“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.
'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில்,
'' இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் 'என்றும் மார்க்கண்டேயன்' ஆன சிவகுமாரைப் போல் இவரும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்' எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய் தான். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்' என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகனிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள்தான் தாய்.
இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றிகள் தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். இப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குரு தான் அனைத்தும். அதன்பிறகுதான் தாய் உள்ளிட்ட பலர்.
அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும். இந்தி எதிர்ப்பு.. இந்தி திணிப்பு ...என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ்ப் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்.. சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான. பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.
இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.
இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே 'கார்கில்' என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்து விட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.
டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியை காட்டி விடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்து வாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும் .
திரையுலகைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் தான் கவனத்தை கவர்ந்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார். நான் இன்னும் முழுமையான இயக்குநராக வெற்றி பெறவில்லை. நான் எப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெறுகிறேனோ அப்போதுதான் முழுமையான இயக்குநராவேன். 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'திருப்பதி' இந்தப் படங்கள் எல்லாம் பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான். இந்த மாதிரியான வெற்றி ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு நிறைவைத் தந்தாலும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கி அந்தப் படம் வெற்றி பெறும் போது தான் ஒட்டுமொத்த திரையுலகமும் ஆரோக்கியமாகப் பயணிக்கும். அந்தப் பயணத்தில் டேக் டைவர்ஷன் படமும் இடம் பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில்,
'' நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும். முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்... சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன். வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டதைப் போல் டேக் டைவர்ஷனால் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் டென்ஷனை ஏற்றுக்கொண்டு டேக் டைவர்ஷனில் பயணித்தால் நமக்கும் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதைச் சுவராசியமாக சொல்லி இருக்கிறேன்.
ஒரே நாளில் நடைபெறும் கதை. அதிலும் பயணம் தொடர்பான கதை என்பதால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுவேன். அதனை கடவுள் வெவ்வேறு நண்பர்களின் ரூபத்தில் நிறைவேற்றி வைப்பார்; வைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை நாயகன் சிவகுமார் மூலமாக கே ஜி எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது எனப் பாராட்டினார். இது போன்ற பாராட்டுகள் என்னை உற்சாகமடைய வைத்திருக்கின்றன.
என்னைப்பொறுத்தவரை ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால், உழைப்பு மட்டும் போதாது. மக்களின் கைகளில்தான் இருக்கிறது. டேக் டைவர்ஷன் படைப்பை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். என்னுடைய கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பவர்கள் மக்கள். அதனால் அவர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.'' என்றார்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சிவக்குமார், நடிகர் ராம்ஸ், நடிகை பாடினி குமார், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பாளர் விது விஷ்வா, இசை அமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் தயாரிப்பாளர் சுபா செந்தில் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த "ஆஹா கல்யாணம்" என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் "கன்னி ராசி" என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.
Blacksheep உடைய சொந்த OTT-யான "Bs value"க்காகத் உருவாக்கப்படும் இந்த தொடரை இயக்குநர் அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன்யை கடந்ததோடு, இது YouTube தளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் "என்ன சொல்ல போகிறாய்" புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில் பாராட்டப்பட்ட நடிகராக வலம் வருவதோடு, அன்பு டிஜிட்டல் உலகத்தில் தனது எழுத்து மற்றும் இயக்கத்திற்காக வெறித்தனமான ரசிகர்களையும் கொண்டிருக்கும் அன்புதாசன் பெரிய அளவில் இயக்குனராக பரிணமிக்கும் படைப்பாக இது இருக்கும். Blacksheep உடைய பல புனைகதை மற்றும் புனைகதை அல்லாத தொடர்களில் குறும்புத்தனம் மற்றும் அசத்தலான நடிப்பு மூலம், லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில், ஏற்கனவே பிரபலமாக இருந்த சேட்டை ஷெரிப் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.
‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும், இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அமேசான் பிரைம் ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த கதை நாயகன் கிருஷ்ணாவை (சேட்டை ஷெரீப்) சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது .
இத்தொடர் ஆகஸ்ட் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, நேற்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன், இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தின் தொழில்நுட்ப குழு,
நவநீத கிருஷ்ணன் (இணை இயக்குனர்), ஷஷாங்க், மகிமை, நித்யா, லோகேஷ்வரி( உதவி இயக்குனர்கள்). சரவணன் & நர்மதா (எழுத்தாளர்கள்), ஃப்ரெட்ரிக் விஜய் (ஒளிப்பதிவு), டார்வின் அஜய் (கேமரா அசிஸ்டண்ட்), பிரதீப் (கலை இயக்கம்), ஹரி ( SFX), நிசாம் (DI), அர்சத், இர்ஷத்(டிசைன்ஸ்), அசார்(நடனம்), நரேஷ்-கிஷோர்(எக்ஸிகியூடிவ் புரடியூசர்).
தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான, ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ இணைய தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை SSN பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த கல்லூரி கல்சுரல் விழாவின் குறும்பட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டனர். இந்த கல்லூரி விழாவில், இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்துவதற்காக, ஆஹா தமிழ் சார்பில் குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டு, போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.
திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவான இணைய தொடர் 'குத்துக்கு பத்து'. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், சாரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடருக்கு ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார், மதன் குமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டார்க்-அடல்ட் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த தொடரை டி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.
ஆஹா தமிழ் ஓடிடி தளம் இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில் யூடுயூப் தளத்தில் பிரபலமான டெம்பிள் மங்கீஸ் என்ற குழுவை கண்டறிந்து, அவர்களுக்கு தொடர் இயக்கும் வாய்ப்பளித்து, அந்த தொடரை ஆஹா தமிழ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது அவர்கள் மூலமாகவே இளம் திறமையாளர்களை கண்டறியும் பணியையும் மேற்கொண்டுள்ளது.
கல்லூரி விழாவினில் கலந்து கொண்ட குத்துக்கு பத்து குழுவினர் மாணவர்களிடம் உரையாடினர்
அந்நிகழ்வில் இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் வரதராஜ் கூறியதாவது...
எங்கள் ’குத்துக்கு பத்து’ தொடர் நேற்று ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. இத்தொடர் அடல்ட் காமெடி வகையை சார்ந்தது. ஒரு கேங்க் வாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட தொடர் இது. நண்பனுக்காக நீங்கள் சண்டைக்கு போகும்போது, அங்கு நடக்கும் சண்டையில் சிக்கி, அந்த சண்டை பெரிய கேங்க் வாராக மாறினால், என்ன ஆகும் என்பது இந்த தொடர். இங்கு நாங்கள் நிற்கும் இந்த மேடை தான் எங்களுக்கு வெற்றியை கொடுத்தது. இது மாதிரி மேடைகளில் ஜெயித்தவர்கள் சினிமாவுக்கு போவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு விருப்பமான துறைக்கு செல்வார்கள். இந்த மேடையில் எங்களது தொடரை புரோமோஷன் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த தொடரில் இணையதளத்தில் பிரபலமான சும்மி வண்ண காவியங்கள், பிலிப் பிலிப், மைனர் போன்றவர்கள் இந்த தொடரில் நட்புக்காக நடித்து கொடுத்துள்ளனர். இந்த தொடர் ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது, நீங்கள் அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.
நடிகர் அப்துல்லா கூறியதாவது....
சிம்போசியம், கல்சுரல் போன்ற நிகழ்வுகளுக்காக இந்த கல்லூரிக்கு வந்திருக்கிறோம். இப்போது நாங்கள் நடித்த தொடர் ஆஹா தமிழில் வெளியாகி, அதற்கான புரோமோசனுக்காக் இந்த மேடைக்கு வருவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. குத்துக்கு பத்து தொடரை பொறுத்தவரையில், அது ஒரு கேங் வார் சம்பந்தபட்டது. நாம் எப்போதும் நமது காதலை விட நமது நண்பன் காதலுக்காக பெரிய சிக்கலுக்குள்ளாவோம். நண்பன் காதலுக்காக சண்டை போட்டு சிக்கலில் மாட்டிகொண்டவர்கள் ரிலேட் பண்ணிகொள்ள கூடிய ஒன்றாக இந்த தொடர் இருக்கும். நாம் நினைத்து பார்க்காத சில விஷயங்களும் இந்த தொடரில் இருக்கும். தொடரை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
படத்தொகுப்பாளர் சந்தோஷ் கூறியதாவது....
