தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது.


குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.


மேலும், மறைந்த இயக்குநர் நடிகர்  கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனுபவம் மிக்க திரை ஆளுமைகளின் அட்டகாசமான நடிப்பும் டிரெய்லரில் கவனம் பெறுகிறது. அதேபோல், கவின் - நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


புதிய வெளியீட்டு அறிவிப்பின்படி, ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 


இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், 


'' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.‌ திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன். இணைய தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்த முறை மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.‌


இந்தப் படத்தில் நானும், அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம். 


சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி வி பிரகாஷ் குமாருக்கு தான். 2003 ஆம் ஆண்டில் அவர் 'வெயில்' படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, 'உருகுதே மருகுதே' பாடலை போட்டுக் காண்பித்து இந்தப் பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.ஜி வி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான். தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக் கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும் , நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தான்.  எனக்கு இந்த திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி. 


ஜி.வி. பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச் சிறந்த மனிதநேய பண்பாளர் தான் வெங்கி அட்லூரி.  நீங்கள் பார்த்து ரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்-  வெங்கியுடைய ஆர்ட் அல்ல.... ஹார்ட்.‌ இந்த படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்து விட்டேன். வாசிக்கும் போதே பல இடங்களில் கண்கலங்கினேன். அதை அப்படியே திரையில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி. 


சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த - இயங்கிய லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு... என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்கு காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.


படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்கு சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் 'சூர்யா'  போன்ற மாபெரும்  நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், 


'' மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி. 


சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, 'மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்' என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது. 


இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் - மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாதவை. அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. 


இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால்  ரசிகர்களை அன்பாலும் ... பாசத்தாலும்... ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்... பேசும் போதும்... பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், 'இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?' என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.


அதன் பிறகு இயக்குநரிடம் 'இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்... இந்த படம் ஓடாது' என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் 'டியூட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமீதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் சார் மிகத் திறமையான பெண், நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி மமீதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம் . அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம். ..!அப்படி செய்திருக்கலாம் .. !என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் 'ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது' என்றார். 


இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி... அடுத்த உறவுகளை நோக்கிய  அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன். அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது. 


கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார். 


சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.


ஜிவி பிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த திரைப்படம் 'அவன் அவள் அது' என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன். இதைப்போல் இந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளை தூண்டி இருக்கிறது. 


ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது 'சூரியவம்சம்'. அது அந்த காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் '' என்றார். 


நடிகை மமீதா பைஜூ பேசுகையில், 


'' விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சார்யை மிஸ் செய்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 


இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்'' என்றார். 


இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,


 '' இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.


அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரி - க்கு அவருடன் 'வாத்தி' படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது .அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று,  ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.


'வாத்தி' திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம். 


தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னை சந்தித்த அனைவரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை பிரமாதம் என பாராட்டினர்.  அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது.. உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன். 


இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது. 


சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன். 


படப்பிடிப்பு தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடி வாங்கி இருக்கிறேன். அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். சூர்யாவை போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர்களுடைய நடிப்பில் 'தாய்க்கிழவி' மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமும் வெற்றி. இந்த படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன். 


இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். 


இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை. '' என்றார். 


இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன். 


இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி. 


மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். 


ஜி வி பிரகாஷ் குமாருடன் 'வாத்தி' படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, 'உங்களை...சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?' என கேட்டேன். 'ப்ரோ' என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்... சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.


'தி‌ ஒன்'  சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது. 


இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது. 


சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.


திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்... படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்.... நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்'' என்றார்.

 

பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன.


இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. இது தொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை, விண்ணப்பம் அல்லது தொழில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.


நான் சவூதி அரேபியாவிற்கு செல்வது ஒரு நிகழ்ச்சிக் கலைஞர் ஆக, அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே நடைபெறுகிறது.


என்னை அழைக்கும் ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை நான் எப்போதும் மதித்து வருகிறேன். அதற்கு எதிரான தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு கருத்தையோ செயலையோ நான் மேற்கொண்டதில்லை.


மேலும், இது முதல் முறையாக நடைபெறும் சம்பவமும் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் எனது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் வரவேற்பும் அதிகரித்து வரும் நிலையில், அதே காலகட்டங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவது தற்செயலான ஒன்று என்று நான் கருதவில்லை. எனது கலைப் பயணத்தையும், என்னை நம்பும் பார்வையாளர்களுடனான உறவையும், சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனான எனது தொழில்முறை உறவுகளையும் பாதிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன்.


