written and directed by Manoj NS, Founder and CEO of India's leading digital media platform, Behindwoods. Speaking about the announcement, Manoj NS said: "Diwali is a festival that brings families together, and we want Moonwalk to do the same. This film has been created as a celebration of happiness, laughter, music, and dance. This Diwali, our MOONWALK team happily invites family audiences to come together and experience a film that will leave them smiling."

The three tracks released from MOONWALK - Yethu, Tinga and Macarena have received a tremendous response from Music and Dance lovers world wide. Mayile, the fourth song, featuring AR Rahman and Prabhudeva in it, will be released soon. 

With its energetic soundtrack, entertaining storytelling, and feel-good narrative, MOONWALK is poised to become a grand laughter-filled family celebration of Diwali 2026.
The film features cinematography by Anoop V. Shylaja, choreography by Sekhar VJ and Piyush Shazia, production design by Shanoo, and costume design by Divya George and Swetha Raju.

MOONWALK, produced by Manoj NS, Divya Manoj and Praveen Elak under Behindwoods Productions, will release simultaneously in Tamil, Telugu and Hindi languages. Romeo Pictures has acquired the worldwide distribution rights, while Lahari has acquired the film’s music rights.

 

‘கட்டு' (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’..


இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.


துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் டிராமாவாக, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.. 


எளிய பின்னணியில் இருந்து வரும், புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞன், இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் பள்ளிக்குச் செல்கிறான். அவனது நோக்கம் தனக்குப் பிடித்தமான நாயகியைச் சந்திப்பது மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வு நடக்கிறது. அவனது ஆறு நண்பர்கள் கொண்ட குழு அதிலிருந்து அவனை எப்படி மீட்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


படம் குறித்து, இயக்குநர் .இல.சண்முக சுந்தர் மேலும் கூறும்போது, 


“இது இரத்தம் தெறிக்கும் வன்முறை, சண்டைகள் அல்லது துப்பாக்கி காட்சிகள் நிறைந்த படம் அல்ல. 


படத்தின் ஒவ்வொரு நொடியும் ஒரு குற்றச் சம்பவம் நடப்பது போலவோ அல்லது சீரியல் கில்லர்கள் மக்களைக் கொல்வது போலவோ இது இருக்காது. 


கொலையும் நடக்கும், ஆனால் கதை அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் தேடல்களுடன் சுவாரஸ்யமாக நகரும். 


எனக்கு துப்பாக்கிகள், கத்திகள் மீது எந்த எதிர்ப்பும் இல்லை; ஆனால் இந்தப் படத்திற்கு அவை தேவையில்லை என்று நினைத்தேன். இது 'ராட்சசன்' போன்ற படம் அல்ல, மாறாக 'த்ரிஷ்யம்' மற்றும் 'தொடக்கம்' போன்ற ஜானரைச் சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.


மறைந்த இயக்குநர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இப்படத்தின் கதைசொல்லியாக குரல் கொடுத்துள்ளார் என்பது ஹைலைட்டான ஒன்று.. ஆரம்பத்தில் அவர் இந்தப் படத்தில் பணியாற்றத் தயங்கினாலும், படத்தின் கதையைப் படித்தவுடன் அவருக்குப் பிடித்திருந்ததால் இயக்குநர் இல.சண்முக சுந்தரை உடனடியாக அழைத்து,  ஒரு பேனாவை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு படத்தின் கதை அந்த திரைக்கதை மன்னனை ஈர்த்துள்ளது.


சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ரம்யா, பிரீத்தா ராகவ் ஆகியோர் பீப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். 


தற்போதுவரை யூட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இதைப் பார்த்து இரசித்துள்ளனர். ஒரு அறிமுக இயக்குநரின் புதிய படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  


வரும் செப்-18ஆம் தேதி ‘பீப்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக்  கலைஞர்கள் விவரம் 


இயக்கம் ; இல.சண்முக சுந்தர்

இசை ; பிரசாந்த் விஹாரி 

ஒளிப்பதிவு ; பிரதீப் பத்மகுமார் 

படத்தொகுப்பு ; அபிஷேக் மற்றும் விக்னேஷ் 

ஆக்சன் காட்சிகள் ; ராம்குமார்

மக்கள் தொடர்பு ;

A. ஜான்

 

பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios)  நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films   ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை  ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன..


