இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5

பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மறக்க முடியாத கதைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய உள்ளடக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, சமூகத்தில் உரையாடல்களை உருவாக்கும், கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தும், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பயணிக்கும் கதைகளை உருவாக்குவதே ZEE5-ன் நீண்டகால நோக்கமாகும்.

இந்த புதிய முயற்சியில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் படைப்பாளர்கள் இணைந்துள்ளனர். இந்தியில் Jio Studios, Maddock Films, AAZ Films, 200 NOTOUT CINEMAS, DICE Media, Collective Studios Historyverse, Tips Films, Pen Studios, Ellipsis Entertainment, Reliance Entertainment, Jar Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

பிராந்திய மொழிகளிலும் ZEE5 தனது முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது. மலையாளத்தில் Thespian Films, தெலுங்கில் Annapurna Studios, Sri Venkateswara Creations, Sitara Entertainments, Sri Venkateswara Cine Chitra, தமிழில் Passion Studios, Vriddhi Cinemas, கன்னடத்தில் KVN Productions, மராத்தியில் Bahawa Entertainment, Pratisaad Productions, Kyra Kumar Kreations, வங்காளத்தில் Acropolis Entertainment, Anjan Dutt Productions, Why So Serious Films, Surinder Films உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து புதிய படைப்புகளை வழங்குகிறது.

இந்தி உள்ளடக்கங்கள்

இந்தி பிரிவில் Kambli, The Scam: Leaked, Coffee King, Jeena Isi Ka Naam Hai 2.0 (R. மாதவன் தொகுப்பில்), Zee Horror Show, Rangbaaz Season 4, Janaawar 2, Bakaiti Season 2 உள்ளிட்ட தொடர்கள் இடம்பெறுகின்றன.

திரைப்படங்களில் Hai Jawani Toh Ishq Hona Hai (வருண் தவான், பூஜா ஹெக்டே, மௌனி ராய்), Bandar, Bharat Bhagya Vidhata, Pooja Meri Jaan, Sarvgunn Sampann, Ghamasaan, Ikroop, Dalimb உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

தமிழ் ரசிகர்களுக்கான சிறப்பு

தமிழில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் Koose Munisamy Veerappan, Thadayam ஆகிய சீரிஸ்களின் புதிய பகுதிகள் வெளியாகின்றன.

மேலும் Ananthakaalam, Thee Kural (இந்தியாவின் முதல் சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி) ஆகிய புதிய ஒரிஜினல்கள் அறிமுகமாகின்றன.

தமிழ் திரைப்பட வரிசையில் Demonte Colony 3, நயன்தாரா, கவின் நடிப்பில் Hi! மற்றும் Raawadi ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கு

Shrimathi, Objection Mylord உள்ளிட்ட ஒரிஜினல்கள், Jayammu Nishchayammu Ra டாக் ஷோவின் புதிய சீசன், Venky Anil 5, NBK111, Vrushakarma உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன.

கன்னடம்

Ayyana Mane புதிய சீசன், Bitcoin Scam, Operation Bangara ஆகிய சீரிஸ்களுடன் Karavali திரைப்படமும் வெளியாகிறது.

மலையாளம்

A Queen, Malabar Cup, Kerala Underground (சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி), Balan The Boy ஆகியவை இடம்பெறுகின்றன.

மராத்தி

Hey Kay Navin? புதிய சீசன், Aga Aai, Aaho Aai தொடர் மற்றும் Tumbadchi Manjula, Bhootam Bhayam திரைப்படங்கள் வெளியாகின்றன.

வங்காளம்

Shwetkali, Lalbazaar ஆகிய தொடர்களின் புதிய சீசன்களுடன் Aloor Dosh, Priyo Bondhu ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகமாகின்றன.

ZEE5 இந்தியா – வணிகத் தலைவர் தேஜ்கரண் சிங் பஜாஜ் கூறியதாவது:

"பொழுதுபோக்கு துறையின் மாற்றங்களை பின்பற்றுவது மட்டுமல்ல, அதை உருவாக்குவதே ZEE5-ன் நோக்கம். இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைத்து, திரைப்படங்கள், தொடர்கள், நேரடி விளையாட்டுகள், AI, அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களை ஏழு மொழிகளில் வழங்கும் எங்கள் மிகப்பெரிய முயற்சி இதுவாகும். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த பயனர் அனுபவம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மூலம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் உள்நாட்டு பொழுதுபோக்கு தளமாக உருவாகும் பயணத்தை தொடர்கிறோம்."

ZEE-யின் தலைமை படைப்பு அலுவலர் (Chief Content Officer) ராகவேந்திர ஹுன்சூர் கூறியதாவது:

"எங்கள் பட்டியலில் இடம்பெறும் ஒவ்வொரு படைப்பும் தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான உள்ளடக்கங்களை உருவாக்குவதைவிட, மக்களின் மனதைத் தொடும் தரமான கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இன்று இந்திய பார்வையாளர்கள் மொழி, வகை, வடிவம் ஆகிய எல்லைகளைத் தாண்டி உள்ளடக்கங்களை ரசிக்கிறார்கள். அதற்கேற்ப துணிச்சலான, வித்தியாசமான, சக்திவாய்ந்த கதைகளை வழங்குவதே எங்கள் நோக்கம்."

விளையாட்டு, AI மற்றும் குழந்தைகளுக்கான உலகம்

திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களைத் தாண்டி, FIFA®️, Bundesliga, ILT Season 5, Tamil Nadu Kabaddi போன்ற நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளையும் ZEE5 வழங்குகிறது.

AI மற்றும் அனிமேஷன் பிரிவில் Garud – Ek Yodha Ki Gatha, Narmada Manasa Sundari, Vikram Betal, Shiv Sati – Ek Anant Prem Kahani, Param Sundari Chandrakanta, Tirupati Balaji, Ram Anjaney Yuddh, Aiyappan ஆகிய டைட்டில்கள் இடம்பெறுகின்றன.

குழந்தைகளுக்காக Shivlok Ke Kundakka Mandakka, Smart KidZ, Tales of Krishna, Bandbudh and Budbak 2.0 போன்ற நிகழ்ச்சிகளும் வெளியாகின்றன.

