*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை*

சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் முறையாகத் திறந்து வைக்கப்பட்டு, அதற்கான சாவிகளை டாப் ஸ்டார் பிரசாந்த் வழங்கினார்.

பாதுகாப்பான மற்றும் உறுதியான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையின் தொடர் திட்டமான 'ஜோய் இல்லங்கள்" (Joy Homes) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது.

நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முயற்சிகள் மூலம் அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அறக்கட்டளை கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடிப்படையில் 'ஜோய் இல்லங்கள் திட்டம் 7.5 லட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 சதுர அடி பரப்பளவில், ஏறக்குறைய செலவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இல்லமும், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களுக்கு வெறும் தங்குமிடத்தை மட்டுமல்லாமல், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வறுமை, இயற்கை சீற்றங்கள். நாள்பட்ட நோய்கள் மற்றும் மாற்றுத்திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். பாதுகாப்பான வீட்டு வசதியைப் பெறுவதற்குப் பெரும்பாலும் சிரமப்படும் சமூகக் குழுக்களே இவர்கள் ஆவர். நிலையான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம், இத்திட்டமானது இத்தகைய நலிந்த குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் வாய்ப்புகளைத் கட்டமைத்துக்கொள்ளவும், எதிர்காலத்திற்கான தேடிக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

சிறந்த தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள இல்லங்களையும் சேர்த்து, கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ஜோய் இல்லங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மொத்த இல்லங்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கமாக, தெலங்கானாவில் மேலும் 50 இல்லங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன; அதேவேளையில், ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 50 இல்லங்களைக் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் அறக்கட்டளையின் வீட்டு வசதித் திட்டங்களின் வீச்சு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையானது தனது நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்த முன்னெடுப்புகளைச் சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் மையப்படுத்தியுள்ளது. குறிப்பாக, போதிய வசதிகள் அற்ற சமூகங்களில் நிலவும் கட்டமைப்பு சார்ந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையிலான திட்டங்களுக்கே அறக்கட்டளை முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மாதாந்திர டயாலிசிஸ் கருவிகளை விநியோகித்தல், டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குதல்,மருத்துவமனை வார்டுகளை புதுப்பித்தல் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் இரத்த தான இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தல் ஆகியவை இதன் சுகாதார முயற்சிகளில் அடங்கும்.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், அறக்கட்டளை அதன் 'ஜோய் ஆஃப் ஹோப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை ஆதரித்தது. கேரளாவின் திருச்சூரில், டயாலிசிஸ் மையம், நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு மற்றும் பிற சிறப்பு சேவைகளை உள்ளடக்கிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு வசதியையும் அறக்கட்டளை இயக்குகிறது.

கூடுதலாக, தையல் மற்றும் அழகுக்கலை திறன்களில் தொழில் பயிற்சி திட்டங்கள் மூலம், பெண்கள் நிதி சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையான திறன்களுடன் அதிகாரம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் முடியும்.

ஜோய் ஹோம்ஸ் திட்டம், நிலையான வீட்டுவசதி என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு அடிப்படை படியாகும். குடும்பங்கள் பாதுகாப்பான வாழ்க்கையையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்க உதவுகிறது என்ற அறக்கட்டளையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்வில் டாப் ஸ்டார் பிரசாந்த் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி இது 18 ஆம் ஆண்டு. இன்றைய நாளில் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பணியை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.‌

வீடில்லாத...நிலமில்லாத.. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான - அருமையான - வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது 'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்.

வீடு மட்டுமல்லாமல் மக்கள் எங்கெங்கு கஷ்டப்படுகிறார்களோ..! புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றாலும்... அவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். இந்த கை உதவி செய்வதை அந்த கைக்கு தெரியாமல் செய்கிறார்கள். அந்த குடும்பத்தினர் முழுவதும் பொதுமக்களின் நன்மைக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.  அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதனை தொடர்ந்து செய்து வருவது சாதாரண விசயம் அல்ல மிகப் பெரிய விசயம்.  

நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர். மனிதநேயமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். சிறந்த ரோல் மாடல்.  

தனி ஆளாக நின்று கடுமையாக உழைத்து இன்று ஜோய் ஆலுக்காஸ் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கி இன்றும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பவர். இது தொடக்கம் தான். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை இன்னும் விரிவடையும்.

ஜோய்ஸ் ஹோம் திட்டத்தில் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்!

நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அந்த காலத்து இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றளவும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தன.

18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

இதனைத் தொடர்ந்து Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர் வரும் காலத்தில். ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் “தாம் தூம்” ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பது உறுதி.

 

SST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார்.


சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இத்திரைப்படத்தை SST PRODUCTIONS சார்பாக ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது.

 

வெளவல்ஸ் திரைப்படத்தை ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். காதலை மையமாக கொண்டு ஐந்து வித்யாசமான கதைகளை கொடுத்துள்ளனர், 

 

முதல் கதை 


தனக்கு வரும் கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் முயற்சியில் ஒரு கொலை நடந்துள்ளது அதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை. 

 

இரண்டாவது கதை 


ஒருவன் ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். இது அவனது வாழ்வை எப்படி மாற்றியது என்பதே இந்த தொடரின் கதை. 

