'NTRNeel' திரைப்படம் 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் மற்றும் 'கேஜிஎஃப்', 'சலார்' படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோர் இணையும் இந்த படம் ரசிகர்களுக்கு தனித்துவமான திரையுலக அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


'NTRNeel' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளான என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகிய இருவரும் இணைவது, இந்தப் படத்தை 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், படக்குழு அதிரடியான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், என்டிஆர் பிறந்தநாளான மே 20 ஆம் தேதி படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த போஸ்டரில் என்டிஆரின் ஸ்டைலான தோற்றம் 'NTRNeel' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மே 20ஆம் தேதி வெளியாகும் முதல் கிளிம்ப்ஸ், ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. NTR பிறந்தநாளில் வெளியாகும் இந்த கிளிம்ப்ஸ், அவரை திரையில் காண ஆவலாக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும்.


மேலும், இந்த படத்திற்காக என்.டி.ஆர்ரின் அதிரடியான உடல் மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் அவரை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இயக்குநர் பிரஷாந்த் நீலின் மிகப்பெரிய படமாக 'NTRNeel' உருவாகி வருகிறது. 'கேஜிஎஃப்' மற்றும் 'சலார்' படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் அவரின் மேஜிக்கை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும், இவருடன் மாஸ் நடிகர் என்டிஆர் இணைந்திருப்பது, இந்திய சினிமாவில் மிக வலுவான இணைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதன் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் என்டிஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

 

மே மாதம் ஜியோஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 


ஜியோஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது.  நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.


இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.


100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.  மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு வாரமும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரின் எபிசோட் வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க இருக்கிறது.  


தொடரின் கதாபாத்திரங்கள், ஈர்க்கக்கூடிய கதை சொல்லல் என ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரின் அசல் உள்ளடக்கங்களில் மற்றுமொரு புதிய வரவு. 


இந்த வருடம், மே மாதம் முதல் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.


ஜியோஹாட்ஸ்டார் பற்றி:


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.


“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.


காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.


Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.


இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின்  காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !!


முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Mohan Pictures நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா  இணைந்து தயாரிக்கிறார்.


பூரி ஜெகன்நாத்  தனது இயக்குநர் பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.


இந்த சிறப்பு தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்:


“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.


அன்புள்ள பூரி சார், #ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாக செய்கிறீர்கள்.


இந்த படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் ஒரு மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன் ” எனத் தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும் பிரம்ஹாஜீ மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.


அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்திற்கு இசையமைக்கிறார்.


“ஸ்லம் டாக்” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


நடிப்பு: விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்


தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்   : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா

வழங்குபவர் : சார்மி கௌர்

தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects

CEO : விஷு ரெட்டி

இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா


*கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!*

*White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!*

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.

White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், அஜித் நடித்த “துணிவு” மற்றும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.

“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.

தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.

இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது:
“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.”

தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது.

இப்பாடலை வெளியிடுகையில், பின்வரும் குறிப்புடன் தனது செய்தியை திரு.கமல்ஹாசன் நிறைவு செய்தார்:
“இப்போது இது உங்கள் கைகளில் உள்ளது. நல்லுள்ளங்கள் இதைக் கேட்பீர்களாயின், தயவுசெய்து இதைப் பரவலாகப் பரப்புங்கள்.”

உங்களின்,
கமல்ஹாசன்

இப்பாடல் இப்போது பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கிறது.
இங்கே பார்க்கவும்: 
https://youtu.be/L3LYzZHYmKo

 

மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, "'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை". 


மேலும், "'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.


நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்


உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று 'பிரேக்ஃபாஸ்ட்'  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது

 

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், 'பிக் பாஸ் சீசன்8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். 


இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. 


இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, "காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும்படியான படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய படம் வெளியாகிறது. அதில் நான் கதாநாயகன் என்பது எனக்கு இன்னுமே ஸ்பெஷல். உறவுகளில் உள்ள உண்மை மற்றும் நுட்பத்தை பேசிய வகையில் 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது. காதல், உண்மை, குழப்பம் மற்றும் சுயம் அறிதல் என் பல உணர்வுப்பூர்வமான அடுக்குகளை 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். உறவுகளுக்கு இடையேயான அமைதியை வார்த்தைகளை தாண்டி புரிந்து கொள்ளும் கதாபாத்திரம் என்னுடையது. 


நவீன யுகத்தில் உறவுகளுக்கு இடையேயான சிக்கல், எதிர்பார்ப்பு, உணர்வு ரீதியிலான இடைவெளி மற்றும் வெளிப்படுத்த இயலாத உணர்வுகள் என பலவற்றை படம் பேசியிருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் இந்தக் கதை திரையில் பிரபதிபலிப்பதால் நிச்சயம் அவர்களும் இந்தக் கதையில் தங்களை பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். இது வெறும் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணம்" என்றார்.


நடிகர்கள்:  ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்

 

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 – இன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்ட்-இன் பிரதிநிதிகளும் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களும், திரைப்பட தயாரிப்பு துறையை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை விவாதிக்க ஒன்று திரண்டனர்.


இந்த கூட்டத்தில், திரைப்பட வெளியீட்டு விதிமுறைகள் அல்லது 8 வார  OTT இடைவெளி தொடர்பாக, பரஸ்பர ஆலோசனை இன்றி தொழில்துறையின் பிற பங்குதாரர்கள் எடுக்கும் எந்த ஒருதலைப்பட்ச முடிவுகளையும் ஒருமனதாக கண்டித்தனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கும் தற்போதைய திரைப்பட தயாரிப்பு சூழலை திடீரென மாற்ற முடியாது என்பதும், அத்தகைய திடீர் மாற்றங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ள திட்டங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.


கூட்டத்தின் முக்கிய முடிவுகள்:


தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அமைப்பு: தயாரிப்பாளர்களின் நலன்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க, South Indian Film Producers Association (SIFPA) என்ற தனித்துவமான அமைப்பை உருவாக்க ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.


வழிநடத்தல் குழு: தென் இந்தியாவின் நான்கு மொழி திரைப்படத் துறைகளிலிருந்தும் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை வழிநடத்தல் குழு  அமைக்கப்பட்டுள்ளது. இது உடனடி சவால்களை கவனித்து, நான்கு மொழித் துறைகளும் தயாரிப்பாளர்களும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.


தயாரிப்பாளர்களுக்கு ஆலோசனை: அனைத்து தயாரிப்பாளர் உறுப்பினர்களும், தற்போதைய திரைப்பட தயாரிப்பு நடைமுறைகள், பல்வேறு உரிமைகள் விற்பனை விதிமுறைகள் மற்றும் வெளியீட்டு அட்டவணைகளை தங்களுடைய விருப்பப்படி தொடர்ந்து மேற்கொள்ளலாம். எந்த அமைப்பு விதிக்கும் கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள் இன்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


OTT வார இடைவெளி குறித்து நிலைப்பாடு: தயாரிப்பாளர் உறுப்பினர்கள், இந்த கட்டத்தில் எந்த அமைப்பு அல்லது துறைக்கும் OTT வெளியீட்டு இடைவெளி குறித்து எந்தவொரு உறுதிமொழி கடிதங்களையும் வழங்க வேண்டாம் என்று குறிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய விதிமுறைகள் அனைத்தும் தயாரிப்பு துறையின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய, கூட்டு ஆலோசனையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.


புதியதாக அமைக்கப்பட்ட SIFPA-வின் வழிநடத்தல் குழு அடிக்கடி கூடிக் கொண்டு, தொழில்துறையின் முதன்மை அபாயத்தை ஏற்றுக் கொள்கின்ற தயாரிப்பாளர், அனைத்து தீர்மானங்களிலும் சுயாதீனமான பங்குதாரராக இருப்பதை உறுதி செய்யும்.

வெளியிட்டது:


வழிநடத்தல் குழு 

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (SIFPA)

நன்றி. வணக்கம்.

 

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார்.


இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.‌ தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு 'அண்ணன்' ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து அன்பும் வாழ்த்துக்களும் குவிய தொடங்கி உள்ளன.


இந்த குழந்தையின் வருகை அக்குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளதுடன் அவர்களது வாழ்வில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.


இந்த சிறப்பான தருணத்தை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் அட்லீ மற்றும் பிரியா தம்பதிக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

Pageviews