'தி மார்ஷியன்' நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard  வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார். லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது!


கதைச்சுருக்கம்- பூமியில் இருந்து பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள தொலைதூர நடசத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழும் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) மிகவும் அதிர்ச்சியடைகிறார். அவர் தனது நினைவை மீட்டெடுக்கும்போது, ஒரு வினோதமான பொருளின் மர்மத்தை ஆராய வேண்டும் என்ற தனக்கான பணியை நினைவு கூர்கிறார். அப்பொருள், சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியாகும். Ryland Grace -ஐப் பணியில் அமர்த்தும் Eva Stratt (Sandra Huller), Astrophage -களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் தொடங்குகிறார். 


CREDITS -பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

இசை- Daniel Pemberton; ஒளிப்பதிவு- Greig Fraser


ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி  பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது.

 

With India’s private space ecosystem gaining momentum under the guidance of the Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe), the commercial arm of Indian Space Research Organisation (ISRO), the country’s space ambitions continue to reach new heights. IN-SPACe is an autonomous nodal agency under the Department of Space, Government of India, tasked with promoting, enabling, authorising and supervising non-government entities (NGEs) undertaking space activities.


Celebrating the spirit of scientific curiosity and exploration, Sony Pictures Releasing International hosted a special screening of the highly anticipated Project Hail Mary for members of IN-SPACe and ISRO ISTRAC—marking the first time ever that a Hollywood film screening has been organized exclusively for dignitaries from these esteemed institutions.


Adding a memorable touch to the evening, the film’s lead actor Ryan Gosling made a special video call-out to the scientists in attendance, saying:

“I’d like to salute all the talented people at ISRO for pushing the boundaries of space exploration and inspiring the world through science and perseverance.”


Held on March 21, 2026, at Nexus Shantiniketan Mall, the event brought together Dr. Vinod Kumar – Director & Promotion Directorate of IN-SPACe, Dr. Srimathy Kesan, Founder & CEO of Space Kidz India and Mission Director of ShakthiSAT, along with IN-SPACe members and scientists from ISRO ISTRAC representing India’s rapidly growing space community for an exclusive early preview of the film.


Based on the bestselling novel by Andy Weir and directed by Phil Lord and Christopher Miller, Project Hail Mary follows Ryland Grace (Ryan Gosling), a lone astronaut who awakens aboard a mysterious spacecraft with no memory of who he is or the mission that brought him there—only to discover he may be humanity’s last hope to stop a catastrophic threat to Earth.


Blending the worlds of science and cinema, the evening offered a unique intersection between real-world space exploration and cinematic storytelling, as scientists experienced a narrative rooted in scientific problem-solving and interstellar discovery.


The film also stars Sandra Hüller, Lionel Boyce, Ken Leung and Milana Vayntrub.


Presented by Amazon MGM Studios and distributed by Sony Pictures Releasing International, Project Hail Mary releases in Indian cinemas on March 26, 2026, in English, Hindi, Tamil and Telugu across IMAX® and other premium large formats

தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

இந்தச் சூழ்நிலையை நாங்கள் முழுவதுமாக புரிந்து கொள்வதோடு, தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம். 

என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.

 

காப்பு மற்றும் பலிஜா சமூகங்களின் ஒற்றுமை மற்றும் सर्वांगीण வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு "கேபி சேனா" (காப்பு-பலிஜா சேனா) அமைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த பல அரசியல், தொழில்துறை மற்றும் சினிமா ர்கள் கலந்துகொண்டு, சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினர்.


ஆந்திரப் பிரதேச கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் பசுபுலேட்டி ஹரிபிரசாத் பேசுகையில், "ஒற்றுமையாக இருக்கும்போதுதான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். கேபி சேனா மூலம் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, அரசு த் திட்டங்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்," என்று அழைப்பு விடுத்தார்.


பி.எம்.ஆர் (PMR) குழுமத்தின் தலைவர் திரு. முத்துவேல் ராஜ் பேசுகையில், "வர்த்தகம் மற்றும் வணிகத் துறைகளில் நமது சமூகம் மேலும் சிறந்து விளங்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, பொருளாதார ரீதியாக வலுப்பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். கேபி சேனா இந்த ஒற்றுமைக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும்," என்றார்.


இந்த புதிய அமைப்பின் தலைவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திரு. ஏ.எம். ரத்னம் அவர்களும், பொதுச் செயலாளராக திரு. தம்மய்ய நாயுடு அவர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் தலைமையில் கேபி சேனா சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் உழைக்கும் என்று விழாவில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.



எங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், Kind & Brave Sena (KB Sena) என்ற சமூக அமைப்பு, புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரு. ஏ. எம். ரத்னம் அவர்கள் தலைவராகவும், திரு. தம்மையா நாயுடு (ஆர்கிடெக்ட்) அவர்கள் கௌரவ செயலாளராகவும் நிறுவப்பட்டுள்ளது.


KB சேனாவின் துவக்க விழா, ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் சினிமாட்டோகிராபி துறை அமைச்சர் திரு. கண்டுலா துர்கேஷ் அவர்கள் முதன்மை விருந்தினராக சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு தலைமை வகித்தவர்கள்:

* டாக்டர் ஹரிபிரசாத், தலைவர், AP ஹேண்டிகிராஃப்ட் கார்ப்பரேஷன்

* முத்துவேல் ராஜ், தலைவர், PMR குழும நிறுவனங்கள்

* நரேந்திர கொண்டா, துணைத் தலைவர், NVIDIA & இயக்குநர், Prime 9


இந்த அமைப்பு சமூக நலன், ஒற்றுமை மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.

 

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ' பள்ளிச்சட்டம்பி 'படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.


டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. 


இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்'  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 


இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர். 


'பள்ளிச்சட்டம்பி' டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான 'குயின்', 'ஜன கண மன' மற்றும் 'மலையாளி ஃபிரம் இந்தியா' ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் 'ஜன கண மன ' திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌


'பள்ளிச்சட்டம்பி' திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) - பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம்

 ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

 

பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர்.


சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் 'ரோர் 26' நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார்.


ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.


இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 


இந்நிகழ்வினில் 


மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., 


இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். 


புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது.., 


இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.


ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,


இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,


இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.

இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., 


இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.


அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. 


நடிகர் நிரூப் பேசியதாவது..,


இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. 


நடிகை மாளவிகா பேசியதாவது.., 


சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.


டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,


நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. 


அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.


நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., 


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.


இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. 


இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. 


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி

வழங்குபவர்: விக்ரம் ரெட்டி

தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி

இசை: ஜிப்ரான்

நிறுவனம்: UV Creations

ஒளிப்பதிவு: J. யுவராஜ்

புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்

எடிட்டர்: அனில் பசலா

கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்

எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஷ்ரவன் மாதாலா

ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்

நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு

ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா

மக்கள் தொடர்பு - யுவராஜ்.

 

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.


மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.



தொழில்நுட்ப குழு


இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்


தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திர நடிகரான முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தி டார்ம் ' திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது. 

இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முனீஸ்காந்த் ,ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். அனில் கிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள விமல் ராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ரசிகர்களுக்கு திரையரங்குகளில் மறக்க இயலாத அனுபவமாக வழங்கவுள்ள இந்த திரைப்படத்தை குட் ஸ்டஃப் ( GOOD STUFF) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டில்லி ( B. DILLI) தயாரிக்கிறார். 

அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவரும் வகையில் புதுமையான கதை அம்சத்துடன் தயாராகும் 'தி டார்ம்' இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும் படத்தை பற்றிய ஃபர்ஸ்ட் லுக், மோசன் போஸ்டர் உள்ளிட்ட புதிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

As per global reports, the Ryan Gosling-led sci-fi epic debuted to a stellar US$140.9 million at the box office, marking the biggest debut of 2026. The film collected US$80.5 million in North America and an additional US$60.4 million across 82 international markets, reflecting strong audience interest worldwide.


Directed by acclaimed filmmakers Phil Lord and Christopher Miller, and based on Andy Weir’s bestselling novel, Project Hail Mary has also emerged as one of the strongest openings for an original, non-franchise film in recent years—a rare feat in a market dominated by established IP.


Beyond the box office collections, the Ryan Gosling-starrer has opened to excellent critical reception, holding a strong 95% rating on Rotten Tomatoes, along with an ‘A’ CinemaScore and featured with a 4.4 on Letterboxd, entering the Top 100 movies of All Time.


Project Hail Mary has played a key role in boosting overall global theatrical momentum, driving a notable increase in year-on-year box office revenues and reinforcing audience appetite for large-scale cinematic experiences.


Presented by Amazon MGM Studios and distributed by Sony Pictures Releasing International, Project Hail Mary will release in Indian cinemas on 26 March 2026, in English, Hindi, Tamil, and Telugu, across IMAX®️ and other premium large formats.

Pageviews