சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. 

 

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..


எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.


ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் 


தயாரிப்பாளர் S.லஷ்மன்குமார் பேசும்போது,


இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. முழுமையான திருப்தி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதை எங்களால் எடுக்க முடிந்ததற்காக எங்களுடன் கைகோர்த்த மேவரிக் மூவிஸ்க்கு நன்றி. ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எங்களது பார்ட்னர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.


ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசும்போது,


“கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்கள் என்று சொல்வது போல, இந்த படத்தில் பணியாற்றியவர்கள் கொடுத்த காசுக்கு மேல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல ஸ்டைலிஷாக இருந்தாலும் இங்கே எல்லோருமே ஒரு அடிமட்ட தொழிலாளி போலத்தான் உழைத்தோம். அஜர்பைஜான் உட்பட எங்களுடைய படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முழுவதுமே பஞ்சபூதங்கள் ஆக்ரோசமாக வந்தன. நானும் இயக்குநர் மனுவும் ரூம் போட்டு எல்லாம் பெரிதாக விவாதிக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரே அலைவரிசை இருப்பதால் பணியாற்றுவது எளிதாக இருக்கும்.. சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியார் ரொம்பவே அசால்டாக சண்டைக்  காட்சிகளில் நடித்தார்” என்று கூறினார்.


இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேசும்போது,


“ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு பின்னணி இசை அமைப்பது ரொம்ப எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இந்தப் படத்திற்காக பின்னணி இசையில் அடுத்த கட்டமாக ஒன்றை முயற்சி செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.


படத்தொகுப்பாளர் பிரசன்னா பேசும்போது,


“இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.


நடிகை ரைசா வில்சன் பேசும்போது,


“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக என்னை தேர்வு செய்வதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மனு ஆனந்த் ஆகியோருக்கு நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான படம். சீரியசான டாப்பிக்காகவும் அறிவார்ந்ததாகவும் இந்தப் படம் இருக்கிறது. இது போன்ற படம் நமக்குத்  தேவையான ஒன்று. இதுபோன்ற கதைகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.


நடிகை அதுல்யா ரவி பேசும்போது,


“எப்போதுமே நாம் ஒரே மாதிரி படங்கள் பண்ணும்போது இவர்களுக்கு இதுதான் வரும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதை உடைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு இயக்குநர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் என்னை நம்பியதற்காக இயக்குநர் மனு ஆனந்திற்கு நன்றி. வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததுடன் இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் கொடுத்தார். இதில் நடித்த எல்லோருடனும் எனக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவங்களை கற்பதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. திபு இசையில் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த பாடல் இப்போது வரை எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. மிகப்பெரிய தியேட்டர் அனுபவம் கொடுக்கும் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.


நடிகை அனகா பேசும்போது,


“இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்து இருந்ததால் இந்த தருணம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. இதில் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்  கலைஞர்களுடன் பணியாற்றியதில் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்தது கனவு நனவான தருணமாக மாறியது” என்று கூறினார்.


