KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு  அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.


தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது. யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.


விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள், படத்தின் உலகம் மற்றும் தமிழ் ரசிகர்களுடனான தங்களது எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில், பாடலாசிரியர்,  இயக்குநர்  விக்னேஷ் சிவன் பேசியதாவது..,


“இங்கு நிற்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. யாஷ் சார் நான் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான். முதலில் இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தமாக இப்படத்திற்காக மூன்று பாடல்களை எழுதியுள்ளேன்.


யாஷ் சாருக்கு இந்தியா முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டாக்ஸிக் திரைப்படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன்.


வெங்கட் சார் நமது மாண்புமிகு முதல்வர் விஜய் சாரின் Jananayagan படத்தை தயாரிக்கும்போது பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டார். படம் ஆன்லைனில் கசிந்தபோதும் அவர் மிகவும் உறுதியுடன் இருந்தார். தமிழக மக்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


கீதுமோகன்தாஸ் மேம் எனக்கு குடும்ப நண்பர்  போன்றவர். இப்படத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.


நடிகர் சுதேவ் நாயர் பேசியதாவது..,


“கடைசியாக ‘காட்டான்’ தொடருக்காக தமிழ்நாடு வந்திருந்தேன். அது எனக்குப் பிடித்த படைப்பு. விஜய் சேதுபதி சாருடன் நடித்தது மறக்க முடியாதது.  இப்போது எனக்குப் பிடித்த யாஷ் சாருக்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ‘டாக்ஸிக்’ படத்திற்கு முன்பு இருந்த என்னையும், ‘டாக்ஸிக்’ படத்திற்குப் பிறகு உருவாகப் போகும் என்னையும் நானே பார்க்கிறேன். இந்தப் படத்தின் நட்சத்திரக் குழுவினரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் உத்வேகம் அளிக்கும் மனிதர் யாஷ் சார்.” இப்படம் எல்லோருக்கும் புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.


நடிகை ருக்மிணி வசந்த் பேசியதாவது..,


“வணக்கம் சென்னை! ‘டாக்ஸிக்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். யாஷ் சார், நீங்கள் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். அதில் நானும் ஒருவர். உங்கள் ரசிகையாக இருந்த என்னுடைய பயணம், தற்போது உங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. கீது மோகன்தாஸ் மேடம், இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.”


நடிகை ஹுமா குரேஷி பேசியதாவது..,


“நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும், பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.


கீது மோகன்தாஸ் மேடம் இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஒரு அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் KVN Productions இப்படத்தை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறது.


இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட அவர்  இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ‘ராக்கிங் ஸ்டார்’ மட்டுமே இருக்கிறார்; அது யாஷ் சார். அவர் திரையுலகை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.


இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.


நடிகை கியாரா அத்வானி பேசியதாவது..,


“சென்னைக்கு நான் வருவது இதுதான் முதல் முறை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினோம். அப்போது வெங்கட் சார் பிறந்தநாளையும் கொண்டாடினோம். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எங்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. அதைவிட முக்கியமாக, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னுடன் நடித்த அனைத்து சக நடிகர்களும் தங்களது திறமையால் அசத்தக்கூடியவர்கள்.


ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ் மேடம். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.


‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு யாஷ் சார் இந்திய சினிமாவை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.”


இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசியதாவது..,


“எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அதே நிலை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் சார் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார்.


‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் சார் காட்டினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது. அனைவருக்கும் நன்றி. “


தயாரிப்பாளர் KVN Productions வெங்கட் நாராயணன் பேசியதாவது..,


“‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக, எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக நின்ற தளபதி விஜய் சாரின் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விஜய் சார், சினிமாவில் இது தனது கடைசி படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால்   விஜய் சார் தற்போது திரையில் இல்லாததை மிகவும் வெறுமையாக உணர்கிறேன். எனவே, அவர் மீண்டும் திரையில் நடிக்க வர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.


