Cast: Prashanth Pandiyaraj, Narmitha M.V, Chaya Devi, Aruljothi, Balaji Sakthivel, Kausalya, Arul Doss, Meena, Hello Kandasamy
Music: Sam C.S.
Cinematography: Ashok Kumar
Direction: Vignesh Natarajan
Public Relations: Sathish & Siva (AIM)

In Trichy, Balaji Sakthivel—a retired school headmaster—desires to secure a government job for his only son, Prashanth Pandiaraj.
To that end, he urges his son to take various government examinations. However, as Prashanth fails to pass any of them, his maternal uncle, Kali Venkat, steps in and secures him a job in the police force.

Prashanth joins the Ponmalaikottai Police Station in Trichy as a constable. Initially, when assigned minor tasks, he fails to execute them properly.

Under these circumstances, while being escorted to court, a thief arrested in a jewelry theft case escapes from Prashanth. Humiliated by this incident, Prashanth becomes the target of ridicule and mockery from others.

At one point, Prashanth decides to quit the police force altogether; however, heeding his father's advice, he takes up a backlog of pending warrant cases—and in successfully resolving them, he proves his true worth.

Consequently, the personnel at the police station look at him with astonishment. Meanwhile, Prashanth severely beats up some students who have been arrested in connection with a drug case. At the same time, he sets out to apprehend a thief who had escaped from his custody.

Meanwhile, the student whom Prashanth had struck passes away. Prashanth is left in shock by this turn of events. Ultimately, does Prashanth manage to clear his name in the student's murder case? And does he succeed in apprehending the thief he set out to catch? This forms the remainder of the story in the web series *Warrant*.

Prashanth Pandiyaraj, playing the character of Kottai Karuppu Sami, has truly embodied the role of an innocent youth—a simple-hearted man with a gentle nature. His performance is delightful to watch in some moments and laugh-out-loud funny in others. The efforts he undertakes to bring closure to each life are truly praiseworthy.

Narmitha M.V., who played the role of a nurse, and Chaya Devi and Aruljothi—who portrayed sex workers—have executed the tasks assigned to them perfectly.

The performances of Balaji Sakthivel, who plays Prashanth Pandiyaraj's father; Kausalya, who plays his mother; and Arul Doss, who plays the Police Inspector, are noteworthy. The acting of everyone in the supporting cast—including Kali Venkat as the maternal uncle, Hello Kandasamy as the constable, and the actor portraying the character Kodaikanal Saravanan—was thoroughly enjoyable.

Composer Sam C.S.'s songs and background score serve as a strong support to the narrative flow. Ashok Kumar's cinematography offers a visual feast for the eyes.

Director Vignesh Natarajan has crafted this screenplay centering on the theme of custodial death. Throughout the script, he propels the narrative forward, keeping the audience in suspense with the constant anticipation of what will happen next in each chapter. Congratulations to the director for driving the story with such intensity and momentum from start to finish.



தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”.
“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….,
ஜி.கே.எம். தமிழ்குமரன் பேசியதாவது..,
“பரிமளா அண்ட் கோ” பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து கலைஞர்களையும் எங்களின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இந்த படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்த படத்தின் முழு பொறுப்பையும் நாங்கள் பாண்டிராஜ் சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். இந்த படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் அவர்தான். அவர் உழைப்பு, அர்ப்பணிப்பு உண்மையிலேயே அபாரமானது. சமீபத்தில் பின்னணி பணிகளை பார்த்தபோது, “எப்போது படம் எடுத்தீர்கள்?” என்று பலரும் கேட்கும்படி ஆச்சரியப்படும்படி அவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
இந்த மாதிரி உழைக்கும் இயக்குநரை பார்ப்பதே கடினம். இந்த படத்தில் பணியாற்றிய முழு குழுவும், ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்திருக்கிறது. அதனால் இந்த படம் மிகவும் அழகான படைப்பாக உருவாகியுள்ளது.
இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,
இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்துள்ள அனைத்து மீடியா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேடையில் பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஜெயராம் சார், ஊர்வசி அக்கா, ஹீரோயின், சாண்டி மாஸ்டர் போன்ற பல முக்கியமான கலைஞர்களுடன் நானும் உட்கார்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. “பரிமளா அண்ட் கோ” படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் சார் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். எப்படி நடிக்க வேண்டும், எப்படி அந்த காட்சியை அழகாக கொண்டு வர வேண்டும் என்று மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்தார். அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது.
சில படங்கள் ஆண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் பெண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் குறிப்பிட்ட வயதினருக்கே பிடிக்கும். ஆனால் பாண்டிராஜ் சாரின் படங்கள் என்றால் குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கும் படங்களாக இருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான குடும்ப திரைப்படம் தான் “பரிமளா அண்ட் கோ”.இந்த படம் அனைவரும் திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சார் மற்றும் தயாரிப்பாளர் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இயக்குநர், நடிகர் ஆதித்யா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். இது உண்மையிலேயே ஒரு அருமையான டீம். பாண்டிராஜ் அண்ணா அடிக்கடி என் ஆபிஸுக்கு வருவார். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரங்களில் நாங்கள் சந்திப்போம். அந்த சந்திப்புகள் எப்போதும் அருமையான மாலையாக இருக்கும். அவர் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் பழகும் மனிதர். இந்த படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அதற்காக அண்ணாவிடம் நிறைய டேக்குகள் வாங்கியிருக்கிறேன். இருபது, இருபத்திரண்டு டேக்குகள் கூட போயிருக்கும். ஆனாலும் மிகவும் பொறுமையாக இருந்து, ஒரு நடிகருக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அழகாக வழிகாட்டினார்.
கேமரா முன் நடிப்பது எளிதல்ல. இங்கே ஜெயராம் சார், ஊர்வசி மேடம் போன்ற பெரிய கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஒரு பெரிய அனுபவம். அந்த அழுத்தம் எனக்கும் இருந்தது. அதனால்தான் இவ்வளவு டேக்குகள் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. பாண்டிராஜ் அண்ணா எந்த படம் எடுத்தாலும் அது மக்களிடம் நிச்சயமாக சென்று சேரும். குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கக்கூடிய படங்களை தான் அவர் எப்போதும் கொடுப்பார். அதேபோல் “பரிமளா அண்ட் கோ”வும் ஒரு அருமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.இந்த படம் பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகர் சஞ்சீவி பேசியதாவது..,
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.இந்த படத்தில் பணியாற்றிய எங்கள் இயக்குநர் பாண்டிராஜ் சார், தமிழ் குமரன் சார் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. நான் பல வருடங்களாக பாண்டிராஜ் சாரை பின்தொடர்ந்து வந்தேன். ஆனால் சரியான நேரம் அமையவில்லை. அதன் பிறகு “மூடர் கூடம்” படத்தை சார் வெளியிட்டார். அதன் பின்னர் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ரொம்ப நன்றி சார்.
இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் நன்றி. இந்த பெரிய மேடையில் எனக்கும் ஒரு இடம் கொடுத்து, இந்த வாய்ப்பை வழங்கிய பாண்டிராஜ் சார் மற்றும் தமிழ் குமரன் சாருக்கு மனமார்ந்த நன்றி.

நடிகர் ஹர்ஷத் பேசியதாவது..,
இப்போது வெயில் அதிகமாக இருக்கிறது. எல்லோரும் உடம்பை நன்றாக எல்லாரும் ஆரோக்கியமாக இருங்கள்.
“பரிமளா அண்ட் கோ” பாண்டிராஜ் சார் படத்தில் நடிப்பது எனக்கு முதல் அனுபவம். குறிப்பாக பாண்டிராஜ் சாருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமான விஷயம். அவருடைய உதவி இயக்குநர்கள், தொழில்நுட்ப குழு, கேமராமேன் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எனக்கு பாண்டிராஜ் சார் பல வருடங்களாக தெரியும். அவருடைய படங்களை பார்த்து, ஒருநாள் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. இந்த படத்தை பார்த்து என்னை நேரடியாக தேர்வு செய்து வாய்ப்பு கொடுத்தது அவர்தான்.அவருடன் வேலை செய்த அனுபவம் வேற மாதிரி. மிகவும் வேகமாகவும், அனுபவத்துடனும் வேலை செய்வார். அதுதான் அவருடைய சிறப்பு. இந்த வாய்ப்புக்காக பாண்டிராஜ் சாருக்கு மனமார்ந்த நன்றி.

நடிகை காயத்திரி பேசியதாவது..,
இந்த தருணம் எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. பாண்டிராஜ் சாரை சந்தித்ததிலிருந்து, டீசர் பார்த்தது வரை, இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை எல்லாம் சந்திப்பது வரை — எல்லாமே ஒரு கனவு போலவே இருக்கிறது.
இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. என்ன சொல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. ஏனெனில், பாண்டிராஜ் சாரின் படங்களை ஒரு ரசிகராக பார்த்து ரசித்து வளர்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.இந்த படத்தின் முழு நடிகர்கள், உதவி இயக்குநர்கள் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
“பரிமளா அண்ட் கோ” இந்த மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறேன்.இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி.


நடிகை அனந்திகா பேசியதாவது..,
“பரிமளா அண்ட் கோ” எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான படம். இந்த படம் என் இதயத்தில் எப்போதும் ஒரு தனி இடம் பெறும். இந்த படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

