முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.


“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.


இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த 'பாகுபலி' படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 


இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் - 'ஃபௌஜி- Fauzi' படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது... மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்... இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல... ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. 


பிரபாஸின் தீவிரமான புதிய தோற்றம்-  ஃபௌஜி படத்திற்கான  முக்கியத்துவத்தை போற்றுவதாக இருக்கக்கூடும். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது. இணைய உலகம் இதற்கு உடனடியாகவும், உற்சாகத்துடனும் எதிர்வினையாற்றி வருகிறது. 


பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வலுப்பெற்று வருகிறது. இது வரவுள்ள இப்படத்தின் பிரம்மாண்டத்தையும்.. அதன் லட்சியத்தையும் ...இந்த மாற்றம் பிரதிபலிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அதே தருணத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க இது ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களுக்கு உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் பிரபாஸ் ஒருவராக திகழ்கிறார். எளிமையானதாக தோன்றினாலும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுய விவர புகைப்பட மாற்றம்-  அடுத்து வரவிருப்பதைப் பற்றிய அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 


பொழுதுபோக்கு சார்ந்த பக்கங்களிலும்... ரசிகர் மன்றங்களிலும்... இது தொடர்பான விவாதங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சுய விவர பட மாற்றம் சாதாரண சமூக ஊடக அப்டேட் என்பதை கடந்து.. ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றம் பெற்றுள்ளது. இது பிரபாஸ் மீதான உற்சாகத்தை மீண்டும் எழுச்சி அடைய செய்துள்ளது. இது ஃபௌஜி- Fauzi படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் விரிவடைய செய்துள்ளது. அத்துடன் சூப்பர் ஸ்டாரின் திரைபயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் வருகையை உணர்த்தும்... மறக்க முடியாத தருணத்தையும் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளது.


Chennai, 14 August 2026:

RAAJKAMAL FILMS INTERNATIONAL
KAMAL HAASAN
PROUDLY PRESENTS
SUPERSTAR RAJINIKANTH

“DHARMAN”

Directed by Ashwath Marimuthu
Music by Anirudh Ravichander
Action by Anbariv
Produced by Kamal Haasan – R. Mahendran

Following the completion of the first schedule, the team of “DHARMAN” has commenced its second schedule yesterday, taking the film forward into its next phase of production.

Headlined by Superstar Rajinikanth, the film marks an exciting collaboration of some of the most celebrated names in Indian cinema, with Ashwath Marimuthu at the helm, Anirudh Ravichander composing the music and Anbariv bringing their signature energy to the action.

With the cameras rolling once again, “DHARMAN” enters its next chapter, building further anticipation for what promises to be a spectacular cinematic experience. The film is produced by Kamal Haasan and R. Mahendran, under the banners of RaajKamal Films International and Turmeric Media.

The journey continues. The force moves forward.

 

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார். 


திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் அமைகிறது.  


இத்திரைப்படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார். கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜெய் விஜய் ராகவண், கலை: ஜி. துரைராஜ், நடனம்: தீபு எம், ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீனிவாசன். 


டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கும் 'மேரிகோல்ட் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் ரவி சங்கர், "நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல, இந்தப் படமும் நல்ல கதைக்களம் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி".


இயக்குநர் வெங்கடேஷ், "இந்தப் படத்தை இயக்க புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. 'அங்காடி தெரு' படத்திற்கு பின்பு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் எனக்கு அதிகம் வந்தது. ஆனால், இதில் வித்தியாசமான கதாபாத்திரம். நடிகர் ரிஷிகாந்த் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் எங்கே அவர் நடிப்பில் என்னை ஓவர் டேக் செய்து விடுவாரோ என்று கவனத்துடனே நடித்தேன். நிச்சயம் பெரிய நடிகராக வருவார். உதவி இயக்குநர்கள், படக்குழுவினர் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்”.


எடிட்டர் அசோக் அர்ஜூனன், "பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது என்னும்போதே படத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை". 


ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி, " புதியவர்களான எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


நடிகர் சேத்தன், "இயக்குநர் ராஜா இந்த கதை சொல்லும்போது குடும்பமாக அமர்ந்து கேட்டு சிரித்தோம். முதலில் என் மனைவியை தான் நடிக்க கேட்டிருந்தார்கள். ஆனால் டேட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. இது போன்ற புது அணியினருக்கு ஆதரவு கொடுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை". 


இசையமைப்பாளர் பரத் சங்கர், " படத்தின் இயக்குநர் ராஜா வெள்ளந்தியான மனிதர். ஆனால், படம் அதற்கு நேர்மாறாக சிறப்பாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி! ஆகஸ்ட் 21 அன்று படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.


இயக்குநர் ஸ்ரீகணேஷ், " படத்தின் கதாநாயகன் ரிஷி எனக்கு 10 வருடங்களுக்கு மேலாக பழக்கம். கதாநாயகனாக அவர் இந்தப் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படம் சிறப்பாக வந்துள்ளது. படக்குழுவினர் பலருக்கும் இது அறிமுக படம். சிறப்பாக உழைத்துள்ளனர். இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும்".


நடிகை அனிஷ்மா, " இந்தப் படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர், தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் முத்து செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "திறமையான நடிகர்களை தேர்வு செய்வதிலேயே படம் பாதி வெற்றியடைந்து விட்டது. இந்தப் படத்தின் மூலம் புது உலகத்திற்கு சென்று விட்டு வந்திருக்கிறேன். படத்திற்கு உங்களுடைய ஆதரவும் தேவை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி".


இயக்குநர் பாரி, "என்னைப் போன்று பல கனவுகளோடு கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வரும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படங்களில் ஒன்றாக இந்த படத்தை நான் பார்க்கிறேன். ஒரு கருத்தை நகைச்சுவையாக சொன்னால் இன்னும் அதிக பேரை சென்றடையும். பல கருத்துக்களை இந்த படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். ரிஷிக்காகவே இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பெரிய படங்கள் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்தும்.  ஆனால், சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும். அதனால், இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், " ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிப்பவர் ரிஷி. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது பாக்யராஜ் சாருடைய படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது. எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இயக்குநர் 'அயலான்' ரவிக்குமார், "எதை படமாக எடுக்கிறார்கள் என்பதில் தான் ஒரு இயக்குநரின் திறமை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை இயக்குநர் சிறப்பாக எடுத்து உள்ளார். நடிகர் ரிஷி ஹீரோவாக அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார் என்பதை  படம் பார்க்கும்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த கதையை தயாரிப்பு  நிறுவனம் புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. படம் நிச்சயம் வெற்றி பெறும்".


இயக்குநர் ராஜா கருப்பசாமி, " ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனால் தான் இந்த படம் இன்று உருவாகியுள்ளது. அவருக்கு மிக்க நன்றி. என் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்டு வாய்ப்பளித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த எனக்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள், குடும்பத்தினர், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதை தான் இந்த படம். என் வாழ்க்கையின் அனைத்து பெண்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நிகழ்விற்கு வந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி".


நடிகர் ரிஷிகாந்த், "பல படங்களில் என்னுடைய கதாபாத்திரங்களை கவனித்து பாராட்டிய ஊடகங்களுக்கு என்னுடைய முதல் நன்றி. அதேபோல நான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கும் உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. 'மொத ராத்திரி' படத்தின் கதை ஷார்ட் ஃபிலிமாக ராஜா கொண்டு வந்தார். அதன் பிறகு ஆறு வருடம் பயணம் செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். என்னை விட்டுக் கொடுக்காத இயக்குநருக்கும், கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. நல்லதொரு படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் குடும்பமாக இந்த படத்தை ரசிப்பீர்கள்.  படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்குகளில் படம் பாருங்கள்".

 

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர்  தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது.


ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவே கருதி அன்பு செலுத்துகிறார். அவர்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாக்க ஆக்ரோஷத்தின் எல்லைக்கே செல்ல தயாராக இருக்கிறார் என படத்தின் மையக்கதையை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் தெளிவாகக் காட்டுகிறது. 