நடிகர் சரத்குமார் பேசும்போது,


“‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இப்போது அவசியமான ஒன்று. உண்மைச்  சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதன் கதையை மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது என்னை நடிக்க வைப்பதற்காக ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இதற்கான ஆராய்ச்சி பேப்பர்களை பக்காவாக வைத்திருந்தார். அதில் இரண்டு மூன்று பக்கங்களை பார்த்ததுமே அவர் மிகப்பெரிய உழைப்பைக்  கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது.  உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிஸ்டர் எக்ஸ் என்னுடைய 172 வது படம். இத்தனை வருடங்களில் தாத்தா வேடம் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இதில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். எனக்கு வெள்ளை முடி, வெள்ளைத் தாடியைக் கொடுத்து இயக்குநர் தன் ஆசையைத்  தீர்த்துக் கொண்டார். 2023ல் இந்தப் படத்தைத்  தொடங்கினாலும் இதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக கொண்டு வந்ததற்கு மனு ஆனந்த்தைப்  பாராட்ட வேண்டும். தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் இருவருமே மிகுந்த அளவு மெனக்கெடலை தந்திருக்கிறார்கள். கௌதம் இந்த படத்தில் வித்தியாசமாகத்  தெரிவார். படத்தில் எங்கள் அனைவரையும் இயக்கியிருப்பதால் மஞ்சு வாரியரை மேம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா உள்ளிட்ட உரிய கௌரவங்கள் கிடைக்கின்றன. நமது நாட்டைப்  பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்குக் கூட நான் யார் என்று உண்மையைச் சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால் இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் மனு ஆனந்திற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதை பட்டை தீட்டுவதற்காக  இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.. இந்த சமயத்தில் தான் துரந்தர் வெளியாகி சரித்திரம் படைத்தது. இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். படம் பார்த்து எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றால் சாதாரண ரசிகனுக்கு எந்த அளவிற்கு அனுபவமாக இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியானால் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குக்கு செல்வார்கள்” என்று கூறினார்.


நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது, 


“இந்த ஒரு தருணத்திற்காக தான் மாதக்கணக்கில் நாங்கள் அனைவரும் காத்துக்  கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என பின்னாளில் ஆர்யா சொல்லி எனக்கு தெரிய வந்தது. மனு இந்தக்  கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில  சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார்.  எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.


நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,


“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக்  கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக்  கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்று கூறினார்.


இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,


“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ்  படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.


இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல  பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். 


இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார், 


இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப்  படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதையை கேட்க ஆரம்பித்தார், ஒருவேளை அவருக்கு கதையைக் கேட்டு தூக்கம் வருகிறதோ என்று கூட நான் நினைத்தேன், அதற்கேற்ற மாதிரி அவரும் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்றார், எனது குழுவினரிடம் கூட அவர் வருவாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறினேன். ஆனால் ஆச்சரியமாக ஒரு வாரத்திலேயே அவர் தான் நடிப்பதாக சம்மதித்தார்.


சரத்குமார் சார் எப்போதுமே யூத் தான் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி வேறு ஒரு லுக்கில் காட்டலாம் என்பது ஒரு சவால் தான். ராஜஸ்தானில் பாலைவனத்தில் நல்ல கொளுத்தும் வெயிலில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய சண்டைக் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளைப்  படமாக்கினோம். சரத் சார் ரொம்பவே கூலாக இருந்தார். அந்த சண்டைக் கலைஞர்கள் தான் ரொம்பவே அந்த சூழலுக்கு சிரமப்பட்டார்கள். அதனால் அவருடைய வயது என்பது ஒரு பொருட்டே அல்ல.


பிரசன்னா ரொம்பவே விறுவிறுப்பாக இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக பலர் இந்த படத்தை பார்த்தார்கள். அதில் பலரும் என்னிடம் சொன்னது திபுவின் இசை பிரம்மாதம் என்பதுதான். படத்தின் கடைசி முக்கால் மணி நேரத்தை நீங்கள் ரொம்பவே ரசித்து அனுபவிப்பீர்கள் என்றால் அதற்கு திபுவின் பின்னணி இசை தான் முக்கிய காரணமாக இருக்கும். ஒரு பயங்கரமான படம், இதுவரை நீங்கள் பார்த்திராத படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மைச்  சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். துரந்தரை மிஞ்சிவிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பைசா வசூல் கேரண்டி என்று உறுதியாக சொல்வேன்” என்று கூறினார்,


நாயகன் ஆர்யா பேசும்போது,


“கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத்  தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன் தான், இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்று சொல்லலாம். இதன் கதையில் அவர் கடினமாக உழைத்து உள்ளார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச்  சென்றபோது கூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.. இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ்.. இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதே எடிட்டர் பிரசன்னா தான். படத்தின் முதல் காப்பி பார்ப்பது அவர்தான். நான் இயக்குநரிடம் கேட்பேன் பிரசன்னா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா அந்த மாதிரி ஒரு சிறப்பான எடிட்டர் நமக்குத் தேவை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன் சார் தான். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப்  படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார். 


எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்து பிறகு கௌதமை தான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் மே மாத வெயிலிலும் அதை பெரிது படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.


மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள் என்று சொன்னால் என் கேரக்டர் சிரிக்காதே சீரியஸாகத் தானே இருக்கும் என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார் நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்: என்று கூறினார்.


வரும் ஏப்-17ல் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமாருடன் இணைந்து  தயாரித்துள்ளார்

வெங்கடேஷ் .

 

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


 அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.


இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.


“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் அட்லீ கூறியதாவது..,

“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”


சன் பிக்சர்ஸ் Sun Pictures நிறுவனம்  கூறியதாவது..,

“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”


இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.


“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.

 

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.


ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

 

படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.


இந்நிகழ்வினில்..


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,


இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.


இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.


இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.


முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.


இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials- Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.



ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,


“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.


விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன —

96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை.

அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.


இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.


ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,


இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.


நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.


பல்லவி பேசியதாவது..,


“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”


நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,


 விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.


அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.


நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,


“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.


இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.



நடிகை பார்வதி பேசியதாவது..,


“எல்லாருக்கும் வணக்கம்.


நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.

இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.


ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,


இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.


இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.



தொழில் நுட்ப குழு


தயாரிப்பு  - ஜியோ ஹாட்ஸ்டார், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

இயக்குநர்கள் -  B. அஜித் குமார், M. மணிகண்டன்

கதை / திரைக்கதை - M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்

நிர்வாக தயாரிப்பாளர் (Vijay Sethupathi Productions)  – VR குமார்,  S சந்திரசேகரன்

ஒளிப்பதிவு -  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்

எடிட்டர் -  B. அஜித் குமார்

இசையமைப்பாளர் -  ராஜேஷ் முருகேசன்

கலை இயக்குநர் - ஜாக்கி, சாபு மோகன்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

 

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.   


சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள 'செல்லமே' மற்றும் 'ஆனந்த தாண்டவம்' போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சமீபத்தில்,  இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 


டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர்கள்: ராணா, ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்.  


தொழில்நுட்பக்குழு விவரம்: 


எழுத்து, இயக்கம்: Ar. காந்தி கிருஷ்ணா,

தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்,

தயாரிப்பு பேனர்: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்,

இசை: ஜிவி பிரகாஷ்,

ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வம்



S.J. Suryah, who entered into a love marriage, faced failure in his marital life; driven by the desire to ensure that no other couple would ever have to endure such a plight, he dedicated years of effort to develop an application called ‘Love Insurance Kompany’ (LIK) in the year 2040.
Through this app, users can not only select a compatible romantic partner and keep track of each other's whereabouts and activities, but also monitor them via camera around the clock. Consequently, if either partner in a relationship is unfaithful, this 'Lik' app not only detects it but also, should the couple decide to separate, facilitates the settlement of financial compensation to bring about the breakup.

As the usage of the 'Lik' app—which has garnered immense popularity not only among lovers but also among couples—continues to rise day by day, its user Krithi Shetty, having grown up under the guidance of smartphones since childhood, is actively striving to gain a large following on social media.
 
Seeman has established and runs a place called "Green World"—an environment devoid of technological amenities—with the aim of reforming individuals who commit errors inadvertently through the use of smartphones. Following his father's guidance, his son, Pradeep Ranganathan, lives a life free from the use of mobile phones.

Meanwhile, Pradeep Ranganathan, who falls in love with Krithi Shetty at first sight, secretly buys a mobile phone for her without his father's knowledge; using this device, he connects with her via the 'Lik' app and strikes up a friendship. Just as their friendship blossoms into romance, Krithi Shetty abruptly breaks off the relationship and parts ways with Pradeep, misled by erroneous information provided by the very same app that had initially brought them together.

