முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 'டான்ஸ் டான் 2' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி இன்று (ஜூலை 25) சென்னையில் நடத்தி வருகிறது. வேல்ஸ் கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத ஒரு முன்னெடுப்பை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மேற்கொண்டுள்ளது.
1973ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் 'டான்ஸ் டான் 2' நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனுடன், கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், "இத்தனை வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் எனக்கு, நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் நடன இயக்குநர்களாக அறிமுகமாகி பங்காற்றியவர்கள் குறித்த ஒரு தேடலைத் தொடங்கினேன். இவர்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், 1973 முதல் நடனம் அமைத்த கலைஞர்கள் 125 பேர் தற்போது உள்ளார்கள் என்ற ஆச்சரியமான தகவல் தெரியவந்தது.
இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் கௌரவித்து வருகிறோம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த 125 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. அதேபோல், நடன ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நடனப் பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிச்சமும் ஊக்கமும் கிடைத்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்," என்றார்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது.
நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும், அவருக்கு ஈடு கொடுக்கும் ஸ்டைலிஷான லுக்கில் சூரியின் நடிப்பும் அந்த ரயில் பயணமும், நிச்சயமாக இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களைப் புது உலகத்திற்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமீப நாட்களாக சீரியஸான கதாபாத்திரங்களில் கதைநாயகனாக நடித்து வரும் சூரியின் காமெடியை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் இந்த டீசர் தருகிறது.
படம் ஏற்கனவே தயாராகிவிட்டாலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை வென்று, அந்தப் பெருமையுடன் தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.
கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. விஜய் சரவணன் அவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி சிறப்புரை வழங்கிய வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.
தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.
இந்நிகழ்வில் மண்ணுக்கு மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள், மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மீ பதிப்பகம் சார்பில் மணிகண்டன் வெளியீட்டில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதியுள்ள ‘ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)’ எனும் புதிய நூலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.
நூலைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், இயக்குநரின் முந்தைய படைப்பான ‘சினிமாவின் ஆன்மா’ நூல் பெற்றது போன்றே, உலக சினிமா ரசனைக் கல்வியை மையமாகக் கொண்டுள்ள இந்த நூலையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு செல்வதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம் என்று உறுதியளித்து வாழ்த்தினார்.
நூலின் சிறப்பம்சங்கள்:
* நூல் தலைப்பு: ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)
* ஆசிரியர்: இயக்குநர் / கவிஞர் சீனு ராமசாமி
* வெளியீட்டாளர்: மீ பதிப்பகம் (மணிகண்டன்)
* நூல் பெற்றுக் கொண்டவர்: டாக்டர் எல். முருகன் (மத்திய இணை அமைச்சர்)
உலக சினிமா குறித்த ஆழமான பார்வையும், அதன் அழகியலையும் மாணவர்களும் சினிமா ஆர்வலர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் இலக்கிய மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பேசியதாவது..,
“இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரூபர்ட் ஐயா அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இது காலத்தின் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி என்று நான் கருதுகிறேன்.
இன்றைய சமூகத்தில் நற்செய்தியை அறிவிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. அந்த நோக்கத்திற்காக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயமாக மக்களின் மனதைத் தொடும் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். டிரைலரை மிகவும் அருமையாகவும், தரமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இங்கு ‘Tested, Trusted’ என்று கூறினார்கள். ஆனால் நான் சொல்வது, ‘Tested, Trusted and Tasted.’ வேதாகமத்தில், ‘கர்த்தர் நல்லவர் என்றும் ருசித்துப் பாருங்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அனுபவம் இருந்ததால்தான் இன்று இதை தைரியமாக பகிர்ந்து கொள்ள முடிகிறது.
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தை கொடுக்கிறார். ஆனால் எதிர்காலம் குறித்த பயம், குடும்ப சூழ்நிலை அல்லது தைரியக் குறைவு காரணமாக பலர் அந்த வரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கி விடுகிறார்கள்.
ரூபர்ட் ஐயா கடந்த 25 ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வும், தியாக மனப்பான்மையும் இந்த திரைப்படத்திலும் தெரிகிறது.
இறைவனால் ஆகாத காரியம் எதுவுமில்லை. பலருடைய வாழ்க்கையில் அதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இந்த முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.
