திருவனந்தபுரம், செப்டம்பர் 4, 2026: கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், ஐக்கிய நாடுகள் சபையின் உலகிலேயே இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்.
மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹியை அன்புடன் வரவேற்றார். மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி, காலநிலை மீதான அக்கறை மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ரூஹி தனது ’காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!! (SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH)’ என்ற செய்தியை அவரிடம் எடுத்துரைத்ததுடன், குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பயன்படுத்திய காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’ரூஹியின் பேப்பர் பேங்க்’ குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹிக்கு அன்புடன் சாக்லேட்டுகளை வழங்கியதுடன், அவரது முயற்சியைப் பாராட்டி,“மனிதகுலத்தின் மீதான உங்களது அக்கறை அசாதாரணமானது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! எப்போதும் நல்ல சிந்தனையுடன் தொடர்ந்து செயல்படுங்கள்” என்று தனது கையெழுத்துடன் பாராட்டு செய்தியைப் பதிவு செய்தார். மேலும், ரூஹி வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். ரூஹி வழங்கிய செடி தொட்டியையும், நேபாள மக்கள் மீதான அக்கறை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவர் வரைந்த ஓவியத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குழந்தைகள், மரங்கள் மற்றும் சமூகம் எதிர்கொண்ட பாதிப்புகளால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட ரூஹி, தனது அக்கறையை செயல்பாடாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்து, மரங்களை நடுதல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் பங்கேற்க வேண்டும் என்பதே ரூஹியின் விருப்பமாக உள்ளது. அக்கறை, மறுசீரமைப்பு மற்றும் நம்பிக்கையை தனது செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.
ரூஹியின் தொலைநோக்குப் பார்வை தற்போது மரங்களைப் பாதுகாப்பதைத் தாண்டி, குழந்தைகள் முன்னெடுக்கும் காலநிலை மீதான அக்கறை, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக விரிவடைந்து வருகிறது. காடுகள், நீர், பல்லுயிர் வளம், பொறுப்பான நுகர்வு மற்றும் மனிதகுலம் அனைவருக்கும் பொதுவான பூமியின் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. மனிதகுலம் அமைதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வளங்களைப் பாதுகாக்க வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா என்பதே அவர் சொல்லவரும் செய்தி.
தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன் மூலம் ட்ரீ பேங்க் நர்சரிஸ், ரூஹியின் பேப்பர் பேங்க் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை உருவாக்க ரூஹி திட்டமிட்டுள்ளார். நீண்டகால நோக்கமாக, உலகின் 195 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே அவரது கனவாகும். தான் ஒரு குழந்தை என்றாலும், ஒவ்வொரு குழந்தையும் தாய் பூமியைப் பாதுகாக்க உதவ முடியும் என்று தான் நம்புவதாக ரூஹி தெரிவிக்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தலைமுறைகளையும் நாடுகளின் எல்லைகளையும் கடந்து ஒத்துழைப்பு, அக்கறை மற்றும் அமைதிக்கான பாதையாக அமைய முடியும் என்று ரூஹி நம்புகிறார். அவரது கனவு எளிமையானது: “காகிதத்தைச் சேமிப்பதும், மரங்களைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு குடிமகனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.”
மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவருடனான இந்த சந்திப்பு, தனது செய்தியை ஒரு குழந்தையிடமிருந்து கோடிக்கணக்கான குழந்தைகளிடம் கொண்டு செல்லவும், ஒரு சிறிய செயலிலிருந்து தாய் பூமிக்கான மிகப்பெரிய இயக்கமாக மாற்றவும் ரூஹியின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் குரல் கேட்கப்படும்போது, ஒரு கனவு இயக்கமாக மாறும் என்கிறார் ரூஹி.
காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!!
சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், ஏஞ்சலின், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு மற்றும் சுமித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.