இந்த புதிய மல்டிலிங்குவல் உள்ளடக்க அறிவிப்பின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய, பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கை வழங்கும் தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது ZEE5. இந்தியாவின் முன்னணி படைப்பாளர்கள், பிரபலமான திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் புதிய ஒரிஜினல்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி, ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகவும் விளங்குகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் ZEE5, Zee Entertainment Enterprises Ltd. நிறுவனத்தின் டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவையாக செயல்படுகிறது.

மொழி-முன்னுரிமை (Language-first) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் (Hyper-local) உள்ளடக்கங்கள், மொழிவாரியான சந்தா திட்டங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பார்வை அனுபவங்களை இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் ZEE5 வழங்குகிறது.

இந்தியாவின் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்கள், புகழ்பெற்ற ஃபிராஞ்சைஸ்கள் மற்றும் பல்வேறு மொழிகள், வகைகளில் உருவாகும் வித்தியாசமான கதை சொல்லல்களை ஒரே தளத்தில் இணைக்கும் முக்கிய பொழுதுபோக்கு தளமாகவும் ZEE5 திகழ்கிறது.

திரைப்படங்கள், வெப் தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கதை சொல்லல், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான உள்ளடக்கங்களைக் கொண்ட ZEE5, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கான பல்மொழி பொழுதுபோக்கு மற்றும் நேரடி விளையாட்டு அனுபவங்களின் முக்கிய தளமாக உள்ளது.

மேலும், 2034 ஆம் ஆண்டு வரை FIFA உடன் Zee Entertainment மேற்கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் நடைபெறும் FIFA-வின் முக்கிய கால்பந்து போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பையும் ZEE5 வழங்குகிறது. இதில் FIFA World Cup 2026™️ மற்றும் FIFA World Cup 2030™️ போட்டிகளும் அடங்கும்.

🔗 https://youtu.be/5WBHhqUNh4E

 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவான ‘லைஃப் இன் லூம் மூலம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருதில் ’நான் ஃபீச்சர் ஃபிலிம்’ (Non-Feature Film) பிரிவில்  சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது  வென்று சாதனை படைத்துள்ளது. ஆவணப்படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான எட்மண்ட் ரான்சன் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் தயாரித்துள்ளார்.


திரைப்படத் தயாரிப்பு, கேமரா மற்றும் திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு விடுதல், போஸ்ட் புரொடக்ஷன், ஸ்டுடியோ வசதிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் என எண்டர்டெயின்மெண்ட் துறையில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக கடந்த 15 ஆண்டுகளாக மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் திகழ்கிறது. தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸ் தலைமையில், ’ஓயீ’ என்ற திரைப்படம் மற்றும் தேசிய விருது பெற்ற ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படம் உள்ளிட்ட பல தரமான படைப்புகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்தியாவின் ஏழு மாநிலங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைத்தறி கலாச்சாரத்தை 100 நிமிடங்கள் ஓடும் 'லைஃப் இன் லூம்’ ஆவணப்படம் ஆழமாக பதிவு செய்கிறது. குஜராத்தின் அரச மரபு கொண்ட பதன் படோலா நெசவு முதல், ஒடிசாவின் போண்டா பழங்குடியினரின் ரிங்கா நெசவு வரை பல்வேறு நெசவு மரபுகளை இப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. விரைவான சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியிலும், பல நூற்றாண்டுகள் பழமையானதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான நெசவு முறைகளைக் காக்கப் போராடும் கைவினைஞர்களின் மன உறுதியை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது.


'லைஃப் இன் லூம்’ஆவணப்படம் தேசிய மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்: 


72வது தேசிய திரைப்பட விருதுகள் (2026) – சிறந்த ஒளிப்பதிவு (நான் ஃபீச்சர் ஃபிலிம்),

செலிபிரேட்டிங் இந்தியா ஃபிலிம் ஃபெஸ்டிவல் (2025) – சிறந்த ஆவணப்படம்,

18வது மும்பை சர்வதேச திரைப்பட விழா (MIFF) – இந்தியா இன் அம்ரித் கால் தேசிய போட்டிப் பிரிவில் சிறந்த ஆவணப்படம்,

54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), கோவா (2023) – அதிகாரப்பூர்வ தேர்வு,

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (2023) – சிறந்த அறிமுக இயக்குநர்,

தாகூர் சர்வதேச திரைப்பட விழா – சிறந்த ஆவணப்படம்,

தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சன் ஆஃப் ஈஸ்ட் விருது - தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸுக்கு கௌரவ சாதனையாளர் விருது,

மதுரை சர்வதேச ஆவணப்பட விழா – அதிகாரப்பூர்வ தேர்வு.


இயக்குநர் எட்மண்ட் ரான்சன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் 85 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தி, பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கை, இயற்கையுடனான அவர்களின் உறவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நெசவு முறைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த ஆவணப்படம் நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இந்தியா முழுவதும் நடைபெற்ற திரைப்பட விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.


72வது தேசிய திரைப்பட விருதில் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம், மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமைமிகு தருணம். தரமான திரைப்படத் தயாரிப்புக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் அதன் உறுதியையும் மீண்டும் ஒருமுறை இந்த விருது உறுதிப்படுத்துகிறது. ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படம், இந்திய கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் வாழ்வியல் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் பாரம்பரியத்தின் நிலையான மரபை எதிர்கால சந்ததியினருக்காக பதிவு செய்திருக்கும் அரிய கலைப்படைப்பாக திகழ்கிறது.

 

The Consulate General of the Republic of Korea in Chennai, in association with AVM Productions Private Limited, inaugurated the Korea Story Festival 2026 in Chennai on 20th July 2026. The three-day festival, being held from 20th to 22nd July 2026 at PVR Sathyam Cinemas, Royapettah, showcases five carefully selected Korean films curated by the Korean Film Council (KOFIC), celebrating the richness and diversity of Korean cinema.


The inaugural ceremony was graced by Mr. Nithilan Saminathan, acclaimed Tamil film director and screenwriter, as the Chief Guest. In his address, he spoke about the growing cultural ties between India and the Republic of Korea, highlighting the power of storytelling to transcend borders and bring people closer together. He also commended the Consulate General of the Republic of Korea in Chennai and AVM Productions Private Limited for providing Chennai audiences with the opportunity to experience internationally acclaimed Korean cinema.


