உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி  அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்' தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது.


இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் முனைவோர் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


விளையாட்டு துறையில் அறிவுசார் சொத்து உரிமையின் (IP) அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து நிகழ்வில் முக்கியமாக கலந்துரையாடினர். குறிப்பாக வீரர்களின் உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வருமானமயமாக்கல் முறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் ஜி. ராஜாராமன், சோமதேவ் தேவவர்மன், சுதா ஷா, டாக்டர் சுப்ரஜித் சந்தா, சித்தார்த் ராமன், வசந்த் பரத்வாஜ் மற்றும் விஷால் ஜெய்சன் ஆகியோர் நிகழ்வில் முக்கிய உரையாற்றினர்.


முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் சோமதேவ் தேவவர்மன் பேசுகையில், “அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இந்த இரண்டும் இணைவது,  வீரர்கள் தங்களின் தனிப்பட்ட பிராண்டுகளை பாதுகாக்கவும், வருமானம் ஈட்டவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.  ராயல்டி அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் நீடித்த மதிப்பை வழங்கும்” என்றார்.


ஸ்போர்ட்ஸ் இண்டர்ஆக்டிவ் நிறுவனத்தின் சித்தார்த் ராமன் பேசுகையில்,

“இன்றைய மாற்றமடைந்து வரும் விளையாட்டு சூழலில், மீடியா உரிமைகள் முதல் வீரர்களின் பிராண்டிங் வரை அறிவுசார் சொத்து மிக முக்கிய பங்காற்றுகிறது” என்றார்.


கிரியா லா நிறுவனத்தின் ஸ்போக்ஸ்பர்சன் பேசுகையில்,

“அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு என இரண்டும் இணையும் இந்த துறை, கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான மதிப்பை உருவாக்கும் பெரிய வாய்ப்பாக உள்ளது” என்றார்.


இந்த நிகழ்வில் 'KRIA’tive Innovation Awards 2026' விருதுகளின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இவ்விருதுகளுக்கு 460 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பப்பட்டிருந்தது. மேலும், IPASI பிக்கல்பால் போட்டி வெற்றியாளர்களும் இந்த நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர். 


இந்த நிகழ்வை கிரியா லா நிறுவனம் WIPO, INTA மற்றும் iTNT Hub ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது. அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டு துறைகளின் இணைப்பில் தொடர்ந்து உரையாடலும் புதுமையும் அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.


கிரியா என்பது சென்னை மற்றும் டெல்லியில் அலுவலகங்களைக் கொண்ட முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட நிறுவனம். இது 130 க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பின் மூலம் முழுமையான சேவைகளை வழங்குகிறது.

 

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,

"படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார்.


நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்".


நடிகர் க்ருத்கிக் மோகன், "ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்". 


டிஸ்ட்ரிபியூட்டர் குகன், "இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்" என்றார். 


இயக்குநர் வசந்த பாலன், "20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. 

இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார். 


நடிகை ரோஸ்மின் பேசியதாவது, "என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!" என தெரிவித்தார்.


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன். 

எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்".


கதாநாயகன் ராணவ், "ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


இயக்குநர் காந்தி கிருஷ்ணன், "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார். 


கவிப்பேரரசு வைரமுத்து, "நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.

காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. 

காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.


இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  

திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்" என்றார்.


நடிகர் ரியோ, "எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.

'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும். 

இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்" எனக் கூறினார்.


நடிகர் பரத், "இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் 'செல்லமே' திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி".


நடிகர் மைம் கோபி, "திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். 'ப்ரேக்ஃபாஸ்ட்' எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்" என தெரிவித்தார்.


இயக்குநர் காந்தி கிருஷ்ணா, "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


தயாரிப்பாளர் வரதராஜன், "இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.

 

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும்  2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.


மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர்.  வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.


பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும்,  பிரம்மாண்டமான  காதல் படைப்பாகும்.  கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.


“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21  அன்று வெளியாகவுள்ளது.

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.  


இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை  பெருமளவில்  உயர்த்தியுள்ளது.


தனித்துவமான கதைக்களம்  மற்றும்  ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்  ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல்  சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய  “இருமுகன்”  படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி  10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.


தனித்துவமான பின்னணி இசைக்காக புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இந்த படத்தின் மாஸ் மற்றும் எமோஷனல் அம்சங்களை மேலும் உயர்த்தும்.


அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் R. D. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார்.  வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,

படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக  பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும்.


“சீயான் 63” படம், சீயான் விக்ரமின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்த படத்திலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்பப்படுகிறது.


மொத்தத்தில், வெற்றிகரமான கூட்டணி, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புடன் உருவாகும் இந்த “சீயான் 63” பட அறிவிப்பு,  அவரது பிறந்தநாளில்  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


நடிகர் :


 சீயான் விக்ரம்


தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர்

தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்

வழங்குபவர் : TG.தியாகராஜன்

தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்

இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர்  ISC

தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன்

வசனம் : ஷான் கருப்புசாமி

படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா

கலை இயக்கம் : சூர்யா ராஜீவன்

ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி


*சத்யஜோதி பிலிம்ஸ் மாஸ் லைன்அப்… சியான் 63 மூலம் புதிய அதிரடி!*

*தலைமுறைகளை கடக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்… அடுத்த ஹைலைட் சியான் 63!*

தமிழ் திரைப்பட உலகில் பல தலைமுறைகளை கடந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.

வீனஸ் பிக்சர்ஸ் திரு. டி. கோவிந்தராஜன், திரைக்கதைச் சித்தர் அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் மரபையும், கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன், திரு. டி. ஜி. தியாகராஜன் போன்ற திரையுலக முன்னோடிகளின் 70 ஆண்டுகால திரையுலக பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ், எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அஜித் குமார், கார்த்திக், முரளி, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நட்சத்திரங்களுடன் வெற்றிப்படங்களை வழங்கி, தமிழ் திரையுலகில் நீண்ட வரலாறும் உயர்ந்த மரியாதையும் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இன்றும் திகழ்கிறது.

உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, என் அண்ணன், பட்டணத்தில் பூதம், ரிக்ஷாக்காரன், இதயக்கனி, பாட்ஷா, மூன்று முகம், காக்கி சட்டை, பானா காத்தாடி, எம் மகன், விஸ்வாசம், கேப்டன் மில்லர், தலைவன் தலைவி போன்ற தமிழ் சினிமாவின் பல மறக்கமுடியாத மாபெரும் வெற்றி திரைப்படங்களை இன்று வரை தொடர்ந்து அளித்து, இன்றும் தனக்கென தனிப் பெருமையும் வரலாறும் வைத்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.

தமிழ் சினிமாவின் வணிக வெற்றியும், தரமான உள்ளடக்கமும் ஒருசேர கலந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், புதிய திறமைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. பார்த்திபன் கனவு, எம் மகன், பானா காத்தாடி போன்ற படங்கள் மூலம் ஸ்ரீகாந்த், பரத், அதர்வா போன்ற நடிகர்களுக்கு திரையுலகில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களின் வரிசையையும் வலுப்படுத்தி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், விஷ்ணு விஷால் நடிக்கும் “இரண்டு வானம்”, லெனின் பாண்டியன்,சிவராஜ்குமார் நடிக்கும்  புதிய படம் பிரம்மாண்ட முயற்சி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், இந்த நிறுவனத்தின் அடுத்த மாபெரும் அறிவிப்பாக சியான் விக்ரம் அவர்களின் 63வது படமான “சியான் 63” அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “தி ஃபர்ஸ்ட் ஃப்ளேம்” என்ற ஸ்டைலிஷ் புரோமோ வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் முன்னதாக விக்ரம் நடித்த “இருமுகன்” படத்தை இயக்கி வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றவர். 10 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரம்மாண்ட படத்தை டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும், ஒளிப்பதிவாளராக ஆர். டி. ராஜசேகர், கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், வசனகர்த்தாவாக ஷான் கருப்புசாமி, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு, படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், வலுவான கதை, வெற்றிகரமான கூட்டணி, அனுபவமிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் பிரம்மாண்ட தயாரிப்புடன் உருவாகும் “சியான் 63”, விக்ரம் அவர்களின் திரைப்பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் முதல் விக்ரம் வரை வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ், இந்த புதிய அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு மாஸ் மற்றும் கிளாஸ் வெற்றியை நோக்கி தன்னுடைய பயணத்தை உறுதியாக முன்னெடுத்து செல்கிறது.

