அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்,


“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா - கவின் இணையும் முதல் திரைப்படம் என்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திர பட்டாளம் ஒன்றாக இணைந்திருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 


நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்... வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்... இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. 


திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை... நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு... வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி... ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது. 


கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. 


 சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

 

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ONE MAN திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.


ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையாகப் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள், தனி மனித உழைப்பையும் தாண்டி, இதன் கதையும், திரைக்கதையும், காட்சி அமைப்பும் சுவாரசியமானதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் பார்க்கும் விதத்திலும் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.


படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள். இவனிடம் இருந்து அவன் எப்படி தப்பிப்பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைந்துள்ளதாகவும், அதை ஒரே மனிதனாக இருந்து நிகழ்த்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் பாராட்டி வருகின்றனர்.


மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருப்பது மேலும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் செய்த இந்தப் பெரும் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி ONE MAN திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. 


‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


"மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்" என்று 'பெரும் மௌனங்கள்' நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா தெரிவித்துள்ளார்.

 

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.




இந்நிகழ்வினில் 


தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:


“இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்.


தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இந்த இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருகின்றன. அதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.


நான் தயாரித்த ஜிகர்தண்டா திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் மதுரையில் இருக்கும் ஒரு பிரபல ரவுடியை மையமாகக் கொண்ட கதை அது. ஆனால் இறுதியில் அந்த ரவுடி சினிமாவின் தாக்கத்தால் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நடிகராக மாறுகிறார். ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றும் சக்தி கலைக்கும் குறிப்பாக சினிமாவுக்கும் இருக்கிறது என்பதைத்தான் அந்தப் படம் எடுத்துக் காட்டியது. அதேபோல ஹெச். ராஜா அவர்களும் அரசியலில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவரது பேச்சுத் திறனும், செயல்பாடுகளும் அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் எப்போதும் ஒன்றாகவே பயணிக்கின்றன என்று சொல்கிறேன்.


இந்தப் படத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்து உதவி பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே மருத்துவராக உயர்ந்த நிலையில் இருந்தபோதும் சினிமா மீதான அவருடைய ஆர்வம் அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்து இந்தப் படத்தை இயக்க வைத்திருக்கிறது. அதுதான் சினிமாவின் ஈர்ப்பு.


ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், புதிய இயக்குநர்களும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் கலை உலகத்தின் மீதான அவர்களின் காதலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்தை இயக்கிய டாக்டர் எஸ். ராஜா அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் ராஜா முகமது அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘செய்! செய்யாதே!’ திரைப்படம் வெற்றி பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி… அனைவருக்கும் நன்றி.”




முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில், இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்புக் குழுவினருமான ராஜா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். எங்களுடன் அரசியல் பயணத்தில் இருந்தவர், இன்று திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் திரைத்துறைக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.


மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக டாக்டர் சௌந்தரராஜன் அவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். மனதிற்கு நெருக்கமானவர்களைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பேசும்போது அதை மறந்துவிட்டேன். அதற்காகவும் அவர்களிடம் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் முழுவதும் மதுரையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மதுரையுடன் எனக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. எனது தந்தை எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்தது கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான். அதனால் மதுரை என்றாலே எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது.


இப்படத்தில் நடித்திருக்கும் எங்கள் அண்ணன் ஆளுமை ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.  இந்தப் படத்தில் குரு விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஒரு முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”



இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசியதாவது.., 


இந்த திரைப்படத்தின் கதையை அக்கா தமிழிசை மிக அழகாக கூறிவிட்டார். இப்படம் மருத்துவ துறையை பற்றிய படம் அதோடு 

இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் கடமையை பேசுகிறது. 


இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.  இப்படத்தில் என் மனைவி மகள் பாடியுள்ளனர். பலர் இப்படத்திற்காக உழைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தந்து அந்த தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஆசை. 


இப்படத்தில் அண்ணன் ராஜா அவர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் எனக்காக மட்டுமே இப்படத்தில் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் நடித்துத் தந்தார். மிகச் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆச்சரியப்படுகிறேன். அவர் சிவாஜியைப் போல ஒரு அற்புதமான நடிப்பை இப்படத்தில்  தந்திருக்கிறார். அவரை வைத்து தேவர் மகன் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது கண்டிப்பாக நிறைவேறும் இப்படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவீர்கள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 




தமிழக அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேசியதாவது.., 


எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் (Make-up) போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்.


சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பான முறையில் இயக்குநர் டாக்டர் ராஜா , அவரது குழுவினர் மற்றும் தம்பி குரு ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது."


இப்படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும் அனைவருக்கும் என் நன்றிகள். 



தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில், மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு சமூகச் செய்தியை வலியுறுத்தும் திரைப்படமாக ‘செய்! செய்யாதே!’ உருவாகியுள்ளது. அரசியல் நாடகமும் சமூக மருத்துவ விழிப்புணர்வும் இணைந்த தனித்துவமான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.



ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) இயக்கி கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். தயாரிப்பாளராக சுப்புலட்சுமி ஜெயராம் (கலிபோர்னியா, அமெரிக்கா) பணியாற்றியுள்ளார்.


இப்படத்தில் ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் டாக்டர் எஸ். ராஜா, டாக்டர் விஜய் கதாபாத்திரத்தில் குரு விஜய் நடித்துள்ளனர். மருத்துவ நெறிமுறைகள், பொறுப்பான சுகாதார சேவை மற்றும் மனித உயிரின் மதிப்பை வலியுறுத்தும் கதைக்களம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.


மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


நடிகர் – நடிகைகள்:


* எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்

* டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்

* குரு விஜய் – டாக்டர் விஜய்

* தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி

* பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)

* சிதம்பரம் PDK – தங்கதுரை

* மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா

* தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா


தொழில்நுட்பக் குழு:


* தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்

* தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம்

* இயக்கம் / கதை / திரைக்கதை: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)

* ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்

* படத்தொகுப்பு: ராஜா முகமது

* இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்

* சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்


*விநியோகம்: ஹரிணி சுப்பு இன்டர்நேஷனல் ஃபிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்

 

அஷ்ரப் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'போட்டோகிராபர்', மர்மம், திகில், அமானுஷ்யம் மற்றும் உளவியல் கூறுகள் கலந்த ஒரு விசித்திரமான காட்டுப் பயண அனுபவத்தைத் தரும் படமாக அமைந்துள்ளது.


காட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட அரிய வகை மரத்தைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தீவிர இலக்குடன் கதாநாயகன் அஷ்ரப் காட்டுக்குள் பயணிக்கிறார். ஆனால், அவர் காட்டுக்குள் செல்லும் நொடிகள் முதலே பலவிதமான மர்மங்களையும், திகிலூட்டும் அமானுஷ்ய நிகழ்வுகளையும், உளவியல் ரீதியான சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். இறுதியாக அந்த ஆபத்தான காட்டில் இருந்து அவர் தப்பித்தாரா, அவர் தேடிச் சென்ற மரத்தைப் படம் பிடித்தாரா என்பதே படத்தின் முதன்மைக் கதையாகும்.


கதை, திரைக்கதை எழுதி இயக்கியதுடன், தனிமனிதப் பயணத்தை தாங்கிப் பிடிக்கும் நாயகனாகவும் அஷ்ரப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் தீவிரமான காட்சிகளில் எதார்த்தமாக நடித்துள்ளார். நாயகனின் நண்பர்களாக வரும் கருணாகரன் மற்றும் உறியடி சிவா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களைச் கச்சிதமாகச் செய்து படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர். நாயகி ஜனனி சமாதானம் மற்றும் அனனி சுவாமிநாதன் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் கவனம் ஈர்க்கிறார்கள்.


ரயீஷ் அஹ்மத்தின் ஒளிப்பதிவு காட்டின் அமைதியையும், அதே நேரத்தில் அங்குள்ள ஆபத்துகளையும் திரையில் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை திகில் காட்சிகளுக்குப் பெரும் உயிரூட்டியுள்ளது.


மர்மம் மற்றும் உளவியல் கலந்த நாவல் பாணித் திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கும், காடு சார்ந்த தனிமனிதப் பயணக் கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்த 'போட்டோகிராபர்' ஒரு புதிய மற்றும் வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தைத் தரும்.

 

ஜி.டி.என் (GDN) திரைப்படம், கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடுவின் (ஜி.டி. நாயுடு) வாழ்க்கை வரலாற்றுப் படமாகும்.

கோயம்புத்தூர் கலங்கல் கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் மோட்டார்கள் மீதும், புதிய தொழில்நுட்பங்கள் மீதும் அதீத ஆர்வம் காட்டும் இளைஞராக வளர்கிறார் ஜி.டி. நாயுடு (மாதவன்). ஒரு ஆங்கிலேயரின் மோட்டார் பைக்கைக் கண்டு வியந்து, அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகளில் இருந்து படம் தொடங்குகிறது. பின்னர், பஞ்சு ஆலைத் தொழில், பஸ் போக்குவரத்து மற்றும் பல்வேறு வியக்கத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அவர் எப்படி "இந்தியாவின் எடிசன்" ஆக உயர்ந்தார், அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட வருமானவரித் துறை வழக்குகளும், நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளும், துரோகங்களும் அவரை எவ்வாறு பாதித்தன என்பதை 1920 முதல் 1950 வரையிலான காலகட்டப் பின்னணியில் விவரிக்கிறது இத்திரைப்படம்.

ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவரது திரைப்பயணத்திலேயே மிகச் சிறந்த நடிப்பை மாதவன் வழங்கியுள்ளார். சத்யராஜ் மற்றும் ஜெயராமின் அனுபவமிக்க நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது. பிரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், இன்ஸ்பிரேஷனலாகவும் நகர்கிறது.

ஜி.டி. நாயுடு பயன்படுத்திய உண்மையான கார்கள், பைக்குகள் மற்றும் அவர் பஸ் ஸ்டாண்ட் அமைத்த அதே ஒரிஜினல் இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வரலாற்றுத் துல்லியத்தைக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒரு சாதனையாளரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, ஒவ்வொரு தமிழ்நாட்டினரும், குறிப்பாக இளைஞர்களும், கோவை மக்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு!


 


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'DC'.

வேலூரில் வசித்து வரும் கஸ்தூரி ராஜாவுக்கு, தனது மகன் லோகேஷை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் ஒரு பெரிய ஆளாக வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவு. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் லோகேஷ் தனது தாய் மாமன்களை கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறான். மகன் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனுடன் பேசுவதையே கஸ்தூரி ராஜா நிறுத்திவிடுகிறார். இந்நிலையில், போலீஸாரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யும் முயற்சியில், லோகேஷ் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்கிறார். அதே நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்.
ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்ததால் லோகேஷை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகும் லோகேஷ், சஞ்சனாவை சந்திக்கிறார். சஞ்சனாவுடனான சந்திப்பு லோகேஷின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. லோகேஷை பிடிப்பதற்காக போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார். சஞ்சனாவின் மரணம் லோகேஷை மேலும் உடைத்துப் போடுகிறது. 
விபச்சாரத் தொழிலில் சிக்கித் தவித்த வாமிகா கபியை லோகேஷ் காப்பாற்றுகிறார். எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கும் வாமிகா, லோகேஷுடன் இணைந்து பயணிக்கத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில், தன்னை சீரழித்த மருத்துவரை வாமிகா கொலை செய்கிறார்.

இதனால், ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வரும் லோகேஷுடன் வாமிகாவும் சேர்ந்து போலீஸாரின் குறியாகிறார். இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர்.

ஒருபுறம் போலீஸாரின் துரத்தல், மறுபுறம் கடந்த காலத்தில் செய்த குற்றங்களின் நிழல் என இருவரின் பயணமும் பரபரப்பாகத் தொடர்கிறது. லோகேஷும் வாமிகாவும் போலீஸாரிடம் இருந்து தப்பித்தார்களா? மகன் செய்த செயல்களால் அவனிடம் பேசாமல் இருக்கும் கஸ்தூரி ராஜா, இறுதியில் மகனுடன் பேசினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.


லோகேஷ் கனகராஜின் நடிப்பு: இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், 'தாஸ்' கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் லுக்கிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகா கபி எமோஷனலான காட்சிகளில் தத்ரூபமாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார்.


படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசைதான். ஒவ்வொரு மாஸ் காட்சிகளையும் தனது மிரட்டலான இசையால் தியேட்டரில் வேற லெவலுக்கு கொண்டு சேர்த்துள்ளார். 


