சோனியின் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன், மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். உலகளாவிய அளவில் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்திழுத்துள்ள ஜுமான்ஜி பத்தொடரின் அடுத்த பாகமும் இவ்வருடம் வெளியாகவுள்ளது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் 2026 ஆம் ஆண்டில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதிக்கவுள்ளது. 


தொடர்ந்து தரமான படங்கள் வழங்குவதை ஒரு கலையாக மாற்றியுள்ளது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட். கடந்த ஆண்டில், வணிக வெற்றிக்கும், கலாச்சாரத் தொடர்புக்கும் இடையே ஓர் அரிய சமநிலையை உருவாக்கியிருந்தது சோனி ஸ்டுடியோ. அது சாத்தியமாக, ஒற்றை வழிமுறையென ஒன்றை மட்டும் கடைப்பிடிக்காததே காரணமாகும். 2025 இல், இரண்டு படங்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தின. ஒன்று டகோட்டா ஜான்சன், கிறிஸ் எவன்ஸ் மற்றும் பெட்ரோ பாஸ்கல் நடித்த Materialists படமாகும். உலகளாவியளவில், இப்படத்தைப் பற்றிய வலுவான வாய்வழித் தகவல் பரிமாற்றத்தாலேயே வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து, உலகமெங்கும் சோனி வினியோகித்த Demon Slayer: Kimetsu No Yaiba - Infinity Castle எனும் அனிம் படம் ஒரு பெரும் ஓட்டத்தைக் கண்டது.  இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் முன்பதிவுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியது. இந்தியாவில், எப்பொழுதையும் விட அதிக வசூல் செய்த சர்வதேச அனிமேஷன் திரைப்படமாக விளங்கியது. இது, ரசிகர்கள் விரும்பும் சினிமாவை உலகமெங்கும் கோண்டு செல்லும் சோனியின் செயற்திறனுக்கும் புகழுக்கும் ஒரு மைல்கல்லாக விளங்கியது.


அதே வேகத்துடன், இப்போது சோனி 2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. மேலும் சோனியின் வரவிருக்கும் படைப்புகளாக அறிவியல் புனைகதை த்ரில்லர்கள், பெருமைமிகு டிராமா வகைமை படங்கள், எல்லா வயதினருக்குமான அனிமேஷன் படங்கள், மற்றும் IMAX திரைகள் மற்றும் பிரீமியம் வடிவங்களுக்காக வடிவமைக்கப்பட்ட படத்தொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாரம்பரியமான ஸ்டுடியோவான சோனி, தன் செயற்திட்டத்தைக் காலத்திற்கேற்றாற்போல் புது ரசிகர்களைக் கவரும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  


உவகையளிக்கும் தரமான உள்ளடக்கம்


பிப்ரவரி 13, 2026 அன்று வெளியாகும் Amazon MGM ஸ்டுடியோவின் Crime 101 படம், மசோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் மூலம் விநியோகிக்கப்படுகிறது. Don Winslow-வின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி சினிமாவாக்கியுள்ளார் Bart Layton. துல்லியமாகத் திருடும் சாமர்த்தியசாலியான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன், நம்பிக்கையிழந்த ஏமாற்றம் நிரம்பிய காப்பீட்டுத் தரகரான Halle Berry, ஒரு சங்கடமான கூட்டு வைத்து ஒரு பிரச்சனையைத் தீர்க்க நினைக்கிறார்.  


Spider-Verse and K-Pop: Demon Hunters முதலிய படங்களின் பின்னணியில் உள்ள குழு, அட்டகாசமானதொரு அனிமேஷன் படத்துடன் மீண்டும் களம் காண்கின்றனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன், NBA Champ Stephen Curry-யும் இணையும் விறுவிறுப்பான அனிமேஷன் ஸ்போர்ட்ஸ் காமெடிப் படம் ஃபிப்ரவரி 20, 2026 அன்று வெளியாகிறது.


பெரிய கதைக்கருவும், மிகப்பெரிய உலகங்களும்


அமேசான் MGM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட அறிவியல் த்ரில்லர் படமான Project Hail Mary, 2026 மார்ச் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் மனிதகுலத்தைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறார் ரயான் கோஸ்லிங். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் நிறுவனம், IMAX மற்றும் பிற பிரீமியம் திரையரங்க வடிவங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறது. 


