The much-awaited movie Anbe Diana is now streaming in Telugu, Tamil, Malayalam, Kannada, and Hindi on Sony LIV, following its theatrical release. Blending romance, humour, cultural and family dynamics, the film will now reach a wider audience, allowing viewers to experience this story from the comfort of their homes.


Set against the backdrop of Perambur, Chennai, Anbe Diana follows a conservative young man whose world takes an unexpected turn when he falls in love with a free-spirited Anglo-Indian girl. As two contrasting worlds come together, what follows is a journey shaped by family expectations and the complexities of finding your own voice. 


Catch Anbe Diana, now streaming exclusively on Sony LIV

 

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (Fipchain Technology Private Limited) நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்ட சேவைகள் பிரிவான ஐபி கிளைம்ப் (IP Climb), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association - SWAN) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, அவர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உரிமை மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.


இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அறிமுக நிகழ்ச்சி மற்றும் சேவைகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தில் பங்கேற்றனர்.


நிறுவனத்தின் பயணத்தை அறிமுகப்படுத்திய ஃபிப்செயின் நிறுவனர் ஜி. கே. திருநாவுக்கரசு, புரொடியூசர் பஜார் மற்றும் ஐபி கிளைம்ப் உள்ளிட்ட சேவைகள் மற்றும் முன்னெடுப்புகளின் வளர்ச்சி குறித்தும் பேசினார். பொழுதுபோக்குத் துறைக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதில் ஃபிப்செயினின் பணிகள் மற்றும் மாறிவரும் அறிவுசார் சொத்துரிமைத் தேவைகளை எதிர்கொள்வதற்கான அதன் முயற்சிகள் குறித்த கண்ணோட்டத்தை அவர் வழங்கினார்.


ஐபி கிளைம்ப் பிரிவின் தலைவரான அர்ச்சனா கவில், "எழுத்தாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புத் தொகுப்பு" (Writer’s Legal Protection Toolkit) என்ற தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்தினார். எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சட்ட மற்றும் அறிவுசார் சொத்துரிமைச் சிக்கல்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது. காப்புரிமைப் பாதுகாப்பு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிலையான, நீண்டகால காப்புரிமை ஊதியம் (ராயல்டி) கட்டமைப்புகளை நிறுவுவதன் முக்கியத்துவம் ஆகியவை இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டன.


எழுத்தாளர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கவலைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாதுகாப்பதற்கும், படைப்பாளிகள் தங்கள் உரிமைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து நிர்வகிக்க உதவும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் சாத்தியமான கூட்டுத் தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டது.


எழுத்தாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி உறுப்பினர்களுக்கான பிரத்யேக இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் முறையான ஒப்பந்தக் கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களை எளிதாக நிர்வகிக்க முடிவதோடு நீண்ட காலத்திற்கு அவர்களின் படைப்புகளைப் பாதுகாப்பாகப் பதிவு செய்து, கண்காணித்து மற்றும் நிர்வகிக்கலாம்.


ஐபி கிளைம்ப் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் இடையிலான இந்தக் கூட்டு முயற்சி, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும், நீண்டகாலத்திற்கு அவர்கள் தங்கள் படைப்புகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும் நடைமுறை வழிமுறைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் இரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


IP Climb/Fipchain தரப்பிலிருந்து அர்ச்சனா கவில், கீர்த்தனா, வெற்றிச்செல்வன், ஜி. கே. திருநாவுக்கரசு, மதனிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


SWAN அமைப்பின் சார்பில் தலைவர் சேரன், செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்: சிநேகன், வேல்முருகன், பழனி பாரதி, யார் கண்ணன், பாலசேகரன், செல்வபாரதி, நவீன், கே. பி. ஜெகன், வின்சென்ட் செல்வா, ரஞ்சித், பிரபாகர், சலங்கை துரை, ஜே. பி. ஜெயப்பிரகாஷ், அரவிந்தன் .


IP Climb பற்றி


IP Climb என்பது Fipchain Technology Private Limited நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்டச் சேவைகளுக்கான பிரிவாகும். படைப்பாளிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்தவர்கள் தங்கள் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் அவற்றிலிருந்து நீண்டகால மதிப்பைப் பெறவும் உதவுவதில் கவனம் செலுத்தி, அறிவுசார் சொத்து மேலாண்மைக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை இது வழங்குகிறது.


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) பற்றி


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) எழுத்தாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், திரைப்படத் துறையில் உள்ள எழுத்தாளர்களின் தொழில்முறை நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்படுகிறது. IP Climb உடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், தனது உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு, ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த SWAN திட்டமிட்டுள்ளது.

 

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.


‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு  கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர்  மேலவளவு கருப்பு  கோயிலில் கிடா வெட்டி,  பொதுமக்களுக்கு விருந்து வழங்கி,  அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக்குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.


சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.


தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணி கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது



‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது.


இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது.


குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலின் அடுத்த கட்டமாக அமைந்துள்ள திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் பாடல், ரசிகர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருசேரக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.


இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் ‘மீசைய முறுக்கு 2’, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசை என அனைத்து அம்சங்களையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.


‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.


