*Cast & Crew Details*

Sudharsan Govind as Ajay
Archenaa Ravi as Mathi
Prathu (Prathosh) as Rocky
Noble james as Cooky
Vidya as Revathy
Y Gee Mahendran as Arumugam
Nizhalgal Ravi as Yogi
MJ sriram as Prabhakar
Rethika Srinivas as Mahalakshmi

Production: Zhen Studios
Producer: Pugaz & Eden
Writer & Director : Ashokkumar Kalaivani
Music : Ashwin Hemanth
DOP : Raja Bhattacharjee
Editor : S.A.Nagarjun
Art Director: Varnaalayaa Jagadeesan
Costume Designer : Sindhuja Ashok
Makeup : Kalaivani Balan
Lyricist: Ku.Karthick
Sound Design : A.Sathish Kumar
Sound Mix : Aravind Menon
VFX : Hocus Pocus
DI: Vels - D Studios Post
Choreography: Vijisatish
Production Executive: Rakesh
Dubbing: Vels - D Studios Post
Title designer - Veera
Publicity Design : Vikram Shekar
Direction Team : Vignesh Kumar, BK Dinesh Babu, Karthikeyan, Hariharasudhan
Camera team: Gowtham Sethuraman, Sathish Kumar, Sai
Edit Team : Hariharan.V, Danachezhian.S

Casting : Sudharsan Govind, Archenaa Ravi, Prathu, Noble James, Vidya, Y Gee Mahendran, Nizhalgal Ravi, MJ Sriram, Rethika Srinivas

Directed By : Ashokkumar Kalaivani

Music By : Ashwin Hemanth

Produced By : Zhen Studios - Pugaz & Eden

Sudarshan Govind, a man from a family that doesn't like love marriages, is trying to create an app for love and lovers. 
Archana Ravi, the protagonist who grew up in an orphanage, places no faith in family life and prefers to live independently, while simultaneously pursuing her ambition to become a film director.

 Meanwhile, in order to develop an app for love and lovers, the protagonist decides to feign a romance with a woman to gain an understanding of what love truly is.Meanwhile, in order to develop an app for love and lovers, the protagonist decides to feign a romance with a woman to gain an understanding of what love truly is. Similarly, the female lead decides to feign love for someone in order to write a love story. As they set out to pursue this simulated romance, the two of them cross paths. The remainder of the story explores how this journey of feigned love transforms both their mindsets and their lives.

Sudarshan Govind, who stars as the protagonist,—despite standing over six feet tall and possessing the physical attributes of an action hero—has delivered a restrained performance in the role of an innocent character.
 
Sudharshan Govind—who has demonstrated a distinct transformation not only in his physical appearance but also in his acting style, spanning the phases both before and after falling in love—appears to be a master of every craft, from acting to dance.

 Archana Ravi, who plays the female lead, makes for a fitting partner to the protagonist. Although her character holds significant importance in the screenplay—standing on par with the hero—her performance unfolds without creating a major impact.

Pradosh and Noble—who played the protagonist's friends—along with Vidya, Y.G. Mahendran, Nizhalgal Ravi, M.J. Sriram, and Rethika Srinivas have contributed effectively to the flow of the screenplay.

 Cinematographer Raja Bhattacharjee's work has elevated the visual quality of the scenes and conveyed the emotions of the lovers to the minds of the viewers.

 Although Ashwin Hemant's songs do not make a major impact, they remain listenable thanks to their commercial appeal. The background score is on par.

S.A. Nagarjuna's work has contributed greatly to the film.

Director Ashok Kumar Kalaivani, who has attempted to poignantly portray the transformative effects of love on those with no inclination towards it, has handled the screenplay and visuals with great simplicity.

Although the story centers primarily on romance—and the manner in which it is narrated against the backdrop of family relationships is engaging—the scenes revealing the genuine love hidden within the hearts of two individuals who are merely feigning affection serve as a significant strength for the film.

Verdict : "Nee Forever"Love Forever"
Rating : 3.5/5

 

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. 


’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. 


படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.


இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.


இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.


கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம்.

 

தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.


சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜென் ஸீ சென்சேஷன் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படப்புகழ் சான்வே மேக்னா கதாநாயகியாகவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.


தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.


'மாவீரன்’, ’3BHK’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ மூலம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.


நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.


'கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.


இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.


தொழில்நுட்பக் குழு விவரம்:


இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,

பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)

மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ

 

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதி அவர்களை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் அவரது புதிய திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். அங்கு அவர் மனமுவந்து “லவ் ஓ லவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அன்பான செயல், படத்திற்கு கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Zinema Media and Entertainment Ltd, தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) மற்றும் பிரபல தெலுங்கு யூடியூப் பிரபலமாக இருந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாக துர்கா இணைந்து நடித்துள்ளனர்.


படத்தின் மற்ற முக்கிய அம்சமாக, புகழ்பெற்ற இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் K. S. ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வனிதா விஜயகுமார் , ஆதித்யா கதிர் , ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு மேலும் புத்துணர்ச்சி சேர்க்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த திறமையான இசையமைப்பாளர் ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் PJ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவை P. G. முத்தையா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்குநராக P. மகேந்திரன் பணியாற்றுகிறார். இப்படம் வலுவான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன் உருவாகி வருகிறது.


படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், Post Production பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. Love Oh Love திரைப்படம் 2026 கோடை அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இளமை, உணர்ச்சி மற்றும் நவீன கால உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதுமையான காதல் திரைப்படமாக Love Oh Love உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரையுலகில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. 

 

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.


மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.


இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.

விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி.  நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்.


ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.


பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.


இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.


தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.


அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.


இயக்குநர் - படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், '' விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல்  ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள்.  ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.


இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும்  திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.

இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.


நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், '' இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், '' விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த' 96 'படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  


இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind)  என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.


'கடைசி விவசாயி' படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், '' திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்'' என்றார்.


இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், '' இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்'' என்றார்.


கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், '' இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி  செய்வேன்.


இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.


நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.


இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்'' என்றார்.


நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், '' இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.  இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்'' என்றார்.


நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், '' இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை.  அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்.  விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்'' என்றார்.


நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், '' கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்

இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.


நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.


ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன்.  ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.


இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.


ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் 'ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்' என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். 

இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது.  அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌


மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.


2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.


ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று 'உடன் பால்' படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.


இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்

 

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.


ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.


ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் 'குறையொன்றுமில்லை' என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.


இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், "இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்


கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், "இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. 'கார் மேனி செல்வம்' ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.


நடிகர் கோதண்டம் பேசுகையில், "இந்தப் படத்தை 'ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்' என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி - யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.


ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.


குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். 'கார் மேனி செல்வம்' படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்," என்றார்.


நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், "இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்," என்றார்.


நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், "அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌


இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்," என்றார்.


எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், "எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌


இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.


இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.


தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.


இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌


இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், "இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.

அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌


இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் 'ஸ்கூல் பஸ்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் 'குறையொன்றுமில்லை' படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌


என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌


புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌


இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.


நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.


இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌


இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் -பாடலாசிரியர் - பாடகர்கள் - ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.


இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.


இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்.‌


நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.


இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்' என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.


மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த 'கார்மேனி செல்வம்' படைப்பு.


இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் 'தேவலோகத்தில் இருக்கிறோமோ..!' என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.


பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.


'கார் மேனி செல்வம்' சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.


நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்," என்றார்.

 

'தி மார்ஷியன்' நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard  வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார். லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது!


கதைச்சுருக்கம்- பூமியில் இருந்து பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள தொலைதூர நடசத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழும் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) மிகவும் அதிர்ச்சியடைகிறார். அவர் தனது நினைவை மீட்டெடுக்கும்போது, ஒரு வினோதமான பொருளின் மர்மத்தை ஆராய வேண்டும் என்ற தனக்கான பணியை நினைவு கூர்கிறார். அப்பொருள், சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியாகும். Ryland Grace -ஐப் பணியில் அமர்த்தும் Eva Stratt (Sandra Huller), Astrophage -களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் தொடங்குகிறார். 


CREDITS -பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

இசை- Daniel Pemberton; ஒளிப்பதிவு- Greig Fraser


ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி  பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது.

 

With India’s private space ecosystem gaining momentum under the guidance of the Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe), the commercial arm of Indian Space Research Organisation (ISRO), the country’s space ambitions continue to reach new heights. IN-SPACe is an autonomous nodal agency under the Department of Space, Government of India, tasked with promoting, enabling, authorising and supervising non-government entities (NGEs) undertaking space activities.


Celebrating the spirit of scientific curiosity and exploration, Sony Pictures Releasing International hosted a special screening of the highly anticipated Project Hail Mary for members of IN-SPACe and ISRO ISTRAC—marking the first time ever that a Hollywood film screening has been organized exclusively for dignitaries from these esteemed institutions.


Adding a memorable touch to the evening, the film’s lead actor Ryan Gosling made a special video call-out to the scientists in attendance, saying:

“I’d like to salute all the talented people at ISRO for pushing the boundaries of space exploration and inspiring the world through science and perseverance.”


Held on March 21, 2026, at Nexus Shantiniketan Mall, the event brought together Dr. Vinod Kumar – Director & Promotion Directorate of IN-SPACe, Dr. Srimathy Kesan, Founder & CEO of Space Kidz India and Mission Director of ShakthiSAT, along with IN-SPACe members and scientists from ISRO ISTRAC representing India’s rapidly growing space community for an exclusive early preview of the film.


Based on the bestselling novel by Andy Weir and directed by Phil Lord and Christopher Miller, Project Hail Mary follows Ryland Grace (Ryan Gosling), a lone astronaut who awakens aboard a mysterious spacecraft with no memory of who he is or the mission that brought him there—only to discover he may be humanity’s last hope to stop a catastrophic threat to Earth.


Blending the worlds of science and cinema, the evening offered a unique intersection between real-world space exploration and cinematic storytelling, as scientists experienced a narrative rooted in scientific problem-solving and interstellar discovery.


The film also stars Sandra Hüller, Lionel Boyce, Ken Leung and Milana Vayntrub.


Presented by Amazon MGM Studios and distributed by Sony Pictures Releasing International, Project Hail Mary releases in Indian cinemas on March 26, 2026, in English, Hindi, Tamil and Telugu across IMAX® and other premium large formats

தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

இந்தச் சூழ்நிலையை நாங்கள் முழுவதுமாக புரிந்து கொள்வதோடு, தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம். 

என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.

Pageviews