Addressing the gathering, Mr. Je Hyoung Lee, Deputy Consul General of the Republic of Korea in Chennai, thanked the partners and audiences for their continued support of Korean cultural initiatives. He encouraged film enthusiasts to experience Korea's culture, traditions, and scenic beauty through the films showcased at the festival. He also shared his hope for more collaborations between the Korean and Indian film industries, citing Made in Korea, a Tamil film shot entirely in the Republic of Korea, as a wonderful example of the growing partnership between the two countries


Mr. AVM K. Shanmugam, Managing Director  of AVM Productions Private Limited, shared his remarks by emphasizing the importance of international cinematic collaborations in enriching the film industry and fostering mutual understanding between cultures. He expressed his pride in partnering with the Consulate to bring quality Korean cinema to Chennai audiences and reaffirmed AVM's commitment to supporting initiatives that celebrate global storytelling.


The Korea Story Festival 2026 serves as an important platform for strengthening cultural understanding between India and the Republic of Korea through the universal language of cinema. The festival is expected to attract film enthusiasts, students, and admirers of Korean culture throughout its three-day run, further enhancing people-to-people connections and celebrating the enduring friendship between the two countries.

 

டிசம்பர் 18 வெளியீட்டை முன்னிட்டு மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்ட அதிரடி Avengers: Doomsday டிரெய்லர்


காத்திருப்பு முடிந்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Avengers: Doomsday படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் தோர், கேப்டன் அமெரிக்கா, Fantastic Four, Black Panther உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணையும் மிகப்பெரிய கிராஸ்ஓவர்கள் உறுதியாகியுள்ளன. இப்படம் டிசம்பர் 18 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


மார்வெல் ஸ்டுடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிசம்பர் 18 திரையரங்கு வெளியீடான Avengers: Doomsday படத்தின் புதிய டிரெய்லரும் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளன. பல மாதங்களாக ரசிகர்களிடையே நிலவி வந்த எதிர்பார்ப்பு, ஊகங்கள் மற்றும் சிறிய முன்னோட்டங்களுக்கு பிறகு, மார்வெல் ஸ்டுடியோஸ் ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான டிரெய்லரை வெளியிட்டு விருந்தளித்துள்ளது. இந்த டிரெய்லர், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) அடுத்த அத்தியாயத்தை ரசிகர்கள் முதன்முறையாக பரபரப்பாகக் காணும் வாய்ப்பை வழங்குகிறது.


இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் ராபர்ட் டவுனி ஜூனியரின் MCU-க்கு மீள்வருகை. ஆனால் இந்த முறை அவர் ஐரன் மேனாக அல்ல, சக்திவாய்ந்த வில்லனான டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூமியின் மிகச் சக்திவாய்ந்த ஹீரோக்களுக்கு எதிராக அவர் நடத்தும் இந்த மாபெரும் மோதல், மார்வெல் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வகையில் இருக்கும்.


Avengers: Infinity War மற்றும் Avengers: Endgame ஆகிய உலகப்புகழ் பெற்ற படங்களை இயக்கிய சகோதரர்கள் அந்தோனி ருசோ மற்றும் ஜோ ருசோ இந்தப் படத்தையும் இயக்கியுள்ளனர். Avengers: Doomsday திரைப்படம், மார்வெல் உலகின் பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹீரோக்களை ஒரே திரையில் ஒன்றிணைக்கிறது. வரலாற்றிலேயே மிகப்பெரிய சினிமா நிகழ்வுகளில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் ஸ்டீவ் ரோஜர்ஸ் (கேப்டன் அமெரிக்கா) மற்றும் தோர் மீண்டும் இணைகின்றனர். அதேபோல் ரசிகர்களின் விருப்பமான X-Men கதாபாத்திரங்களும் இந்தப் போரில் களமிறங்குகின்றனர். பேராசிரியர் எக்ஸ் கதாபாத்திரத்தில் பேட்ரிக் ஸ்டீவர்ட், மக்னீட்டோவாக இயான் மெக்கெல்லன், சைக்க்ளாப்ஸாக ஜேம்ஸ் மார்ஸ்டன் ஆகியோர் மீண்டும் நடிக்கின்றனர். மேலும் Fantastic Four கதாபாத்திரங்களும் கதையின் முக்கிய அங்கமாக இடம்பெறுகின்றன.


மார்வெல் ஸ்டுடியோஸின் Avengers: Doomsday திரைப்படத்தை அந்தோனி ருசோ மற்றும் ஜோ ருசோ இயக்கியுள்ளனர். கேவின் ஃபைஜி, லூயிஸ் டி'எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஸ் எவன்ஸ், கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரட், அந்தோனி மேக்கி, ஃப்ளாரன்ஸ் ப்யூ, வனெசா கிர்பி, எபான் மாஸ்-பாக்ராக், வையட் ரஸ்ஸல், சேனிங் டேட்டம், சிமு லியூ, இயான் மெக்கெல்லன், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெடிஷியா ரைட், லூயிஸ் புல்மன், கேல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ரமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான்-காமென், ரெபெக்கா ரொமெய்ன், மேபல் கடேனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Avengers: Doomsday திரைப்படத்தில், மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த ரசிகர்கள் விரும்பும் சூப்பர் ஹீரோக்கள் உயிர் பறிக்கும் மோதலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இதுவரை சந்திக்காத அளவிலான மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


Avengers: Doomsday திரைப்படம் டிசம்பர் 18 அன்று இந்தியா முழுவதும் பிரீமியம் திரையரங்கு வடிவங்களில் பிரத்யேகமாக வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.

 

ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்', முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம்.


மனதைத் தொடும் கதை சொல்லல், இயல்பான உணர்வுகள் என 'செகண்ட் லவ்' கான்செப்ட் முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளது. மனம் திறந்த உரையாடல்கள், எதிர்பாராத காதல் தொடக்கங்கள், மற்றும் மனதை உருக்கும் தருணங்கள் என காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் பயணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சி தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் இந்த புதிய வெளியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு எபிசோடிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் முழு வாரத்தின் எபிசோடுகளையும் ஒரே அமர்வில் பார்த்து ரசிக்கலாம். வலுவடையும் உறவுகள், ஆழமடையும் உணர்வுகள் மற்றும் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் புதிய திருப்பங்களுடன், 'செகண்ட் லவ்' வரும் வாரங்களில் இன்னும் விறுவிறுப்பான காதல் பயணத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.


