தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான   “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.


ப்ரைம் வீடியோ  தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.


சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும்  அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்,  ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.


மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.


இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.


டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.


“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.


இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,


“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன.  “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர்  என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,


“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.


சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா  கூறுகையில்…,


“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22  மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

 

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.


ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.


பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.


இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.


சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.


ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.


படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


நடிப்பு:

சந்தீப் கிஷன்


தொழில்நுட்ப குழு:

எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா

தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி

தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments

இசை – மணி சர்மா

ஒளிப்பதிவு – மதி

படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா

சவுண்ட் டிசைன்  – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்

PRO – யுவராஜ்

 

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது.


பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார்.


இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம்பெற்றன. கோவில் வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முன்னாள் MLA K. பாபு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA K. பிரேமன், சுமீஷ் அச்சுதன், மாட்டனூர் சங்கரன்குட்டி, மாறார், பிரகாஷ் உள்ளியேறி, ராதாகிருஷ்ணன், நித்தின், கோவில் செயலாளர் தேவிதாஸ் மற்றும் அறங்காவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இந்த விழாவிற்கு கேரளா மற்றும் தமிழ் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டனர். ரவி மோகன் அவர்களின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், கோவிலின் ஆன்மிக சூழலும், பல்லாஸனா பழையகாவு  பகவதி அம்மன் தேவஸ்தானம்  அமைப்பின் பாரம்பரியப் பெருமையும் குறித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


விழாவை மேலும் கொண்டாட்டமயமாக்கியது பாடகி கெனீஷா அவர்களின் அதிரடி இசை நிகழ்ச்சி. தனது இசைக்குழுவுடன் மேடையேறிய அவர், சக்திவாய்ந்த குரல், உற்சாகமான மேடை நிகழ்வு மற்றும் ரசிகர்களுடன் கொண்ட நேரடி தொடர்பின் மூலம் அரங்கையே கொண்டாட்ட சூழலாக்கினார். மென்மையான மெலடிகளும், ஆற்றல் மிக்க பாடல்களும் கலந்த அவரது இசை நிகழ்ச்சி, ரசிகர்களை முழுமையாக ஈர்த்தது.


ஆன்மிகம், பாரம்பரியம், சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த “உத்சவ் 2026”, சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் நினைவுகூரத்தக்க விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ரவி மோகன் மற்றும் தனது இசை நிகழ்ச்சியால் விழாவை மேலும் உயர்த்திய கெனீஷா ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.


ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.

வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,
புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,
நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…
“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,
பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் கவின் பேசியதாவது…,
பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,
பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,
விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,
தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகை கௌசல்யா பேசியதாவது..,
இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனா பேசியதாவது,
“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.

Trailer Link 🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

As the Brand Ambassador of Chennais Amirta, Ms. Sreeleela visited Chennais Amirta Aviation College on 9th May 2026 and spent memorable quality time with the students in a cheerful and interactive atmosphere. She was highly impressed and amazed by the institution’s world-class infrastructure, which includes a realistic airport setup, airline gate-pass simulation areas, a miniature airport model, and a real flight setup with aircraft engine training exposure designed to provide students with practical industry experience.

Chennais Amirta Group of Institutions Chairman Mr. Boomeenaathaan had given 100 plus students scholarship Worth 28 Lakhs in this event.

Ms. Sreeleela appreciated the institution’s unique training methodology and was delighted to learn that students are provided with valuable international exposure and part-time work opportunities through which some students earn up to ₹35,000 during their training period. She lauded the institution for creating such strong career-oriented opportunities that empower students both professionally and financially.

During her visit, Ms.Sreeleela warmly interacted with the students, sharing conversations, laughter, and experiences throughout the session. Her friendly nature and energetic presence created excitement and inspiration among the students. She explored the creative carvings and artistic displays arranged by the students and showed genuine curiosity in understanding their creativity and talent.
She also enjoyed tasting cuisines from five different countries specially prepared and displayed for the occasion. Appreciating the variety of dishes and flavours, she enthusiastically spoke about her favourite foods, diet preferences, and love for exploring global cuisines, making the interaction lively, engaging, and enjoyable for everyone present.

As the visit coincided with the Mother’s Day celebrations, Ms. Sreeleela became emotional while speaking about her mother and the cherished memories they shared together. She expressed how her mother played a significant role in shaping her life and career and fondly recalled the moments they spent bonding together. Her heartfelt words created a strong emotional connection with the students and made the interaction even more meaningful and memorable.

The students of Chennais Amirta Aviation enthusiastically interacted with her and asked several questions about her lifestyle, fitness routine, food habits, career journey, and personal interests. Ms.Sreeleela responded to every question with warmth, positivity, humility, and happiness, making the students feel comfortable and personally connected throughout the session. She dedicated valuable time to motivating and encouraging young aspirants through inspiring conversations and engaging activities.

