In a setting steeped in devotion and timeless tradition, Hero Bellamkonda Sai Sreenivas and Kavya- #Sreenivasakavyanam stepped into married life through a serene and elegant ceremony held at Karnataka Bhavan in Tirumala. Surrounded by the spiritual energy of the sacred hills, the occasion unfolded as a close-knit celebration of love, culture, and family bonding.

The wedding rituals of #BellamkondaSreenivas and #Kavya progressed in accordance with Sanatana Dharma, with both families participating wholeheartedly in each sacred rite. The entire celebration carried a calm yet celebratory tone, where age-old customs were followed with sincerity, blending seamlessly with a refined modern sensibility.

The venue was transformed into a traditional visual spectacle, featuring temple-inspired decorations, lush floral arrangements, and shimmering golden accents that enhanced the devotional atmosphere. Every detail reflected a deep respect for heritage while maintaining understated elegance.

Adding a distinctive artistic touch, designer Shravan Kumar created specially curated outfits for the bride and groom. These images capture Bellamkonda Sreenivas and Kavya immersed in a cultural ceremony filled with tradition and elegance. Kavya dazzles in a heavily embellished saree with exquisite jewelry, while Sreenivas keeps it classic in traditional wear. Their expressions of joy and connection stand out against the intricately decorated, temple-like backdrop, making the moment both intimate and celebratory.

With only close family members and a select group of friends in attendance, the ceremony remained intimate yet deeply meaningful. As the couple begins a new chapter together, their union was marked by blessings, tradition, and quiet grandeur.

The celebrations are far from over, as a grand reception is scheduled to take place in Hyderabad tomorrow. The event is expected to be a star-studded affair, bringing together prominent members of the film fraternity, close friends, and well-wishers. With a larger guest list and an even more festive atmosphere, the reception promises to be a memorable gathering filled with warmth, elegance, and celebratory spirit, marking the next chapter of the joyous occasion in style.


CAST
Dhanush
Mamitha Baiju
KS Ravikumar
Jayaram
Suraj Venjaramoodu
Karunas
Prithvi Pandiarajan
Sreeja Ravi

CREW
Written & Directed by: Vignesh Raja
Produced by: Ishari K Ganesh
Co produced by: Kushmitha Ganesh
Production Company: Vels Film International & Think Studios
Additional Screenplay & Dialogues: Alfred Prakash, Vignesh Raja
Cinematography: Theni Eswar
Editing: Sreejith Sarang
Production Design: Mayapandi
Costumes: Kavya Sriram
Publicity Designs: Kabilan Chelliah
Music Label: Vels Music International
PRO: Riaz K Ahmed, Paras Riyaz, Sathish (AIM)

At the age of 16, the protagonist, Dhanush, takes the money his father, K.S. Ravikumar, had saved and runs away from his hometown. He subsequently takes up a life of petty theft. Dhanush, who falls in love with the female lead, Mamitha Baiju, decides to pull off one final heist in order to marry her.

Dhanush—the protagonist—and Prithvi set out to rob an MLA's house located in Thiruverumbur. Unexpectedly, Dhanush gets caught in the act, while Prithvi Pandiaraj manages to escape.

Suraj, a high-ranking police officer, attempts to frame Dhanush in several false cases in order to gain fame. Consequently, Dhanush escapes from the police station.

After six months, having given up his life of crime in Renigunta, he is now working at a hotel alongside his wife, Mamitha Baiju. Witnessing his wife's struggles, he decides to start a business of his own and travels to Ramanathapuram to visit his father.

There, he meets his father, K.S. Ravikumar, and asks him to sell their land to provide him with money. Dhanush is shocked when his father reveals that the land is mortgaged to a bank. At the same time, a foreclosure notice arrives due to the non-payment of the bank loan. Consequently, K.S. Ravikumar passes away.

Consequently, Dhanush intends to bury his father, K.S. Ravikumar, on their own land. However, bank officials forbid him from doing so. Under these circumstances, Dhanush decides to rob the very bank branch that had issued the loan, in order to reclaim the land and bury his father's body.

