ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


இயக்குனர் பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தின் வசனங்கள் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் கே.ஜெ.ஆர் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜூன் 26-ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார். 


வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, 'விக்கல்ஸ்' விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் நடிகர் 'விக்கல்ஸ்' விக்ரம் பேசுகையில், ''பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் 'அந்தரன்' படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.


பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்


நடிகை இவானா வருண் பேசுகையில், ''இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.


நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், ''இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் 'கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது' என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, 'என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?' எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.


நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.


'அந்தரன்' என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் 'அந்தரன்'. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.


இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த 'அந்தரன்' வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.


'போர் தொழில்', 'ராட்சசன்', 'தெகிடி' ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.


இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.


இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,'' என்றார்.


தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ''இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் 'அடவி' என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.


அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் 'மனிதர்கள்' என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.


இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது' என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.


படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் 'அந்தரன்' என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.


அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் 'அந்தரன்' என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..


இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.


இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.


தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், ''அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.


தயாரிப்பாளர் சி வி குமார் 'சூது கவ்வும்'  படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.


இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.


புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை 'நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்' என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,'' என்றார்.


நடிகர் பிரஜின் பேசுகையில், ''இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.


தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும். 


நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.


பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும். 


இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும். 


ஜூன் 25ம் தேதி 'அந்தரன்' திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது. 


நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது. 


தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான 'இருமுடி கட்டு' படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது. 


மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான ரவி தேஜாவை இந்த க்ளிப்ம்ஸில் காண முடிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 


பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், ‘இருமுடி கட்டு’ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் கலாச்சார வேர்களும் ஆன்மிக அம்சங்களும் இந்த திரைப்படப் பயணத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன.


விஷுவல் கிளிம்ப்ஸ் மற்றும் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பும் படத்தின் மையக்கருவை தெளிவாக பிரதிபலிக்கிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அந்த வகையில், இந்தத் தலைப்பு பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது.


இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது. இது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு உறுதியளித்துள்ளது. 


நடிகர்கள்: ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,

வழங்குபவர்கள்: டி- சீரிஸ் குல்ஷன் குமார், பூஷன் குமார்,

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம்: சிவா நிர்வாணா,

இசை: ஜிவி பிரகாஷ்குமார்,

ஒளிப்பதிவு: விஷ்ணு ஷர்மா,

தலைமை நிர்வாக அதிகாரி: செர்ரி,

தலைமை நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்,

தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,

படத்தொகுப்பு: பிரவீன் புடி,

கூடுதல் திரைக்கதை: நரேஷ் பாபு பி,

இணை இயக்குநர்: சுரேஷ்,

ஒப்பனை: ஸ்ரீனிவாஸ் ராஜூ,

ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,

போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்ஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ


'இருமுடி கட்டு’ திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். 


எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும் அதை கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.


ஜூன்-5 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. 


தற்போது சூர்யா நடித்துள்ள 'கருப்பு' மற்றும் அர்ஜூன் நடித்துள்ள 'BLAST' திரைப்படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்று அதிக திரையராங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. 


ஆனால் 'ஆட்டி' ஒரு ஆகச்சிறந்த படமாக உருவாகி இருக்கின்றது என்பதால்  ‘ஆட்டி’ படத் தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான இசக்கி கார்வண்ணன் குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களிலாவது இத்திரைப்படம் வெளிவரவேண்டும் என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளார்.


இதனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையினைப் பெற்றுள்ள 'வி ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவுனர் சுரேஷ் காமாட்சியுடன் கலந்து ஆலோசித்து, அதன் அடிப்படையில் சுரேஷ் காமாட்சி விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் சிறந்த கால அவகாசத்துடன் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ‘ஆட்டி’ படம் வருவதே அந்த படைப்புக்கு கொடுக்கும் மரியாதையாகும் என ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் இப்படத்தை ஜூன்-12ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

 

தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிக்கும் இப்படம், மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுப்பூர்வமான தருணங்களை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த படைப்பாக உருவாகியுள்ளது.


ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள “தி ஒன் : வித்தின் யூ”, ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த திரைப்படமாகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கை, விதி, சூழ்நிலை மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை இப்படம் சுவாரஸ்யமாக ஆராய்கிறது.


கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கவர் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க முடியாத இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. சிவராத்திரியன்று, முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது.


இப்படத்தில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் லிஜோமோல் ஜோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ”பருத்திவீரன்” சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர் மற்றும் ஸ்மிருதி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய திறமைகளும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.