 

மூன்றாவது கதை


ஒருவன் காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும்  மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமான காதல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான், அதன் பின் என்ன ஆனது என்பதே இதன் மீதிக்கதை. 

 

நான்காவது கதை 


எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவித யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது  காதல் உடனும் பயணிக்க வைப்பது எப்படி என அறிவுறுத்தும் ஒரு கதை. 

 

ஐந்தாவது கதை


ஒரு சிலர் வெறுமன வார்த்தையால் மட்டும் காதலை சொல்லி கொள்வார்கள் , ஆனால் அப்படி இல்லாமல் மனதளவில் காதல் மெய்ப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த கதை. 


 

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. கல்லூரி மாணவராக பல படங்களில் நடித்த சின்னி ஜெயந்த், கல்லூரி பேராசிரியாக நடித்திருப்பதும், அவரது முதிர்ச்சியான வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதத்திற்கான தனி அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,  ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். 

 

இந்தப் படத்திற்கு திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், அனைவரும் காதலை கருப்பொருளாக கொண்டு எழுதியிருக்கும் கதை, மற்றும் அதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்த விதம், முழு படத்தையும் தொய்வின்றி நகர்த்தி சென்றுள்ளனர். அதற்கு பெரிய பாராட்டு.  ஐந்து கதைகளிலும் கையாளப்பட்ட மெசஜ் எளிமையானது என்றாலும், அதை காதலோடு சேர்த்து சுவாரஸ்யமாக சொன்ன விதத்தின் மூலம் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சொல்லி சற்று ரசிக்க வைத்துள்ளனர். 

 

கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள  “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!


அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்.., 


இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., 


பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.


இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ்  மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி. 


நடிகர் ஜெகன் பேசியதாவது..,


என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..


இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.  குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது.., 


இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். 


நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,


இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.


நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 


இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.


குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு  இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.  நன்றி. 



இயக்குநர் S.லதா பேசியதாவது…, 


இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.


தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.


மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. 



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 


மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.


இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. 


தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.  சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

 

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை " 


அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.


இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை.

ஒரு ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா? என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறேன்.


தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில்  பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.


சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக "மரகதமலை " இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் S.லதா.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”


அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 


ஏலகிரியில் உள்ள ஸ்டார்  ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான்  கதை. ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 


ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

“இந்த விழாவிற்கு வரும் போது மனதில்,  நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.  தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.


அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் ‘கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – ‘இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.


பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.  இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துக்கள். 



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  தமிழ் குமரன் பேசியதாவது..,


“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”


புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது  படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. 



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..


அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என்று கூறிய போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார் உடனே ஒப்புக் கொண்டு அதை வெளியிட்டார். ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்து பேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள். அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால், அந்த படம் பல கோடி மக்களிடம் சென்று சேரும். அதற்கும் மேலாக, அந்த படத்திற்கு ஒரு பெரிய கவனமும் கிடைக்கும்.


இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.


அதேபோல், “ரூம்பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச் செய்ய உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.“ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஹோட்டலில் தங்கும் போது பல விதமான மனிதர்கள் வருவார்கள். அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும். அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்த படத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.


இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.


ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை. ஆந்திராவில் வந்து நிற்கிறார். இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்  ராதா கிருஷ்ணன் பேசியதாவது.., 


‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 


இன்றைக்கு திரை உலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ் திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கே மேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.

பல சவால்களை தாண்டி தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள், எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம்.” அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிமேல் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞராக இருந்தாலும், அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால், சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும். ரூம் பாய் படம் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.


‘ரூம் பாய்’  படத்தின்  இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது.., 


“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன்.  “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. 


அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து  2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.


“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”.  பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.“எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. “இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” அனைவருக்கும் நன்றி.

 

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.


சமீபத்தில், செல்வராகவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த சிறப்பு வெளியீடு சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.


70 விநாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் சுவாரஸ்யமான உலகை ஒரு சிறிய பார்வையாகக் காட்டுகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த டீசரில், ஒரு சிறுமி, ஒரு ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான voiceover உரையாடல் இடம்பெறுகிறது. அதனுடன் இணைந்துள்ள வலுவான காட்சிகள், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதோடு, உணர்ச்சிகரமான கதைக்களத்திற்கான முன்னோட்டத்தையும் வழங்குகின்றன. இந்த தனித்துவமான டீசர் ஏற்கனவே ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.


மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் RS சதிஷ் ஆகியோர் Vyom Entertainments நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் செல்வராகவன் , குஷி ரவி , RS சதிஷ் , கௌசல்யா , Mime கோபி, Y. G. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிக்கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் இசையமைப்பாளர் AK ப்ரியன் அமைத்துள்ள இசை முக்கிய பங்கு வகிக்கிறது. எடிட்டர் தீபக் S அவர்களின் துல்லியமான எடிட்டிங் படத்தின் கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி வர்மா K அவர்களின் ஒளிப்பதிவு, படத்தின் காட்சித் தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.


இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் Sakthi Film Factory நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த நிறுவனத்தை B. Sakthivelan தலைமையேற்று நடத்துகிறார்; இதன் மூலம் பல முக்கிய பகுதிகளில் படத்திற்கு விரிவான திரையரங்க வெளியீடு கிடைக்க உள்ளது.


Post Production பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு பிரம்மாண்டமான வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. சுவாரஸ்யமான கதைக்களம், வலுவான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவுடன், மனிதன் தெய்வமாகலாம் படம் வரும் ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகி, பார்வையாளர்களுக்கு சிந்திக்க வைக்கும் ஒரு திரையரங்க அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.

 

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி- நம்பிக்கை- மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது.


நாகபந்தம்...


அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான 'நாகபந்தம் ' வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க தொழில் துறை கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை இந்தப் படம் நோக்கமாக கொண்டுள்ளது. நவீன இந்திய சினிமாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இப்படம் அளிக்கிறது.‌


இசை ...


'நமோ ரே' ( NAMO Re) பாடல் திறமையான கூட்டணி ஜுனைத் குமார் மற்றும் அபே ஆகியோரால் பாரம்பரிய மற்றும் சமகால இசை பாணிகளை கலந்து இசையமைக்கப்பட்டது. எஸ். சௌந்தர்ராஜன் எழுதிய பாடல் வரிகள் ஆழமான ஆன்மீக உணர்வை தூண்டுகின்றன. பிரத்யேக நம்பிக்கை மற்றும் தெய்வீக தொடர்பை பற்றிய பிரதிபலிப்பையும் ஊக்குவிக்கின்றன. பாடகி ஹரி பிரியாவின் குரல் ஆன்மீக உணர்வின் ஆன்மாவை எழுப்புகின்றன‌. இந்த  பாடல் பரவலாக எதிரொலிக்கிறது.


நடனம் & நடன அமைப்பு


'நமோ ரே' ( NAMO Re) பாடலின் சிறப்பம்சம் கணேஷ் ஆசார்யா மற்றும் ஸ்ரஷ்டி வர்மா ஆகியோரின் சிறந்த நடன அமைப்பாகும். சுமார் ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு இந்திய நடன வடிவங்களை நிகழ்த்துகிறார்கள். இந்த நடன அமைப்பு இந்தியாவின் கலாச்சார மரபைக் கொண்டாடும் ஒரு துடிப்பான மற்றும் பார்வையை ஈர்க்கும் காட்சியை உருவாக்குகிறது.


கலை & காட்சி வடிவமைப்பு ...


'நமோ ரே' ( NAMO Re) பாடலின் காட்சி அம்சம் அசோக் குமாரின் விரிவான தொகுப்பு- வடிவமைப்பு மற்றும் சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு ஆகியவற்றால் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் படைப்புகள் ஆன்மீக சூழலின் சித்தரிப்புக்கு நம்பகத் தன்மையை கொண்டு வருகின்றன. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய மையக் கருத்துகளை பின்னணியாகக் கொண்ட ஒரு ஆழமான பக்தி சூழலை உருவாக்குகின்றன.


முக்கியத்துவம் & செல்வாக்கு


'நமோ ரே' ( NAMO Re) ஒரு பாடலை விட , 'நமோ ரே' என்பது காதல் -பக்தி- ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார கொண்டாட்டம் ஆகும். சவால்களை எதிர்கொள்ளும் உலகில் நம்பிக்கை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளர்ச்சியூட்டும் பாடல் வரிகள் மற்றும் துடிப்பான நடன அமைப்பின் ஒருங்கிணைந்த சக்தி.. பல்வேறு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.


'நமோ ரே' ( NAMO Re) இசை பாடலின் அறிமுகம் நாக பந்தம் மற்றும் இந்திய கலை வெளிப்பாட்டிற்கான ஒரு மைல் கல்லாக அமைகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார பிணைப்புகளை மேம்படுத்துவதில் கலையின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.


பொழுதுபோக்கையும் கடந்து 'நமோ ரே' ( NAMO Re) ஆன்மீக சிந்தனையையும் மன நலத்தையும் ஊக்குவிப்பதுடன் இந்த கூட்டு கலை வெளிப்பாட்டின் வாயிலாக நம்பிக்கையுடனான பிரத்யேக பிணைப்பையும் வளர்க்கிறது.


நாகபந்தம் ( Nagabandam) குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அத்திரைப்படமும் அதை சூழ்ந்துள்ள 'நமோ ரே' ( NAMO Re)  குறித்த உற்சாகமும் ஒரு மறக்க முடியாத திரையுலக பயணத்தின் முன்னோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.

 

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் 'கே டி : தி டெவில் -  K D : The Devil ' திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


கே வி என் புரொடக்ஷன்ஸ் - KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.


இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌


விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'திற நீ எந்தன் தரணி திற நீ - Thira Nee Enthan Tharani Thira Nee'' எனும்  துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் - கவர்ச்சி - திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்-  விறுவிறுப்பான நடன அசைவுகள் - ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.


துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் - இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.


'திற நீ எந்தன் தரணி திற நீ ' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.


கே டி : தி டெவில் - KD : The Devil ' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

Pageviews