அதேவேளையில், மதுப்பழக்கம் அவரது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஆண்டுதோறும் அவர் ஐயப்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்கிறார். அந்த காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான மனிதராக மாறுகிறார். இந்நிலையில், கிராமத்தில் அடுத்தடுத்து சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி தேஜாவால் முடிந்ததா என்பதே படத்தின் கதை.


குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களை சிவா நிர்வாணா வித்தியாசமான முறையில் இணைத்து ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார்.  ரவி தேஜாவின் மகள் தனது தந்தையின் கோபத்தைப் பார்த்து தனக்கே பயமாக இருக்கிறது என்று கூறும் தருணம் டிரெய்லரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கதாநாயகனின் உணர்வுப்பூர்வமான சிக்கலான தன்மையை இந்தக் காட்சி அழுத்தமாக வெளிப்படுத்தும் அதேசமயம், குடும்ப உணர்வுகளை வலுவாக காட்சிப்படுத்துவதில் சிவா நிர்வாணாவின் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.


ஒவ்வொரு காட்சியிலும் ரவி தேஜா கதாபாத்திரத்தை முழுமையாக தன்னுடையதாக மாற்றியுள்ளார். அன்பான குடும்பத் தலைவராகவும், அநீதியை எதிர்கொள்ளும்போது தீவிரமான ஆக்ரோஷம் கொண்ட மனிதராகவும் அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். மதுவுக்கு அடிமையான அவரது கதாபாத்திரம் கதைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. இதுமட்டுமல்லாது, அவரது ஆக்ரோஷமான குணத்திற்கும், ஐயப்ப மாலை அணிந்த பிறகு அவர் வெளிப்படுத்தும் அமைதியான குணத்திற்கும் இடையேயான முரண்பாடு கதாபாத்திரத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மல்லெபுல பல்லக்கி’ பாடலின் சிறிய பகுதி டிரெய்லரின் இறுதியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் ரவி தேஜாவின் மனைவி கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் சிறப்பாக நடித்துள்ளார். தந்தை, மகள் உறவின் அன்பை பேபி நக்‌ஷத்ரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.சாய் குமார், குரு சுவாமியாகவும், நடிகை ஸ்வாசிகா எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 


குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த திரையரங்க டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் 9 நாட்களில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘இருமுடி’ தனது டிரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில், உணர்வுகளின் ரோலர்கோஸ்டர் பயணமாக ‘இருமுடி’ அமையும் என டிரெய்லர் உறுதியளிக்கிறது.


நடிகர்கள்: மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லக்ஷ்மண், ராஜ்குமார் கசிரெட்டி, ரமண பார்கவ், கிஷோர் காஞ்சேரபாலெம், கார்த்திக் அடுசுமல்லி மற்றும் மகேஷ்.

 

தொழில்நுட்பக்குழு விவரம்:


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சிவா நிர்வாணா,

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா,

தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,

படத்தொகுப்பு: பிரவீன் புடி,

ஸ்கிரிப்ட் ஒருங்கிணைப்பாளர்: நரேஷ் பாபு பி,

இணை இயக்குநர்: சுரேஷ்,

மேக்கப்: ஸ்ரீனிவாஸ் ராஜு,

ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,

போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்,

மக்கள் தொடர்பு: வம்சி சேகர்

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

 

பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'மாறுவேஷம்'.


வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார்.


இப்படத்தில் வைபவ், திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில் மறைக்கப்பட்ட அடையாளங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. சஸ்பென்ஸ், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் விசாரணை, திரில்லர் ஆகியவற்றை கொண்ட விறுவிறுப்பான கதையாக நகரும். மிஸ்ட்ரி ஜானர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘மாறுவேஷம்’ மறக்க முடியாத திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.


இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது யூ/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது. இதையடுத்து ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா, 

இசை: ராஜ்குமார் அமல், 

படத்தொகுப்பு: என்.பி. ஸ்ரீகாந்த், 

கலை இயக்கம்: மணிகண்டன் ஸ்ரீனிவாசன்,

கூடுதல் திரைக்கதை: எஸ். இசையமுதன்.

 

சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஸெனோஃபர் ஃபாத்திமா


சென்னை: துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார்.


சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் ஸெனோஃபர், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், சமூகப் பிரச்சினைகள், மனித நடத்தை மற்றும் சமகாலக் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.


Zen Film Productions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஸெனோஃபர், இதுவரை 20-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். சைபர் குற்றங்கள், குடும்ப வன்முறை, நம்பிக்கை, உளவியல் உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சமகாலப் பிரச்சினைகள் அவரது படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.


ஸெனோஃபருக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுத் தந்த முக்கியமான படைப்புகளில் The Reel Files குறிப்பிடத்தக்கது. முதலில் குறும்பட வடிவிலான ஹாரர் கான்செப்ட்டாகத் தொடங்கிய இந்தத் தொடர், பின்னர் ZEE5 Global தளத்தில் வெளியாகும் வெற்றிகரமான ஆந்தாலஜி தொடராக உருவெடுத்தது.


இதன் முந்தைய சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து, குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இடம்பெற்ற Season 3-க்குப் பிறகு, The Reel Files Season 4 புதிய மற்றும் எதிர்பாராத களத்தை நோக்கி நகர்கிறது.


இந்த சீசனில் Bigg Boss 16 புகழ் அப்து ரோசிக், Dubai Bling நட்சத்திரம் இப்ராஹீம் அல் சமாதி மற்றும் எமிராட்டி உள்ளடக்கப் படைப்பாளர் அஹ்மத் அல் மர்சூகி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.


பார்வையாளர்களுக்கு பரிச்சயமான பிரபலங்களை எதிர்பாராத உளவியல்-திகில் கதாபாத்திரங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம், வித்தியாசமான மற்றும் புதுமையான சினிமா அனுபவத்தை வழங்க ஸெனோஃபர் முயற்சி மேற்கொள்கிறார்.


சென்னை – துபாய்: புதிய படைப்பாற்றல் பாலம்


சர்வதேச அளவில் தனது படைப்புகளுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஸெனோஃபர் தனது அடுத்த படைப்புப் பயணத்தில் சென்னையை முக்கியமான மையமாகக் கருதுகிறார்.


சென்னையை மையமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்புகள் மற்றும் புதிய கூட்டணிகளுக்கான வாய்ப்புகளை அவர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். இதன் மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படப் படைப்பாளிகளுடன் துபாயைச் சேர்ந்த படைப்பாளிகளை இணைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க அவர் விரும்புகிறார்.


இந்தியா மற்றும் UAE நாடுகளின் பார்வையாளர்களை இணைக்கும் கதைகளை உருவாக்குவதோடு, இரு பிராந்தியங்களையும் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் படைப்புத் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் அவரது நீண்டகால நோக்கமாக உள்ளது.


தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஸெனோஃபர் ஃபாத்திமா கூறுகையில்:


“எனது திரைப்படப் பயணத்தில் துபாய் எப்போதும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், சென்னை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம். எல்லைகளைக் கடந்து செல்லும் கதைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியா மற்றும் UAE-யின் அற்புதமான திறமைகளையும், இரு நாடுகளின் திரைப்படக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன். இதை வெறும் ஒரு விரிவாக்கமாக நான் பார்க்கவில்லை. மாறாக, இரண்டு துடிப்பான திரைப்படச் சூழல்களுக்கு இடையே நீண்டகால படைப்பாற்றல் கூட்டாண்மைக்கான தொடக்கமாகவே பார்க்கிறேன்.”


ஸெனோஃபரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் Ayah – The Power of Dua திரைப்படமும் இடம்பெறுகிறது. A.R. Rahman-ன் Firdaus Studio-வுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது.


அதேபோல், அவரது உளவியல் த்ரில்லர் திரைப்படமான Specter: Black Out சர்வதேச அளவில் கவனம் பெற்றதுடன், அதன் டீசர் நியூயார்க்கின் புகழ்பெற்ற Times Square விளம்பரப் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.


The Reel Files Season 4 மூலம் சர்வதேச அளவில் தனது படைப்புப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தி வரும் ஸெனோஃபர் ஃபாத்திமா, தற்போது சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.


அவரைப் பொறுத்தவரை, இந்தப் பயணம் வெறும் புவியியல் விரிவாக்கம் மட்டுமல்ல. தனது வேர்களை நோக்கிய ஒரு மீள்வரவும், சென்னை மற்றும் துபாய் ஆகிய இரு முக்கியமான திரைப்படச் சூழல்களுக்கு இடையே நீண்டகால படைப்பாற்றல் பாலத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பும் ஆகும்.


இரு துடிப்பான திரைப்படக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைத்து, இந்தியக் கதைகளை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதே அவரது அடுத்தகட்டப் பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.


ஸெனோஃபர் ஃபாத்திமா குறித்து


ஸெனோஃபர் ஃபாத்திமா துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் Zen Film Productions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.


குறும்படங்கள், ஆந்தாலஜி தொடர்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்களில் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. உளவியல் சார்ந்த கதைசொல்லல், சமூக அக்கறை கொண்ட கருப்பொருட்கள் மற்றும் புதுமையான கதைக்களங்கள் இவரது படைப்புகளின் தனிச்சிறப்புகளாகும்.


அவரது திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் வாயிலாக குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

 

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை இன்னும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக கொண்டு வருவதற்காக செப்டம்பர் 3-ம் தேதிக்கு வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான டிரெய்லர், பான்-இந்தியா அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “ஐ ம் கேம்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளார்.


தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.


இந்த பிரம்மாண்ட படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். டிரெய்லர் மற்றும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, இசையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘Lokah: Chapter 1 - Chandra’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஐ ம் கேம்’. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘RDX’-க்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு - யுவராஜ் 


‘I Am Game’ – செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

 

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.


ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி-  அசோக் செல்வன் - அபிநயா செல்வம்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்,


''ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு நல்லதொரு கதைக்காக பொறுமையுடன் காத்திருந்தோம். இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தக் கதையை எங்களிடம் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அசோக் செல்வனும் எங்களுக்கு முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அளித்தார்.


இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று முதல் இப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.


'ஓ மை கடவுளே' படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக ரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


அசோக் செல்வனுக்கு 'போர் தொழில்', 'ப்ளூ ஸ்டார்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து 'அன்பில் அவன்' படத்தை மட்டும்  தேர்ந்தெடுத்து முழு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில்,


'' என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி.


அன்பில் அவன் - கனவைப் பற்றி பேசும் திரைப்படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்-  ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசுகிறது.


அழகான விஷுவல்ஸ்- அசோக் செல்வன் & பிரீத்தி முகுந்தன் என இரண்டு  ஃபிரெஷ்ஷான ஸ்கிரீன் ஃபேர்-  திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவினர்- இந்த ஆண்டின் சிறந்த மியூசிக் ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் வரும் அளவிற்கு அற்புதமான இசை - ரசிகர்கள் விரும்பும் வகையிலான திரையரங்க அனுபவம்- என பல அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.


இந்தப் படம் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் பிடிக்கும். ஏனெனில் அவர்களின் கனவு பற்றி பேசுகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய் பிரண்ட்-  ஹஸ்பண்ட் - இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன்'' என்றார்.


நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,


'அன்பில் அவன்' என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.


இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்... திருமணமான பெண்களுக்கும்... பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,


''என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.


சினிமா குடும்பத்தின் முன்னோர்களான பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.


சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம்  அனுமதிக்கத்தான் வேண்டும்.


ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான்.


இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த கதை-  திரைக்கதை - திரையரங்கத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு என்ன அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றம் ஏற்பட்டதாக எனக்குள் உணர்ந்தேன்.


இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே... அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்... நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.‌


இந்தப் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.


இது பெண்களை... அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது.. அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.‌

நான் உறுதியாக சொல்கிறேன் 'அன்பில் அவன்' திரைப்படம் நின்று பேசும்.‌


அன்பில் அவன் - காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்.


காதல் - புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம்- அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அழகான காதல் கதை.


இந்தப் படத்தை இதுவரை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.


இந்த படைப்பு கோவிந்த் வசந்தாவின் கான்ஸர்ட். '96 'படத்திற்கு இணையாக இப்படத்தின் இசையும் பேசப்படும்'' என்றார்

Pageviews