முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'லவ் பைட்' திரைப்படத்தை உருவாக்கவுள்ளது.
சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், 'டாடா' புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, 'தாய் கிழவி' புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான 'காஞ்சூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் 'லவ் பைட்' படத்தை இயக்குகிறார்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக 'லவ் பைட்' இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.
சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ-ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்-சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் 'லவ் பைட்' படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.
பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
*'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*vc2
தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.
இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.
டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.
“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.
இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,
“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர் என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கூறுகையில்..,
“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.
சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில்…,
“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22 மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.
பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.
சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட் அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ் காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின் திறனை வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.
படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
நடிப்பு:
சந்தீப் கிஷன்
தொழில்நுட்ப குழு:
எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா
தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி
தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments
இசை – மணி சர்மா
ஒளிப்பதிவு – மதி
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா
சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்
PRO – யுவராஜ்
பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது.
பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம்பெற்றன. கோவில் வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முன்னாள் MLA K. பாபு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA K. பிரேமன், சுமீஷ் அச்சுதன், மாட்டனூர் சங்கரன்குட்டி, மாறார், பிரகாஷ் உள்ளியேறி, ராதாகிருஷ்ணன், நித்தின், கோவில் செயலாளர் தேவிதாஸ் மற்றும் அறங்காவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கு கேரளா மற்றும் தமிழ் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டனர். ரவி மோகன் அவர்களின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், கோவிலின் ஆன்மிக சூழலும், பல்லாஸனா பழையகாவு பகவதி அம்மன் தேவஸ்தானம் அமைப்பின் பாரம்பரியப் பெருமையும் குறித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
விழாவை மேலும் கொண்டாட்டமயமாக்கியது பாடகி கெனீஷா அவர்களின் அதிரடி இசை நிகழ்ச்சி. தனது இசைக்குழுவுடன் மேடையேறிய அவர், சக்திவாய்ந்த குரல், உற்சாகமான மேடை நிகழ்வு மற்றும் ரசிகர்களுடன் கொண்ட நேரடி தொடர்பின் மூலம் அரங்கையே கொண்டாட்ட சூழலாக்கினார். மென்மையான மெலடிகளும், ஆற்றல் மிக்க பாடல்களும் கலந்த அவரது இசை நிகழ்ச்சி, ரசிகர்களை முழுமையாக ஈர்த்தது.
ஆன்மிகம், பாரம்பரியம், சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த “உத்சவ் 2026”, சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் நினைவுகூரத்தக்க விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ரவி மோகன் மற்றும் தனது இசை நிகழ்ச்சியால் விழாவை மேலும் உயர்த்திய கெனீஷா ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.