இப்படத்திற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். அவரது இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தின் காட்சியுலகை உயிர்ப்புடன் உருவாக்கியுள்ள நிலையில், எடிட்டர் சி.எஸ். பிரேம்குமார் சிக்கலான கதையமைப்பை மிக நேர்த்தியாக கட் செய்து காட்கிகளை திறமையாக வடிவமைத்துள்ளார். கலை இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால், ஆடியோகிராபர் எம்.ஆர். ராஜகிருஷ்ணன் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஏ. முத்துக்குமரன் ஆகியோரும் இணைந்து இத்திரைப்படத்திற்கு செழுமையான ஒரு சினிமா அனுபவத்தை வழங்கியுள்ளனர்.


வித்தியாசமான கதைக்களம், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள், யதார்த்தமான பின்னணி மற்றும் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான திரைக்கதை ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை வழங்க முனைகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தங்களின் விதியை மாற்றும் சக்தி உள்ளது என்ற கருத்தை “தி ஒன் : வித்தின் யூ” படம் வலியுறுத்துகிறது.


தற்போது படக்குழு வெளியிட்டுள்ள டைட்டில் டீசர், “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் மர்மமும் தீவிரமும் நிறைந்த உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. டிராமா, சஸ்பென்ஸ், த்ரில், ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத தொடர்புகளால் நிரம்பிய இந்த டீசர், அந்த நான்கு மனிதர்களின் வாழ்க்கைகள் எவ்வாறு ஒரு மறக்க முடியாத இரவில் ஒன்றாக இணைகின்றன என்ற ஆவலை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தகட்ட விளம்பர நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமை நிர்வாகி நெல்லை செழியன் தெரிவித்துள்ளார்.

 

திரைப்பட அறிமுகம் (CURTAIN RAISER)

டால்ஃப் லுண்ட்க்ரென் தலைப்புப் பாத்திரத்தில் நடித்த ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (1987), மேட்டெல் நிறுவனத்தின் இந்த தொடரின் முதல் அனிமேஷன் திரைப்படமான தி சீக்ரெட் ஆஃப் தி ஸ்வோர்ட்ஸ் (1985)-க்கு பிறகு வெளிவந்த முதல் நேரடி-நடிப்பு திரைப்படம் ஆகும். இந்த கதையில், பூமிக்கு வரும் இரண்டு இளைஞர்கள் பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனைச் சந்திக்கின்றனர். ஹீ-மேன் தன் நண்பர்களான மேன்-அட்-ஆர்ம்ஸ் மற்றும் டீலாவுடன் பூமிக்கு வருகிறான், தீய சக்தியான ஸ்கெலிட்டார் ஒரு கோஸ்மிக் சாவியை கைப்பற்றி எட்டர்னியாவையும் மொத்த பேரண்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு இந்த பயணம் மேற்கொள்கிறான்.


திரைப்பட சுருக்கம் (SYNOPSIS)


இயக்குனர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவான ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026), மேட்டெல் நிறுவனத்தின் மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது நேரடி-நடிப்பு திரைப்படம் ஆகும்.


எட்டர்னியாவின் முன்னாள் இளவரசன் ஆடம் கிளெண் (நடிகர் நிக்கோலஸ் கேலிட்சின்), தன் தாயின் சொந்த கோளான பூமியில் 15 ஆண்டுகளாக வாழ்ந்த பிறகு, தன் தந்தையின் கோளான எட்டர்னியாவிற்கு திரும்புகிறான். ஆனால் அங்கே வந்தவுடன் அவன் காண்பது அதிர்ச்சியூட்டும் உண்மையை — தன் சொந்த வீடு தரைமட்டமாகி, அந்த கோளம் முழுவதும் கொடும் போர்வீரனும் மந்திரவாதியுமான ஸ்கெலிட்டார் (நடிகர் ஜாரெட் லெட்டோ)-ன் இரும்புப் பிடியில் சிக்கியிருப்பதை.

தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மெண்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது. மேலும், அவன் தன் உண்மையான அடையாளத்தை — பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக — மாற வேண்டியதும் அவசியமாகிறது!


திரைப்பட குழு (CREDITS)

ஒளிப்பதிவு: ஃபேபியன் வாக்னர்

இசை: டேனியல் பெம்பர்டன்

வழங்குனர்: சோனி பிக்சர்ஸ்


 

ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் அக்கம் பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடி சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதை புரிந்து கொள்கிறது. 


ஆன் ஹாத்அவே மற்றும் ஈவன் மெக்க்ரெகர் ஆகியோர் நடிக்கும் தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடித்துள்ளனர்.  டேவிட் ராபர்ட் மிட்ச்செல் எழுதி இயக்க, ஜே.ஜே.ஏப்ரம்ஸ், ஹானா மிங்கெல்லா, ஜான் கோஹென், டேவிட் ராபர்ட் மிட்ச்செல், மாட் ஜாக்சன் மற்றும் டாமி ஹார்ப்பர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்கள் க்றிஸ் பெண்டர், ஜேக் வீனர், ஜோஆன் லீ மற்றும் லீஆன் ஸ்டோன்ப்ரேக்கர்.


கேமராவுக்கு பின்னால் மிட்ச்செலின் குழுவில் ஒளிப்பதிவு இயக்குனர் மைக்கேல் ஜியோலாகிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் மாயா ஷிமோகுச்சி, படத் தொகுப்பாளர் ஜான் ஆக்ஸல்ராட், இசையமைப்பாளர் மைகேல் ஜிக்கீனோ மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எரின் பெனக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் வழங்கும் பேட் ரோபாட் தயாரிப்பு, ஜாக்சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஒரு டேவிட் ராபர்ட் மிட்ச்செல் திரைப்படம்:  தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்.  வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் உலகமெங்கும் விநியோகிக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸில் மட்டும் ஆகஸ்ட் 2026ல் வெளியாகிறது.

 

'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' (He-Man and the Masters of the Universe) தொடர், இந்தியாவில் ஜூன் 5-ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' தொடரின் மலையாளப் பதிப்பில், ஹீ-மேன் கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தன் தனது குரலைக் கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகவே தோன்றுகிறது; ஏனெனில், இந்த புகழ்பெற்ற சூப்பர்ஹீரோவின் தீவிர ரசிகராக அவர் நீண்ட காலமாக இருந்து வருகிறார். ஹீ-மேனின் வலிமை, துணிச்சல் மற்றும் நீதி உணர்வைப் போற்றி ரசித்து வளர்ந்த உன்னி முகுந்தனுக்கு, தற்போது மலையாளப் பதிப்பில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தனது தனித்துவமான பாணியில் குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது, ஒரு 'முழுமை பெற்ற தருணமாக' (full-circle moment) அமைந்துள்ளது.


"சிறுவயது முதலே நான் ஹீ-மேனின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்ததும், புதிய அத்தியாயம் ஒளிபரப்பாகும் நேரத்தை எண்ணிப் பொழுதைக் கழித்ததும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. என் தலைமுறையைச் சேர்ந்த பல குழந்தைகளைப் போலவே, வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சவால் என்னை நோக்கி வரும்போதெல்லாம், 'என்னிடமே அந்த சக்தி இருக்கிறது!' (I have the power!) என்று நானும் பெருமையுடன் முழங்குவேன். பல விதங்களில், ஹீ-மேன் எனக்கு வெறும் ஒரு சூப்பர்ஹீரோவாக மட்டுமல்லாமல், துணிச்சல், வலிமை மற்றும் மன உறுதி ஆகியவற்றைக் கொண்டு எத்தகைய சவாலையும் வென்றுவிட முடியும் என்பதை நினைவூட்டும் ஒரு உத்வேகமாகவும் திகழ்ந்தார்," என்று அவர் கூறினார்.


ஹீ-மேன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுவதற்காகத் தனக்கு வந்த அழைப்பை நினைவுகூர்ந்த உன்னி, "ஹீ-மேனுக்குக் குரல் கொடுப்பதற்கான அழைப்பு எனக்கு வந்தபோது, ​​அது உண்மையிலேயே ஒரு கனவு போலத் தோன்றியது. என் சிறுவயது நினைவுகளில் நீங்காத இடம்பிடித்திருந்த ஒரு கதாபாத்திரத்திற்கு, இப்போது நான் என் சொந்தக் குரலைக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்! அதை இன்னும் சிறப்பானதாக்கும் வகையில், இது எனது முதல் சர்வதேச அளவிலான கூட்டு முயற்சியாகவும் (international collaboration) அமைந்தது. உண்மையாகவே, இது எனக்கு ஒரு 'முழுமை பெற்ற தருணமாக' அமைந்தது. நான் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் (recording studio) நுழைந்து, ஒலிவாங்கியின் முன் நின்று, எனது முதல் சில வசனங்களைப் பேசி முடிக்கும் வரை, இது நிஜமாகவே நடக்கிறதா என்பதை என்னால் முழுமையாகவே உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தருணத்தில்தான் நான் உணர்ந்தேன் — ஆம், இது நிஜமாகவே நடந்துகொண்டிருக்கிறது! அது ஒரே நேரத்தில் உணர்வுபூர்வமாகவும், உற்சாகமாகவும், மிகுந்த மனநிறைவு அளிப்பதாகவும் அமைந்திருந்தது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 'He-Man and The Masters of the Universe' குறித்துப் பேசிய உன்னி, "இப்படத்தை இப்போது பார்த்த பிறகு, தலைமுறைகள் தாண்டி மக்களால் நேசிக்கப்படும் ஒரு கதாபாத்திரத்திற்குச் செலுத்தப்படும் மிகச்சிறந்த அஞ்சலியாக 'He-Man and The Masters of the Universe' திகழ்கிறது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ரசிகர்கள் தங்கள் இளமைக்காலத்தில் ரசித்து வளர்ந்த அந்தப் பழைய நினைவுகளை (nostalgia) இது மீட்டெடுப்பதோடு, 'Eternia' உலகிற்குப் புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய ஆற்றலையும் வழங்குகிறது. பார்வையாளர்கள்—குறிப்பாக, நீண்ட காலமாக He-Man-இன் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள்—இந்த சாகச அனுபவத்தை நேரில் கண்டு ரசிப்பதற்கும், மலையாள மொழியில் நான் இந்தத் தனித்துவமான கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதைக் கேட்பதற்கும் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று கூறினார்.


Amazon MGM Studios-இன் ஆதரவுடனும், Travis Knight-இன் இயக்கத்திலும் உருவாகியுள்ள 'He-Man and The Masters of the Universe' திரைப்படத்தில், Nicholas Galitzine 'Prince Adam' ஆகவும், Camila Mendes 'Teela' ஆகவும், Jared Leto 'Skeletor' ஆகவும் நடித்துள்ளனர்; மேலும் 'Man-At-Arms' கதாபாத்திரத்தை Idris Elba ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் Alison Brie, Morena Baccarin மற்றும் Kristen Wiig ஆகியோர் 'Roboto' கதாபாத்திரத்திற்குத் தங்கள் குரல் வளம் சேர்த்துள்ளனர். வெகுஜனக் கலாச்சாரத்தின் (Pop Culture) மிக முக்கியமான கற்பனை உலகங்களில் ஒன்றை, இன்றைய புதிய தலைமுறையினருக்காக மீண்டும் உயிர்ப்பிப்பதே இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும்.


Sony Pictures Releasing International நிறுவனம், 'He-Man and The Masters of the Universe' திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், 2026-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது.

 

தமிழில் ஹீ-மேனுக்குக் குரல் கொடுத்ததன் மூலம் தன் வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை அடைந்துவிட்டதாகப் பாடகர் கார்த்திக் கூறுகிறார்: 'எட்டு வயது சிறுவனாக இருந்த என்னிடம் யாராவது சொல்லியிருந்தால்...'


ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது, மேலும் கார்த்திக் இதற்குக் குரல் கொடுத்துள்ளார்.


அதிகாரப்பூர்வமாக இது ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் வாரம்! முதலில் உலகளவில் ஆங்கிலத்தில் வெளியான இப்படம், இந்தியாவில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவை அடங்கும். தமிழ் பதிப்பில் பாடகர் கார்த்திக் ஹீ-மேனுக்குக் குரல் கொடுக்கிறார், அவருடன் ஆதித்யா மேனன் ஸ்கெலட்டோராகவும், அர்ஜுன் சர்ஜா டங்கனாகவும் குரல் கொடுக்கின்றனர். ஹீ-மேனுக்குக் குரல் கொடுப்பது பற்றிப் பேசுகையில், தன் வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை அடைந்துவிட்டதாக உணர்வதாக கார்த்திக் ஒப்புக்கொள்கிறார்.


1980-களில் வந்த அனிமேஷன் தொடரின் தீவிர ரசிகரான கார்த்திக், 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' தொடரில் ஒரு பகுதியாக இருப்பது தனக்குக் கிடைத்த கௌரவம் என்று கூறினார். "2026-ல் ஒரு நாள் நீ ஹீ-மேனுக்குக் குரல் கொடுப்பாய் என்று 8 வயது கார்த்திக்கிடம் யாராவது சொல்லியிருந்தால், அந்தச் சிறுவன் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டான். 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' தொடரில் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே நம்பமுடியாததாகவும், எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது. 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் வளர்ந்த பல குழந்தைகளைப் போலவே, நானும் எடர்னியா உலகத்தால் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். அந்தப் புகழ்பெற்ற வாளைப் பிடித்துக்கொண்டு, "என்னிடம் சக்தி இருக்கிறது!" என்று முழங்கி, எங்களுக்கென சிறிய வழிகளில் கதாநாயகர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கனவு கண்டோம்," என்று அவர் கூறினார்.