Andy Weir -இன் அதிகம் விற்பனையான சிறந்த  நாவல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு, Phil Lord மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம். தான் யார் என்பதையும், தன் பணி என்ன என்பதையும் மறந்த ரைலண்ட் கிரேஸ் (ரயன் கோஸ்லிங்) என்ற விண்வெளி வீரரை மர்மமான விண்கலம் ஒன்றில் விழித்தெழுக்கிறார். 


மே மாதத்தில், அமேசான் MGM ஸ்டுடியோஸின் The Sheep Detectives படம் வெளியாகிறது. அசலான மர்மத்தை, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் எதிர்பாராத விசாரணைக் குழு பற்றிய படம். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் விநியோகிக்கும் இப்படம், 2026, மே 8 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் Hugh Jackman மற்றும் Bryan Cranston ஆகியோர் நடிக்கின்றனர்.


அமேசான் MGM ஸ்டுடியோஸ், Masters of the Universe படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டு வருகிறது சோனி. மிகவும் பிரபலமான இப்படத்தொடரை, இயக்குநர் Travis Knight மீண்டும் பெரிய திரைக்குக் கொண்டு வருகிறார். இந்த லைவ் ஆக்‌ஷன் sci-fi சாகசப்படத்தை, ஜூன் 5, 2026 அன்று சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் லீசிங் விநியோகம் செய்கிறது. 


படத்தொடர்கள், அச்சுறுத்துலும் ஆற்றலும்


ஜூலை 24, 2026 அன்று வெளியாகிறது Evil Dead Burn எனும் அமானுஷ்யப் படம். 

Evil Dead (2013), Evil Dead Rise (2023) ஆகிய படங்களைத் தொடர்ந்து, இப்படத்தொடரில் வெளியாகும் மூன்றாவது தனிப் படைப்பாகும். இப்படத்தை Sebastien Vanicek இயக்குகிறார்.


ஜூலை 31, 2026 அன்று வெளியாகும் Spider-Man: Brand New Day திரைப்படத்தில், Destin Daniel Cretton இயக்கத்தில் Zendaya-வுடன் இணைகிறார் என்றுமே புகழ் குன்றிடாத Tom Holland. பீட்டர் பார்க்கர் மறக்கப்பட்டு, புதிய வில்லன்களை எதிர்கொள்ளும் No Way Home உலகிற்கு டாம் ஹாலண்ட் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாததால், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் வெளியான Spider-Man: No Way Home படம், இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் வரலாற்றில், ரூ.300 கோடிக்கு அருகில் வசூலித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக மாறியது. 


ஆகஸ்ட் 21, 2026 அன்று Blumhouse-இன் insidious படமும், செப்டம்பர் 18, 2026 அன்று Zach Cregger இயக்கிய Resident Evil படமும்.வெளியாகிறது. நகரம் முழுவதும் பரவும் தொற்றுநோயால் சிக்கிய ஒரு கூரியரின் கண்களின் மூலம் உயிர்வாழும்-திகில் குழப்பத்தை மீண்டும் கற்பனை செய்கிறது. 


அமேசான் MGM ஸ்டுடியோஸின் மற்றொரு எதிர்பார்க்கப்படும் திரைப்படம் Verity ஆகும். இதில் Anne Hathaway, Dakota Johnson Josh Hartnett முதலியோர் நடித்துள்ளனர். Michael Showalter இயக்கியுள்ள இப்படத்தை விநியோகிக்கும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் நிறுவனம்,  அக்டோபர் 2, 2026 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 


அக்டோபரில், Aaron Sorkin இயக்கிய The Social Reckoning படம் வெளியாகிறது.  ஒரு ஃபேஸ்புக் பொறியாளரும்,  ஒரு பத்திரிகையாளரும் தளத்தின் இருண்ட ரகசியங்களை இப்படத்தில் அம்பலப்படுத்துகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து,  William Eubank இயக்கிய Archangel படம் நவம்பர் 2026 இல் வெளியாகிறது.


இந்த ஆண்டின் முடிவில், பிளாக்பஸ்டர் படமான ஜுமாஞ்சி 3 டிசம்பரில் வெளியாகிறது. Dwayne Johnson, Jack Black மற்றும் Kevin Hart நடித்திருக்கும் இந்த சாகசப்படம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது. 


சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் 2026 படவரிசை, குறிப்பிட்ட எந்த ஒரு தலைப்பாலும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் பலதரப்பட்ட வகைமைகளை உள்ளடக்கிப் பெரிய திரையில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் புதுமையான கதைக்கருக்கள், ஆச்சரியங்களைச் சோனி வழங்கவுள்ளன.


*இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ பட்டத்தின் படப்பிடிப்பு நிறைவு*

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். 

‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது. 

படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார்.

இப்படத்தில் போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

கேப்டன் MP ஆனந்த் மற்றும் KSK செல்வகுமார் இருவரும் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக தயாரிப்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன.

2D Entertainment, the prestigious banner led by actor Suriya, proudly presents “My Lord,” produced by Olympia Movies and directed by National Award winning filmmaker Raju Murugan.

Starring Sasikumar and Chaithra in the lead roles, with music by Sean Roldan, the film has already garnered a warm response from audiences through its first look and trailer, building strong anticipation ahead of its release on Feb 13th.

Sharing their excitement, 2D Entertainment stated that meaningful cinema rooted in love, trust, and strong values will always have a special place with them. Emphasising that cinema goes beyond entertainment and business, the team said they are proud to support films that inspire positive thoughts and reflect society.

With a compelling story, a talented team, and the backing of 2D Entertainment, “My Lord” promises to be a heartfelt and thought provoking theatrical experience.

 

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, "டாக்ஸிக்" படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது.  தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, AP–TG சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்  (SVC) உடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம்  செய்திகளில் இடம்பிடித்தது.   இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது.


சர்வதேச அளவில், "டாக்ஸிக்"  திரைப்படத்தை  Phars Film என்ற முன்னணி  வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில்  ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ₹105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது — இது உலக சந்தையின் மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. டீசர் கூட வெளியாகாத நிலையில் இப்படம் இத்தனை பெரிய எண்ணிக்கைகளைப் பெற்றிருப்பது, சந்தையில் இப்படத்தின் மீதுள்ள  நம்பிக்கையையும் ராக்கிங் ஸ்டார் யாஷ் மீது உள்ள ரசிகர்ளின் எதிர்பார்ப்பையும் காட்டுகிறது.


முக்கியமாக, இந்த வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் டாக்ஸிக் படத்தின் இந்திய மொழி பதிப்புகள் (கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்) மட்டுமே பொருந்தும். ஆங்கில பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை — இது இந்திய மொழி பதிப்புகளின் தனிப்பட்ட வெளிநாட்டு வலிமையை மேலும் வலியுறுத்துகிறது.


"டாக்ஸிக்" மீதுள்ள எதிர்பார்ப்புகளுக்கு காரணமுள்ளது. யாஷ் நடித்த முந்தைய படம் KGF: Chapter 2, உலக சந்தைகளில் அபாரமும் வரலாற்று முக்கியத்துவமுமான வர்த்தகத்தை நிகழ்த்தியது. குறிப்பாக GCC பகுதியில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்தது. பல சர்வதேச பிரதேசங்களில் அசாதாரணமான வசூல் சாதனைகளைப் பதிவு செய்தது. அந்த உலக வெற்றிதான் இப்போது "டாக்ஸிக்" படத்தை இன்னும் உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துகிறது.


யாஷ் நடிக்கும் இந்தப் படம், இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான சர்வதேச வெளியீட்டை நோக்கி தயாராகிறது. நேபாளம், ஜப்பான், சீனா தவிர உலகம் முழுவதும் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது "டாக்ஸிக்" படத்தை உலகளாவிய சினிமா நிகழ்வாக நிலைநிறுத்தும் தைரியமான முயற்சியாகும்.


Phars Films நிறுவனத்தின் CEO & Founder திரு. அஹமத் கொல்சின் கூறியதாவது..,

 

"டாக்ஸிக்"  மூலம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் கவரும்  ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக்  காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் "டாக்ஸிக்" படத்தின்  தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.”


கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட K நாராயணா கூறியதாவது..,

 

"டாக்ஸிக்"  ஒரு உலகளாவிய சினிமா மொழியில் பேசும் படமாக கற்பனை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட அளவிலான கனவுக்கு, உலகளாவிய வலிமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி தேவைப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்திய சினிமாவை வலிமையாக நிலைநிறுத்துவதில் Phars Films தொடர்ந்து அபார திறனை நிரூபித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை மிக்க  வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தில் அவர்களுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பரந்த  மற்றும்  நுணுக்கமான அணுகுமுறையில், "டாக்ஸிக்"  உலகம் முழுவதும் அதற்குரிய அளவிலும் தாக்கத்திலும் வேகத்திலும் கொண்டாடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது இந்திய சினிமாவின் உலகளாவிய வெளியீட்டில் புதிய அளவுகோல்களை உருவாக்கும்.”


உள்நாட்டு (தெலுங்கு) சந்தையில் சாதனை புரிந்த ஒப்பந்தம், ₹105 கோடி வெளிநாட்டு ஒப்பந்தம், மேலும் KGF 2-ன் உலக பாரம்பரியம் — இவற்றின் பின்னணியில் "டாக்ஸிக்"  வெளியீட்டுக்கு முன்பே உலகளாவிய பெரும் நிகழ்வாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மிகப்பெரிய சர்வதேச அளவிலான தயாரிப்பில் உருவாகியுள்ள "டாக்ஸிக்" , உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, வலுவான VFX, வலுவான கதை உலகம், மற்றும் பெரும் நட்சத்திரக் கூட்டணி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது; இது எதிர்காலத்தில் ₹1000 கோடி மெகா பிளாக்பஸ்டராக மாறும் முன்னோட்டத்தை அளிக்கிறது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.


தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) -  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee)  ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.


கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன்  இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது


 

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,  


மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். 

ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.  


சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது. 


“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும். 


சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.




இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,  

மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.


ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.

நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.


இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.


அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.


என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். 


பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.



நடிகை சைத்ரா பேசியதாவது..,  

இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும்.  

எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.


நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,  

டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,

“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.


நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும். 


படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.

இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட்  ஃபேமிலிக்குப்  பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.  பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன். 


இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.


“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது


வெற்றிமாறன் வெளியிட்ட “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.

தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு தென் தமிழகத்து கிராமம், அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, குடும்பத்துடன் அனைவரும் ரசித்து மகிழும் வகையில் ஒரு குடும்பச் சித்திரமாக இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுகா. 

இந்த படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவரது கிராமத்து வாசனைமிக்க இசையில், பாடல்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில் உருவாகியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் நுட்ப குழு 

கதை& இயக்கம் : சுகா
தயாரிப்பு : இசக்கி கார்வண்ணன்
இசை : இளையராஜா
படத்தொகுப்பு (Editor) : சுரேஷ் அர்ஸ்
ஒளிப்பதிவு (DOP) : மார்ட்டின் டான்ராஜ்
கலை இயக்கம் : A. N. இளங்கோவன்
சண்டை இயக்கம் : கனல் கண்ணன்
PRO - சதீஷ் (AIM)

Chennai, 9 February 2026:
 In cities, people are surrounded every day by large amounts of information and advertising. Because of this, traditional advertisements often fail to attract immediate attention. In this situation, Impressn has introduced a new advertising format called the Visual-Only Station.
What is a Visual-Only Station?
 A Visual-Only Station is a small LED screen that runs silently and continuously. It is designed to be noticed naturally by people while they are present in the space. These screens display information, light entertainment, and a limited amount of advertising.

Impressn’s Role
 Impressn is the first company in India to operate Visual-Only Stations as a unified network. Each screen is not treated as a standalone display but works as part of a coordinated system.

Content
 Visual-Only Stations follow a balanced content structure:
70% information and entertainment
30% advertisements
This balance ensures that viewers are not overloaded with ads, while brands benefit from better recall.
Where are the screens installed?
 Screens are placed in locations where people wait or spend time:
Tea shops and cafés
Retail stores
Commercial areas
High-footfall public spaces

What makes Impressn different?
 Visual-Only Stations show organized content that people watch naturally as part of their daily routine. This helps advertisements stay in memory without being intrusive.

Benefits for Brands
High viewer dwell time
Local audience targeting
Cost-effective advertising
Strong brand recall

Applications Across Sectors
Consumer brands
Real estate projects
Hospitals
Educational institutions
Retail outlets
Events and local launches

Looking Ahead
 Visual-Only Stations blend quietly into everyday environments without demanding attention. Impressn continues to expand its Visual-Only Station network across India.

