ஒரு பிரம்மாண்ட அபார்ட்மெண்ட். அங்கே ஒரு சூட்கேஸில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்படும் சிறுமியின் சடலம். இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியைத் தேடி களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ். ஒருபுறம் அஜய் கார்த்திதான் கொலையாளி என அடித்துச் சொல்லி விசாரணையை ஒரு பக்கம் திருப்புகிறார் பவானி ஸ்ரீ.  காளிதாஸின் விசாரணை சூடுபிடிக்கும் வேளையிலேயே, அதே குடியிருப்பில் அடுத்தடுத்து அரங்கேறும் மரணங்கள் அதிர வைக்கின்றன. இந்த கொலைகளை யார் செய்வது ? எதனால் நடக்கிறது ? என்பதே படத்தின் மீதிக்கதை.  


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ,  நேர்மையான  அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சங்கீதா, தனது முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிஷோரும், பிரகாஷ் ராஜும் தங்களின் கேமியோ மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார்கள். சிறியவேடம் என்றாலும் கவனிக்க வைக்கும் வேடமேற்றிருக்கிறார் அபர்ணதி


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.


சிறுமி கொலை சம்பவத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  ஸ்ரீ செந்தில்  இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் ?  கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.


காளிதாஸ் 2 - சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர்

 

'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் இல்லாதது' ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் 'ஹபீபி' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.


அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர் நிஷா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவரை அன்பாக ‘நிலா பொண்ணு’ என்ற செல்லப்பெயரில் அழைப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தை எழுதும் போது, 90களில் வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டு காலகட்டங்களில் வேறுபட்ட தோற்றங்களுடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 200–250க்கும் மேற்பட்ட நடிகர்களை ஆடிஷன் செய்தோம். இறுதியில் மாளவிகா மனோஜை பார்த்தவுடன் அவர் தான் சரியான தேர்வு என்று உணர்ந்தேன். குறிப்பாக இந்தக் கதாபாத்திரத்திற்கு கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேவைப்பட்டார்” என்றார்.

 

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “அவரை ஆடிஷன் செய்த பிறகு, அவரது குடும்பத்தின் ஊக்கமும், நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆழமான ஆர்வமும் எங்களை மிகவும் கவர்ந்தது. அந்த சமயத்தில் அவர் தனது மலையாள அறிமுகப்படமான ‘பிரகாஷம் பரவத்தே’ படப்பணிகளை முடித்திருந்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ’ஹபீபி’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரும்பாலும் வசனங்களைக் காட்டிலும் முகபாவங்கள் மூலமும் உடல் மொழியாலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியது. அதை அவர் எப்படி கையாள்வார் என்று ஆரம்பத்தில் எங்களுக்கு ஆவல் இருந்தது. ஆனால், அவர் அதை மிகவும் திறமையாகக் கையாண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார். படத்தை பார்த்த அனைவருமே அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். மாளவிகா நடித்த  ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ போன்ற படங்களின் வெற்றி, ‘ஹபீபி’ படத்திற்கு மேலும் வலு சேர்க்கும்” என்றார். 


இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள 'ஹபீபி' திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான நிலப்பரப்பை நம்பகத்தன்மையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிக்கும் ஆத்மார்த்தமான திரைப்படமாகும். 'என் அன்புக்குரியவளே' என்ற படத்தின் தலைப்பின் பொருளுக்கு ஏற்ப இப்படம் காதல், மனித உறவுகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பேசுகிறது. 


பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு படங்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிடுகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், உணர்வுப்பூர்வமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. ’ஹபீபி’ படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட்டையும் நீட்டிக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், இயக்குநர் அஜய் ஞானமுத்து அர்ப்பணிப்புடன், திட்டமிட்ட 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்” என்றார்.


இயக்குநர் அஜய் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் சுதன் சாரிடம் கதை சொல்லி இறுதியானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என சொன்னார். ’டிமாண்டி காலனி’ படத்தின் பிரான்சைஸூக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம். படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதெல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது. மிகவும் திருப்தியாக மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால்தான் திட்டப்படி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. ’டிமாண்டி காலனி’ பிரான்சைஸ் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதை மனதில் வைத்தே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோடையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். குமரேஷ் டி எடிட்டிங்கை கவனிக்கிறார்.


அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கிய 'டிமாண்டி காலனி 3' திரைப்படம் இந்த கோடையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

 

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!