Enraged by this, Pradeep Ranganathan decides to prove that the 'Lik' app—which had undermined the love for Krithi Shetty residing in his heart through misleading information—is a fake.
 
However, S.J. Suryah—who maintains that the data provided by his 'Lik' app is accurate—issues a challenge to Pradeep Ranganathan: if Pradeep can make Krithi Shetty fall in love with him within 30 days, Suryah will admit that his app is flawed; conversely, if he fails to do so, Pradeep must acknowledge the app's superiority and proclaim it to the world. Did Pradeep Ranganathan, having accepted this challenge, emerge victorious or not? The story of 'Lik' (Love Insurance Company) unfolds as a narrative that highlights the fundamental difference between data-driven technology and genuine human emotion.

As usual, Pradeep Ranganathan has lent immense strength to the simple character he portrays through his performance, infused with his signature mannerisms.
 Even though their romance was "love at first sight"—and despite the fact that the scenes depicting his affection for his beloved often played out humorously—he truly excelled in those moments where he conveyed the depth of his love purely through the expression in his eyes.

 Beyond delivering stellar performances in scenes depicting the pain of love and the confident struggle for it, he handles these moments with a commanding flair—taking his fans into a celebratory frenzy.

 Krithi Shetty, who plays the female lead, looks stunning even while sporting heavy makeup; in fact, it suits her beautifully. Her makeup and costume design make her resemble a real-life Barbie doll, captivating the audience. Delivering a commendable performance, Krithi Shetty has eloquently conveyed—through the expressive power of her eyes—both the modern obsession with social media and the deep yearning for a mother's affection.

 As the founder of the 'Lik' app—a character who serves as an antagonist to human love and emotions—S.J. Suryah has exercised restraint in his signature style, delivering precisely the performance required for the role and thereby adding strength to the film. His efforts to avert the threats facing his app, coupled with his exuberant demeanor while celebrating his success, captivate the audience with their entertaining appeal.

 Seeman, playing the character 'Anbu Kadal'—the father of Pradeep Ranganathan—captures a place in the hearts of the audience by expressing his own genuine emotions through his performance. The advice he offers and the changes he envisions serve to demonstrate to the public that these are, in fact, the pathways to safeguarding the inherent greatness of humanity.

While Yogi Babu has showcased a distinct change in his physical appearance, he displays no deviation in his acting or comedic style. Gouri Kishan, appearing in glamorous attire for the first time, features in a role that fails to leave a lasting impression. Sha Ra, playing the role of Pradeep Ranganathan's friend, has executed the task assigned to him flawlessly. Malavika—who plays the female lead's mother—along with Anandaraj and Sunil Reddy, also make brief appearances on screen.

Ravi Varman's cinematography effectively brings the film's production values to the screen. Each scene is visualized against a grand backdrop, offering a visual feast for the eyes.

Set to Anirudh's music, the songs evoke a sense of déjà vu and drift by without leaving a significant impact. While the background score—infused with commercial elements—complements the colorful visuals, it ultimately fails to linger in the mind.

Editor Pradeep E. Raghav has edited the visuals in such a way that the audience can easily grasp the technological advancements depicted on screen.

 Art Director Kannan S, Production Designer Muthuraj Thangraj, and Costume Designers Praveen Raja, Rinibanth, Jagat Leeri India, and Shangrihan K.S. have created a sense of magic in the mind through the way they have brought the advancements and transformations of the future to the screen.

Writer-director Vignesh Shivan has attempted to answer the questions—"Can technologies that grant whatever is asked of them truly deliver genuine love?" or "Can one discern true love within human beings through such means?"—not merely by crafting a commercial and colorful film, but by endeavoring to convey these ideas with genuine romantic sensibility.

