மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.
இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது 'அழியாத கோலங்கள் 2' திரைப்படம் அதன் முதிர்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான 'ட்ரீம் கேர்ள்' காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது 'சைக்கிள் கேப்' இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.
டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
இசையமைப்பாளர்: சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்),
பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கௌஷிக் ஸ்ரீதரன்,
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜா சூர்யா நிலா,
ஒளிப்பதிவு: சாலமன் போஸ் டி.எஸ்.,
படத்தொகுப்பு: சரவண எட்டயஞானம்,
வசனம்: ஹேமந்த் செல்வராஜ்
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.
தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக, இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.
மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத், இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
“ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”
70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.
“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.
ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது...
“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”
Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்..,
“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.
மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் : தி வோர்டெக்ஸ் சீசன் 2 மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் 'Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு' எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge-watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் : தி வோர்டெக்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.








