தமிழ் சினிமாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், வெள்ளகுதிர திரைப்படம் அந்த வரிசையில் தனித்துவமான முயற்சியாக திகழ்கிறது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், மலைகிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சமூக அரசியல் பிரச்சனைகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. 


தயாரிப்பாளர் ஹரிஷ் ஓரி அர்த்தனாரி.....


கதையின் நாயகன்.. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற

கூத்துப்பட்டறையில் 13 வருடங்கள் நாடக செயல் செய்த அனுபவ நடிக கலைஞன்.... ஹரிஷ் ஓரி...


ஹரிஷ் ஓரியின் நடிப்பு செயல்வடிவம் காட்சிகளில் தெரிகின்றன....


கதாநாயகி அபிராமி போஸ்... மற்றும் அனைத்து நடிகர்களும் நவீன நாடக செயல்பாட்டாளர்கள்..


கடன் சுமை மற்றும் சூழ்நிலை காரணமாக நகரத்தில் ஒரு தவறைச் செய்து விடும் ஹீரோ ஹரிஷ் ஓரி, தனது மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த மலைகிராமத்திற்கு தஞ்சம் அடைகிறார். ஆனால் அந்த கிராமமே ஒரு வேறு நிதர்சனத்தை எதிர்கொண்டு கொண்டிருக்கிறது; பிழைப்புக்காக மக்கள் மலைகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையைக் கையாளும் போது, முன்னாள் ஊராட்சி தலைவர் உதிரி விஜயகுமார் மக்களின் நிலங்களை அபகரிக்க திட்டமிடுகிறார்.


இதற்கிடையில், வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள ஹீரோவும், அவரது நண்பர்களும் ‘மூலிகை ரசம்’ என்ற சாராயத்தை தயாரித்து ரகசியமாக விற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். இந்த முயற்சி அவர்களின் வாழ்க்கையில் புதிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. போலீஸ் சிக்கல்கள், சமூக அழுத்தங்கள், மற்றும் மனித உறவுகளின் மோதல்கள் ஆகியவை கதையை முன்னெடுக்கின்றன. இதே நேரத்தில், ஹீரோவின் மனைவியாக வரும் அபிராமி போஸ் மற்றும் தற்போதைய ஊராட்சி தலைவராக இருக்கும் மெலோடி, அந்த கிராம மக்களின் உரிமைகளை காப்பாற்ற போராடுகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அந்த போராட்டத்தின் விளைவுகள் கதைக்கு வலுவான உணர்ச்சி அடுக்குகளை சேர்க்கின்றன.


இந்த படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை ஒரு காட்சிப் பதிவாக காட்டுகிறது என்பதே அதன் மிகப்பெரிய பலம். அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள், எவ்வாறு தங்கள் நிலங்களை இழக்கின்றனர், அடிப்படை வசதிகளுக்காக எப்படி போராடுகின்றனர் என்பதனை மிக இயல்பாக பதிவு செய்கிறது. “மலைகிராமங்கள் அழியக்கூடாது” என்ற ஒரு வலுவான கருத்து முழு படத்திலும் ஓடிக்கொண்டே இருக்கும். காட்சிகள் சினிமா பாணியில் இல்லாமல், நிஜ வாழ்க்கையினை போல தோன்றுவது இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி. ரெஜின் ரோஸ், ஜீவிதா உள்ளிட்ட பலர் தங்கள் கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, கதை சொல்லலுக்கு நம்பகத்தன்மையை வழங்குகிறார்கள்.


தொழில்நுட்ப ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்கது. பரத் ஆசீவகன் அமைத்த இசை மிக மென்மையாக காட்சிகளுடன் கலக்கிறது. ராம்தேவ் ஒளிப்பதிவு மலைகளின் இயற்கை அழகை நுட்பமாகப் பதிவு செய்து, படத்துக்கு ஒரு குளுமையான காட்சித் தன்மையை வழங்குகிறது. வணிக அம்சங்கள், அதாவது சண்டை, காமெடி, பாடல்கள் போன்றவை குறைவாக இருந்தாலும், அது கதையின் உண்மைத்தன்மையை குறைக்காமல், மாறாக அதனை மேலும் வலுப்படுத்துகிறது. கதை சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், அதன் உள்ளடக்கமும் உணர்ச்சியும் பார்வையாளர்களின் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


மொத்தத்தில், “வெள்ள குதிர” ஒரு சாதாரண திரைப்படம் அல்ல; இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பேசும் ஒரு உணர்ச்சிமிக்க பதிவு. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள், மனித உறவுகள் ஆகியவற்றை நிதானமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்தும் இந்த படம், புதிய முயற்சியாக நினைவில் நிற்கிறது.