முதலில் பாண்டிராஜ் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. அவர் அழைத்தபோது நான் இந்த படத்தில் நடிப்பேன் என்று கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று இந்த மேடையில் நம்முடைய படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜெயராம் சார், ஊர்வசி மேம், சஞ்சனா, சாண்டி மாஸ்டர் மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருடனும் சேர்ந்து வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.
இந்த கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் இருக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான கதையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். “பரிமளா அண்ட் கோ” படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும். இந்த படம் குடும்பம் முழுவதும் சேர்ந்து சிரித்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் நான் நடுவில் தான் இணைந்தேன். முதலில் என்னை தொடர்புகொண்ட ராம்கி சாருக்கு நன்றி. ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க முக்கிய காரணம் associate director திவ்யா. இந்த கதாபாத்திரத்தை பற்றி மிகவும் பொறுமையாக விளக்கி, எனக்கு இருந்த சந்தேகங்களை நீக்கி, “நீ கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்” என்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். அதற்காக ரொம்ப நன்றி திவ்யா.இந்த படத்தில் ஜெயராம் சார், ஊர்வசி மேம், மிஷ்கின் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இருப்பது தெரிந்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அவர்களுடன் எனக்கு நேரடி காம்பினேஷன் இல்லையென்றாலும், அவர்கள் இருக்கும் ஒரு புராஜக்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

ஊர்வசி மேம் எனக்கு ஒரு பெரிய ரோல் மாடல். அவருடைய சமீபத்திய interviews எல்லாம் நான் அடிக்கடி பார்ப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகையுடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஜெயராம் சார் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த நடிகர். குறிப்பாக “பஞ்ச தந்திரம்” காலத்திலிருந்தே அவருடைய கதாபாத்திரங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவருடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு ஒரு ஸ்பெஷல் மூமெண்ட்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் பிராக்ஸன். திங்க் மியூசிக் சந்தோஷ் கண்டுபிடித்த திறமையான கலைஞர். சந்தோஷ் கண்டுபிடிக்கும் திறமைகள் எப்போதும் தனித்துவமானவை என்பதால், பிரக்ஸினும் ஒரு சிறப்பான திறமை கொண்டவர் என்று நான் நம்புகிறேன். இந்த படத்திற்கு அவர் மிகவும் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் சாண்டி மாஸ்டருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சாண்டி மாஸ்டர் எனக்கு மட்டும் அல்ல, நம்ம எல்லாருக்கும் மிகவும் ஸ்பெஷலானவர். நான் சிறு வயதில் இருந்தே அவரை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர் போல, மிகவும் நெருக்கமாக பழகுவார். இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் பாண்டிராஜ் சாரின் வழக்கமான குடும்பங்கள் ரசிக்கும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.“பரிமளா அண்ட் கோ” படத்தில் இரண்டு பெரிய லெஜண்ட்ஸான ஜெயராம் சார், ஊர்வசி மேடம் ஆகியோருடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதோடு மிஷ்கின் சார் போன்ற தனித்துவமான கலைஞரும் இந்த படத்தில் இருப்பது இன்னும் ஸ்பெஷல். அவரை நான் “தலைவர்”ன்னு தான் சொல்லுவேன்.
இந்த படத்தில் எல்லாருடனும் combination scenes இருந்தது எனக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லாரையும் கலாய்த்து, சிரிச்சு, ஒரு குடும்பமாக இந்த படம் உருவானது.
பாண்டிராஜ் சார் பற்றி சொல்லணும்னா, அவரோட ஸ்பீட் வேற லெவல். காலையிலே ஏழு மணிக்கு shot என்றால், ஆறரை மணிக்கே அடுத்த shot ready ஆகி இருக்கும். நாங்க இன்னும் மேக்கப் முடிக்காம இருக்கும்போதே, அவர் ஒரு shot முடிச்சு அடுத்த shotக்கு போயிருப்பார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் வேகம்.
பாண்டிராஜ் சார் படப்பிடிப்பில் எங்களுக்கு கொடுத்த சுதந்திரம் ரொம்ப ஸ்பெஷல். அதனால் சாப்பிட கூட நேரம் தெரியாமல் வேலை செய்திருக்கோம். ஆனாலும் அது கஷ்டமாக இல்ல, ரொம்ப ஜாலியான அனுபவமாக இருந்தது. மிஷ்கின் சார் உடனான தருணங்கள் கூட மறக்க முடியாதவை. இரவு நேரங்களில் அவருடைய office-க்கு போய் மியூசிக், புக்ஸ், சினிமா பற்றி பேசுவோம். அவர் கதைகள், அவர் பேசும் விஷயங்கள் எல்லாமே ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் மிஸ்டரி, காமெடி, ஃபன், எமோஷன் என எல்லாமே இருக்கும். பாண்டிராஜ் சார் இதுவரைக்கும் செய்யாத ஒரு புதிய ஜானரில் இந்த படம் இருக்கும். திருக்குமரன் சார் மிகவும் அன்பானவர் அவருக்கு என் நன்றி. “பரிமளா அண்ட் கோ” எல்லாரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கமர்ஷியல் திரைப்படம். குடும்பத்துடன் வந்து கண்டிப்பாக கொண்டாடுங்கள். நன்றி.|