‘டாக்ஸிக்’ ஒரு புதிய பாதையை உருவாக்கும் படமாக இருக்கும். கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் முற்றிலும் வேறொரு அனுபவமாக இருக்கும்.     நயன்தாராவுக்கு என்று தனி ஒரு ஆரா இருக்கிறது. அவரது கதாப்பாத்திரம் திரையில் மிகப்பெரிய மாஸை உருவாக்க போதுமானது கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் அசாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.


யாஷ் சார் இந்தப் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் உண்மையிலேயே அசாத்தியமானவர் சார்; அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்கள் திரைப்பயணத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மைல்கல்லாக அமையும்.


‘டாக்ஸிக்’ முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகம். ‘டாக்ஸிக்’ உலகத்திற்குள் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நன்றி”


நடிகர் யாஷ் பேசியதாவது ..,


“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.


‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.


நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.


சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும் அனைவருக்கும் நன்றி.

இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.


ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன் மூலம் யாஷின் ரசிகர் வட்டத்தை தாண்டி, இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

பிரசாந்த் வர்மா- ஆர் கே டி ஸ்டுடியோஸ் (RKD Studios)- பூஜா கொல்லூரு- ஆகியோரின் கூட்டணியில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான படைப்பான 'மகாகாளி- #MAHAKALI படத்தில் அக்ஷய் கண்ணா 'சுக்ராச்சாரியார்'- SHUKRACHARYA அவதாரத்தில் தனது 'போர் முழக்க'த்தை - ( WarCry) வெளிப்படுத்தும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது


ஆர் கே டி ஸ்டுடியோஸ் - RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K துக்கல் மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோர் இந்திய வரலாற்றுப் பின்னணியிலான மகாகாளி - MAHAKALI பிரம்மாண்ட படைப்பின் அறிமுக காணொளியை- Glimpse அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ரசிகர்களின் நீண்ட காத்திருப்பும் நிறைவடைந்துள்ளது. பார்வையாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டிய இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் அதன் அறிமுக காணொளிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம் -  SHUKRACHARYA's WarCry  என பெயரிடப்பட்டுள்ள இந்த  அறிமுக காணொளியுடன் இந்த படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான சாதாரண மோதலை விடவும்.. மிகப்பெரியதொரு முரண்பாட்டில் தெய்வீக சக்திகள் சிக்கிக் கொள்ளும் நிலையில், தர்மத்திற்கும்... அதர்மத்திற்கும்... இடையிலான ஒரு வலிமையான போருக்கான களத்தை இந்த காட்சிகள் அமைக்கிறது. அசுரர்களின் வலிமைமிக்க குருவான சுக்ராச்சாரியாரின் தலைமையில் நடைபெறும் இந்த போர்... ஒட்டுமொத்த உலகின் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒரு மாபெரும் போருக்கான அறிகுறியாக அமைகிறது. அச்சுறுத்தும் தொனி- வரவிருக்கும் மோதலின் வலிமையான காட்சிகளுடன், 'முடிவு தொடங்குகிறது- The  End Begins ' என்பதை உணர்த்தும் இந்த காட்சி... 'மகாகாளி'  படத்தில் விரிவாக நிகழவிருக்கும் காவியப் போருக்கான அடித்தளத்தை பிரதிபலிக்கிறது.


இந்த காணொளியின் சிறப்பம்சமாக திகழ்வது... அக்ஷய் கண்ணா-  சுக்ராச்சாரியாராக மற்றும் எளிதில் அடையாளம் காண இயலாத தோற்றத்தில் தோன்றுவது தான். தீவிரமான பார்வை- கம்பீரமான திரை ஆளுமையுடன் காணப்படும் அவர், இந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் ( First Look) ஏற்படுத்திய பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து... இந்த காணொளி... அவரது நடிப்பின் முதல் உண்மையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இது அந்த வலிமைமிக்க ஒரு அசுர குரு மற்றும் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போரில் அவருடைய பங்களிப்பு குறித்த ஆர்வத்தை மேலும் கூடுதலாக்குகிறது.