Ultimately, did Dhanush rob the bank or not? Did he bury his father's body or not? Did senior police officer Suraj arrest Dhanush or not? That forms the remainder of the story of the film *Kara*.


 Dhanush, who portrays the character Karasamy, has put in immense effort. Internalizing a full spectrum of emotions—including love, duty, affection, anxiety, and anger—he has delivered a deeply emotive performance. He was particularly stunning in the fight sequences.

Mamitha Baiju, playing the role of Dhanush's wife, has done full justice to her assignment as a village girl. Suraj, as the police officer, intimidates through his gaze alone. Jayaram, portraying the Regional Bank Officer, fits perfectly into the character of a cruel individual who metaphorically slits throats while wearing a smile.

Director K.S. Ravikumar, who plays the role of Dhanush's father, delivers a performance that benefits greatly from his wealth of acting experience. From Srija Ravi, who plays his wife, to Karunas as the uncle and Prithvi Pandiarajan—every actor in the film proves to be the perfect choice for their respective roles within the story.

Composed by G.V. Prakash Kumar, the songs are delightful to listen to, and the background score serves as a major strength for the film. The cinematography by Theni Eswar is beautiful.

Director Vignesh Raja has crafted a gripping screenplay centered on the various ways in which the general public is deceived by banks. This film explores a wide range of themes, including the bond between father and son, the relationship between husband and wife, and the significance of ancestral land.

 The film powerfully portrays the immense suffering innocent people endure when they are unable to repay loans taken from banks. Congratulations to the director for steering the narrative with gripping intensity from start to finish.

Verdict : Kara will fade The culture of interest by banks.

Rating : 4.8/5
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் 'வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29- Welcome To The World of 29' அறிமுக நிகழ்வு
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ - ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிப்பில் உருவாகியுள்ள '29' திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் 'வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29' எனும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

'மேயாதமான்' , 'ஆடை',' குலுகுலு ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' 29' திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம்- கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் மே மாதம் எட்டாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் நான்கு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் ... படத்தினை ரசிகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் வகையில் 'வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பி. எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி ,பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ் , ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் மகேந்திரன் பேசுகையில், '' எனக்கு இது ஒரு முக்கியமான மேடை. எனக்கு 29 வயது நடக்கும் போது தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். அன்றுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ரத்னகுமார் என்னை அழைத்து '29' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரத்னகுமார் அண்ணாவிற்கு நன்றி.

நான் சோர்வாக இருக்கும் தருணத்தில் யாராவது என்னை கை தூக்கி விட வேண்டும் என நினைப்பேன். பொதுவாக எல்லோருக்கும் எல்லாரும் இருப்பார்கள். ஆனால் நான் 35 ஆண்டு காலமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். சிலர் வருவார்கள். செல்வார்கள். கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள். சிலர் அழைத்துச் சென்று விட்டு விடுவார்கள். அது மிகவும் கடினமானதாக இருக்கும்.‌

நான் ஷான் ரோல்டனின் இசையில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருக்கிறேன். அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. அதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் நன்றி.

நான் நடிக்கும்போது பல தருணங்களில் எனக்கு தயக்கமாகவும் இருக்கும்... பயமாகவும் இருக்கும். நாம் ஒரு வகையில் நம்பிக்கையுடன் நடிப்போம். அதை எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாமல் இருக்கும். ஆனால் நான் என்னுடன் நடித்த சக நடிகரான விதுவை படத்தின் முதல் நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நடிப்பை பார்க்கும் போதும்... அவருடன் இணைந்து நடிக்கும் போதும்.. எனக்கு எந்த தயக்கமும், பயமும் இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர்.