The visit concluded on a memorable and emotional note, leaving the students highly motivated, encouraged, and confident about pursuing their dreams and future careers with dedication, discipline, passion, and determination.

Chennais Amirta continues to stand as a symbol of excellence in education, innovation, skill development, and global career empowerment. With its strong commitment towards practical learning, international exposure, and student success, the institution continues to shape the future of young aspirants by creating opportunities that help them achieve their professional dreams and build successful careers across the world.
Chennais Amirta Group of Institutions has emerged as one of the leading educational institutions in the country, transforming the lives of thousands of students who have achieved success with flying colours. The institution proudly states that more than 31,651 students have been successfully placed across various countries worldwide, creating remarkable career opportunities and global exposure for aspiring professionals.

Chennais Amirta International Aviation College has rapidly grown into one of the leading aviation institutions in India and is recognized by the Government of India. The college has gained significant recognition for its advanced infrastructure, practical training environment, and industry-oriented education. Recently, Key representatives from AirAsia visited the campus, during which nearly 170 students were successfully selected for international internships along with permanent placement opportunities across different countries.
Vithu, the protagonist, lives in Salem with his family. Despite having turned 29, he is still on a quest to discover his true identity. He moves to Chennai in search of employment, and—coincidentally—the female lead, Preethi, joins the very same company where he works. As they interact and build a friendship, their bond eventually blossoms into romance.

At this juncture, Vithu begins to define his entire identity solely through his relationship with Preethi—living as "Preethi's boyfriend." Preethi, however, has harbored a lifelong ambition since childhood: to study for and become a District Collector. This divergence in their life goals leads to a separation between the two.

Subsequently, having failed to perform well in the Collector entrance examinations, Preethi leaves town and heads to Delhi. Heartbroken by the failure of his romance, Vithu returns to his hometown, where he becomes involved in a protest against a college that has been illegally constructed by encroaching upon a canal.

As a result of his activism, Vithu is imprisoned; once inside, his adversaries plot to have him murdered while in custody. The remainder of the film '29' explores whether Vithu manages to emerge from prison alive, whether he succeeds in establishing his own distinct identity for the world to recognize, and whether the romance between Vithu and Preethi ultimately reaches a successful conclusion.

Vithu, playing the character of Sathya, fits the role of an energetic and spirited young man perfectly. He has beautifully internalized the various facets of his character—encompassing romance, filial affection for his mother, and social consciousness—delivering a deeply emotional performance. He is particularly impressive in the action sequences, where he displays great intensity. If he continues to select and star in films with such compelling storylines, he is certain to carve out a unique and prominent niche for himself within Tamil cinema.

Preethi Asrani, who portrays the female lead 'Viji,' is not only visually charming but also captivates the audience with her nuanced and restrained performance. He has beautifully expressed, through his performance, the emotional turmoil of being caught between love and ambition.

Master Mahendran, who plays an antagonist, has executed his role flawlessly. Avinash, playing the protagonist's friend, delivers a performance—particularly in his lamentations over a failed romance—that is both entertaining and humorous.

The supporting cast—including Adhira Pandilakshmi as the protagonist's mother, Sindhu Shyam as the heroine's mother, and Premkumar as the heroine's father—proves to be the perfect choice for their respective roles, fitting seamlessly into the narrative.

Composer Sean Roldan’s music is melodious, and his background score flows in perfect harmony with the storyline. Madhesh Manickam’s cinematography serves as a significant asset to the film.

Director Rathna Kumar has crafted a screenplay centered on the core theme that lovers require an identity of their own—going beyond the mere expression of romance. Kudos to the director for delivering a film that appeals to a universal audience by seamlessly blending elements of ambition, maternal affection, and social consciousness alongside the central love story.

Cast: Vidhu, Preethi Asrani, Master Mahendran, Avinash, Premkumar
Music: Sean Roldan
Direction: Rathna Kumar
Public Relations: Satish Kumar (S2 Media)

- NithyaSana

 

மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.


இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது 'அழியாத கோலங்கள் 2' திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான 'ட்ரீம் கேர்ள்' காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது 'சைக்கிள் கேப்' இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார். 


படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார். 


படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.


டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


தொழில்நுட்பக்குழு விவரம்:


இசையமைப்பாளர்: சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்), 

பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கௌஷிக் ஸ்ரீதரன், 

நிர்வாக தயாரிப்பாளர்: சுஜா சூர்யா நிலா,

ஒளிப்பதிவு: சாலமன் போஸ் டி.எஸ்., 

படத்தொகுப்பு: சரவண எட்டயஞானம், 

வசனம்: ஹேமந்த் செல்வராஜ்

 

துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.


தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.


மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.


இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.


ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்ப குழு விவரங்கள்:


லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சமன் சாக்கோ

தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்

தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்

உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்

பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)

போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே

மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

 “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”


70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு


மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார். 


இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.


படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.


படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.


மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.


கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு  மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார். 


நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண்  நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Pageviews