'செகண்ட் லவ்' தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்.


பனிஜே ஆசியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ‘செகண்ட் லவ்’ தமிழில் ஒளிபரப்பாகிறது. 


ஜியோஹாட்ஸ்டார் பற்றி:


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

'தபாஹி- Tabaahi 'பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) - கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன.


'தபாஹி' பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் 'தடுமாறுதே' எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. 'தபாஹி' பாடல் - தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்... 'தடுமாறுதே' பாடல்-  மென்மையான உணர்வுகள்- ஏக்கம்- சொல்லப்படாத விசயங்கள் - என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல்- ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.


'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள 'தடுமாறுதே' பாடல் - ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும்... அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.


'தபாஹி' பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும்... ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.


தனிஷ்க் பாக்சி- அர்ஸ்லான் நிஜாமி- ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இசையமைக்கப்பட்டுள்ள இந்த காதல் பாடல் - சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது. இவர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தனது குரலில் பாடியிருக்கிறார்.


இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்.. 'மதோஷ்' (இந்தி), 'மனமோஹகா' (கன்னடம்), 'மனசகதே' (தெலுங்கு), 'தடுமாறுதே' (தமிழ்), 'மதுமோஹினி (மலையாளம்) ஆகிய பெயரில் வெளியாகி உள்ளது. பாடலுக்கான வரிகளை பிரபல எழுத்தாளர்களான பிரமோ மரவந்தே ( கன்னடம் ) அர்ஸ்லான் நிஜாமி - சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.


யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா  குரேஷி ஆகியோர் நடிக்கும் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் திரைப்படம் -மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியை கொண்டிருக்கிறது.


இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,


''அர்ஸ்லான் நிஜாமி - ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் 'தடுமாறுதே' பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் 'டாக்ஸிக்' போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ... அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்'' என்றார்.


இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,


''தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்... மென்மையான உணர்வுகளும்... இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது'' என்றார்.


யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர்  இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ' (Toxic A Fairy Tale for Grown -Ups) திரைப்படம் - கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.


கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில்  படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.


இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது..,


முதலில் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


ஹரிஷ் ப்ரோவுக்கு மிகப்பெரிய விஷன் இருக்கிறது. இது அவருடைய தொடக்கம் மட்டுமே. அவர் நினைத்த உயரத்தை நிச்சயமாக அடைவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் என்ன சொன்னாரோ, அதே இலக்கில் இன்று வரை முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார். அதனால்தான் இன்று இந்த வெற்றி விழாவை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


அர்ஜுன் ப்ரோவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. மிகவும் பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியிலும், கிடைத்த சிறிய இடைவெளிகளில்கூட நடன ஒத்திகையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு பெரிய நன்றி.


வடிவுக்கரசி அம்மாவுக்கும் நன்றி. இந்த வயதிலும் அசராத உற்சாகத்துடன், எந்தக் காட்சிக்கும் உடனடியாக தயாராகி நடித்தது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு முன்மாதிரி.


ஆர்.சி. ப்ரோவுக்கும் மனமார்ந்த நன்றி. படத்தின் ஒவ்வொரு பணியிலும் மிகுந்த ஒத்துழைப்புடன் இருந்து, அனைத்து விஷயங்களையும் விரைவாக செய்து கொடுத்தார்.


எடிட்டர் அருள் ப்ரோவுக்கும் சிறப்பு நன்றி. பாடல்கள் உள்ளிட்ட பல வேலைகளில் எவ்வளவு முறை மாற்றங்கள் செய்தாலும் சலிக்காமல் முழு ஒத்துழைப்புடன் இருந்தார். நாங்கள் ஒரு வருடம் உழைத்தோம்; அதன் பிறகு ஹரிஷ் ப்ரோவும் தொடர்ந்து ஒரு வருடம் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்தப் படம் எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எடிட்டர் அருள் மோசஸ் பேசியதாவது..,


 “கான் சிட்டி” திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், மக்களிடையே மிகப்பெரிய ரீச்சையும் கிடைக்கச் செய்தது ரசிகர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும்தான். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


குறிப்பாக, இந்தப் படம் வேர்ட் ஆஃப் மவுத் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் ரசிகர்கள்தான். படத்தைப் பார்த்து நல்ல கருத்துகளைப் பகிர்ந்து, மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். அதேபோல், என்னுடைய உதவியாளர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் அளவுகடந்த உழைப்பை இந்தப் படத்திற்காக வழங்கினர். குறிப்பாக, இறுதிக்கட்டப் பணிகளில் சிறந்த வெளியீட்டை உருவாக்கும் நேரத்தில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இறுதியாக, இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

விநியோகஸ்தர் ஐயப்பன் பேசியதாவது..,

படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. அதற்காக இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் பாராட்டுகள்.


அர்ஜுன் தாஸிடம் ஒரு வேண்டுகோள். இதுபோன்ற நல்ல கதைகளோடு சேர்த்து, இனிமேலும் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிகமான குடும்பப் படங்களிலும் நீங்கள் நடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.


நடிகர் கல்கி ராஜா பேசியதாவது..,


அனைவருக்கும் வணக்கம்.  முதலில், இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்.


அதேபோல், தயாரிப்பாளர் அஜந்தா சார் அவர்களுக்கும் என் நன்றிகள். ஏற்கனவே அவருடைய “கைதி” திரைப்படத்தில் பணியாற்றியிருந்தேன். தற்போது “கான் சிட்டி” போன்ற வெற்றிப் படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.


மேலும், வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவருடன் திரையைப் பகிர்ந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.


அதேபோல், எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் பரத் சார், படப்பிடிப்பு முழுவதும் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதலையும் வழங்கி உறுதுணையாக இருந்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நடிகர் ரகு  பேசியதாவது..,


“கான் சிட்டி” திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது.


அர்ஜுன் தாஸ் ப்ரோ, வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. அதேபோல் அகிலனுடனும் பணியாற்றியது மறக்க முடியாதது. அவர் ஒரு முறை, “நீங்கள் என் கனவில் வந்து என்னைத் துரத்திக் கொண்டு வருகிறீர்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார். அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது.


இந்தப் படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். குறிப்பாக எடிட்டர் அருள் மோசஸ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர்,  மோகன்ராஜா உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் எடிட்டிங் என்பது மிகவும் சவாலான வேலை. இயக்குநர் ஹரிஷ் ப்ரோ படத்திற்காக ஏராளமான காட்சிகளைப் படமாக்கியிருந்தார். திரையில் நாம் பார்க்கும் படம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்றாலும், அதற்காக ஆறு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளை அவர் பதிவு செய்திருந்தார். அவற்றை ஒருங்கிணைத்து சிறந்த வடிவத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான பணி. மேலும், ஒரே நாளில் இவ்வளவு காட்சிகளைப் படமாக்கிய இயக்குநரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் மட்டுமே நடித்த சில கதாபாத்திரங்கள்கூட படம் முழுவதும் மனதில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது. அதுவே இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம். இவ்வளவு அருமையான குழுவுடன் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். “கான் சிட்டி” படத்தின் இந்த வெற்றி, படக்குழுவின் அடுத்தடுத்த படைப்புகளிலும் தொடர்ந்து அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.


நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,


முதலில் இயக்குநர் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு அவர் கடந்துவந்த பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த உழைப்புக்கான பலனாக இன்று இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்ததாக அர்ஜுன் தாஸ் ப்ரோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வில்லனாக அறிமுகமான நீங்கள், இன்று கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் மிகப் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காரணம் உங்கள் நல்ல மனசு. ஒரு போஸ்டரில் படத்தில் நடித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்கள் மிகவும் அரிது. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு என அனைவரின் பெயர்களும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நினைக்கும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லனாகத் தொடங்கி உச்சத்தை அடைந்தது போல, நீங்களும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


இறுதியாக, இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இதேபோல் தொடர்ந்து நல்ல படங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது..,


“கான் சிட்டி” திரைப்படம் 25-வது நாளை எட்டி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் திறமையையும் வெளிக்கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களை வழங்கி, சிறந்த படைப்பாக உருவாக்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கே முதலில் நன்றியைச் சொல்ல வேண்டும்.

இன்று இந்த 25-வது நாள் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இது ஆரம்பம் மட்டும்தான். இனி இதைவிட மிகப் பெரிய வெற்றிகள் இயக்குநர் ஹரிஷ் மற்றும் இந்தப் படக்குழுவினரை தேடி வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


அதேபோல், நம்முடைய கதாநாயகர் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவருக்கு இனி இன்னும் நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன. அவர் தொடர்ந்து உயர்ந்த இடத்தை அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகப் பெரிய நட்சத்திரமாக அவர் உருவெடுக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.


நடிகர் சதா  பேசியதாவது..,


இது என்னுடைய முதல் திரைப்படம். இந்த ஒரு படத்திற்கே எனக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.படம் வெளியான பிறகு சென்னை, சேலம், மதுரை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் என பல நகரங்களுக்கு திரையரங்கு வருகை சென்றோம். ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகவும் வித்தியாசமாகவும், மனதை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. ஒரு அம்மா வந்து என் நெற்றியில் திருநீறு வைத்து, “நீ நல்லா இருக்கணும்” என்று ஆசீர்வதித்தார். என் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் எனக்காக அப்படி செய்ததில்லை. அந்த அன்பு என்னை மிகவும் நெகிழ வைத்தது.எங்கு சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு வந்து பேசுகிறார்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என நின்று தங்களுடைய பாராட்டுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த அன்பை உணரும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியதை விட, இன்று இந்த வெற்றி விழாவில் பேசுவது எனக்கு இன்னும் கடினமாக இருக்கிறது.


இந்தப் படத்தின் ஒவ்வொரு துறையுடனும் நான் நெருக்கமாக பயணித்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், என்னை நம்பி கொடுத்த இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால், எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில்கூட அனைத்து துறைகளுடனும் இணைந்து அவர்களின் பணியை கவனித்தேன்.

ஒளிப்பதிவாளருடன் இருந்து காட்சிகள் எப்படி அமைக்கப்படுகின்றன, ஒளி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தேன். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் இசை அமர்வுகளில் கலந்து கொண்டேன். டப்பிங், சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்சிங் என ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்து கற்றுக்கொண்டேன். திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் அதற்குக் காரணம்.


அதன் பலனாக இருக்கலாம், ஏற்கனவே எனக்கு அடுத்த இரண்டு, மூன்று படங்களுக்கான வாய்ப்புகள் வந்துள்ளன. அதற்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் இருக்கிறேன்.


குழந்தை நட்சத்திரம் நடிகர் அகிலன் பேசியதாவது..,


அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். “கான் சிட்டி” திரைப்படத்தில் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர் அங்கிளுக்கும், என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனக்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி.


பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசியதாவது..,


முதலில், இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதன் பலனை இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறோம்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் நானும் இணைந்தால் அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள். அந்த நம்பிக்கையை மீண்டும் இந்தப் படம் நிரூபித்துள்ளது. அதற்காக அவருக்கும் என் நன்றிகள்.


இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் என் நண்பர். இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் இன்று இந்த வெற்றி மேடை வரை அவர் கடந்த பயணம் எனக்கு நன்றாகத் தெரியும். ஹரிஷ், நீ ஒரு ஆலமரம் போல வளரப் போகிறாய். இது உன் முதல் வெற்றிப்படி மட்டுமே. இன்னும் பல உயரங்களை நீ அடைவாய் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தில் இரண்டு தத்துவப் பாடல்களை எழுதும் வாய்ப்பை ஹரிஷ் எனக்கு வழங்கினார். அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். அந்தப் பாடல்கள் தாமதமாக ரசிகர்களிடம் சென்றாலும், காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


“ஏமாற்றாதே… ஏமாறாதே…” என்ற பாடலும், “கண்ணா ப்ரோ…” பாடலில் இடம்பெற்ற,


“வெற்றி பெற்ற செடியும் இங்கு விழுந்து வீழும் காலம் உண்டு…

தோற்று தோற்று நின்றவரும் வாழும் காலம் உண்டு…”


என்ற வரிகளும் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும் வரிகள். அவற்றை எழுத வாய்ப்பு அளித்த ஹரிஷுக்கு மீண்டும் என் நன்றிகள்.