விஜய் அண்ணா தான் எனக்கு எல்லாவுமாய் இருந்தார். இந்த தொடர் எல்லாருக்கும் ரொம்ப நெருக்கமான ஒன்று. டெம்பிள் மங்கீஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமான புரொபசர் ரங்கபாசியம் குத்துக்கு பத்து தொடரில் ஏழு எபிசோடுக்கு மேல் வருவார். நீங்கள் இந்த தொடரை ஆஹா தமிழ் தளத்தில் பார்த்து ஆதரவு தாருங்கள்.
நடிகர் சஞ்சய் கூறியதாவது...
பல முறை நிராகரிக்கபட்டு, நான் வெற்றி பெற மாட்டேன் என நினைத்த மேடையில் நான் நடித்த தொடருக்கு புரோமோஷன் செய்வது மிகவும் சந்தோசமாக உள்ளது. குத்துக்கு பத்து தொடர் எல்லோரும் ரிலேட் செய்து கொள்ளும் தொடராக இருக்கும். எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
இதனை தொடர்ந்து
கல்லூரி விழாவில் திரையிடப்பட்ட குறும்படங்களை பார்வையிட்ட குத்துக்கு பத்து திரைப்படக்குழு, சிறந்த குறும்படங்களுக்கான விருது வழங்கி, இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்தும் விதமான கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரைத் தொடர்ந்து, நக்கலைட்ஸ் என்ற உள்ளுர் திறமையாளர்களுடன் இணைந்து உருவான ‘அம்முச்சி 2’ என்ற இணைய தொடரும் ஆஹா ஒரிஜினல் படைப்பாக விரைவில் வெளியாகவிருக்கிறது.
தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் மூலமாக அசத்தி வரும் ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆஹா ஒரிஜினல் படைப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படமும் நேரடி பிரிமியர் ஆக வெளியானது. இதற்கு பார்வையாளர்களிடையே பேராதரவு கிடைத்தது. திரையரங்கில் வெளியான ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ திரைப்படத்தை ‘ஆஹா டிஜிட்டல் தளம் விரைவில் வெளியிடவிருக்கிறது.
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம் ஜெ ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ஷூட்டிங் ஸ்டார்.
துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டி, இந்தி நடிகர் ரவி கிஷன் மற்றும் சில தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்த மாஷூம் சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, பல பிரபல இந்தி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.
வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவனை, அவனை சுற்றியுள்ளவர்கள் எப்படி, மென்மேலும் ஏமாளி ஆக்கினார்கள் என்பதைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதே இப்படத்தின் கதை.
ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த எம் ஜெ ரமணன், ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் தான் எழுதி இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
படத்தின் ஒளிப்பதிவை எஸ் ஆர் சதீஷ்குமார் கவனிக்க, பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் அம்ஜத்-நதிம்-ஆமீர் இசையமைக்க, கலை இயக்குநராக சேத்தன் பாடக், எடிட்டராக சசிக்குமார், ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன், நடன இயக்குராக விஷ்ணு தேவா இப்படத்தில் பணிபுரிகிறார்கள்.
இப்படத்தை, இந்தியில் பல திரைப்படங்களையும், விளம்பர படங்களையும் தயாரித்த ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கி சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், ரத்த தெறி தெறி எனும் முதல் பாடல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதே மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பவுடர் திரைப்படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் தோன்றியுள்ளார். லியாண்டர் லீ மார்ட் இசையமைத்துள்ள ரத்த தெறி தெறி பாடல் சிங்கப்பூரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த பாடலின் கூடுதல் புரோகிராமிங்கை லத்வியாவில் உள்ள தி பேக்யார்டு ஸ்டூடியோசில் நீல் செய்ய, இசைக்கோர்வை மற்றும் மாஸ்டரிங்கை இந்தோனேசியாவின் அகெளஸ்டிக் ஆடியோவில் டாரென் விக் செய்துள்ளார்.
திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வித்யா பிரதீப்
அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார், ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.