'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்  தயாரிப்பாளர்கள் பஹத் பாஸில்- உன்னி மாயா பிரசாத்- இயக்குநர் கிரீஷ் ஏ டி- ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான உன்னி மாயா பிரசாத் பேசுகையில்,


 '' இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள். மலையாள ரசிகர்களை போல் உங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்'' என்றார்.


இயக்குநர் கிரீஷ் ஏ டி- பேசுகையில், ''எனக்கு கூட்டத்தின் முன்பு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. செப்டம்பர் நான்காம் தேதி வெளியாகும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினருடன் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.


'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்றால்.., கேரளாவில் தேவாலயங்களில் அருகே உள்ளவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள்.


இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்வியல் இருந்து உருவான கேரக்டர்'' என்றார்.


தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசுகையில்,


''படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.


'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தில் நிவின் பாலி,  மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப்,  ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிகின்றன.

 

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில்,  வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது.


படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர்.


இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


இந்நிகழ்வில்.. நடிகர் கதிர் பேசுகையில்..,


 “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.


இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது,”


மேலும், “இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் ‘I Am Game’ படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.


நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில்,


“சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.


இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட ஷெட்யூல் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. துல்கர் சல்மானை சந்தித்தது அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.


படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரெய்லரில் சில கதாபாத்திரங்களையே ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்; ஆனால் முழுப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படக்குழுவின் ஒற்றுமையும் உழைப்பும் ரசிகர்களுக்குப் புரியும்,” அமைவருக்கும் நன்றி என்றார்.


நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில்..,


“சென்னையில் நடைபெறும் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் என்னை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.


துல்கர் சல்மான் மிக அழகான தயாரிப்பாளர், மிகப்பெரிய நடிகர், மிகச்சிறந்த மனிதர் என் நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.


இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் சொல்ல முடியாது; படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.


நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில்..,


“நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்தித்து படத்தின் காட்சிகளையும் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.


‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.


படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.


சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.


‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். Zee Music நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.


“I Am Game” மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “I Am Game” உருவாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.


“I Am Game” செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு: யுவராஜ்


National Crush Rashmika Mandanna is pushing her physical limits for Mysaa, an ambitious Pan-India action drama that is shaping up to be one of the most challenging projects of her career. The actress, who plays a Gond tribal woman in the film, is leaving no stone unturned to bring authenticity and intensity to the character. Directed by debutant Rawindra Pulle and produced by Unformula Films, Mysaa has already generated curiosity with its striking first glimpse.
 
The makers of Mysaa have officially launched the striking release date poster, locking November 27, 2026, for its grand worldwide theatrical arrival. Rashmika is seen standing with a large spear, her face marked by battle wounds, while a huge gathering and blazing surroundings create a charged atmosphere behind her. The combination of traditional clothing, weapons, fire, and raw expressions gives the poster a strong period-action flavour.
 
Mounted on a colossal scale, Mysaa pushes the envelope of contemporary cinema, setting unprecedented benchmarks for high octane stunt choreography. Designed as a fierce, adrenaline pumping experience, the film’s vision redefines action standards not just for female led cinema, but for the Indian action genre as a whole.
 
Rashmika Mandanna, who recently sustained an injury while performing a demanding high-octane sequence on set, has shown tremendous dedication and grit. Following her recovery, she is set to rejoin the sets very soon to complete the final leg of principal photography, with just 12 days of shoot remaining.
 
Simultaneously, post-production work is advancing at a brisk pace. Advanced VFX work is in full swing to deliver an extraordinary visual spectacle, complemented by a powerful, pulse pounding original score.
 
Eshwari Rao, Guru Somasundaram, and Rao Ramesh are part of the prominent supporting cast. The technical team features Shreyaas P Krishna as the cinematographer and Jakes Bejoy as the music composer. International stunt specialist Andy Long is choreographing the action, adding further scale to the film’s combat portions.
 
Mysaa will arrive in cinemas across the globe, releasing simultaneously in five languages: Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam.
 