🔗https://youtu.be/VL34SYoMS_g?si=E6rgGDymuh9q2MoL

 

வலமிருந்து இடமாக :  திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி


கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது.  


கவிஞர், எழுத்தாளர் திரு. செல்வரத்தினம் (எ)  செல்வா (இலங்கை) அவர்களுக்கு தமிழ், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாராட்டி “வாழ்வியல் வழிகாட்டி” எனும் விருது வழங்கப்பட்டது.  


தென்னிந்திய திரைத் தொடர்புத் துறையில் தனித்துவமாய்த்  திகழும் திரு. நிகில் முருகன் அவர்களுக்கு மக்கள் தொடர்பு மாமணி எனும் விருது வழங்கப்பட்டது.  

 

கடந்த வருடம் பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான "வல்லமை" திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனையை பேசிய விதத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது.   மியூசிக்கல்  ஹாரராக வித்தியாசமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு சூரஜ்நல்லுசாமி, இசை பிரேம்ஜி, பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

 

அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில்,  சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளதுடன், ஆடை வடிவமைப்பை வினையா தேவ் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் கவனித்துள்ளார். நிர்வாக தயாரிப்பை மூவேந்தர் மேற்கொண்டுள்ளார்.

 

தயாரிப்பு   நிறுவனம்  -அம்மன்யா மூவிஸ்  


தயாரிப்பாளர்     -  சி.வி. மஞ்சுநாதா 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சு. காளிங்கன் 


படம் குறித்து இயக்குனர் சு. காளிங்கன் கூறுகையில்....


 இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விசயங்கள்  இருக்கிறது. அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கிறது. நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர்  பகவான் என்றால், அவர்  யார்?,  அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்விகளுக்கான பதில்  தான் இப்படத்தின் மையம். நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை  உருவாக்கியுள்ளோம். 


 “பகவான்” ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது. நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும், இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படி பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன. 

மொத்தத்தில், “பகவான்” படம் ஒரு புதிய சிந்தனையுடன், வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும் என்றார்.


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். Seventh ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் இப்படத்தை மே மாதம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

 

A new look at Spider-Man: Beyond the Spider-Verse has been unveiled, building excitement for the next chapter in the Spider-Verse saga.


The Spider-Verse hype continues to soar as four brand-new posters from Spider-Man: Beyond the Spider-Verse have been revealed. The new posters were shared by Sony Pictures as part of the CinemaCon 2026 celebrations. “A new look at Spider-Man: Beyond the #SpiderVerse. Coming soon,” read the caption featuring Miles Morales in the next stage of his journey.


Hunted by Miguel O’Hara’s Spider Society and betrayed by his own friends, Miles finds himself navigating the darkest corners of the Spider-Verse in search of a way home. With his family not only fractured but now in danger because of his choices, it becomes a race against time for Miles—pushing him across the wildest reaches of time and space to fight for and reunite everything he holds most dear.


Directed by Bob Persichetti and Justin Thompson, Sony Pictures Entertainment India will release Spider-Man: Beyond the Spider-Verse in theatres on 18th June,  2027 in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam across all premium formats.

 

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.


ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.


பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. திரையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள்  எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து, வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி,  குழந்தை நட்சத்திரம்  அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். (மேலும் விரிவான கதாப்பாத்திர பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.)


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் சுவாரஸ்யங்களை தந்து வரும் நிலையில்,  முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள “கான் சிட்டி”, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Pageviews