Impressn
India’s First Visual-Only Station Network

~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது~

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~


இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம் இவை அனைத்தும் இணைந்து, தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.


டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”


நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”


சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”


20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள். 

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.


பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.


விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ''இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை தாமரை செல்வி பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி," என்றார்.


நடிகர் வையாபுரி பேசுகையில், ''சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் 'ஆழி' . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ''தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் 'ஆழி'. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், '' இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்... திரைக்குப் பின்னாலும்... அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.


தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ''படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.


கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் - ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா?  அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.


இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.


தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்," என்றார்.


இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், "நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் 'மேல் விலாசம்', 'அப்போதகேரி ', 'இளையராஜா ' என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் 'இளையராஜா' படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.  அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி  உருவாகியுள்ளது.  70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம்.  அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.


இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.


இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில்  அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.


இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,'' என்றார்.


சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ''சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன்.  அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.

சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.


நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.


அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.  இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன.  இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.


இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,'' என்றார்.


நடிகர் சரத்குமார் பேசுகையில், ''இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான 'மேல் விலாசம்' படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.


பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.


இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.


மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.


தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு - தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.


என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,'' என்றார்.

 

பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். 


பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம், இரட்டைத் தன்மை, உயிர்வாழ்தல் மற்றும் பழிவாங்குதல் போன்றவற்றை ‘The Chronicles of Two Half-Blooded Vampires’ என்ற படத்தின் டேக்லைன் மூலம் பேசும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பார்வை போஸ்டரின் அடர் நிறங்களும், காட்சிகளும் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது.


இந்த போஸ்டரில் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கம்பேக் கொடுக்கிறார். ’கண்ணெழுதி பொட்டும் தொட்டு’, ’கதா’, ‘கிரீட்டிங்ஸ்’ போன்ற மலையாள திரைப்படங்கள் மூலம் கேரள ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் அப்பாஸ். அவரது நடிப்பு இந்த கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆக்ஷன் கொரியோகிராபர் வெரி ட்ரை யூலிஸ்மேன் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளது இந்த படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம். இது படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. 

 

’ஆட்டம்’, ‘வேல’, ‘மதுரம்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் மகேஷ் புவனேந்த் மற்றும் ‘2018’, ‘அய்யப்பனும் கோஷியும்’ மற்றும் ‘லூசிஃபர்’ படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் இந்தப் படங்களில் பணியாற்றுகின்றனர். ’மேட்னி’, ‘கொண்டையும் பூணூலும்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாப்பினு, ‘ரோர்ஷாக்’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ போன்ற படங்களுக்கு இசையமத்த மிதுன் முகுந்தன் ஆகியோர் பணிபுரிகின்றனர். ’மாலிக்’, ’உண்டா’ மற்றும் ’இஷ்க்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த்  இந்தப் படத்தின் ஆடியோகிராஃபியை கையாள்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் சம்ஜத் மற்றும் பிரவீன் விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர். 


கதையின் வில்லனாக ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். நடிகர் அப்பாஸின் கம்பேக்கும் கதைக்கு வலுசேர்க்கும். 


பான்-இந்திய அளவில் பன்மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படமாக ’HALF’ உருவாகியுள்ளது. பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள ’HALF’ வேம்பயர் ஜானரில் மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான படமாக வெளியாக இருக்கிறது. 


இருண்ட சூழல், பிரம்மாண்டம் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன் ‘HALF’ மலையாள சினிமாவில் இருந்து ஒரு துணிச்சலான பான்-இந்திய படமாக உருவாகியுள்ளது. ஆக்ஷன், ஹாரர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.


தொழில்நுட்பக்குழு விவரம்: 


தலைமை இணை இயக்குநர்: ராஜேஷ் குமார் கேஜி, 

இணை இயக்குநர்: ஜிபின் ஜாய், 

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: பினு முரளி,

ஒப்பனை: நரசிம்மசாமி, 

ஆடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன், 

புரோஸ்தெடிக்ஸ்: சேது சிவானந்தன், 

விஷுவல் எஃபெக்ட்ஸ்: ப்ராமிஸ் ஸ்டுடியோஸ், 

படங்கள்: சினாட் சேவியர், 

பப்ளிசிட்டி: டிசைன்ஸ் டிவிட்டி.

Pageviews