வலமிருந்து இடமாக :  திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி


கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது.  


கவிஞர், எழுத்தாளர் திரு. செல்வரத்தினம் (எ)  செல்வா (இலங்கை) அவர்களுக்கு தமிழ், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாராட்டி “வாழ்வியல் வழிகாட்டி” எனும் விருது வழங்கப்பட்டது.  


தென்னிந்திய திரைத் தொடர்புத் துறையில் தனித்துவமாய்த்  திகழும் திரு. நிகில் முருகன் அவர்களுக்கு மக்கள் தொடர்பு மாமணி எனும் விருது வழங்கப்பட்டது.  

 

கடந்த வருடம் பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான "வல்லமை" திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனையை பேசிய விதத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது.   மியூசிக்கல்  ஹாரராக வித்தியாசமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு சூரஜ்நல்லுசாமி, இசை பிரேம்ஜி, பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

 

அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில்,  சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளதுடன், ஆடை வடிவமைப்பை வினையா தேவ் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் கவனித்துள்ளார். நிர்வாக தயாரிப்பை மூவேந்தர் மேற்கொண்டுள்ளார்.

 

தயாரிப்பு   நிறுவனம்  -அம்மன்யா மூவிஸ்  


தயாரிப்பாளர்     -  சி.வி. மஞ்சுநாதா 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சு. காளிங்கன் 


படம் குறித்து இயக்குனர் சு. காளிங்கன் கூறுகையில்....


 இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விசயங்கள்  இருக்கிறது. அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கிறது. நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர்  பகவான் என்றால், அவர்  யார்?,  அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்விகளுக்கான பதில்  தான் இப்படத்தின் மையம். நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை  உருவாக்கியுள்ளோம். 


 “பகவான்” ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது. நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும், இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படி பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன. 

மொத்தத்தில், “பகவான்” படம் ஒரு புதிய சிந்தனையுடன், வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும் என்றார்.


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். Seventh ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் இப்படத்தை மே மாதம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

 

A new look at Spider-Man: Beyond the Spider-Verse has been unveiled, building excitement for the next chapter in the Spider-Verse saga.


The Spider-Verse hype continues to soar as four brand-new posters from Spider-Man: Beyond the Spider-Verse have been revealed. The new posters were shared by Sony Pictures as part of the CinemaCon 2026 celebrations. “A new look at Spider-Man: Beyond the #SpiderVerse. Coming soon,” read the caption featuring Miles Morales in the next stage of his journey.


Hunted by Miguel O’Hara’s Spider Society and betrayed by his own friends, Miles finds himself navigating the darkest corners of the Spider-Verse in search of a way home. With his family not only fractured but now in danger because of his choices, it becomes a race against time for Miles—pushing him across the wildest reaches of time and space to fight for and reunite everything he holds most dear.


Directed by Bob Persichetti and Justin Thompson, Sony Pictures Entertainment India will release Spider-Man: Beyond the Spider-Verse in theatres on 18th June,  2027 in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam across all premium formats.

 

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.


ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.


பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. திரையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள்  எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து, வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி,  குழந்தை நட்சத்திரம்  அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். (மேலும் விரிவான கதாப்பாத்திர பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.)


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் சுவாரஸ்யங்களை தந்து வரும் நிலையில்,  முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள “கான் சிட்டி”, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் ( Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.


இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.


இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். 


படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.


தொழில்நுட்ப குழு விவரங்கள்:


லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சமன் சாக்கோ

தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்

தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்

உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்

பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX   : தௌஃபீக் (எக்வொயிட்)   (Eggwhite)

போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே

மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

யோகி பாபுவின் அடுத்த படமான சன்னிதானம் பிஓ-வின் முதல் சிங்கிள் 'ஏறி வந்தோம் ஐயப்பா' வெளியீடு: ஆன்மீக உணர்வை தட்டியெழுப்பும் பாடல்!


சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.


புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார்; அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே  படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


நடிகர்கள்:


யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், முன்னார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சாத்விக், அஸ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மதுசூதன் ராவ்.


