மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் இருவரும் ஸ்காட்லாந்தில் இருக்கின்றனர். ஜியாவிற்கு தலையில் அடிபட்டதால், அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா இருக்கிறது. நடந்தது எதுவும் ஞாபகம் இல்லாமல் போகிறது. ஜியாவை ஒருதலையாகக் காதலிக்கும் மதும்கேஷ், அவரைத் தன் பராமரிப்பில் வைத்துக்கொள்கிறார். இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார் எம்.எஸ். பாஸ்கர் உதவியாக இருக்கிறார். ஜியாவின் உண்மையான காதலன் யார்? மதும்கேஷின் தியாகக் காதல் வென்றதா அல்லது ஜியாவின் நினைவுகள் திரும்பியதா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் அசோகன் இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் கலகலப்பைத் தருகிறார். எம்.எஸ். பாஸ்கர் தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை மென்மையாகவும், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையிலும் உள்ளது. பாடல்கள் இனிமையாக இருந்தாலும், சில இடங்களில் அவரது பழைய பாடல்களின் சாயல் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
கதையில் சின்ன சின்ன குழப்பங்களை கொடுத்திருந்தாலும், அழகான ஒரு காதல் கதையை கொடுக்க இயக்குனர் விஜய் தவறவில்லை.
Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar
Directed By : Kenthiran.V
Music By : D.Imman
PRO : Sathish Kumar ( S2 Media )
Produced By : Masani Pictures - Rajasekar.R
The village elder, Naren, loves everyone. Like him, his son, Nayagan Vimal, is also a hero. He takes care of the cows that are sent to the slave herd without mercy, keeping them in his cowshed.
Vimal, who takes care of the physically handicapped calf sent to the cattle ranch, instead of leaving it in the cowshed he takes it home, trains it, and turns it into a bull for the Manjuvirattu competition. This same bull wins every competition held in the village.
In this situation, Vimal is also out on bail for a crime which he did not commit, and bcoz of an accident Kaalai was admitted in hospital At that same time, a gang tries to kill him by keeping him inside the court premises. On the other hand, a person who worked in Vimal's house also plans to kill him.
At the same time, Vimal meets heroine Sanashka Sri and the two fall in love. At one point, Vimal's life is in danger because of the heroine. What is the reason for the heroine Sanashka Sri to kill hero Vimala at the end Did Vimal and heroine Sanashka Sri get married? Or not? Did the bull, who is undergoing treatment, participate in the competition again? Or not? That is the rest of the story of the film 'Vadam'.
Vimal, who plays the role of Vetrivel, is a brave bull who plays the village hero. He has shown great action in everything from the affection he shows to the cows, the training he gives them, love, sadness, and fights.
Debutant Sanashka Sri is not only beautiful but also gives a natural performance as a charming village girl with a charming smile. She is especially intimidating in the intermission scene.
Natty Natraj, who plays the role of a man who wants what he wants to happen, is intimidating in the role of a man who goes to any extent to win the competition. Munishkanth, who has played comedy roles, comes as a unique villain.
Naren, who plays Vimal's father, Indumathi, who plays Vimal's mother, Deepa Shankar, who plays his aunt, Bala Saravanan, who plays his cousin, and Madhusudhanan Rao, who plays other characters, are all apt choices for the story.
The songs by composer D.Iman are catchy and the background music suits the story. The cinematography by Prasanna S.Kumar is beautiful and grand.
Director Kendran V, who has created the screenplay with the Manjuvirattu competition as the central theme, has given a film that everyone can enjoy by mixing family drama, bulls competitions, honor, intrigue, and enmity. He has emphatically recorded the idea that we should show affection towards all living beings.
Verdict : Overall 'Vadam' a good commercial journey.