Cast: Rashmika Mandanna, Eshwari Rao, Rahul Ravindran, Samuthirakani, Rao Ramesh, Tarak Ponnappa, Nidhi Singh and others Marketing: Haashtagter, Director: Rawindra Pulle
Banner: Unformula Films
Producers: Ajay Saipureddy, Anil Sayyapureddy, Veerasai Gopa
Co-Producer: Srikanth Reddy Sathi
Music: Jakes Bejoy
DOP: Shreyaas P Krishna
Stunts: Kecha Khamphakdee 
Production Designer : GM Shekar
Costumes: Ayesha Mariam
VFX: Nagu Talari & Ashok Mocharla
Publicity Design - Aesthetic Kunjamma
PRO: Sathish Kumar, S2 Media 
Marketing: Haashtag Media

 

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்   - Don't Trouble The Trouble' திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் - சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்... கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது.


தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான ஃபேண்டஸி அம்சம் - அந்த  டீசரில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் ஃபேண்டஸியான கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் உருவான கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) என்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பாடலை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.


'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்   - Don't Trouble The Trouble' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தனது மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக உள்ளது


Anthony’s Atelier நிறுவனம் சார்பில்  எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.

மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  படம்  வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து,  இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் 

கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி. ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், எங்களை வாழ்த்த வந்த தனஞ்செயன் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி.”

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.

கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.

படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.

குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.

தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது.., 

“பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்திற்காக அனைவரும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

யங் கிரியேட்டர், யங் ஹீரோ, யங் புரொடியூசராக இருக்கும் ஆண்டனியை உங்கள் சார்பாக வரவேற்கிறேன். அதேபோல், புதிய முகமாக அறிமுகமாகும் மதுமிதாவுக்கும் வாழ்த்துகள். நல்ல கிரியேட்டர்களும் தயாரிப்பாளர்களும் வரும்போது கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஆண்டனிக்கு நன்றி. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. இரண்டு இசையமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆதம் நாசர், நவ்யா சுஜி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் சரியான இடத்திற்கும், சரியான ரசிகர்களிடமும் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.”

கலை இயக்குநர் கே.கே. சுரேந்தரன் பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். இது எனக்கு நான்காவது படம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கு மிகுந்த நன்றி. ஒரு அழகான காதல் டிராமாவை மிகவும் கவித்துவமான முறையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறோம். என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைத்துறை நண்பர்களுக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய சந்தோஷ், ஹரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

நடிகர் ஆலம் ஷா பேசியதாவது.., 

“இங்கு வந்திருக்கும் அனைத்து மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் வணக்கம். நான் BOFTA Film Institute-ல் நடிப்பு பயிற்சி பெற்றவன். இந்தத் தொழிலை சரியான முறையில் கற்றுக்கொடுத்த என்னுடைய வழிகாட்டியும், ஆசிரியருமான தனஞ்செயன் சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கும், என்னுடன் நடித்த ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு குழுவாக இருந்தது. நான் இதற்கு முன்பு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பரபரப்பு இங்கு இல்லை. முதலில் வசனங்களை கொடுத்து, நன்றாக ரிகர்சல் செய்த பிறகே டேக் சென்றோம். இயக்குநர் ஆண்டனி எங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நாங்கள் இம்ப்ரோவைஸ் செய்ய, அதிலிருந்து அவரும் தனது பங்களிப்பைச் சேர்த்தார். அதனால் திரையில் எங்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அன்றைய நாளுக்கான சம்பளம் உடனடியாக எங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை மிகவும் பாராட்ட வேண்டும். அதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இது ஒரு நல்ல ஃபீல்-குட் படமாக இருக்கும். நன்றி.”

நடிகை நவ்யா சுஜி பேசியதாவது..,

“வந்திருக்கிற அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி சாருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இது. இதில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். வலுவான முன்தயாரிப்புடன் மிகவும் தொழில்முறையாக பணியாற்றிய இந்தப் புதிய குழுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது.

காதல் கதை என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும். புதிய குழுவினருக்கு உங்கள் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். நன்றி.”

