அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் இயக்குநர்  தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,


“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு  மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில்  என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.


அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.


ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”


நடிகை கலா பேசியதாவது..,


“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.


அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.


இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,


“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம்,  இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை சோனா பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக  இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,


“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.


இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.


இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”


இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.


இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.


இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,


“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.


நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.


இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.


என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.


அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.


 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.

அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 


அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.


வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் முடியும் என்று கூறும் அவர், இது ஒரு கலைஞராக தனக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என நம்புகிறார்.


“இந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கும்.குறிப்பாக, ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஒரே மொழிக்குள்ளேயே சுருங்கி விடாமல், பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவுகிறது” என்கிறார் வர்ஷினி.


தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் வர்ஷினி. அதேபோல, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரின் இசைக்கும் அவர் ரசிகை. 


தனது திரைத்துறை பயணத்தில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல் என்கிறார் வர்ஷினி. குறும்படங்களைக் கடந்து, தனது நடிப்பு திறமை, நடன அனுபவம் மற்றும் நடிப்பின் மீதான காதலை பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பாக இப்படத்தை அவர் பார்க்கிறார். கோயம்புத்தூரில் இயற்பியல் படித்ததிலிருந்து, திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வர்ஷினியின் பயணம், எதிர்பாராத பாதைகள்கூட சில நேரங்களில் மிகவும் உற்சாகமான இலக்குகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நிரூபிக்கிறது.

 

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.


தயாரிப்பாளர் ரவி சங்கர், "திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும், தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் ரசிப்பார்கள். சிவா நிர்வாணாவின் இந்த படத்தை அந்த கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்து உள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


வசனகர்த்தா விஜய் பாலாஜி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இந்தப் படத்திற்கு பெரும் பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான். மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்".


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், " ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று. தமிழ் படத்தை விட இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன். இந்தப் படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்". 


ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, " ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம். சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும்".


குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, "இந்த படம் எனக்கு ரொமவே ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார், மாஸ் மகாராஜா ரவி தேஜா சார், பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".


நடிகை பிரியா பவானி சங்கர், " படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்".


இயக்குநர் சிவா நிர்வாணா, "தமிழ் சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது அவர்களுக்கு அந்த படத்தில் இருந்து எடுத்துக் கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த மாதிரி படங்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக 'இருமுடி கட்டு' இருக்கும். இந்த படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவியை பற்றி யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதை போலவே தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்த படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்". 


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். 'பொல்லாதவன்', 'ராஜா ராணி' படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே 'இருமுடி கட்டு' படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள். 'பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். இனி சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தொழில்நுட்ப  குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி". 


நடிகர் ரவி தேஜா, "இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா.  தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

 

சாய் ரமணி இயக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பாக்யராஜும், டி. ராஜேந்தரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாகவும் எம்.பி.எம். எண்டர்டெயின்மென்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.


இது குறித்து பேசிய இயக்குநர் சாய் ரமணி, “பாக்யராஜ் சாரின் திடீர் மறைவு எங்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் சார் மற்றும் டி. ராஜேந்தர் சாரை வைத்து படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினத்தில் பாக்யராஜ் சாருக்கான இரங்கல் அஞ்சலியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் கவலையாக இருந்தது.


‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சார் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இப்படத்தை நன்றாகப் புரொமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். எனவே, அந்தக் காட்சிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம்.


சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்.


பாக்யராஜ் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த இப்படத்தில் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் சார் இடம்பெறுவார்” என்றார்.


இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.


கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார், ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.

 

தென்னிந்தியாவில் ஒரு நிமிட குறும்படங்களை மையமாகக் கொண்டு, புதிய மற்றும் வளர்ந்து வரும் திரைக்கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் திறமைகளை அங்கீகரித்து வரும் முன்னோடி தளமாக LIGHTZ ÖN AWARDS திகழ்ந்து வருகிறது.


திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கனவும் கொண்ட இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட LIGHTZ ÖN AWARDS, தற்போது தொடர்ந்து 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, மிகப்பெரிய படைப்பாளிகளின் சமூகமாகவும், இளம் திரைப்படக் கலைஞர்களின் சினிமா பயணத்திற்கு ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாகவும் வளர்ந்துள்ளது.


*8-வது ஆண்டு விழாவின் சிறப்பம்சங்கள்*


2026-ஆம் ஆண்டுக்கான 8-வது LIGHTZ ÖN AWARDS விழா, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியமான இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வருகையால் மேலும் சிறப்பானதாக அமைந்தது.


விழாவில் ‘29’, ‘Master’, ‘Leo’ உள்ளிட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரத்னகுமார், ‘Con City’ திரைப்பட இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், ‘சிலை’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, எடிட்டர் ஸ்ரீ வட்சன், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, இயக்குநர் பொன்குமார், நடிகர் லிங்கேஷ் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 


*முதல் பரிசை வென்ற ‘வர்ணங்கள் ஆயிரம்’*


2026-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு திறமையான ஒரு நிமிட குறும்படங்கள் பங்கேற்றன. அவற்றில் சிறப்பான கதை சொல்லல் மற்றும் படைப்பாக்கத்துடன் கவனம் பெற்ற ‘வர்ணங்கள் ஆயிரம்’ குறும்படம் முதல் பரிசை வென்றது.


புதிய கதைகள், புதிய சிந்தனைகள் மற்றும் வித்தியாசமான படைப்பாக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் LIGHTZ ÖN AWARDS-ன் நோக்கத்தை இந்த வெற்றி மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. 


*பெண் மையக் கதைகளுக்கு அங்கீகாரம்*


இந்த ஆண்டு விழாவில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக, பெண்களை மையமாகக் கொண்ட இரண்டு குறும்படங்கள் விருதுகளைப் பெற்றன.


ஒரு நிமிட குறும்பட வடிவத்தின் மூலம் பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் படைப்பாளிகள் தங்களுடைய கதைகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை LIGHTZ ÖN தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் குறும்பட உலகில் கதைகளின் பன்முகத்தன்மையும், புதிய படைப்பாளிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. 


*100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களுக்கு அங்கீகாரம்*


தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் LIGHTZ ÖN AWARDS, இதுவரை 100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களை கௌரவித்து, அவர்களின் திறமைகளை அங்கீகரித்துள்ளது.


பல புதிய இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையில் சாதிக்க விரும்பும் இளம் திறமையாளர்களுக்கு LIGHTZ ÖN ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. 


*LIGHTZ ÖN YouTube Channel*


ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, ஆர்வமுள்ள திரைப்படக் கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை இணைக்கும் ஒரு படைப்புலக சமூகமாகவும் LIGHTZ ÖN AWARDS வளர்ந்துள்ளது.


குறும்படங்கள் மற்றும் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட LIGHTZ ÖN YouTube Channel, புதிய படைப்பாளிகளின் படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் டிஜிட்டல் தளமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 


குறும்பட இயக்குநர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு, புதிய கதைகள் மற்றும் புதிய குரல்கள் பார்வையாளர்களை சென்றடைய LIGHTZ ÖN தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறது.


*8 ஆண்டுகளின் வெற்றிப் பயணம்*


8 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வரும் LIGHTZ ÖN AWARDS, ஒரு சாதாரண குறும்பட விருது விழாவைத் தாண்டி, அடுத்த தலைமுறை திரைப்படக் கலைஞர்களை கண்டறிந்து, ஊக்குவித்து, அங்கீகரித்து, அவர்களின் சினிமா கனவுகளுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கும் தளமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.


100-க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குநர்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள LIGHTZ ÖN AWARDS, இன்னும் பல புதிய திறமைகளை கண்டறிந்து, அவர்களை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. 


*LIGHTZ ÖN – THE GATEWAY FOR FIRST GENERATION TALENTS IN CINEMA*


சினிமாவை கனவு காணும் புதிய தலைமுறையின் திறமைகளுக்கு ஒரு வாயில்.

புதிய கதைகளுக்கு ஒரு மேடை.

புதிய இயக்குநர்களுக்கு ஒரு அடையாளம்.