அதேநேரத்தில், ரசிகர்களிடம் ஒரு மன்னிப்பையும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். “ஃப்ராடு பையலே” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. அது நேரக் குறைவு காரணமாக நீக்கப்பட்ட பாடல் அல்ல. ஆரம்பத்திலேயே அந்தப் பாடல் படத்தில் இடம்பெறாது என்று திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. இருந்தாலும், சமூக வலைதளங்களில் அந்தப் பாடலுக்காகவே பலர் படத்தைப் பார்க்க வந்ததாகக் கூறிய பதிவுகளைப் பார்த்தபோது, அதை படத்தில் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கும் தோன்றியது. அந்தப் பாடலை நேசித்த அனைத்து ரசிகர்களிடமும் படக்குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


அர்ஜுன் தாஸ் சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக பெண் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் மட்டுமல்லாமல் காதல் கதைகளிலும் அவர் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரை ஒரு முழுமையான காதல் நாயகனாக ரசிகர்கள் பார்க்கும் நாள் நிச்சயம் வரும். அதற்கான பாடல்களை எழுதுவதில் நானும், ஷான் ரோல்டனும் தொடர்ந்து இருப்போம்.


ஷான் ரோல்டனுடன் பணியாற்றுவது ஒரு வேலை மட்டுமல்ல; அது ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு முறையும் அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். அவருடைய இசையும், எங்களுடைய முயற்சியும் சேர்ந்ததுதான் இந்த வெற்றிக் கூட்டணி. அது இன்னும் நீண்ட காலம் தொடரும் என்று நம்புகிறேன்.


சதா, கல்கி ராஜா, ஆதித்யா கதிர், ரகு, அகிலன் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக அகிலனின் இறுதிக்காட்சி திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஹரிஷ் முன்கூட்டியே சொன்னார். அதேபோலவே அது ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.


இமான் அண்ணாச்சி, உங்களுடைய சிறிய சிறிய காட்சிகளும், வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், அருள் மோசஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இறுதியாக, Power House Pictures நிறுவனத்திலிருந்து இன்னும் பல தரமான படங்கள் வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ஹரிஷின் பார்வை மிகப் பெரியது. அந்தக் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  பேசியதாவது..,


இன்று ஒரு சிறந்த கலைஞன் எந்தப் பகுதியிலிருந்தும் உருவாக முடியும் என்பதை நிரூபிக்கும் நாளாக இருக்கிறது. அந்த வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் சாவியாக இன்று நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். அதற்காக ஹரிஷின் சார்பிலும், அவரது சகோதரனாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


“கான் சிட்டி” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்திற்கு நான் இன்னும் அதிகமான வரவேற்பை எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றினேன். இருந்தாலும், ஹரிஷின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தருகிறது. இது அவருடைய பல வெற்றிகளில் முதல் வெற்றி மட்டுமே.


ஹரிஷ் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்ட இயக்குநர். அவருடைய அறிவும், கதையை அணுகும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிய தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சொல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. அவர் முதன்முதலில் கதையைச் சொன்னபோது, இவ்வளவு கதாபாத்திரங்களையும், இவ்வளவு நிகழ்வுகளையும் இரண்டு மணி நேர திரைப்படமாக எப்படி வடிவமைப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.


பொதுவாக அதிக கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் எல்லோரும் ரசிகர்களின் மனதில் நிற்பதில்லை. ஆனால் “கான் சிட்டி” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் நினைவில் நிற்கும் தருணங்கள் இருந்தன. ஒவ்வொரு நடிகருக்கும் திரையரங்கில் கைதட்டல்களும் வரவேற்பும் கிடைத்தது. ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி அதுதான். இது எதிர்காலத்தில் மிகப் பெரிய படங்களை உருவாக்கப் போகும் இயக்குநரின் அடையாளம். பான் இந்தியா, பான் வேர்ல்ட் அளவிலான படைப்புகளை ஹரிஷ் நிச்சயமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


நான் எப்போதும் ஹரிஷிடம் சொல்வது ஒன்று தான். இது அவருடைய பயணத்தின் தொடக்கம் மட்டுமே. இது வெறும் வார்ம்-அப். இன்னும் அவர் செய்யப் போகும் சிறந்த படைப்புகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். அந்த வெற்றிகளைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.


எடிட்டர் அருள் மோசஸைப் பற்றியும் சொல்ல வேண்டும். பின்னணி இசை அமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு காட்சியின் தொடக்கம், முடிவு, இசைக்கான இடைவெளி என அனைத்தையும் மிகத் துல்லியமாக அமைத்துக் கொடுத்தார். இசையமைப்பாளர்களின் பணியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒத்துழைக்கும் மிகச் சிறந்த, உணர்வுப்பூர்வமான எடிட்டர் அவர். தொழில்துறையில் அவருக்கு இருக்கும் நல்ல பெயருக்கு காரணம் அவருடைய உழைப்புதான். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.


நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டருக்கும் என் நன்றிகள். முதன்முதலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. என்னால் செய்ய முடியும் என்று நான் நினைக்காத விஷயங்களைக்கூட என்னிடம் இருந்து சிறப்பாக வெளிக்கொண்டு வந்தவர் அவர். திரையில் நான் ஆடியதைப் பார்த்தபோது, அதை உண்மையிலேயே நான்தானா செய்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கெல்லாம் முழுக் காரணம் சந்தோஷ் மாஸ்டரின் அர்ப்பணிப்பும் திறமையும் தான்.


குறிப்பாக குழந்தைகளுடன் அவர் பணியாற்றிய விதம், பாடல்களின் நடன அமைப்பு, படத்தின் பல முக்கிய தருணங்களை மேலும் சிறப்பாக்கிய விதம் ஆகியவை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் படத்தில் நடித்த அனைத்து குணச்சித்திர நடிகர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒரு கதையின் வெற்றிக்கு தரமான துணைக் கதாபாத்திரங்கள் மிகவும் அவசியம். திரையில் அவர்கள் எவ்வளவு நேரம் தோன்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் அந்தக் கதாபாத்திரமாக ரசிகர்களை நம்ப வைக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இந்தப் படத்தின் அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.


குறிப்பாக சதாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் நான் சொன்னேன், நீங்கள் மிகவும் அழகாகவும் திரைப்பரிமாணம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்; எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் நிச்சயம் வரும். அதற்கான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றன. உங்கள் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  பாடலாசிரியர் மோகன்ராஜனுடன் உருவான பந்தம் இயல்பானது அதற்கு இறைவனுக்கு நன்றி.


