ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் - என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.


'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ''தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.


புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.


ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை 'ஜூம்' செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'கே ஜி எஃப்' படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,'' என்றார்.


நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், '' என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை அபிராமி பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.


ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.


பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.


நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌


இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.


இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,'' என்றார்.


கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.


எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌


இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த 'பிளாஸ்ட்' திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்


இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.


இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். 


இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.


இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.


நடிகர் அர்ஜுன் பேசுகையில், ''வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


'பிளாஸ்ட்' திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.


படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.


நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,'' என்றார்.


 

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திரிஷ்யம் 3' மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.


'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, 'திரிஷ்யம் 3' திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.


இவ்வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


"இந்த சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்," என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

 

2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மார்கோ' திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான 'காட்டாளன்' உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார்.


பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. "பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்," என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். 


'காட்டாளன்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 


'கேஜிஎப்' திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் 'காட்டாளன்' படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. 


"ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள 'காட்டாளன்' திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்," என படக்குழுவினர் மேலும் கூறினர். 

 

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.


பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.


15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.


இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், 'ஃபியூஷன்' (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.


ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'சைவம்' (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு 'சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது' கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த 'பிசாசு' திரைப்படத்தின் 'நதி போகும் கூழாங்கற்கள்' பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

 

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.


உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் ( Post Production )முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.


படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


* எழுத்து & இயக்கம் – மு. மாறன் 

* இசை – விஜய் ஆண்டனி 

* ஒளிப்பதிவு – ராஜீவ் ராஜேந்திரன் 

* எடிட்டிங் – விஜய் ஆண்டனி 

* தயாரிப்பு வடிவமைப்பு – A. ராஜா 

* உடை வடிவமைப்பு – G. அனுஷா மீனாட்சி 

* சண்டைக் காட்சிகள் – ராஜசேகர் 

* ஒலி வடிவமைப்பு – ரஹமதுல்லாஹ் 

* மக்கள் தொடர்பு – ரேகா


ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Teaser : https://youtu.be/OrIqzmpg04k?si=Nw7jnPaomNXoWYPl

*A Refreshing Take on Modern Love and Youth Relationships – “Yellow Yellow Dirty Fellow” First Look Released !!*

Produced by AP International and Vishnuu Vishal Studioz, and directed by debutant Vikkie Bhaskar, the first look of “Yellow Yellow Dirty Fellow”, starring “Oho Enthan Baby” fame Rudhra and Preethi Asrani, has been officially unveiled, along with the title teaser of the youthful comic entertainer. 

Having previously worked on short films and feature films, Vikkie Bhaskar makes his directorial debut with this project. The film registers itself as a fun filled commercial entertainer that explores the love life and lifestyle of today’s modern Instagram influencers in a fresh and relatable manner. 

The newly released first look reflects the lifestyle, romantic relationships, and emotional complications faced by the Gen Z generation in today’s world. The story revolves around the troubles encountered by an innocent young man who gets trapped in a complicated relationship with a modern-day girlfriend. Designed to appeal to young audiences, the first look has already been receiving a positive response from fans and cinema lovers across social media platforms. The title teaser which was released after the first look is getting an excellent response for its vibe, making and music. 

Apart from Rudra and Preethi Asrani playing the lead roles, the film also features Angel Maria, Monisha Mohan, Karunakaran, Jensen Divakar, Nikhila Sankar, Chethan, Devadarshini, and Anupama in pivotal roles.

The film is produced by Sanjay Arjundas Wadhwa under the banner of AP International and Vishnuu Vishal under Vishnuu Vishal Studioz. Shubhra, Aryan Ramesh are serving as co-producers.

The shooting of the film has been completed across Chennai, Vietnam, and several surrounding locations. With filming wrapped up, post-production work is currently progressing at a brisk pace. The team has announced that official updates regarding the trailer and audio launch will be revealed soon.

Technical Crew

Production: AP International & Vishnuu Vishal Studioz
Director: Vikkie Bhaskar
Cinematography: Luke Jose
Editor: Nash
Music: Barath Shankar
Publicity Design: Viyaki
Costume Designer: Nava Rajkumar
Art Director: Veeramani Ganesan
CG: Srivfx
PRO: AIM Sathish

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  

சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  

“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. 

இன்றைய நிகழ்வில்… 

இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…

முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.

கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., 

கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. 

இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.

ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.

இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.

ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.

இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.

அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.

https://youtu.be/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6

வேலன் ஆடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் "விக்ரம் வருண்"  இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கந்தனின் புகழ் மாலை’ பக்தி ஆல்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சினிமா துறையில் ‘கொம்பன்’, ‘குட்டி புலி’, ‘வீர சிவாஜி’, ‘தகராறு’, ‘பானா காத்தாடி’,"முதல் இடம் "போன்ற முன்னணி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும் ‘eyeballfilm Ad Film Agency"’ மூலம் 70க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியவருமான "விக்ரம் வருண்"
 இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