அடுத்த தலைமுறை சினிமாவுக்கான ஒரு பயணம் – *LIGHTZ ÖN.* 

 

வரலாற்றுச் சிறப்புமிக்க “சோழ தேசம்” இடைக்காலக் கண்காட்சி, வரும் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 25, 2026 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.


இக்கண்காட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழை, மூத்த நடிகரும் சிறந்த ஓவியருமான திரு. சிவகுமார் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி, அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றோம்.


அழைப்பிதழை மிகுந்த மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் பெற்றுக்கொண்ட திரு. சிவகுமார் அவர்கள், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியின் தொடக்க நாளில் முதல் ஆளாக நானே நேரில் வந்து கலந்து கொள்கிறேன்”* என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


மேலும், தனது சிறுவயது முதலே வரைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் மற்றும் தொன்மையான இடங்களின் ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தான் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ள அரிய வரலாற்றுச் சம்பவங்களையும், அவற்றை வரையத் தொடங்கியபோது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களையும் சுவையான நிகழ்வுகளாகப் பகிர்ந்து கொண்டார்.


வரலாற்றையும் கலையையும் ஒருங்கே நேசிக்கும் சிறந்த கலைஞரான திரு. சிவகுமார் அவர்களிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்தும் ஊக்கமும், “சோழ தேசம்” கண்காட்சி குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் அளித்துள்ளது.


இவண்,


மு. விஜயகுமார்

ஒருங்கிணைப்பாளர் – “சோழ தேசம்” கண்காட்சி


மு. ஹரி

இயக்குநர் – மு.அ. தமிழ் ஆய்வகம்

நிறுவனர் – “சோழ தேசம்”


மு. ஜீவானந்தன்

ஒருங்கிணைப்பாளர்


தொடர்புக்கு: +91 97910 31152

*இணையதளம்: [www.choladesam.com]

 

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். 


ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், "90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்," என்றார். 


'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்; பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்; ஸ்டில்ஸ்: சந்தோஷ். 


ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 

The event is being organised with the support and encouragement of our respected Secretary, Mr. A. V. M. K. Shanmugam, and will commence with the Welcome Address by our Principal, Dr. N. Bhuma.


The conclave is envisioned by its Conclave Directors, Mr. Balasubramaniam M, GCC Leader, CEO, Board Member, Investor, StratInfinity – AI First GCC Enabler, and Mr. Ramkumar N, Director, ITWare LLC, Dubai and Professor of Practice, Avichi College of Arts & Science.


The Inaugural Session will be graced by Amb. T. S. Tirumurti, Professor, IIT Madras; Former Ambassador of India to the United Nations, New York; and Former Secretary to the Government of India, as the Guest of Honour, along with the Conclave Director’s Address by Mr. Balasubramaniam M.


The conclave will feature a series of keynote addresses, expert panels and interactive sessions. Mr. Mahesh Ramachandran will deliver the Keynote Address on “The Confluence of AI + FinTech – From Digital Finance to Intelligent Finance,” followed by Mr. Lenin Velu, who will deliver a Keynote Address on “Trust First.”


The Expert Panel – “Future of Banking Beyond Branches” will be moderated by Mr. Jubran Siddique, TEDx Speaker, United Nations, and CEO & Founder, Zaryah Angels Pvt. Ltd., with panellists Mr. Vetrivelan AB, Partner, Big 4; Mr. Gobinath Padmanadhan, Founder & CEO, Yosaney Fintech Pvt. Ltd.; and Mr. Srinivas Lingam, CEO, Centrico.


An Expert Address on “From Job Seekers to FinTech Innovators: Building Startups in the Age of AI” will be delivered by Mr. Ghanshyam Ahuja, Group CEO, VC VSaas Global.


A Fireside Conversation titled “The New SUNAMY of AI – Age of Innovative Quantum Computing Era” will feature Mr. Kannappan Chetiar, Founder, Sunamy.AI, in conversation with Mr. Ramkumar N.


The Expert Panel – “AI & FinTech – The Autonomous Finance Era” will be moderated by Ms. Sangeetha B, Founder & CEO, ThinkInfinity, with panellists Mr. Nathan, CISO, Equitas Bank; Mr. Avinash Karn, Senior Director – AI, PayPal; Mr. Sathyanarayanan Chandrasekaran, CISO, Sundaram Home Finance Ltd.; and Mr. Venugopal, CISO, Cholamandalam.