கார்த்திக்கைப் பொறுத்தவரை, ஹீ-மேன் ஒருபோதும் வெறும் அனிமேஷன் கதாபாத்திரம் மட்டுமல்ல. அவர் அதைவிட மேலானவர். "அவர் தைரியம், நம்பிக்கை மற்றும் வலிமை உள்ளிருந்து வருகிறது என்ற நம்பிக்கையைப் பிரதிபலித்தார். எனவே, தமிழில் ஹீ-மேனுக்கு டப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, உண்மையிலேயே என் சிறுவயதுக் கனவு நனவானது போல் உணர்கிறேன்," என்று அவர் பகிர்ந்துகொண்டார்.


ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்' படம் குறித்துப் பேசிய கார்த்திக், "இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், இது எவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கிறது மற்றும் எவ்வளவு உணர்வுப்பூர்வமான அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதுதான். இயக்குனர் டிராவிஸ் நைட், ஹீ-மேன் கதாபாத்திரத்திற்கு மிகுந்த ஆழத்தையும் மனிதநேயத்தையும் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் அவரை வெறும் ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ என்பதைத் தாண்டி, மிக மேலானவராக மாற்றியுள்ளார். இது ஒரு குரல் நடிகராகவும் கலைஞராகவும், என் குரல் மூலம் உணர்ச்சிகள், பலவீனம், வலிமை மற்றும் பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்த எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. இந்த முழு அனுபவமும் எனக்குப் பழைய நினைவுகளைத் தூண்டுவதாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், நம்பமுடியாத அளவிற்கு நிறைவளிப்பதாகவும் இருந்தது. ஹீ-மேனின் நீண்டகால ரசிகர்களும், பார்வையாளர்களும் இந்த புதிய உலகத்தை அனுபவிப்பதற்கும், அந்தக் கதாபாத்திரம் தமிழில் உயிர்ப்புடன் வருவதைக் கேட்பதற்கும் நான் உண்மையாகவே ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார்.


அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவாகும் 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்' படத்தில், பிரின்ஸ் ஆடம் கதாபாத்திரத்தில் நிக்கோலஸ் காலிட்சைன், டீலா கதாபாத்திரத்தில் கமிலா மெண்டஸ், மற்றும் ஸ்கெலட்டர் கதாபாத்திரத்தில் ஜாரெட் லெட்டோ ஆகியோர் நடிக்க, மேன்-அட்-ஆர்ம்ஸ் கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார். இப்படத்தில் அலிசன் ப்ரீ, மொரேனா பக்கரின் மற்றும் ரோபோட்டோவின் குரலாக கிறிஸ்டன் விக் ஆகியோரும் நடித்துள்ளனர். பாப் கலாச்சாரத்தின் மிகவும் பிரபலமான கற்பனை உலகங்களில் ஒன்றை ஒரு புதிய தலைமுறைக்காக மீண்டும் உயிர்ப்பிப்பதை இப்படம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் நிறுவனம், 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்' திரைப்படத்தை 2026 ஜூன் 5 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

 

தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்


உலக அதிசய தலைவா..!

ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே

வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள

கண்ணியமிக்க காயிதே மில்லத்  அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம்


தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான். 


நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது. 

உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது.

நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி  நீங்கள்.


இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் தமிழக வெற்றி கழகத்தின் இஸ்லாமிய பெண்ணை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய அதிசய தலைவர் நீங்கள். 


சிறுபான்மை நலன் காக்கும் அரசு என்று தங்களின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தலைவர் நீங்கள்.


சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலன் என்று இதுவரை மக்களை ஏமாற்றி வந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவர்களின் போலி முகத்திரையை கிழித்த தலைவர் நீங்கள். 


வழி தெரியாமல் இருந்த நாங்கள் இனி உங்களின் பின்னால் என்றென்றும் தொடர்வோம் 


முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவருக்கு  அமைச்சர் பதவியை கொடுத்த முதல் செயலே தங்களை உலக அதிசய தலைவர் ஆக்கியது என தேவர் திரைப்பட நடிகர் ஜெ.எம் பஷீர் அறிக்கை விடுத்துள்ளார்.

Pageviews