இசையமைப்பாளர் ஜெய்கார் ஹரிநாத்

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்காகத்தான் இயக்குநர் ஆண்டனி சாருடன் பயணம் தொடங்கியது. ஆனால், பாடல் பாடலாக அடுத்தடுத்து உருவாகி, ரீரெக்கார்டிங் வரை இந்தப் பயணம் தொடர்ந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி.

ஸ்கிரிப்டிங் முதல் மிக்சிங் வரை படத்தின் உருவாக்கத்தை நேரடியாக பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் அமைதியாகவும், சர்வதேச தரத்தில் மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. அந்த சூழலில் உருவான இந்த ரொமான்டிக் டிராமா மிகவும் அழகாக வந்திருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் முழுவதும் லைவ் சவுண்டில் உருவாகியிருப்பது. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் இன்னும் நெருக்கமான, அற்புதமான அனுபவம் கிடைக்கும். என்னுடைய முதல் பாடலுக்கு கார்த்திக் நேத்தா போன்ற ஒரு சிறந்த பாடலாசிரியர் வரிகள் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வெஸ்டர்ன் பாணியில் திட்டமிட்டிருந்த பாடலை, அவரது அழகான தமிழ் வரிகளால் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றொரு இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை; வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற வகையில் இருவருடைய இசையும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ஒரு சிறந்த இசை அனுபவமாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி, அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் அசோக் ஸ்ரீதரன் பேசியதாவது.., 

“இயக்குநர் ஆண்டனி சார் கதையை மிகவும் ஆர்வத்துடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் விவரித்தார். முதலில் நான் பின்னணி இசைக்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால், கதையை கேட்ட பிறகுதான் ஒரு முக்கியமான பாடலை உருவாக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது தெரிந்தது.

அப்படித்தான் ‘உருகாதே உயிரே’ பாடல் உருவானது. இந்தப் பாடல் தீவிரமான உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதால் பெரிய இசைக்கோவை, குறிப்பாக ஸ்ட்ரிங்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கு மேலும் வலு சேர்க்க சிறந்த பாடலாசிரியர் தேவைப்பட்டதால் கார்த்திக் நேத்தா சாரை நான் பரிந்துரைத்தேன். சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ராவை வைத்து பாடலை பதிவு செய்தது இன்னும் அழகை கூட்டியது. ‘உருகாதே உயிரே’ பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. தற்போது கேட்பது ஆண் குரல் வெர்ஷன். படத்தின் முக்கியமான கட்டத்தில் பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் மற்றொரு வெர்ஷன் இடம்பெறும். ஒரே மெட்டில், வேறுபட்ட உணர்வுகளுடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது இயக்குநரின் அழகான யோசனை.

அதேபோல் ‘ஒரு கண்ணில் தூரம்’ பாடலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற இசையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றினோம். இன்றைய சூழலில் மெலடி பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்கான நல்ல இசை அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி.”

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநரும் கதாநாயகனுமான டி. ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதும்போது, இயக்குநர் ஆண்டனி கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. குறிப்பாக, ஒரு தனிமனிதன் போதையை நோக்கி செல்வதற்கான உளவியல் காரணங்களை இப்படம் மிகவும் தெளிவாக பேசுகிறது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் மதுவை ஒரு போதையாக மட்டுமே பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையில் நம்மை மயக்கத்திற்குள் தள்ளும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. இன்றைய வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தொடங்கி பல விஷயங்கள் நம்மை அறியாமலேயே ஒரு விதமான போதைக்குள் வைத்திருக்கின்றன. இந்தப் படத்தில் ‘கார்த்திக்’ என்ற கதாபாத்திரத்துக்கு ‘மது’ என்ற கதாபாத்திரம் தெளிவைக் கொடுப்பது எனக்கு மிகவும் கவித்துவமான விஷயமாக இருந்தது. அந்த உணர்வுதான் பாடல்களிலும் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பாக ‘உருகாதே உயிரே’ பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. இசையமைப்பாளர்கள் இருவரும் பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் குறித்து இன்னும் நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். அந்த வகையில், ஆண்டனி ஒரு முக்கியமான விஷயத்தை அழகான கதை சொல்லல் மூலம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு கலைஞனாகவும், சினிமா ரசிகனாகவும், தனிமனிதனாகவும் இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.
இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.
படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

Pageviews