*மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்ட திரைப்படம் நீலகண்டா*

*இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் "நீலகண்டா"*

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார்.

இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் "நீலகண்டா" திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நீலகண்டா திரைப்படத்தை ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். நீலகண்டா திரைப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.

நடிகர் மகேந்திரனின் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

*Fire Fox Film House - Producer Saranika presents “Production No.1”*

*Manikandan Selvaraj Directorial-Starrer “Production No.1”* 

Fire Fox Film House presents Production No. 1, produced by Saranika, marking the directorial debut of Manikandan Selvaraj, who also plays the lead role.

A former assistant to director Arivazhagan, Manikandan Selvaraj both directs and stars in the film, which features A. Venkatesh and Aruvi Madhan, along with several other actors in prominent roles.

Tamil cinema audiences have always welcomed films with fresh and distinctive storytelling. Set against the backdrop of a police station, this film presents a unique love story with an engaging screenplay that promises to appeal to audiences across all sections. Blending romance, action, and commercial elements, the film is crafted to deliver racy moments while staying rooted in its novel premise.

While Manikandan Selvaraj plays the protagonist, director-actor A. Venkatesh will be seen in a character filled with twists and turns. Aruvi Madhan essays an important role. Sreeja Ravi, who received acclaim for her performance in Doctor, appears in a powerful and impactful character. Thanigai, known for his performances in Diary and Kuttram 23, will also be seen in a pivotal role alongside several familiar faces.

The film commenced its first schedule of shooting on February 5, 2026, in Chennai. The second schedule will be shot in and around select locations in Chennai.

Produced by Saranika under the banner of Fire Fox Film House, the film has cinematography by Giri Murphy, while music is composed by newcomer Hari. The film’s first look and teaser will be officially launched soon.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது 


இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான "பராசக்தி" திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா...,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை,  உலகளாவிய பார்வையாளர்களிடம்  ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி  என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.

எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளம் குறித்த ஒரு தீவிரமான கதையைக் காண, பராசக்தி திரைப்படத்தை பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணுங்கள்.


ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…

உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.
நன்றி.


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…

முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.
நன்றி.

மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…

இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…

முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
நன்றி.

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

சென்னை பெருங்குடியில் Interiors by DeX Flagship அனுபவ மையத்தை நடிகர்கள் பிரஜின், சாண்ட்ரா & இயக்குநர்-நடிகர் கரு. பழனியப்பன் திறந்து வைத்தனர். 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் அறிமுகம்.


நுணுக்கமான வடிவமைப்பு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான  பயன்பாடு மற்றும் நீண்டகால பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், Interiors by DeX தனது Flagship அனுபவ மையத்தை OMR, Perungudi-யில் நடிகர்கள் பிரஜின் சாண்ட்ரா மற்றும் இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் முன்னிலையில் திறந்து வைத்தது.


நிகழ்ச்சி பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் ரிப்பன் வெட்டுதல் மூலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்டூடியோ சுற்றுப்பயணத்தில், DeX நிறுவனத்தின் நவீன சமையலறைகள்(Modular kitchen), அலமாரிகள் (வார்ட்ரோப்கள்) மற்றும் முழுமையான வீட்டு இன்டீரியர் தீர்வுகள் — தினசரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.


சாதாரண ஷோரூமுக்குப் பதிலாக ஒரு அனுபவ மையமாக உருவாக்கப்பட்ட இந்த இடம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வடிவமைப்பையும் நேரில் பார்த்து, தொட்டு, நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் அது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


 வீடுகளில் வடிவம் வைக்கப்படுவது வாழ்வதற்காக மட்டுமே.பார்ப்பதற்காக அல்ல; 


இன்டீரியர் துறையில் பெரும்பாலான பிராண்டுகள் மேற்பரப்பு அலங்காரம் மற்றும் டிரெண்டுகளை முன்னிலைப்படுத்தும் இக்காலத்தில், அதிக செயல்திறன் மற்றும் நீடித்த தன்மை என்ற கொள்கையின் அடிப்படையில் DeX இதனை உருவாக்கியுள்ளது.


Interior துறையில் புதிய அளவுகோலை அமைக்கும் வகையில், DeX புதிய யுத்தியை அறிமுகப்படுத்தியது:


* 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் – ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், விவாதமோ சிறு எழுத்துகளோ இல்லாமல் நேரடியாக மாற்று வழங்கப்படும்.


* 10 நாள் Live-Use Snag Period – வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் வசித்து, ஒவ்வொரு யூனிட்டையும் பயன்படுத்தி, நிஜ வாழ்க்கையில் தோன்றும் குறைகளை சுட்டிக்காட்டலாம். அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்ட பிறகே உத்தரவாதம் ஆரம்பமாகும்.