நான் எங்கிருந்து தொடங்கினேன் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எந்தவிதமான பின்னணியும் இல்லாமல், வாய்ப்புகள் கிடைக்காத சூழலிலிருந்து, என்னை நம்பிய மனிதர்களின் ஆதரவால் மட்டுமே இன்று நான் இருக்கும் இடத்தை அடைந்துள்ளேன். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பொறுப்பும், அதே நேரத்தில் எனது மிகப்பெரிய பலமும் ஆகும்.


ஒரு கலைஞன் தனது சொந்த முயற்சியால் கீழ்மட்டத்திலிருந்து உயர்ந்து வருவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற திட்டமிட்ட பிரச்சாரங்களால் எனது கலைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.


இந்த தவறான தகவல்களை பரப்பிய சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை எங்கள் குழு சேகரித்து பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


இந்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருபவர்களிடம் எனது அன்பான வேண்டுகோள்: எந்த தகவலையும் மற்றவர்களுக்கு பகிர்வதற்கு  முன்பு, அதன் உண்மைத் தன்மையை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


இந்த விவகாரம் தொடர்பாக என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு விசாரித்த அனைவருக்கும், உண்மையை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் எனது இசையையோ, எனது கலைப் பயணத்தையோ ஒருபோதும் தடுக்காது.


எனது நிகழ்ச்சிகளில் சந்திப்போம்.


ஜெய் பீம்.


– வேடன்.


தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. 

தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வர தளம் தயாராகியுள்ளது. H. வினோத் இயக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரீமியர் ஆகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நான்கு மொழிப் பார்வையாளர்களையும் இந்த பிரம்மாண்டமான திரை நிகழ்வு சென்றடைகிறது.

ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதைத் தாண்டி, ஜனநாயகன் திரைப்படம் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது முதல் திரைப்படமாகவும், பெரிய திரையில் வெளியாகும் அவரது இறுதித் திரைப்படமாகவும் இது அமைகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர்-அரசியல்வாதியின் இறுதித் திரைப்பயணமாக அமையவுள்ள இப்படம், ஒரு உணர்வுப்பூர்வமான விடைபெறலாக அமைகிறது.

H. வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம், வெற்றி கொண்டான் என்ற நேர்மையான முன்னாள் காவல்துறை அதிகாரியை கதாநாயகனாகக் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கிறார். சக்திவாய்ந்தவர்களுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் அவர் ஈடுபடும்போது, வெற்றி மக்களின் நாயகனாகவும், நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும் உருவெடுக்கிறார். அதிரடி ஆக்‌ஷன், உணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூக-அரசியல் கருப்பொருள்களை ஒருங்கிணைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நாசர் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களுக்குப் பிடித்த தருணங்கள், பிரபலமான உடல்மொழிகள் மற்றும் அந்த நட்சத்திரத்துடன் அடையாளம் காணப்படும் தனித்துவமான திரை அம்சங்கள் என பலவற்றை உள்ளடக்கிய ஜனநாயகன், பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த அவரது வசீகரத்தையும் மரபையும் நினைவுகூரும் ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இப்படத்தின் மையத்தில், எது சரி என்பதற்காக குரல் கொடுக்க முன்வரும் ஒரு சாதாரண மனிதனின் கதை இடம்பெற்றுள்ளது. இதனால், இப்படம் அதிரடி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் கொண்ட ஒரு விடைபெறலாகவும் அமைகிறது.

ZEE5 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் பிசினஸ் ஹெட் லாய்ட் C. சேவியர் கூறுகையில், “ஜனநாயகன் திரைப்படம் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் பல தசாப்த காலப் பயணத்தைப் பின்தொடர்ந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவரது இறுதித் திரைப்படமாக, இது தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தருணத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், நட்சத்திரம், நடிகர் மற்றும் அவர் விட்டுச் செல்லும் மரபைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. ஆக்‌ஷன், உணர்வு, குடும்ப மதிப்புகள் மற்றும் சமூகக் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இப்படம், பல தலைமுறை ரசிகர்களுக்கும் பொருத்தமான மற்றும் பிரம்மாண்டமான விடைபெறலாக அமைகிறது. இந்த மாபெரும் படைப்பை எங்கள் தளத்திற்குக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரை நிகழ்வை மீண்டும் காணவும், கொண்டாடவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தை ZEE5 தமிழ் தளத்திற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர், இன்னும் அதிகமான குடும்பங்களும் ரசிகர்களும் இந்த முக்கியமான திரைப்படத்தை ஒன்றாக அனுபவிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

ஜனநாயகன் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் கிடைக்கும்.
Vartika falls in love with Rio, the protagonist, who is struggling to find a bride despite being past the marriageable age. However, she imposes a condition: she will not step out of the house after 6 PM, and therefore, they cannot meet after that time. Smitten by Vartika’s beauty and love, Rio accepts the condition and pursues the relationship. When Vartika's 6 PM rule begins to cause complications, Rio decides he must uncover the secret behind it.