Rating : 4/5
- NithyaSana
ஒரு கிராமத்தில் உள்ள ஊர் தலைவர் ஒருஅவ்ர் அந்த ஊரில் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த இடத்தில் வைத்து பராமரிக்கிறார்.அவரது மகனும் அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார். அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரித்து அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்தி, பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறார். இதற்கிடையே, அவரது காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவனும் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், அவனது வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, ஆகியவற்றின் மூலம் அவனது வாழ்க்கை மீண்டும் நல்வழியில் பயணிக்கிறது , இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் விமல் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் அவருக்கே உரித்தான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வழக்கம் போல் அலுங்காமல் குலுங்காமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளைகளை அடக்கும் வீரர்களாக நடித்து மாஸ் காட்டுவது தான் வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக நடித்து கெத்து காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, அழகில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்று. தன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்க்கை, தனக்கு போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி நடிகராக காட்சியளித்து வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.மேலும் நரேன் மற்றும் இந்துமதி ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
டி.இமானின் கிராமத்து பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்தப் படத்திலும் தை செய்துள்ளார். பிண்ணனி இசையும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டும், அதனை பின்னணியாக கொண்டும் பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கேந்திரன்,மேலும் மஞ்சு விரட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகனை சுற்றி நடக்கும் பகைமை நாடகத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார்.
Verdict : மொத்தத்தில், ‘வடம்’ ஒரு நல்ல கமர்ஷுயல் பயணம்.
Rating : 4/5
- VinothG
ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்:
9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம்
சென்னை, மார்ச் 6, 2026— மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.
தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது.
பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
2026-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்திய சாதனைகளை இது பிரதிபலிக்கிறது.
விருது பெற்றவர்கள் விபரம்:
திரு. வி. எம். முரளிதரன் (மாற்றத்தை நோக்கிய தலைமைத்துவத்திற்கான 'ஜெனித்' ஐகான்): தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய ஆழமான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
திரு. ஆதித்யாராம் (மனிதநேய ஐகான்): சுயமாக முன்னேறிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தையும், சமூக நலனுக்கான அவரது அயராத அர்ப்பணிப்பையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
திரு. பி. சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன்: தினத்தந்தி குழுமத்தின் தலைமைத்துவத்தின் மூலம் "மக்களின் குரலை பாதுகாப்பவர்" எனப் போற்றப்பட்டார்.
திருமதி. சிம்ரன் பக்கா: மூன்று தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக "எவர்கிரீன் ஐகான்" (Evergreen Icon) அந்தஸ்து வழங்கப்பட்டது.
திரு. பி. உன்னிகிருஷ்ணன்: கர்நாடக இசை மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டிலும் அவர் கொண்டுள்ள அபார தேர்ச்சிக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
செல்வி. தன்யா ராஜேந்திரன்: சுதந்திரமான டிஜிட்டல் இதழியலில் அவர் காட்டிய அச்சமற்ற தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
திரு. அலெக்சாண்டர் பாபு: "மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்" எனும் புதிய வகை நகைச்சுவை கலையை உருவாக்கியமைக்காகப் பாராட்டப்பட்டார்.
திரு. அஸ்வத் மாரிமுத்து: 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் சமூக ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்ததற்காகக் கௌரவிக்கப்பட்டார்.
திரு. முரளி நாராயணராவ்: விருந்தோம்பல் துறையில் உலகளாவிய நற்பெயரை உருவாக்கியதில் அவரது பங்கிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி கூறுகையில், "ஜேப்பியார் ஐகான் விருதுகள் என்பது வெற்றியை மட்டும் கொண்டாடும் விழா அல்ல, இது எங்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பும் விழுமியங்களைக் கொண்டாடும் விழா.
விருது பெற்ற இவர்கள், எங்கள் வளாகத்தில் நாங்கள் வளர்க்கும் விடாமுயற்சியின் வாழும் உதாரணங்கள்," என்றார்.
பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் கூறுகையில், "வெற்றி ஏணியில் ஏறியவர்களை மட்டும் அல்லாமல், மற்றவர்கள் கடந்து செல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர்களையும் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் நம்பிக்கை கொள்கிறது.
இன்று, வகுப்பறை பாடங்களுக்கும் நிஜ உலகச் சாதனைகளுக்கும் இடையிலான இடைவெளியை நாங்கள் இந்த விருதுகளின் மூலம் இணைத்துள்ளோம்," என்றார்.
சமூகத்தை வளப்படுத்திய, தொழில்துறையை மேம்படுத்திய மற்றும் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்திய இந்தச் சிறந்த ஆளுமைகளைக் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.