 Although Vignesh Shivan's technologically infused romantic concept bears a resemblance to a Tamil web series released previously—and while the screenplay and the technological advancements employed in its visual presentation demonstrate the truth that a story can be retold in myriad ways—it nonetheless raises the question in one's mind: Was the core premise plagiarized?


Director Vignesh Shivan—who narrates the pain of romantic separation and the strategies for achieving success in love in a manner that appeals specifically to the youth, and against the backdrop of technological advancements—has paid excessive attention to ensuring that the visuals are colorful, yet has somewhat faltered in the screenplay. Consequently, although the film meanders in many places and leaves the audience feeling weary, the energetic and refreshing performance of the protagonist, Pradeep Ranganathan, successfully rescues the movie from its narrative sluggishness.
 
Although Director Vignesh Shivan's screenplay and storytelling adversely affected the film in several places, it is the protagonist, Pradeep Ranganathan, alone who salvaged the movie from these flaws and ensured that the audience enjoyed it. Had he not been in this film, the result would have been akin to a meal completely devoid of salt.

Verdict : Pradeep Ranganathan has once again proven his talent by delivering a winner with the "𝗟𝗜𝗞- 𝗟𝗼𝘃𝗲 𝗜𝗻𝘀𝘂𝗿𝗮𝗻𝗰𝗲 𝗞𝗼𝗺𝗽𝗮𝗻𝘆" App.

Rating: 4/5

- NithyaSana

Cast:
Natty Natraj
Thambi Ramaiah
M. S. Bhaskar
Ilavarasu
Shrrita Rao
Chandini Tamilarasan
Yashika Anand
Redin Kingsley

Crew:
Production Banner: Kannan Ravi Groups
Producer: Kannan Ravi
Co-Producers: Deepak Ravi
Director: Umapathy S. Ramaiah
Music Director: Darbuka Siva
Director of Photography: P. G. Muthiah
Editor: Aral R Thangam
Head of Operations: Srinath Viswanathan
Audiography: Tapas Nayak
Art Director: N. K. Rahul
Choreographers: Sandy,Pravin G
Stunt Director: Mahesh Mathew
Costume Designer: Navaa Rambo Rajkumar
Lyricists:
Karthik Netha
Mohan Rajan
Vignesh Ramakrishna
Colorist: G. S. Muthu
DI & VFX: White Lotus
VFX Supervisor: Jeyaprasath
Recordist: K. Jagan
Executive Producer: Umapathy Raja
PRO: Sathish AIM
Marketing & Promotion: K. V. Mothi
Publicity Design: Thandora

Natti Natraj, hailing from a northern state, came to Chennai in search of a livelihood but unexpectedly ended up becoming an actor. His debut film not only garnered a warm reception from the public but also secured him a place in people's hearts as the "next M.G.R."
 Zamindar Thambi Ramaiah—an ardent fan of M.G.R.—not only predicts that Natty will fill M.G.R.'s shoes, but also extends every possible assistance to him, actively dedicating himself to the journey of elevating him to the status of a top-tier actor in the film industry.
 
Thambi Ramaiah not only compels Natti—an actor rising to the pinnacle of cinematic stardom—to engage in political discourse and launch a new political party, but also instills in his mind the conviction that he will be the Chief Minister of Tamil Nadu in 2026, thereby setting him on a political trajectory. However, a sudden decision made by Natti Natraj subsequently triggers a massive shift and profound impact within the political landscape. What exactly is this decision? ‘TN 2026’ answers this question, presenting the narrative not merely as a political satire, but also as a witty send-up of the political journeys undertaken by film stars.

Director Umapathy Ramaiah—who humorously and satirically highlights the truth that, despite many Tamil film stars venturing into the political arena following M.G.R., none have managed to replicate his political stature as they did his cinematic one—has crafted a screenplay that weaves together the monumental cinematic success, romantic life, and marital tribulations of a superstar hailing from another state, alongside the abrupt conclusion of his nascent political journey. Furthermore, he has narrated this tale in an engaging manner, drawing parallels to the political trajectory of a contemporary superstar and incorporating visual aesthetics inspired by his persona.