நான் சிறிய வயதில் இருந்து நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அவர்களிடம் நான் என்னென்ன தகுதிகளை பார்த்தேனோ...! அவை எல்லாம் விதுவிடமும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்கிறார். இதற்காக அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன்''என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், '' இங்கு திரையிடப்பட்ட குட்டி கிளிம்ப்ஸை பார்த்திருப்பீர்கள். இதில் சத்யாவையும் , விஜியையும் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் விஜி. இது ஒரு லவ் ஸ்டோரி. 29 வயதில் உள்ள சத்யா. 21 வயதான பெண் விஜி. இந்த வயது இடைவெளியை தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஏனெனில் 21 வயதான விஜி கேரக்டருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருக்கிறது.‌ அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதில் கவனமாக உள்ள பெண். அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆனால் சத்யாவிற்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை. அவருக்கு விஜி மட்டும்தான் அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம்.

நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதே போல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.

கண்டிப்பாக இந்த லவ் ஸ்டோரியை பார்க்கும் போது ரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இந்தப் படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கை பயணம். இந்த குட்டி கிளிம்ப்ஸ் .. வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ஐ குறிக்கிறது. இன்னும் இது போல் நிறைய உள்ளது. விரைவில் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாக உள்ளது.

எனக்கு எப்போதும் இதை போல் அசலான உண்மையான இயற்கையான அடுத்த வீட்டு பெண் போன்று தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவேன். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும்... அதை திரையில் வெளிப்படுத்துவது கடினம். இது போன்றதொரு சவாலான கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

இந்தக் கதை 2010 ஆம் ஆண்டின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காதல் அப்பாவித்தனமாகவும்... இயல்பாகவும் ..நேர்மையானதாகவும்... இருக்கும். அதை நாங்கள் உணர்ந்தோம். அதனை படத்தை பார்க்கும் போது ரசிகர்களாகிய நீங்களும் உணர்வீர்கள்.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளாகட்டும் வசனங்களாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கும். ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்க்கும். இது போன்றதொரு அழகான விஜி எனும் கேரக்டருக்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் அளித்த இயக்குநருக்கு நன்றி '' என்றார்.

நடிகர் விது பேசுகையில், '' இந்த மேடை எனக்கு மிகவும் ஸ்பெஷலான மற்றும் தனித்துவமான மேடை. 13 வருடங்களுக்கு முன் கார்த்திகேயனை சந்தித்து அவரிடம் விவாதித்த ஒரு விசயம் இது. எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு வந்தேன். அப்போது பேசிய விசயங்கள் இப்போது நடந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். அதனால் படப்பிடிப்பு நிறைவடைந்த போது உண்மையில் உணர்வுபூர்வமாக கண்ணீர் சிந்தினோம்.

இந்த கதையில் சத்யாவாக நான் நடிக்க முடியும் என்று என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னா அண்ணாவிற்கு நன்றி. ரத்னாவிடம் ஒரு பேரன்பு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவரின் பேரன்பு உங்கள் அனைவரையும் வசப்படுத்தும். அவர் சொன்ன - சொல்லும் விசயம் அனைவரையும் சென்றடையும். இந்தப் படம் மிகவும் உயிர்ப்புள்ள படைப்பு. உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் இசை அற்புதமான மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறது. அவருடைய பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு ஜீவன். நான் ஒரு படத்தில் முதல் முதலாக ஹீரோவாக நடிக்கும் போது இப்படி ஒரு இசை அமைந்ததை ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான மாதேஷ் மாணிக்கத்திடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ப்ரீத்தி அஸ்ராணி இல்லாமல் இந்த படத்தின் பணிகள் நடைபெற்றிருக்காது. அவர் அந்த விஜி கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி இருந்தார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாது. '29' திரைப்படம் மே 8‌ ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்'' என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' இந்த படத்தின் நோக்கம் என்ன? இந்த படத்தை உருவாக்கி இருப்பதன் பின்னணி என்ன? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நான் நிறைய லவ் படங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் . இதனை மாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோது... இயக்குநர் ரத்னகுமார் என்னை சந்தித்தார். ஏதாவது வித்தியாசமானதாக தனித்துவமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அவர் கதை சொன்னார் நான் இதுவரை கேட்ட கதைகளிலேயே என்னை அதிகம் பாதித்த கதை இது . நான் நிறைய லவ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தின் கதை எனக்குள் வறண்டு போயிருந்த காதல் உணர்வை மீட்டது. அதனால் அவருக்கு முதலில் ஒரு நன்றி.