பவுடர் குழு
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - விஜய் ஸ்ரீ ஜி
இசை - லியாண்டர் லீ மார்ட்
ஒளிப்பதிவு - ராஜபாண்டி
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்
படத்தொகுப்பு - குணா
கலை இயக்குநர் - சரவணா
சண்டைக்காட்சி - விஜய்
உடைகள் - வேலவன்
புகைப்படங்கள் - ராஜா
சவுண்ட் ஸ்டுடியோ - சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு - பிரேம்குமார்
ஒலிக்கலவை - நவீன் ஷங்கர்
டிஐ வண்ணம்: வீரராகவன்
வடிவமைப்பு - ஜி டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர் - சரவணன்
தயாரிப்பு நிறுவனம் - ஜி மீடியா
தயாரிப்பாளர் - ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்
ஆடியோ லேபிள் - டிவோ
சற்றுமுன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்துexmla அவர்கள் 15 புதியகிளைமன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு ,கல்வி உதவி தொகை ,வேட்டி, சேலை ,மரக்கன்றுகள் ,மளிகை பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை ,அன்னதானம் 1000பேருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் ,இளைஞர் அணி தலைவர் பிரபு விக்னேஷ் ,மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் கந்தசாமி ,செயலாளர் லோகேஷ்வரன், து.செயலாளர் தரனேஷ்குமார் ,தொண்டரணி கலை ,ராஜா ,பரத் , ராமச்சந்திரன் .சௌந்திரராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்தும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..
பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முகுந்தன் ராமன் பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் சிவம் இந்த பாடலை பாடியுள்ளார் .
பாடல் வரிகள் :
Verse 1:
இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க...
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட...
ருசிச்சு பாத்த நாக்கு இன்னும் கேக்க...
பயந்து திக்கு திக்கு சத்தம் கேக்க...
சுருட்டுக்குள்ள உள்ள பொடிய போல
கெடச்ச ஆளடிச்சு சிறுக, சிறுக
நெறிச்சு பத்த வச்சு பொகய விட்டு
ரசிச்சு பாத்திருப்பான் கதற விட்டு...
Chorus:
பட்டாம்பூச்சி...
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி...
பட்டாம்பூச்சி...
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி...
பட்டாம்பூச்சி...
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி...
Verse 2:
முரட்டு மாட்ட நின்னு ஓட விட்டு...
வெரட்டி கட்டி வெக்கும் சல்லிகட்டு...
புடிக்கும் வீரனுக்கு ரத்தமெல்லாம்...
பதக்கமாகி தொங்கும் நாளிருக்கு...
தனிச்சி நின்ன காட்டு யான ஒன்ன...
வெலங்கு போட்டு உள்ள கட்டி வெக்க...
தெரிஞ்ச ஆளு இங்க வந்திருக்கு...
குறுக்க பாற போல நின்னிருக்கு...
Chorus:
பட்டாம்பூச்சி...
இவன் காரசார காவக்காரன்...
பட்டாம்பூச்சி...
உன் ஆதி அந்தம் பாத்த வீரன்...
பட்டாம்பூச்சி...
நீ மோதி பாத்து பாதி ஆவ
பட்டாம்பூச்சி...
Bridge:
தான் சொல்லி வச்சு
கொன்னதெல்லாம்
கெத்தாகி போதையாக...
காட்டாறுக்குள்ள பூனை என்ன
யானைக்கும் பேதமில்ல...
சிறகுல சிறை இல்ல
பறவ போகும் காத்துல
பறவைக்கு குறியெல்லாம்
தரையிலுள்ள இரையில
பசிக்குற பொழுதுல
மாட்டியாகும் வலையில...
ஓஹோஹோ...
Chorus:
பட்டாம்பூச்சி...
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி...
பட்டாம்பூச்சி...
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி...
பட்டாம்பூச்சி...
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி...
நடிகர்கள் - சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து - இயக்கம் - பத்ரி
தயாரிப்பு - அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர்
ஒளிப்பதிவு -கிருஷ்ணசுவாமி ,
இசை -நவநீத் சுந்தர்,
எடிட்டிங் - பென்னிஆலிவர் ,
சண்டைப்பயிற்சி ராஜசேகர்,
திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
'குஷி' தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.
நடிகர்கள்
விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா.
ஒப்பனை : பாஷா
ஆடை வடிவமைப்பாளர்கள் :
ராஜேஷ், ஹார்மான் கௌர் மற்றும் பல்லவி சிங்
கலை : உத்தர் குமார், சந்திரிகா
சண்டைப்பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
வசன உதவி : நரேஷ் பாபு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
தயாரிப்பு நிர்வாகி : தினேஷ் நரசிம்மன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஜெயஸ்ரீ லட்சுமிநாராயணன்
படத்தொகுப்பு : பிரவீன் புடி
இசை : ஹிஷம் அப்துல் வஹாப்
தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி
ஒளிப்பதிவு : ஜி முரளி
தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா