The shooting of Santhanam’s much-awaited film SANTA20 has officially commenced. Directed by Sudhaman Krishna, the film is jointly produced by Venus Infotainment (K J Ganesh) and K7 Studios (Vijay K Celliah). The project promises an exciting mix of mystery, suspense, and humor in a fresh time-loop-based detective narrative.

SANTA20 revolves around an aspiring detective who sets out to uncover a crime which leads him to get into an unexpected, adventurous, and thrilling journey.

The film stars Santhanam alongside Gopika Ramesh in the lead, supported by a talented ensemble featuring Jenson Dhivakar, Redin Kingsley, George Marian, Pradeep Antony, Fouzee, and TSR.
Backed by a strong technical team, SANTA20 aims to deliver a visually rich and engaging cinematic experience.

* Cast : Santhanam, Gopika Ramesh, Jenson Dhivakar, Redin Kingsley, George Marian, Pradeep Antony, Fouzee, and TSR.
* ⁠Director: Sudhaman Krishna
* ⁠Producer: K7 Studios - Vijay K Celliah, Venus Infotainment - KJ Ganesh 
• DOP: Richard M Nathan
• Music Composer: Nivas K Prasanna
• Production Designer: Jackie
• Stunt Director: Dhilip Subbarayan
• Costume Designer: Priya Ravi
• Editor: Praveen KL
• Poster Designer: Tuney John
• Executive Producer: Karthick Ananda Krishnan
• Associate Executive Producer: Yezhil
• ⁠Marketing & Promotions : Vijayaraghavan R
• ⁠PRO: Sathish S2 Media 

Venus Infotainment, which earlier presented critically acclaimed films such as Yaathisai and Kumaara Sambavam, teams up with K7 Studios to bring this engaging story to life. Together, they are set to create a fresh addition to Tamil cinema’s lineup of distinctive content-driven entertainers.
With shooting now underway, SANTA20 is all set to become one of the most electrifying and entertaining entries in Santhanam’s filmography.

 

'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. 


தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.


சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.


’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.  


நடிகர்கள்: நடிகர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க கதாநாயகிகளாக மோனிகா சின்னகோட்லா, மானசா செளத்ரி நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, சாணக்யன் மற்றும் ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்: 


எழுத்து, இயக்கம்: பிரவீன் சரவணன்,

தயாரிப்பு: பிரதீப் மகாதேவன்,

தமிழ்நாடு விநியோகஸ்தர்: சக்தி பிலிம் பேக்டரி, சக்திவேலன் பி,

பேனர்: தி மாபோகோஸ் கம்பெனி,

இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,

ஒளிப்பதிவு: கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,

படத்தொகுப்பு:தினேஷ் பொன்ராஜ்

 

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. 


ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. 


பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார். 


இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. 


அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார். 


நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன். 


நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.

 

“மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம்,  ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது.


டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்குநர் ராஜு முருகன் எழுதிய கூர்மையான வசனங்கள் உயிர்ப்பிக்கின்றன.


அதனைத் தொடர்ந்து, பின்னணி குரல் ஒலிப்பதிவுடன் இணைந்து பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் தொடர்ச்சியாக மான்டாஜ் வடிவில் வெளிப்படுகின்றன. இறுதியில், கதாநாயகன் கெளதம் ராம் கார்த்திக் அவர்களின் வலுவான தோற்றத்துடன், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படத்தின் தலைப்பான “Bloody Politics” வெளிப்படுகிறது. தீவிரமான கதை சொல்லலும் வலுவான காட்சிப்படுத்தலும் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த டீசர் சிறப்பாகத் திகழ்கிறது. ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா காட்சிகளுக்கு கடினமான மற்றும் நிஜத்தன்மை மிக்க தோற்றத்தை அளிக்க, இசையமைப்பாளர் சாம் C. S. ன் மிரட்டலான பின்னணி இசை டீசரின் தீவிரத்தையும் நாடகத் தன்மையையும் மேலும் உயர்த்துகிறது.


இந்தத் திரைப்படத்தில் கெளதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கதாநாயகியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரோபி, P. வாசு, A. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கணேஷ் K. பாபு (DaDa படத்தின் இயக்குநர்) தனது தயாரிப்பு நிறுவனமான Draft by GKB மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக சஞ்சய் முத்துக்குமார் V உள்ளார். டைட்டில் டீசரை பார்க்கும் பொழுது, அது இயக்குநர் தீனா ராகவன் அவர்களின் தன்னம்பிக்கையூட்டும் இயக்கத் திறமையை வெளிப்படுத்துகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநராக தா. ராமலிங்கம் , எடிட்டராக தீபக் S பணியாற்றுகின்றனர். பாடல் வரிகளை யுகபாரதி, கணேஷ் K. பாபு மற்றும் சௌமியா பாரதி D எழுதியுள்ளனர். கூடுதலாக காஸ்ட்யூம் டிசைனராக காயத்ரி பாலசுப்ரமணியன் , ஸ்டண்ட் இயக்குநராக அபிஷேக் ஸ்ரீனிவாஸ், நிர்வாக தயாரிப்பாளராக துரை கார்த்திக் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு பொறுப்பை ரேகா மேற்கொள்கிறார்.