இறுதியாக, இந்த அழகான மற்றும் அர்த்தமுள்ள திரைப்படத்தை தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில்  Amazon Prime Video-வில் பார்த்து மகிழுங்கள்.


KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்... 

ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., 
நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி. 

படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது.., 
இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி. 

நடிகை ஷிரித்தா பேசியதாவது.., 
இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது.

இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.
நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 

நடிகர் இளவரசு பேசியதாவது.., 
ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.

நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி. 

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது.., 
“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.
நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது.., 
இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி. 

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது.., 
இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது.., 
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.., 
இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.

எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.

நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது.., 
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.
“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.

என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
நடிகர் சாம்ஸ் பேசியதாவது.., 
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.
அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.

உமாபதி ஒரு மல்டி-டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது.., 
சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.

இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது.., 
இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.

இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது.., 
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.

இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது.., 
முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்-இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள். 

இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.

நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.

தம்பி ராமையா பேசியதாவது.., 
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,  எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல,  ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.

இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.

ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.

தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த மாலை வணக்கம். முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார்,  தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.

இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.

இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.

எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.

அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – P.G.முத்தையா
எடிட்டிங் – அரள் R. தங்கம்
கலை – NK ராகுல்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை - ஶ்ரீநாத் விஸ்வநாதன் 
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

 

ஒரு பிரம்மாண்ட அபார்ட்மெண்ட். அங்கே ஒரு சூட்கேஸில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்படும் சிறுமியின் சடலம். இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியைத் தேடி களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ். ஒருபுறம் அஜய் கார்த்திதான் கொலையாளி என அடித்துச் சொல்லி விசாரணையை ஒரு பக்கம் திருப்புகிறார் பவானி ஸ்ரீ.  காளிதாஸின் விசாரணை சூடுபிடிக்கும் வேளையிலேயே, அதே குடியிருப்பில் அடுத்தடுத்து அரங்கேறும் மரணங்கள் அதிர வைக்கின்றன. இந்த கொலைகளை யார் செய்வது ? எதனால் நடக்கிறது ? என்பதே படத்தின் மீதிக்கதை.  


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ,  நேர்மையான  அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சங்கீதா, தனது முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிஷோரும், பிரகாஷ் ராஜும் தங்களின் கேமியோ மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார்கள். சிறியவேடம் என்றாலும் கவனிக்க வைக்கும் வேடமேற்றிருக்கிறார் அபர்ணதி


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.


சிறுமி கொலை சம்பவத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  ஸ்ரீ செந்தில்  இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் ?  கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.


காளிதாஸ் 2 - சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர்

 

'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் இல்லாதது' ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் 'ஹபீபி' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.


அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர் நிஷா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவரை அன்பாக ‘நிலா பொண்ணு’ என்ற செல்லப்பெயரில் அழைப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தை எழுதும் போது, 90களில் வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டு காலகட்டங்களில் வேறுபட்ட தோற்றங்களுடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 200–250க்கும் மேற்பட்ட நடிகர்களை ஆடிஷன் செய்தோம். இறுதியில் மாளவிகா மனோஜை பார்த்தவுடன் அவர் தான் சரியான தேர்வு என்று உணர்ந்தேன். குறிப்பாக இந்தக் கதாபாத்திரத்திற்கு கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேவைப்பட்டார்” என்றார்.

 

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “அவரை ஆடிஷன் செய்த பிறகு, அவரது குடும்பத்தின் ஊக்கமும், நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆழமான ஆர்வமும் எங்களை மிகவும் கவர்ந்தது. அந்த சமயத்தில் அவர் தனது மலையாள அறிமுகப்படமான ‘பிரகாஷம் பரவத்தே’ படப்பணிகளை முடித்திருந்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ’ஹபீபி’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரும்பாலும் வசனங்களைக் காட்டிலும் முகபாவங்கள் மூலமும் உடல் மொழியாலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியது. அதை அவர் எப்படி கையாள்வார் என்று ஆரம்பத்தில் எங்களுக்கு ஆவல் இருந்தது. ஆனால், அவர் அதை மிகவும் திறமையாகக் கையாண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார். படத்தை பார்த்த அனைவருமே அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். மாளவிகா நடித்த  ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ போன்ற படங்களின் வெற்றி, ‘ஹபீபி’ படத்திற்கு மேலும் வலு சேர்க்கும்” என்றார். 


இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள 'ஹபீபி' திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான நிலப்பரப்பை நம்பகத்தன்மையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிக்கும் ஆத்மார்த்தமான திரைப்படமாகும். 'என் அன்புக்குரியவளே' என்ற படத்தின் தலைப்பின் பொருளுக்கு ஏற்ப இப்படம் காதல், மனித உறவுகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பேசுகிறது. 


பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு படங்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிடுகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், உணர்வுப்பூர்வமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. ’ஹபீபி’ படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட்டையும் நீட்டிக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், இயக்குநர் அஜய் ஞானமுத்து அர்ப்பணிப்புடன், திட்டமிட்ட 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்” என்றார்.


இயக்குநர் அஜய் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் சுதன் சாரிடம் கதை சொல்லி இறுதியானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என சொன்னார். ’டிமாண்டி காலனி’ படத்தின் பிரான்சைஸூக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம். படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதெல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது. மிகவும் திருப்தியாக மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால்தான் திட்டப்படி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. ’டிமாண்டி காலனி’ பிரான்சைஸ் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதை மனதில் வைத்தே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோடையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். குமரேஷ் டி எடிட்டிங்கை கவனிக்கிறார்.


அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கிய 'டிமாண்டி காலனி 3' திரைப்படம் இந்த கோடையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

 

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!


எட்டு முறை அகாடமி விருது வென்ற புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 2, 2026: ’ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய அத்தியாயம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. இதில் ராமபிரானாக ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்


5,000 ஆண்டுகளாக மனிதகுலத்தின் நினைவில் வாழ்ந்து வரும் ராமர் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் புதிய பார்வையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ‘ராமா’ டீசர் கொண்டு சேர்த்துள்ளது. ராமாயணம் கதையுடன் வளர்ந்தவர்களுக்கு இது புது அனுபவமாகவும், முதல் முறையாக அறிமுகமாகும் பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான அனுபவமாகவும் அமைகிறது.


இந்த காலத்தில் உலகம் காண்பதற்கு அரிய ஹீரோ ராமன். அதிகாரத்தை விட கடமையை தேர்ந்தெடுக்கும் ஹீரோதான் ராமன். ஆசையை விட தர்மத்தை முன்னிறுத்துபவர். ’மர்யதாம் புருஷோத்தம்’ என போற்றப்படும் ராமன், மனிதகுல ஒழுக்கத்தின் உச்ச வடிவமாக கருதப்படுகிறார். துன்பம், நாடுகடத்தல் மற்றும் இழப்புகளின் மத்தியில் கூட நேர்மை, கருணையை காக்கும் அவரது பண்பே அவரை காலத்தைக் கடந்தவராக மாற்றியுள்ளது.


இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வு பூர்வமான தருணங்களில் உள்ளது. இது வெறுமனே நல்லது, கெட்டது பற்றிய கதையல்ல. மனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய கதை. ராமனின் பயணம் மிகவும் மனிதத்தன்மை கொண்டது. அதையே உண்மையாக காட்ட முயன்றுள்ளோம்” என்றோம்.


ராமர் கதாபாத்திரம் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “ராமரை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன். அவரின் எளிமையும் தூய்மையும் மிகவும் அரிதானவை. அதை புரிந்து கொள்ளும் பயணம் எனக்கு தெய்வீகமான அனுபவமாக இருந்தது” என்றார்.


தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமரின் கதையின் வலிமை, அவர் எதை வென்றார் என்பதில் இல்லை. அவர் எதை கைவிட்டார் என்பதில்தான் உள்ளது. எளிதானதோ, வசதியானதோ அல்லாத, ஆனால் அவசியமான ஒரு தரத்தை ராமர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஆசையை விடக் கடமையையும், சுகத்தை விட உண்மையையும், தன்னலத்தை விட தியாகத்தையுமே முக்கியம் எனத் தேர்ந்தெடுக்கிறார். அதனால்தான் அவரது கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இன்றும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கிறது”


நமித் மல்ஹோத்ராவின்‘ராமாயணம்’ திரைப்படம் பற்றி:


நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ‘ராமாயணம்: பார்ட்1’ திரைப்படம், உலகின் மிகப் பழமையான காவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகிறது. உலகம் உருவானதில் இருந்து மும்மூர்த்திகளும் மூன்று உலகங்களையும் ஆண்டு வருகின்றனர். அதாவது, பிரம்மா படைப்பையும், விஷ்ணு காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்து வருகின்றனர். விண்ணுலகமும் மண்ணுலகமும் குழப்பத்தை நோக்கிச் செல்லும் வேளையில், சமநிலையை நிலைநாட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மனித குல இளவரசனாக ராமர் (ரன்பீர் கபூர்) அவதாரத்தில் பூமியில் பிறக்கிறார். அறிவிலும் சக்தியிலும் ஒப்பற்ற அரக்க மன்னன் ராவணன் (யாஷ்) ராமருக்கு எதிராக நிற்கிறான். அகம்பாவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் இயக்கப்படும் ராவணனுடன் நடைபெறும் மாபெரும் மோதலும் அதன் பின்னான நிகழ்வுகளுமே ‘ராமாயணம்’. இராவணனை எதிர்த்து நிற்க விதிக்கப்பட்ட ஒரே எதிரி தான்தான் என்ற தனது உண்மையான நோக்கத்தை அறியாமல், இராமர் தர்மத்தின் சின்னமாகவும், அக்காலத்தின் மாபெரும் மனித வம்சமான அயோத்தியின் மிகவும் நேசிக்கப்பட்ட பட்டத்து இளவரசராகவும் திகழ்கிறார். ராமர் தனது மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் தம்பி லட்சுமணன் (ரவி துபே) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ முயலும் போது, விதி அவரை வனவாசத்திற்கும் இறுதி போருக்கும் அழைத்துச் செல்கிறது.


ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ’ராமாயணம்’ திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதையாக சாய் பல்லவி, ஹனுமனாக சன்னி் தியோல், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை நிதேஷ் திவாரி, விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனால் தழுவி எழுதப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இயக்குகிறார். ஆஸ்கார் விருது வென்ற ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் இசையமைக்கின்றனர். பழங்கால இந்தியாவை கண்முன் கொண்டு வரும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பை ரவி பன்சால் மற்றும் ராம்சே அவேரி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்கள் டெர்ரி நோட்டரி & கய் நொரிஸ் வடிவமைக்கின்றனர்.


வால்மீகி ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் முதல் பாகத்தை, எட்டு முறை அகாடமி விருது வென்ற தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.


நமித் மல்ஹோத்ராவின் ராமாயணா: பார்ட்1 திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி, 2026ல் வெளியாகிறது. இரண்டாவது பாகத்தின் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அடுத்த வருடம் 2027, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.


சரியான நேரத்தில் மீண்டும் வரும் ‘ராமாயணம்’ கதை:


ராமாயணம் ஒரு கதை மட்டுமல்ல, அது வாழும் கலாச்சார சக்தி. போரில் வெற்றி பெற்ற பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதாவது, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் நினைவாக கொண்டாடப்படுகிறது. ராமன் தர்மம், கருணை, தியாகத்தை பிரதிபலிக்கிறார். ராவணனின் வீழ்ச்சி அகம்பாவம் மற்றும் ஆசையின் விளைவாகும். இந்த எதிர்மறை, நேர்மறை மோதல்தான் ராமாயணத்தை மனித வரலாற்றின் நீண்ட காலம் நிலைத்த காவியமாக மாற்றியுள்ளது.


சுவாரஸ்ய தகவல்கள்:


* உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் பிராந்தியங்களிலும் 300க்கும் மேற்பட்ட பதிப்புகளில் ராமாயணம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.


* கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 13.5 கோடி பக்தர்களை ஈர்த்த ஆன்மீக தலமாக ராமர் பிறந்த அயோத்தி உள்ளது.


* கடந்த 2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராம் மந்திர் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.


* அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் ராம் மந்திர் கும்பாபிஷேகத்தை கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:


நமித் மல்ஹோத்ரா நிறுவிய பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உலகளாவிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் உள்ளடக்கங்களை உருவாக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. ஒலிப்பதிவுக் கூடங்கள், தயாரிப்பு வசதிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், முழு நீள அனிமேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய DNEG குழுமத்தின் விருது பெற்ற உலகளாவிய திறன்களைப் பயன்படுத்தி, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் திறமையான இயக்குநர்களுக்கும், ஸ்டுடியோக்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பார்ட்னராக திகழ்கிறது.


மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:


நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.

 

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது 'பேச்சிலர் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். 


"'ஓம்மே நின்னானு' பாடல் 31 வினாடிகளுக்கும், 'நியாயா எல்லிடே' பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான நீளம் கிடையாது.  ஏனெனில்  பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 14(d)(i)(A)-ன் படி, திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அசல் புகைப்படம் கூட உரிமையாளருக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி 'நியாயா எல்லிடே' பாடலின் ஒலி-ஒளிக் காட்சியிலிருந்து ஒரு நொடி கூட பயன்படுத்த முடியாது" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், கோர்ட் உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


”இருப்பினும், பிரதிவாதிகள் 1 மற்றும் 2 ஆகியோர் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து சமர்ப்பித்த 31.10.2025 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.12.08.2024 தேதியிட்ட உத்தரவை அவமதித்ததற்காக பிரதிவாதி எண் 2-க்கு சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்த அவமதிப்பில் இருந்து விடுவிக்கவும் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 5,00,000 முன்மாதிரி செலவுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது”.


கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்ட உரிமை மாற்றப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கு எம்.ஆர்.டி மியூசிக் இசை நிறுவனம் உரிமை கோரியது. ’பேச்சிலர் பார்டி’ திரைப்படத்தில் உரிமம் பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது. ஒரு காட்சியில் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது, மற்றொன்று கதைக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு வகுப்பறைக் காட்சியில் பாடப்பட்டது. இப்படம் ஜனவரி 2024 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது.


ஆகஸ்ட் 12, 2024 அன்று பிரதிவாதிகள் நான்கு வாரங்களுக்குள் ரூ. 20 லட்சத்தைச் செலுத்தவும், உரிமம் பெறாமல் பயன்படுத்தியுள்ள பாடல்களை அகற்றவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் பிரதிவாதிகள் அபராதத் தொகையை செலுத்தினாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.


டிஜிட்டல் தளங்கள் உட்பட பல தளங்களிலும் எம்.ஆர்.டி அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிரிவு 19(4)-ன் கீழ் உரிமை இழப்பு வாதத்தை நிராகரித்தது. பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்குத் தொடரப்பட்ட தேதியில் இருந்து அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.


’நியாய எல்லிடே’ வெறும் 7 வினாடிகளுக்கும், ’ஓம்மே நின்னானு’ 31 வினாடிகளுக்கும் மட்டுமே இருப்பதைக் குறிப்பிட்டு ’மிக குறைவான நேரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என ரக்‌ஷித் ஷெட்டியும் பரம்வா ஸ்டுடியோஸும் வாதிட்டனர். இருப்பினும், நீதிமன்றம் அந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு நோக்கத்தை ஆராய்ந்தது. 


வாதத்தில் பயன்படுத்தப்பட்ட ’தற்செயலானவை’ அல்லது ’தொடர்பற்றவை’ என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, திரைப்படத்தின் கதையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ’நியாயா எல்லிடே’ என்ற தலைப்புக்கு ’நீதி எங்கே?’ என்று பொருள் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கதாநாயகன் துன்பப்படும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தது, அவனது அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்கான திட்டமிட்ட படைப்பு என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


பாடல்கள் வணிக ஆதாயத்திற்காகவும், கதைக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்பட்டதால், அவை 'டி மினிமிஸ்' விதிவிலக்கிற்குத் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


மொத்த நிதி உத்தரவு இரண்டு தனித்தனி வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது:


1) ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸ் முன்பு எம்.ஆர்.டி மியூசிக்கிடம் டெபாசிட் செய்திருந்த ரூ. 20 லட்சத்தை விடுவிக்குமாறு ரெஜிஸ்ட்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


2) திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2024ஆம் ஆண்டு டெபாசிட் காலக்கெடுவைத் தவறவிட்டதால், நீதிமன்றம் கூடுதலாக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.