The Future Leaders Fireside Chat will feature Mr. Vijay, Founder, GoldPE.AI, moderated by Ms. Shangamithra, III B.Sc.


A TEDx-style Session on “Unified Platform from India to the World – Reimagining the $1.3 Trillion Global Money Movement Economy” will be delivered by Mr. Uthayashankar, CTO, Finaara.


The Expert Panel – “Digital Public Infrastructure – India’s Secret Weapon” will feature Ms. Shakila Banu, AGM, RBI; Mr. Balasubramiam, DPO, TMB; and Mr. Ayyappan, Partner, Big 4, with Mr. Ramkumar, StratInfinity, as moderator.


The conclave culminated with a Valedictory Ceremony, graced by Mr. Srikanth V, CEO, ICT Academy, as the Chief Guest. The ceremony featured an insightful Chief Guest Address, the Conclave Summary by the Conclave Director, Mr. Ramkumar, and the Closing Remarks by the Secretary, Mr. AVM K. Shanmugam.


The conclave will provide students with valuable exposure to emerging opportunities in FinTech, Artificial Intelligence, Data Science, Banking, Cybersecurity and Digital Entrepreneurship, while creating meaningful interaction between academia and industry.


As the first edition of a five-year journey, FINTECH 2030 seeks to inspire the next generation to Learn • Connect • Innovate • Collaborate and contribute to India’s vision of a secure, inclusive and trusted digital financial future.


FINTECH 2030 – Where Banking, Technology, Innovation, Entrepreneurship and Talent converge.

 

நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. 

நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், 

குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. 

தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. 

அடுத்த கட்ட பயணம்.. 

நான் சரி எனில் நீ தவறா... இல்லை..  இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை.... 

பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. 

இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?.. 

எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. 

ஆம் இது உங்களுக்கான மேடை.. 

உங்களின் பார்வையை பேசுங்கள்..  உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. 

நான் கூப்பிடுவது மக்களை.. 

அவர்களோடு பேச.. 

அவர்களை பேச வைக்க.. 

வாங்க பேசலாம்.

 

Buddhi Clinic invites members of the press to attend the concluding public session of the Second National Workshop on Integrative Mental Health, taking place on Friday, 21 August 2026, from 2:00 to 4:30 PM at Buddhi Mantra, Chennai.

The session brings together distinguished clinicians, scientists, educators and thought leaders from across India for a wider public conversation on the future of mental healthcare. Over the course of the two-day workshop, participants representing psychiatry, neuroscience, integrative medicine, Ayurveda, Yoga, community and maternal mental health, and healthcare technology have explored a central question: how can healthcare move beyond treating mental illness to caring for the whole person?

From Discussion to Direction


The concluding public session will translate these deliberations into a broader conversation for clinicians, families, policymakers and the wider community. Faculty members will share their reflections on the workshop and articulate their vision for Whole-Person Mental Health in India, followed by an open forum and media interaction.


The discussion is intended to help shape clearer and more meaningful public-health messages around mental health—messages that recognise the complexity of the individual and the need to consider multiple dimensions of care rather than viewing mental health through a single clinical lens.


Launch of “Beyond Medication: Whole Person Care”


The event will also mark the release of Beyond Medication: Whole Person Care, the fourth volume in The Buddhi Book series by Dr. Ennapadam S. Krishnamoorthy.


The book examines the philosophy and practice of whole-person care through the perspectives of neuroscience, psychiatry, rehabilitation and technology, while also considering the thoughtful integration of diverse healing traditions. It reflects the broader direction of the workshop: building a more integrated understanding of mental health that brings clinical science, human context and complementary approaches into considered dialogue.


Media Interaction


Members of the media will have the opportunity to attend the session, interact with members of the faculty and engage with the ideas emerging from the national workshop. The interaction is intended to provide journalists with direct access to experts contributing to the evolving conversation on integrative and whole-person mental healthcare in India.


MEDIA CONTACT

RSVP

care@buddhiclinic.com


Pageviews