A special RAW team is hunting for a spy who has been in hiding for years. Karthi attempts to capture this spy and hand him over to his superiors to prove his own mettle. However, before he can do so, an international mercenary group kills the spy and tries to seize a secret he was guarding. Karthi manages to obtain the secret from the spy before he dies and, through him, learns that his father is still alive.

While searching for his father, Karthi discovers that there are two other secrets safeguarded by two other spies—similar to the one held by the deceased spy. He also learns that the leader of the international mercenary group, S.J. Suryah, is trying to acquire all three secrets to execute a plan that could destroy the nation. Karthi attempts to secure the secret before the mercenary leader can and uncover the story behind it; in the process, he reunites with his father. Together, father and son set out to thwart the plot to destroy the country. *Sardar 2* tells this story—revealing the nature of the threat, how they stop it, and the identity of S.J. Suryah—through high-octane action sequences in the style of a Hollywood action movie.

Although it is a sequel to the first *Sardar* film, director P.S. Mithran addresses a different issue to warn the public. He presents a scenario of a potential future catastrophe on a grand, commercial scale, set against the backdrop of an adventurous spy's life.

Karthi, playing the dual roles of father and son, distinguishes the characters not only through his appearance but also through his acting. The film effectively handles action-packed sequences that showcase the protagonist as a simple, unassuming man who, when on the job, transforms into a super-spy—fearlessly risking his life to protect the public. Although romantic scenes are minimal, Karthi’s energetic performance in the action sequences and aerial stunts delights the audience.

S.J. Suryah, playing the villainous international mercenary leader 'Red Dragon', delivers a performance that strengthens the screenplay. Despite being the antagonist, he commands the screen effortlessly during a lengthy sequence where he explains the consequences of human errors, maintaining the audience's engagement throughout.

Malavika Mohanan impresses with her action sequences, even though her role is brief; conversely, Ashika Ranganath’s character, despite appearing throughout the film, fails to leave a lasting impression. Rajisha Vijayan makes only a fleeting appearance in a single scene.

The comedy pairing of Yogi Babu and Nizhalgal Ravi provides plenty of laughs. Their reactions while listening to the villain's (S.J. Suryah) story are particularly hilarious, causing the entire theater to erupt in laughter.

Cinematographer George C. Williams has captured the visuals on a grand scale. He has skillfully executed the action and stunt sequences so that the use of computer graphics remains unobtrusive and seamless.

Sam C.S.'s music elevates the film's quality. His background score is perfectly balanced, adding immense strength to the movie and creating an experience reminiscent of a James Bond film during the chase and stunt sequences.

Vijay Velukutty’s editing stands out as the film's greatest strength. Despite the film featuring a dual role for the protagonist, a villain played by S.J. Suryah, the 'Japan Plan' devised by spies to save the public, and flashback sequences involving the RAW agency, editor Vijay Velukutty has seamlessly woven these elements together to ensure the narrative moves without any lag. He has executed his editing work with such finesse—particularly in making the action sequences convincing and maintaining the screenplay's momentum—that the three-hour runtime flies by unnoticed.

Director P.S. Mithran, handling the sequel to the first part, once again addresses a significant social issue with impact; however, rather than turning it into a preachy lecture, he presents it through action-packed sequences that keep the audience on the edge of their seats.

Even while using the villain character to explain the impending danger facing the public, the director infuses the scene with humor, ensuring the film’s pace remains steady. By keeping the audience constantly curious about what happens next from start to finish, the filmmaker has once again achieved success with Sardar.

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.

பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிதயாரித்தும் உள்ளார். இவர் திரைக்கதை சித்தர் என்றும் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டார்.  

எம்.ஜி.ஆர். அவர்களின் காலம் தொடங்கி, தமிழ் சினிமாவின் பல்வேறு தலைமுறைகளிலும் தனது தயாரிப்புகளின் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் ஆர். எம். வீரப்பன் அவர்கள். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்து, எம்.ஜி.ஆர். அவர்களின் திரைவாழ்க்கையில் பெரும் உறுதுணையாக விளங்கினார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அரசியல் மற்றும் திரைத்துறை என இரு வெவ்வேறு களங்களிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய ஆளுமையாக ஆர். எம். வீரப்பன் அவர்கள் விளங்கினார்.

ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், தமிழ் திரையுலகில் பல தலைமுறைகளாகப் பயணித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களைத் தயாரித்து, வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கிய முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த வகையில், திரைத்துறையில் ஆர்.எம்.வீரப்பன் விட்டுச் சென்ற பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக டி.ஜி.தியாகராஜனும் தனது தயாரிப்புப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந்தப் பின்னணியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறைப் பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூரும் வகையில் விழா அமைந்தது.

விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருடைய நினைவுகளைப் பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது” என்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் பேசும்போது, ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்ததாகவும், அதைக் கடந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், இன்றைய தலைமுறையினர் தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதாகவும், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர் என்றும் தெரிவித்தார். அவருடன் இருந்தவர்களையும் ஒழுக்கசீலர்களாக உருவாக்கிய பெருமை அவரையே சேரும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு, ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” என்றார்.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், திரைப்பட இயக்குநர் பி.வாசு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அரசியலில் தூய்மை, நாகரிகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர்; திரைத்துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியவர்; தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்வாக மட்டுமின்றி, அவரது வாழ்வியல் மதிப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.

*“இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது!*

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசளித்து அசத்தினார்.

விழாவில் படத்தின் வெற்றி, ரசிகர்களின் வரவேற்பு மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,

“இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம். சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனமாக இருந்தது. அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் ஜிவி பிரகாஷுக்கு எனது நன்றி. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்தை புரமோட் செய்தோம்.

மேலும், படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கு நன்றி. “படத்தை பெரிதாக வெளியிட வேண்டும்” என்ற தனது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதுடன், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் திரையிடல் அதிகரிக்கப்பட்டது பெரிய மகிழ்ச்சி.

“இம்மார்டல்” படத்தை வெற்றிப் படமாக கொண்டு வந்த தனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,

ஜீவி பிரகாஷ் அவர்களுக்கு முதல் நன்றி. மேலும், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சக்தி சார், சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் இந்த வெற்றியை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. “இந்த வெற்றியில் மீடியா நண்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி”.

எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,

“இம்மார்டல்” படத்தின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியான பிறகு பல இயக்குநர்கள் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள், அவர்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

படத்தின் எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், படக்குழுவினர் மற்றும் குறிப்பாக இயக்குநர் மாரியப்பன் சின்னா ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றி. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,

“விநியோகம் என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது என்றாலும், ஒரு படம் வெற்றி பெறும்போது கிடைக்கும் சந்தோஷமும் உற்சாகமும் எனக்கு மிகப்பெரிய எனர்ஜி. அந்த வகையில் ‘இம்மார்டல்’ படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு மனமார்ந்த நன்றி.

படக்குழுவினர் மிகப்பெரிய மெனக்கெடலுடன், குறிப்பாக CG பணிகளில் அதிக உழைப்புடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் முதலில் படத்தைப் பார்த்து கொடுத்த ஆதரவும் பாராட்டும் எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அதன் பின்னர் ரசிகர்களும் படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர்.

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்து, ஷோ பை ஷோ வசூல் அதிகரித்தது.

தமிழ்நாடு முழுவதும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை உணர்ந்ததும் ஜிவி பிரகாஷ் சாருக்கு தொலைபேசியில் தெரிவித்து மகிழ்ந்தேன். அவருடன் இதுவரை ஏழு படங்கள் செய்திருக்கிறேன்; அந்த ஏழு படங்களுமே எனக்கு வெற்றிப் படங்கள்தான். அவரது கேரியரில் அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் என்னுடைய வெளியீடுகள் என்பதும் பெருமை.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பும், சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசைக்கான கூடுதல் கவனமும் பாராட்டுக்குரியது. விஷுவல்ஸ், CG உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

முதன்முறையாக எனக்கு இந்தப் படத்தின் மூலம் அன்பளிப்பை வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து தான் ஒரு தயாரிப்பாளர் மெட்டீரியல் என்பதை தமிழ் திரையுலகிற்கு நிரூபித்துவிட்டார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசியதாவது..,

“‘இம்மார்டல்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் விமர்சனங்களும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் நடித்த ஒரு படத்திற்கு இந்த அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் கிடைத்ததில்லை.