While Rio—and the audience—speculate that she might suffer from night blindness (reminiscent of Goundamani’s character in the movie *Chinna Thambi*), it is revealed that she has a far more unexpected problem. *Ram and Leela* is a comedy that explores what this issue is, whether Rio continues to love Vartika after discovering it, and if the wedding eventually takes place.

Rio plays Ram, a young man yearning for marriage; he attempts to showcase a fresh side of himself through a performance infused with comedy. Portraying an innocent man naive about the world of women, he tries to make the audience laugh through his mannerisms. Many of his antics and playful gestures are reminiscent of Sivakarthikeyan’s early career. Although Rio’s performance—spanning his longing for love, the unexpected crisis, and the struggle to resolve it—strengthens the screenplay, there are moments where his acting feels a bit over-the-top.

Debut actress Vartika, playing the female lead, looks beautiful. the film focuses on presenting her as a vision of beauty. The supporting cast—Chethan (hero's father), Malavika Avinash (mother), Thafiya Abu (sister), Munishkanth (uncle), Balaji Thyagarajan Dayalan (friend), Deepa Venkat (heroine's mother), MaKaPa (uncle), and Kathadi Ramamurthy (grandfather)—are all well-suited for their respective roles.

Cinematographer Mallikarjun has captured the visuals in a vibrant and colorful manner. He has put special effort into presenting the heroine beautifully and strikingly, ensuring the entire film looks bright and visually appealing.

Ankit Menon’s songs, though presented as montages, are catchy enough for repeated listening and are well-suited for Reels videos. The background score flows smoothly in a melodious style, much like the songs.

Editor Y.N.C. Siva moves the first half at a somewhat leisurely pace but picks up the tempo in the second half; he has edited the comedy sequences effectively, keeping the film lively and entertaining.

It is unclear which English movie writer-director Ramachandran Kannan drew inspiration from for this core premise (especially since another film with the same concept was released just three months ago). However, even if the idea was borrowed, he has succeeded in adapting it effectively for the Tamil audience.

The heroine's unique problem—which defies predictable tropes—helps keep the narrative engaging, and the way the backstory behind this issue is explained adds strength to the screenplay.

By focusing on the hurdles the couple faces after the problem is revealed, portraying their enduring love, and handling the wedding sequence with uproarious comedy, director Ramachandran Kannan makes the audience overlook the film's minor flaws and enjoy a fun, laughter-filled experience.

The first look poster of ‘Tharagai’, starring Gouri Kishan and produced by Speed Reels Studio, has been released.

‘Tharagai’ is the Production No. 1 of Speed Reels Studio. The film is written and directed by Krish, with Gouri Kishan playing the lead role. Kaali Venkat and Sriman are among the actors appearing in important roles.

Set against the lives, journeys and experiences of women, the film explores the different paths that women take in life.

The first look poster of the film has now been unveiled. Featuring Gouri Kishan at the centre, with women from different ages and backgrounds journeying around her, the poster has created curiosity about the world and story of the film.

The film has music by Siddhu Kumar, with Sundar Sukumaran as cinematographer, Alan P John as editor and Arunshankar as art director.

Centred around a woman's journey, ‘Tharagai’ explores themes of travel, relationships, life choices and freedom.

‘Tharagai’ — A Journey… A Search… Many Women's Paths.

*First Look Poster of ‘Hello Miss’ Released*

Produced by N. Kumarlal Nehru under the banner of Namaha Movie Makers, the upcoming film is titled ‘Hello Miss’. The film is directed by Sairaa, who also plays the lead role. Bismi makes her debut as the heroine with this film.

The film features an ensemble cast including K.S. Ravikumar, Kalyani Natrajan, Gajaraja, Janaki Suresh, G. Gnana Sambandhan, Senthil Kumari, Bhuvaneswari, Bala Hassan, Dinesh, KPY Sarath, Swaminathan, Sathyan, Birla Bose, Citizen Mani and Maran in important roles.