எம்ஆர்டி மியூசிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் அசவாரி ஜெயின், கீதாஞ்சலி விஸ்வநாதன், ஐரா லா-வை சேர்ந்த சிவன்ஷ் திவாரி மற்றும் வழக்கறிஞர்கள் ரித்திக் ரகுவன்ஷி, ஷ்ருதுலா மூர்த்தி, ரிஷிகா அகர்வால் ஆகியோர் ஆஜராகினர். பரம்வா ஸ்டுடியோஸ் மற்றும் பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜே சாய் தீபக் மற்றும் வழக்கறிஞர்கள் மீனாட்சி ஓக்ரா, சாம்ராட் எஸ் காங் மற்றும் விஷ்ணு கம்பீர் ஆகியோர் ஆஜராகினர்.

 

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளது.


வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுக்க கொண்டாட்டங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சமூகசேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக இந்த கொண்டாட்ட வாரத்தை மாற்றும் நோக்கில் HPV தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.


பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். மேலும், சுகாதார பழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் முனைப்புடன் செயல்படுகிறது.


’நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற கேப்ஷனுடன் குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த தடுப்பூசி மற்றும் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.


இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் செயல்களும் நடைபெறும். 


நேர்மறையான சமூக மாற்றத்திற்காக செல்வாக்கையும் கூட்டு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற நடிகர் அல்லு அர்ஜுனின் எண்ணத்துடன் ஒத்துப்போகும் வகையில், சமூக சேவைக்கான அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.

 

புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ரசிகர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் ஒரு காவிய அனுபவமாக இந்த படம் இருக்கும் என்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘கத்தனார்’ டிரெய்லர் வெளியான உடனேயே விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ஒரு படத்தின் டிரெய்லர் இத்தகைய வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர்கள்: சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா,

இசை: ராகுல் சுப்ரமணியன்,

எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், 

கலை இயக்கம்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், 

இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி

 

2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது!


ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. 


உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.


பிரம்மாண்டமான ஓப்பனிங் மற்றும் சாதனை படைத்த இரண்டாவது வார இறுதிக்கு பிறகு, 2-வது வாரத்தின் வேலை நாட்களிலும் (திங்கள் முதல் வியாழன் வரை) படம் மிக வலுவாக நின்றது. இந்தியா மற்றும் முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்து குறிப்பிடத்தக்க வசூலை குவித்துள்ளது.


வசூல் விவரம் (இந்தியா)


முதல் வார மொத்தம் (8 நாட்கள்) – ரூபாய் 690.00 கோடி (நெட்)

2-வது வார இறுதி மொத்தம் – ரூபாய் 177.00 கோடி


2-வது வார வேலை நாட்கள்


நாள் 12 – திங்கள் – ரூபாய் 26 கோடி

நாள் 13 – செவ்வாய் – ரூபாய் 28 கோடி

நாள் 14 – புதன் – ரூபாய் 21 கோடி

நாள் 15 – வியாழன் – ரூபாய் 19 கோடி


2-வது வார மொத்தம் – ரூபாய் 271 கோடி


இந்தியா NBOC (நெட் வசூல்) – ரூபாய் 961.00 கோடி

இந்தியா GBOC (க்ராஸ் வசூல்) – ரூபாய் 1,134 கோடி


வெளிநாடுகள் (OVERSEAS)


வாரம் 1 + வாரம் 2 – ரூபாய் 367 கோடி


உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்


ரூபாய் 1,501 கோடிகள்

 

துரந்தர் பழிவாங்கல் - சாதனை பயணம்


- எக்காலத்திற்கும் சிறந்த ஓப்பனிங் வசூல் செய்த ஹிந்தி படம்

- கட்டண பிரிவியூ  மூலம் அதிக வசூல் செய்த படம்

- உலகளவில் முதல் வார இறுதியில் அதிக வசூல்

- அதிக முதல் வார வசூல்

- அதிக 2-வது வார வசூல்

- உலகளவில் மிக வேகமாக ரூபாய் 1000 கோடியை எட்டிய படம்

- மிக வேகமாக 100, 200, 300, 400, 500, 600, 700, 800 மற்றும் 900 கோடிகளை எட்டிய படம்

- வெளிநாட்டு சந்தைகளில் (முதல் வாரத்திற்குள்) மிகப்பெரிய வசூல் செய்த இந்திய படம்

- வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்தியப் படம்

- 'துரந்தர் பாகம் 1' படத்தின் வாழ்நாள் வெளிநாட்டு வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்தது.

Pageviews