சென்னை பெருங்குடியில் Interiors by DeX Flagship அனுபவ மையத்தை நடிகர்கள் பிரஜின், சாண்ட்ரா & இயக்குநர்-நடிகர் கரு. பழனியப்பன் திறந்து வைத்தனர். 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் அறிமுகம்.


நுணுக்கமான வடிவமைப்பு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான  பயன்பாடு மற்றும் நீண்டகால பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், Interiors by DeX தனது Flagship அனுபவ மையத்தை OMR, Perungudi-யில் நடிகர்கள் பிரஜின் சாண்ட்ரா மற்றும் இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் முன்னிலையில் திறந்து வைத்தது.


நிகழ்ச்சி பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் ரிப்பன் வெட்டுதல் மூலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்டூடியோ சுற்றுப்பயணத்தில், DeX நிறுவனத்தின் நவீன சமையலறைகள்(Modular kitchen), அலமாரிகள் (வார்ட்ரோப்கள்) மற்றும் முழுமையான வீட்டு இன்டீரியர் தீர்வுகள் — தினசரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.


சாதாரண ஷோரூமுக்குப் பதிலாக ஒரு அனுபவ மையமாக உருவாக்கப்பட்ட இந்த இடம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வடிவமைப்பையும் நேரில் பார்த்து, தொட்டு, நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் அது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


 வீடுகளில் வடிவம் வைக்கப்படுவது வாழ்வதற்காக மட்டுமே.பார்ப்பதற்காக அல்ல; 


இன்டீரியர் துறையில் பெரும்பாலான பிராண்டுகள் மேற்பரப்பு அலங்காரம் மற்றும் டிரெண்டுகளை முன்னிலைப்படுத்தும் இக்காலத்தில், அதிக செயல்திறன் மற்றும் நீடித்த தன்மை என்ற கொள்கையின் அடிப்படையில் DeX இதனை உருவாக்கியுள்ளது.


Interior துறையில் புதிய அளவுகோலை அமைக்கும் வகையில், DeX புதிய யுத்தியை அறிமுகப்படுத்தியது:


* 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் – ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், விவாதமோ சிறு எழுத்துகளோ இல்லாமல் நேரடியாக மாற்று வழங்கப்படும்.


* 10 நாள் Live-Use Snag Period – வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் வசித்து, ஒவ்வொரு யூனிட்டையும் பயன்படுத்தி, நிஜ வாழ்க்கையில் தோன்றும் குறைகளை சுட்டிக்காட்டலாம். அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்ட பிறகே உத்தரவாதம் ஆரம்பமாகும்.


* லைஃப்ஸ்டைல் அடிப்படையிலான முழுமையான கஸ்டமைஸேஷன் – அனைத்து இன்டீரியர் தேவைகளுக்கும் DeX ஒரு ஒரே இடத் தீர்வாக செயல்படுகிறது.


 இதன் நோக்கம் மிக எளிமையானது: வீடு என்பது தினமும் வாழக்கூடிய அழகான இடம். அது வெறும் Hand Over ஆக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஒப்படைக்கும் நாளில் மட்டும் அழகாக அல்ல; தினமும் சிறப்பாக செயல்பட வேண்டும்.


‘Fascia by DeX’ வெளியீடு


இந்த நிகழ்வில், Fascia by DeX எனும் DeX-இன் பிரத்யேக பிரீமியம் ஷட்டர் பிராண்டும் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் உள்ள DeX-இன் சொந்த PU பூத் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் இந்த ஷட்டர்கள், மேம்பட்ட ஃபினிஷ், உயர்ந்த தரக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.


விருந்தினர்கள் கூறியது


Prajin & Sandra கூறியதாவது:


“பல இன்டீரியர் ஸ்டூடியோக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் DeX-ஐ தனித்துவமாக தெரிவதற்குக் காரணம்  அதன் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு. Live-use warranty என்ற கருத்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. தங்களின் பணியில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. குடும்பங்களின் நிஜத்தேவைகளை நினைத்து சிந்திக்கும் ஒரு பிராண்டை காண்பது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது.”


இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் கூறினார்:


“DeX-உடனான எனது தொடர்பு தனிப்பட்டது. என் சொந்த வீட்டின் இன்டீரியர்களை அவர்களே வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். அதனால் அவர்களின் பணியை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். செயல்திறன் மற்றும் சிறு விவரங்களுக்கான கவனம் தான் என்னை மிகவும் ஈர்த்தது. சினிமாவைப் போலவே, வீடுகளிலும் ஒவ்வொரு பொருட்களும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அழகும் பயன்பாடும் சமநிலையுடன் இருக்க வேண்டியதை DeX அழகாகப் புரிந்துள்ளது.”


நிறுவனர் கருத்துகள்


Founder – Vaishali Sampath கூறினார்:


“ ஏதோ ஒரு வழக்கமான இன்டீரியர் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் வழங்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்கும் ஒரு பிராண்டை உருவாக்க விரும்பினோம். எங்கள் replacement guarantee மற்றும் live-use period — ‘மன்னிப்புகள் இல்லாத பொறுப்புணர்வு’ என்ற ஒரே நம்பிக்கையிலிருந்து வந்தவை.”


Co-Founder – Nanda Kumaran கூறினார்:


“ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டை வெவ்வேறு விதமாக பயன்படுத்துகிறது. அதனால் எங்கள் வடிவமைப்புகள் டிரெண்ட் சார்ந்தவை அல்ல; லைஃப்ஸ்டைல் சார்ந்தவை. Fascia by DeX மூலம், தரக் கட்டுப்பாட்டை முழுமையாக எங்களிடமே வைத்துக்கொண்டு, நீடித்த தன்மையும் பிரீமியம் ஃபினிஷும் கொடுப்போம் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறோம்.”


பெருங்குடியில் தனது Flagship கடையை தொடங்கியதன் மூலம், Interiors by DeX புத்திசாலித்தனமான வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து சென்னை மக்களின் வீட்டு உள்துறை அனுபவத்தை மறுவரையறை செய்ய முனைகிறது.

 

வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் - 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா


தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், "மண்ணுக்கும் மக்களுக்கும்" என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா வடபழனி முருகன் கோவிலில் விசில் சின்னத்தை வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.


மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மற்றும் த.வெ.க. கட்சியை சேர்ந்த பலர் நடிகர் சௌந்தரராஜாவுடன் வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு முடித்து வெளியே வந்த நடிகர் சௌந்தரராஜா கோவிலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்டு மற்றும் விசில் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்தரராஜா, "கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் எந்த கட்சிக்கும் இந்தளவிற்கு ஆதரவு இருக்காது. த.வெ.க. மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 25 சதவீதம் வாக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. 


இன்றைக்கு விசில் சின்னத்தை முருகனின் பாதத்தில் வைத்து விஜய் பெயரில் அர்ச்சனையும் கட்சி கொடி மற்றும் சின்னத்திற்கு சிறப்பு பூஜையும் செய்து பொதுமக்களுக்கு விசிலும், லட்டும் வழங்கி கொண்டாடி வருகிறோம்.


விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது. மாற்றத்தை விரும்பக்கூடிய மக்கள் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள்.


ஆரம்பத்தில் இருந்து தி.மு.க. தான் எங்களுடைய எதிரி என்று தெளிவாக கூறியுள்ளார். அவர்கள் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றியுள்ளார்கள் என்று திருக்குறள் மூலம் எளிய மக்களுக்கு கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


பா.ஜ.க. தலைமையில் தான் மற்ற கட்சிகள் இருப்பது போல தெரிகிறது. அதனை தான் என் தலைவர் கூறியுள்ளார்.


நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது ஆனால் விஜய் எந்த இடத்திலும் அதை பற்றி பேசவில்லை. அவருக்கு பட்ஜெட் பற்றி தெரியுமா எங்கு பார்த்தாலும் தி.மு.க.வை மட்டும் விமர்சனம் செய்கிறார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, 


அவருக்கு பட்ஜெட் பற்றி நன்றாக தெரியும். இந்த விழாவில் என்ன பேச வேண்டுமோ அதை தான் பேசியுள்ளார். ஒரு முக்கியமான நாளில் அதற்கும் விளக்கம் கொடுப்பார்.


வேளச்சேரியில் விஜய் போட்டியிடுவார் என்ற செய்தி வருகிறதே அது உண்மையா என்ற கேள்விக்கு? அவர் எங்கு நின்றாலும் அவர் வெற்றி பெறுவார். கூடிய விரைவில் அவரே அறிவிப்பார்.


விசில் சின்னத்தை வேறு வார்த்தை பயன்படுத்தி கிண்டல் செய்கிறார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  இதிலும் அரசியல் பண்ண வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.


எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம். விஜய் அண்ணாவின் மீடியா தேவை இப்போதைக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக மீடியாவை சந்திப்பார். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கும் கண்டிப்பாக பதில் சொல்வார்.


அவர் ஆட்சிக்கு வந்து சொன்னதை செய்யாமல் இருந்தால் நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாம். அவர் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறார்.


அவர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்டு மீண்டும் மீண்டும் அவரை காயப்படுத்தாமல் அவர் ஏதேனும் தவறு செய்தால், பொய் சொன்னால் கேள்வி கேளுங்கள்.


உங்களுக்கு பொறுப்பு இல்லை ஆனால் கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு?


இந்த கேள்வி என்னை மாட்டி விடுவது போல இருக்கிறது. பொறுப்பு இருந்தால் தான் நான் வேலை செய்வேன் என்று இல்லை. தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன்.

 

(Movie Scroll)  மூவி ஸ்க்ரோல் சார்பில்  SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.


ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.


சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..


இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. 

யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.


இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்தபோது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்.


இந்தக் கதையை உருவாக்கிவிட்டு விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கேவிடம் சொன்னோம்.. அவருக்கும்  கதை பிடித்திருந்தது.. கதையை காமெடியாக உருவாக்காமல் கொஞ்சம் சீரியஸாக உருவாக்கினோம்.. கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர மற்றபடி இது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை தான் 


கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான். இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்..


இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.. 


மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) யூடியூப் தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோடை வெளியிடத்  திட்டமிட்டு இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாக இருக்கிறது.

 

நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான 'லக்கி', Hotstar Specials-ஆக பிப்ரவரி 20, 2026 அன்று, பிரத்யேகமாக JioHotstar-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது. JioHotstar சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் முதன்முறையாக 'லக்கி' திரைப்படத்தின் தனித்துவமான உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அப்பாவியான நாய்க்குட்டி ஒன்று அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்கள்தான் மையக்கரு என்பதை 'லக்கி' டீசர் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லக்கி' இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.


உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் பேசும். 


புதிய கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘லக்கி’ இருக்கும். 


பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் ‘லக்கி’ திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாகிறது. 


JioHotstar பற்றி:

JioHotstar இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் JioHotstar இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார். 


நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார். 


அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா, “அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார். 


இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.

 

வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ். தற்போது நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. 


’ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1, 2026) இடுக்கியில் எளிய பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது. ’பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 


‘ஹைக்கூ’ படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டாக்டர் D. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ’ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். 


படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமைகளை வாங்கியிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திறமையான நடிகர்களும் அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவினரும் இணையும் இப்படம்  குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.


நடிகர்கள்: ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப்புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப்புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ’கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி, 

எடிட்டர்: சக்தி பிரணேஷ், 

இசையமைப்பாளர்: ‘கோர்ட்’ மற்றும் ’பேபி’ படங்கள் புகழ் விஜய் பல்கானின்.

 

It is often said that cinema is not just about capturing moving images; it is about capturing time itself. And as I pause to mark twenty-five years

since I first shouted "Action," I am overwhelmed not by the passage of time, but by the volume of memories that time has generously afforded me.


25 years in this magnificent, demanding industry is not a solitary achievement.It is a tapestry woven from the dreams, dedication and talent of countless individuals who walked alongside me.


My deepest gratitude and love go to the artists: The actors who took the fictional beings in my head and gave them a soul, a voice and a heartbeat.You breathed life into my words, often finding depths in characters that I hadn't realized were there.


To my crew: The silent architects of my imagination who have stood behind the lens for twenty-five years with me, my gratitude and respect are as deep as the love we share for Cinema


I stand on the shoulders of giants, the masters of cinema whose work ignited the spark in me and to my mentors who guided my early steps - thank you for showing me the way.

To my contemporaries and fellow directors, your work challenges and inspires me daily. The camaraderie we share in this shared pursuit of storytelling is invaluable.


Finally, to my lovely audience. You have welcomed my stories into your lives, allowed my characters to inhabit your conversations and embraced the varying shades of love, conflicts and life I have tried to portray. Your acceptance is the ultimate reward.


Thank you for an incredible and unforgettable night at the Yennodu Vaa Veedu Varaikkum concert. It was a soulful reminder to know why I do what I do.  


My love affair with cinema continues. The next frame awaits…


Until then, with lots of love,

Gautham Vasudev Menon

 

ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் யோகி டா. இந்த படத்தில் சாய் தன்ஷிகா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.


படத்தை எழுதி இயக்கிய கௌதம் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் டெக்னீசியன்களால் சாத்தியமாகி இருக்கிறது. இந்த மேடையில் கதாநாயகி சாய் தன்ஷிகாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் ஹீரோவை வைத்து தான் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் நான்கு ஹீரோ சேர்ந்து செய்தால் எப்படி ஆக்சன் வருமோ அதை சாய் தன்ஷிகா இந்த படத்தில் செய்துள்ளார்கள். சாய் தன்ஷிகா அவர்கள் இந்த படத்திற்காக உயிரையே கொடுத்தார்கள். ஆக்சன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துக் கொடுத்தார்கள். தயாரிப்பாளர் செந்தில் அவர்களுக்கு எனது நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


பாண்டியன் மாஸ்டர் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். என்னை இங்கு அழைத்ததற்கு படக்குழு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடந்த 41 வருடமாக ஜிம்னாஸ்டிக், சிலம்பம், சண்டை பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறேன். பல்வேறு நடிகர், நடிகைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். பேராண்மை படத்திற்காக ஐந்து பேருக்கு கற்றுக் கொடுத்தேன். அதில் சாய் தன்ஷிகாவும் ஒருவர். பொதுவாக ஒரு படத்திற்காக கற்றுக் கொள்பவர்கள் அதனுடன் அதை மறந்து விடுவார்கள். சிலம்ப கலையை சிறப்பாக கையாளக் கூடியவர் சாய் தன்ஷிகா அவர்கள். சண்டை காட்சிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு சிலம்பம் தான் முதல் படி. சண்டைக் காட்சிகளுக்கு இந்திய அளவில் புகழ்பெற்றவர் எம்ஜிஆர் அவர்கள் தான். எம்ஜிஆர் அவர்கள் முறைப்படி சிலம்பம் கற்றுக்கொண்டு தான் சண்டைக் காட்சிகளில் நடித்தார். சமீப காலமாக கதாநாயகிகள் அதிகம் சண்டை காட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் சாய் தன்ஷிகா அவர்கள் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு திரைப்படத் துறையில் ஒரு பெண்ணாக இருந்து ஸ்டண்ட் காட்சிகளை இவ்வளவு சிறப்பாக பண்ண முடியும் என்பதை சாய் தன்ஷிகா அவர்கள் நிரூபித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் அஸ்வமித்ரா அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு ஒர்க் பண்ணி உள்ளோம். என்னுடைய குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. 


ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் விஜயசாந்தி போன்றவருடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களைப் போல நம்முடைய தமிழ் சினிமாவிற்கு சாய் தன்ஷிகா கிடைத்துள்ளார்கள். தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்திற்கு போட்டு உள்ளார்கள். சண்டைக் காட்சிகளுக்கு உடல் உழைப்பு அதிகம் வேண்டும், அதை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார். கதாநாயகர்களுக்கு இணையாக இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் சாய் தன்ஷிகா. இந்த படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் ஒரு கான்செப்ட் வைத்திருந்தார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசையமைப்பாளர் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு தயாரிப்பாளரின் பங்கும் முக்கியம். யோகி டா படம் வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறோம். பெண்களுக்கு சிலம்ப கலையை கற்றுக் கொடுங்கள். இந்த படத்தை சப்போர்ட் செய்திருக்கும் அனைவருக்கும் நன்றி. 


ஒளிப்பதிவாளர் பூபதி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் முழுக்க முழுக்க சாய் தன்ஷிகா அவர்களின் உழைப்பு தான் தெரியும். நான் நிறைய ஆக்சன் படங்கள் ஒர்க் பண்ணி உள்ளேன். விஜயசாந்தி அவர்களுக்கு இணையாக சாய் தன்ஷிகா அவர்கள் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு வேண்டும். நன்றி. 


டாக்டர் கவிதா மோகன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். முன்பு பெண்கள் வெளியே வருவதற்கு கூட கூச்சப்படுவார்கள். ஆனால் இன்று அனைத்தும் மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் சினிமா தான். விஜயசாந்தி போன்ற பெண்களைப் பார்த்து பலர் இன்ஸ்பயர் ஆகி உள்ளனர். ஒரு படத்தை எடுத்து அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது ஒரு மறுபிறப்பு மாதிரி தான். நன்றி. 


பாஸ்கர் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். ட்ரெய்லர் பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. சாய் தன்ஷிகா அவர்கள் கலக்கியுள்ளார். அனைவருக்கும் நன்றி. இந்த படம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். 


நடிகை சாய் தன்ஷிகா அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் எனது பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது. நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்பதை படத்தில் காட்ட வேண்டும். கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம். கபாலி படத்திற்காக உண்மையாலுமே முடியை வெட்டினேன். ஆனால் இந்த படத்தில் விக் வைத்துள்ளேன். கபாலி படத்தின் போது நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பெண்கள் அந்த படத்திற்கு பிறகு தங்களது முடியை வெட்டிக் கொண்டனர். ஒரு படம் எந்த அளவிற்கு அனைவரையும் இம்பாக்ட் செய்கிறது என்பதை அன்று புரிந்து கொண்டேன். பெண்கள் தங்களது முடியை முக்கியமானதாக நினைப்பார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகி வருகின்றன. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இது போன்ற ஒரு தருணத்தில் எங்களது படத்தை வெளிக்கொண்டு வரும் சிவ கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோனிகா பிக்சர்ஸ் செந்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இசையமைப்பாளர் சிறப்பான பணியை செய்துள்ளார். பேராண்மை படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. இந்த படத்தின் அனைத்து ஆக்சன் காட்சிகளுக்கும் டூப் இல்லாமல் நானே செய்தேன். பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன் பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதைத் தாண்டி வர முடியும் என்பதை தான் யோகி டா படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு பெண்களுக்காக இந்த படத்தை எடுத்துள்ளோம். என்னால் முடிந்தவரை உழைப்பை கொடுத்து இந்த படத்தை உங்களுக்காக கொண்டு வருகிறேன். இது போன்ற படங்களை ஆதரிங்கள். நன்றி.

 

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்‍-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் 'அமைதிப்படை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார். 


சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான 'அமைதிப்படை' திரைப்படத்தை 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் ஸ்பேரோ சினிமாஸ் பேனரில் கார்த்திக் வெங்கடேசன் வெகு விரைவில் வெளியிடவுள்ளார்.


இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இக்கதை பொருந்தும் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமைதிப்படை' படத்தை கார்த்திக் வெங்கடேசன் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.


இது குறித்து பேசிய அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' படங்களோ, தளபதி விஜய்க்கு எப்படி 'கில்லி'யோ, அஜித் குமாருக்கு எப்படி 'மங்காத்தா' திரைப்படமோ, ‍புரட்சி தமிழன் சத்யராஜுக்கு 'அமைதிப்படை' அப்படி ஒரு மைல்கல் படம். அரசியல் ஞானியான மணிவண்ணன் இயக்கியுள்ள இப்படம் எக்காலத்துக்கும் பொருந்தும். ஜென் ஜி (Gen Z) தலைமுறையினரும் ரசித்து பார்க்கும் வகையில் 'அமைதிப்படை' அமைந்துள்ளது. அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் அப்படியே ஒத்துப்போகும் வகையில் உள்ளன‌. எனவே இப்படத்தை இப்போது எடுக்கப்படும் புது படங்கள் போன்று அதிநவீன 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி," என்றார்.


சத்யராஜ், மணிவண்ணன், சுஜாதா, கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'அமைதிப்படை' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த 1994ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற 'அமைதிப்படை' வெகு விரைவில் ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசனால் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. 

 

மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பிறந்துள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அன்பும் நன்றியும் நிறைந்த செய்தி, கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியது.


“அளவற்ற மகிழ்ச்சியுடனும், நன்றியால் நிரம்பிய மனதுடனும், @AlwaysRamCharan மற்றும் @upasanakonidela தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.


ராம் சரண் மற்றும் உபாசனா தங்களது முதல் குழந்தையாக மகள் கிளிம்காரா கொணிதெலாவை ஜூன் 20, 2023 அன்று வரவேற்றனர். தற்போது இரட்டைக் குழந்தைகளின் வருகையால், கோனிடேலா மற்றும் காமினேனி குடும்பங்களில் மகிழ்ச்சியை இரட்டிப்பாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு மேலும் பல இனிய தருணங்களை இந்த குடும்பம் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Pageviews