Dhurandhar The Revenge has achieved a remarkable milestone by completing 100 days in cinemas, reaffirming its status as one of the biggest blockbusters!
Driven by its gripping storytelling, high-octane action, and powerful performances, the film has continued to captivate audiences.
What makes Dhurandhar The Revenge’s 100-day theatrical run even more extraordinary is that, despite being available on two major OTT platforms (namely JioHotstar and Netflix) the film continues to draw audiences to cinemas.
Written, directed and produced by Aditya Dhar, and produced by Jyoti Deshpande and Lokesh Dhar, Dhurandhar The Revenge marks yet another remarkable milestone.. Presented by Jio Studios and produced by B62 Studios, the film released in India on March 19, 2026, and has since emerged as one of the biggest theatrical successes in Hindi cinema.
‘யெல்லோ’ முதல் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வரை... தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்
மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்
‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒரு மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் புத்திசாலித்தனமான யுக்திகள் மற்றும் புதிய வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை நகைச்சுவை, உணர்வு மற்றும் ஊக்கமூட்டும் தருணங்களுடன் சொல்லும் தொடர் தான்
சபீர் சுதாகரின் இயக்கத்தில் உருவாகிய ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.
இந்த தொடரில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை, நட்பு, உணர்வு மற்றும் லட்சியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வைபவ் முருகேசனின் தொடர்ந்து வளர்ந்து வரும் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. ஒரே இரவில் புகழின் உச்சியை எட்டிய நடிகர் அல்ல அவர். மாறாக, ஒவ்வொரு வாய்ப்பையும் முழு அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி, கதாபாத்திரம் தோறும் தனது திறமையை நிரூபித்து, படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்.
வைபவின் நடிப்புப் பயணம் மிகவும் இளம் வயதிலேயே தொடங்கியது. 10 வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் தொடர்ந்து நடித்த அவர், மேடை அனுபவத்தின் மூலம் நடிப்பில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் நடனங்கள் அவரை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு பின்னர் நடிப்பின் மீதும், சினிமா கலை மீதும் ஆழமான ஆர்வமாக மாறியது. தனது திறமையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொழில்முறை நடிப்பு பயிற்சிகள் மற்றும் பல்வேறு பட்டறைகளில் பங்கேற்று, வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பே பல ஆண்டுகள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டார்.
தமிழ் திரைப்படங்களில் அவரது பயணம் ‘பேட்ட’, ‘கோமாளி’, ‘தாராள பிரபு’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களில் சிறிய ஆனால் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்கள் மூலம் தொடங்கியது. குறுகிய திரைநேரம் இருந்தபோதிலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரைநிலையால் கவனம் பெற்றார். பின்னர் ‘கதிர்’ திரைப்படத்தில் நடித்த துணைக் கதாபாத்திரம், குறைந்த காட்சிகளிலேயே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை அவருக்கு இருப்பதை மீண்டும் நிரூபித்தது.
அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பாராட்டுகளைப் பெற்ற ‘வதந்தி’ வெப் தொடர். சுமார் 500 பேரை கொண்ட திறந்த ஆடிஷனில் தேர்வாகி, ‘ஜோன்ஸ் துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மற்றும் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஹே லீலா’ வெப் தொடரிலும் நடித்ததன் மூலம் தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
சமீபத்தில் இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், பூர்ணிமா ரவி இணைந்து நடித்த ‘யெல்லோ’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தது அவரது கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இயல்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், எந்த கதாபாத்திரத்திற்கும் உண்மைத்தன்மையை வழங்கும் நடிகராக அவரது அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது.
திரைக்கு வெளியேயும் வைபவின் கலைப் பயணம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் பாடகரான அவர், குதிரைச் சவாரி மற்றும் சிலம்பம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இசை மற்றும் கதை சொல்லல் ஆகியவை திரைப்படத்தின் முக்கிய அங்கங்கள் என்ற ஆழமான புரிதலுடன் சினிமாவை அணுகி வருகிறார்.
அவரது உழைப்புக்கு அங்கீகாரமாக, ‘யெல்லோ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக 2025 ஆம் ஆண்டின் Anna அண்ணா யுனிவர்சிட்டி டெக்கோ ஃபஸ்ட்-டி விருதில் சிறந்த அறிமுக நாயகன் (Best Debut Hero) என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இது, அவரது திறமையை திரையுலகமும் ரசிகர்களும் தொடர்ந்து அங்கீகரித்து வருவதற்கான முக்கிய சான்றாக அமைந்துள்ளது.
ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகவுள்ள ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ மூலம், தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு உறுதியான இடத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறார் வைபவ் முருகேசன். நேர்மையான அணுகுமுறை, விடாமுயற்சி மற்றும் இயல்பான திரைநிலையால், புதிய தலைமுறை திறமையான நடிகர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக அவர் உருவெடுத்து வருகிறார்.
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெளியாக காத்திருக்கும் இந்த தருணத்தில், வைபவ் முருகேசனின் பயணம், பொறுமை, விடாமுயற்சி மற்றும் தனது கனவுகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை இணைந்தால்தான் நீடித்த வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படமும் ஒன்று. காரணம், இப்படத்தை விஷால் இயக்கி நடிப்பது தான். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா...” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத் என்கிற V7h “லிங்கா...” பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை கொண்டு மாஸான ராப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல், லிங்கா கதாபாத்திரத்தை விவரிக்கும் விதமாகவும், அந்த கதாபாத்திரத்தின் கெத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. வினோத் எழுதிய இப்பாடலை அவருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடியிருக்கிறார்.