* லைஃப்ஸ்டைல் அடிப்படையிலான முழுமையான கஸ்டமைஸேஷன் – அனைத்து இன்டீரியர் தேவைகளுக்கும் DeX ஒரு ஒரே இடத் தீர்வாக செயல்படுகிறது.


 இதன் நோக்கம் மிக எளிமையானது: வீடு என்பது தினமும் வாழக்கூடிய அழகான இடம். அது வெறும் Hand Over ஆக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஒப்படைக்கும் நாளில் மட்டும் அழகாக அல்ல; தினமும் சிறப்பாக செயல்பட வேண்டும்.


‘Fascia by DeX’ வெளியீடு


இந்த நிகழ்வில், Fascia by DeX எனும் DeX-இன் பிரத்யேக பிரீமியம் ஷட்டர் பிராண்டும் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் உள்ள DeX-இன் சொந்த PU பூத் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் இந்த ஷட்டர்கள், மேம்பட்ட ஃபினிஷ், உயர்ந்த தரக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.


விருந்தினர்கள் கூறியது


Prajin & Sandra கூறியதாவது:


“பல இன்டீரியர் ஸ்டூடியோக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் DeX-ஐ தனித்துவமாக தெரிவதற்குக் காரணம்  அதன் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு. Live-use warranty என்ற கருத்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. தங்களின் பணியில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. குடும்பங்களின் நிஜத்தேவைகளை நினைத்து சிந்திக்கும் ஒரு பிராண்டை காண்பது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது.”


இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் கூறினார்:


“DeX-உடனான எனது தொடர்பு தனிப்பட்டது. என் சொந்த வீட்டின் இன்டீரியர்களை அவர்களே வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். அதனால் அவர்களின் பணியை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். செயல்திறன் மற்றும் சிறு விவரங்களுக்கான கவனம் தான் என்னை மிகவும் ஈர்த்தது. சினிமாவைப் போலவே, வீடுகளிலும் ஒவ்வொரு பொருட்களும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அழகும் பயன்பாடும் சமநிலையுடன் இருக்க வேண்டியதை DeX அழகாகப் புரிந்துள்ளது.”


நிறுவனர் கருத்துகள்


Founder – Vaishali Sampath கூறினார்:


“ ஏதோ ஒரு வழக்கமான இன்டீரியர் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் வழங்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்கும் ஒரு பிராண்டை உருவாக்க விரும்பினோம். எங்கள் replacement guarantee மற்றும் live-use period — ‘மன்னிப்புகள் இல்லாத பொறுப்புணர்வு’ என்ற ஒரே நம்பிக்கையிலிருந்து வந்தவை.”


Co-Founder – Nanda Kumaran கூறினார்:


“ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டை வெவ்வேறு விதமாக பயன்படுத்துகிறது. அதனால் எங்கள் வடிவமைப்புகள் டிரெண்ட் சார்ந்தவை அல்ல; லைஃப்ஸ்டைல் சார்ந்தவை. Fascia by DeX மூலம், தரக் கட்டுப்பாட்டை முழுமையாக எங்களிடமே வைத்துக்கொண்டு, நீடித்த தன்மையும் பிரீமியம் ஃபினிஷும் கொடுப்போம் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறோம்.”


பெருங்குடியில் தனது Flagship கடையை தொடங்கியதன் மூலம், Interiors by DeX புத்திசாலித்தனமான வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து சென்னை மக்களின் வீட்டு உள்துறை அனுபவத்தை மறுவரையறை செய்ய முனைகிறது.

 

வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் - 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா


தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், "மண்ணுக்கும் மக்களுக்கும்" என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா வடபழனி முருகன் கோவிலில் விசில் சின்னத்தை வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.


மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மற்றும் த.வெ.க. கட்சியை சேர்ந்த பலர் நடிகர் சௌந்தரராஜாவுடன் வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு முடித்து வெளியே வந்த நடிகர் சௌந்தரராஜா கோவிலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்டு மற்றும் விசில் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்தரராஜா, "கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் எந்த கட்சிக்கும் இந்தளவிற்கு ஆதரவு இருக்காது. த.வெ.க. மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 25 சதவீதம் வாக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. 


இன்றைக்கு விசில் சின்னத்தை முருகனின் பாதத்தில் வைத்து விஜய் பெயரில் அர்ச்சனையும் கட்சி கொடி மற்றும் சின்னத்திற்கு சிறப்பு பூஜையும் செய்து பொதுமக்களுக்கு விசிலும், லட்டும் வழங்கி கொண்டாடி வருகிறோம்.


விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது. மாற்றத்தை விரும்பக்கூடிய மக்கள் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள்.


ஆரம்பத்தில் இருந்து தி.மு.க. தான் எங்களுடைய எதிரி என்று தெளிவாக கூறியுள்ளார். அவர்கள் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றியுள்ளார்கள் என்று திருக்குறள் மூலம் எளிய மக்களுக்கு கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


பா.ஜ.க. தலைமையில் தான் மற்ற கட்சிகள் இருப்பது போல தெரிகிறது. அதனை தான் என் தலைவர் கூறியுள்ளார்.


நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது ஆனால் விஜய் எந்த இடத்திலும் அதை பற்றி பேசவில்லை. அவருக்கு பட்ஜெட் பற்றி தெரியுமா எங்கு பார்த்தாலும் தி.மு.க.வை மட்டும் விமர்சனம் செய்கிறார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, 


அவருக்கு பட்ஜெட் பற்றி நன்றாக தெரியும். இந்த விழாவில் என்ன பேச வேண்டுமோ அதை தான் பேசியுள்ளார். ஒரு முக்கியமான நாளில் அதற்கும் விளக்கம் கொடுப்பார்.


வேளச்சேரியில் விஜய் போட்டியிடுவார் என்ற செய்தி வருகிறதே அது உண்மையா என்ற கேள்விக்கு? அவர் எங்கு நின்றாலும் அவர் வெற்றி பெறுவார். கூடிய விரைவில் அவரே அறிவிப்பார்.


விசில் சின்னத்தை வேறு வார்த்தை பயன்படுத்தி கிண்டல் செய்கிறார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  இதிலும் அரசியல் பண்ண வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.


எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம். விஜய் அண்ணாவின் மீடியா தேவை இப்போதைக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக மீடியாவை சந்திப்பார். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கும் கண்டிப்பாக பதில் சொல்வார்.


அவர் ஆட்சிக்கு வந்து சொன்னதை செய்யாமல் இருந்தால் நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாம். அவர் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறார்.


அவர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்டு மீண்டும் மீண்டும் அவரை காயப்படுத்தாமல் அவர் ஏதேனும் தவறு செய்தால், பொய் சொன்னால் கேள்வி கேளுங்கள்.


உங்களுக்கு பொறுப்பு இல்லை ஆனால் கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு?


இந்த கேள்வி என்னை மாட்டி விடுவது போல இருக்கிறது. பொறுப்பு இருந்தால் தான் நான் வேலை செய்வேன் என்று இல்லை. தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன்.

 

(Movie Scroll)  மூவி ஸ்க்ரோல் சார்பில்  SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.


ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.


சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..


இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. 

யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.


இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்தபோது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்.


இந்தக் கதையை உருவாக்கிவிட்டு விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கேவிடம் சொன்னோம்.. அவருக்கும்  கதை பிடித்திருந்தது.. கதையை காமெடியாக உருவாக்காமல் கொஞ்சம் சீரியஸாக உருவாக்கினோம்.. கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர மற்றபடி இது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை தான் 


கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான். இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்..


இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.. 


மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) யூடியூப் தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோடை வெளியிடத்  திட்டமிட்டு இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாக இருக்கிறது.

 

நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான 'லக்கி', Hotstar Specials-ஆக பிப்ரவரி 20, 2026 அன்று, பிரத்யேகமாக JioHotstar-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது. JioHotstar சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் முதன்முறையாக 'லக்கி' திரைப்படத்தின் தனித்துவமான உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அப்பாவியான நாய்க்குட்டி ஒன்று அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்கள்தான் மையக்கரு என்பதை 'லக்கி' டீசர் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லக்கி' இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.


உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் பேசும். 


புதிய கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘லக்கி’ இருக்கும். 


பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் ‘லக்கி’ திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாகிறது. 


JioHotstar பற்றி:

JioHotstar இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் JioHotstar இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார். 


நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார். 


அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா, “அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார். 


இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.

 

வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ். தற்போது நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. 


’ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1, 2026) இடுக்கியில் எளிய பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது. ’பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 


‘ஹைக்கூ’ படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டாக்டர் D. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ’ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். 


படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமைகளை வாங்கியிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திறமையான நடிகர்களும் அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவினரும் இணையும் இப்படம்  குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.


நடிகர்கள்: ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப்புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப்புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ’கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி, 

எடிட்டர்: சக்தி பிரணேஷ், 

இசையமைப்பாளர்: ‘கோர்ட்’ மற்றும் ’பேபி’ படங்கள் புகழ் விஜய் பல்கானின்.

Pageviews