அருண் மாதேஸ்வரனின் வழக்கமான 'ரா' மற்றும் வன்முறை நிறைந்த மேக்கிங் ஸ்டைல், முகேஷ் ஜியின் அசாத்திய ஒளிப்பதிவு, மிரட்டலான ஆக்ஷன் கோரியோகிராபி ஆகியவை தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன. 

அனிருத்தின் வெறித்தனமான இசைக்காகவும், லோகேஷின் ஆக்ஷன் அவதாரத்திற்காகவும் திரையரங்குகளில் கண்டிப்பாக பார்க்கலாம்.



Imprisonment transforms the ordinary life of the protagonist—played by Lokesh Kanagaraj, who ended up behind bars due to circumstances—into something extraordinary. As he continues to engage in criminal activities, the police pursue him. While fleeing, he meets Sanjana A.K. Just as their budding friendship begins to shift his mindset, she falls victim to police gunfire. Escaping the scene, Lokesh Kanagaraj encounters Wamiqa Gabbi, who is living a miserable life; he understands her plight and rescues her from that hellish existence.

Unsure of where to go, the rescued Wamiqa Gabbi travels with Lokesh Kanagaraj and kills the doctor who had ruined her life. Consequently, the police hunt them both down. 'DC' narrates the story of their attempt to evade the police, framing it as a clash between law enforcement and a criminal gang.

While the police usually hold wrongdoers accountable, those who challenge the police using their own methods—when the officers themselves are at fault—are branded as thugs and criminals. The protagonist, bearing this stigma, sets out to exact revenge for the wrongs inflicted upon him by the police. Director Arun Matheswaran presents the ensuing conflict between the two sides in a way that is not only action-packed but also engaging.

Making his debut as an actor, director Lokesh Kanagaraj enters the fray with a powerful performance as the character 'Devadas'. He commands attention through a role that suits him perfectly and a restrained acting style, while also delivering a menacing presence in the action sequences.

Wamiqa Gabbi, playing the female lead, skillfully conveys the agony of her hellish life through her body language alone. Sanjana A.K., who appears as another female lead, makes her entry with heavy makeup and has limited screen time; yet, her character's fate leaves the audience heavy-hearted.

The entire cast—including Thalaivasal Vijay, Kasthuri Raja, Krish Dhyal, Avinash Raghudevan, Jawahar Sakthi, Sharath Ravi, Pranav Theophine, A. Rajarishi, Balaji Deviprasad, and Atul—are perfectly suited for their respective roles.

Cinematographer Mukesh G. has captured the action sequences engagingly and successfully held the audience's attention by maintaining a consistent color palette throughout the film. Through unique camera angles and dynamic movements, he ensures that even ordinary scenes command the viewer's attention.

Anirudh's music is the film's greatest strength. His background score makes even the intense action sequences enjoyable rather than jarring; it elevates every scene from start to finish.

Although the film is filled with violent sequences, editor G.K. Prasanna has seamlessly integrated them into the narrative, keeping the audience engrossed in the story.

While the film bears director Arun Matheswaran's signature style—featuring a screenplay and visuals steeped in blood and gore—he presents the violence differently here, making it compelling through Anirudh's brilliant background score.

Despite the pervasive bloodshed and dismemberment, Arun Matheswaran manages to immerse the audience in the blossoming romance between Devadas and Chandra, making them momentarily forget the violence. At the same time, he powerfully conveys his message: that when the oppressed strike back, even if it involves violence, it is a necessary act that must be sustained.

Directed by 
Arun Matheswaran

Produced by
Kalanithi Maran

Starring :- Lokesh Kanagaraj, Wamiqa Gabbi, Sanjana, Krishnamoorthy

Cinematography : Mukesh G

Edited by
Prasanna GK

Music by
Anirudh Ravichander

Production
Company : 
Sun Pictures

*நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!*

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.

தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா
வசனம் : செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்
ஒளிப்பதிவு: K.S. பழனி
இசை: A.J. அலி மிர்சாக்
படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா
கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி
சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்
நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி
பாடல் வரிகள் : மோகன் ராஜன், கவிஞர் சாரதி 
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K
இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Pageviews