S.R. Hari Murugan has choreographed the stunt sequences, while Brinda and Dinesh are the choreographers.

The songs have been penned by renowned lyricists Yugabharathi, Vivek, Thamarai and Viveka. The songs are rendered by Haricharan, Swetha Mohan, Prince George, Sathya Prakash, Kapil Kapilan, Anthony Dasan and Swetha Ashok.

R.B.Gurudev is the Director of Photography, Prince George has composed the music, V. Manikkavasagam works as the Executive Producer, and S.M. Sekar works as the Production Executive.

The film has been shot across Chennai, Trichy and Puducherry.

Blending love, youthful emotions and feel-good elements, ‘Hello Miss’ is being crafted as an entertaining and refreshing experience for audiences.

The First Look Poster of ‘Hello Miss’ has now been released and is receiving a positive response from fans.

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை வென்று மீண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற்ற அவர்களின் தைரியம், மன உறுதி மற்றும் நம்பிக்கையைப் போற்றும் வகையில் இந்த கௌரவிப்பு நடைபெற்றது.

குடும்பங்களுக்கான புற்றுநோய் சிகிச்சைச் செலவைக் குறைக்கும் முயற்சி

புற்றுநோய் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும். புற்றுநோய் கண்டறியப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்துடன், மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், மருந்துகள், கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளும் குடும்பங்களுக்கு பெரும் சவாலாக அமைகின்றன.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த நிதிச்சுமை சிகிச்சையைத் தாமதப்படுத்தவோ அல்லது இடையில் நிறுத்தவோ காரணமாக விடக்கூடும் என்பதை உணர்ந்து, நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் வழங்கும் நோக்கில் ஜஸ்’ ஆன்கோ செயல்பட்டு வருகிறது.

அமைப்பின் நோக்கம் எளிமையானது:

“தரமான புற்றுநோய் சிகிச்சை. குறைந்த செலவில். இனி இன்னும் எளிதாக அணுகலாம்.”

பூந்தமல்லி மையத்தின் மூலம் பூந்தமல்லி, குமணஞ்சாவடி, போரூர், ஆவடி, திருமழிசை, மாங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதுடன், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சிரமத்தையும் குறைக்க ஜஸ்’ ஆன்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது.

புற்றுநோய் விழிப்புணர்வு, மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் ஆரம்பகால கண்டறிதல்

திறப்பு விழா நிகழ்ச்சியில் புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வயது, உடல்நல ஆபத்து காரணிகள் மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கமான மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் தேவையான புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும், உடலில் தொடர்ந்து காணப்படும் அல்லது வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்வது, சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

நிபுணத்துவமான சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு சேர்த்தல்

பல புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பலமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீண்ட தூரப் பயணம் ஏற்கனவே சவாலான புற்றுநோய் சிகிச்சைப் பயணத்தில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியான கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும்.

இதனால், பூந்தமல்லியில் புதிய மையத்தைத் தொடங்கியிருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கான புவியியல் ரீதியான அணுகலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைப் பயணத்தை மேலும் வசதியானதாகவும், எளிதாக அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவிலானதாகவும் மாற்றும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

பூந்தமல்லி மையம், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களைத் தொடர்ந்து, ஜஸ்’ ஆன்கோவின் நான்காவது மையமாக இணைகிறது.

மேலும், ஜஸ்’ ஆன்கோ தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் OMR மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் புதிய மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல சமூகங்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடியதாக மாற்றுவதே நிறுவனத்தின் நீண்டகால நோக்கமாகும்.

சிகிச்சையைத் தாண்டிய அர்ப்பணிப்பு

புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் சிகிச்சையில் இருந்து மட்டும் தொடங்குவதில்லை; விழிப்புணர்வு, தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல் ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது என்று ஜஸ்’ ஆன்கோ நம்புகிறது.

தனது விரிவடைந்து வரும் மையங்களின் மூலம், நோயாளிகள் நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையைப் பெறுவதற்கு தூரமும், பொருளாதாரச் சுமையும் முக்கிய தடைகளாக இருக்காத ஒரு சுகாதாரச் சூழலை உருவாக்குவதில் பங்களிக்க ஜஸ்’ ஆன்கோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஜஸ்’ ஆன்கோவின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறுகையில்:

“புற்றுநோய் என்பது ஏற்கனவே ஒரு குடும்பத்திற்கு உணர்வுபூர்வமாகவும் சவாலாகவும் இருக்கும் ஒரு பயணம். அந்தப் பயணத்தை நிதிச்சுமையும், நீண்ட தூரமும் மேலும் கடினமாக்கக் கூடாது. மக்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அருகில் கொண்டு செல்வதும், அதை மேலும் குறைந்த செலவில் வழங்குவதும் ஜஸ்’ ஆன்கோவின் நோக்கம்.