 இந்தப்படம் மீண்டும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். இந்தப்படத்தில் என் டீமில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி.


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.

எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அகில்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம். இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாக சொல்வார். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.


சதாவுக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பின் போதே அவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். படம் வெளியாகும் வரை வேறு எந்த வாய்ப்பையும் ஏற்க வேண்டாம். இந்தப் படம் வெளியான பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று. இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.


மோகன் ராஜன் சார், நம்முடைய பயணம் நீண்டது. உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இன்னும் பல படங்களில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.


ஷான் ரோல்டன் அண்ணா பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் பேசிய பிறகு எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தத் துறையில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். உங்களுடன் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.


யோகி பாபு சார் இன்று இங்கு இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம். எந்தக் காட்சியாக இருந்தாலும், ஒரு நகைச்சுவை வசனம் மூலம் படப்பிடிப்பு தளத்தையே சிரிப்பால் நிரப்பிவிடுவார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தபோது, அவருடைய உற்சாகத்தையும், எளிமையையும் இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் செய்து முடிக்கும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.


படம் வெளியான பிறகு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிய விதத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன். அவருடைய நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவம்.


பரத், ஐயப்பன் சார், முத்துக்குமார் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தை உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பல திரையரங்குகளுக்கு நேரில் வந்து, படத்திற்கு கிடைத்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ரசித்ததைப் பார்த்ததும் எனக்கும் பெருமையாக இருந்தது.


லல்லு, “கைதி” திரைப்படத்திலிருந்து நம்முடைய பயணம் தொடர்ந்து வருகிறது. இந்தப் படத்திலும் இணைந்ததற்கு நன்றி. அதேபோல் அம்சா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெளியீட்டை வழங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.


இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். திரையரங்குகளில் குழந்தைகள் வந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும், குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தை மனதார பாராட்டியதும் என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.


இந்த அன்பும் ஆதரவும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. தொடர்ந்து நல்ல படங்களை உங்களுக்காக வழங்குவேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,


நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த விஷயம் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் இதை பகிர்கிறேன். எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணிரத்னம் சார், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார் சார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.


இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு, “படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்” என்று நினைத்தவர்கள், படம் பார்த்த பிறகு “ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப் படத்தையும் ரசித்தோம்” என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, “வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன.

ஆனால், ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும்.

இந்தப் படத்தின் மூலம் என்னை வேறு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். “வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்” என்ற எண்ணத்தை உடைத்து, எனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்த மேடை வெறும் நன்றி சொல்லும் மேடை மட்டுமல்ல; இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அன்பு எனக்கு இன்னும் நிறைய நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நன்றி. வணக்கம்.


நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது..,


முதலில் “கான் சிட்டி” திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து சந்தித்தார். படம் வெற்றி பெற்றால் ஒரு சிறப்பு பரிசு தருவதாக முன்பே சொல்லியிருந்தார். அந்த வாக்குறுதியை மறக்காமல், ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார். அந்த நேர்மைக்கும், நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.


உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆரம்பத்தில் இந்தப் படத்தை ஒரு சிறிய படம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் பின்னணியில் நடந்த திட்டமிடல், தயாரிப்பு, விநியோகம், ஓடிடி ஒப்பந்தம் என அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனையும் திறமையும் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.


ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல; தயாரிப்பு, திரைக்கதை, திட்டமிடல் என திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட திறமையான படைப்பாளர். அந்தப் பல்துறை திறமையே இந்த வெற்றிக்குக் காரணம்.


இன்றைய சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்திலும் “கான் சிட்டி” திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்த வெற்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.


ஒரு படம் நல்ல வசூல் பெறும்போது, அது அந்தப் படக்குழுவுக்கு மட்டுமல்ல, மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. இன்னும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.


எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும், அது ரசிகர்களிடம் சென்று சேர்ந்து வெற்றி பெறும் தருணத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. “கான் சிட்டி” படத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது.


ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,


முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம்.

இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.


என்னுடைய முதல் நன்றி குணா (Post Office) மற்றும் விஜய் (Silver Tree) ஆகியோருக்கே. திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்று வரை அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், மணிகண்டன் சார், PTG Studios, வெண்ணி, ஜென்னி, என் குடும்பத்தினர், உறவினர்கள் என இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து குறித்து குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு நாள் வந்து கதையை கேட்டார். “கதை பிடித்திருந்தால் முதலீடு செய்யுங்கள். படத்தை முழுமையாக முடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று நான் சொன்னேன். மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை அனுப்பிவைத்தார். அந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.


அதேபோல் மற்றொரு இணை தயாரிப்பாளரான Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். எந்தக் கேள்வியும் கேட்காமல், “தம்பி, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையோடு இந்தப் படத்தில் முதலீடு செய்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வெளிநாட்டு வெளியீட்டை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்த T-Series உள்ளிட்ட என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி. ஒரு உள்ளடக்கமிக்க திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் வெளியிட உதவியது மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.

எங்கள் விநியோகஸ்தரான Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படம் பார்த்த முதல் நாளிலிருந்தே அவர் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். நடிகரின் சந்தை மதிப்பையோ, முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது அவருடைய திரைப்படப் பற்றைக் காட்டுகிறது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம், மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது. அந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது.


ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், மிக்ஸிங் இன்ஜினியர் உதய் சார், கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் மிகப்பெரிய ஆதரவாளர். எந்த தயக்கமும் இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றி என்னுடன் இருந்தார். அவருக்கு என் நன்றிகள். ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் சச்சின், சிறப்பு மேக்கப் கலைஞர் அப்துல், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக எடிட்டர் அருள் மோசஸ், படத்தின் இறுதி நாள் வரை, மிக்ஸிங், இறுதிச் சரிபார்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்து இந்தப் படத்தை முழுமையாக்கினார். அவருடைய அர்ப்பணிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகும்.


இந்தப் படத்தில் நடித்த அனைவரையும் பற்றி பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மூத்த கலைஞர், இன்றும் “எனக்கு வேலை வாங்கிக் கொடுங்கள், நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுவது எவ்வளவு பெரிய விஷயம் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாங்கள் சில படங்கள் நடித்துவிட்டாலே திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு கலைஞர் இன்னும் அதே ஆர்வத்துடனும், அதே பசியுடனும் வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்பது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது.