தொழில்நுட்பக் குழு:


 வசனம் & இயக்கம்: அமுத சாரதி

 கதை & திரைக்கதை: அஜினு ஐயப்பன்

 தயாரிப்பாளர்கள்: மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் & ராமசாமி வேலு

 இணை தயாரிப்பாளர்: ஷபீர் பதான்

 தயாரிப்பு நிறுவனங்கள்: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்

 ஒளிப்பதிவு: வினோத் பாரதி

 இசை: ஏ.ஜி.ஆர்

 படத்தொகுப்பு: பி.கே

 கலை இயக்குநர்: விஜய் தென்னரசு

 சண்டைப்பயிற்சி: மெட்ரோ மகேஷ்

 பாடலாசிரியர்: மோகன் ராஜன்

 நடன அமைப்பு: ஜாய் மதி

 ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்

 ஒப்பனை: சி. சிபுகுமார்

 புரொடக்‌ஷன் கண்ட்ரோலர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்

 நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி

 இணை இயக்குநர்கள்: ஷக்கி அசோக் & சுஜேஷ் ஆனி ஈப்பன்

 அசோசியேட் இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்

 உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா

 பப்ளிசிட்டி டிசைனர்: வி.எம். சிவகுமார்

 புகைப்படங்கள்: ரெனி மோன்

 மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்

 ஆடியோ லேபில்: ட்ரெண்ட் மியூசிக்

 

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky Kej, நிர்வாகத் தயாரிப்பாளர் சுமதி ராம், ஸ்டார்ஸ் மியூசிக் ஸ்டுடியோ மற்றும் சன்மூன்ஸ்டார்ஸ் ஃபிலிம் ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

பெங்களூரு, இந்தியா: மூன்று முறை கிராமி விருது வென்ற Ricky Kej, தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவான ‘கெவி’ திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ‘செட் மீ ஃப்ரீ!’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமதி ராம் முன்னெடுத்த இந்த முயற்சி, உள்ளூர் கதைக்கும் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது.

ஆஸ்கார் கேம்பைன் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான வெள்ளகெவி கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘கெவி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இருமொழிப் பாடல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இயக்குநர் லெனின் பாரதி குறிப்பிட்டதாவது:

“தேர்தல்களின் போது மட்டுமே தங்களை வந்தடையும் வாக்குப்பெட்டிகளைத் தவிர, வாழ்வாதாரத்தின் மற்ற எல்லா வழிகளும் மறுக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள மலை மற்றும் பள்ளத்தாக்குகளில் வாழும் குரலற்ற மக்களுக்கு இந்த திரைப்படம் அர்ப்பணிக்கப்படுகிறது.”

உலகளாவிய சிறப்புப் பாடலான ‘செட் மீ ஃப்ரீ’ பாடலை சுமதி ராம் எழுதியுள்ளார்; Ricky Kej இசையமைத்துள்ளார். இசை தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வனில் வெய்காஸ் கவனித்துள்ளார். பாடலை தபிதா ரோஸ், சிவராஜ் நடராஜ் மற்றும் லாரா டிக்கின்சன் பாடியுள்ளனர்.


திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா கூறியதாவது:

“இசை என்பது ஒரு இயக்கம். சுமதி ராமின் முயற்சியுடன், Ricky Kej மற்றும் படைப்பாற்றல் கொண்ட ஸ்டுடியோக்களுடன் இணைந்து, வெள்ளகெவி கதையை உலகளவில் கொண்டு செல்ல முயல்கிறோம். இந்த சிறப்புப் பாடல் மூலம், நூற்றாண்டுகளாக சாலைக்காகக் காத்திருக்கும் சமூகங்களுக்கு உலகளவில் கவனம் கிடைக்கும். ஆஸ்கார் பயணம் நிறைவடைந்த நிலையில், இருமொழிப் பாடல்களை வெளியிட தயாராகி வருகிறோம்.”

‘கெவி’ தற்போது Netflix தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது; விரைவில் Amazon Prime Video தளத்திலும் வெளியாக உள்ளது.


ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி பற்றி:


சமூக அக்கறையுள்ள திரைப்படத் தயாரிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீன நிறுவனம். தயாரிப்பாளர்கள் பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா மற்றும் ஜெகா சிர்பியன் தலைமையில் செயல்படுகின்றனர். கணேஷ் பி மற்றும் வருண் குமார் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.