நடிகர், இயக்குநர் பாரி இளவழகன் பகிர்ந்து கொண்டதாவது, ”இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையிலும் எனக்கு முக்கியமானது. டாக்டர் பைரவி செந்திலிடம் சருமப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வருகிறேன். டாக்டர் பைரவியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். சரும மருத்துவத் துறையில் எனக்கு இன்ஸ்பயரிங் அவர்தான். அவரது அணுகுமுறை, நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் டாக்டர். பி 360-ஐ அவர் உருவாக்கிய விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை” என்றார்.
இந்த நிகழ்வில் இத்தாலியைச் சேர்ந்த DEKA நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ பாடியும் கலந்துகொண்டார். டாக்டர் பைரவி செந்திலின் பணிகள் குறித்தும், சரும மருத்துவத் துறையில் அவர் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்தும் அவர் பேசினார். மேலும், DEKA-வின் தொழில்நுட்பத்தை டாக்டர் பைரவியின் மருத்துவ அணுகுமுறையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இந்த அறிமுக நிகழ்வுக்கு சர்வதேச அளவிலான சிறப்பும் கிடைத்தது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் புரோகிராமின் முக்கிய அம்சமாக DEKA நிறுவனத்தின் Motus AZ+ மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அழகியல் மற்றும் சரும மருத்துவப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட லேசர் தளத்தை, டாக்டர் பி 360 தனித்துவமான சிகிச்சை அணுகுமுறையுடன் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் சருமத்தின் பயாலஜி, சிகிச்சையின்போது வசதி மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்ட பின்னரே, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு முறையைத் தீர்மானிப்பதே இதன் நோக்கம்.
“தொழில்நுட்பம் மட்டுமே முக்கியமானது அல்ல. ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், அவரது ஸ்கின் பயாலஜிக்கும் ஏற்ப சரியான அனுபவத்தையும் சிகிச்சை முறையையும் உருவாக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது. டாக்டர் பி 360-ல் எங்களது அணுகுமுறை எப்போதும் முதலில் தோலைப் புரிந்துகொள்வது. அதன் பின்னர் சரியான தொழில்நுட்பம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பது. ‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ என்பது முன்பு நான் குறிப்பிட்டதன் தொடர்ச்சி" என்று டாக்டர் பைரவி செந்தில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகுப் பராமரிப்பு குறித்த சுவாரஸ்யமான கருத்துகளும் இடம்பெற்றன. நடிகர் கிஷன் தாஸ், தோல் பராமரிப்பு குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதுடன், டாக்டர் பி நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதில் தனக்கு உள்ள ஆர்வத்தையும் தெரிவித்தார்.
அவருடன் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல இளம் மற்றும் பிரபலமான முகங்கள் பங்கேற்றது, இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் 2025 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்ட தி டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செண்டர் தோல், முடி, நலவாழ்வு மற்றும் நீண்ட நாள் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது 360 டிகிரி ஒருங்கிணைந்த சுகாதாரச் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த அமைப்பில், இந்தியாவின் முதல் மெடிக்கல் கிரேடு சலூன் எனக் குறிப்பிடப்படும் பீவெல் மெடி சலூன் (BeWell Medi Salon) மற்றும் டாக்டர் பைரவியால் உருவாக்கப்பட்ட தோல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான AAVÉDERM ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் பிராண்டும் இடம்பெற்றுள்ளன.
பீவெல் மெடி சலூன் தொழில்முறை சலூன் பராமரிப்பை இந்த ஒருங்கிணைந்த அமைப்புடன் இணைக்கிறது. அதேபோல், AAVÉDERM மூலம் தோல் மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் தயாரிப்புகள் அன்றாட சுய பராமரிப்புக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் டாக்டர் பி 360-ன் நோக்கம் மருத்துவச் சிகிச்சைகளைக் கடந்தும் விரிவடைகிறது.
‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்' அறிமுகத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், தனிப்பட்ட தோல் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீண்டகால சரும நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனது பயணத்தில் டாக்டர் பி 360 மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்துள்ளது.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனத்தையும் சிறப்பையும் கொடுத்தது.
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’.
இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா,நடிகை நந்திதா ஸ்வேதா, மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.
வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
MAGIZH Productions சார்பில் C. Beaula Magizh தயாரிக்கும் இப்படம், இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.
துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.
“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…”
என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்,அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.
கருவுறுதல் சிகிச்சையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னையின் முன்னணி கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றான பிரசாந்த் பெர்ட்டிலிட்டி மருத்துவமனை, 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' என்ற புதிய சேவையை இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே அவர்களுக்கு தேவையான ஐவிஎப் ஆதரவு சேவைகளை வழங்க உள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறப்பு விருந்தினர் நடிகை குஷ்பு சுந்தர் முன்னிலையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா மற்றும் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி ஆகியோர் பங்கேற்றனர். ஐவிஎப் சிகிச்சையை எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்வதில் உள்ள முக்கிய சவால்களைத் தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வேலைக்குச் செல்லும் தம்பதிகள் தங்களின் ஐவிஎப் சிகிச்சை பயணத்தில், மருத்துவமனைக்குச் செல்ல முடியாததாலோ அல்லது குறித்த நேரத்தில் ஊசி போட முடியாததாலோ சிகிச்சை தடைபடுவதை எதிர்கொள்கின்றனர். இதனால் சிகிச்சையை மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து, நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வசதியாகச் சிகிச்சையைத் தொடர இந்த 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' சேவை உதவும்.
குழந்தை இன்மை: ஒரு முக்கிய சவால்: இந்தியாவில் குழந்தையின்மை என்பது ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கணிசமான அளவிலான தம்பதிகள் இதனால் பாதிக்கப்படுவதாக இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, ஆறு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான சவால்களைத் தாண்டி, குழந்தையின்மை தம்பதிகள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான உணர்வுபூர்வமான, சமூக மற்றும் நிதி சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், கருவுறுதல் சிகிச்சைக்கு நீண்ட காலம் மருத்துவர் ஆலோசனைகள், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு மருத்துவக் குழு மற்றும் சென்னை முழுவதும் பயணிக்கக்கூடிய பிரத்யேக வாகனத்தையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தம்பதிகள் தங்கள் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஊசி போடுதல், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தொடர் பரிசோதனைகள் போன்ற சேவைகளை அவர்கள் வீட்டிலேயே எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நோயாளிகள் தங்கள் வீட்டில் பெறும் சேவைகளை எளிதாக முன்பதிவு செய்து நிர்வகிக்க, 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி' என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம், நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்குத் தேவையான சேவைகளை முன்பதிவு செய்யலாம். அதன் பிறகு, மருத்துவக் குழுவினர் சென்னை முழுவதும் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவைகளை வழங்குவார்கள்.
தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த முயற்சியின் மூலம், நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீடுகளிலேயே சிறந்த சேவைகளைப் பெற முடியும். இந்தச் செயலியும், சிறப்பு மருத்துவக் குழுவும் இணைந்து, தம்பதிகளின் ஐவிஎப் சிகிச்சை பயணத்தை மிகவும் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா கூறுகையில், "கருவுறுதல் சிகிச்சையில் நாங்கள் எங்கள் பயணத்தை முதன்முதலில் தொடங்கியபோது, எங்கள் நோக்கம் எளிமையானதாக இருந்தது - பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே அது. கடந்த பல ஆண்டுகளில், கருவுறுதல் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு படியையும் எளிதாக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.
'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' மூலம், மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டி, நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே கருவுறுதல் சிகிச்சையைக் கொண்டு செல்கிறோம். இது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; இது சிகிச்சையின் தொடர்ச்சி, நம்பிக்கை மற்றும் அன்பான கவனிப்பு பற்றியது. எதிர்காலத்தில் கருவுறுதல் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் மாற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது" என்றார்.
இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி கூறுகையில், “கருவுறுதல் சிகிச்சை என்பது ஒரு பயணம்; இதில் சிகிச்சையை எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இந்தச் சிகிச்சையின் போது பலமுறை மருத்துவமனைக்கு வருதல், சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், தொடர் பரிசோதனைகள் ஆகியவை தேவைப்படும். வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைச் சமாளிக்கும் தம்பதிகளுக்கு, பலமுறை கருவுறுதல் மையத்திற்குப் பயணம் செய்வது ஒரு கூடுதல் சவாலாக மாறலாம்.
குழந்தையின்மைப் பிரச்சனை பல தம்பதிகளைப் பாதித்துள்ள நிலையில், சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலமும், தேவையற்ற தடைகளைக் குறைப்பதன் மூலமும் அதிக அளவிலான நோயாளிகள் பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் நோயாளிகளுக்குத் தேவையான கவனிப்பை அவர்களின் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' சேவை உருவாக்கப்பட்டுள்ளது. முடிவாக, கருவுறுதல் சிகிச்சையில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களை நீக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் மூலம், நோயாளிகள் தங்களின் மிக முக்கியமான இலக்கான குழந்தை பாக்கியத்தை அடைவதில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்" என்றார்.
இந்த அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை குஷ்பு சுந்தர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில்: "குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பயணம் என்பது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். கருவுறுதல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு, இது உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் அதிக சவாலான ஒரு அனுபவமாக இருக்கலாம். அவர்களுக்கு அன்பான கவனிப்பும், நம்பிக்கையும், ஆதரவும் அதிகம் தேவைப்படும் இந்த நேரத்தில், அவர்களின் பயணத்தை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவச் சேவைகள் மாற வேண்டும் என்பதை உணர்ந்து, தம்பதிகளுக்குத் தேவையான சிகிச்சையை அவர்களின் இடத்திற்கே கொண்டு சேர்க்கும் 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் சிகிச்சையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பயணத்தை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிக நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.
செயலி மற்றும் உதவி எண்
'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி' மொபைல் செயலி மூலம், நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திப்பதற்கான முன்பதிவுகளை எளிதாகச் செய்யலாம். மேலும், தொடர் பரிசோதனைகளை நிர்வகிக்கவும், தங்கள் மருத்துவப் பதிவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான கோப்புகளைப் பராமரிக்கவும், தங்கள் சிகிச்சைப் பயணத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் இந்த ஒரே செயலி உதவுகிறது.
'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' மூலம் கிடைக்கும் சேவைகள், அதற்கான தகுதிகள் மற்றும் முன்பதிவு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, நோயாளிகள் 044 2888 2888 என்ற 24 மணிநேரமும் செயல்படும் உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தம்பதிகளின் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தரமான கருவுறுதல் சிகிச்சையை எளிதாகவும் வசதியாகவும் கிடைக்கச் செய்யும் நோக்கில், இந்தச் சேவை தற்போது சென்னை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்…
தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில்,
“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை. ‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.
“இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது,” என்றார்.
“பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது,” என்றார்.
“விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,
“அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும், சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,
“அனைவருக்கும் நன்றி. இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.
நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,
“என்னை மேடைக்கு அழைத்து பேச வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரபு சார், ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும். ‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம். இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை, படத்தொகுப்பு, இயக்கம், கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்க முடியும். இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது. ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார், பிலோமின் ராஜ் சார், ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
நடிகர் குரேஷி பேசுகையில்..,
“பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன். ஆனால், இன்று ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி. இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்ல மனிதர். மழை, புயல், வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது. அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபு சார், ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார். புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார், அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.
மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்,” என்றார்.
நடிகை காவ்யா பேசுகையில்..,
“ ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது. ‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்,” என்றார்.
இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,
“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.
எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது,” என்றார்.
“கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
நடிகை சுஹாசினி பேசுகையில்,
“ ‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும், அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.
மேலும், “இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே, இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில்..,
“ ‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும், இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி. படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை,”.
“கவின் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் நிறைய திறமையும், நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளர வேண்டும். ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,”.
மேலும், “படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார். சில நேரங்களில் சிரிப்பார், சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால், இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.
நடிகர் கவின் பேசுகையில்..,
“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.
இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.
கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் veliyaana ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.
முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.








