மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் இருவரும் ஸ்காட்லாந்தில் இருக்கின்றனர். ஜியாவிற்கு தலையில் அடிபட்டதால், அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா இருக்கிறது. நடந்தது எதுவும் ஞாபகம் இல்லாமல் போகிறது. ஜியாவை ஒருதலையாகக் காதலிக்கும் மதும்கேஷ், அவரைத் தன் பராமரிப்பில் வைத்துக்கொள்கிறார். இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார் எம்.எஸ். பாஸ்கர் உதவியாக இருக்கிறார். ஜியாவின் உண்மையான காதலன் யார்? மதும்கேஷின் தியாகக் காதல் வென்றதா அல்லது ஜியாவின் நினைவுகள் திரும்பியதா? என்பதே மீதிக்கதை.


அறிமுக நாயகன் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் அசோகன் இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் கலகலப்பைத் தருகிறார். எம்.எஸ். பாஸ்கர் தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.


ஹாரிஸ் ஜெயராஜின் இசை மென்மையாகவும், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையிலும் உள்ளது. பாடல்கள் இனிமையாக இருந்தாலும், சில இடங்களில் அவரது பழைய பாடல்களின் சாயல்  அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.


கதையில் சின்ன சின்ன குழப்பங்களை கொடுத்திருந்தாலும், அழகான ஒரு காதல் கதையை கொடுக்க இயக்குனர் விஜய் தவறவில்லை.


இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்..,

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,
பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.

Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,

இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.

இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,

எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,

இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,
இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,
இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.

என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.

எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,
‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

திரு அழகன் தமிழ்மணி பேசியதாவது..,
என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் பிரேம் பேசியதாவது..,
இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.

ZEE5 பற்றி:

தமிழ் பார்வையாளர்களுக்கென மண் சார்ந்த தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5, இந்த சீரிஸின் மூலம் மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் அனுபவத்தை வழங்கியுள்ளது. தற்போது “தடயம்” சீரிஸ் ZEE5 தளத்தில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar

Directed By : Kenthiran.V

Music By : D.Imman

PRO : Sathish Kumar ( S2 Media )

Produced By : Masani Pictures - Rajasekar.R

'Vadam' - Review


The village elder, Naren, loves everyone. Like him, his son, Nayagan Vimal, is also a hero. He takes care of the cows that are sent to the slave herd without mercy, keeping them in his cowshed.


Vimal, who takes care of the physically handicapped calf sent to the cattle ranch, instead of leaving it in the cowshed he takes it home, trains it, and turns it into a bull for the Manjuvirattu competition. This same bull wins every competition held in the village.


In this situation, Vimal is also out on bail for a crime which he did not commit, and bcoz of an accident Kaalai was admitted in hospital At that same time, a gang tries to kill him by keeping him inside the court premises. On the other hand, a person who worked in Vimal's house also plans to kill him.


At the same time, Vimal meets heroine Sanashka Sri and the two fall in love. At one point, Vimal's life is in danger because of the heroine. What is the reason for the heroine Sanashka Sri to kill hero Vimala at the end Did Vimal and heroine Sanashka Sri get married? Or not? Did the bull, who is undergoing treatment, participate in the competition again? Or not? That is the rest of the story of the film 'Vadam'.


Vimal, who plays the role of Vetrivel, is a brave bull who plays the village hero. He has shown great action in everything from the affection he shows to the cows, the training he gives them, love, sadness, and fights.


Debutant Sanashka Sri is not only beautiful but also gives a natural performance as a charming village girl with a charming smile. She is especially intimidating in the intermission scene.


Natty Natraj, who plays the role of a man who wants what he wants to happen, is intimidating in the role of a man who goes to any extent to win the competition. Munishkanth, who has played comedy roles, comes as a unique villain.


Naren, who plays Vimal's father, Indumathi, who plays Vimal's mother, Deepa Shankar, who plays his aunt, Bala Saravanan, who plays his cousin, and Madhusudhanan Rao, who plays other characters, are all apt choices for the story.


The songs by composer D.Iman are catchy and the background music suits the story. The cinematography by Prasanna S.Kumar is beautiful and grand.


Director Kendran V, who has created the screenplay with the Manjuvirattu competition as the central theme, has given a film that everyone can enjoy by mixing family drama, bulls competitions, honor, intrigue, and enmity. He has emphatically recorded the idea that we should show affection towards all living beings.

Verdict : Overall 'Vadam' a good commercial journey.

Rating : 4/5

ஒரு கிராமத்தில் உள்ள ஊர் தலைவர் ஒருஅவ்ர் அந்த ஊரில் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த இடத்தில் வைத்து பராமரிக்கிறார்.அவரது மகனும் அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார்.  அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட  உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரித்து அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்தி, பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறார். இதற்கிடையே, அவரது காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவனும் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், அவனது வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, ஆகியவற்றின் மூலம் அவனது வாழ்க்கை மீண்டும் நல்வழியில் பயணிக்கிறது , இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை. 