9-வது பதிப்பு ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026, புதுமை மற்றும் தலைமைத்துவத் திறனுடன் வழிநடத்துபவர்களை அங்கீகரிப்பதில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பணிபுரியும் ஒருவன், ஒரு டாக்டர் பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்கின்றனர், இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்ற்னர், இந்த சமயத்தில் நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் அவன், இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில்,யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில் அவருடன் இருப்பது யார் , அவருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருதியில் திருமனம் நடந்ததா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை'
நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வரும் சதிஸ் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள் என் இந்த கால இலைஞன் எப்படி பிரச்சினைகளை கையாள்வானோ அதே போல் படத்தில் நடித்துள்ளார்,
நாயகி மோனிக்கா படம் முழுக்க நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், மேலும் இப்படத்தில் சதீஷின் நண்பராக சுரேஷ் ரவி நடித்துள்ளார், படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது இருப்பு காட்சிக்கு பலமாக அமைந்துள்ளது. அதைத்தவிர நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பவர், படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். மேலும் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரி னடித்துள்ளார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பார்ட்டி இசை நடனம் ஆடும் வண்ணம் இருந்தது , அதே போல மற்ற பா பாடல்களும் நன்றாக இருந்தது, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மேலும் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவ்ய் செய்துள்ளார், படம் முழுவதும் கலர்புல்லாக இருந்தது.
எதிர் பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் காமெடியாக தொடங்கி இறுதி வரை ஒரு பதட்டம் கலந்த காமெடி கொடுத்து நம்மை ரசிக்க செய்துள்ளார்
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.
ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் மற்றும் கூர்மையான வசனங்களுடன், இதுவரை காணாத பிரம்மாண்டமான ஒரு பழிவாங்கும் படமாக இது உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல் என்ற வசனங்கள் இந்த இரண்டாம் பாகம் எந்த அளவிலான பழிவாங்கும் கதையாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது.
அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.
திருமணமான கௌரி (நிவேதிதா சதீஷ்) தனது கணவர் அர்ஜுனுடன் (அட்டுல்) கொடைக்கானல் செல்கிறார். அங்கு தனது பழைய காதலைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உளவியல் ரீதியான சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.
நிவேதிதா சதீஷ் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அட்டுல் மற்றும் சிபி சந்திரன் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர் சிறிய பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் குறைவாக இருந்தது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் காட்சிகளை நுட்பமாக கையாண்டுள்ளார்.
ஒரு பெண்ணின் மன உலைச்சல் அந்தப் பெண்ணை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே முக்கிய கரு. அவளின் சிந்தனை மாறி மாறி ஒரு சமயத்தில் அனைத்திற்கும் பொறுப்பை அவள் தலையில் போட்டுக் கொள்கிறாள். அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.
ஓ பட்டர்பிளை திரைப்படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் .
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்படும் இந்தப் படம், இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடப்படுகிறது
அறிவியல் புனைகதை ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய பிறகு, 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' பார்வையாளர்களை ஒரு அசாதாரண விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது. ஆண்டி வீரின் (தி மார்ஷியன்) அதிகம் விற்பனையாகும் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், தான் யார் அல்லது அவரை அங்கு அழைத்து வந்த பணி என்ன என்பது பற்றிய நினைவுகள் இல்லாமல் ஒரு மர்மமான விண்கலத்தில் எழுந்திருக்கும் தனிமையான விண்வெளி வீரரான ரியான் கோஸ்லிங் நடிக்கும் ரைலேண்ட் கிரேஸைப் பின்தொடர்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 26, 2026 அன்று வெளியாகிறது.
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோரால் இயக்கப்பட்ட, ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, அறிவியல், காட்சி மற்றும் இதயப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றின் ஒரு சிலிர்ப்பூட்டும் கலவையை உறுதியளிக்கிறது.
சாண்ட்ரா ஹுல்லர், லியோனல் பாய்ஸ், கென் லியுங் மற்றும் மிலானா வெய்ன்ட்ரப் உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களைக் கொண்ட இந்தப் படம், பெரிய திரைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சினிமா அனுபவத்தில் அளவு, உணர்ச்சி மற்றும் பிடிமான சாகசத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸிலிருந்து சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்பட்ட, ரியான் கோஸ்லிங் நடித்த ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, மார்ச் 26, 2026 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியாகிறது.










