சென்னையில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வரும்  சுராஜ் ,  மனைவி  தேவதர்ஷினி மகன் கென்னுடன் வசித்து வருகிறார்.  10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் ஒன்றுதான் வாழ்க்கை என்று இருக்கிறார். இந்நிலையில் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியை கென் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்.  சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார். இதே சமயம் முகநூல் மூலம் அறிமுகமாகும்  பிரியதர்ஷினி  நெருங்கி பழ இதை நேரில் பார்க்கும்  மீனாட்சி கென்னை கன்னத்தில் அறைவதுடன் காதலை முறித்துக் கொள்வதாக கூறுகிறார். பிரியதர்ஷினியுடனான காதலும் பொய் என கென்னுக்கு தெரிய வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்க்கும் கென்னின் அப்பா சுராஜ்  அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் கென் பள்ளிப்படிப்பை தொடர்ந்தாரா? இல்லையா? கென் குடும்பத்திற்காக காதலை தூக்கி எறிந்தாரா ? இல்லையா?  என்பதே  ‘யூத்’  படத்தின் மீதிக்கதை.


பள்ளி மாணவனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், துறுதுறுவென நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், காமெடி , ஆட்டம், பாட்டம், சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  நாயகிகளாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். நாயகனின் அப்பாவாக   நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு எதிர்த்த நடிப்பால் நிஜ அப்பவாவே வாழ்ந்திருக்கிறார். இரவு மூன்று மணிக்கு மேல் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.


நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இயல்பான நடிப்பால் கவர்கிறார். படத்தின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல துணை நிக்கிறார்.  பள்ளி முதல்வராக நடித்திருக்கும் நளினி , நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைத்து நண்பர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. விக்கி ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.


குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் காதலா , குடும்பமா எது முக்கியம் என்று எடுக்கும் முடிவு படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துடுகிறது. இயக்குநர் கென் கருணாஸ் இத்திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக ஜெயித்திருக்கிறார்.


Kamal Haasan Sir was honoured with the Paidi Jairaj Film Award at the Telangana Gaddar Film Awards, recognising a remarkable career that spanned over six decades across multiple Indian film industries. Named after cinema pioneer Paidi Jairaj, the award acknowledged his significant and lasting contributions to Telugu cinema through classics like Sagara Sangamam and Swathi Muthyam.

The award was presented to Mr. Kamal Haasan by the Honourable Chief Minister of Telangana, Mr. Anumula Revanth Reddy.

At a time when “pan-India cinema” is widely celebrated, Kamal Haasan Sir’s early work across languages in the 80s and 90s stood as a true foundation for the movement. The honour also celebrated a legacy defined by innovation, where his experimentation in storytelling, characterisation, and technology has continued to shape mainstream Indian cinema.

Incredible Productions’ next intense venture ‘Game Play’ first look revealed !!

Following the success of Kaalidas (2019), Incredible Productions is back with its next venture, a suspense thriller titled Game Play. The film’s first look has been unveiled by leading director Karthik Subbaraj, creating strong buzz and raising expectations among fans.

Sivanesan S, who is known for directing the popular television show Naalaiya Iyakkunar (Seasons 1–4), is making his directorial debut with this film. With the concept, “Script is the Real Hero,” he has attempted a unique narrative style in his very first project.

Centered around financial crime, Game Play is shaping up as a suspense investigative thriller packed with unpredictable twists at every turn. With a fresh story premise and a distinctive treatment, the film promises a new cinematic experience for Tamil audiences.

The first look, released with the tagline “Exit is an Illusion,” features a striking shattered-glass design, presenting the main characters with a blend of intense emotions. This unique poster has already received a positive response and has further heightened curiosity about the film.

Actors Kishore and Charukesh of HeartBeat fame play the lead roles, while Shali Nivekas, Vinod Kishan, and Charlee appear in pivotal roles.

The film’s music is composed by Vishal Chandrasekar, with cinematography handled by Suresh Bala and editing by Bhuvan Srinivasan. With an experienced technical team on board, the film is shaping up to be a quality production.

The shooting of the film has already been completed, and post-production work is currently progressing at a brisk pace. Official announcements regarding the teaser, trailer, and audio launch are expected to be released soon.

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்"நீ Forever".

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்..

எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...,
இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி

இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,
முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.

டாக்டர் வித்யா பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.

நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.   நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,
நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி

நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..,
இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..,
இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..,
இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.

நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,
முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி

நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..,
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.

முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது. இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இன்றைய Gen-Z தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"நீ Forever" படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: புகழ் & ஈடன்
எழுத்து மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
இசை: அஸ்வின் ஹேமந்த்
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்
பாடலாசிரியர்: கு.கார்த்திக்
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
VFX: Hocus Pocus
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜயராணி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்
மக்கள் தொடர்பு : AIM சதீஷ்.

 

உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது.


'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்கும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, 'Spider-Man: Brand New Day' திரைப்படம் பீட்டர் பார்க்கர் மற்றும் ஸ்பைடர்-மேன் ஆகிய இருவருக்கும் ஒரு முற்றிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. 'No Way Home' நிகழ்வுகள் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பீட்டர் இப்போது முற்றிலும் தனிமையில் வாழும் ஒரு முதிர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார்; தான் நேசிக்கும் மக்களின் வாழ்க்கையிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் தன்னைத் தானே முன்வந்து அழித்துக்கொண்டு அவர் வாழ்கிறார். தன் பெயர் யாருக்கும் தெரியாத ஒரு நியூயார்க் நகரில் குற்றங்களை எதிர்த்துப் போராடும் அவர், தன் நகரத்தைப் பாதுகாப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு — ஒரு முழுநேர ஸ்பைடர்-மேனாக — செயல்படுகிறார். ஆனால், அவர் மீதான பொறுப்புகளும் அழுத்தங்களும் தீவிரமடையும்போது, ​​அந்த அழுத்தம் ஒரு வியத்தகு உடல்ரீதியான மாற்றத்தைத் தூண்டி, அவரது இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைகிறது. அதே வேளையில், விசித்திரமான புதிய பாணியில் நிகழும் குற்றங்கள், அவர் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தல்களில் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.


டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்-மேனாகத் திரையில் தோன்றுகிறார். இவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படலான், சேடி சிங்க், ஜான் பெர்ன்தால், மார்க் ரஃப்பலோ, மைக்கேல் மாண்டோ மற்றும் ட்ராமெல் டில்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Sony Pictures Entertainment India நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 31 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், அனைத்து உயர்தரத் திரையிடல் வடிவங்களிலும் (premium formats) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 

ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு வகையில் தங்களது ஊருக்கு குடிநீரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு தண்ணீர் ஓட்டம் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த ஓட்டம்  ஒருவரது வீட்டுக்கு அடியில் அமைகிறது ஊர் நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு நிபந்தனை விதிக்கிறார், போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக சொல்கிறார். அதன்படி, ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் கிணறு தோன்றுகிறார்கள். அப்போது அந்த பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது. இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது. இதனால், அந்த ஊர் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்பட, ஊர் மக்களையும், தங்களது சொந்த மண்ணையும் காப்பாற்ற ஒருவன் முயற்சி செய்கிறார் ? இதன் பின் என்ன ஆகிறது என்பதை நகைசுவை கலந்து சொல்வது தான் இந்த ‘கெணத்த காணோம்’.



இந்த படத்தில் சிற்பி மற்றும் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார்,  மக்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றும்படியான வசனங்களை பேசி கதையின் நாயகனாக தன்னை உருவகப்படுத்தி விடுகிறார், இந்த படத்தில் மக்கள் குரலாக இருக்கிறார். 


மேலும் கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், யோகி பாபுவின் காதலியாக வலம் வருகிறார். ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்கள் பேசினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லை. 



தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வு. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மூலம் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. அதிலும், விசாரணை என்ற பெயரில் காவலர்கள் ஊர் மக்களை அடிக்கும் காட்சிகளில் மனுஷன் தன் டைமிங் வசனங்கள் மூலம் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைத்து விடுகிறார்.


நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தியாகராஜன், புழுதி படிந்த மண் மற்றும் தண்ணீர் இன்றி வாடி கிடக்கும் மக்களை எந்தவித கலப்படமும் இன்றி காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை வீர தீரமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் சொல்பவர்களுக்கு மத்தியில், விபரம் அறியாத அம்மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், வெள்ளந்தியான குணத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை படம் பார்த்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.  இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் இன்றி தவிக்கும் கிராமங்களின் சோகமான கதையை, நகைச்சுவையாக சொன்னாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியிருக்கிறார்.

 

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.


இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.


மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  


படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் - கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.


வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் '- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. 'லக்கி பாஸ்கர் ', மற்றும் 'வாத்தி' ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.


சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.

 

'மோ', 'மாயோன்', 'மெட்ராஸ் மேட்னி', செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார். 


'இருட்டு', 'தலைநகரம் 2' படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். 


திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், "சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்," என்றார். 


யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். 'பகவந்த் கேசரி', 'அகண்டா', 'அகண்டா 2' உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார். 


மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் துரை V.Z. இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். 

 

சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.


சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது.


இந்த வெற்றி குறித்து ராலே ராஜன் கூறுகையில், “உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்துள்ளேன். என் இசையும் வரிகளும் இவ்வளவு விரைவாக மக்களிடம் சேர்ந்தது ஒரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது. இது இன்னும் தொடக்கம் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளர் ராலே ராஜன், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, தமிழின் சங்கப்பாடல்களுக்கு  இசைவடிவம் கொடுத்தவர். சந்தம் என்ற அந்த ஆல்பம் சர்வதேச டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த முதல் தமிழ் படம், இந்த வருடம் வெளியாகவுள்ளது.

 

'ராஜாதிராஜ் யாத்ரா' எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது.


திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள‌ 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. 


அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என‌ பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் ரசனைக்கும் விருந்து படைக்கும் வகையில் இந்த நாடகம் திகழும். 


சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் 'ராஜாதிராஜ் யாத்ரா' அரங்கேற்றப்படும்.


காட்சி நேரங்கள் பின்வருமாறு:

* மார்ச் 27 – மாலை 7:00 மணி

* மார்ச் 28 – பிற்பகல் 2:00 மணி மற்றும் மாலை 7:00 மணி

* மார்ச் 29 – காலை 11:30 மணி மற்றும் மாலை 4:30 மணி


இந்தி மொழியிலான இந்த நாடகம் அனைத்து மொழி ஆன்மிக அன்பர்கள் மற்றும் கலை ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தெரிவித்துள்ளது.


'ராஜாதிராஜ் யாத்ரா' இசை, நடனம் மற்றும் கதைசொல்லல் மூலம் கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் தெய்வீக பெருமைகளை முன்வைக்கும் பெரிய அளவிலான கலைப் படைப்பாகும். கோகுலத்தின் குறும்பு குழந்தை முதல் ஞானமுள்ள தத்துவஞானி மற்றும் துவாரகையின் மாமன்னர் என இந்த நிகழ்ச்சி கிருஷ்ணரை பல வடிவங்களில் சித்தரிக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை, தைரியம் மற்றும் போதனைகளை இந்த நாடகம் எடுத்துரைக்கிறது. மறக்கமுடியாத‌ கலாச்சார அனுபவமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் புக் மை ஷோ தளத்தில் கிடைக்கும்.

Pageviews