பிரமிக்க வைக்கும் காட்சிகள்-  விரிவான உலக உருவாக்கம்-  ஈர்க்கக்கூடிய விஷுவல் எபெக்ட்ஸ் - ஆகியவை இணைந்து ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கும் 'மகாகாளி'யின் உலகத்தை... இந்த காணொளி முதன் முறையாக விரிவாக எடுத்துரைக்கிறது. இதில் ஸ்ரியா ரெட்டியும் வலிமையான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பிரம்மாண்டமான சூழலையும்... நுணுக்கமான விவரங்களையும் வெளிப்படுத்தும் காட்சிகள்... தயாரிப்பாளர்கள் உருவாக்கிய அந்த பிரம்மாண்டமான உலகத்தை உணர்த்துவதுடன் கதையின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன.‌


ஹனு -மேன் - Hanu-man திரைப்படம் - பிவிசியு - PVCU (பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்)  எனும் பிரம்மாண்டமான திரைப்பட பிரபஞ்சத்திற்கான அடித்தளத்தை அமைத்து, இந்திய இதிகாச கதைகளை திரையில் கண்கவர் அனுபவமாக மாற்றும் இயக்குநரின் அசாத்தியமான திறமையை நிரூபித்தது. அந்த பார்வையை இன்னும் பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க அளவில் முன்னெடுத்துச் செல்ல 'மகாகாளி- MAHAKALI' தயாராகி வருகிறது. 2: 55 நிமிடங்கள் கொண்ட இந்த முன்னோட்ட காணொளி- பிரசாந்த் வர்மாவின் பரந்து விரிந்த திரைப்படப் பார்வையை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்... கதைக்களம்- பிரம்மாண்டம் மற்றும் காட்சி அனுபவம் ஆகியவற்றில் தொடர்ந்து விரிவடையும் ஒரு மகா பிரபஞ்சத்தை பற்றியும் எடுத்துரைக்கிறது.


ஆர் கே டி ஸ்டுடியோஸ் RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் கே துக்கல் வழங்குகிறார். இதனை இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். இது பிரசாந்த் வர்மாவின் திரைப்பட பிரபஞ்சத்தின் அடுத்த படைப்பாக அமைகிறது. இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, பூமி ஷெட்டி, ரோஹித் ஷரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


நடிகர்கள்:

பூமி ஷெட்டி , அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, ரோஹித் ஷரஃப், குஷ்பூ சுந்தர், ராகேஷ் பேடி , சமுத்திரக்கனி, ஜிதின் குலாட்டி, ரஜத் கபூர் ,முரளி சர்மா, நாசர், பப்லு பிருத்விராஜ் .


தொழில்நுட்பக் குழு :

படைப்பு : பிரசாந் வர்மா

இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லூரு தயாரிப்பு நிறுவனம் : ஆர் கே டி ஸ்டுடியோஸ்

வழங்குபவர் : ஆர் கே துக்கல் தயாரிப்பாளர் : ரிவாஸ் ரமேஷ் துக்கல் இசை: ஸ்மரன் சாய்

ஒளிப்பதிவு : சுரேஷ் ரஹடு

தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா

நிர்வாகத் தயாரிப்பாளர் : வெங்கட் குமார் ஜெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

 

 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை


சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.


குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!


சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.


“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.


“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.


இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.


ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.



தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள்: சூர்யதேவரா நாக வம்சி & சாய் சௌஜன்யா

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

படத்தொகுப்பு: நவீன் நூலி

கலை இயக்கம்: பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர்: யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி: V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள்: சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

 

வரும் நாட்களில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான சிட்டுக்குறிஞ்சி படத்தின் முதல் பாடலான குறிஞ்சி மலை மேல பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


உற்சாகம் நிறைந்த திருமணப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். பாடலுக்கு கு. கார்த்திக் வரிகள் எழுதியுள்ள நிலையில், அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார்.


பிளாக் அண்ட் ஒய்ட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சிட்டுக்குறிஞ்சி, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகி வருவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள சிட்டுக்குறிஞ்சி, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா மற்றும் நக்ஷா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


சிட்டுக்குறிஞ்சி படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, 1983-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட காலகட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தின் வாழ்வியலையும் சூழலையும் தத்ரூபமாகக் கொண்டுவருவதற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


மேலும், படத்தின் இசை அனுபவத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், பின்னணி இசைக்கான பதிவுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் அமைந்துள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன


சிட்டுக்குறிஞ்சி மூலம் இசையமைப்பாளராக மாறா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ . ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ராம்ஜி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


இப்படத்தை டி. ஜூட் ஆனந்த் தயாரிக்கிறார். ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்) மற்றும் கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.