முதல் பாகத்தின் இசை மற்றும் இளைய தலைமுறையினருடன் ஒன்றிணைந்த அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ‘கலைவாணியே’ பாடலும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் நடிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவருடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இசை, காதல், நட்பு, குடும்பம், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, திரையரங்குகளில் ஒரு திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு இசைக் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


நடிகர்கள்

* ஹிப்ஹாப் தமிழா

* சைத்ரா ஜே ஆச்சார்

* கேதிகா ஷர்மா

* ரம்யா ரங்கநாதன்

* ஹர்ஷத் கான்

* கருணாஸ்

* நாசர்

* ஆடுகளம் நரேன்

* கருணாகரன்


தொழில்நுட்பக் கலைஞர்கள்

கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா

தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்

இசை: ஹிப்ஹாப் தமிழா

படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார்

நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்

ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்

புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி

நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா

சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்

DI: Knack Studios

கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்

VFX: 85FX, Hocus Pocus

கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D

டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார்

மார்க்கெட்டிங்: Bonk Digital

புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz

முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன்

காஸ்ட்யூமர்: அருண்

ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா

ஒலிக்கலவை: கண்ணன் கணபத்

ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார்

புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C

புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

 

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.


இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.


இன்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.


பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.


50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை ஊடகங்கள் முன்னிலையில் தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் மக்களிடம் சென்றடையவும், ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.

 

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா அளவிலான ரசிகர்கள் வரவேற்பு மற்றும் உலகளவிலான அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம், அல்லு அர்ஜுன் பிராந்திய சினிமாவின் எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடங்கிய அவரது பயணம், இன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட உச்ச நட்சத்திரமாக உள்ளார். இது இந்திய சினிமாவின் மாறிவரும் சூழலையும் பிரதிபலிக்கிறது.


’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியிலிருந்து, சாதனை படைத்த ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படத்தின் தாக்கம் வரை, பல்வேறு மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ரசிகர்களுடன் வலுவான தொடர்பை அல்லு அர்ஜுன் உருவாக்கியுள்ளார்.


அவரது திரைத்துறை சாதனைகளைத் தாண்டி, கலாச்சாரம், முன்னணி பிராண்டுகள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு துறையிலும் அவரது செல்வாக்கு விரிவடைந்துள்ளது. அவரது தனித்துவமான ஸ்டைல், ஐகானிக் மேனரிசம் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் ஆகியவை, இன்றைய இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக அவரை மாற்றியுள்ளன.


ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ அட்டைப்படத்தில் இடம்பெற்றிருப்பது, அவரது நட்சத்திர அந்தஸ்தையும் உலகளாவிய மேடையில் இந்திய நட்சத்திரங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அட்டைப்படம் ஒரு நடிகராக அல்லு அர்ஜுன் பெற்ற வெற்றியை மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த கலாச்சார அடையாளமாக அவர் மாறியுள்ளதையும் கொண்டாடுகிறது.


இந்திய சினிமாவையும் தன் நட்சத்திர அந்தஸ்தையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வகையிலான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு, ஃபோர்ப்ஸ் இந்தியா ஷோஸ்டாப்பர்ஸ் 2026 அட்டைப்படம் அவரது பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.

 

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரிக்கும் திரையிருப்பு, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் மற்றும் எனர்ஜிட்டிக்கான நடனம் போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 


‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக ஹிருது ஹரூன் களமிறங்குகிறார் என்பதையே ‘டைகரியன் ரோர்’ பாடல் எடுத்துக்காட்டுகிறது. 


முதல் பீட்டிலிருந்தே இந்தப் பாடலின் பிரம்மாண்டமான காட்சிகள், எனர்ஜிட்டிக்கான இசை மற்றும் வசீகரிக்கும் நடனம் என வண்ணமயமாக உருவாகியுள்ளது. பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ஹிருது ஹரூன் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். டைனமிக் பெர்கஷன் இசையும், பல அடுக்குகளைக் கொண்ட இசைக் கருவிகளின் பயன்பாடும் பாடலின் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரிக்கின்றன. ஓஷோ வெங்கட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


முதல் சிங்கிளுக்குக் கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா.ராஜா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் பாடலைப் பாடியுள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட், ஒளிப்பதிவாளர் விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி மற்றும் கலை இயக்குநர் கே.பி. நந்து ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


இந்தப் பாடல் மூலம் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் இசை புரமோஷன் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளது.இதன் மூலம், விறுவிறுப்பும் உற்சாகமும் நிறைந்த சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் தரவிருக்கிறது.

 

நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக அல்பி ஆண்டனி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், இந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது.


குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில் தெரிய வருகிறது. டிரெய்லரைப் பார்த்தவுடனேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.


இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பான கலைஞர்கள் கூட்டணி இப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாவனா ஸ்டூடியோஸ் (Bhavana Studios) தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் Future RunUp Films வழங்கி விநியோகிக்கிறது. Primark Productions நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.  மலையாளத்தில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ் ரசிகர்களிடமும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


காதல், நகைச்சுவை, உணர்வுகள் என ஒரு வித்தியாசமான உறவின் பல பரிமாணங்களை பேசும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

Pageviews