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். முதலில் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தை நான் எவ்வளவு மகிழ்ச்சியாக செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். தினமும் அதை நீங்கள் நேரில் பார்த்து ரசித்திருக்கிறீர்கள். இந்த அழகான நினைவுகளை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்.
தமிழ் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒவ்வொரு உரையாடலும் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அனைவரிடமும் கருத்து கேட்டு, எல்லோரையும் சமமாக மதித்து பேசும் உங்கள் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த மேடையில் இருக்கும் நடிகர்களின் பெயர்களையே கேட்டதும் எந்த நடிகருக்கும் “நாமும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்ற ஆசை வரும். அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. முதல் முறை பாண்டிராஜ் சாரை சந்தித்தபோதே “எப்படியாவது இந்த படம் அமைய வேண்டும்” என்று மனதார விரும்பினேன். எல்லாமே மிக வேகமாக நடந்தது. படப்பிடிப்பு கூட கண் மூடி திறப்பதற்குள் முடிந்துவிட்டது போல தோன்றுகிறது. இப்போதே அந்த படப்பிடிப்பு நாட்களை மிகவும் நினைத்து வருந்துகிறேன். தினமும் வீட்டிலிருந்து கிளம்பி “பரிமளா வீட்டிற்கு” போவது போலவே உணர்ந்தேன். படப்பிடிப்பு தளம் ஒரு குடும்பம் போல இருந்தது.
ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி மேம் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். எதற்கும் உடனே நகைச்சுவையான பதில்கள் வரும். காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், பல முறை நான் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. உங்கள் இருவரின் ஜோடிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும் அதில் ஒரு சிறிய ரசிகை தான். உங்கள் பழைய காட்சிகளை சவுண்ட் இல்லாமல் போட்டாலும் வசனங்களை சொல்லும் அளவுக்கு நான் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். மிஷ்கின் சார் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே ஒரு தனி உற்சாகம் இருக்கும். அவருடனும், இங்கே இருக்கும் ஒவ்வொருவருடனும் சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
நாங்கள் இந்த படத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக உருவாக்கினோமோ, அதே அளவுக்கு நீங்கள் அனைவரும் இந்த படத்தை ரசித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். மிகவும் நன்றி.

நடிகை ஊர்வசி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே “இந்த கதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும். இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில், நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சிலது எனக்கு பிடிக்கும், சிலது ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்தபோது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை; உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.
பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. “பசங்க” படத்திலிருந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு கதையை வடிவமைப்பதில் அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல். மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான். எப்போது தொடங்கினார்கள், எப்போது முடித்தார்கள் என்று எனக்கே ஆச்சரியம். என்னால் சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன. மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
ஒரு நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் நடிகர்களாக நாமும் அதில் improvisation செய்ய ஆர்வமாக இருப்போம். அதுதான் இந்த படத்திலும் நடந்தது. நாங்கள் இதற்கு முன் பல குடும்ப படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு காட்சியும் பழைய படங்களை நினைவூட்டும் மாதிரி இல்லை. ஒவ்வொரு காட்சியும் புதிதாகவே இருந்தது. அனந்திகா, சஞ்சனா ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் இயல்பான அனுபவமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்ற உணர்வே மறந்து, ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.
மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இந்த படத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர், அதிலும் குறிப்பாக அவரது நகைச்சுவை டைமிங் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கும் எனக்கும் சேர்ந்த சில காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்த படத்தின் casting மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் பாண்டிராஜ் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். டிரெய்லரில் ஒரு சிறிய பெண் கதாபாத்திரம் வரும். அவரை பார்த்தாலே அது தெரியும். சினிமாவின் மாயம் அப்படித்தான் — யார் எப்போது அறிமுகமாகி எவ்வளவு உயரம் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.
சாண்டி மாஸ்டரை “லோகா” படத்தில் பார்த்தபோதே நான் மிகவும் ரசித்தேன். என் மகள் அவருடைய பெரிய ரசிகை. இந்த படத்தில் அவருடன் சேர்ந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. யோகி பாபுவும் இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையைத் தாண்டி, உணர்ச்சிகளும் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் குமரன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு தயாரிப்பாளராக எந்த அழுத்தமும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டார். ஒரு சிறிய நடுத்தர வீட்டில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. அந்த வீட்டை முழுவதும் மூடி வைத்து பகல்-இரவு காட்சிகள் எடுத்தோம். ஆக்சிஜன் குறைவாக இருந்ததால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் வைரல் காய்ச்சல், இருமல் வந்தது. ஆனால் கதையின் மீது இருந்த ஆர்வத்தால் அதை எல்லாம் மறந்து வேலை செய்தோம்.
அசோசியேட் டைரக்டர்கள், குறிப்பாக திவ்யா, இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் prompting, costume, continuity என்று அனைத்தையும் கவனித்தார். ஜெகனும் தனது வேலையைத் தாண்டி, பாண்டிராஜ் மீது இருந்த அன்பால் முழுமையாக உழைத்தார்.
நானும் ஜெயராமும் பல வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருக்கிறோம். இந்த காம்பினேசனுக்கு எங்களுக்கே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஒரு நடிகராக நாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நினைத்தே வேலை செய்கிறோம். ஆனால் இந்த படம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், இதில் இருக்கும் எழுத்தாளரின் உழைப்பு. எங்களால் முடிந்த அளவுக்கு அதை நேர்மையாக திரையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறோம். இப்போது ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் போன்ற ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியம். அதனால் உங்கள் முழு ஆதரவும் எங்களுக்கு தேவை. மிகவும் நன்றி.

