காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சமூகத்தின் முக்கிய ஆளுமைகள், மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.



இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்தார்.


இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் பேசியதாவது.., ,


“அனைவருக்கும் மாலை வணக்கம். பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.


நான் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 1994-ல் பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்களைச் சந்தித்தேன். காமராஜரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னை ஜி.கே. மூப்பனார் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.


இந்த திரைப்படம் உருவாக தேவையான அனைத்து உதவிகளையும் மூப்பனார் அவர்கள் செய்தார். ஆனால் அவர் மறைந்ததால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. பின்னர் ஜி.கே. வாசன் அவர்களைச் சந்தித்தேன். ‘அப்பா தொடங்கி வைத்த பணியை முடிக்க வேண்டும்’ என்று கூறி, இந்தப் படத்தை நிறைவு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் அவர் வழங்கினார்.


இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட படத்தை உருவாக்குவது மிகவும் கடினம். நான் காமராஜரைப் பற்றிய முழுமையான திரைப்படத்தை உருவாக்கி, அதை 2004-ல் வெளியிட்டேன். அந்தச் சூழ்நிலையும், அதற்கான வாய்ப்புகளும் இன்று எளிதாக கிடைப்பதில்லை.

அதன் பிறகு மகாத்மா காந்தி பற்றியும், திருக்குறள் பற்றியும் திரைப்படத்தை உருவாக்கினேன். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கும், நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடுவதற்கும் காரணம் காமராஜர்தான் என்று நான் நம்புகிறேன்.


இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் காமராஜரின் சிந்தனைகளே அடிப்படையாக உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகுவதற்கும் அவரது ஆட்சிமுறையும், மக்கள் நலப் பணிகளும் முக்கிய காரணமாக இருந்துள்ளன. அவரது ஆட்சியின் சிறப்புகள் மக்களின் நினைவிலும், பத்திரிகைகளின் பதிவுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


“காமராஜர் படத்திற்கான பணிகள் என் 30-வது வயதிலேயே தொடங்கின. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் படத்துடன் தொடர்புடைய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.


தமிழ்நாடு முதலமைச்சரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும். அந்தப் படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமைகள் உள்ளிட்ட பல உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை. தற்போது அது யூடியூபில் மட்டுமே உள்ளது. எனவே அந்தப் படத்தை அரசு வாங்கி, அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.


‘ஒரு தனிநபர் அரசிடம் இப்படிக் கோரிக்கை வைக்கலாமா?’ என்ற கேள்வி எனக்கே எழுந்தது. ஆனால் இந்த நாட்டுக்காக வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கையை பதிவு செய்வதற்காக என் வாழ்க்கையின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தக் கோரிக்கையை வைக்கும் தகுதி எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். காமராஜருக்கு மக்கள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனின் ஒரு பகுதியாக இந்த திரைப்படம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.


செய்தியாளர்களின் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,


“1967-ல் காமராஜர் முதலமைச்சராக இல்லை. அவர் 1963-லேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இருந்தாலும் புதிய அரசு பொறுப்பேற்றபோது, ‘அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்; உடனே விமர்சிக்க வேண்டாம்’ என்று காமராஜர் கூறியிருந்தார்.


அதேபோல் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ள முதல்வர் விஜய்க்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்காமல் அவசர முடிவுகளுக்கு வரக்கூடாது.


காமராஜரின் நேர்மையான அரசியல், சுத்தமான நிர்வாகம் ஆகியவை இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த நினைவுதான் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் ஒரு உந்துசக்தியாக அமைந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.


காமராஜ் படத்தை அரசு வாங்கும் வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,


“அரசு வாங்குகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே என் நோக்கம். அவரைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தபோதுதான் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காமராஜரின் நேர்மை, மக்கள் சேவை, நல்லாட்சி ஆகியவற்றின் நினைவு மக்களின் மனதில் இன்னும் வலுவாக இருக்கிறது. அந்தச் சிந்தனைகள் தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறேன்.”என்றார் 


மேலும்  நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் குறிப்பாக ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தார்.



இயக்குநர் நடிகர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இப்படி ஒரு சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதலில் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல விஷயத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பெரிய சாதனை. அதற்கு துணைநின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த படத்தைப் பார்க்கும்போது, காமராஜர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, மனித உருவில் வாழ்ந்த தெய்வம் என்ற உணர்வு ஏற்படுகிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படியெல்லாம் நேர்மையாகவும், எளிமையாகவும், மக்களுக்காகவும் வாழ முடியும் என்பதற்கு காமராஜரின் வாழ்க்கை மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு சம்பவமும் மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு கதையைப் பார்ப்பது போல இல்லாமல், ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கையை நேரில் காணும் உணர்வை இந்த படம் தருகிறது.


உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறையில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மனிதன் இவ்வளவு உயர்ந்த பண்புகளுடன் எப்படி வாழ முடியும் என்ற வியப்பே அதற்குக் காரணம். அதுபோல நம் வீட்டிலும், நம் மனதிலும் காமராஜருக்கு இடம் இருக்க வேண்டும்.


அறிவியல் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் என உலகம் எவ்வளவு முன்னேறினாலும், காமராஜர் போன்ற மகத்தான தலைவர்களை நாம் மறந்துவிடக் கூடாது.


இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. பார்வைக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனுக்கான உதவியில் அதிகாரிகள் தாமதம் ஏற்படுவதாகச் சொன்னபோது, ‘மக்களின் தேவையில் தாமதம் இருக்கக் கூடாது’ என்ற மனநிலையுடன் காமராஜர் உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொன்னார். அதுதான் உண்மையான மக்கள் தலைவர் என்பதற்கான அடையாளம்.


இந்த படத்தை ஒரு மனிதன் மாதத்திற்கு ஒருமுறையாவது பார்த்தால், அவர் நிச்சயம் ஒரு நல்ல மனிதராக மாறுவார் என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு வாழ்க்கை மதிப்புகளையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் கற்றுத்தருகிறது.


குறிப்பாக அரசியலில் இருப்பவர்களும், அரசியலுக்கு வர விரும்புபவர்களும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்றால் என்ன என்பதை காமராஜரின் வாழ்க்கை கற்றுத்தருகிறது.


திருக்குறள் இரண்டாம் பாகம் பற்றிய மாதிரி காட்சியும் மிகவும் சிறப்பாக இருந்தது. திருக்குறள் என்பது ஒரு சாதாரண நூல் அல்ல; மதம், மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதகுலத்திற்கே வழங்கப்பட்ட உலகப் பொதுமறை. அந்தப் படைப்பை திரைப்படமாக மக்களிடம் கொண்டு செல்லும் இந்த முயற்சியும் வெற்றியடைய வேண்டும்.


காமராஜ் படத்தை போலவே திருக்குறள் திரைப்படமும் மக்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக அமையும்

இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

 



இந்தச் சாதனை, தமிழ்த் திரைப்படங்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் தரமான கதை சொல்லும் ஆற்றலுக்கு கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரமாகும்.


தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்:


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி

சிறந்த படத்தொகுப்பு – ஆர். கலைவாணன்

சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்


நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.

சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு

சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்

சிறப்பு நடிப்பு பாராட்டு (Special Mention) – நடிகர் தனுஷ்


தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது.


கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த, சி. பிரேம் குமார் இயக்கிய 'மெய்யழகன்' திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) விருதைப் பெற்றது.


தமிழ் குறும்படமான 'ப்ளூ' திரைப்படத்திற்கு, டி. எஸ். ஹரி ஹர சுதன் சிறந்த ஒலி வடிவமைப்பு (Best Sound Design) தேசிய விருதைப் பெற்றார்.


TFAPA-விற்கு பெருமை தருணம்:


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமான (TFAPA) எங்களுக்கு இந்த ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகள் மிகவும் பெருமைக்குரியதாகும். எங்கள் தலைவர் திரு. டி.ஜி. தியாகராஜன் தயாரித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்ற உயரிய தேசிய விருதைப் பெற்றதோடு, அத்திரைப்படத்தின் நாயகன் தனுஷ், தனது சிறப்பான நடிப்பிற்காக Special Mention விருதையும் பெற்றுள்ளார்.


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), தேசிய அளவில் தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. விருதுகளை வென்ற அனைவரும் எதிர்காலத்திலும் மேலும் பல உயரிய சாதனைகளைப் படைக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.


நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)

 

இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான தருணம்.


ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல! நமது திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் அன்றாட வாழ்விலும் அது பிரதிபலிக்கிறது. இப்போது, அந்தப் பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.


ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் டிரெய்லர் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ‘ராமாயணம் – பாரதத்திலிருந்து உலகம் வரை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியத்தில் ‘சங்கல்ப்’ என்பது மகத்தான முயற்சியைத் தொடங்குவதற்கு முன் மனப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் உறுதிமொழியாகும். அதேபோல், இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார செல்வங்களில் ஒன்றான ராமாயணத்தை அதன் உண்மைத்தன்மை, கலைநயம் மற்றும் மரியாதையுடன் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற படக்குழுவின் உறுதியை இந்த நிகழ்வு பிரதிபலித்தது.


இந்தியாவின் பன்முகத்தன்மையை, ராமாயணத்தின் மதிப்புகள் ஒன்றிணைத்திருப்பதற்கான அடையாளமாக, நிகழ்வு நடைபெறும் இடமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ஜூலை 24-ஆம் தேதி உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.


இந்தப் பயணம் டெல்லியில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் தொடங்கியது. ‘ராமாயணம் ஸ்கூல்ஸ் புரோகிராம்’ மூலம் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் ராமாயணத்தின் உயர்ந்த வாழ்க்கை மதிப்புகளை நிகழ்ச்சிகள் மூலம் அறிந்துகொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், இந்தியாவின் 20 நகரங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், படைப்பாளிகள் மற்றும் ரசிகர்கள், உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக டிரெய்லரை பிரத்யேகமாக காணும் வாய்ப்பைப் பெற்றனர்


‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வில், ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்திய சினிமாவின் பல தலைமுறைகளை ஒரே மேடையில் இணைத்த இந்த நிகழ்வு, இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தப்பட்ட மரியாதையாக அமைந்தது.


‘தங்கல்’ திரைப்படம் மூலம் சீனா போன்ற நாடுகளின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளைப் படைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைத் தன் கதைசொல்லல் பாணியால் ஈர்த்த புகழ்பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்தியத் திரையுலகின் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மிகச்சிறந்த கலைஞர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் அருண் கோவில் (மன்னர் தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குனால் கபூர் (இந்திர தேவன்), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), ரவி துபே (லட்சுமணன்) ஆகியோரும் மேடையில் கலந்து கொண்டனர்.


இந்தியா மற்றும் பிற நாடுகளில் தலைமுறை தலைமுறையாக மிகவும் நேசிக்கப்பட்டு, வணங்கப்பட்டு, போற்றப்படும் மரியாதைக்குரிய புருஷோத்தமரான ராமராக சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர், வரலாற்றில் மிகவும் போற்றப்படும் பெண்களில் ஒருவரான அன்னை சீதையாக சாய் பல்லவி மற்றும் தனது மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மூலம் ராமாயணத்தை இணைந்து தயாரிக்கும் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான ராக்கிங் ஸ்டார் யாஷ் வலிமைமிக்க மற்றும் அழிக்க முடியாத ராவணனாக நடித்துள்ளார். நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கும் வகையில், அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சன்னி தியோலும் திடீர் வருகை தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


இந்தியாவின் மிகச்சிறந்த கலைத் திறமையாளர்கள், உலகப்புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் தொலைநோக்குப் பார்வையை இந்த நிகழ்வு பிரதிபலித்தது. மனிதகுலத்தின் மிகப்பழமையான மற்றும் காலத்தால் அழியாத கதைகளில் ஒன்றை, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மையுடன் இந்த படக்குழு உருவாக்கியுள்ளது.


‘ராமாயணம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படைப்பாக்க வடிவமைப்பாள நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் நமது மிகச்சிறந்த இதிகாசம் மட்டுமல்ல! அது நம் வாழ்வின் ஒரு பகுதி. இருளை ஒளி வெல்வது, தீமையை தர்மம் வெல்வது என்ற விஷயத்தை ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்தும் கதைகள் மிகவும் அரிது. ராமாயணம் அத்தகைய மகத்தான காவியம். உலக திரைப்படத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய கதைகள் உலகின் மிகப்பெரிய மேடையில் சொல்லப்பட வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் எப்போதும் எனக்கிருந்தது. இன்று அதற்குத் தேவையான கலைஞர்கள், தொழில்நுட்பம், திறமை மற்றும் உறுதி அனைத்தும் நம்மிடம் உள்ளது. இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல! இந்தியாவின் கலாச்சாரப் பெருமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் புதிய பயணத்தின் தொடக்கம்” என்றார்.


இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. அதை உலகளாவிய கதையாக மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில், ஏற்கனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். எனது பொறுப்பு அதை நேர்மையுடனும், உண்மைத்தன்மையுடனும், மரியாதையுடனும் திரையில் கொண்டு வருவதுதான். திரைக்கதை, நடிப்பு, இசை, கலை இயக்கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொன்றும் இந்த மகத்தான காவியத்திற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது உருவாக்கப்பட்டது.உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதைசொல்லிகளுடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது பெற்ற DNEG, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ’ராமாயணம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.


‘ராமாயணம்’ பாரதத்திலிருந்து உலகை நோக்கிய பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வு நடைபெற்றது. வரும் ஜூலை 24, 2026 அன்று அதிகாரப்பூர்வ டிரெய்லர் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



DNEG பற்றி:


DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் 'சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்' பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது. 


தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.



பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:


திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த 'தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. 


தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட 'ராமாயணம்' கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான 'டிரான்ஸ்மீடியா' உலகத்தையும் உருவாக்கவுள்ளது.


மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:


நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.


Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.
 
இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து   படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 
இந்நிகழ்வினில்

சின்னி ஜெயந்த் பேசியதாவது.., 
 
“முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும்.
 
அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து நடித்தபோது இருந்த அதே உணர்வை, அதர்வாவுடன் நடித்தபோதும் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்காகஇயக்குநருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த அக்கறையுடனும்அழகிய ரசனையுடனும் உருவாக்கியிருக்கிறார்.
 
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். குறிப்பாக கதாநாயகி சிறப்பாக நடித்துள்ளார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.இசையமைப்பாளராகமட்டுமல்ல, நடிகராகவும் திறமையை நிரூபித்த தமனுக்கும் என் பாராட்டுகள். அதேபோல் ‘டேலண்ட் அண்ட்’ நிகழ்ச்சியில் நான் பாராட்டிய சுதாகர் இன்று சிறந்த நடிகராக உயர்ந்திருப்பதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
 
இந்தப் படத்தில் மூத்த கலைஞர்கள், புதிய கலைஞர்கள், யூடியூப்இன்ஃப்ளூயன்சர்கள் என அனைவரையும் ஒரே படத்தில்இணைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனின் முயற்சி பாராட்டுக்குரியது. படம் பார்த்தபோது ஒரு தரமான இந்திப் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இதே கூட்டணி தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான படங்கள் தமிழ்சினிமாவுக்கு கலைரீதியாகமட்டுமல்ல, வணிக ரீதியிலும் பெரிய பலனைத் தரும். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
 
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படம் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட பயணமாக இருந்தது. ஒரு படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் தனித்தனியாகவே பெரிய சவால். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு முதலில் என் வாழ்த்துகள்.
இந்தப் படம் பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வைக்கொடுத்ததற்கு காரணம், இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாகதிரையில் பதிவு செய்ததுதான். ஒரு கேசட், ஒரு கோக் கேன்போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய மைக்ரோ டீட்டெய்லிங் இந்தப் படத்தின் பெரிய பலம். அந்த காட்சிகளை அழகாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார், சாய் சார் ஆகியோரின்பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் தனது பிஸியான வேலையிலும்இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.
 
இசையமைப்பாளர் தமன் சார் பெரும்பாலும் மாஸ் படங்களுக்குஇசையமைப்பவர். ஆனால் ‘ஈரம்’, ‘ஆளவந்தான்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைப் போலவே ‘இதயம் முரளி’ போன்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
 
அதர்வா சார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த 15ஆண்டுகளாக அவருடைய தோற்றம், உடற்தகுதி, நடிப்பு என அனைத்தையும் ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருகிறார். அது எங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறது.நட்டி சார் உடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய அவரது பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன.
 
ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட், சுதாகர் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு தளத்தை ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாகமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்‘ப்ளூப்பர்ஸ்’ வீடியோவையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
 
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சுதாகர் திரையரங்குகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான இடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
 
இந்தப் படத்தை மக்களிடம் இயல்பாகவும் நேர்மையாகவும்கொண்டு சென்ற பத்திரிகை, மீடியா, நியூ மீடியா நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் தொழில்நுட்பக் குழு, விநியோகஸ்தர்கள், Think Music, Netflix, போஸ்ட் புரொடக்ஷன் குழு, உதவி இயக்குநர்கள், மேலாண்மை குழு என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப்படமாகமாற்றிய ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
 
திங் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்துடன்இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு‘முரளி ரீயூனியன்’ என்ற டேக்லைன் வைத்திருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
 
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக சந்தித்தபோது, இந்தப் படத்தின் பாடல்களின் ஸ்கிராட்ச் டிராக்குகளை மட்டும் கேட்க வைத்தார். அப்போது இசையமைப்பாளர் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த ட்யூன்கள் மிகவும் புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பின்னர் இசையமைப்பாளர் தமன் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு இனிய நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் தமனின் முதல் படத்தை  திங் மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
 
இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது பல படங்களில் அறிவிக்கப்படும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. ஆனால் இயக்குநர் ஆகாஷ் ஆரம்பத்திலேயே கொடுத்த வாக்குறுதியின்படிஏழு பாடல்களையும் முழுமையாக படத்தில்பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பலம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான இசை ஆல்பத்தை‘இதயம் முரளி’ மூலம் பார்க்கிறோம். இந்த ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம்செய்யப்படும் தமிழ் திரைப்பட இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
 
இசையமைப்பாளர் தமன் இந்த ஆல்பத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே ஸ்கிராட்ச் டிராக்குகளில் இருந்து பல மாதங்கள் உழைத்து இந்த இசையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பாடலாசிரியர் விவேக் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரும்சிறப்பான வரிகளை எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் ஒரு முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.
 
திங் மியூசிக் நிறுவனம் பல அறிமுக இயக்குநர்களின் முதல் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அறிமுகப் படமும்இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
அதர்வாவுடனும் இது ஒரு இனிய நினைவு. அவரது முதல் திரைப்படமான *‘பாணா காத்தாடி’*யின் இசையையும் திங்மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் இந்தப் படம் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ‘ரீயூனியன்’ உணர்வைக்கொடுக்கிறது.
 
நட்டி சார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அதர்வாவின் நண்பர்களாக நடித்த ரக்ஷன், டிராவிட், ஏஞ்சல் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
 
எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும்.
இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.
 
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது.
 
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம், படக்குழுவின் ஒற்றுமையும் நட்பும்தான். ஒரே வகுப்பில் படித்த நான்கு நண்பர்கள்—இயக்குநர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநர், இணை எழுத்தாளர்—அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு தளத்திலும், கதை விவாதங்களிலும் ஒரு அற்புதமான பாஸிடிவ்  ஆற்றல் இருந்தது.
 
ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
 
பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா பேசியதவது.., 
‘இதயம் முரளி’ போன்ற அழகான திரைப்படத்திலும், அதில் இடம்பெற்ற அற்புதமான பாடலிலும் எனக்கு வாய்ப்பு வழங்கியஇயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப்பயணத்தில் எப்போதும் உறுதுணையாக இருந்த திங் மியூசிக்நிறுவனத்திற்கும், மகேசன் மற்றும் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி.
 
இசையமைப்பாளர் தமன் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் இனிமையான அனுபவம். அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, மிகவும் ஜாலியாக அண்ணன் போல பழகுபவர். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக ‘வாமா வாமா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இதேபோல் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.”
 
 
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
 
ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்.  தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி.  ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.
 
இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
 
இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
 
அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில்பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.
 
படத்தின் நாயகிகள்  இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம்,  நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
 
நண்பர்கள் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருந்தனர். நட்டி சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். தொழில்நுட்பக் குழு, தயாரிப்புக் குழு என அனைவருடனும்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கும் உணர்வோடு இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது.., 
 
“சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.
 
மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.
 
இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர்மூலம்தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.  
 
உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்குஇசையமைப்பாளராகத்தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.
 
நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையேதாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.
 
அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.
 
இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
 
‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
 
நடிகர் மதன் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தின்தலைப்பே இதில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. ஏனெனில் முரளி சார் நடித்த ‘இதயம்’ திரைப்படம் இன்றும் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படம். குறிப்பாக 80-களில்வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தமானது. அந்த உணர்வை நினைவூட்டும் தலைப்பைக்கொண்ட இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
 
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் ஒளிப்பதிவாளர், அதர்வா சார் மற்றும் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
 
நடிகர் நட்டி பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று – நன்றி. முதலில், இந்த வாய்ப்பைவழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்குஎன் மனமார்ந்த நன்றி. அதேபோல் மனோஜ் சார், அதர்வா சார், ப்ரீத்தி முகுந்தன், கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர், டிராவிட்உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டகதாபாத்திரத்தை அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனால்தான் படம் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. தயாரிப்புக் குழுவில் கிருஷ்ணா சார், ஜோஜோசார் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், முழுக் குழுவும் ஒரே உற்சாகத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும்பணியாற்றியதுதான். அந்தச் சூழல்தான் படத்திலும்பிரதிபலித்துள்ளது. எனவே, இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளரும்இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனுடன்எனக்கு இருக்கும் நட்புதான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. அவரது திருமண விருந்தாக இருந்தாலும், ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்றதிருமண விருந்தாக இருந்தாலும், இன்றைய நன்றி அறிவிப்பு விழாவின் விருந்தாகஇருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை நினைவில் வைத்திருப்பது அந்த நட்பின்வெளிப்பாடுதான். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
 
‘இதயம் முரளி’ மிகவும் அழகான திரைப்படம். அறிமுக இயக்குநராகவே ஆகாஷ் தனது திறமையை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து இயக்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படம் எனக்கு பல நல்ல நண்பர்களையும் கொடுத்திருக்கிறது. அதர்வாபிரதருக்கு இன்னும் பல சிறந்த படங்கள் அமைய வேண்டும். அவர் மேலும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
நட்டி அண்ணா மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகுல், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும் ஒரு சிறிய பங்காக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
 
நடிகை எஸ்.எஸ்.வி பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் பேசுவதில்கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த வாய்ப்பைபயன்படுத்தி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநரும்தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டான் பிக்சர்ஸ்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி.  இந்தப் படத்தில் அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ரக்ஷன், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும்திரையைப் பகிர்ந்து நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், அதற்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி.”
 
நடிகை மோனிஷா பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் நன்றி. ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக் குழுவினருக்கும்என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த குழுக்களில் இதுவும் ஒன்று.
 
அதர்வா, ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின், டிராவிட், ரக்ஷன், நட்டி சார் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. எனக்கு அவர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் இருந்தன. படத்தில் நடித்தஅனைவரும் மிகவும் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்தனர். இதுபோன்ற ஒரு அருமையான குழுவுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஏற்கனவே ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை திரையரங்கில் சென்று பாருங்கள். இது அனைவரும் ரசிக்கக்கூடிய அழகான திரைப்படம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
 
நடிகர், உதவி இயக்குநர் மற்றும் வசனஎழுத்தாளர் டிராவிட் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் என் வணக்கம். முதன்முறையாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாக இந்த மேடையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணமான ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும்என் மனமார்ந்த நன்றி.
 
இந்தக் கதையில் நடிக்க வந்தபோது, இந்தக் கதாபாத்திரம்எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய முதல் வெளியான திரைப்படமான ‘டியூட்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் ‘இதயம் முரளி’ படமும் தொடங்கியது. யூடியூப்பில் மட்டும் இயங்கி வந்த எனக்கு, சினிமாவில் ஒரு இடம் வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ போன்ற படங்கள்நிறைவேற்றின. இன்று என் வாழ்க்கையை ‘இதயம் முரளிக்கு முன், இதயம் முரளிக்கு பின்’ என்று கூட பிரித்துப் பார்க்கலாம். முன்பு ஒரு யூடியூபராக இருந்த நான், இன்று சினிமாக்காரன் என்று அழைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
 
இந்தப் படத்தில் நாங்கள் நண்பர்களாக நடித்தோம். ஆனால் உண்மையில் யாரும் நடித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அனைவரும் நிஜ வாழ்க்கை நண்பர்களாகவே வாழ்ந்தோம். அதர்வா முதல் நாளிலிருந்தே எங்களுக்கு அந்த நெருக்கத்தையும்சுதந்திரத்தையும் கொடுத்தார். ப்ரீத்தி, கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர் என அனைவரும் ஒரு குடும்பமாகவே இருந்தோம்.
 
நட்டி சார் வந்தாலே எங்களை கலாய்ப்பார். மனோஜ் சார்தான்எங்களுக்கு உண்மையான ‘ஹெட்மாஸ்டர்’. அவர் வந்தாலே எல்லாரும் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம். அதே நேரத்தில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எங்களை குழந்தைகளைப் போல கவனித்துக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி.
 
சாய் பிரதரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். தமன்அண்ணாவுடன் பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவம். அவர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் மனிதர். எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல், ‘பண்ணிடலாம்’ என்று நம்பிக்கை கொடுப்பார். அவருடைய அந்த இயல்பே இந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திலும் பிரதிபலித்துள்ளது.
 
மாதம்பட்டி ரங்கராஜ் சார் சிறிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தாலும், அது மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் பகத் சார் சிறிய தோற்றத்தில் கூட எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
 
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்னை நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும் நம்பி பொறுப்பு கொடுத்தார். சில காட்சிகளில் எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினார். அந்த நம்பிக்கையை எப்போதும் மறக்க மாட்டேன்.
 
இந்தப் படத்தின் முதன்மை வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன்சார், இணை இயக்குநர் பிரவீன், இணை இயக்குநர் செந்தில் அண்ணா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்னை இந்தப் படத்தில் உதவி இயக்குநராக இணைத்து, நடிகராக அறிமுகப்படுத்தி, வசன எழுத்திலும் பங்களிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

நடிகர் ரக்ஷன் பேசியதாவது.., 
 
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் தொகுப்பாளராகமேடையில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இப்படி விருந்தினராக வந்து பேசும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான்இருக்கும்.
 
‘இதயம் முரளி’ பற்றி சொல்ல வேண்டுமென்றால், நெருங்கிய நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இந்தப் படம் அதற்கு நேர்மாறானது. இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.
 
நான் மனிதர்களை மிகவும் மதிப்பவன். அந்த வகையில், இந்தப்படம் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த அழகான நட்புகள்தான். முதலில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய இரவுதான் அவர் என்னை தொடர்புகொண்டு பேசினார். அடுத்த நாள் காலை நேராக படப்பிடிப்பில் இணைந்தேன். ஆரம்பத்தில் குழு எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருந்தது. ஆனால் முழுக் குழுவும் மிகவும் ஜாலியாகவும், அன்பாகவும் பழகியதால் அந்த பயம் உடனே மறைந்துவிட்டது.
 
அதர்வா பிரதருடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. ப்ரீத்தி, காயத்ரி உள்ளிட்ட அனைவருடனும்பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில்தொடர்ந்து புதிய நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுபோல படப்பிடிப்பு தளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தது. நிஹாரிகா, ஜுனைதா மேம், ஏஞ்சல் என அனைவரும் அந்த மகிழ்ச்சியான சூழலின் ஒரு பகுதியாக இருந்தார்கள்.
 
ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எடுத்த ஃபிரேமில் ஒரு மூலையிலாவது நான் இடம்பெற்றிருப்பதே எனக்கு பெரிய சந்தோஷம். அதற்காக அவருக்கு நன்றி.
 
இணை இயக்குநர்கள் செந்தில் சார், பிரவீன் சார், கிரிஷ், மேடிமற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் என் நன்றி. தயாரிப்புக் குழுவினருக்கும், பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் அனைத்து துறைகளிலும் வேலை செய்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
 
இயக்குநர் ஆகாஷ் மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும்படப்பிடிப்பை வழிநடத்தினார். ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல எங்களை சுதந்திரமாக நடிக்கவிட்டு, பின்னர் எடிட்டிங்கில்அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்திருந்தார். தமன் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய இசை படத்திற்கு தனி ஆற்றலைக் கொடுத்திருக்கிறது. நான் திரையில்கொஞ்சம் குறைவாகப் பேசியிருந்தால், அல்லது செட்டில்அதிகமாகப் பேசியிருந்தால், அதற்கும் தமன் சார்தான் காரணம். அவர் எப்போதும் உற்சாகமாக இருந்தார்.
 
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து, ஆதரவு அளித்து, என்னை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள் தான். ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும் அதே ஆதரவை வழங்கியதற்கு நன்றி. இந்தப்படக்குழுவினரையும், ‘இதயம் முரளி’ திரைப்படத்தையும் நான் எப்போதும் மனதார நேசிப்பேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சுதாகர் பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். முதலில், ‘இதயம் முரளி’ போன்ற அருமையான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் காமெடி கதாபாத்திரங்களை மட்டுமா செய்ய வேண்டும், இல்லையா வேறு விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.

நான் இயல்பாகவே மிகவும் அமைதியானவன். அதிகம் பேச மாட்டேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் என்னை மிகவும் இயல்பாக பழக வைத்து, ஒரு நண்பர்கள் குழுவின் அங்கமாக உணர வைத்தார்கள். அதற்காக முழு படக்குழுவிற்கும் என் நன்றி.

கயாது, ப்ரீத்தி, சாய், ஜோஜோ, மனோஜ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ஒரு காமெடி காட்சியை எழுதுவது ஒரு விஷயம்; அதை சரியாக படமாக்கி, எடிட்டிங் மூலம் இன்னும் சிறப்பாக மாற்றுவது இன்னொரு விஷயம். மனோஜ் சார், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். என் காட்சிகள் எதுவும் கட் ஆகாமல் பார்த்துக்கொண்ட இயக்குநருக்கு நன்றி. 

குறிப்பாக டிராவிட் பற்றி சொல்ல வேண்டும். அவன் மிகவும் உணர்ச்சியோடு பேசினான். நாங்களும் அதே அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்தோம். இந்த ஆண்டு ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ ஆகிய படங்கள் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. இந்தப் படத்தில் எனது நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக வர டிராவிட் எழுதிய வசனங்களும், எங்கள் இருவரின் கலந்துரையாடல்களும் பெரிய காரணம்.

சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும்போதுதான் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு முந்தைய நாள் கூட எனக்கு தூக்கம் வராது. ஆனால் காமெடி காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன்.

நன்றி சொல்ல வேண்டிய பலரின் பெயர்களை தவறவிட்டிருக்கலாம். ரக்ஷன், ஏஞ்சலின், மாதம்பட்டி ரங்கராஜ், நட்டி சார், ரமணகிரிவாசன் சார், சின்னி ஜெயந்த் சார் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சின்னி ஜெயந்த் சார் பல வருடங்களுக்கு முன்பே, ‘நீங்கள் சினிமாவுக்கு வந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைவீர்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தியவர். இன்று அது நினைவுக்கு வருகிறது.

ரமணகிரிவாசன் சாருடன் நடந்த கதை விவாதங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. சில நாட்கள் விவாதங்களில் மட்டும் இருந்தால்கூட நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம், ஒரு படத்தில் நடித்த அனுபவமாக இல்லாமல், ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படம் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் விரைவில் அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றி.”


நடிகை கயாது லோகர் பேசியதாவது.., 

‘இதயம் முரளி’ தான் நான் முதலில் ஒப்பந்தமான தமிழ் திரைப்படம். அதனால் இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கும் எனக்கும் நீங்கள் அளித்த அன்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும், மனதை வருடும் வகையிலும் இருக்கிறது.

‘அமுதா’ கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தின் அப்பாவித்தனம், மன வலிமை, உணர்வுகள் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நம்பி என்னிடம் ஒப்படைத்த இயக்குநருக்கும், முழு படக்குழுவிற்கும் என் நன்றி. ஆகாஷ் இந்தக் கதையை என்னிடம் முதலில் பகிர்ந்தபோது, ‘சாம்’ கதாபாத்திரத்தை நான் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். அதேபோல், ப்ரீத்தியும் ‘அமுதா’ கதாபாத்திரத்திற்கான லுக் டெஸ்ட் செய்திருந்தார். இறுதியில் எல்லாம் சரியாக அமைந்து, ‘அமுதா’ எனக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் என்னுள் இருக்கும் நடிகையை பலரும் பார்த்து பாராட்டியது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எங்களை திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். சாய் மற்றும் முழு ஒளிப்பதிவுக் குழுவிற்கும் என் நன்றி. இந்தப் படத்தின் காட்சியமைப்பும், இசையும், தொழில்நுட்ப தரமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

தமன் சாரின் இசை இந்தப் படத்தை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. முழு ஆல்பத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன். அது 2000-களின் இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. எனக்கு அவர் பரிசாக வழங்கிய பியானோவிற்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தில் இணைந்து நடித்த அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ஏஞ்சலின், ரக்ஷன், நட்டி சார், மோனிஷா, யஷஸ்ரீ மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன். ப்ரீத்தி எனக்கு இந்தத் துறையில் மிகவும் நெருக்கமான தோழி. எப்போதும் நான் சாய்ந்து நிற்கக்கூடிய ஒருவராக இருந்ததற்கு நன்றி. நீ இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருந்தாய்.

அதர்வாவுடன் திரையில் அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும், நாங்கள் உருவாக்க முயன்ற உணர்வுகள் ரசிகர்களிடம் சென்றடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தொழில்மீதான அர்ப்பணிப்பே திரையில் பிரதிபலித்திருக்கிறது. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நாங்கள் உண்மையான உணர்வுகளோடும், முழு அர்ப்பணிப்போடும் பணியாற்றினோம். அதைத்தான் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்தப் படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறது. ஏற்கனவே படம் பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை திரையரங்கில் சென்று பாருங்கள்.

இந்த வெற்றிக்காக உழைத்த ஒளிப்பதிவுக் குழு, உதவி இயக்குநர்கள், லைட்மேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த வெற்றியை நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவோம். மீண்டும் ஒருமுறை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.”


நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் பயணம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாள் ஒன்றாக உழைத்த இந்தப் பயணத்தை இப்போது ஒரு மேடையில் நின்று நினைவுகூர்ந்து, அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

முதலில், என்னுடைய மிகப்பெரிய நன்றி இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குத்தான். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. கதை கேட்ட முதல் நொடியிலேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாம்’ கதாபாத்திரத்தையும், ‘அமுதா’ கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். இரண்டு கதாபாத்திரங்களுமே மிக அழகாக எழுதப்பட்டிருந்ததால் அது எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் படம் முடிந்து திரையில் பார்த்தபோது, ஒரு நடிகையாக இல்லாமல், ஒரு ரசிகையாக நான் அந்தப் படத்தை ரசித்தேன். இவ்வளவு அழகான, மனதை வருடும் ஒரு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய திருப்தியாக இருந்தது. இந்த அருமையான படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆகாஷ் சார் தயாரிப்பாளராக இருந்தாலும், அவருடைய உண்மையான ஆர்வம் இயக்கத்தில்தான் இருக்கிறது என்பதை இந்தப் படம் முழுவதும் உணர முடிகிறது. கதையில் அவர் வைத்திருந்த சிறிய சிறிய விவரங்களே அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. முதல் படத்திலேயே இவ்வளவு அழகான படைப்பை கொடுத்ததற்கு அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார் மற்றும் சாய் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பின் போது ஒரு நாள் மனோஜ் சாரிடம், ‘எப்படி சார் ஒவ்வொரு ஃபிரேமையும் ஓவியம் போல இவ்வளவு அழகாக உருவாக்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒவ்வொரு காட்சியும் மிகவும் இயல்பாக இருந்தாலும், அதே நேரத்தில் கவிதை போலவும் இருந்தது. இந்தப் படத்தில் காட்சிகளின் மூலமே பல உணர்வுகளையும் கதையையும் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியதற்கு நன்றி.

இந்தப் படத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றி. உங்களால் இந்தப் படப்பிடிப்பு ஒரு வேலை போல இல்லாமல், குடும்பமாக இருந்த அனுபவமாக மாறியது. ஏஞ்சலின், நீ மிகவும் இனிமையானவரும் திறமையானவரும். உன் வயதைக் காட்டிலும் மிகவும் முதிர்ச்சியாக சிந்திக்கிறாய். உன் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

டிராவிட், இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறாய். படப்பிடிப்பின்போதே நீ மிகவும் உயரம் செல்வாய் என்று எனக்குத் தெரிந்தது. உன்னுடைய எதிர்காலப் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரக்ஷன், ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் போகப் போக என்னை மிகவும் அன்பாக உங்களுடைய குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள். அதற்கு நன்றி.

சுதாகர், நீங்கள் மிகவும் திறமையான கலைஞர். உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் பார்க்கும்போது மற்ற ரசிகர்களைப் போல நானும் உங்கள் கதாபாத்திரத்திற்குத்தான் அதிகமாக உற்சாகப்பட்டேன். இந்தப் படத்தில் உங்கள் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. நீங்கள் இன்னும் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்டி சார், குறைந்த திரை நேரத்திலேயே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நடித்திருக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

கயாது, நீ மிகவும் அன்பானவரும் திறமையான நடிகையும்தான். ‘அமுதா’ கதாபாத்திரம் உனக்குக் கிடைத்தது மிகவும் சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். அதை மிக அழகாகச் செய்திருக்கிறாய். எப்போதும் என்னிடம் அன்பாக நடந்துகொண்டதற்கு நன்றி. வெளியில் பலர் எங்களை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மனதார வாழ்த்துபவர்கள்தான். நீ இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

அதர்வா… நான் சந்தித்த நடிகர்களில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். எப்போதும் மிகவும் பணிவாகவும், அனைவரையும் சமமாக மதித்து நடந்து கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை ஒருபோதும் உணர்த்தாமல், ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்தினீர்கள். குறிப்பாக படத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். அந்த நட்பு நீண்ட காலம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

தமன் சார் இசை இந்தப் படத்தின் ஆன்மா. எங்கள் படத்தின் முழு ஆல்பமும் தொடர்ந்து என் பிளேலிஸ்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் படப்பிடிப்பு நாட்களை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமான திரைப்படம். இதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.”

நடிகர் அதர்வா முரளி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.

‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணம்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், விக்ரம் மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் என் நன்றி. இன்றைய காலத்தில் இவ்வளவு வண்ணமயமான, மனதை வருடும், இலகுவான காதல் கதையை தயாரிக்க முன்வருவது மிகப்பெரிய விஷயம். அதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கும் என் நன்றி.

இப்படிப்பட்ட காதல் கதைக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகாஷிடம் ‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் யார்?’ என்று கேட்டபோது, ‘மனோஜ் பரமஹம்சா சார் தான்’ என்று சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு பாடலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் முழு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ‘எல்லோரையும் லட்டு மாதிரி அழகாகக் காட்டுகிறேன்’ என்று அவர் சொன்னது போலவே, திரையில் அனைவரையும் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் சாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. சில படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே தயாராகச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. காலியான மனதோடு செட்டுக்கு செல்வோம். அங்கேயே காட்சிகள் பற்றி பேசுவோம். சில சமயங்களில் வசனங்களையே மாற்றி, புதிதாக யோசித்து நடித்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் பல இடங்களில் தன்னிச்சையாகச் செய்த விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்த அளவுக்கு அதிகமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக அழகாக வடிவமைத்தவர் எடிட்டர் பிரதீப். உண்மையாகவே இந்தப் படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான திரைப்படமாக உருவானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதை அழகாகத் தொகுத்ததற்காக பிரதீப்புக்கு என் மனமார்ந்த நன்றி.

வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எழுதிய ஒவ்வொரு வசனமும் மிகச் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த பல வசனங்களும் அவருடைய எழுத்துதான்.

திங்க் மியூசிக் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி. ஒரு நல்ல படத்தை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் இசைப் பயணத்திலும் அவர் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் படப்பிடிப்பு முன்னேறியபோது ஆறாவது, ஏழாவது, எட்டாவது பாடல்களும் இணைந்தன. முதலில் ‘இதயா’ பாடலைக் கேட்டபோது, அதுதான் இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் ‘இதயமே இதயமே’ பாடல் வந்தபோது அது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.

தமன் சார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் அவர் இந்தப் படத்தில் நடித்தும் இருந்தார். இவ்வளவு பிஸியான இசையமைப்பாளராக இருந்தும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார்.

இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் படப்பிடிப்புக் காலத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு படங்களிலும் நடித்து வந்தோம். ஆனால் எப்போது இந்தப் படம் குறித்து சந்தேகம் வந்தாலும் நான் தமன் சாரிடமே சென்று கேட்பேன். அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார் – ‘ப்ளாக்பஸ்டர்… ப்ளாக்பஸ்டர்!’ என்று. ஒரு கட்டத்தில் அவருடைய அந்த நம்பிக்கையைத்தான் நாங்களும் நம்ப ஆரம்பித்தோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுத்தார். அதற்காக தமன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.”

“இந்தப் படத்தில் பணியாற்றிய முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. கிரிஷ், பிரவீன் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.ஒரு படம் முடிந்த பிறகு, ‘இவ்வளவு சீக்கிரம் இந்தப் பயணம் முடிந்துவிட்டதே’ என்ற ஒரு வெறுமை உணர்வு எல்லோருக்கும் இருக்கும். ‘இதயம் முரளி’ முடிந்தபோது அந்த உணர்வு இந்தப் படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

எங்களுக்காக ‘இதயம் முரளி’ என்று ஒரு வாட்ஸ்அப் குழு இருக்கிறது. அதில் ஆகாஷ் ஒரு நாள், ‘படத்தில் இதயாவும் ஜுஜ்ஜுவும் பேசுவது போல, மாலை ஐந்து மணிக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை; இதயம் முரளி முடிந்துவிட்டதே’ என்று ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அந்த உணர்வை நாங்கள் அனைவரும் பகிர்ந்துகொண்டோம்.

இன்று இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் கடைசி நாள். அதனால் இந்தக் குழுவை இனிமேல் இப்படி அடிக்கடி சந்திக்க முடியாது என்ற எண்ணமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்கள் குழு கிடைத்தது. டிராவிட், சுதாகர், ரக்ஷன், ஏஞ்சலின், கயாது, ப்ரீத்தி, நிஹாரிகா என அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் தனியாக ஒரு ‘பாய்ஸ் குரூப்’ கூட உருவானது. சில நேரங்களில் அவர்களுக்கு படப்பிடிப்பே இருக்காது. இருந்தாலும் செட்டுக்கு வந்துவிடுவார்கள். ரக்ஷனிடம் ஒருநாள், ‘இன்று உங்களுக்கு காட்சி இல்லையே?’ என்று கேட்டபோது, ‘லஞ்ச் சாப்பிடத்தான் வந்தேன்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்தப் படப்பிடிப்பு தளம் அனைவருக்கும் சொந்த வீட்டைப் போல மாறிவிட்டது. பல படங்களில் இப்படிப்பட்ட சூழல் அமைவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவோம். ஆரம்பத்தில் அது ஒரு கட்டாயம் போலத் தோன்றினாலும், போகப் போக அது ஒரு குடும்ப உணர்வாக மாறிவிட்டது. திரையில் தெரியும் அந்த நட்புக்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அந்தச் சிறிய சிறிய தருணங்கள்தான். இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் நான் பலமுறை கேட்டேன். ஏனெனில் ‘இதயம்’ என்றால் அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் ஒரு இலகுவான காதல் கதையைச் சொல்கிறோம். அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ஆகாஷ் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்றார். இன்று அவர் சொன்னதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்ததால்தான் எங்களுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராக தனது கனவுக்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளையும், பல சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது.., 

“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி.
அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.

தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.

சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.

எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு.

உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.

என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.

இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.”

இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. 


கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, இந்த சீரிஸ் தனது தரமான படைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சாம் சி எஸ் இசையில் பின்னணி இசைக்கு எப்போதுமே தனி அடையாளம் உண்டு. ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம், வலி அல்லது உற்சாகத்தை வெறும் இசையின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் அவரை சமகால இந்திய இசையமைப்பாளர்களில் தனித்துவமாக நிறுத்துகிறது. குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் கதைகளுக்கு அவர் அமைக்கும் இசை, கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது.

‘சுழல் 2’ சீரிஸில் கிராமத்து பின்னணி, மர்மம், குடும்ப உறவுகள் மற்றும் குற்ற விசாரணை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் சாம் சி எஸ் அமைத்த இசை, அந்த சீரிஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற இசை வடிவமைப்பு, பார்வையாளர்களை கதைக்குள் முழுமையாக இழுத்துச் சென்றது. அதற்கான அங்கீகாரமாகவே இந்த தேசிய விருது பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களோ, வெப் சீரிஸ்களோ என எந்த வடிவமாக இருந்தாலும், கதைக்கு ஏற்ற இசையை வழங்குவதே தனது பாணி என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியிலான இசையையும், கலைநயமிக்க பின்னணி இசையையும் சமநிலையுடன் வழங்கும் அவரது திறமை, அவரை இயக்குநர்களின் விருப்பமான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

தொடர்ச்சியாக தேசிய அளவிலான அங்கீகாரங்களையும், மொழிகளைத் தாண்டிய படைப்புகளையும், வித்தியாசமான இசை முயற்சிகளையும் பதிவு செய்து வரும் சாம் சி எஸ், இந்திய திரையுலகின் மிகவும் பிஸியான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ சீரிஸிற்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க அத்தியாயமாக அமைந்துள்ளது.

🔗 https://www.instagram.com/p/Da8EwILt5oL/?igsh=bTV2aHk1a200Yzdu

_*Three Generations. Seven Decades. One Enduring Legacy of National Recognition.*_

The 72nd National Film Awards have added another glorious chapter to the illustrious journey of Sathya Jyothi Films, as Captain Miller has earned two prestigious honours on the national stage. The film has been recognised with the award for Best Feature Film Promoting National, Social and Environmental Values, while Dhanush has been honoured with a Special Mention for his powerful performance, making it a proud and memorable occasion for everyone associated with the film.

For Sathya Jyothi Films, these accolades represent far more than a moment of celebration. They reaffirm a cinematic legacy built over seven decades, spanning three generations of filmmakers who have consistently championed meaningful storytelling, artistic excellence, and socially relevant cinema.

The foundation of this remarkable journey dates back to the late 1950s with Venus T. Govindarajan, whose landmark production Kalyana Parisu (1959) earned the National Award for Best Feature Film in Tamil. The family's proud association with National Award-winning cinema continued with R.M. Veerappan's Rickshawkaran (1972), which brought Makkal Thilagam M.G. Ramachandran the National Award for Best Actor, marking another historic milestone in the family's contribution to Indian cinema.

Carrying this rich heritage forward, T.G. Thyagarajan transformed Sathya Jyothi Films into one of Tamil cinema's most respected production banners. His critically acclaimed production Moondram Pirai went on to win three National Film Awards, including the first National Award of Kamal Haasan's illustrious career, reinforcing the banner's unwavering commitment to producing cinema of exceptional artistic merit.

Today, the third generation, Sendhil Thyagarajan and Arjun Thyagarajan, continues to uphold that enduring legacy with the same passion and vision. Their productions have consistently earned both audience appreciation and critical acclaim. Viswasam received the National Award for Best Music Direction, and now Captain Miller has further strengthened the banner's remarkable legacy by securing two honours at the 72nd National Film Awards, following its international recognition at the UK National Film Awards in 2024.

Sathya Jyothi Films extends its heartfelt gratitude to director Arun Matheswaran, actor Dhanush, the entire cast, technicians, creative collaborators, and every member of the Captain Miller team whose unconditional dedication and collective vision made this achievement possible. The production house also congratulates Dhanush on receiving the Special Mention, an honour that further celebrates the passion and commitment that went into bringing this ambitious story to life.

For over seven decades, Sathya Jyothi Films has remained steadfast in its pursuit of cinema that entertains, inspires, and creates a lasting impact on society. The National recognition for Captain Miller is not merely another accolade for the banner, but a continuation of a legacy defined by excellence, integrity, and a deep commitment to storytelling that transcends generations.

As Sathya Jyothi Films looks ahead to the future, these twin National honours stand as both a celebration of its remarkable journey and an inspiration to continue creating films that reflect with audiences while enriching the beauty of Indian cinema.

சென்னை, 18 ஜூலை 2026
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. 
நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி. 

கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது:

* சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி
* சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார்
* சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவாணன்

இந்த விருதுகள், அமரன் திரைப்படத்தை ஒரு மகத்தான காவியமாக மாற்றிய மூன்று கலைஞர்களின் அசாத்திய திறமையைக் கொண்டாடுகின்றன. 

அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாய்திரு நாட்டிற்காகத் தீரத்துடன் போராடிய இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வீரர்களில் ஒருவருக்குச் செலுத்தும் மரியாதையாக இப்படம் அமைந்துள்ளது. இதன் உணர்வுப்பூர்வமான கதை, வீரத்தையும் தியாகத்தையும் காட்டிய விதம் மற்றும் தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றுக்காக இது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

திரு. கமல் ஹாசன் கூறியது:

"சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இது. சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் ஆர். கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகள். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

டர்மெரிக் மீடியா தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் கூறியது:

"2016-ல், விஜய் டிவிக்காக 'முதல் மரியாதை – சல்யூட் டூ த இந்தியன் ஆர்மி' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அவரது வீரம், திருமதி. இந்துவின் அமைதியான மனவலிமை மற்றும் நம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் செய்த தியாகங்கள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை.

ராணுவச் சீருடைக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும், முக்கியமாக ஒவ்வொரு குழந்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கதையை 'அமரன்' படம் மூலம் சொல்ல 2024-ல் முடிவு செய்தோம்.

அமரன் திரைப்படம் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரமான மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.

சில பயணங்கள் திரைப்படமாகத் தொடங்கும். ஆனால் சில பயணங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறும். அமரன் அப்படிப்பட்ட ஒரு பயணம். அமரன் குழுவை நினைத்து மிகவும் நெகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், பெருமையாகவும் இருக்கிறது.” 


நேற்று அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகள், சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த இந்தியப் படங்களுள் ஒன்றாக மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவமும், கலைநயமும் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

மலைக்கிராமத்தில் வாழும் பழங்குடியினச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆசை இருக்கிறது. ஆனால், அவளது கிராமத்தில் வறுமை மற்றும் அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. தன் கிராமத்திற்கே ஒரு அரசுப் பள்ளியைக் கொண்டு வர வேண்டும் என்ற இலட்சியத்தோடு, மாவட்ட ஆட்சியர் முத்துவேலை (அருள்நிதி) சந்திக்க அவள் முயற்சிக்கிறாள். அவளது போராட்டத்திற்கு ஆட்சியர் எவ்வாறு துணை நிற்கிறார், கல்வி அவளைச் சென்றடைந்ததா என்பதே படத்தின் கதை.


அருள்நிதி வழக்கமான த்ரில்லர் பாணியில் இருந்து விலகி, அமைதியான மற்றும் நேர்மையான கலெக்டராக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், மலைவாழ் மக்களின் உற்ற தோழனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரவின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், மலைவாழ் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார். படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா, கல்வி கற்கத் துடிக்கும் சிறுமியாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காளி வெங்கட், ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.


ஜி. வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும், எம். சுகுமாரின் ஒளிப்பதிவும் மலைக்கிராமத்தின் அழகையும் வலியையும் நேர்த்தியாகக் கடத்தியுள்ளன.


உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ள இயக்குநர் கணேஷ் விநாயகன், கல்வியின் அவசியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலுவாகப் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் கருணை, துணிச்சல், பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

 

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம், 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த நடிகர் - முதன்மை கதாபாத்திரம் – மம்மூட்டி, சிறந்த ஒளிப்பதிவு – ஷெஹ்னாத் ஜலால் என்ற இரண்டு முக்கியமான விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.


கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மம்மூட்டி அவர்களுக்கும், திரைப்படத்தின் கலைநயத்தையும் காட்சியமைப்பையும் தனித்துவமாக உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ஷெஹ்னாத் ஜலால் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் 72வது தேசிய திரைப்பட விருதுகளின் மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் சிறப்பான படைப்புகள் இந்திய திரைப்பட உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதோடு, இந்திய சினிமாவின் தரத்தையும் மேலும் உயர்த்தி வருகின்றன.


இந்த இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும்  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பெருமைமிகு சாதனை. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், தனித்துவமான மற்றும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற இரு நிறுவனங்களின் உறுதிப்பாட்டையும் இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


வெளியான நாள் முதல் ‘பிரம்மயுகம்’ இந்தியாவிலும் உலகளவிலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த திரைப்படம் 55 ஆவது 


இந்திய சர்வதேச திரைப்பட விழா – இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியது. மேலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட்டது. 2024 கேரள மாநில திரைப்பட விருதுகளில் பல்வேறு விருதுகளை வென்றதுடன், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அன்றாடம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் இந்தப் படம், தீவிரமான கதை, சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செய்தி ஆகியவற்றின் மூலம் தைரியம், நீதி மற்றும் விடாமுயற்சியின் பயணத்தை சித்தரிக்கிறது.


Zee Studios  வழங்க, MIG Production நிறுவனம்  இணைந்து உருவாகியுள்ள “தி இந்தியா ஸ்டோரி” படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், 2026 ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், ஆழமாக  சிந்திக்க வைக்கும் கருத்தை,  நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.


டிரெய்லர் குறித்து இயக்குநர் சேட்டன் டி.கே. கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; நாம் அவசியமாக நடத்த வேண்டிய ஒரு உரையாடல். ஒவ்வொரு வீட்டையும் அமைதியாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையை இந்தக் கதையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட விரும்பினோம். உண்மை, தைரியம் மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பயணத்தை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், நம்மைச் சுற்றியுள்ள நிதர்சனத்தை உணரவும் தூண்டும் என்று நம்புகிறோம்.”


நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும் உண்மைக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் சிறப்பாகும். டிரெய்லர் பார்வையாளர்களை கவர்ந்து, இந்த சக்திவாய்ந்த கதையை பெரிய திரையில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.”


நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி படத்தின் உணர்வுப்பூர்வமான மையத்தை டிரெய்லர் மிகச்சரியாக வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு சாதாரண மனிதன், அசாதாரணமான சவாலுக்கு எதிராக போராடும் கதையிது. இதன் உணர்வுகளும், கருத்தும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும் என்று நம்புகிறேன். ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் அனைவரும் இந்தப் படத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி  விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி   ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே  , படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.

Pageviews