‘நீங்கள் விசுவாசித்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பீர்கள்’ என்று வேதாகமம் கூறுகிறது. விசுவாசத்தோடு தொடங்கப்பட்ட எந்த முயற்சியும் தோல்வியடையாது. வெற்றியை அளிக்கும் இறைவன் நம்மோடு இருக்கிறார். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
இயக்குநர் ரூபர்ட் ரகுநாதன் பேசியதாவது..,
“எங்களுடைய குழுவின் சார்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ஐயாவை மனதார வரவேற்கிறேன். தாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. ஆண்டவர் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டிய நோக்கம் என்னவென்றால், கடந்த 25 ஆண்டுகளாக ‘பிரஜாபதி’ என்ற இந்த கதையை நாடகமாக மேடையேற்றி வந்திருக்கிறோம். 2013-ஆம் ஆண்டு ஆண்டவர் என்னிடம் பேசி, இந்த நாடகத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த நேரத்தில் நாடகக் கலை மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருந்ததால் எனக்கு ஆரம்பத்தில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இந்த பணியைத் தொடங்கினேன்.
முதலில் அரை மணி நேர நாடகமாக ஆரம்பித்தது. பின்னர் ஆண்டவரின் கிருபையால் அது வளர்ந்து மூன்று மணி நேர மேடை நாடகமாக மாறியது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இந்த நாடகத்தை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வந்திருக்கிறோம்.
இந்த நாடகத்தின் மூலம் ஆண்டவரின் நற்செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் சமீபத்தில் ஆண்டவர் மீண்டும் என்னிடம் பேசி, இதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். ஏனென்றால், சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். ஆகவே, திரைப்படம்தான் இந்தத் தரிசனத்தை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி என்பதை ஆண்டவர் எனக்கு உணர்த்தினார்.
அதனால், அந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். எங்களிடம் பெரிய பொருளாதாரப் பின்னணி எதுவும் இல்லை. இந்த முயற்சி முழுவதும் விசுவாசத்தின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது.
இந்த டிரைலரை உருவாக்குவதற்கே சுமார் ₹25 லட்சம் செலவானது. ஆனால் அந்த தேவைகள் அனைத்தையும் ஆண்டவரே சந்தித்தார். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்தப் பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட ஆளுமை செழியன் அவர்கள் எதிர்பாராத விதமாக எங்களை விட்டு பிரிந்துவிட்டார். இருந்தாலும், இந்த திரைப்படம் முழுமையடையும் வரை அவர் மேலிருந்து எங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கர்த்தர் தொடர்ந்து பெரிய காரியங்களைச் செய்வார். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.”
“பிரஜாபதி” என்பது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல. மனிதகுலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆன்மீகப் படைப்பாக இது உருவாகி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, “பிரஜாபதி” நாடகம் இந்தியா முழுவதும் அரங்கேறி, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்துள்ளது. அந்த ஆன்மீகப் பயணம் தற்போது உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக புதிய பரிணாமம் பெற்று, உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது.
இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பே “பிரஜாபதி” நாடகத்தை இயற்றி, இயக்கி, அரங்கேற்றி வந்த முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன், தற்போது அதையே திரைப்படமாக இயக்கி வருகிறார்.
“பிரஜாபதி” திரைப்படம் முழுமையாக மக்கள் பங்களிப்பில் (Crowdfunding) உருவாகும் இறைப்பணி என்றும், “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு” என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழில்முறை நடிகர்கள் அல்ல, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “பிரஜாபதி” நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் கலைஞர்களே இதில் நடித்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், திரைப்படத்தின் முயற்சியையும் அதன் ஆன்மீக நோக்கத்தையும் பாராட்டி, “பிரஜாபதி” திரைப்படம் உலகம் முழுவதும் மக்களின் இதயங்களைத் தொடும் படைப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கன்னக் குழியா..' என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில்.. தற்போது 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை படத்தின் இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை பிருந்தா மாஸ்டர் வடிவமைத்திருக்கிறார். ஜென் மார்ட்டினின் மெலோடியான மெட்டு- 'ரசகுல்லா' என்ற இனிப்பான சொல்- கலர்ஃபுல்லான நயன்தாரா - கம்பீரமான கவின்- இருவரது ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி- பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான கலாச்சார நடன பின்னணி- ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதால், இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது
ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
CHENNAI,India—July 27, 2026 — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது.
நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.
பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு இயக்குநரும், தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில்,
“தென்னிந்திய கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘வதந்தி’ எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்த தொடர்களில் ஒன்று. முதல் சீசன், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லையை மிகவும் வித்தியாசமாக சித்தரித்து, சஸ்பென்ஸ் குற்ற திரில்லர் வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. இப்போது இரண்டாவது சீசனை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பதும், மதுரையின் கலாச்சாரப் பின்னணியில் நகரும் இந்த பரபரப்பான கதை தொடரை மேலும் உயர்த்தியுள்ளது. புஷ்கர் – காயத்ரியுடன் எங்கள் கூட்டணி தொடர்வது பெருமைக்குரியது. கலாச்சார வேர்களை இழக்காமல் உலகளாவிய ரசிகர்களை கவரும் கதைகளை உருவாக்கும் அவர்களின் திறமை அபாரமானது. இந்த சீசனும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,
“சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார். தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே, அதை புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார். சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்
“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?”
சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார் பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.
இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் இளன், தனது வழக்கமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் இளன், சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது ..
“மிகவும் சுவாரஸ்யமான காதல் கதைகள் என்பது விதிகளைப் பின்பற்றுபவை அல்ல; அவற்றைத் துணிச்சலாக மறுபடியும் எழுதுபவை. “பியார் பிரேமா கல்யாணம்” ஒரு எளிமையான ஆனால் துணிச்சலான கேள்வியுடன் தொடங்குகிறது: திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன ஆகும்? அந்த ஒரு சிந்தனையே, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும், புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையாக விரிகிறது.
இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகும் இளன், இந்தப் படத்திற்கு புதியதொரு படைப்பாற்றல்மிக்க பார்வையை கொண்டு வந்துள்ளார். அவருடன் இணைந்திருக்கும் அற்புதமான நட்சத்திரக் குழுவும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பையும் தந்து நம்மை ஈர்க்கின்றனர்.
Made in Korea திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் Rise East Entertainment குழுவுடன் எங்களது கூட்டணியைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த மகிழ்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டுகளிப்பதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்..,
”‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு கதையை தேடிக் கொண்டிருந்தபோது, ‘ பியார் பிரேமா கல்யாணம்’ எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”
படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் ‘ப்யார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
Netflix Unveils Pyaar Prema Kalyanam:
A Modern Tamil Family Entertainer With a Delightful Role Reversal 27 July, 2026: 'Oodi poi kalyanam pannuradhu' ille na 'Kalyanam pannitu oodi poradhu' (trans.: should we run away to get married, or get married and then run away)? Meet the couple rewriting the rules of happily ever after! Pyaar Prema Kalyanam is here to flip the script on love, marriage, and everything that comes after "I do."
Directed by and starring Elan in his acting debut, the film follows Pavi (Saanvee Meghana), a popular influencer who refuses to leave her family home after marriage. Instead, it's her husband, Elan, who moves in with her, setting off a hilarious chain of culture clashes, family chaos, shifting expectations, and heartfelt self-discovery. As the newlyweds navigate their unconventional arrangement, they soon realise that perhaps the biggest tradition worth challenging is the idea that everyone else gets to define their happily ever after.
Marking Elan's acting debut, Pyaar Prema Kalyanam also showcases his signature storytelling – blending humour, emotion, and relatable family dynamics into a thoroughly entertaining watch. Backing him is a powerhouse ensemble featuring Radhika Sarathkumar, Yogi Babu, M. S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil, Maran and deepz Cyrus whose performances bring warmth and plenty of laughs to the story.
Monika Shergill, Vice-President Content, Netflix India said, "The most interesting love stories aren't the ones that follow the rules, they are the ones that dare to rewrite them. Pyaar Prema Kalyanam begins with a wonderfully simple but bold question: what if, after marriage, the groom moved into the bride's home instead? That single idea unfolds into a refreshingly funny, heartfelt and deeply relatable celebration of modern relationships, family and finding the courage to choose your own happily ever after.. Elan has brought a wonderfully fresh creative vision to the film, both as a director and in his acting debut, alongside a phenomenal ensemble cast that brings warmth, humour and authenticity to every moment. Following the strong response to Made in Korea, we are delighted to continue our collaboration with Sreenidhi Sagar and the team at Rise East Entertainment, and can't wait for audiences everywhere to discover this joyful family entertainer."
Producer Sreenidhi Sagar shares, "Following the incredible response to Made in Korea, which proved that authentic Tamil stories can resonate with audiences around the world, we were looking for another story with that same universal appeal. From the moment we heard this story, we knew it had the perfect blend of heart, humour, and relatability. What makes Pyaar Prema Kalyanam special is the way it explores modern relationship dynamics through a refreshing premise while remaining deeply rooted in family values and Tamil culture. It is a wholesome entertainer. At Rise East Entertainment, we are passionate about backing stories that feel both relevant and universal, and we're thrilled to partner with Netflix to bring this film to audiences across the world on August 21." Adding to the film's emotional resonance is a soulful soundtrack by Yuvan Shankar Raja, whose music beautifully complements its themes of love, family, individuality, and finding happiness on your own terms.
Get ready for a romcom where the groom moves in, the bride stands her ground, and the biggest wedding surprise begins only after the wedding is over. ~ This August 21, witness a wedding that breaks every rule – except entertaining you on Netflix ~
“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதே வரிசையில் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ளதால், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர்சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.
இந்தியா முழுவதும் சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.