29 திரைப்படம் முழுவதும் ரத்ன குமாரின் உலகம். இந்தப் படத்தில் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படப்பிடிப்பின் முதல் நாள் நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் விது வேறு மாதிரியாக இருந்தார். நடிகர் குரு சோமசுந்தரம் நிறைய படங்களில் அவர் நடித்திருப்பார். ஆனால் அவர்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உடனடியாக தெரியாது. அந்த அளவிற்கு அவர் கதாபாத்திரத்துடன் பொருந்தி இருப்பார். அதேபோல் விதுவும் அன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். அழகான தோற்றம். இந்த படத்தின் கதை அவர் மீதுதான் பயணிக்கிறது.

ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்திற்கு ஒரு பில்லர் போல் இருக்கிறார். பொதுவாக என்னுடைய ஒவ்வொரு படத்திலும் பெண்களுக்கான குரல் ( வுமன் வாய்ஸ்) தானாக அமையும். இதில் அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார் இது எனக்கு பின்னணி இசை அமைக்க உதவியாக இருந்தது.

இப்போதைய ட்ரெண்டிங்கில் காதல் படங்கள் என்றால் 'டேட்டிங்.. என அவுட் லேயர்லேயே படங்கள் இருக்கிறது. ஆனால் காதலைப் பற்றி சற்று ஆழமாக சிந்திக்கும் கதைகள் இல்லை. அந்த அளவிற்கு காதலில் ஆழமாக செல்வதற்கு பலரால் முடியவில்லை. நவீன வாழ்க்கை அதற்கு இடம் தருவதில்லை. கவிதை போன்ற காதல் இன்றைய ஃபாஸ்ட்டான லைஃப்பில் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது.

காதல் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட உணர்வு என்பதை தான் இந்த படம் எனக்கு கற்றுக் கொடுத்தது.

நான் மிகவும் பிராக்டிக்கலான மனிதர். பொதுவாக திரைப்படத்தில் கிளைமாக்ஸ் பிறகு காதல் இருக்குமா ? என்று கேள்வி‌ எழுப்புபவன். ஏனெனில் காதல் என்றால் பாடல் ..கவிதை.. என்று எனக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது.

திரும்பத் திரும்ப ஏன் காதல் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது என எண்ணும் போது.. காதல் என்பது ஆத்மாவை தேடுவது போன்றது என்பதை உணர்ந்தேன். அதேபோல் 29 திரைப்படம் காதல் என்பது ஒரு உரையாடல். அதிலும் நேர்மையான உரையாடல் என்பதைப் பற்றி பேசுவதால்.. இந்தப் படத்தைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்... தமிழ்நாட்டினுடைய காதல் படங்கள் மற்ற ஊர் காதல் படங்கள் போல் கிடையாது. நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. காதலை எதார்த்தமாக கையாள்வது.‌ கவிதையாக கையாள்வது. நிலவைப் பற்றி பேசினாலும் நம்ம ஊரில் நம்ம மொழியில் பேசினாலும் சொன்னாலும் அது புதிது தான். நிலவு ஒன்றுதான். ஆனால் அதைப்பற்றி பேசுவது புதிதாக இருக்கும். தமிழ்நாட்டினுடைய காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் 29 நிச்சயமாக இடம் பெறும். இதை ரசிகர்களே மே 8 ஆம் தேதி அன்று திரையில் பார்த்து தெரிந்து கொள்வார்கள். இந்த படத்தின் வெற்றி விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் நன்றி'' என்றார்.


தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், '' இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.

என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்... லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.

இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.

நான் -கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் -ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.

நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்... நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

லோகேஷ் கனகராஜ்- கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்... அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌

விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.

செவன் ஜி ரெயின்போ காலனி... விண்ணைத்தாண்டி வருவாயா... அலைப்பாயுதே... போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.

இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.

முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14-ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌

நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்றார்.

தயாரிப்பாளர் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய 'மது' எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் 'மது' எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.

என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.

மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.

என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.

இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.

நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.

அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.

அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.

லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான 'பொல்லாத ஆசைகள்..' என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?...படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌

அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்... அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌

இந்தப் படம் என்ன மாதிரியான படம்... இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ... படம் எதைப் பற்றி பேசுகிறது... காதல் என்றால் என்ன... ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌

எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.

நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌

இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், '' மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் 'வாட்ஸ் இன் மைண்ட்' என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் 'அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்' என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.

சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.

இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.

அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு ' என்றார்.

இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.

நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.

கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.

அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.

எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா... பஸ் நம்பரா... ஏதேனும் ஒரு நாளா... அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌

நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது ...உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்.... தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.

29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் 'ஃபைட் கிளப்' எனும் ஒரு படமும், 'மைக்கேல்' எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.

இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌

2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.

இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் 'கர' திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் 'கருப்பு' திரைப்

படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌'' என்றார்

*ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்... சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!*

ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி

அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள்; அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ பிரசாத் முற்றிலும் புதியவர். சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தின் பிரத்யேக டாக் ஷோவின் முதல் எபிசோடில், எவ்வித திட்டமிடலும் இன்றி, தனது இயல்பான முகத்தை காட்ட வருகிறார் ராக்ஸ்டார் DSP.

தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணன் இந்தப் பேட்டியில் டிஎஸ்பியை கேள்விகளால் துளைத்தெடுக்கவில்லை; மாறாக அவருக்குள் இருக்கும் உற்சாகத்தை முழுமையாக வெளியே கொண்டு வருகிறார். கட்டுப்பாடற்ற விளையாட்டுகள், இதுவரை கேட்டிராத ரகசியங்கள் எனத் திரையில் ஒரு மேஜிக் நிகழப்போகிறது.

"நான் இசையமைப்பாளர் டி.எஸ்.பி.யாக அங்கே வரவில்லை; உண்மையான தேவியாக, மனதார மகிழ்ந்த தருணங்கள் அவை," என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் டி.எஸ்.பி.

தந்தையின் நினைவுகளும், MJ-ன் தாக்கமும்:

அதிவேக ஆட்டம் பாட்டங்களுக்கு மத்தியில், ஒரு மகனாக தனது தந்தை மீதான அன்பை பகிரும் தருணம் காண்போரை கண்கலங்க செய்யும். தந்தை மறைந்த பிறகு அவருக்கு எழுதிய கடிதம் மற்றும் 'நன்னாகு பிரேமதோ' (Nannaku Prematho) ஆல்பம் உருவான விதம் குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

மேலும், தனது ரோல் மாடல் மைக்கேல் ஜாக்சன் பற்றி பேசியதுடன், மேடையிலேயே அவர் பாணியில் நடனமாடி அரங்கத்தையே அதிரவைத்தார் டி.எஸ்.பி.

தமிழ்நாடா அல்லது ஆந்திராவா?

ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு கேள்விக்கு இந்த எபிசோடில் விடை கிடைத்துள்ளது. "தமிழ் மற்றும் தெலுங்கு - இந்த இரண்டு திரையுலகில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?" என்ற ஜெகனின் கேள்விக்கு டி.எஸ்.பி. அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

நிகழ்ச்சி விவரங்கள்:

நிகழ்ச்சி: ஜாலி ஓ ஜிம்கானா (Jolly O Gymkhana)
ஸ்ட்ரீமிங்: ஏப்ரல் 30 முதல், ஒவ்வொரு வியாழக்கிழமையும்
தளம்: சன் நெக்ஸ்ட் (Sun NXT) பிரத்யேகமாக
வழங்குபவர்கள்: கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ்
இணைந்து வழங்குபவர்கள்: தி சென்னை சில்க்ஸ் (The Chennai Silks) மற்றும் தமிழ் மேட்ரிமோனி (Tamil Matrimony)