எட்டு முறை அகாடமி விருது வென்ற புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 2, 2026: ’ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய அத்தியாயம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. இதில் ராமபிரானாக ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்


5,000 ஆண்டுகளாக மனிதகுலத்தின் நினைவில் வாழ்ந்து வரும் ராமர் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் புதிய பார்வையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ‘ராமா’ டீசர் கொண்டு சேர்த்துள்ளது. ராமாயணம் கதையுடன் வளர்ந்தவர்களுக்கு இது புது அனுபவமாகவும், முதல் முறையாக அறிமுகமாகும் பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான அனுபவமாகவும் அமைகிறது.


இந்த காலத்தில் உலகம் காண்பதற்கு அரிய ஹீரோ ராமன். அதிகாரத்தை விட கடமையை தேர்ந்தெடுக்கும் ஹீரோதான் ராமன். ஆசையை விட தர்மத்தை முன்னிறுத்துபவர். ’மர்யதாம் புருஷோத்தம்’ என போற்றப்படும் ராமன், மனிதகுல ஒழுக்கத்தின் உச்ச வடிவமாக கருதப்படுகிறார். துன்பம், நாடுகடத்தல் மற்றும் இழப்புகளின் மத்தியில் கூட நேர்மை, கருணையை காக்கும் அவரது பண்பே அவரை காலத்தைக் கடந்தவராக மாற்றியுள்ளது.


இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வு பூர்வமான தருணங்களில் உள்ளது. இது வெறுமனே நல்லது, கெட்டது பற்றிய கதையல்ல. மனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய கதை. ராமனின் பயணம் மிகவும் மனிதத்தன்மை கொண்டது. அதையே உண்மையாக காட்ட முயன்றுள்ளோம்” என்றோம்.


ராமர் கதாபாத்திரம் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “ராமரை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன். அவரின் எளிமையும் தூய்மையும் மிகவும் அரிதானவை. அதை புரிந்து கொள்ளும் பயணம் எனக்கு தெய்வீகமான அனுபவமாக இருந்தது” என்றார்.


தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமரின் கதையின் வலிமை, அவர் எதை வென்றார் என்பதில் இல்லை. அவர் எதை கைவிட்டார் என்பதில்தான் உள்ளது. எளிதானதோ, வசதியானதோ அல்லாத, ஆனால் அவசியமான ஒரு தரத்தை ராமர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஆசையை விடக் கடமையையும், சுகத்தை விட உண்மையையும், தன்னலத்தை விட தியாகத்தையுமே முக்கியம் எனத் தேர்ந்தெடுக்கிறார். அதனால்தான் அவரது கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இன்றும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கிறது”


நமித் மல்ஹோத்ராவின்‘ராமாயணம்’ திரைப்படம் பற்றி:


நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ‘ராமாயணம்: பார்ட்1’ திரைப்படம், உலகின் மிகப் பழமையான காவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகிறது. உலகம் உருவானதில் இருந்து மும்மூர்த்திகளும் மூன்று உலகங்களையும் ஆண்டு வருகின்றனர். அதாவது, பிரம்மா படைப்பையும், விஷ்ணு காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்து வருகின்றனர். விண்ணுலகமும் மண்ணுலகமும் குழப்பத்தை நோக்கிச் செல்லும் வேளையில், சமநிலையை நிலைநாட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மனித குல இளவரசனாக ராமர் (ரன்பீர் கபூர்) அவதாரத்தில் பூமியில் பிறக்கிறார். அறிவிலும் சக்தியிலும் ஒப்பற்ற அரக்க மன்னன் ராவணன் (யாஷ்) ராமருக்கு எதிராக நிற்கிறான். அகம்பாவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் இயக்கப்படும் ராவணனுடன் நடைபெறும் மாபெரும் மோதலும் அதன் பின்னான நிகழ்வுகளுமே ‘ராமாயணம்’. இராவணனை எதிர்த்து நிற்க விதிக்கப்பட்ட ஒரே எதிரி தான்தான் என்ற தனது உண்மையான நோக்கத்தை அறியாமல், இராமர் தர்மத்தின் சின்னமாகவும், அக்காலத்தின் மாபெரும் மனித வம்சமான அயோத்தியின் மிகவும் நேசிக்கப்பட்ட பட்டத்து இளவரசராகவும் திகழ்கிறார். ராமர் தனது மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் தம்பி லட்சுமணன் (ரவி துபே) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ முயலும் போது, விதி அவரை வனவாசத்திற்கும் இறுதி போருக்கும் அழைத்துச் செல்கிறது.


ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ’ராமாயணம்’ திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதையாக சாய் பல்லவி, ஹனுமனாக சன்னி் தியோல், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை நிதேஷ் திவாரி, விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனால் தழுவி எழுதப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இயக்குகிறார். ஆஸ்கார் விருது வென்ற ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் இசையமைக்கின்றனர். பழங்கால இந்தியாவை கண்முன் கொண்டு வரும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பை ரவி பன்சால் மற்றும் ராம்சே அவேரி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்கள் டெர்ரி நோட்டரி & கய் நொரிஸ் வடிவமைக்கின்றனர்.


வால்மீகி ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் முதல் பாகத்தை, எட்டு முறை அகாடமி விருது வென்ற தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.


நமித் மல்ஹோத்ராவின் ராமாயணா: பார்ட்1 திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி, 2026ல் வெளியாகிறது. இரண்டாவது பாகத்தின் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அடுத்த வருடம் 2027, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.


சரியான நேரத்தில் மீண்டும் வரும் ‘ராமாயணம்’ கதை:


ராமாயணம் ஒரு கதை மட்டுமல்ல, அது வாழும் கலாச்சார சக்தி. போரில் வெற்றி பெற்ற பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதாவது, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் நினைவாக கொண்டாடப்படுகிறது. ராமன் தர்மம், கருணை, தியாகத்தை பிரதிபலிக்கிறார். ராவணனின் வீழ்ச்சி அகம்பாவம் மற்றும் ஆசையின் விளைவாகும். இந்த எதிர்மறை, நேர்மறை மோதல்தான் ராமாயணத்தை மனித வரலாற்றின் நீண்ட காலம் நிலைத்த காவியமாக மாற்றியுள்ளது.


சுவாரஸ்ய தகவல்கள்:


* உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் பிராந்தியங்களிலும் 300க்கும் மேற்பட்ட பதிப்புகளில் ராமாயணம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.


* கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 13.5 கோடி பக்தர்களை ஈர்த்த ஆன்மீக தலமாக ராமர் பிறந்த அயோத்தி உள்ளது.


* கடந்த 2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராம் மந்திர் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.


* அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் ராம் மந்திர் கும்பாபிஷேகத்தை கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:


நமித் மல்ஹோத்ரா நிறுவிய பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உலகளாவிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் உள்ளடக்கங்களை உருவாக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. ஒலிப்பதிவுக் கூடங்கள், தயாரிப்பு வசதிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், முழு நீள அனிமேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய DNEG குழுமத்தின் விருது பெற்ற உலகளாவிய திறன்களைப் பயன்படுத்தி, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் திறமையான இயக்குநர்களுக்கும், ஸ்டுடியோக்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பார்ட்னராக திகழ்கிறது.


மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:


நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.

 

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது 'பேச்சிலர் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். 


"'ஓம்மே நின்னானு' பாடல் 31 வினாடிகளுக்கும், 'நியாயா எல்லிடே' பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான நீளம் கிடையாது.  ஏனெனில்  பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 14(d)(i)(A)-ன் படி, திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அசல் புகைப்படம் கூட உரிமையாளருக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி 'நியாயா எல்லிடே' பாடலின் ஒலி-ஒளிக் காட்சியிலிருந்து ஒரு நொடி கூட பயன்படுத்த முடியாது" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், கோர்ட் உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


”இருப்பினும், பிரதிவாதிகள் 1 மற்றும் 2 ஆகியோர் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து சமர்ப்பித்த 31.10.2025 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.12.08.2024 தேதியிட்ட உத்தரவை அவமதித்ததற்காக பிரதிவாதி எண் 2-க்கு சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்த அவமதிப்பில் இருந்து விடுவிக்கவும் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 5,00,000 முன்மாதிரி செலவுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது”.


கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்ட உரிமை மாற்றப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கு எம்.ஆர்.டி மியூசிக் இசை நிறுவனம் உரிமை கோரியது. ’பேச்சிலர் பார்டி’ திரைப்படத்தில் உரிமம் பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது. ஒரு காட்சியில் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது, மற்றொன்று கதைக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு வகுப்பறைக் காட்சியில் பாடப்பட்டது. இப்படம் ஜனவரி 2024 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது.