இந்தப் படத்தில் விமல் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் அவருக்கே உரித்தான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வழக்கம் போல் அலுங்காமல் குலுங்காமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளைகளை அடக்கும் வீரர்களாக நடித்து மாஸ் காட்டுவது தான் வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக நடித்து கெத்து காட்டியிருக்கிறார். 


நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, அழகில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்று. தன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்க்கை, தனக்கு போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி நடிகராக காட்சியளித்து வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.மேலும் நரேன் மற்றும் இந்துமதி ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். 


டி.இமானின் கிராமத்து பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்தப் படத்திலும் தை செய்துள்ளார். பிண்ணனி இசையும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.


தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டும், அதனை பின்னணியாக கொண்டும் பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படத்தை  உருவாக்கியுள்ளார் இயக்குனர் கேந்திரன்,மேலும் மஞ்சு விரட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகனை சுற்றி நடக்கும் பகைமை நாடகத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார். 

Verdict : மொத்தத்தில், ‘வடம்’ ஒரு நல்ல கமர்ஷுயல் பயணம்.

Rating : 4/5

 

ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்:

9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம்

சென்னை, மார்ச் 6, 2026— மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.


தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது.


பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.


2026-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்திய சாதனைகளை இது பிரதிபலிக்கிறது. 


விருது பெற்றவர்கள் விபரம்:

திரு. வி. எம். முரளிதரன் (மாற்றத்தை நோக்கிய தலைமைத்துவத்திற்கான 'ஜெனித்' ஐகான்): தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய ஆழமான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.


திரு. ஆதித்யாராம் (மனிதநேய ஐகான்): சுயமாக முன்னேறிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தையும், சமூக நலனுக்கான அவரது அயராத அர்ப்பணிப்பையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.


திரு. பி. சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன்: தினத்தந்தி குழுமத்தின் தலைமைத்துவத்தின் மூலம் "மக்களின் குரலை பாதுகாப்பவர்" எனப் போற்றப்பட்டார்.


திருமதி. சிம்ரன் பக்கா: மூன்று தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக "எவர்கிரீன் ஐகான்" (Evergreen Icon) அந்தஸ்து வழங்கப்பட்டது.


திரு. பி. உன்னிகிருஷ்ணன்: கர்நாடக இசை மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டிலும் அவர் கொண்டுள்ள அபார தேர்ச்சிக்காகக் கௌரவிக்கப்பட்டார்.


செல்வி. தன்யா ராஜேந்திரன்: சுதந்திரமான டிஜிட்டல் இதழியலில் அவர் காட்டிய அச்சமற்ற தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார்.


திரு. அலெக்சாண்டர் பாபு: "மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்" எனும் புதிய வகை நகைச்சுவை கலையை உருவாக்கியமைக்காகப் பாராட்டப்பட்டார்.


திரு. அஸ்வத் மாரிமுத்து: 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் சமூக ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்ததற்காகக் கௌரவிக்கப்பட்டார்.


திரு. முரளி நாராயணராவ்: விருந்தோம்பல் துறையில் உலகளாவிய நற்பெயரை உருவாக்கியதில் அவரது பங்கிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.


செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி கூறுகையில், "ஜேப்பியார் ஐகான் விருதுகள் என்பது வெற்றியை மட்டும் கொண்டாடும் விழா அல்ல, இது எங்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பும் விழுமியங்களைக் கொண்டாடும் விழா. 


விருது பெற்ற இவர்கள், எங்கள் வளாகத்தில் நாங்கள் வளர்க்கும் விடாமுயற்சியின் வாழும் உதாரணங்கள்," என்றார்.

பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் கூறுகையில், "வெற்றி ஏணியில் ஏறியவர்களை மட்டும் அல்லாமல், மற்றவர்கள் கடந்து செல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர்களையும் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் நம்பிக்கை கொள்கிறது. 


இன்று, வகுப்பறை பாடங்களுக்கும் நிஜ உலகச் சாதனைகளுக்கும் இடையிலான இடைவெளியை நாங்கள் இந்த விருதுகளின் மூலம் இணைத்துள்ளோம்," என்றார்.

சமூகத்தை வளப்படுத்திய, தொழில்துறையை மேம்படுத்திய மற்றும் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்திய இந்தச் சிறந்த ஆளுமைகளைக் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.