இப்பாடல் இளைஞர்களிடம் வைரலான நிலையில், பாடல் குறித்தும், தனது இசைப் பயணம் குறித்தும் ராப் பாடகர் வினோத் கூறுகையில் , “நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே இசை பயின்று வருகிறேன். எனது பொழுதுபோக்கு என எல்லாமே இசை தான். இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன், 5 வீடியோ பாடல்களையும் வெளியிட்டிருக்கிறேன். ராப் பாடல் மட்டும் அல்ல அனைத்துவிதமான பாடல்களையும் பாடுவேன். என் முதல் சினிமா வாய்ப்பு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் தான். அந்த படத்தில் ஒரு பாடல் பாடினேன். அதன் பிறகு எனது உணவக தொழிலை கவனிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், தொடர்ந்து சினிமாவில் பாட முடியாமல் போய் விட்டது.
பல வருடங்களுக்கு முன்பு நான் விஷால் அண்ணாவை சந்தித்தித்தேன், அப்போது அவர் ”தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும், அதற்கான அனைத்து தகுதியும் உன்னிடம் இருக்கிறது, விட்டு விடாதே”, என்று கூறினார். இருந்தாலும் எனது தொழிலில் நான் அதிகம் கவனம் செலுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் தான் விஷால் அண்ணா என்னை ஒரு நாள் அழைத்து, லிங்கா பாடல் வாய்ப்பு கொடுத்தார். படத்தில் அவர் ஒரு டானாக உருவெடுப்பதை விவரிக்கும் அந்த பாடலின் ஐடியாவை என்னிடம் சொல்லி, உன்னால் முடியும் பண்ணு என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலை கேட்ட அவர், தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும், என்று கூறினார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாராட்டு தெரிவித்து, தொடர்ந்து பணியாற்றலாம், என்று கூறினார்.
சினிமாவை விட்டு நான் ஒதுங்கியிருந்தாலும், இசையை என்றுமே விடவில்லை. தொழிலில் நான் பிஸியாக இருந்தாலும், பல பாடல்களை எழுதி, டியூன் போட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன், அப்படி என்னிடம் சுமார் 40 பாடல்கள் இருக்கிறது. இந்த பாடல்களை கேட்டுவிட்டு தான் விஷால் அண்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடல்களை வெளியிடும் முயற்சிகளை விரைவில் மேற்கொள்ள இருக்கிறேன். அதேபோல், விஷால் அண்ணா நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பத்தையும் உருவாக்க இருக்கிறேன்.
லிங்கா பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி என்னுடைய திரை இசைப் பயணம் வேகமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதற்கு காரணமான விஷால் அண்ணாவுக்கு நன்றி.” என்றார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி வழங்கும் ‘லிங்கா’ படத்தை பி.சுரேஷ், ஆர்.பி.ஜீவன் செளத்ரி, ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் தயாரிக்கின்றனர். ரவி அரசு கதை எழுத, திரைக்கதை எழுதி விஷால் இயக்குகிறார். பொன் பார்த்திபன் மற்றும் விஷால் வசனம் எழுதுகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கின்றனர். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏகாதசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை கும்பலை வைத்து கொலை செய்கிறார். அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார். அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில் இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா? என்பதே ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக்கதை.
ஆர்யா தனது வழக்கமான மாஸ் ஹீரோ பாணியைத் தாண்டி, அமைதியான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் அச்சுறுத்தலான, வித்தியாசமான தோற்றத்தில் வரும் இந்திரன்ஸ், ஒட்டுமொத்தப் படத்திற்கும் மிகப்பெரும் பலமாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார். முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத், சுனில், விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற வேடங்களில் நடத்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் பரபரப்பான மற்றும் சீரியஸான காட்சிகளை நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் திரையில் கடத்தியுள்ளது. இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை நகரத்து சென்றிருக்கும் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
ஆர்யா மற்றும் இந்திரன்ஸின் சிறந்த நடிப்புக்காகவும், அழுத்தமான சில அரசியல் காட்சிகளுக்காகவும் அனந்தன் காடு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
The highly anticipated first look poster of the upcoming comedy-commercial entertainer "Marriage Story" has been officially released. Produced under the banner of Reel Petti Productions, the film is directed by filmmaker Sunil Dev.
"Marriage Story" marks the exciting reunion of director Sunil Dev and actor S.P. Siddarth, whose previous thriller collaboration, *Athomugam* (2024), received critical acclaim and a warm reception from the audience.
Shifting gears from their previous outing, the duo is back with a complete family entertainer packed with friendship, romance, and non-stop comedy.
The film features a dynamic ensemble cast bringing this commercial celebration to life: Lead Actors include S.P. Siddarth, Shabana Shahjahan Aryan, and Deepika Venkatachalam. The Supporting Cast has Veteran actors Nassar, Nizhalgal Ravi, Aruldoss, and Puduvai Poobalan in pivotal roles.
"Marriage Story" boasts a strong technical team ensuring a high-quality cinematic experience:
Technical Team:
Director: Sunil Dev
Cinematography: Tamil Selvan
Music Director: Deepan Chakravarthy
Editor: Tamil Arasan
Stunt Choreography: Miracle Michael
Production House: Reel Petti Productions
With "Athomugam" proving to be a success, the reunion of Sunil Dev and S.P. Siddarth has already generated significant buzz in the trade circuits. 'Marriage Story' promises to be a wholesome, theatrical laugh-riot for audiences of all ages.
With post-production work moving at a brisk pace, the team will soon announce the teaser and audio release dates.