ஐடி துறையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த எனக்கு, சில நேரங்களில் இந்தத் துறையில் நாம் இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் வரும். ஆனால் இந்தப் படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள், ‘நமக்கும் இந்தத் துறையில் ஒரு இடம் இருக்கிறது’ என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

‘இம்மார்டல்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதுவும் முற்றிலும் வித்தியாசமான ஜானரில், இந்தப் படத்தில் செய்த சில தவறுகளை சரிசெய்து, இன்னும் சிறப்பான படத்தை உருவாக்க வேண்டும்.

என்மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கு சிறப்பு நன்றி. ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் இந்த வெற்றியில் இருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது:

“‘இம்மார்டல்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் உழைப்பே முக்கிய காரணம். கதை சொல்லும்போதே படம் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர், தான் நினைத்தபடியே அதை திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.

முதன்முறையாக இப்படியொரு பெரிய படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், வித்தியாசமான கதையை முழுமையாக நம்பி படத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படத்தை சிறப்பாக வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சாருக்கும் நன்றி.

படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்திய CG பணிகள் சிறப்பாக இருந்தன. அதற்காக தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள். சாம் சி.எஸ். அவர்களின் இசையும் பின்னணி இசையும் படத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஜிவி பிரகாஷ் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து நடிக்கக்கூடியவர். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. கயாது லோஹரும் தமிழை அழகாகப் பேசி சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிப் பயணம் அடுத்த படங்களிலும் தொடர வேண்டும்” என்றார்.

நடிகை மிருதுளா பேசியதாவது..,

“இம்மார்டல்” படத்தில் நான் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்தேன். குறிப்பாக, சில சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “இம்மார்டல்” படத்தின் வெற்றிக்கு முழு படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,

“‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. அது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பேசி வந்தேன். அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டும் போதாது. அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும், நேர்மறையான எனர்ஜியும் முக்கியம்.

இந்தப் படத்திற்காக அதிக நேரத்தையும் பொறுமையையும் செலவிட்டு பணியாற்றிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு நன்றி. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,

எனது முதல் படமான “இம்மார்டல்” திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய ஆதரவு வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி. ஒரு அறிமுக இயக்குநராக எனக்கு கிடைத்த இந்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், ஸ்டண்ட் குழுவினர், VFX மேற்பார்வையாளர் மஹி, கோபி பிரசன்னா, மிக்ஸிங் பணிகளை மேற்கொண்ட ஷிவா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கும் பயணத்தில் பலரும் எனக்கு உதவினார்கள், “இம்மார்டல்” படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது..,

“இம்மார்டல்” படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், நேர்மறையான விமர்சனங்களையும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. “இம்மார்டல்” டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.

வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக செய்த சக்தி சாருக்கு நன்றி.

இந்தப் படத்தை என்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்தார். அவருடைய அந்தப் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

அதேபோல், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா சார் மற்றும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் ஃபேண்டசி திரில்லர் அம்சங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்துள்ள“இம்மார்டல்” திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.


மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு மட்டும் நிறைவடைவதில்லை. மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, தன்னம்பிக்கையை வளர்ப்பது, பள்ளிச் சூழலை மேம்படுத்துவது, பெற்றோர்களையும் சமூகத்தையும் கல்விப் பயணத்தில் இணைப்பது என ஆசிரியர்களின் பங்களிப்பு பல்வேறு தளங்களில் தொடர்கிறது.

குறிப்பாக வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும், அவர்களை அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களாக உருவாக்குவதும் ஆசிரியர்களின் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்.


இந்த அர்ப்பணிப்பையும் சிறப்பான கல்விப் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.


முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி மற்றும் சிறந்த கல்வியாளரான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விருது, ஆசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் கல்விச் சேவைக்கும் வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது... கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து  வருகிறது (Kalvi Anjali)


 திருமதி பெ. தேன்மொழி அவர்களின் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் பணியின் பின்னணியில் எண்ணற்ற மாணவர்களின் கல்விப் பயணம், அவர்களின் வளர்ச்சியில் செலுத்திய அக்கறை, பள்ளியின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கல்வியின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை உள்ளது.


ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் இந்த விருது, அவருடைய தனிப்பட்ட சாதனைக்கு மட்டுமல்லாமல், அவர் கல்வி கற்றுக் கொடுத்த எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

 

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் 8 மாநிலங்களில் இணைந்து 820 HPV விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவிகளிடம் HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

அல்லு அர்ஜூன் ஃபேன்ஸ் அசோசியேஷன்(AAFA) சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் என 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகள் மற்றும் சமூகத்திற்கு நேரடியாக HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், இளம் மாணவிகளுக்கு HPV வைரஸ், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தகுதியான சுகாதார நிபுணர்களிடம் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கப்பட்டனர்.


ரசிகர் மன்ற செயல்பாடுகள் சினிமா கொண்டாட்டங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள் என ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களது விரிவான ரசிகர்கள் வலையமைப்பை பயன்படுத்தி, முக்கியமான சுகாதார விழிப்புணர்வு செய்தியை நேரடியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர் AAFA உறுப்பினர்கள். 820 நிகழ்ச்சிகளை 8 மாநிலங்களில் நடத்தியிருப்பதன் மூலம் சுமார் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். 


இந்த எண்ணிக்கைகள் இந்த முயற்சியின் மிகப்பெரிய அளவை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. இந்த இயக்கம், சினிமாவைத் தாண்டிய அல்லு அர்ஜுனின் நாடு தழுவிய ரசிகர் தொடர்பின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவரது ரசிகர்கள், தங்களது கூட்டு பலத்தை சினிமாவுக்கு அப்பாற்பட்ட அர்த்தமுள்ள சமூக நல முயற்சிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.


தங்களது ரசிகர் பலத்தைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, HPV குறித்து உரையாடல்களை உருவாக்குவது மற்றும் HPV தடுப்பு மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அதிகமான குடும்பங்கள் புரிந்துகொள்ள உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம். ஒரு நட்சத்திரத்தைக் கொண்டாடுவதில் தொடங்கி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

 

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.


ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், "'சிக்மா' திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் 'கத்தி'. இப்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படம் நன்றாக வந்து இருக்கிறது. 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் இயக்குநர் நெல்சனையும், 'டான்' திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தினோம். இன்று அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். 'சிக்மா' திரைப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயம் சஞ்சய் பெரிய உயரத்தை அடைவார். ஹீரோ சந்தீப் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக உழைத்து உள்ளனர். அண்ணன் சுபாஸ்கரன் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


நடிகை ஃபரியா அப்துல்லா, " தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங், சினிமா மீது சஞ்சய்க்கு அதிக ஆர்வம் உண்டு. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". 


பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, "லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இயக்குநர் சஞ்சய்க்கு இது தங்கமான வாய்ப்பு. அதை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பொறுமையாக எடுத்து சொல்லி தனக்கு வேண்டிய வேலையை சஞ்சய் சரியாக வாங்கி விடுவார். அவருக்காகவே இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இசையமைப்பாளர் தமன் சாருக்கும் நன்றி. சஞ்சய் இயக்கிவிட்டார், அடுத்து அவர் நடிக்கவும் வரவேண்டும். வாழ்த்துக்கள் ப்ரோ".


நடிகர் சந்தீப் கிஷன், "இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்த படத்தில் உழைத்திருக்கிறார். 'சிக்மா' மிக ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போல தான் 'சிக்மா' படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்து உள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்". 


இயக்குநர் ஜேசன் சஞ்சய், "'சிக்மா' படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், 'சிக்மா' படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படம் 'சிக்மா' அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் 'சிக்மா' திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்" என்றார்.

 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "அழகிய லைலா.

 முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா - இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர்,

கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் - கலை இயக்குனர், 

எம்.சண்முகவேல் - நிர்வாகத் தயாரிப்பாளர் , வினு - தயாரிப்பு நிர்வாகி.

முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில்  இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.

 இளைய திலகம் பிரபு  பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி.... கதை அவருக்கு பிடித்துப் போனது. அதன் பிறகு என்னை அணுகினார்கள்.