9-வது பதிப்பு ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026, புதுமை மற்றும் தலைமைத்துவத் திறனுடன் வழிநடத்துபவர்களை அங்கீகரிப்பதில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

 

சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பணிபுரியும் ஒருவன், ஒரு டாக்டர் பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்கின்றனர், இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்ற்னர், இந்த சமயத்தில் நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் அவன், இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில்,யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில் அவருடன் இருப்பது யார் , அவருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருதியில் திருமனம் நடந்ததா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை'


நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வரும் சதிஸ் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள் என் இந்த கால இலைஞன் எப்படி பிரச்சினைகளை கையாள்வானோ அதே போல் படத்தில் நடித்துள்ளார்,

 

நாயகி மோனிக்கா படம் முழுக்க நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், மேலும் இப்படத்தில் சதீஷின் நண்பராக சுரேஷ் ரவி நடித்துள்ளார், படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது இருப்பு காட்சிக்கு பலமாக அமைந்துள்ளது. அதைத்தவிர நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பவர், படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். மேலும் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக  மானசா செளத்ரி னடித்துள்ளார்.


 

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பார்ட்டி இசை நடனம் ஆடும் வண்ணம் இருந்தது , அதே போல மற்ற பா பாடல்களும் நன்றாக இருந்தது, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மேலும் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவ்ய் செய்துள்ளார், படம் முழுவதும் கலர்புல்லாக இருந்தது. 


 

எதிர் பாராத ஒரு  பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் காமெடியாக தொடங்கி இறுதி வரை ஒரு பதட்டம் கலந்த காமெடி கொடுத்து நம்மை ரசிக்க செய்துள்ளார்

 


 

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.


ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன் மற்றும் கூர்மையான வசனங்களுடன், இதுவரை காணாத பிரம்மாண்டமான ஒரு பழிவாங்கும் படமாக இது உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.


தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல் என்ற வசனங்கள் இந்த இரண்டாம் பாகம் எந்த அளவிலான பழிவாங்கும் கதையாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது.


அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.

 

திருமணமான கௌரி (நிவேதிதா சதீஷ்) தனது கணவர் அர்ஜுனுடன் (அட்டுல்) கொடைக்கானல் செல்கிறார். அங்கு தனது பழைய காதலைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உளவியல் ரீதியான சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.


நிவேதிதா சதீஷ் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அட்டுல் மற்றும் சிபி சந்திரன் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர் சிறிய பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.


வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் குறைவாக இருந்தது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் காட்சிகளை நுட்பமாக கையாண்டுள்ளார்.


ஒரு பெண்ணின் மன உலைச்சல் அந்தப் பெண்ணை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே முக்கிய கரு. அவளின் சிந்தனை மாறி மாறி ஒரு சமயத்தில் அனைத்திற்கும் பொறுப்பை அவள் தலையில் போட்டுக் கொள்கிறாள். அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர்  விஜய் ரங்கநாதன்.


ஓ பட்டர்பிளை திரைப்படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் .

 

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்படும் இந்தப் படம், இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடப்படுகிறது


அறிவியல் புனைகதை ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய பிறகு, 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' பார்வையாளர்களை ஒரு அசாதாரண விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது. ஆண்டி வீரின் (தி மார்ஷியன்) அதிகம் விற்பனையாகும் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், தான் யார் அல்லது அவரை அங்கு அழைத்து வந்த பணி என்ன என்பது பற்றிய நினைவுகள் இல்லாமல் ஒரு மர்மமான விண்கலத்தில் எழுந்திருக்கும் தனிமையான விண்வெளி வீரரான ரியான் கோஸ்லிங் நடிக்கும் ரைலேண்ட் கிரேஸைப் பின்தொடர்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 26, 2026 அன்று வெளியாகிறது.


புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோரால் இயக்கப்பட்ட, ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, அறிவியல், காட்சி மற்றும் இதயப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றின் ஒரு சிலிர்ப்பூட்டும் கலவையை உறுதியளிக்கிறது.


சாண்ட்ரா ஹுல்லர், லியோனல் பாய்ஸ், கென் லியுங் மற்றும் மிலானா வெய்ன்ட்ரப் உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களைக் கொண்ட இந்தப் படம், பெரிய திரைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சினிமா அனுபவத்தில் அளவு, உணர்ச்சி மற்றும் பிடிமான சாகசத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.


அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸிலிருந்து சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்பட்ட, ரியான் கோஸ்லிங் நடித்த ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, மார்ச் 26, 2026 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியாகிறது.

 

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை " 


அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.


இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை.

ஒரு ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா? என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறேன்.


தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில்  பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.


சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக "மரகதமலை " இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் S.லதா.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

 

கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள  “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!


அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்.., 


இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., 


பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.


இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ்  மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி. 


நடிகர் ஜெகன் பேசியதாவது..,


என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..


இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.  குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது.., 


இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். 


நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,


இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.


நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 


இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.


குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு  இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.  நன்றி. 



இயக்குநர் S.லதா பேசியதாவது…, 


இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.


தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.


மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. 



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 


மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.


இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. 


தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.  சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Pageviews