இதன் மூலம் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற்று, நம்பிக்கையுடன் தங்களது சிகிச்சையைத் தொடர முடியும்.”

ஜஸ்’ ஆன்கோ பற்றி

ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco) என்பது நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை அமைப்பாகும்.

தொடர்ந்து விரிவடைந்து வரும் தனது சிகிச்சை மையங்களின் மூலம், சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பதில் ஜஸ்’ ஆன்கோ கவனம் செலுத்துகிறது. அணுகல் மற்றும் குறைந்த செலவு ஆகியவை அதன் செயல்பாட்டின் முக்கிய அடிப்படைகளாக உள்ளன.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது 

தமிழ் உள்ளடக்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது தமிழ் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திரையைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பகிரப்பட்ட அனுபவங்கள், உரையாடல்கள் மற்றும் கலாச்சார அடையாளமாக மாறுகின்றன. தமிழ் ZEE5-ஐ பொறுத்தவரை, இந்த உறவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பொறுப்புடன் கூடியதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள, உயர்தரமான கதைசொல்லல் மூலம் அவற்றை தொடர்ந்து உயர்த்துவதும் எங்கள் பொறுப்பாகும்.

இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்புக்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் C. ஜோசப் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் இப்படம், அவரது அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாகவும், அவரது இறுதி திரையரங்கத் தோற்றமாகவும் அமைகிறது. இந்த முக்கியமான படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழ் ZEE5 பெருமை கொள்கிறது. இந்த முக்கியமான படைப்புடன், ரசிகர்களின் விருப்பமான ஃபிராஞ்சைஸ்கள், புதிய ஒரிஜினல்கள், பிளாக்பஸ்டர் பிரீமியர்கள் மற்றும் இன்றைய தமிழ் பொழுதுபோக்கின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதுமையான வடிவங்களையும் இந்த உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது.

இந்த உள்ளடக்கத் தொகுப்பின் மூலம், தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Dheeran Productions, Dream Warrior Pictures, KVM Productions, SS Group, 18 creators, Cocktail Cinemas, Passion Studios, Seven Screen Studios, Zee Studios, Drumsticks Production, Cinemum LLP மற்றும் Happy Unicorn ஆகியவற்றுடன் புதிய மற்றும் தொடர்ச்சியான கூட்டணிகளை தமிழ் ZEE5 அறிவிக்கிறது. திரையரங்க உள்ளடக்கத் தொகுப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய படைப்பும், பிளாக்பஸ்டருமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. இதனுடன், நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் Hi; அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் Demonte Colony; கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri; ஹரிஷ் கல்யாண் நடிப்பில் Nooru Kodi Vanavil; அக்‌ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப் நடிப்பில் Raawadi ஆகிய முக்கியமான வெளியீடுகளும் இந்த வரிசையை மேலும் வலுப்படுத்துகின்றன. தமிழ் ZEE5-ன் மிகவும் விரும்பப்பட்ட ஒரிஜினல்களின் வெற்றியைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் விருப்பமான Koose Munisamy Veerappan 2, Regai 2, Vilangu 2, Thadayam 2 மற்றும் Sattamum 2 ஆகியவற்றின் தொடர்ச்சிகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், Anand Neelakandan நடிப்பில் Ananthakaalam, நெல்சன் இயக்கத்தில் Mix FM, Cinemum-ன் Octopus மற்றும் Muthukumar, Adithya Joshi மற்றும் Lisha ஆகியோர் இடம்பெறும் Thaai Mann ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Thee Kural என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியும் தமிழ் ZEE5-ன் பொழுதுபோக்கு வழங்கலை மேலும் விரிவுபடுத்துகிறது.

Zee 5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான Business Head லாயிட் சேவியர் கூறுகையில், “ஜனநாயகனை தமிழ் ZEE5-க்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இது ஒரு பிளாக்பஸ்டர் படத்தைத் தாண்டி, மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப்பின் இறுதி திரையரங்கத் தோற்றம் என்பதால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஒரு உணர்வுபூர்வமான மைல்கல்லாகும். ரசிகர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த மறக்க முடியாத தருணங்களை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரவிருக்கும் எங்கள் உள்ளடக்கத் தொகுப்பில் இடம்பெறும் பல்வேறு சுவாரஸ்யமான படைப்புகளுடன், ஜனநாயகனை அவர்களின் பார்வைப் பயணத்தின் நிரந்தரமான ஒரு பகுதியாக மாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் Hi மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri போன்ற படங்களிலிருந்து, Thadayam மற்றும் Koose Munisamy Veerappan ஆகியவற்றின் தொடர்ச்சிகள் மற்றும் Thee Kural போன்ற வடிவங்கள் வரை, வெவ்வேறு குரல்கள், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் முறைகளைக் கொண்ட கதைகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள ஆர்வமும், படைப்பாளர்களுக்கு துணிச்சலுடன் செயல்படவும், கதைசொல்லலின் எல்லைகளை விரிவுபடுத்தவும் தொடர்ந்து சுதந்திரத்தை வழங்குகிறது.”

தமிழ் உள்ளடக்கத் தொகுப்பு திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்களைத் தாண்டியும் விரிவடைந்து, Garuda, Vikram Vetal, Shiv Sati, Chandrakanta, Tirupati Balaji, Barbarik Narmada மற்றும் Ram Anjanay Yudh உள்ளிட்ட பல்வேறு AI தொழில்நுட்பம் சார்ந்த கதைசொல்லல் படைப்புகளையும், குழந்தைகளின் விருப்பமான Kundaka Mandakka போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதனுடன் FIFA, Bundesliga, Coppa Italia, Supercoppa Italiana மற்றும் ILT20 ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான நேரலை விளையாட்டு தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகைகள் மற்றும் வடிவங்களில் பொழுதுபோக்கின் கலவையை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த விரிவுபடுத்தப்பட்ட வழங்கலின் மூலம், தமிழ் ZEE5, தமிழ் பார்வையாளர்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்கி வருகிறது. பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பார்வை நேரங்களுக்கு ஏற்ற கதைகள், வடிவங்கள் மற்றும் அனுபவங்களை ஒன்றிணைக்கிறது. புராணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு முதல் புனைகதை, புனைகதை அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் வரை, புதிய உள்ளடக்கத் தொகுப்பு, பிராந்தியம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த தளத்தில் கண்டறியக்கூடிய உள்ளடக்கத்தின் பரந்த தன்மையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

Superstar Rajinikanth unveiled the motion poster of Oru Kaidhiyin Diary, directed by Suseenthiran and featuring Shanthnu Bhagyaraj in the lead role. The motion poster was launched in the presence of the film’s team, further raising expectations surrounding the movie.

Produced jointly by Kannan Ravi and Deepak Ravi under the banner of KRG Kannan Ravi Group, the film stars Shanthnu Bhagyaraj as the protagonist, while Seeman plays a pivotal role. Sam C.S. is composing the music for the film.

Set against the backdrop of Madurai, the film revolves around the relationship between a father and son. It combines family emotions with action and fast-paced events. The lifestyle and atmosphere of Madurai, along with the emotional changes that occur within the father-son relationship, form important elements of the story.

The recently released motion poster has already generated curiosity, particularly with the looks of Seeman and Shanthnu, the Madurai temple towers featured in the background, and a design resembling a handwritten manuscript. The title Oru Kaidhiyin Diary (“A Prisoner’s Diary”), along with the film’s father-son storyline, has further increased anticipation.

This film marks the 10th production from KRG Kannan Ravi Group, produced jointly by Kannan Ravi and Deepak Ravi. The production house has been focusing on quality commercial cinema and strong storytelling, and has recently backed several successful projects, including Thalaivar Thambi Thalaimayil and TN 2026. The team is said to be giving equal importance to both the story and production quality for this film as well.

Director Suseenthiran, one of Tamil cinema’s leading commercial filmmakers, has created a distinct identity through his ability to blend family emotions, action, crime and drama in the right proportions.

Following the success of films such as Naan Mahaan Alla and Pandianadu, the director is once again exploring a father-son relationship, this time presenting it with a combination of emotional depth and gripping commercial elements.

The film’s team is reportedly planning to complete the shooting in a single schedule.

The combination of Suseenthiran and Shanthnu Bhagyaraj, Seeman’s important character, music by Sam C.S., and the Madurai backdrop has already attracted considerable attention following the release of the motion poster.

The upcoming announcements and updates regarding the shooting are expected to further increase the excitement and anticipation surrounding Oru Kaidhiyin Diary.

Pageviews