'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் 'ப்ராமிஸ்'.
அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த 'ப்ராமிஸ்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் .
ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நாயகியாக நதியா சோமு நடித்துள்ளார். மேலும்
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல்,ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.என் .நாகராஜ் பெருமையுடன் வழங்க
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். அப்படிப் படத்தில் கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்கள் படம் பார்ப்பவர்களை சுவாரஸ்ய ஆட்டத்திற்குள் இறங்கி ரசிக்க வைக்கும்.
படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர் சேரனும் ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டியும் வெளியிட்டு பரவலாகப் பேசப்பட்டது. படத்தின் டிரைலர் ஏபி இன்டர்நேஷனல் தளத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுப் படத்திற்குப் பரவலான அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலூர் ,ஓசூர் ,கிருஷ்ணகிரி போன்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
படத்திற்கு வாய்ஸ் ஓவர் எனப்படும் பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.அவரது பாராட்டால் உற்சாகமடைந்திருக்கிறது படக்குழு. குடும்பத்தினருடன் திரையரங்குகளில் வந்து பார்க்கும் படியாக நெகிழ வைக்கும் காட்சிகளோடு உருவாகி இருக்கிற இந்த 'ப்ராமிஸ்' ,ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடாக ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது.
The official teaser of the upcoming Tamil romantic drama Paris Cafe has been unveiled by actor Sasikumar, offering audiences a glimpse into an emotionally driven love story filled with heartfelt moments and compelling performances.
The teaser introduces viewers to an emotional romantic drama that promises to explore love, relationships, and human emotions with depth and sensitivity. The film stars acclaimed actors Guru Somasundaram and Anumol in the lead roles along with Vijai Vishwa, Archana, Sai Vicky, Nayana Sai and is directed by Saraj Seelan.
With its visually appealing presentation and emotionally engaging narrative tone, Paris Cafe aims to strike a chord with audiences and create anticipation for its release.
Cast
Guru Somasundaram Anumol
Vijai Vishwa
Archana
Sai Vicky
Nayana Sai
Technical Crew
A Film By: Saraj Seelan
Music Director: K.
DOP: Sathesh G
Editor: V. J. Sabu Joseph
Art Director: Dhamu MFA
Costume Designer: V. Dhanraj
Choreography: Prasanth
Makeup: Karthik & Team
Stills: Sivaraj
VFX Supervisor: V. Rajkumar
VFX: Focus VFX
Lyric Video: Lokesh Mithran (Tanya Talkies)
DI Colorist: R. Nandakumar – Varna Digital Studios
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Publicity Design: VM Shivakumar
Executive Producer: Surya Prakash P.
Creative Producers: Ezhil Sathya, Vengal Koteeshvaran
Co-Producer: Vengal M Lingeshwaran
Producer: Kanmani Ranganathan
Directed By: Saraj Seelan
Label: Saregama India Limited, A RPSG Group Company
The excitement surrounding the upcoming Tamil fantasy romantic comedy Double Occupancy has reached a new high as Tamil cinema's beloved icons Trisha and Nayanthara officially unveiled the film's much-awaited trailer, giving audiences an exciting glimpse into a world filled with romance, humor, fantasy, and unexpected twists.
The trailer release itself turned into a special moment for cinema lovers, with two of Tamil cinema's most celebrated stars extending their support to the film and the team behind it. Their presence and endorsement have added significant momentum to the buzz surrounding the project.
Soon after its release, the trailer has been receiving an overwhelmingly positive response across social media platforms, with viewers praising its refreshing premise, entertaining visuals, quirky humor, and intriguing fantasy elements. More importantly, the trailer has successfully achieved what every good trailer aims for, leaving audiences curious and eager to discover the mystery and twist hidden within the narrative.
The makers have cleverly packed the trailer with engaging moments without revealing the core surprise, resulting in growing discussions and fan theories online about what exactly unfolds in the story. The blend of fantasy and romance with comedy has struck a chord with audiences, making Double Occupancy one of the interesting releases to watch out for this month.
Jointly produced by Avni Movies and Benzz Media, the makers had recently announced that the film is all set for a grand worldwide theatrical release on June 12.
Directed by debutant Aswin Kandasamy, Double Occupancy features Santhosh in the lead role alongside Samyuktha Viswanathan, Reshma Venkatesh, and Vinoth Kishan in pivotal roles. The film also boasts an impressive supporting cast featuring VTV Ganesh, Bhagavathi Perumal (Bucks), Vichu Vishwanath, Bose Venkat, Vinodhini Vaidyanathan, and several notable performers.
Combining romance, comedy, and fantasy elements, Double Occupancy promises a refreshing cinematic experience packed with entertainment and emotional moments.
The film is supported by a talented technical team, with music composed by Sam CS, whose background scores and songs have consistently elevated cinematic experiences, while Santhakumar Chakravarthy handles cinematography, bringing visual richness to the fantasy world of the film.
With a unique premise, energetic storytelling, and a talented ensemble cast, Double Occupancy is gearing up to entertain audiences worldwide from June 12.
CAST
* Santhosh
* Reshma Venkatesh
* Samyuktha Viswanathan
* Vinoth Kishan
* VTV Ganesh
* Bhagavathi Perumal (Bucks)
* Vichu Vishwanath
* Bose Venkat
* Vinodhini Vaidyanathan
TECHNICAL CREW
* Director: Aswin Kandasamy
* Producers: ACS Arun Kumar (Benzz Media) & Khushbu Sundar (Avni Movies)
* CEO: R. Madhan Kumar
* Creative Producer: Anandita Sundar
* Music: Sam CS
* DOP: Santhakumar Chakravarthy
* Editor: Praveen Antony
* Production Designer: Senthil Raghavan
* Costume Designer: Sai Shruthi
* Choreography: Brinda
* Stunt Director: Sakthi Saravanan
* Lyricists: Kaala, Semvi, Swetha Prabakaran, Vidya Damotharan & Iyikki Berry
* Singers: Kaala, Aditya RK, Kapil Kapilan, Sanjana Kalmanje & Iyikki Berry
* Head of Production: N. Manivannan
* Production Executive: P. Balagopi
* VFX: Fazil Mohammad S (Head of Studio – Pixel Light Studio)
* Colorist: Prasath Somasekar (Knack Studios)
* Sound Design: Suren G – S. Alagiakoothan
* Sound Mixing: Suren G (Hum Audio)
* Stills: V. Rajan
* Make-up: N. Chelladurai
* Publicity Design: Viyaki
* PRO: Riaz K Ahmed, Paras Riyaz
* Creative Promotions: Kachcha Mango
* Digital Marketing: Beatroute
* Label: Saregama India Limited, A RPSG Group Company
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) .
இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.
ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.
கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘நோவா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாயகி ரைசா வில்சன் கூறும்போது, “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன்.
ஆக்சன், த்ரில்லர், சயின்ஸ் பிக்சன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இதுவரை நான் இந்த மாதிரி கதையில், கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதனாலேயே இந்தக் கதை எனக்குப் பிடித்து விட்டது.
கேரளாவில் உள்ள மறையூர் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அனுமதி கிடைப்பதற்கே சிரமமான சந்தன மரக் காடுகளுக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், பெரும்பாலான நேரம் பனி மற்றும் மழை, வனவிலங்குகளின் அச்சுறுத்தும் சத்தம், சேறும் சகதியுமான பாதைகள் என அந்த பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் அங்கே போவதற்கு முன்பு ரொம்ப எளிதாக படப்பிடிப்பு நடக்கும் என்று நான் நினைத்துக் கொண்டு சென்றேன். இவ்வளவு சிரமங்கள் இருக்கும் என எனக்குத் தெரியாது. இதற்கு முந்தைய படங்களில் எனக்கு அப்படி ஏற்பட்டதும் இல்லை.
ஆனாலும் தாமதம் இன்றி குறித்த காலகட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டோம்.
அதுமட்டுமல்ல இயக்குநர் மைலோ படப்பிடிப்புத் தளத்தை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தார்.
அதனால் இந்த சிரமங்கள் பெரிதாகத் தெரியவில்லை. தனது முதல் படத்திலேயே இவ்வளவு சிக்கலான ஒரு கதையை அவர் எடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கு நிறைய தைரியம் வேண்டும். நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். அதனால் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
பெரும்பாலான நேரம் மழை பெய்ததால் ஈரமான உடையுடனே படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்திருப்பேன். குறிப்பாக நான் நடித்த ஆக்சன் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. விமல் ராம்போ மாஸ்டர் இதற்கான பிரத்தியேகமான பயிற்சி அளித்தார். அது மட்டுமல்ல, நான் ஏற்கனவே "மிஸ்டர் எக்ஸ்" படத்திற்காக சண்டைக் காட்சிகளில் பயிற்சியெடுத்து கொஞ்சம் பழகி இருந்தேன். அதனால் "நோவா" படத்தில் நடிக்கும்போது அது எளிதாக இருந்தது.
ஆர்யாவுடன் இணைந்து நான் நடித்துள்ள "மிஸ்டர் எக்ஸ்" படம் வெளியாகி எனக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளது.
"எப்ஐஆர்" படத்திற்குப் பிறகு இயக்குநர் மனு ஆனந்த்தின் டைரக்ஷனில் நான் நடித்த இரண்டாவது படம் . "பியார் பிரேமா காதல்" படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய படங்கள் ஒப்பந்தமானேன். அதில் சில படங்கள் படப்பிடிப்பு முடிந்தும்விட்டன ஜி.வி பிரகாஷுடன் "காதலிக்க யாருமில்லை" என்கிற படத்தில் நடித்தேன். 95 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 2019-ல் ஆரம்பித்த அந்த படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை எனத் தெரியவில்லை. எதனால் இப்படி நடக்கின்றது என்றும் எனக்கு புரியவில்லை. அதனாலேயே ஒரு இடைவெளி விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இதே போலத்தான் "சேஸ்" என்கிற படமும் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. அதே சமயம் "மிஸ்டர் எக்ஸ் வெளியாகிவிட்டது. தற்போது "நோவா" வெளியாக உள்ளது இப்படி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்போது நிச்சயமாக எனக்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் ரைசா வில்சன்.
பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான Son of Thanjai, Xbox Series X|S மற்றும் PS5-இல் வெளிவர உள்ளது.
இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை @madhankarky எழுதுகிறார். எந்திரன், பாகுபலி உட்பட 400 திரைப்படங்களுக்கும் மேலாக ஆயிரம் பாடல்களுக்கு மேலா பணியாற்றிய மதன்கார்க்கிக்கு இது முதல் கேமிங் முயற்சி.
உண்மையான தென்னிந்திய தற்காப்புக் கலை மரபில் வேரூன்றிய, கேமிங்கில் இதுவரை காணப்படாத, நெகிழ்வுத்தன்மை கொண்ட சுருள் வாள் (Surul Vaal) இவ்விளையாட்டில் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகள் உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளுள் ஒன்றான களரிப்பயற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் சென்னையை மையமாகக் கொண்ட 30 பேர் கொண்ட @AyeletStudio குழு. இது தமிழ் மொழியில் ஆங்கில சப்டைட்டிலுடன் உலகெங்கும் வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்களுக்குத் தமிழ் மண், மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும்.
Xbox Series X|S மற்றும் PS5-இல் விரைவில்.
கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார்.
உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.
இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்:
"ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள் உடல் ஆரோக்கியத்திற்காக 35 தடுப்பூசிகளுக்கு மேல் போடுகிறோம். அதுபோல, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் ரசனை வளர்ச்சிக்கும் இந்த சினிமா ரசனை கல்வி ஒரு முக்கியத் தடுப்பூசியாக இருக்கும். இது பிஞ்சு மனங்களிலே நஞ்சு கலக்காமல் தடுத்து, கிராமப்புற எளிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் அசல் சினிமாவை அறிந்து, தர்க்கபூர்வமான சிந்தனையாளர்களாக வளர வழிவகுக்கும். இந்த பரந்த பாரத தேசத்தின் குழந்தை மனங்களில் நல் உணர்வுகளை பிள்ளை பிராயத்திலேயே வளர்க்க சினிமா ரசனை கல்வி பெரிதும் உதவும்" என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். "இத்தகைய முயற்சி இந்த நாட்டுக்கு மிக முக்கியமானது; இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெரிய நன்மையை நாம் செய்வோம்" என்று பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் செய்வதாக நெஞ்சார வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.
மத்திய அரசின் இந்த மகத்தான அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "சினிமா ரசனை கல்வி இந்தியா முழுக்கச் செல்வதற்கு, ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளின் கரங்களால் மாண்புமிகு அமைச்சரின் கரங்களைப் பற்றி நான் என் நன்றியைக் கூறினேன்" என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விரைவில் வெளியாகவுள்ள 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக் மற்றும் 'டெக்சாஸ் டைகர்' படத்தின் இளம் குழுவினர் இணைந்துள்ளது இந்த படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான வியாபாரம் என திரையுலகினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான புரோமோஷன்ஸ் மூலம், படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.
பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் முழுமையான திரையரங்கு அனுபவமாக 'டெக்சாஸ் டைகர்' உருவாகி வருகிறது.
படத்தின் இசை, வெளியீட்டு விவரங்கள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்,
எழுத்து, இயக்கம்: ‘பேமிலி படம்’ புகழ் செல்வகுமார் திருமாறன்,
நடிகர்கள்: ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட்) சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி
'சிங் கீதம்' நான் தயாரிக்க விரும்பிய படம்!
* சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி
- உலகநாயகன் கமல்ஹாசன்
"சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்"
- பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ்
சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன்
- தேவி ஸ்ரீ பிரசாத்
பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான 'சிங் கீதம்' படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். "ராக் ஸ்டார்" தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட 'சிங் கீதம்' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாவது... அனைவருக்கும் வணக்கம். மாயாபஜார் முதல் தற்போதைய "சிங் கீதம்" வரை, சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் இரண்டு கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று 'புஷ்பக விமானம்' என்ற திரைப்படமாக வெளியானது. இப்போது இரண்டாவது கதை 'சிங் கீதம்' என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கிதம் சாரின் கதைகளும் அப்படித்தான். அவை காலத்தால் அழியாதவை. பலர் சிங்கிதம் சாரின் பெயரை 'சங்கீதம்' என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை ' சிங்கீதம் ' என்றே அழைப்பார்கள். இசை அவர் பெயரில்தான் இருக்கிறது. 'கல்கி' படத்தை ஒரு சூடான ஸ்டுடியோவில் படமாக்கினோம். ஆனால் 'புஷ்பக விமானம்' ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஏசி அறையில் படமாக்கப்பட்டது. 'முழுப் படத்தையும் நாங்கள் ஏர் கண்டிஷனிங்கில் படமாக்கினோம்' என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். அதேபோல், அவருடன் நாங்கள் செய்த 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தை மிகவும் ரசித்தோம். சிங்கிதம் சார் இப்போதும் GenZ விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு படம் பேரார்வத்துடன் உருவாக்கப்பட்டால், அது எதிர்பாராத வெற்றியைத் தரும். புஷ்பக விமானம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்தப் பேரார்வத்தை நாம் சிங்கிதம் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் படம் முடிந்த பிறகுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத் தெரியும். புஷ்பக விமானம், மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அத்தகைய உணர்வுடன் வரும் படம் சிங் கீதம். இந்தப் படத்தை நானே தயாரித்தது போல் உணர்கிறேன். நான் ஒரு இணைத் தயாரிப்பாளர் போல் உணர்கிறேன். அது நாகிக்குத் (நாக் அஸ்வின்) தெரியும். சிங்கிதம் சார் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் சொல்லியிருந்தால், நானும் படக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். ஆனால், சிங்கிதம் சார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.”
இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது... அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.
தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது... அனைவருக்கும் வணக்கம். கமல்ஹாசன் சார், சிங்கிதம் சார் மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்று கமல்ஹாசன் சார் தனது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு மைல்கல் அனுபவம். பேரார்வம் பற்றி அவர் கூறியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அஸ்வினி தத் சார் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரை ஒரே வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அவரைப் பற்றிப் பேச, 'ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி' என்ற ஒரு திரைப்படம் போதுமானது. அதேபோல், சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச "புஷ்பக விமானம்" என்ற வார்த்தையே போதும். இந்த மூவருக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவர்கள் எப்போதும் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். 'சிங் கீதம்' படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம். நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். சிங்கிதம் சாரால் இந்தப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. அதுதான் எங்கள் உற்சாகத்திற்குக் காரணம். நான் குறிப்பிட்ட அனைத்து விசித்திரமான யோசனைகளுக்கும் எனக்குப் பெரிதும் ஆதரவளித்த நாகி சாருக்கு நன்றி. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி. அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.
அயன் கூறியதாவது... அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பிரதாப் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த சிங்கிதம் சார், விஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் சார் ஆகியோருக்கு நன்றி. சிங் கீதம் போன்ற ஒரு சிறந்த பரிசை எங்களுக்கு வழங்கிய சிங்கிதம் சாருக்கு சிறப்பு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் என்னை சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுவேன். கமல்ஹாசன் சார் ஒரு ஜாம்பவான். அவர்தான் எங்களுக்கு உத்வேகம். தேவி ஸ்ரீ பிரசாத் சார் எங்கள் படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு மிகவும் புதிய வகையான இசையை வழங்கியுள்ளார். இந்த நல்வாய்ப்பில், அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.
அஹல்யா பம்ரு கூறியதாவது ... அனைவருக்கும் வணக்கம். இத்தனை ஜாம்பவான்களுடன் இந்தப் படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. சிங்கிதம் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. கமல்ஹாசன் சார் கலந்துகொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாக் அஸ்வின் அவர்கள் முன்வந்து, எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்வப்னா சினிமா மற்றும் விஜயந்தி மூவிஸ் நிறுவனங்களுக்கு நன்றி. அவர்களால்தான் எங்கள் கனவு நனவானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.
விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.
“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா












