Dhurandhar The Revenge has achieved a remarkable milestone by completing 100 days in cinemas, reaffirming its status as one of the biggest blockbusters!


Driven by its gripping storytelling, high-octane action, and powerful performances, the film has continued to captivate audiences. 


What makes Dhurandhar The Revenge’s 100-day theatrical run even more extraordinary is that, despite being available on two major OTT platforms (namely JioHotstar and Netflix) the film continues to draw audiences to cinemas.


Written, directed and produced by Aditya Dhar, and produced by Jyoti Deshpande and Lokesh Dhar, Dhurandhar The Revenge marks yet another remarkable milestone.. Presented by Jio Studios and produced by B62 Studios, the film released in India on March 19, 2026, and has since emerged as one of the biggest theatrical successes in Hindi cinema.

 

மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்

‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.


கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒரு மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் புத்திசாலித்தனமான யுக்திகள் மற்றும் புதிய வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை நகைச்சுவை, உணர்வு மற்றும் ஊக்கமூட்டும் தருணங்களுடன் சொல்லும் தொடர் தான் 

சபீர் சுதாகரின் இயக்கத்தில் உருவாகிய ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.


இந்த தொடரில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை, நட்பு, உணர்வு மற்றும் லட்சியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.


‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வைபவ் முருகேசனின் தொடர்ந்து வளர்ந்து வரும் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. ஒரே இரவில் புகழின் உச்சியை எட்டிய நடிகர் அல்ல அவர். மாறாக, ஒவ்வொரு வாய்ப்பையும் முழு அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி, கதாபாத்திரம் தோறும் தனது திறமையை நிரூபித்து, படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்.


வைபவின் நடிப்புப் பயணம் மிகவும் இளம் வயதிலேயே தொடங்கியது. 10 வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் தொடர்ந்து நடித்த அவர், மேடை அனுபவத்தின் மூலம் நடிப்பில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் நடனங்கள் அவரை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு பின்னர் நடிப்பின் மீதும், சினிமா கலை மீதும் ஆழமான ஆர்வமாக மாறியது. தனது திறமையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொழில்முறை நடிப்பு பயிற்சிகள் மற்றும் பல்வேறு பட்டறைகளில் பங்கேற்று, வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பே பல ஆண்டுகள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டார்.


தமிழ் திரைப்படங்களில் அவரது பயணம் ‘பேட்ட’, ‘கோமாளி’, ‘தாராள பிரபு’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களில் சிறிய ஆனால் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்கள் மூலம் தொடங்கியது. குறுகிய திரைநேரம் இருந்தபோதிலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரைநிலையால் கவனம் பெற்றார். பின்னர் ‘கதிர்’ திரைப்படத்தில் நடித்த துணைக் கதாபாத்திரம், குறைந்த காட்சிகளிலேயே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை அவருக்கு இருப்பதை மீண்டும் நிரூபித்தது.


அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பாராட்டுகளைப் பெற்ற ‘வதந்தி’ வெப் தொடர். சுமார் 500 பேரை கொண்ட திறந்த ஆடிஷனில் தேர்வாகி, ‘ஜோன்ஸ் துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மற்றும் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஹே லீலா’ வெப் தொடரிலும் நடித்ததன் மூலம் தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.


சமீபத்தில் இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், பூர்ணிமா ரவி இணைந்து நடித்த ‘யெல்லோ’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தது அவரது கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இயல்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், எந்த கதாபாத்திரத்திற்கும் உண்மைத்தன்மையை வழங்கும் நடிகராக அவரது அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது.


திரைக்கு வெளியேயும் வைபவின் கலைப் பயணம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் பாடகரான அவர், குதிரைச் சவாரி மற்றும் சிலம்பம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இசை மற்றும் கதை சொல்லல் ஆகியவை திரைப்படத்தின் முக்கிய அங்கங்கள் என்ற ஆழமான புரிதலுடன் சினிமாவை அணுகி வருகிறார்.


அவரது உழைப்புக்கு அங்கீகாரமாக, ‘யெல்லோ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக 2025 ஆம் ஆண்டின் Anna அண்ணா யுனிவர்சிட்டி டெக்கோ ஃபஸ்ட்-டி விருதில் சிறந்த அறிமுக நாயகன் (Best Debut Hero) என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இது, அவரது திறமையை திரையுலகமும் ரசிகர்களும் தொடர்ந்து அங்கீகரித்து வருவதற்கான முக்கிய சான்றாக அமைந்துள்ளது.


ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகவுள்ள ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ மூலம், தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு உறுதியான இடத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறார் வைபவ் முருகேசன். நேர்மையான அணுகுமுறை, விடாமுயற்சி மற்றும் இயல்பான திரைநிலையால், புதிய தலைமுறை திறமையான நடிகர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக அவர் உருவெடுத்து வருகிறார்.


‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெளியாக காத்திருக்கும் இந்த தருணத்தில், வைபவ் முருகேசனின் பயணம், பொறுமை, விடாமுயற்சி மற்றும் தனது கனவுகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை இணைந்தால்தான் நீடித்த வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

 

ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படமும் ஒன்று. காரணம், இப்படத்தை விஷால் இயக்கி நடிப்பது தான். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா...” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத் என்கிற V7h “லிங்கா...” பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார்.


தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை கொண்டு மாஸான ராப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல், லிங்கா கதாபாத்திரத்தை விவரிக்கும் விதமாகவும், அந்த கதாபாத்திரத்தின் கெத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. வினோத் எழுதிய இப்பாடலை அவருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடியிருக்கிறார்.


இப்பாடல் இளைஞர்களிடம் வைரலான நிலையில், பாடல் குறித்தும், தனது இசைப் பயணம் குறித்தும் ராப் பாடகர் வினோத் கூறுகையில் , “நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே இசை பயின்று வருகிறேன். எனது பொழுதுபோக்கு என எல்லாமே இசை தான். இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன், 5 வீடியோ பாடல்களையும் வெளியிட்டிருக்கிறேன். ராப் பாடல் மட்டும் அல்ல அனைத்துவிதமான பாடல்களையும் பாடுவேன். என் முதல் சினிமா வாய்ப்பு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் தான். அந்த படத்தில் ஒரு பாடல் பாடினேன். அதன் பிறகு எனது உணவக தொழிலை கவனிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், தொடர்ந்து சினிமாவில் பாட முடியாமல் போய் விட்டது.


பல வருடங்களுக்கு முன்பு நான் விஷால் அண்ணாவை சந்தித்தித்தேன், அப்போது அவர் ”தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும், அதற்கான அனைத்து தகுதியும் உன்னிடம் இருக்கிறது, விட்டு விடாதே”, என்று  கூறினார். இருந்தாலும் எனது தொழிலில் நான் அதிகம் கவனம் செலுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் தான் விஷால் அண்ணா என்னை ஒரு நாள் அழைத்து, லிங்கா பாடல் வாய்ப்பு கொடுத்தார். படத்தில் அவர் ஒரு டானாக உருவெடுப்பதை விவரிக்கும் அந்த பாடலின் ஐடியாவை என்னிடம் சொல்லி, உன்னால் முடியும் பண்ணு என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலை கேட்ட அவர், தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும், என்று கூறினார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாராட்டு தெரிவித்து, தொடர்ந்து பணியாற்றலாம், என்று கூறினார்.


சினிமாவை விட்டு நான் ஒதுங்கியிருந்தாலும், இசையை என்றுமே விடவில்லை. தொழிலில் நான் பிஸியாக இருந்தாலும், பல பாடல்களை எழுதி, டியூன் போட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன், அப்படி என்னிடம் சுமார் 40 பாடல்கள் இருக்கிறது. இந்த பாடல்களை கேட்டுவிட்டு தான் விஷால் அண்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடல்களை வெளியிடும் முயற்சிகளை விரைவில் மேற்கொள்ள இருக்கிறேன். அதேபோல், விஷால் அண்ணா நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பத்தையும் உருவாக்க இருக்கிறேன். 


லிங்கா பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி என்னுடைய திரை இசைப் பயணம் வேகமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதற்கு காரணமான விஷால் அண்ணாவுக்கு நன்றி.” என்றார். 


சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி வழங்கும் ‘லிங்கா’ படத்தை பி.சுரேஷ், ஆர்.பி.ஜீவன் செளத்ரி, ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் தயாரிக்கின்றனர். ரவி அரசு கதை எழுத, திரைக்கதை எழுதி விஷால் இயக்குகிறார்.  பொன் பார்த்திபன் மற்றும் விஷால் வசனம் எழுதுகின்றனர்.


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கின்றனர். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏகாதசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை  கும்பலை வைத்து கொலை செய்கிறார்.  அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார். அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு  இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக்  கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார்.   ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு  தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.  இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில்  இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா?  என்பதே  ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக்கதை.


ஆர்யா தனது வழக்கமான மாஸ் ஹீரோ பாணியைத் தாண்டி, அமைதியான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் அச்சுறுத்தலான, வித்தியாசமான தோற்றத்தில் வரும் இந்திரன்ஸ், ஒட்டுமொத்தப் படத்திற்கும் மிகப்பெரும் பலமாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார். முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத், சுனில், விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற வேடங்களில் நடத்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் பரபரப்பான மற்றும் சீரியஸான காட்சிகளை நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் திரையில் கடத்தியுள்ளது. இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.


உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை நகரத்து சென்றிருக்கும்  இயக்குநர்  ஜியேன் கிருஷ்ணகுமார்  இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார். 


ஆர்யா மற்றும் இந்திரன்ஸின் சிறந்த நடிப்புக்காகவும், அழுத்தமான சில அரசியல் காட்சிகளுக்காகவும் அனந்தன் காடு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.


*விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ் பிரம்மாண்ட அறிவிப்பு!*

*யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு - அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்!*



தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.

மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
DIRECTED BY ASHWATH MARIMUTHU
MUSIC BY ANIRUDH RAVICHANDER
ACTION BY ANBARIV
PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN

24, June 2026
RaajKamal Films International (RKFI) today commenced the inaugural shoot of its highly anticipated new production, 'DHARMAN', starring Superstar Rajinikanth. The film's title and first look were unveiled today, offering eager audiences their first glimpse into one of Indian cinema’s most anticipated events in recent years.

Few friendships in world cinema have endured as long, or remained as beloved, as that of Kamal Haasan and Superstar Rajinikanth. After more than five decades at the forefront of Indian cinema, the two icons come together for the first time in a producer-actor collaboration through 'DHARMAN'. Produced under the banner of RaajKamal Films International by Kamal Haasan and R. Mahendran, the film also marks Superstar Rajinikanth's first appearance in an RKFI production, making it a proud moment in the 46-year journey of one of Indian cinema’s most iconic studios.

The film is directed by Ashwath Marimuthu, who has emerged as a distinctive voice in contemporary Indian cinema and is widely regarded as one of the industry's most exciting young directors.

Joining Superstar Rajinikanth on screen are Simran, one of the most celebrated artists in South Indian cinema, and Raashii Khanna, a versatile performer acclaimed for her work across Tamil, Telugu and Hindi films.

The film boasts an exceptional creative team, with music composed by global sensation Anirudh Ravichander. Action choreography will be handled by the National Award-winning duo Anbariv, renowned for crafting some of Indian cinema's most memorable action sequences. The film's visual world will be captured by cinematographer Niketh Bommireddy, with Karthik Rajkumar serving as Production Designer. Pradeep E. Ragav joins as Editor, while Annadurai serves as Art Director and Co-produced by Disney.

Principal photography commenced today in Chennai with the film's inaugural shoot ceremony attended by the cast, crew, production team and distinguished guests.

The launch event was graced by the presence of several eminent members of the film fraternity and industry leaders, including Mr. Kalaipuli S. Dhanu, Mr. Anbuchezhian, Mr. R.K. Selva Mani, Mr. Lingusamy, Mr. Kannan (CTO, Sun Network), Mr. Shenbagamoorthi, Mr. Tamil Kumaran, Mr. Krishnan Kutty (JIO Star), Mr. Balachandran (JIO Star), Mr. Pradeep Milroy Peter (JIO Star), Mr. Anand (Saregama) and Mr. Saravanan Vinoth, making the occasion a memorable celebration of cinema and collaboration.

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.

சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

🔗https://youtu.be/-vlnhbtkyhw?si=X-_vwXntJsEkWFP5

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர்.

இந்தியா, 23 ஜூன் 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நாடகத் தொடரை ஜூன் 26 முதல் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஒரிஜினல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் விளையாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் அசாதாரண முயற்சிகளுக்கும் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலியாக உருவாகியுள்ளது.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு மற்றும் தமிழ்செல்வன் BFA கலை இயக்கத்தில் உருவாகியுள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை வரையறுக்கும் உற்சாகம், உணர்வு மற்றும் தோழமையை அழகாகப் பதிவு செய்கிறது.

மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு கனவுப் பயணமாக தொடங்கும் இந்த அனுபவம், விரைவில் நட்பு, உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய சாகசமாக மாறுகிறது. அந்தப் பயணத்தில், அவர்களின் உறுதியை சோதிக்கும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதோடு, இலக்கை விட பயணமே மறக்க முடியாததாக மாறக்கூடும் என்பதை உணர்கிறார்கள். நம்பிக்கை, சேர்ந்திருக்கும் உணர்வு மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் கிரிக்கெட் இணைக்கும் வலிமையான பிணைப்பை கொண்டாடுவதே மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் மையக்கருவாகும்.

ZEE5 தமிழ் & மலையாளத்தின் மார்க்கெட்டிங் – தென்னகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறுகையில், "இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டை விட மிகப் பெரிய உணர்வு; அது தலைமுறைகள், சமூகங்கள் மற்றும் எண்ணற்ற நினைவுகளை இணைக்கிறது. மம்மட்டியான் ஸ்டார்ஸ், ரசிகர்களின் ஆர்வத்தையும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அந்த தருணத்தை அனுபவிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அழகாகப் பதிவு செய்கிறது. தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் ரசிகத்தனத்தின் இயல்பான சித்தரிப்பை மையமாகக் கொண்ட இந்த தொடர், தமிழ்நாடு மட்டுமின்றி அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் மனதில் ஒலிக்கும் ஒரு கதையாக இருக்கும்" என்றார்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் இயக்குநர் சவிர் சுதாகர் கூறுகையில், "தங்களின் ஹீரோக்கள் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இந்த தொடர் ஒரு அஞ்சலி. கிரிக்கெட் இந்தக் கதையின் பின்னணியாக இருந்தாலும், மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் இதயம் நட்பு, லட்சியங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை வடிவமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களில்தான் உள்ளது. நேர்மையான, உணர்வுப்பூர்வமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த பயணத்தில் ZEE5 மூலம் பார்வையாளர்களும் இணையவிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.

நட்பு, உணர்வுகள், சாகசம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஒன்றிணையும் மறக்க முடியாத பயணமான மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ZEE5-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க சக்திமிக்க நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited (ZEEL)-இன் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, வீடியோ ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்குகிறது. பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் ஒரிஜினல்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது வழங்குகிறது.

🔗 https://youtu.be/ZKqU9H8r17c?si=ztgg1ZjLj_XcRWIr

 

The highly anticipated first look poster of the upcoming comedy-commercial entertainer "Marriage Story" has been officially released. Produced under the banner of Reel Petti Productions, the film is directed by filmmaker Sunil Dev.


"Marriage Story" marks the exciting reunion of director Sunil Dev and actor S.P. Siddarth, whose previous thriller collaboration, *Athomugam* (2024), received critical acclaim and a warm reception from the audience.


Shifting gears from their previous outing, the duo is back with a complete family entertainer packed with friendship, romance, and non-stop comedy.


The film features a dynamic ensemble cast bringing this commercial celebration to life: Lead Actors include S.P. Siddarth, Shabana Shahjahan Aryan, and Deepika Venkatachalam. The Supporting Cast has Veteran actors Nassar, Nizhalgal Ravi, Aruldoss, and Puduvai Poobalan in pivotal roles.


"Marriage Story" boasts a strong technical team ensuring a high-quality cinematic experience:


Technical Team:


Director: Sunil Dev

Cinematography: Tamil Selvan

Music Director: Deepan Chakravarthy

Editor: Tamil Arasan

Stunt Choreography: Miracle Michael

Production House: Reel Petti Productions


With "Athomugam" proving to be a success, the reunion of Sunil Dev and S.P. Siddarth has already generated significant buzz in the trade circuits. 'Marriage Story' promises to be a wholesome, theatrical laugh-riot for audiences of all ages.


With post-production work moving at a brisk pace, the team will soon announce the teaser and audio release dates.

 

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த வருட குடியரசு தினத்தில் இதுகாலம் வரை நடக்காத அதிசயமாகத் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர். “நந்தன் திரைப்படம் உருவாக்கிய சமூக புரட்சி இது” என சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதனை வரவேற்று இருந்தார்கள். இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 


கடந்த 20.6.26 அன்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். “தமிழ்த் திரைப்படங்கள் மகத்தான உணர்வைக் கொடுக்கின்றன. சமூகத்தைச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. நல்ல படங்களைக் கொண்டாடுவதுதான் சமூகம் சிறக்க உதவும்”  என இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS பேசினார். இணைத் தலைவர் மகேந்திரன், “நந்தன் மாதிரியான படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு தனி தைரியம் தேவை. சசிகுமார் அதனை சமூக அக்கறையோடு செய்திருக்கிறார். வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக அவர் நடித்த காட்சிகளைப் பார்த்தபோது திகைத்துப் போய்விட்டேன். கமலுக்கு சப்பாணி என்றால், சசிகுமாருக்கு நந்தன். அந்தளவுக்கு அடி உதை வாங்கி தலித் பஞ்சாயத்து தலைவராக தன்னை அப்படியே காட்டி இருக்கிறார் சசிகுமார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரம் மட்டுமல்ல, இன்னும் பல விருதுகள் ‘நந்தன்’ படத்திற்கு வந்து சேரும். சமூகத்தை வலிமைப்படுத்தும் இத்தகைய படைப்புகள்தான் இன்றைய தலைமுறையின் அவசிய தேவை…” என்றார். நிகழ்வில் நடிகர் சசிகுமாரும் இயக்குநர் இரா.சரவணனும் திரண்டிருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். “படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டெல்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. ‘நந்தன்’ படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார். “எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன். 


சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சசிகுமார், இரா.சரவணன் இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டது. ஜென்ஸி தலைமுறையினரும் இத்தகைய சமூக அக்கறையான படங்களைப் பார்க்க வேண்டும் என்பதால் வரும் வாரத்தில் ‘நந்தன்’ படத்தை பிரத்யேகமாகத் திரையிடவும் டெல்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

Pageviews