ஆகஸ்ட் 12, 2024 அன்று பிரதிவாதிகள் நான்கு வாரங்களுக்குள் ரூ. 20 லட்சத்தைச் செலுத்தவும், உரிமம் பெறாமல் பயன்படுத்தியுள்ள பாடல்களை அகற்றவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் பிரதிவாதிகள் அபராதத் தொகையை செலுத்தினாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.


டிஜிட்டல் தளங்கள் உட்பட பல தளங்களிலும் எம்.ஆர்.டி அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிரிவு 19(4)-ன் கீழ் உரிமை இழப்பு வாதத்தை நிராகரித்தது. பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்குத் தொடரப்பட்ட தேதியில் இருந்து அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.


’நியாய எல்லிடே’ வெறும் 7 வினாடிகளுக்கும், ’ஓம்மே நின்னானு’ 31 வினாடிகளுக்கும் மட்டுமே இருப்பதைக் குறிப்பிட்டு ’மிக குறைவான நேரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என ரக்‌ஷித் ஷெட்டியும் பரம்வா ஸ்டுடியோஸும் வாதிட்டனர். இருப்பினும், நீதிமன்றம் அந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு நோக்கத்தை ஆராய்ந்தது. 


வாதத்தில் பயன்படுத்தப்பட்ட ’தற்செயலானவை’ அல்லது ’தொடர்பற்றவை’ என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, திரைப்படத்தின் கதையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ’நியாயா எல்லிடே’ என்ற தலைப்புக்கு ’நீதி எங்கே?’ என்று பொருள் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கதாநாயகன் துன்பப்படும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தது, அவனது அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்கான திட்டமிட்ட படைப்பு என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


பாடல்கள் வணிக ஆதாயத்திற்காகவும், கதைக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்பட்டதால், அவை 'டி மினிமிஸ்' விதிவிலக்கிற்குத் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


மொத்த நிதி உத்தரவு இரண்டு தனித்தனி வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது:


1) ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸ் முன்பு எம்.ஆர்.டி மியூசிக்கிடம் டெபாசிட் செய்திருந்த ரூ. 20 லட்சத்தை விடுவிக்குமாறு ரெஜிஸ்ட்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


2) திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2024ஆம் ஆண்டு டெபாசிட் காலக்கெடுவைத் தவறவிட்டதால், நீதிமன்றம் கூடுதலாக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.


எம்ஆர்டி மியூசிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் அசவாரி ஜெயின், கீதாஞ்சலி விஸ்வநாதன், ஐரா லா-வை சேர்ந்த சிவன்ஷ் திவாரி மற்றும் வழக்கறிஞர்கள் ரித்திக் ரகுவன்ஷி, ஷ்ருதுலா மூர்த்தி, ரிஷிகா அகர்வால் ஆகியோர் ஆஜராகினர். பரம்வா ஸ்டுடியோஸ் மற்றும் பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜே சாய் தீபக் மற்றும் வழக்கறிஞர்கள் மீனாட்சி ஓக்ரா, சாம்ராட் எஸ் காங் மற்றும் விஷ்ணு கம்பீர் ஆகியோர் ஆஜராகினர்.

 

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளது.


வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுக்க கொண்டாட்டங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சமூகசேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக இந்த கொண்டாட்ட வாரத்தை மாற்றும் நோக்கில் HPV தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.


பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். மேலும், சுகாதார பழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் முனைப்புடன் செயல்படுகிறது.


’நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற கேப்ஷனுடன் குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த தடுப்பூசி மற்றும் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.


இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் செயல்களும் நடைபெறும். 


நேர்மறையான சமூக மாற்றத்திற்காக செல்வாக்கையும் கூட்டு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற நடிகர் அல்லு அர்ஜுனின் எண்ணத்துடன் ஒத்துப்போகும் வகையில், சமூக சேவைக்கான அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.

 

புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ரசிகர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் ஒரு காவிய அனுபவமாக இந்த படம் இருக்கும் என்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘கத்தனார்’ டிரெய்லர் வெளியான உடனேயே விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ஒரு படத்தின் டிரெய்லர் இத்தகைய வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர்கள்: சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா,

இசை: ராகுல் சுப்ரமணியன்,

எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், 

கலை இயக்கம்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், 

இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி

 

2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது!


ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. 


உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.


பிரம்மாண்டமான ஓப்பனிங் மற்றும் சாதனை படைத்த இரண்டாவது வார இறுதிக்கு பிறகு, 2-வது வாரத்தின் வேலை நாட்களிலும் (திங்கள் முதல் வியாழன் வரை) படம் மிக வலுவாக நின்றது. இந்தியா மற்றும் முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்து குறிப்பிடத்தக்க வசூலை குவித்துள்ளது.


வசூல் விவரம் (இந்தியா)


முதல் வார மொத்தம் (8 நாட்கள்) – ரூபாய் 690.00 கோடி (நெட்)

2-வது வார இறுதி மொத்தம் – ரூபாய் 177.00 கோடி


2-வது வார வேலை நாட்கள்


நாள் 12 – திங்கள் – ரூபாய் 26 கோடி

நாள் 13 – செவ்வாய் – ரூபாய் 28 கோடி

நாள் 14 – புதன் – ரூபாய் 21 கோடி

நாள் 15 – வியாழன் – ரூபாய் 19 கோடி


2-வது வார மொத்தம் – ரூபாய் 271 கோடி


இந்தியா NBOC (நெட் வசூல்) – ரூபாய் 961.00 கோடி

இந்தியா GBOC (க்ராஸ் வசூல்) – ரூபாய் 1,134 கோடி


வெளிநாடுகள் (OVERSEAS)


வாரம் 1 + வாரம் 2 – ரூபாய் 367 கோடி


உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்


ரூபாய் 1,501 கோடிகள்

 

துரந்தர் பழிவாங்கல் - சாதனை பயணம்


- எக்காலத்திற்கும் சிறந்த ஓப்பனிங் வசூல் செய்த ஹிந்தி படம்

- கட்டண பிரிவியூ  மூலம் அதிக வசூல் செய்த படம்

- உலகளவில் முதல் வார இறுதியில் அதிக வசூல்

- அதிக முதல் வார வசூல்

- அதிக 2-வது வார வசூல்

- உலகளவில் மிக வேகமாக ரூபாய் 1000 கோடியை எட்டிய படம்

- மிக வேகமாக 100, 200, 300, 400, 500, 600, 700, 800 மற்றும் 900 கோடிகளை எட்டிய படம்

- வெளிநாட்டு சந்தைகளில் (முதல் வாரத்திற்குள்) மிகப்பெரிய வசூல் செய்த இந்திய படம்

- வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்தியப் படம்

- 'துரந்தர் பாகம் 1' படத்தின் வாழ்நாள் வெளிநாட்டு வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்தது.

 

Mrs. Sasikala Nagarajan, Founder of 18 Group of Companies, has been conferred with an Honorary Doctorate in recognition of her outstanding contributions to Global Business Leadership. The prestigious honor was awarded on March 31, 2026, in Chennai, India.


A visionary entrepreneur and dynamic leader, Mrs. Sasikala Nagarajan has played a pivotal role in driving innovation, business growth, and strategic leadership across multiple industries. Through her leadership of the 18 Group of Companies, she has demonstrated excellence in business development, organizational growth, and global expansion.


This recognition celebrates her dedication, resilience, and commitment to empowering businesses and creating impactful change in the corporate landscape. Her achievements continue to inspire aspiring entrepreneurs and business leaders worldwide.


Speaking on the occasion, Mrs. Sasikala Nagarajan expressed her gratitude for the honor and reaffirmed her commitment to fostering innovation and leadership in the global business community.


This honorary doctorate stands as a testament to her remarkable journey and enduring contributions to the world of business.


About Mrs. Sasikala Nagarajan :

Mrs. Sasikala Nagarajan is the Founder of 18 Group of Companies and a recognized leader in global business strategy and entrepreneurship. Her work spans multiple sectors, reflecting her vision and commitment to excellence…

 

கிரவுட் எண்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பில்  “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும்.


இந்த மியூசிக் வீடியோவை ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ளார்.


இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர்  விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.


இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது.


இந்த மியூசிக் வீடியோவின் ஒளிப்பதிவு / எடிட்டிங் பிரணவ் காந்த் மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த பாடலுக்கான நடன இயக்கத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் கவனித்துள்ளார்.


இந்த பாடலின் இசையை அச்சு ராஜாமணி அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை வழங்கிய அவர், இந்த மியூசிக் வீடியோ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.


இந்த பாடல் யூடியூபில் வெளியாகி, குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


“ஹே ப்ரூஸ்” — புதிய தலைமுறை தமிழ் இசையில் வித்தியாசமான முயற்சியாக உருவெடுத்து, உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

Pageviews