நடிகர் ஜெயராம் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை நண்பர்கள், என் நண்பர்கள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே அனைவரும் நிறைய விஷயங்கள் பேசிவிட்டார்கள். நேரமும் ஆகிவிட்டதால் சுருக்கமாக பேச விரும்புகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இந்த சிறிய படத்துடன் இணைந்தது மிகப்பெரிய விஷயம். அதன்பிறகு தமிழ் குமரன் சார் போன்ற தயாரிப்பாளர் இந்த படத்திற்குள் வந்தது, பாண்டிராஜ் சார் இயக்கம் ஏற்றது — இவை அனைத்தும் இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
அதோடு ஊர்வசி மேம், சஞ்சனா, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின் சார், சிங்கம்புலி, சாண்டி மாஸ்டர் என பல சிறந்த கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்தனர். தொழில்நுட்பக் குழுவிலும் பிராக்ஸன் போன்ற இசையமைப்பாளர், பிரதீப் போன்ற எடிட்டர், ஜார்ஜ் போன்ற ஒளிப்பதிவாளர், திவ்யா போன்ற அசோசியேட் இயக்குநர் ஆகியோர் கிடைத்தது இந்த படத்தின் அதிர்ஷ்டம். இந்த அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் உண்மையான ஹீரோ எங்களுடைய திரைக்கதை தான். முதன்முதலாக பாண்டிராஜ் சார் இந்த கதையை சொல்ல ஆரம்பித்தபோது, பாதி கதை கேட்கும் முன்பே இது ஒரு ஸ்பெஷலான படம் என்று எனக்கு தோன்றியது.
இந்த படத்தில் நடந்த எல்லா விஷயங்களும் மிகவும் பாஸிடிவாக அமைந்திருக்கிறது. இனிமே இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவை. மிக்க நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். “சிறந்த நடிகர்கள்” என்று சொன்னால் என் மனதில் முதலில் தோன்றுபவர்கள் ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மா. அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவு. இருவரும் மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழமான உணர்வும் கொண்ட நடிகர்கள். அவர்களுடன் ஒரே காட்சியில் இருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முன்னதாக ஒரு படத்திற்காக ஜெயராம் சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தேன். நான் கதையை மிகவும் தீவிரமாகச் சொன்னேன். அவர் அமைதியாக முழுக்கக் கேட்டுவிட்டு சிரித்தபடி, “நான் செய்யலாம் தம்பி” என்றார். அந்த ஒரு வார்த்தையே எனக்கு பெரிய ஆச்சரியம் கொடுத்தது.
ஏன் அவர் பெரிய நடிகர் தெரியுமா? வாழ்க்கையில் “இல்லை” என்று சொல்ல வேண்டிய இடத்தில் அதைத் தெளிவாக சொல்லத் தெரிந்தவர். சினிமாவில் பலருக்கு அது முடியாது. எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது ஒரு பெரிய குணம். ஜெயராம் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது.
ஊர்வசி அம்மா பற்றி என்ன சொல்ல வேண்டும். நான் அவரை மிகவும் கவனித்து பார்த்திருக்கிறேன். ஒரு காட்சியை சொன்னாலே அதை அவர் தன்னுடைய அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்வார். அவருடைய நடிப்பில் ஒரு அதிசயமான இயல்பு இருக்கிறது. அதை கற்றுக்கொடுக்க முடியாது. “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் கமல் சார் மற்றும் ஊர்வசி அம்மா நடித்த அந்த படிக்கட்டு காட்சி — இந்திய சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த காட்சி அது. நான் அந்த காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஒரு நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை விட, எதிரில் இருப்பவர் அதற்கு எப்படி பதிலளிக்கிறார் என்பதுதான் உண்மையான நடிப்பு என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பை ஊர்வசி அம்மா கொடுத்திருக்கிறார். நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன் என்று கேட்டால், அந்த மாதிரியான காட்சிகள்தான் காரணம் என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு பெரிய நடிகையுடன் வேலை செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
பாண்டியராஜை நான் பன்னிரண்டு வருடங்களாக அறிவேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் சந்திப்போம். மெதுவாக பழக ஆரம்பித்தோம். அவர் அலுவலகத்திற்கு சென்றால் நண்பர்களோடு உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். அந்த இடம் ஒரு குடும்பம் போல உணர்வு தரும். அவர் மிகவும் அன்பான மனிதர். எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பாக நடந்து கொள்வார். அந்த நட்புதான் இந்த படத்திற்கும் காரணம்.
தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். மணிரத்னம் சாரின் படங்களில் அழகான காட்சியமைப்புகள் இருக்கும். சேரன் படங்களில் மனிதநேயம் மற்றும் தர்மம் இருக்கும். தியாகராஜன் குமாரராஜாவின் படங்களில் வித்தியாசமான பைத்தியக்காரத் தனம் இருக்கும். அதுபோல பாண்டியராஜின் மிகப்பெரிய பலம் மொழி.
அவர் ஒரு வார்த்தையை ரசித்துவிட்டால் அதை உயிரோடு பிடித்து வைத்துக்கொள்வார். வட்டார மொழி, மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள், அந்த மொழியின் நுணுக்கங்கள் — இவையெல்லாம் அவருக்குள் ஆழமாக பதிந்திருக்கின்றன. அவர் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை; அவர்களுடைய மொழியையும் கவனிக்கிறார். அதனால்தான் அவர் படங்களில் உரையாடல்கள் மிகவும் இயல்பாக இருக்கும்.
ஒரு இயக்குநர் இருபது வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் ஏதோ ஒரு விஷயத்தில் அசாதாரண திறமை கொண்டவர் என்பதற்கே அது சாட்சி.
அப்படித்தான் பாண்டியராஜும். அவர் பெரிய கல்வி கற்றவரா என தெரியாது. ஆனால் மொழியை அவர் உயிரோடு உணர்கிறார். அதனால்தான் அவர் படங்களில் இருக்கும் உரையாடல்கள் மக்கள் மனதில் நேராக போய் சேர்கின்றன. அவருக்கு ஒரு பெரிய தெளிவு இருக்கிறது. “ஒரு தயாரிப்பாளர் எனக்கு பணம் கொடுக்கிறார்; நான் அவருக்கு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மணி நேரம் பார்வையாளரை மகிழ்விக்க வேண்டும்” — இந்த இரண்டிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் அவர் படங்கள் வணிக ரீதியாகவும், மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கும்.
தமிழ் சினிமாவில் மிகவும் தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் அவர் ஒருவர் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு காட்சியை எடுக்கும்போது தேவையற்ற குழப்பமே இருக்காது. எது வேண்டும், எது வேண்டாம் என்று நேராகச் சொல்லிவிடுவார். அதனால் நடிகர்களுக்கும் வேலை மிகவும் எளிதாகிவிடும்.
அவர் மிகவும் கட்டுப்பாடுடன் வேலை செய்கிறார். காலையில் ஆறு மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். எட்டு மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுவார். பட்ஜெட்டிற்குள், திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிப்பதில் அவர் வல்லவர்.
இந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, முதலில் ஒரு கதையைச் சொல்ல வந்தார். அவர் கதை சொல்லும் விதமே வேற மாதிரி. கதையை சொல்லிக்கொண்டே நம்மை அதற்குள் இழுத்து விடுவார். ஒரு dark comedy கதையை அவர் சொல்லும்போது நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். உடனே “இது நன்றாக இருக்கும்” என்று நம்பிக்கை வந்தது.
 