'ஆஃபீஸ் கானா' (Office Gaana) பேண்டின் அதிரடி இசையுடன் தொடங்கும் இந்த தொடரில், அடுத்தடுத்த வாரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரவி மோகன், துருவ் விக்ரம், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், மஹத் ராகவேந்திரா, வைபவ், அஸ்வின் கக்குமனு, கோபி மற்றும் சுதாகர் என பல நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

சன் நெக்ஸ்ட் (Sun NXT) பற்றி:

சன் நெக்ஸ்ட் தென்னிந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமாகும். இதில் 4,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் மேற்பட்ட நேரலை டி.வி. சேனல்கள் மற்றும் 7-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கங்கள் உள்ளன. தரம் மற்றும் புதுமையான படைப்புகளுக்கு பெயர் பெற்ற சன் நெக்ஸ்ட், தென்னிந்திய ரசிகர்களின் முதன்மை தேர்வாக திகழ்கிறது.

Link - https://youtu.be/2bwUK-NvtSI?si=Z7yKBJpa-z3CF8Sf

*மதுரை சித்திரை திருவிழாவுடன் 'கருப்பு ' இசை வெளியீட்டு விழாவை ஒப்பிட்டுப் பேசி அசத்திய நடிகர் சூர்யா*

*மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் 'கருப்பு 'திரைப்பட இசை வெளியீட்டு விழா*

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், '' மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த 'கருப்பு' படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.

நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌

இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் 'கருப்பு' வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌

படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது '' என்றார்.‌

இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், '' இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.

நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.

திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.

ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.

'வலிமை' படத்தின் அப்டேட்டிற்கு பிறகு 'கருப்பு' படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌

இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் 'கருப்பு' படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.

படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது. '' என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், ': கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட்( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பி அண்ணாவை சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் 'சூர்யா 45' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை'' என்றார்.

 

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


 ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.


இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,


“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”


உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.


இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,


“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”


பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.


ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.

 

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்


‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்


சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”


கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

 

தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,  தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி  ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.


இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.


மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.


மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது.


இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.


திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம் பாடலுக்கு தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, பாடலை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் சிறப்பு சேர்க்கும் திறமை அவருக்கு உண்டு. ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற பல ஹிட் பாடல்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது ‘வெள்ளிச்சுடரே’யும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்து, இசை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாக மாறியுள்ளது.


’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘இரண்டு வானம்’. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 


’வெள்ளிச்சுடரே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பு நிறுவனம்: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்,

வழங்குபவர்: டிஜி தியாகராஜன்,

தயாரிப்பு: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் 

ஒளிப்பதிவு: தினேஷ் கே பாபு, 

படத்தொகுப்பு: சான் லோகேஷ்.

 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது. 


2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கதாபாத்திரமும் அவரது ஈர்க்கும் திரையிருப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. 


படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும். குறிப்பாக, இன்றும் பலரின்  காலர் டியூனாக இருக்கும் படத்தின் தீம் மியூசிக், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. ஸ்டைல், கதை சொல்லல், திறமையான நடிகர்கள் என ஆக்‌ஷன் திரில்லர் ஜானரை ‘பில்லா’ திரைப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்தது. ’பில்லா’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் மீண்டும் பார்த்து கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, புதிய தலைமுறைக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்துகிறது. 


’பில்லா’ திரைப்படத்தின் மறுவெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களைக் கவர இருக்கிறது. 


தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான பி. ஆண்டனி  தாஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியா ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் நிறுவனரான இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் தனித்துவமான சினிமா முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டமிடல், முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறார்.


சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சன் நெட்வொர்க்கில் அவர் செய்த விரிவான பணியின் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். காட்சிப் பதிவு, லைட்டிங் டிசைன் மற்றும் உயர் தரமான தயாரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.

Pageviews