ஒன்றரை மணி நேரம் சிரித்துக்கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


இந்தப் படம் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது.  சின்ன மாப்ளே, தேடினேன் வந்தது என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய நகைச்சுவை படமாக இருக்கும். 


என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ... அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்களை கொண்டாட வேண்டும். 


இந்த படம் தமிழில் மட்டும் தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில் தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த சின்னத்தம்பி படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது. 


அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்" என்று நடிகர் பிரபு கூறினார். 


தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, "இந்த படம் நகைச்சுவை படம். எனக்கு ரொம்ப பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம். 


சினிமா உலகில் அவர் மிகப்பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர்.  இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்" என்று கூறினார். 


ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவம், பிரீமியம் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட AvoD சேவையான - Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறது 

தேசியம், செப்டம்பர் 9, 2026: பார்வையாளர்கள் முன்பைவிட அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் நிலையில், அவர்கள் பொழுதுபோக்கைத் தேடும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை Zee 5 மறுவரையறை செய்கிறது. விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் மற்றும் Connected TV தளங்களில், ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற பல்திரை அனுபவம் ஆகியவற்றால் இயக்கப்படும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. பார்வையாளர்களின் பார்வை பழக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Zee 5, Premium Entertainment, Free 5, KidZ, TV மற்றும் Sports என ஐந்து தனித்துவமான உலகங்களுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன் மூலம் உள்ளடக்கத்தைத் தேடுவது இயல்பாகவே எளிமையானதாகவும், ஆழமான அனுபவமாகவும், தடையற்றதாகவும் மாறுகிறது. ஏனெனில் இந்தியாவின் பொழுதுபோக்கு பார்வை முறை மாறி வருவதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேடும் அனுபவமும் மாறுகிறது.

தனிப்பயனாக்கம் என்பது புதிய அனுபவத்தின் மையமாக உள்ளது. இது பார்வையாளர்களின் ஆர்வங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கங்களை அவர்கள் கண்டறிய உதவுகிறது. அதேவேளையில், AI அம்சம் Zee 5 தளத்தில் மேலும் புத்திசாலித்தனமான உள்ளடக்கத் தேடலையும், மென்மையான தொடர்பு அனுபவத்தையும் வழங்குகிறது. மொபைல் சாதனங்களுடன் இணைந்த சாதனங்களிலும் பார்வையாளர்கள் அதிகளவில் பொழுதுபோக்கை அனுபவித்து வரும் நிலையில், புதிய அனுபவம் சிறிய திரையிலிருந்து பெரிய திரைக்கு தடையின்றி மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில், அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாடிக்கையாளர் ஆதரவு உதவியாளர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தாக்கள், பிளேபேக், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சாதனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான, கிட்டத்தட்ட உடனடி தீர்வுகளை வழங்குகிறது. இவ்வம்சங்களுடன், தரவு தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் Zee 5 மேம்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறந்த மற்றும் துறையில் முன்னணியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் எளிமையான பொழுதுபோக்கு அனுபவத்திற்கான புதிய அளவுகோலை உருவாக்குகின்றன.

புதிய அனுபவத்தை உருவாக்குவதற்காக, இந்தியா முழுவதும் பார்வையாளர்கள் எவ்வாறு பொழுதுபோக்கை பார்க்கிறார்கள், தேடுகிறார்கள் மற்றும் அதனுடன் ஈடுபடுகிறார்கள் என்பதை Zee 5 ஆழமாகப் புரிந்துகொண்டது. ஏற்கனவே கிடைத்திருந்த செயலி கருத்துகள், பல்வேறு சந்தைகளில் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வுகள் மற்றும் Focus Group Discussions ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மொபைல் மற்றும் Connected TV தளங்களில் பார்வையாளர்களின் பயணத்தை இந்த தளம் ஆய்வு செய்தது. பெரிய திரை அனுபவத்தின் வளத்தையும் ஆழத்தையும் பாதிக்காமல், மேலும் எளிமையான மற்றும் உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய அனுபவம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியீட்டிற்கு முன் தளத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடுமையாகச் சோதித்து, மேம்படுத்தி, நுணுக்கமாகச் செம்மைப்படுத்தும் வகையில், Product, Engineering, Quality Assurance மற்றும் Design துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து தீவிர Bugathons நடத்தப்பட்டன.

கடந்த காலாண்டில், Zee 5 தனது பல்வேறு வகையான உள்ளடக்கத் தொகுப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முதலில், உலகளாவிய விளையாட்டு நிகழ்வான FIFA World Cup 2026™ மற்றும் 2030-க்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஏழு மொழிகளில் தனது உள்ளடக்கத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, இதுவரை இல்லாத அளவிலான பிரீமியம் ஆங்கில பொழுதுபோக்கு உள்ளடக்கத் தொகுப்பை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதில் உலகளாவிய திரைப்படங்களும், ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இந்திய பார்வையாளர்களுக்காக இடம்பெறுகின்றனர். PVR INOX PICTURES மற்றும் LIONSGATE PLAY ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மூலோபாய கூட்டணிகளின் மூலம், இந்த பிரம்மாண்டமான உள்ளடக்கத் தொகுப்பில் Normal திரைப்படம் இடம்பெறுகிறது. இதில் Bob Odenkirk, Henry Winkler மற்றும் Lena Headey நடித்துள்ளனர்; The Invite திரைப்படத்தில் Seth Rogen, Penélope Cruz, Edward Norton மற்றும் Olivia Wilde நடித்துள்ளனர்; Anxious People திரைப்படத்தில் Angelina Jolie மற்றும் Jason Segel நடித்துள்ளனர்; Babies திரைப்படத்தில் Seth Rogen மற்றும் Anna Kendrick நடித்துள்ளனர்; The Wizard of the Kremlin திரைப்படத்தில் Jude Law நடித்துள்ளார்; How to Make a Killing திரைப்படத்தில் Glen Powell மற்றும் Margaret Qualley நடித்துள்ளனர்; Tony திரைப்படத்தில் Dominic Sessa இடம்பெறுகிறார்; மேலும் Paper Tiger திரைப்படத்தில் Adam Driver, Scarlett Johansson மற்றும் Miles Teller நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள், உலகளாவிய கதைகள் மற்றும் பிரீமியம் சினிமா ஆகியவற்றின் இதுவரை இல்லாத அளவிலான தொகுப்புடன், இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பு Zee 5-ன் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவில் ஒரு புதிய, துணிச்சலான அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

அதே நேரத்தில், Free 5 தனது விரிவான பொழுதுபோக்கு அனுபவங்களில் ஒன்றாக, புதிய துணிச்சலான அடையாளத்துடன் மறுவடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் புதிய Free 5, Series, Movies, Korean மற்றும் Chinese dramas, anime, news, micro dramas மற்றும் துடிப்பான creator ecosystem என பரந்த அளவிலான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான மொழிகள், வகைகள், வடிவங்கள் மற்றும் குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட Free 5 பார்வையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக, எந்தவித சந்தாவும் தேவையின்றி, விரிவான பொழுதுபோக்கு உலகத்தைத் தேடி, ஆராய்ந்து, ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட அனுபவம், Zee 5-ல் பல்வேறு வகையான பார்வையாளர்களை அணுகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்கவும் விளம்பரதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

Tejkarran Singh Bajaj, Business Head - Zee 5 India and AI & Innovation கூறுகையில்,
“Zee 5-ன் அடுத்த கட்டம் என்பது பொழுதுபோக்கை எளிதாகக் கண்டறியக்கூடியதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும், மேலும் திருப்திகரமானதாகவும் மாற்றுவதாகும். ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI-ன் ஆழமான பயன்பாடு மற்றும் மேலும் உள்ளுணர்வுடன் கூடிய உள்ளடக்கத் தேடல் ஆகியவற்றுடன், மொபைல் மற்றும் Connected TV தளங்களில் தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் மறுவடிவமைத்துள்ளோம். ஏழு மொழிகளில் பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள், வளமான தொலைக்காட்சி உள்ளடக்கம், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, Live TV மற்றும் செய்திகள் ஆகியவற்றை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், உலகளாவிய சினிமாவை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு வரும் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்புடன் உள்ளடக்கத்தின் ஆழத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம். அதேபோல், அதிக மொழிகள், வகைகள் மற்றும் creator ecosystem-ஐ உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறோம். விளம்பரதாரர்களைப் பொறுத்தவரை, இந்த விரிவான உள்ளடக்கத் தொகுப்பு, மொழிகள், உள்ளடக்க வகைகள் மற்றும் பார்வை நேரங்களின் அடிப்படையில் தனித்துவமான பார்வையாளர் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வளமான தளத்தை உருவாக்குகிறது. தயாரிப்பு மற்றும் உள்ளடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிணாமம், பார்வையாளர்களுக்கு அதிக தேர்வுகள், அதிக ஆழம் மற்றும் அவர்கள் விரும்புவதை எளிதாகக் கண்டறியும் வழியை வழங்குகிறது.”

