தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,  தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி  ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.


இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.


மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.


மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது.


இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.


திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம் பாடலுக்கு தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, பாடலை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் சிறப்பு சேர்க்கும் திறமை அவருக்கு உண்டு. ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற பல ஹிட் பாடல்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது ‘வெள்ளிச்சுடரே’யும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்து, இசை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாக மாறியுள்ளது.


’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘இரண்டு வானம்’. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 


’வெள்ளிச்சுடரே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பு நிறுவனம்: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்,

வழங்குபவர்: டிஜி தியாகராஜன்,

தயாரிப்பு: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் 

ஒளிப்பதிவு: தினேஷ் கே பாபு, 

படத்தொகுப்பு: சான் லோகேஷ்.

 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது. 


2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கதாபாத்திரமும் அவரது ஈர்க்கும் திரையிருப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. 


படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும். குறிப்பாக, இன்றும் பலரின்  காலர் டியூனாக இருக்கும் படத்தின் தீம் மியூசிக், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. ஸ்டைல், கதை சொல்லல், திறமையான நடிகர்கள் என ஆக்‌ஷன் திரில்லர் ஜானரை ‘பில்லா’ திரைப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்தது. ’பில்லா’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் மீண்டும் பார்த்து கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, புதிய தலைமுறைக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்துகிறது. 


’பில்லா’ திரைப்படத்தின் மறுவெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களைக் கவர இருக்கிறது. 


தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான பி. ஆண்டனி  தாஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியா ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் நிறுவனரான இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் தனித்துவமான சினிமா முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டமிடல், முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறார்.


சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சன் நெட்வொர்க்கில் அவர் செய்த விரிவான பணியின் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். காட்சிப் பதிவு, லைட்டிங் டிசைன் மற்றும் உயர் தரமான தயாரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.

 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான துரந்தர் பழிவாங்கல் தனது அசாதாரண பாக்ஸ் ஆபிஸ் பயணத்தை தொடர்ந்துள்ளது, திரையரங்குகளில் ஒரு மாதத்தை நிறைவு செய்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படம் தனது ஐந்தாவது வார இறுதியிலும் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை

இந்தியாவில் ரூ.1,153 கோடி மற்றும் உலகளவில் ரூ.1,783 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.


வசூல் விவரம் (இந்தியா)


வாரம் 1 மொத்தம் (8 நாட்கள்) – ரூ.690.00 கோடி

வாரம் 2 மொத்தம் – ரூ.271.00 கோடி

வாரம் 3 மொத்தம் – ரூ.120.00 கோடி

வாரம் 4 மொத்தம் - ரூ.58.00 கோடி 


ஐந்தாவது வார இறுதி


நாள் 30: வெள்ளி – ரூ.3.00 கோடி

நாள் 31: சனி – ரூ.5.00 கோடி

நாள் 32: ஞாயிறு – ரூ.5.50 கோடி


ஐந்தாவது வார இறுதி மொத்தம் – ரூ.13.50 கோடி

 

இந்திய நிகர வசூல் (NBOC) – ரூ.1,153 கோடி


இந்திய மொத்த வசூல் (GBOC) –

ரூ.1,360 கோடி


வெளிநாட்டு மொத்த வசூல் (Overseas GBOC) - ரூ.423 கோடி


உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் - ரூ.1,783 கோடி

 

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'பிளாஸ்ட்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.  


'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார். 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின்  வரவேற்பை பெற்றுள்ளது. 


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், "அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது  அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான  குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை  இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்," என்றார்.


இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றியுள்ளனர். 


ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். 


'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை  கையாண்டுள்ளார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை  வடிவமைத்துள்ளார். 


ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

ராப் பாடகராக இருக்கும் அர்ஜுன் பிரபாகரன் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சித்தோடு இருக்கிறார். ஒருநாள் சிறுமிருக்கு அர்ஜுன் செய்யும் உதவியை பார்த்து அவர் மீது நாயகி ஆராத்யா காதல் கொள்கிறார் . இந்நிலையில் உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டியில் நாயகன் அர்ஜுன் வெற்றி பெறுகிறார். அர்ஜுன் திறமையை பார்த்து தனிப்பாடல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவரை ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இதையடுத்து அர்ஜுன் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதோடு மக்கள் மனதிலும் இடத்தை பிடிக்கிறார். இதையடுத்து அந்நிறுவனம் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக அர்ஜுனை ஒப்பந்தம் செய்கிறது. இதே சமயம் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும்  அவலங்களை  ராப் பாடல் மூலம்  மக்களுக்கு  தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யா நினைக்க அர்ஜுன் பிரபாகரன் அதை நிறைவேற்ற நினைக்கிறார். ஆனால் இதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் முட்டுக்கடடை போடுகிறது. இதை அறியும் தனியார் பள்ளி  தாளாளர்  சுப்ரமணிய சிவா ஆராத்யாவை கொலை செய்ய நினைக்கிறார். அவரை காப்பாற்ற நினைக்கும் அர்ஜுன் மிகபெரிய விபத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். இறுதியில் நாயகன் அர்ஜுன் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா ? இல்லையா?  பள்ளி  தாளாளர் சுப்ரமணிய சிவாவிற்கு தண்டனை வாங்கி  கொடுத்தாரா ? இல்லையா? அர்ஜுன் – ஆராத்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’பேட்டில்’  படத்தின் மீதிக்கதை.


அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.  ஆசிரியராக நடித்திருக்கும் நாயகி ஆராத்யா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். பள்ளி தாளாளராக வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கமான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.  


இசையமைப்பாளர் ஜீவா இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. 


ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை மைய கருவாக வைத்து  திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாராயணன்.பி.ஏ  இத்திரைப்படத்தில் ராப் பாடலை மட்டும் சொல்லாமல் தனியார் பள்ளிகளால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்த  வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


*வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)*

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், ''இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்'' என்றார்.

நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.

தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை- கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு - அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்... காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக... இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.

அதன் சாராம்சத்தில், 'வாரி வாரி ' ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி... நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி... அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.

தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து 'என்ஜாய் என்ஜாமி' பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.

இசைக்கு அப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R & B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You- லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வாரி வாரி - VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்... சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

https://youtu.be/B2uqmomb1Cs
கிருத்திக் மோகன், அமிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 3 மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிபதி இவர்களை ஆலோசனைக்காக மருத்துவரிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் கஸ்தூரி இவர்களிடம் பேச இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதனையடுத்து தொழிலதிபர் மகளுடைய கதையை சொல்ல கஸ்தூரி தொடங்குகிறார்.

பிரபல பிஸ்கட் கம்பெனியின் நிறுவனர் சம்பத் ராஜின் மகள் நாயகி ரோஸ்மின், கம்பெனியை திறமையாக நிர்வகித்து வருகிறார். நாயகன் ராணவ் வேலையில்லாமல் இருக்க நாயகி தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.

இதனையடுத்து இருவரும் காதலிக்க, இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ் அறிமுக படம் போல் இல்லாமல் நடிப்பில் மிரட்டிருக்கிறார். நடிகை ரோஸ்மின் அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். 

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா, நண்பராக வரும் ரவி மரியான் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கதற்கு இனிமை. எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பதை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா , இன்றைய சோசியல் மீடியா காலகட்டத்தில் அவசர காதல், கல்யாணம் , விவாகரத்து என்று வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 

*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை.*

*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு*

இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் Dhee அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, Dhee-யை உலக இசை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.

அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.

மேலும், ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் Dhee தனது கலை ஆழத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன.

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படுவதுடன், உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் Dhee, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்.

தற்போது, தனது சமீபத்திய சுயாதீன பாடலான ‘VARI VARI’ வெளியீட்டிற்காக அவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் தேதியன்று கொழும்புவில் இந்த இசை ஆல்ப வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த வெளியீடு அவரது தொடர்ந்து வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைகிறது. மேலும், அவரது கதை தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் ஒரு சிறப்பு தருணமாகவும் இது விளங்குகிறது.

*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*

*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*

இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.

“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.

மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.

“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pageviews