Natty Natraj, starring as the protagonist, shines on screen as a true star in the role of Gulkand Kumar. Having arrived in Tamil Nadu in search of a livelihood—and eventually reaching the pinnacle of success in the hearts of the audience as an actor precisely because of his mispronunciation of Tamil—his performance and body language do complete justice to his character.
 
Despite his status as a *Zamindar*, Thambi Ramaiah—who journeys alongside Kulkanth Kumar as both his servant and political mentor—sports a look and persona that are reminiscent of the fan club president of a top-tier actor; furthermore, his acting style and strategic maneuvers call to mind the actions of a dedicated foot soldier serving a certain actor who is currently swirling through the landscape of Tamil Nadu politics like a whirlwind.

Although M.S. Bhaskar and Ilavarasu went about as politicians traveling alongside a "golden star," they done their job good.
 
Sherita Rao—who plays the female lead—along with Chandini Tamilarasan, Yashika Aannand, and Redin Kingsley, have contributed effectively to the flow of the screenplay.

Cinematographer P.G. Muthiah has distinguished the scenes set in earlier eras—including the song sequences—through his use of color; conversely, he has filmed the contemporary segments with great simplicity and naturalism, utilizing a restrained color palette that aligns seamlessly with the political backdrop.
 
Director Umapathy Ramaiah has not only dispelled the lingering yearning for a worthy political satire—a void left unfilled since the release of *Amaithipadai*—but has also thoroughly entertained audiences by wittily exposing the machinations of the self-serving individuals lurking behind the political ambitions and lust for power of contemporary actors. By delivering an honest political film right in the midst of the election season, he has created significant ripples across the landscape of Tamil Nadu politics.

Verdict : "𝗧𝗡 𝟮𝟬𝟮𝟲 -𝗧𝗵𝗮𝗻𝗴𝗮 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝘁𝗵𝗶𝗿𝗮𝗺" "Glowing Brighter"

Rating : 4/5

- NithyaSana

Cast:
 
Subash Selvam 
Munishkanth
Rajesh Madhavan
Gowthami
Vinsu Rache
Savithri
Amrudha
Abdul Lee Maruthupandiyan Rakesh Ushar Vigneshwar Arunkumar Pavumba Chiththirasenan

Crew

Writer & Director: Ameen Barif
DOP: Neeraj Revi
Editor: Arjune Babu
Co writer: Akash Chandramohan
Songs: Arunraj
Background score & Trailer music : Vibin Baskar
Production Designer: Hamza Vallithode
Sound Design: Sync Cinema
Sound Mix: Aravind Menon
DI: B2H
Colorist: Sivasankar.V
VFX: Vishwaa.Fx
Producer: Sreenidhi Sagar
Production: Rise East Entertainment

 Munishkanth, who serves as a Deputy Jail Superintendent, firmly believes that the primary function of a prison is the reformation of criminals. Consequently, having established a small library within the prison, he also have his own authored books to inmates and encourages them to read, but also seeks solutions to criminal issues within that book he himself reads. Subash Selvam serves alongside him as a prison guard.

Amidst this situation, the money contained in the temple offertory box located within the prison is stolen. Constable Subash Selvam finds himself under immense pressure to return the money to its original place before news of the prison robbery leaks out. Consequently, he decides to take out a bank loan and deposit that money into the temple offertory box. Acting on this plan, he secures the loan; however, while he is keeping the money at his home, the very same offertory thief strikes again.

 Subash Selvam, having lost the money he had borrowed, finds himself in a helpless predicament: despite having identified the thief, he is powerless to take any action against him. Determined to somehow apprehend the thief—armed with concrete evidence—and recover the stolen funds, Subash Selvam sets out on a mission; *Kaakkee Circus * tells the story of how he accomplishes this, unfolding through a series of unexpected twists and comedic moments.