Pramod Prakash, Chief Technology Officer, Zee Entertainment Enterprises Ltd., கூறுகையில்,
 “ஒரு ஸ்ட்ரீமிங் தளம் நூற்றுக்கணக்கான சிறிய தொடர்புகளின் மூலம் அனுபவிக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு தொடர்பும் பார்வையாளர்கள் சேவையைப் பற்றி உணரும் விதத்தை உருவாக்குகிறது. எனவே, தனித்தனி அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையான அனுபவத்தையும் மறுபரிசீலனை செய்வதே எங்களின் நோக்கமாக இருந்தது. பயணத்தின் எந்த இடங்களில் பயனருக்கு அனுபவம் மேலும் இயல்பாகவும், விரைவாகச் செயல்படக்கூடியதாகவும், குறைந்த சிரமத்துடனும் இருக்க முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மையத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் தாங்கள் விரும்பும் பொழுதுபோக்கை எளிதாக அணுகக்கூடிய உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய செயலி உள்ளது. தொழில்நுட்பம் பயனருக்கான சிரமங்களை அமைதியாக நீக்கி, பொழுதுபோக்கை மையமாக்க வேண்டும் என்பதே இந்த மறுவடிவமைப்பின் எளிய தயாரிப்பு தத்துவமாகும். பல்வேறு சாதனங்கள், வடிவங்கள் மற்றும் சூழல்களில் பார்வை அனுபவம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், எதிர்காலத்தில் பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்திற்கு ஏற்ப மேலும் தகவமைத்துக்கொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் தயாராக இருக்கும் வகையில் Zee 5-ஐ உருவாக்கி வருகிறோம்.”

Zee 5 பற்றி:

Zee 5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய சாளரமாகவும் திகழ்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை இது சென்றடைகிறது. Zee Entertainment Enterprises Ltd.-ன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான Zee 5, மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், hyper-local உள்ளடக்கம், மொழி சார்ந்த தொகுப்புகள் மற்றும் ஏழு மொழிகளில் ஆழமான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அவை Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada மற்றும் Marathi ஆகிய மொழிகளாகும். மேலும், பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்களின் குரல்கள், பிரபலமான Franchise-கள் மற்றும் தனித்துவமான கதைசொல்லல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் துணிச்சலான கதைகளுக்கான தளமாக Zee 5 விளங்குகிறது.

Movies, Series, Live Sports, AI-powered storytelling, Animation மற்றும் Kids' Entertainment என விரிவான உள்ளடக்க நூலகத்துடன், Zee 5 பல்வேறு மொழிகளில் அமைந்த பொழுதுபோக்கு மற்றும் FIFA World Cup 2026™ மற்றும் 2030, Bundesliga, Serie A மற்றும் Coppa Italia போன்ற நேரடி விளையாட்டு அனுபவங்களுக்கான தளமாகத் திகழ்கிறது.

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான  உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார்  நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

 

புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் - ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கோல்டு கால் - Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோல்டு கால்'. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாக்த்ரோ என்டர்டைன்மெண்ட் - Walkthrough Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.


எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சந்தையில் அறிமுகமாகும் பொருட்களை விற்பனை செய்யும் தமிழ் நாடு - கேரளா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நான்கு தென்னிந்திய விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை நகைச்சுவையாக விவரிப்பதும்.. இவர்களின் காதல்- மோதல்- காமெடி- ஆக்சன் - ஆகியவை இடம் பிடித்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 


தற்போது இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pageviews