இசை புயல் AR Rahman இசை அமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான "தென்றலில்" மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த பாடல் Divo Warner South வெளியீடு.


திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட sensational star “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  


இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக "தென்றலில்" உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.


சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை. என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன் ), Chillax (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ் ), sada nannu (keerthy suresh Mahanati), அஞ்சு வண்ண பூவே (AR Rahman, Thug Life) போன்ற superhit film songs பாடியவர் சாருலதா. இவர் ஆஸ்திரேலியா Griffith University-யில் இசையில் PhD & Postdoctoral Fellowship முடித்துள்ளார். இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.

இந்த பாடல் அனைத்து digital streaming platforms-ல் வெளிஇட பட்டுள்ளது. ஒரு அருமையான music video YouTube - ல் release ஆகி உள்ளது. VIDEO LINK: 

புது முகங்கள் மாளவிகா & தவன் நடித்து தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார்.


வெளியீட்டு விவரங்கள்:


பாடல்: தென்றலில்

இசையமைப்பு, பாடலாசிரியர் & பாடகி: Dr சாருலதா மணி

வெளியீட்டுத் தேதி: ஏப்ரல் 30, 2026

Label: டிவோ (Divo) / வார்னர் மியூசிக் சவுத் (Warner Music South)

செய்தித் தொடர்பு: நிகில் முருகன்

 

இயக்குநர் தயாள்  பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!!



விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது .



படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார்.



1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகள் படத்தின் தீவிரம், மர்மம் மற்றும் கதையின் பல அடுக்குகளைக் கொண்ட தன்மையை நுட்பமாக உணர்த்துகின்றன. முதல் பார்வையிலேயே அதன் கரடுமுரடான காட்சித் தன்மை மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், 'பருத்தி வீரன்' சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.



இந்தக் கதாபாத்திர காட்சிகளை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன் அவர்களும் தனது D Pictures நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.



சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளில் இறங்கியுள்ளது. பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் சிந்திக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் குழு


கதை, இயக்கம் & இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன் 


திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் 


ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம் 


எடிட்டிங்: V. பூபதி 


இசை & பின்னணி இசை: தர்புகா சிவா 


பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் 


ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு 


மேக்கப்: குப்புசாமி 


ஆடை வடிவமைப்பு: ரமேஷ் 


தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன் 


மக்கள் தொடர்பு (PRO): ரேகா.

 

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’


புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.


இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம்  ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்று.படத்தின் மற்ற நடிகர்கள், குறிப்பாக நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


படத்தில் உயர்தர தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. ’பிந்தம்’, ’3.33’, ’மாங்கோ முனி’ மற்றும் வரவிருக்கும் இந்தி படத்தில் பணியாற்றிய சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவை கையாண்டு்ள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹர்ஷவர்தன் படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 


’3.33’, ’சிவகுமாரின் சபதம்’ மற்றும் வரவிருக்கும் ’பிளெடி பாலிடிக்ஸ்’படங்களில் பணியாற்றிய தீபக் எஸ் எடிட்டிங்கை மேற்கொள்கிறார். ‘அன்னபூரணி’ மற்றும் பல மலையாள படங்களில் பணியாற்றிய சுகன் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார். காஸ்ட்யூம் டிசைனை ’லோகா’, ’மின்னல் முரளி’ படங்களில் பணியாற்றிய மெல்வி ஜே மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை ’அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.


இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், ”ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் ‘சூப்பர் பி மேன்’. நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன், தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறோம். இந்தக் கதையின் உலகத்தை முதல் பார்வை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தில் இருந்து இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் அடுத்தடுத்து வரவிருக்கிறது” என்றார்.


புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன், ’சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியீடு இந்த சுவாரஸ்யமான பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தில் இருந்து மேலும் பல அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்பக் குழு விவரம்:


பேனர்: பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்,

இயக்குநர்: டி. ஜீவிதா கிஷோர்,

ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன்,

இசையமைப்பாளர்:ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,

எடிட்டர்: தீபக். எஸ்,

ஸ்டண்ட் மாஸ்டர்: சுகன்,

காஸ்ட்யூம் டிசைனர்: மெல்வி. ஜே,

ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் எஸ் நாசர்.

 

எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும்.

இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது.

கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள், எதிர்காலத் தோற்றங்களையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து, இந்த ஆல்பத்தை உயிர்ப்பிக்கின்றன.

இந்த ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் தனித்தனி கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையைத் தாண்டி, ஒவ்வொரு பாடலும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான கதை அனுபவத்தையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் கிறுக்கன்’ என்ற தலைப்புக்கு ஏற்ப, இந்த ஆல்பம் ‘கிறுக்குத்தனம்’ என்பது குழப்பம் அல்ல; அது சுதந்திரமான மற்றும் ஆழமான மனித உணர்வுகளின் வெளிப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக வெளியான ‘காக்கும் வடிவேல்’ தமிழ் இன்டிபெண்டென்ட் சிங்கிள் மற்றும் ‘மெஜந்தா’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘தமிழ் கிறுக்கன்’ பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்டின் மூன்றாவது முயற்சியாகும். இந்த ஆல்பத்தின் மூலம் புதிய குரல்களை முன்னிறுத்தி, திறமையானவர்களை ஊக்குவிக்கும் தனது நோக்கத்தை நிறுவனம் தொடர்ந்து வருகிறது.

அடுத்த சில நாட்களில், இந்த ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களுக்கும் தனித்தனியான அப்டேட்கள் வெளியாக உள்ளன. ஒவ்வொரு பாடலின் கரு, இசை மற்றும் கதை குறித்த அப்டேட்கள் வெளியாகும். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும்.

‘தமிழ் கிறுக்கன்’ ஒரு ஆல்பம் மட்டும் அல்ல… அது ஒரு அனுபவம்!

தனித்துவத்தைக் கொண்டாடும் கலை முயற்சி!

பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் பற்றி:

பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்பது டாக்டர் ஜெ.பி. லீலாராம் தலைமையில், ராஜு கே, சரவணன் பா மற்றும் ரேகா எல் ஆகியோருடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். திரைப்படங்கள், இசை மற்றும் பாட்காஸ்ட் துறைகளில் புதிய தரத்தை உருவாக்கும் நோக்கில் இயங்கி வரும் இந்த நிறுவனம், புதுமை மற்றும் சக்திவாய்ந்த கதை சொல்லலின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்க முனைகிறது.

 

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். 


கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. 


சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது. 


தயாரிப்பாளர் கிதேஷ் வி கூறுகையில், “தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இது திரைக்கதை வலுவையும் எங்கள் குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். விருது வென்றிருந்தாலும் ‘என்ன விலை’ திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.ரசிகர்கள் திரையரங்கில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.


இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், “ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதைதான் ‘என்ன விலை’. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விருதிற்காக என இல்லாமல், இந்த படத்தை தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் உருவாக்கியுள்ளோம். இதனை பெரிய திரையில் படம் பார்க்கும்போது நிச்சயம் பார்வையாளர்களும் உணர்வார்கள்” என்றார்.


இந்தப் படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


’என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!


இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 


இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். 


வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் 'மொத ராத்திரி'.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்து கொண்டதாவது, "பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. 'மொத ராத்திரி' திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, "மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு 'மொத ராத்திரி' திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி" என்றார்.


என்கேஜிங்கான கதை, புது திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என 'மொத ராத்திரி' திரைப்படம் புதுமையான அதேசமயம் எண்டர்டெயின்மெண்ட் கதைக்களத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


நடிகர்கள்: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா, சுமித்ரா தேவி. எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கெளஷிக் கபிலன் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு விவரம்:


ஒளிப்பதிவு: சுரேந்திரன் பரஞ்சோதி,

படத்தொகுப்பு: அசோக் அர்ஜூனன்,

இசை: 'மண்டேலா', 'மாவீரன்' புகழ் பரத் சங்கர்,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,

கலை இயக்குனர்: ஏ. பாலுமகேந்திரா,

பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி

 

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 


நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”


டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.


இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.


நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.


நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.


ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்" என்றார்.

 

மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.


வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.


ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.


ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.


இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.


கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பு  : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்.


 

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் -  EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் -  EXAM'   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 


ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி - இயக்குநர் ஏ. சற்குணம் - துஷாரா விஜயன் - அதிதி பாலன் - ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், '' நாங்கள் 'வா குவாட்டர் கட்டிங் 'எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி' திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, 'பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்' என எடுத்துச் சொன்னோம்


சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ 'எக்ஸாம்' தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌


சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  'வதந்தி' தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும். 


நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார். 


நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார். 


இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். '' என்றார்.


இயக்குநர் காயத்ரி பேசுகையில், '' அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார். 


ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக-  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.


இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார். 


திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌


பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், '' சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம். 


நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது. 


நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌


அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌


அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள். 


எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்'' என்றார்.

 

நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ' இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. 


எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌


ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. 


இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம். 


நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 


நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம். 


இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். 


இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை அதிதி பாலன் பேசுகையில், ''  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌


இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.

 

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grownups )  திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.


படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ்  ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ்  இயக்கத்தில் உருவாகியுள்ளது.


இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:


“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.


டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.


இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”


இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா   சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

Pageviews