“நான் இறந்தாலும், படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்.”


அந்த வார்த்தையைக் கேட்டபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. சினிமா மீது இவ்வளவு காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. படப்பிடிப்பு முடிந்த நாளிலேயே நான் அவரிடம் சொன்னேன், “இந்தப் படம் வெளியான பிறகு அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்று. இன்று அது உண்மையாகி இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்து அன்னாபென் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு மகனின் தாயாக, வாழ்க்கையின் பல வேதனைகளை சுமந்து செல்லும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை மிகையாக இல்லாமல், மிகவும் இயல்பாகவும் அடக்கமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


ஒரு கட்டத்தில், “இந்தக் காட்சியில் நீங்கள் இன்னும் அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்” என்று சொன்னபோதும், “இல்லை, என் மகன் காணாமல் போன நிலையில் இருக்கும் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் அமைதியாக இருப்பாள். நான் இதை மிகைப்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார். அந்த முதிர்ச்சியும், கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்டிருந்த புரிதலும் என்னை மிகவும் கவர்ந்தது.


இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று மித்ரா கதாபாத்திரம். இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள், தவறான உறவுகள் போன்ற விஷயங்களை எந்தப் போதனையும் இல்லாமல், மிக இயல்பாக அந்தக் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அன்னாபென் மேடம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்தப் படத்தில் இணைந்த பிறகுதான் இந்தப் படத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்தது.

யோகி பாபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்றுகூட அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபடியே என்னுடன் பேசினார். இந்தப் படத்திற்கு அவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். முக்கியமாக, வடிவுக்கரசி அம்மா இந்தப் படத்தில் சிறப்பாக ஜொலிக்க வேண்டும் என்பதில் அவர் முழு மனதுடன் ஒத்துழைத்தார். திரைக்கதையிலேயே அந்த இடம் இருந்தாலும், ஒரு நடிகராக அந்த இடத்தை மற்றொரு கலைஞருக்காக விட்டுக்கொடுப்பது மிகப்பெரிய மனப்பான்மை. படம் முழுவதும் அவர் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், யோகி பாபு சார் இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இருந்தாலும், என் மீது வைத்திருந்த அன்பிற்காகவும் நம்பிக்கைக்காகவும் இந்தப் படத்தில் நடித்தார். அதற்காக அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது.  ஒரு நடிகராக, மற்ற கதாபாத்திரங்களும் சமமான முக்கியத்துவத்துடன் திரையில் வருவதை ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம். அர்ஜுன் தாஸ் சார் அந்த மனப்பான்மையுடன் இந்தப் படத்தில் நடித்தார். அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு முழுமையானதாக உருவானது. அதுமட்டுமல்லாமல், போஸ்டர்களில் என் பெயருடன் அனைத்து கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்று முதலில் சொன்னவரும் அவர்தான். அந்த பெருந்தன்மைக்கும், ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.


இறுதியாக, என் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.


ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த “கான் சிட்டி”, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா - நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.


இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில்... இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான பிரத்யேக காணொளியை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஹாய் திரைப்படம்-  பெயருக்கு ஏற்றபடி எளிமையான... இனிமையான.... திரைப்படம். ரசிகர்கள் தங்களுடைய குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் ஜாலியாக பார்த்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. சென்னை- கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- ஆகிய மூன்று இடங்களில் 'ஹாய்' படத்தின் கதை நிகழ்கிறது. 'டார்லிங் டார்லிங் டார்லிங்' - 'சந்தோஷ் சுப்பிரமணியம்' - 'யாரடி நீ மோகினி' படங்களைப் போல் வில்லன்களே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகி இருக்கிறது'' என்றார்.


இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும்.... நயன்தாரா - கவின்- கே. பாக்யராஜ் - பிரபு - ராதிகா சரத்குமார்-  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ...'ஹாய்'  திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் 'தட்டுவண்டி' திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் 'தட்டுவண்டி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையும், திறமையான கலைஞர்களின் பங்களிப்பும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Not a film. Not a production house. Not an endorsement. Actress Sakshi Agarwal has chosen her birthday to introduce OKUU, a premium performance nutrition brand she has spent the last five years building from the ground up.

Chennai, India — July 20, 2026

For years, audiences have known Sakshi Agarwal as an actress through films including Kaala, Viswasam, and Aranmanai 3 and Big Boss. What very few knew was that, alongside her career in cinema, she had been working on a completely different dream.

On her birthday, Sakshi has officially revealed OKUU, a premium performance nutrition company that represents five years of research, product development, and relentless refinement.

Unlike many celebrity-backed consumer brands, OKUU wasn’t created through a licensing deal or endorsement partnership. Sakshi has been personally involved in the company’s journey—from identifying the problem to shaping the product, testing formulations, and defining the brand’s vision.

The journey wasn’t quick.

It took five years of development and 551 formulation iterations in the final eleven months alone before the product reached the standard she had envisioned.

Driven by her own experience balancing demanding film schedules with fitness, Sakshi became increasingly frustrated by products that promised performance while relying on hidden sugars, fillers, and unnecessary compromises.

Instead of putting her name on an existing product, she decided to create one herself.

The result is OKUU—a clean-label premium plant-based protein bar delivering 35g of protein, zero sugar, 14g of fibre, and a 6g collagen boost, while eliminating unecessary fillers, chemicals , additives.

“For the last five years, I’ve lived two parallel journeys. One that everyone saw—as an actress—and another that very few people knew about: building OKUU. This isn’t a side project or a celebrity brand. It’s something I’ve obsessed over every single day because I genuinely believed India deserved better nutrition.”
— Sakshi Agarwal, Founder, OKUU

For Sakshi, this launch is more than introducing a new product—it’s the public beginning of a long-term mission to build an Indian nutrition company capable of competing with the best in the world.

“The easiest thing I could have done was endorse someone else’s product. I chose the harder path because I wanted to build something I could stand behind with complete conviction. Today isn’t just a launch—it’s the day I finally get to share what I’ve been building all these years.”

With OKUU, Sakshi Agarwal begins a new chapter—not away from cinema, but alongside it—as both an actress and a founder committed to redefining performance nutrition in India.

Pageviews