With three central characters—Prison Superintendent Munishkanth, Constable Subash Selvam, and thief Rajesh Madhavan—and the prison temple’s donation box designed as a pivotal character in its own right, Director Ameen Barif drives the narrative forward briskly across all chapters, weaving an engaging storyline infused with just the right blend of humor and intrigue.

 Munishkanth and Subash Selvam, who played the protagonists of the story, have both performed in a manner that does full justice to their respective characters.

By eschewing his signature body language and comedic style to deliver precisely what the role demanded, Munishkanth has not only lent strength to the character but also distinguished himself as an actor.

 Subash Selvam, who plays the role of a prison guard, fits the character perfectly; although his performance leans towards a comedic style, he delivers a commanding presence through his impressive action sequences. While the scenes involving the capture of the thief unfold humorously, Subash's speed and intensity transcend the comedy, evoking the distinct feel of an action thriller.

Rajesh Madhavan, who plays the role of a thief, comes across as a remarkably simple man; yet, the fact that he steals for the sake of fame rather than money—and manages to get away with it—significantly heightens the intrigue of the series.

 Vinsu Rache and Gowthami, who played the female leads, have performed their roles flawlessly.

All the actors starring in the series—including Savithri, Amrudha, Abdul Lee, Maruthupandian, Rakesh, Ushar Vigneshwar, and Arunkumar have proven to be fitting choices for their respective roles, thereby adding significant strength to the production.

The work of cinematographer Neeraj Revi, composers Xavier and Vibin Baskar, and editor Arjune Babu elevates the quality of the series, allowing viewers to journey along with the story.

 Director Ameen Barif, having crafted a screenplay around a simple core concept enriched with numerous subplots, ingeniously designs the temple offertory box as a distinct character; complete with its own backstory, he steers each episode forward in a highly engaging manner.

By centering on the question—"How is a theft possible inside a prison?"—and by crafting a scenario in which the thief manages to evade the police despite their identity and background being known, the series heightens its intrigue; moreover, it compels viewers to watch subsequent episodes with eager anticipation, wondering when and how the thief will finally be caught.

 Director Ameen Parib who has crafted Munishkanth’s character in a manner that encourages the healthy habit of reading has simultaneously delivered a humorous lesson that leaves the audience both laughing and reflecting: that books alone do not constitute life, and that certain situations must be handled with realism.

While the first four chapters—centered on the theft of the offering box at the Kannagi temple located within the prison—unfold with a touch of humor, the narrative moves at a brisk pace, driven by scenes filled with suspense and excitement. Even though the identity of the thief and his motive for stealing from the prison temple's offering box are known, the question of *how* he will be apprehended propels the subsequent three chapters forward; filled with unexpected twists and unique comedic sequences, this segment makes for a thoroughly enjoyable read.

Verdict : Kaakkee Circus Housefull with Fun and Excitement.

Rating : 4/5

- NithyaSana

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  


ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில்,


படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்


எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  


இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.


இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.


இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ


மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.


இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.


ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி


ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.


இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.


ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை


பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.


கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,


இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.


குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.



ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.


விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும்


எழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.


இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும்


என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.


இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்


கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.


இயக்குநர் ராம் பேசியதாவது..,  


நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.


விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள்


சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.


தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை


பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.


அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.


இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும்


விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.


எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.


இப்போது நாம் யாரையும் பற்றி


தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,


பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.


தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.


நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  


இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.


இந்த படத்தின் கதையை நான் 2012,


2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011-12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.


முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான


காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.


அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள்


சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.


கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.



இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு


அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.


நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  


முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும்


ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு


செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.


ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று


எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.


கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த


கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.


எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.


மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.


எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த


நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.



இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  


ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.


இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக


நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.


தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.



விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.


விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர்


தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.


இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால்


நான் வராமல் இருக்க முடியாது.


விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.


இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.


சர்வதேச அளவுக்கு போவார்.


பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.


எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு


முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.


அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும்


திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.



நடிகை மாளவிகா பேசியதாவது..,  


 என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான்


மிகவும் நன்றியுடன் இருப்பேன்


இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.


பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள்


மிகவும் பெரியவை.


இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.



நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  


நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.


இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக


கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது.

பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!




நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  


நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.


அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.


அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம்.


இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.


அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.



அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.


ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.


முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம்


பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.


எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று.


அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம்


கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.


அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு


முக்கியமான பங்கு இருக்கிறது.

இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.


சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.


அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே


தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.


மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.



இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.


என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம்


என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.




நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  


பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர்


இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன்.


இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.


விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய


கற்றுக்கொண்டேன்.


எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.


விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.


“தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத்


அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.


ஏப்ரல் 10 ரிலீஸ் என்று


சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.


பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க


ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.


கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.


எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று


கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.



இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  


இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த


நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.


நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று


தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல்


10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.


இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை,


என் மனதில் வைத்திருந்த விஷயம்.


இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு-வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம்.


கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.


இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.


பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை


சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.



அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை


செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.


அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது


சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.


பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன்


— மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட


நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.


தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான


ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த


திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.


ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும்


ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.

இரண்டு வானங்கள், ஒரே பார்வை, பேரார்வத்தோடு இயங்கும் உலகம் என இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகிறது ‘இரண்டு வானம்’.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன்,
இயக்கம்: ராம்குமார்,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு: தினேஷ் கே. பாபு,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை இயக்கம்: கோபி ஆனந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ஏ. கீர்த்தி வாசன்,
ஆக்ஷன்: விக்கி,
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஹரிஹர சுதன்.
கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது. 

விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், "கவிப்பேரரசு" வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏஎஸ், தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ், நடிகர்கள் சந்தானம், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஏகன், பிரிகடா, கராத்தே ராஜா, கிங்காங், இயக்குநர்கள் ஆர்வி.உதயகுமார், கதிர், பேரரசு, எழில், வசந்தபாலன், கரு.பழனியப்பன், செழியன், நம்பி, வீ.மா.செந்தில்குமார், அசோக் பாலாஜி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், எடிட்டர் ராஜா முகமது தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், சிவசக்தி பாண்டியன், மகிழ்ச்சி த.மணிவண்ணன், பம்மல் சரவணராஜா, நிர்மல் சரவணராஜா, குறள் அமுதன், சுந்தரவரதன், ஊடகவியலாளர்கள் ஏகலைவன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சமூக போராளி அற்புதம் அம்மாள், அவரது மகன் பேரறிவாளன், புலவர் இரத்தினவேலன், ஆவல் கணேசன் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களும் சமூக பேராளுமைகளும் கலந்துகொண்டு மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்தினர்.

சிறப்பு விருந்தினர்களை இயக்குநர் வ.கௌதமன், தொழிலதிபர் க.கண்ணன், தயாரிப்பாளர் த.மணிவண்ணன் மற்றும் வளர்ந்து வரும் நடிகரான வ.கௌதமனின் மகன் கெள.தமிழழகன் உள்ளிட்டோர் வரவேற்று மகிழ்ந்தனர்.

அரங்கிற்குள் வரும் வழிநெடுக சங்ககாலம் தொட்டு இன்று வரையிலான மூலவன் முருகன், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, கரிகாலன், இராஜராஜ சோழன், மற்றும் தமிழ்த் தேசிய வழிகாட்டிகளான மேதகு பிரபாகரன் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், கௌதமனின் தந்தையும் தமிழ்த் தேசிய போராளியுமான தோழர் வடமலை, பாரதிதாசன், திருவிக, மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் வரையிலான உணர்வுமிக்க பதாகைகளும் வரிசைகட்டி வரவேற்றது வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

Pageviews