நிர்வாகத் தயாரிப்பாளர் சுமதி ராம், திரைப்படத்தின் சர்வதேச உத்தி மற்றும் உலகளாவிய சிறப்புப் பாடல் முயற்சிகளை வழிநடத்துகிறார். ஸ்டார்ஸ் மியூசிக் ஸ்டுடியோ மற்றும் சன்மூன்ஸ்டார்ஸ் ஃபிலிம் ஸ்டுடியோ ஆகியவை கலை மற்றும் சமூகச் செயல்பாட்டை இணைக்கும் படைப்பாற்றல் நிறுவனங்களாகும்.

 

'ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. ‘புஷ்பா2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘ராக்கா’ திரைப்படத்தில் அவருடைய முற்றிலும் புதிய தோற்றமே சான்று. 


அவருடைய இந்த புதிய தோற்றத்தின் பின்னால் இருக்கும் கடின உழைப்பை படக்குழு வியந்து பாராட்டி வருகிறது. ‘ராக்கா’ படத்திற்காக அல்லு அர்ஜூனின் கதாபாத்திர தோற்றத்தை கொண்டுவர தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நட்சத்திரமான இருந்தபோதிலும் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அல்லு அர்ஜூன் செயல்படுகிறார்.


’ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு சான்றாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ‘ராக்கா’வில் அல்லு அர்ஜூனின் சிக்னேச்சர் கை அசைவை ரீகிரியேட் செய்திருக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் தனது புதிய தோற்றத்தின் மூலம் டிரெண்ட் செய்யும் நடிகர் அல்லு அர்ஜுன், ‘ராக்கா’ மூலம் மீண்டும் ஒரு புதிய திரை அனுபவத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு தர இருக்கிறார். இது வெறுமனே மேக் ஓவர் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. 


ஒரு படம் வெற்றி கண்ட பிறகு அடுத்த படத்திலும் அதே பாணியை பின்பற்றாமல் அடுத்தடுத்த படங்களில் புதிய சவால்களை விரும்புவதே அல்லு அர்ஜூனின் வெற்றிக்கு காரணம். இந்திய சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிறகும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உழைத்து வருகிறார் அல்லு அர்ஜூன். 


ஓய்வின்றி உழைப்பது, அர்ப்பணிப்புடன் செயல்படுவது, தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது போன்றவையே உண்மையான நட்சத்திர அந்தஸ்து  என்பதை அல்லு அர்ஜுன் மீண்டும் ஒருமுறை 'ராக்கா' பட அறிவிப்பில் தனது புதிய தோற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்தப் படமும் இந்திய சினிமாவை உலகளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

 

காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. 

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. 

இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர்.  இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளது.  ஏப்ரல் 24 அஜித்- ஷாலினி ஜோடியின் திருமண நாளை முன்னிட்டு இந்தப் படம் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும் அதே சமயம் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது. 

‘அமர்க்களம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி காதல், தீவிரம் மற்றும் மறக்க முடியாத பல நினைவுகளையும் கொண்டிருக்கிறது. அஜித்தின் ஈர்க்கும் நடிப்பு, ஷாலினியின் மனதை கவரும் நடிப்பு, பரத்வாஜின் ஆன்மாவை வருடும் இசை என இவை அனைத்தும் ‘அமர்க்களம்’ படத்தை கிளாசிக்காக மாற்றியிருக்கிறது. தற்போது அதே மேஜிக் 4கே டிஜிட்டல் வடிவத்தில் பெரிய திரையில் மீண்டும் வருகிறது. முதன் முறையாக படம் வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ அதே வெற்றியையும், ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...’ பாடல் வரிகள் தலைமுறைகள் தாண்டி இன்றைய காதலுக்கும் பொருந்திப் போகிறது. அதேபோல் ‘சத்தமில்லாத’ பாடலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சக்திவாய்ந்த குரலும், அஜித் குமாரின் வலுவான நடிப்பையும் மீண்டும் பெரிய திரையில் காணத் தவறாதீர்கள். இன்றளவும் இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் அன்றைய ரசிகர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் ஒரே அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடேசன் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடுகிறார். 

25 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை நிறைவு செய்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது வெறுமனே ரீ-ரிலீஸ் மட்டுமல்ல, அது நினைவுகளின் திருவிழா, காதலின் கொண்டாட்டம்!

Pageviews