நட்சத்திரப் பட்டாளம்


ரஜித் மேனன்,

ஸ்ரீராம் கார்த்திக் – சிறப்பு தோற்றம்,

தீப்ஷிகா,

நக்ஷா சரண்,

வீ.ஜே. பப்பு,

ஜி. எம். குமார்,

எல். வி. ஆதவன்,

ராம்ஸ்,

ஹலோ கந்தசாமி,

தேனி முருகன்,

சுஜாதா,

கராத்தே ராஜா,

ஈஸ்வர்பாபு,

மஞ்சு,

அட்வகேட் பாபு.


தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம்: வீஜெ மீனாட்சி சுந்தரம்

தயாரிப்பு: டி. ஜூட் ஆனந்த்

இசை: மாறா

ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ

படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்

கலை இயக்கம்: ராம்ஜி

நடன இயக்கம்: தீனா

ஒலி வடிவமைப்பு: டோனி ஜே

SFX: கிஷோர் காமராஜ்

VFX: ஜீவரத்தினம் ஆர்.

ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தனி

காஸ்ட்யூமர்: எஸ். பி. சுகுமார்

மேக்கப்: வேல்முருகன்

விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்

இணை தயாரிப்பாளர்கள்: ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்), கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர்

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மென்ட்ஸ்)

மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அஹ்மத், பாரஸ் ரியாஸ்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ. எஸ். பக்தீஸ்வரன், ஆர். ஜெ. முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்

ஆடியோ உரிமை: Saregama India Ltd. (RPSG Group)


'குறிஞ்சி மலை மேல' பாடல் 15 லட்சம் பார்வைகளை கடந்து, இசை ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், படத்தின் இசையும், வித்தியாசமான கதைக்களமும் 'சிட்டுக்குறிஞ்சி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


'சிட்டுக்குறிஞ்சி' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

 

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் இயக்குநர்  தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,


“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு  மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில்  என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.


அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.


ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”


நடிகை கலா பேசியதாவது..,


“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.


அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.


இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,


“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம்,  இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை சோனா பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக  இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,


“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.


இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.


இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”


இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.


இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.


இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,


“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.


நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.


இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.


என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.


அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.


 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.

அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 


அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.


வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் முடியும் என்று கூறும் அவர், இது ஒரு கலைஞராக தனக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என நம்புகிறார்.


“இந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கும்.குறிப்பாக, ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஒரே மொழிக்குள்ளேயே சுருங்கி விடாமல், பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவுகிறது” என்கிறார் வர்ஷினி.


தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் வர்ஷினி. அதேபோல, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரின் இசைக்கும் அவர் ரசிகை. 


தனது திரைத்துறை பயணத்தில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல் என்கிறார் வர்ஷினி. குறும்படங்களைக் கடந்து, தனது நடிப்பு திறமை, நடன அனுபவம் மற்றும் நடிப்பின் மீதான காதலை பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பாக இப்படத்தை அவர் பார்க்கிறார். கோயம்புத்தூரில் இயற்பியல் படித்ததிலிருந்து, திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வர்ஷினியின் பயணம், எதிர்பாராத பாதைகள்கூட சில நேரங்களில் மிகவும் உற்சாகமான இலக்குகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நிரூபிக்கிறது.

 

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.


தயாரிப்பாளர் ரவி சங்கர், "திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும், தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் ரசிப்பார்கள். சிவா நிர்வாணாவின் இந்த படத்தை அந்த கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்து உள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


வசனகர்த்தா விஜய் பாலாஜி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இந்தப் படத்திற்கு பெரும் பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான். மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்".


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், " ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று. தமிழ் படத்தை விட இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன். இந்தப் படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்". 


ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, " ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம். சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும்".


குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, "இந்த படம் எனக்கு ரொமவே ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார், மாஸ் மகாராஜா ரவி தேஜா சார், பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".


நடிகை பிரியா பவானி சங்கர், " படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்".


இயக்குநர் சிவா நிர்வாணா, "தமிழ் சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது அவர்களுக்கு அந்த படத்தில் இருந்து எடுத்துக் கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த மாதிரி படங்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக 'இருமுடி கட்டு' இருக்கும். இந்த படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவியை பற்றி யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதை போலவே தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்த படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்". 


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். 'பொல்லாதவன்', 'ராஜா ராணி' படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே 'இருமுடி கட்டு' படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள். 'பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். இனி சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தொழில்நுட்ப  குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி". 


நடிகர் ரவி தேஜா, "இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா.  தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

 

சாய் ரமணி இயக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பாக்யராஜும், டி. ராஜேந்தரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாகவும் எம்.பி.எம். எண்டர்டெயின்மென்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.


இது குறித்து பேசிய இயக்குநர் சாய் ரமணி, “பாக்யராஜ் சாரின் திடீர் மறைவு எங்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் சார் மற்றும் டி. ராஜேந்தர் சாரை வைத்து படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினத்தில் பாக்யராஜ் சாருக்கான இரங்கல் அஞ்சலியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் கவலையாக இருந்தது.


‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சார் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இப்படத்தை நன்றாகப் புரொமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். எனவே, அந்தக் காட்சிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம்.


சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்.


பாக்யராஜ் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த இப்படத்தில் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் சார் இடம்பெறுவார்” என்றார்.


இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.


கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார், ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.

 

தென்னிந்தியாவில் ஒரு நிமிட குறும்படங்களை மையமாகக் கொண்டு, புதிய மற்றும் வளர்ந்து வரும் திரைக்கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் திறமைகளை அங்கீகரித்து வரும் முன்னோடி தளமாக LIGHTZ ÖN AWARDS திகழ்ந்து வருகிறது.


திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கனவும் கொண்ட இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட LIGHTZ ÖN AWARDS, தற்போது தொடர்ந்து 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, மிகப்பெரிய படைப்பாளிகளின் சமூகமாகவும், இளம் திரைப்படக் கலைஞர்களின் சினிமா பயணத்திற்கு ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாகவும் வளர்ந்துள்ளது.


*8-வது ஆண்டு விழாவின் சிறப்பம்சங்கள்*


2026-ஆம் ஆண்டுக்கான 8-வது LIGHTZ ÖN AWARDS விழா, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியமான இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வருகையால் மேலும் சிறப்பானதாக அமைந்தது.


விழாவில் ‘29’, ‘Master’, ‘Leo’ உள்ளிட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரத்னகுமார், ‘Con City’ திரைப்பட இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், ‘சிலை’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, எடிட்டர் ஸ்ரீ வட்சன், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, இயக்குநர் பொன்குமார், நடிகர் லிங்கேஷ் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 


*முதல் பரிசை வென்ற ‘வர்ணங்கள் ஆயிரம்’*


2026-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு திறமையான ஒரு நிமிட குறும்படங்கள் பங்கேற்றன. அவற்றில் சிறப்பான கதை சொல்லல் மற்றும் படைப்பாக்கத்துடன் கவனம் பெற்ற ‘வர்ணங்கள் ஆயிரம்’ குறும்படம் முதல் பரிசை வென்றது.


புதிய கதைகள், புதிய சிந்தனைகள் மற்றும் வித்தியாசமான படைப்பாக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் LIGHTZ ÖN AWARDS-ன் நோக்கத்தை இந்த வெற்றி மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. 


*பெண் மையக் கதைகளுக்கு அங்கீகாரம்*


இந்த ஆண்டு விழாவில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக, பெண்களை மையமாகக் கொண்ட இரண்டு குறும்படங்கள் விருதுகளைப் பெற்றன.