இந்த ஆல்பத்திற்கு திரு. எம்.எஸ். பாரதி இசையமைத்துள்ளார். பாரம்பரிய மற்றும் நவீன இசைக்கருவிகளைத் தொழில்நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி ஐந்து பாடல்களையும் மிக வித்தியாசமான முறையில் அவர் உருவாக்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஆல்பம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமானார்.  அவரது வாழ்நாள் கனவை நனவாக்கும் வகையில் தயாரிப்பாளர் M.முருகன் அவர்களின் முழு ஆதரவோடு இந்த விழா அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் தமிழ் திரையுலகின் முன்னணிப் பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீவர்த்தினி (இசையமைப்பாளர் தமன் மனைவி), சுருமுகி மற்றும் 
வி.எம். மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். எடிட்டிங் பணிகளை 
எம்.எஸ். கோபியும், கேமரா பணிகளை கிறிஸ்டோ பாப்பும் கவனித்துள்ளனர். நடன அமைப்பை மாஸ்டர் மோகன் பரமா,மேக்கப் வரலக்ஷ்மியும்,பரத நடனத்தை லோஹிதா மற்றும் சுஷ்மிதா இருவரும் நடன இயக்குநர் மோகன் பரமாவுடன் இணைந்து
அமைத்துள்ளனர்.

விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் விக்ரம் வருண் 
"இது முருகப் பெருமானின் அருளால் அமைந்த ஆல்பம். எனது தயாரிப்பாளர் M.முருகன் அவர்கள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிப்ட். மறைந்த இசையமைப்பாளர் பாரதி அவர்களின் கனவை நனவாக்கப் பாடுபட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறினார். 

#கந்தனின்புகழ்மாலை #murugandevationalsong #MSBharathi #mudicdirectorMSBharathi #directorvikramvarunn #producerMMurugan 
#eyeballfilmadagency #velanaudios #anbazhagan #DOPChristobob #choreographymohanparama 
#editingMSGopi #sivaprfactory #prosivakumar #ActressAnukrishna #anuradhasriram #singersrivarshini #smuruki 
#vikramvarunn

 

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக 'ஹபீபி' இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் ". 


நடிகர் சமுத்திரக்கனி, " இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்".


இயக்குநர் மகிழ் திருமேனி, "'ஹபீபி' திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் 'ஹபீபி'. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இயக்குநர் கணேஷ் கே பாபு, " முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் 'ஹபீபி' திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஹரிஹரன் ராம், "நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் தினகரன் சிவலிங்கம், "மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது". 


இயக்குநர் அவிநாஷ், " இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்". 


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, "தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்". 


தயாரிப்பாளர் தேனப்பன், "இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்". 


இயக்குநர் சேரன், "இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஜகாரியா முகமது, "நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் சுசீந்திரன், " எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. 'ஹபீபி' படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்". 


இயக்குநர் லீனா மணிமேகலை, "மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".


இயக்குநர் வெற்றிமாறன், "'ஹபீபி' எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்".


நடிகர் நாசர், "'ஹபீபி' படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்".


இயக்குநர் துரை, "இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


தவெக எம்எல்ஏ முஸ்தபா, "இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், 'ஹபீபி' நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்".


பாடகர் சத்யன், "இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் பாண்டிராஜ், "நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்". 


இயக்குநர் அமீர், " பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். 'வாழை' திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ". 


இயக்குநர் மிஷ்கின், " இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! 'ஹபீபி' ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்".


இயக்குநர் கஸ்தூரி ராஜா, "மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்".


இயக்குநர் ரஞ்சித், "நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்". 


நடிகர் ஈஷா, " விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".


நடிகை மாளவிகா மனோஜ், "தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இசையமைப்பாளர் சாம் சி எஸ், "வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது"


இயக்குநர் ராம், "பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்"


இயக்குநர் மீரா கதிரவன், "படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் 'ஹபீபி'. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".

 

சிறையில் இருந்து வெளியே வரும் துஷாராவிற்கு ஜெயிலர் அப்பாஸ் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி  பாலன்,  தனது  5 வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு  தைகாராவிற்கு மாற்றலாகி காரில் சென்று கொண்டிருக்கும் போது  அவரை துஷாரா கடத்தி சென்று விடுகிறார். அதிதிக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து துஷாரா பதவியேற்கிறார். இந்நிலையில் அரசாங்கம் நடத்தும் உயர் அதிகாரிகள் பணிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு தைக்காராவில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. அத்துடன் இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைக்கிறது. இதனையடுத்து இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள சதியை  கண்டுபிடிக்க துஷாரா தீவிரம் காட்டுகிறார்.   இந்நிலையில் துஷாரா பிடியில் இருந்து  அதிதி தப்பிச் செல்கிறார்.  இறுதியில் தேர்வு முறைகேடு செய்பவர் யார் ? என்பதை  துஷாரா  கண்டுபிடித்தாரா ? இல்லையா ? துஷாரா சிறைக்கு செல்ல காரணம் என்ன? தப்பிச் சென்ற அதிதியை,  துஷாரா கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே  மீதிக்கதை.  


ஜான்சி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் கிராமத்து அப்பாவி பெண்ணாக இயல்பான நடிப்பால் கவர்கிறார். படிப்பு , துணிவு, கோபம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் மிரட்டியிருக்கிறார். முழுப்படத்தையும் தன்  தோள் மீது  சுமந்து நிற்கிறார்.


மரமல்லி  கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் குறுக்கு வழியில் முன்னேறு நினைக்கும் குள்ளநரி குணம் கொண்டவராக பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.


ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் . அக்காவாக வரும் வசுந்தரா  மற்றும் நரேன் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் சாம் சிஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது . அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.


 TNPC  தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள  சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்  இயக்குநர் A.சற்குணம் இத்திரைப்படத்தில் வசதி படைத்தவர்களால் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Pageviews