வலுவான அரசியல் பின்னணி, தாக்கம் மிக்க காட்சிகள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவுடன், Bloody Politics படம் ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சக்திவாய்ந்த டைட்டில் டீசர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது. 


ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.


படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், "அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 'லீடர்' அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்," என்றார். 


இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, 'லீடர்' இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட 'லீடர்' ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

 

திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது.


வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.


எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றி,” என்று அவர் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “கருப்பு திரைப்படம் உலகளவில் ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தனுஷ் சாரின் D55 படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜூன்–அட்லீ திரைப்படத்திற்கும் நான் இசையமைக்கிறேன். அட்லீ அண்ணா என்னை முதலில் சந்தித்தபோது, எனது ஒரு தனிப்பாடல் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக அவர் தனது அடுத்த படத்திற்கு இசையமைக்க விருப்பமா என்று கேட்டார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.


நடிப்பில் கால்பதிக்கும் வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது, “இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் எனது இசைக்காகவே வந்துள்ளனர்; அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. நான் தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி, சிறந்த இசையை வழங்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.


தனது தொடர்ச்சியான வெற்றி மற்றும் அதனுடன் வரும் சவால்கள் குறித்து பேசிய சாய் அபயங்கர், “இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி; எனது வழிகாட்டிகளுக்கு வழிகாட்டியதற்கு நன்றி; அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கு நன்றி.”


‘பவழ மல்லி’ பாடலுக்காக திங்க் மியூசிக் உடனான கூட்டணி குறித்து பேசிய அவர், “நான் 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக மகேஷ் அதை எங்கள் ஐந்தாவது ஒத்துழைப்பாக பூட்டினார். இந்த பாடலை அழகாக உயிர்ப்பித்த இயக்குநர் தேஜோ பரத்வாஜுக்கு நன்றி. நிகேத் பொம்மி காட்சி வடிவமைப்பில் வலுவான தூணாக இருந்தார். இயக்குநர் கீர்த்திஸ்வரன் எனது ஸ்டுடியோவிற்கு முதலில் வந்த இயக்குநராக இருந்து, எப்போதும் முழு உருவாக்க சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.

நடன இயக்குநர் ஷெரிஃப் மாஸ்டர் மற்றும் இந்த பாடலை அற்புதமாக்கிய முழு குழுவுக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.

 

நீண்ட  நாட்களாக நீடித்த ஊகங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்களின் தீவிர ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரன்வீர் சிங் நடிக்கும் துரந்தர் பழிவாங்கல் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. நாளை காலை 11.01 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது!


இந்த படத்தில் ரன்வீர் சிங் ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என இரட்டை கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் கதாபாத்திரங்களுக்கிடையேயான மோதல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


துரந்தர் படத்தின் முதல் பாகம் இந்தியாவில் மட்டுமின்றி வட அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை புரட்டிப்போட்டது. இப்போது துரந்தர் பழிவாங்கல் படமும் அதே உச்சத்தை தாண்டும் என்று வர்த்தக வட்டாரங்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றன.


ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், B62 ஸ்டுடியோஸ் நிர்மாணமாக வெளியாகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. ஆதித்ய தார் எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள இந்த ஆக்சன் திரில்லர் படத்தை, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் இணைந்து தயாரிக்கின்றனர்.


குடி பட்வா, உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளையொட்டி, மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களை பரவசப்படுத்த தயாராக இருக்கிறது!

 

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள  ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில்  ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.


இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது.  சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. Anekdotes உருவாக்கிய இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்; Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த சீரிஸை  அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘லோக்கல் டைம்ஸ்’ மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.


ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள்  வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து.  வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,

 “லோக்கல் டைம்ஸ் என்பது  உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.


தயாரிப்பாளர் ஜித்தின் துரை  கூறுகையில்..,

 

“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.


  படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,

 

“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். 


இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,

 

“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள்.  அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை  ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ்  இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”


இந்த சீரிஸ்  மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.

 

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக  உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்   தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர்  மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


நகர வாழ்க்கையில் கடனில்  போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது.  அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது.  உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர்  காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது.


இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் (Power House Pictures) தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


குடும்ப  உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர் , இந்த படம் ஒரு முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும் எனும்  நம்பிக்கையை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.


தொழில்நுட்ப குழு


இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: Power House Pictures

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.அது உடனடியாக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

70 விநாடிகள் நீளமான இந்த டீசர், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் திறமையான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. சிறுமி, ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான குரல் உரையாடலுடன், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வலுவான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஈர்க்கும் திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டீசர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து உடனடியாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.


மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் RS சதிஷ் ஆகியோர், Vyom Entertainments நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, RS சதிஷ், கௌசல்யா, Mime கோபி, Y. G. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த டீசரின் தாக்கத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் AK பிரியன் அவர்களின் இசையமைப்பு பெரும் பங்காற்றுகிறது. எடிட்டர் தீபக் S அவர்களின் துல்லியமான எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வரமா K அவர்களின் வசீகரமான காட்சிப்பதிவு டீசரின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.


பின்னணிப் பணிகள் ( Post Production) வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Pageviews