ஒரு நிமிட குறும்பட வடிவத்தின் மூலம் பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் படைப்பாளிகள் தங்களுடைய கதைகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை LIGHTZ ÖN தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் குறும்பட உலகில் கதைகளின் பன்முகத்தன்மையும், புதிய படைப்பாளிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. 


*100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களுக்கு அங்கீகாரம்*


தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் LIGHTZ ÖN AWARDS, இதுவரை 100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களை கௌரவித்து, அவர்களின் திறமைகளை அங்கீகரித்துள்ளது.


பல புதிய இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையில் சாதிக்க விரும்பும் இளம் திறமையாளர்களுக்கு LIGHTZ ÖN ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. 


*LIGHTZ ÖN YouTube Channel*


ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, ஆர்வமுள்ள திரைப்படக் கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை இணைக்கும் ஒரு படைப்புலக சமூகமாகவும் LIGHTZ ÖN AWARDS வளர்ந்துள்ளது.


குறும்படங்கள் மற்றும் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட LIGHTZ ÖN YouTube Channel, புதிய படைப்பாளிகளின் படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் டிஜிட்டல் தளமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 


குறும்பட இயக்குநர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு, புதிய கதைகள் மற்றும் புதிய குரல்கள் பார்வையாளர்களை சென்றடைய LIGHTZ ÖN தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறது.


*8 ஆண்டுகளின் வெற்றிப் பயணம்*


8 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வரும் LIGHTZ ÖN AWARDS, ஒரு சாதாரண குறும்பட விருது விழாவைத் தாண்டி, அடுத்த தலைமுறை திரைப்படக் கலைஞர்களை கண்டறிந்து, ஊக்குவித்து, அங்கீகரித்து, அவர்களின் சினிமா கனவுகளுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கும் தளமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.


100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள LIGHTZ ÖN AWARDS, இன்னும் பல புதிய திறமைகளை கண்டறிந்து, அவர்களை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. 


*LIGHTZ ÖN – THE GATEWAY FOR FIRST GENERATION TALENTS IN CINEMA*


சினிமாவை கனவு காணும் புதிய தலைமுறையின் திறமைகளுக்கு ஒரு வாயில்.

புதிய கதைகளுக்கு ஒரு மேடை.

புதிய இயக்குநர்களுக்கு ஒரு அடையாளம்.

அடுத்த தலைமுறை சினிமாவுக்கான ஒரு பயணம் – *LIGHTZ ÖN.* 

 

வரலாற்றுச் சிறப்புமிக்க “சோழ தேசம்” இடைக்காலக் கண்காட்சி, வரும் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 25, 2026 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.


இக்கண்காட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழை, மூத்த நடிகரும் சிறந்த ஓவியருமான திரு. சிவகுமார் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி, அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றோம்.


அழைப்பிதழை மிகுந்த மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் பெற்றுக்கொண்ட திரு. சிவகுமார் அவர்கள், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியின் தொடக்க நாளில் முதல் ஆளாக நானே நேரில் வந்து கலந்து கொள்கிறேன்”* என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


மேலும், தனது சிறுவயது முதலே வரைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் மற்றும் தொன்மையான இடங்களின் ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தான் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ள அரிய வரலாற்றுச் சம்பவங்களையும், அவற்றை வரையத் தொடங்கியபோது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களையும் சுவையான நிகழ்வுகளாகப் பகிர்ந்து கொண்டார்.


வரலாற்றையும் கலையையும் ஒருங்கே நேசிக்கும் சிறந்த கலைஞரான திரு. சிவகுமார் அவர்களிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்தும் ஊக்கமும், “சோழ தேசம்” கண்காட்சி குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் அளித்துள்ளது.


இவண்,


மு. விஜயகுமார்

ஒருங்கிணைப்பாளர் – “சோழ தேசம்” கண்காட்சி


மு. ஹரி

இயக்குநர் – மு.அ. தமிழ் ஆய்வகம்

நிறுவனர் – “சோழ தேசம்”


மு. ஜீவானந்தன்

ஒருங்கிணைப்பாளர்


தொடர்புக்கு: +91 97910 31152

*இணையதளம்: [www.choladesam.com]

Pageviews