இந்த படத்தில் நடித்த அந்த இரண்டு இளம் நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். உடனுக்குடன் உணர்ச்சியைப் பிடித்து நடித்து விடுவார்கள். சாண்டி மாஸ்டரும் அதே மாதிரி. அளவில்லாத ஆற்றல்.
மொத்தத்தில், இந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சிரிப்பு, நட்பு, அன்பு நிறைந்த அனுபவமாக இருந்தது. இந்த படம் மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். “பரிமளா அண்ட் கோ” கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு “பரிமளா ஃபேமிலி” என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். “ஸ்வீட் ஹோம்” என்று கூட ஒரு பெயர் வைத்திருந்தோம். இறுதியில் “பரிமளா அண்ட் கோ” என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள். அசிஸ்டண்ட்கள், தயாரிப்பாளர், நண்பர்கள் என எல்லோரிடமும் வாக்கெடுப்பு எடுத்தோம். பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்தார்கள்.
இந்த கதையை முதலில் தமிழ் குமரன் சாரிடம் சொன்னபோது, அவர் சிரித்த விதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவர் சாதாரணமாக மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் கதை கேட்டு மனதார சிரித்தார். அங்கேயே “இந்த படம் கண்டிப்பாக மக்களிடம் வேலை செய்யும்” என்ற நம்பிக்கை வந்தது.
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்த கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் சார் உடனே “இது கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும்” என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது. மிஷ்கின் சாரிடம் கதை சொன்னபோதும், அவர் வழக்கம்போல் அமைதியாக இருந்தார். ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரித்தால் அது ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் என்று எனக்கு தெரியும். அங்கேயும் ஒரு நம்பிக்கை கிடைத்தது.
இந்த கதையில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானவை. வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் எப்போதும் சண்டை, சிரிப்பு, கலாட்டா நடந்து கொண்டே இருக்கும் இல்லையா? அந்த உணர்வை கொண்டு வரவே அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உருவாக்கினோம். அதற்காக சஞ்சனா, அனந்திகா ஆகியோரை தேர்வு செய்தோம். அனந்திகாவின் reels-ஐ பார்த்தவுடனே அந்த energy பிடித்துவிட்டது. சஞ்சனாவிடம் கதை சொன்னபோது, ஆரம்பத்தில் உதவி இயக்குநர் மாதிரி சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு சிரிக்க ஆரம்பித்தார். அப்போதே இந்த படம் ஒர்க் ஆகும் என்று எனக்கு தோன்றியது.
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவருக்கும் நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ஊர்வசி மேம் ஒரு பெரிய personal tragedy நடந்திருக்கும் நேரத்திலும், “ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம், நான் வந்து முடித்துவிடுகிறேன்” என்று மறுநாளே வந்து நடித்தார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். அந்த மனநிலையில் கூட அவர்கள் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாக செய்தார்கள். இன்று வரை அந்த காட்சிகள் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம்.
ஒரு இயக்குநருக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு படம் போர் அடிக்க ஆரம்பிக்கும். Editing, dubbing, mixing என்று மீண்டும் மீண்டும் பார்த்தால் காமெடி கூட சிரிப்பாக இருக்காது. ஆனால் ஜெயராம் சார் – ஊர்வசி மேம் காம்பினேஷன் மட்டும் கடைசி வரை ஃப்ரெஷ்ஷாக இருந்தது. இந்த படத்தில் என் எனர்ஜிக்கு ஈடு கொடுத்தவர் சாண்டி மாஸ்டர். நான் எவ்வளவு எனர்ஜியாக இருப்பேனோ, அதைவிட அதிகமாக இருப்பார். காலையிலேயே முழு எனர்ஜியுடன் வந்துவிடுவார். அதேபோல் அந்த இரண்டு பெண்களும். எந்த நேரம் சொன்னாலும் “ஓகே சார்” என்று வந்து நிற்பார்கள். இந்த படத்தில் இருந்த ஒவ்வொருவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள்.
அனந்திகா, சஞ்சனா “இவர்கள் உண்மையிலேயே அக்கா–தங்கச்சிகளா?” என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருந்தார்கள். உண்மையான அக்கா–தங்கைகள் போலவே செட்டில் எப்போதும் சண்டை, கலாட்டா, அன்பு என இருந்துகொண்டே இருப்பார்கள்.
மிஷ்கின் சார் மற்றும் அவருடைய தம்பி இருவரையும் முதன்முறையாக ஒரே படத்தில் நடிக்க வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அந்த அண்ணன்–தம்பி பாசம் ரொம்ப அழகாக இருந்தது. செண்ட்ராயன், பூர்ணிமா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக பூர்ணிமாவை ஒரு நாள் முன்பு தான் அழைத்தோம். உடனே “நான் வருகிறேன்” என்று சொல்லி வந்து நடித்தார். அது எங்களுக்கு பெரிய உதவி.
மிஷ்கின் சாருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கடந்த சில நாட்களாக promotion-க்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார். நான் போகும் இடமெல்லாம் அவர் பின்னாலேயே வருகிறார். “படத்துக்காக வர்றேன்” என்று சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய அன்பு. ஜெயராம் சாரும் இந்த படத்தை ஒரு பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எப்போதும் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என் முழு குழுவும் அதே உற்சாகத்தோடு வேலை செய்தது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் — என் வேகத்துக்கு சரியாக பொருந்திய கேமராமேன். என் படங்களில் மிகவும் தரமான விஷுவல் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் பாக்ஸன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். திங்க் மியூசிக் சந்தோஷ் மணி அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. இன்னொரு அனிருத் மாதிரி ஒரு தனித்துவமான இசையமைப்பாளராக வருவார் என்று நம்புகிறேன்.
இறுதியாக, லைக்கா நிறுவனம் இந்த படத்துடன் இணைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சுபாஸ்கரன் சார் லண்டனில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார். இந்த படத்தையும் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ் குமரன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
 
 
இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும்
வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகியுள்ளார்.
திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions
கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC
இசை : Foxn
எடிட்டர் : பிரதீப் E. ராகவ்
கலை இயக்குனர் : T. ராமலிங்கம்
ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்
நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்
மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி
ஆடை : K. நடராஜ்
ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்
சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயஸ் பத், அருண் பிரசாத்
VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்
DI : Knack Studios
கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்
விளம்பர வடிவமைப்பு : ADFX Studio
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C
சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்


The event was held at the Chennais Amirta International Aviation College, Royapettah, Chennai, where students showcased the inspiring journey of Shri. S. Joseph Vijay — from his film career to his political journey — through artistic sculptures carved entirely from vegetables and fruits.

The exhibition was inaugurated by actor Mr. Sanjeev, and Mr. R. Boominaathan ,Chairman of Chennais Amirta Group of Institutions. A total of 69 sculptures were created, representing milestones from Vijay’s debut film Naalaiya Theerpu to Jananayagan. The sculptures were meticulously crafted by the students of Chennais Amirta International Institute of Hotel Management over a period of 10 days, reflecting exceptional creativity, dedication, and teamwork.

Actor Mr. Sanjeev, while visiting the exhibition, highly appreciated the students for their remarkable artistic talent and hard work. He also congratulated Mr. Boominaathan for continuously creating platforms that encourage and showcase student talent while contributing significantly to skill-based education.

Speaking at the event, Mr. Boominaathan stated that Chennais Amirta Group of Institutions has been making notable contributions in the fields of hotel management, aviation, and allied sectors by preparing students for successful careers in leading national and international organizations. He added that the institution takes pride in organizing such innovative programs that highlight students’ creativity and practical skills.

The event not only celebrated the achievements and journey of Hon’ble Chief Minister Shri. S. Joseph Vijay but also served as a proud platform to showcase the extraordinary talents of Chennais Amirta students.

 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் - என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.


'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ''தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.


புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.


ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை 'ஜூம்' செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'கே ஜி எஃப்' படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,'' என்றார்.


நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், '' என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை அபிராமி பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.


ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.


பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.


நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌


இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.


இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,'' என்றார்.


கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.


எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌


இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த 'பிளாஸ்ட்' திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்


இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.


இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். 


இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.


இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.


நடிகர் அர்ஜுன் பேசுகையில், ''வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


'பிளாஸ்ட்' திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.


படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.


நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,'' என்றார்.


 

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திரிஷ்யம் 3' மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.


'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, 'திரிஷ்யம் 3' திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.


இவ்வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


"இந்த சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்," என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

 

2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மார்கோ' திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான 'காட்டாளன்' உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார்.


பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. "பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்," என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். 


'காட்டாளன்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 


'கேஜிஎப்' திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் 'காட்டாளன்' படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. 


"ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள 'காட்டாளன்' திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்," என படக்குழுவினர் மேலும் கூறினர். 

 

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.


பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.


15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.


இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், 'ஃபியூஷன்' (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.


ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'சைவம்' (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு 'சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது' கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த 'பிசாசு' திரைப்படத்தின் 'நதி போகும் கூழாங்கற்கள்' பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

 

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.


உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் ( Post Production )முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.


படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


* எழுத்து & இயக்கம் – மு. மாறன் 

* இசை – விஜய் ஆண்டனி 

* ஒளிப்பதிவு – ராஜீவ் ராஜேந்திரன் 

* எடிட்டிங் – விஜய் ஆண்டனி 

* தயாரிப்பு வடிவமைப்பு – A. ராஜா 

* உடை வடிவமைப்பு – G. அனுஷா மீனாட்சி 

* சண்டைக் காட்சிகள் – ராஜசேகர் 

* ஒலி வடிவமைப்பு – ரஹமதுல்லாஹ் 

* மக்கள் தொடர்பு – ரேகா


ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Teaser : https://youtu.be/OrIqzmpg04k?si=Nw7jnPaomNXoWYPl

*A Refreshing Take on Modern Love and Youth Relationships – “Yellow Yellow Dirty Fellow” First Look Released !!*

Produced by AP International and Vishnuu Vishal Studioz, and directed by debutant Vikkie Bhaskar, the first look of “Yellow Yellow Dirty Fellow”, starring “Oho Enthan Baby” fame Rudhra and Preethi Asrani, has been officially unveiled, along with the title teaser of the youthful comic entertainer. 

Having previously worked on short films and feature films, Vikkie Bhaskar makes his directorial debut with this project. The film registers itself as a fun filled commercial entertainer that explores the love life and lifestyle of today’s modern Instagram influencers in a fresh and relatable manner. 

The newly released first look reflects the lifestyle, romantic relationships, and emotional complications faced by the Gen Z generation in today’s world. The story revolves around the troubles encountered by an innocent young man who gets trapped in a complicated relationship with a modern-day girlfriend. Designed to appeal to young audiences, the first look has already been receiving a positive response from fans and cinema lovers across social media platforms. The title teaser which was released after the first look is getting an excellent response for its vibe, making and music. 

Apart from Rudra and Preethi Asrani playing the lead roles, the film also features Angel Maria, Monisha Mohan, Karunakaran, Jensen Divakar, Nikhila Sankar, Chethan, Devadarshini, and Anupama in pivotal roles.

The film is produced by Sanjay Arjundas Wadhwa under the banner of AP International and Vishnuu Vishal under Vishnuu Vishal Studioz. Shubhra, Aryan Ramesh are serving as co-producers.

The shooting of the film has been completed across Chennai, Vietnam, and several surrounding locations. With filming wrapped up, post-production work is currently progressing at a brisk pace. The team has announced that official updates regarding the trailer and audio launch will be revealed soon.

Technical Crew

Production: AP International & Vishnuu Vishal Studioz
Director: Vikkie Bhaskar
Cinematography: Luke Jose
Editor: Nash
Music: Barath Shankar
Publicity Design: Viyaki
Costume Designer: Nava Rajkumar
Art Director: Veeramani Ganesan
CG: Srivfx
PRO: AIM Sathish

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  

சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  

“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. 

இன்றைய நிகழ்வில்… 

இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…

முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.

கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., 

கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. 

இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.

ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.

இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.

ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.

இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.

அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.

https://youtu.be/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6

Pageviews