Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு.
G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன.
பெங்களூரு நகரின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல், நகரத்தின் நவீன நகர வாழ்க்கையின் துடிப்பை காட்சிப்படுத்துகிறது. வண்ணமயமான தெருகளின் அழகியல், சமகால காட்சித்தொகுப்பு மற்றும் மனம் மகிழ்வான காட்சிகளுடன், கதாநாயகர்கள் நகரைச் சுற்றி உல்லாசமாகச் செல்லும் போதும் உற்சாகமான நடனத்தில் ஈடுபடும் தருணங்களும் பாடலுக்கு தனித்துவமான மற்றும் பண்டிகைக்கால கொண்டாட்ட மனநிலையை கொடுக்கின்றன.
இந்தப் பாடலுக்கு மேலும் சுவையைச் சேர்க்கும் வகையில், “ஆடினே இருப்பேன்” பாடலை கானா வினோத் எழுதி பாடியுள்ளார். அவரது 'மண்ணின் மணமிக்க' தனித்துவமான குரல் பாடலுக்கு இயல்பான மற்றும் புத்துணர்ச்சியான வசீகரத்தை அளிக்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் பாடலின் மூலம் உற்சாகமும் துள்ளலும் நிறைந்த இசை உலகிற்குள் புதிய முயற்சியாக இறங்கியுள்ளார். அனைவரது மனநிலையையும் உயர்த்தி, உடனே மனதில் பதியும் விதமாக இந்த இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, இந்தப் பாடலின் மூலம் மணிசந்திரா முதன்மை நடன இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னணி நடன இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், அவர் தனது தனித்துவமான உற்சாகமான மற்றும் ஸ்டைலிஷ் அணுகுமுறையை இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். “ஆடினே இருப்பேன்” பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சிக்னேச்சர் ஹுக் ஸ்டெப்' ஏற்கனவே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையின் தாளத்துடன் இயைந்த அவரது நடன வடிவமைப்பு, கதாநாயகர்களின் ஆற்றல்மிகு நடிப்பை ஒரு படி மேலும் உயர்த்துகிறது.
ஜெயவரதன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ஹேப்பி ராஜ்” உருவாகியுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தத் திரைப்படம் நம்பிக்கை மற்றும் இலகுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுமையான ஃபீல்-குட் என்டர்டெய்னராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
G. V. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தின் தலைப்பிறகு ஏற்றபடி கதாபாத்திரத்தில் புதுமையும் கவர்ச்சியும் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ; கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா உணர்ச்சி ஆழமும் இரக்கமும் கொண்டவராக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் தமிழ் திரையுலகிற்கு திரும்புவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்; இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தில் ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, Sofa Boy ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் RK செல்வா, கலை இயக்குநர் குமார் கங்காப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இணைந்துள்ளனர். இணைத் தயாரிப்பாளராக ஜெயகாந்த் சுரேஷ் செயல்படுகிறார்; மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், “ஹேப்பி ராஜ்” தனது அடுத்த கட்டத்திற்குத் தன்னம்பிக்கையுடன் நகர்கிறது. கவர்ச்சியான இசை, இளமையை பிரதிபலிக்கும் காட்சிகள், தனித்துவமான நடன வடிவமைப்பு மற்றும் உற்சாகமான நடிப்புகள் ஆகியவற்றால் “ஆடினே இருப்பேன்” ஒரு புத்துணர்ச்சியான, மனநிறைவு தரும் திரையரங்க அனுபவத்திற்கான சரியான தொடக்கத்தை அமைத்துள்ளது.
திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.
முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.
நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்...
இந்த நிகழ்வு பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடல் இன்று காலை நடைபெற்றது.
இதில் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று டாக்டர் பானுப்ரியா பேசினார் அப்போது கேன்சரின் ஆபத்தை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
அவர் தங்களது கற்பவிருட்சம் தொண்டு நிறுவனத்தின் மூலம் 3000 மேற்பட்ட மக்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தபோது சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கேன்சர் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது .
எனவே இது போல் தமிழகம் எங்கும் நாங்கள் எங்கள் சேவை தொடங்க உதவியாக இந்த கருவியை வழங்கிய ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப்க்கு
நன்றியை தெரிவிக்கிறோம் என்றார்..
மேலும்
இதில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்ன் ப்ரெசிடெண்ட் பாலாஜி சீனிவாசன் மற்றும் சந்தியா அருண் குமார் ஆகியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
அன்பும் நுட்பமும் கலந்த இந்த படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மெதுவான மாற்றங்கள் வழியாக சொல்லுகிறது.
இழப்பை நெருக்கமாகவும் மென்மையாகவும் பார்க்கும் இந்த படம், எவ்வளவு சாதாரணமான பழக்கங்களுக்குள்ளும் ஆழமான உணர்வுகள் மறைந்து கிடக்கலாம் என்பதை நினைவூட்டுகிறது.
மிக குறைந்த கதை சொல்லலும் அமைதியான காட்சித் தேர்வுகளும் மூலம், நாம் தினமும் கவனிக்காமல் கடந்து செல்லும் விஷயங்களை — தயக்கம், அமைதி, மனத்தின் நுண்ணிய அலைச்சல்கள் — ஒரு நிமிடம் நின்று கவனிக்க இந்த படம் அழைக்கிறது.
இந்த குறும்படம் Haiku Kadhaigal தொடரின் ஒரு பகுதி. எழுத்தாளர்-இயக்குநர் பிரியதர்ஷினி ஸ்ரீதரன் அவர்கள் Huggaheim Pictures மூலம் மனிதர்களின் நெருக்கமான உணர்வுகளை ஆராயும் தனது தொடர்ச்சியான முயற்சியின் இன்னொரு படியாக இது உருவாகியுள்ளது.
இளம் நடிகர் ஆத்விக் கே. தலைமையில், உணர்வின் நுட்பத்தை நம்பிய ஒரு திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் இணைந்துள்ளது. ஆன்மாவை தொடும் தமிழ் இன்டி பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக அறியப்படும் சுயாதீன இசையமைப்பாளர் கௌதம் வாசு வெங்கடேசன், Poongothai, Iravum Nilavum போன்ற பாடல்களாலும், Amazon Prime-இன் Putham Pudhu Kaalai Vidiyaadhaa… தொடரிலும் செய்த பணியாலும் கவனம் பெற்றவர், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒலி வடிவமைப்பை ராகவ் ரமேஷ் கவனித்துள்ளார்; Kottukaali, Meiyazhagan, Gargi போன்ற படங்களில் அவரது பணிகள் பரவலாக பாராட்டப்பட்டுள்ளன. ஒளிப்பதிவை VS பிரபஞ்சன் மேற்கொண்டுள்ளார்; சிவகார்த்திகேயன் நடித்த Maaveeran படத்தின் DOP குழுவில் பணியாற்றியதுடன், Kettal Kidaikkum, Spaces உள்ளிட்ட பல சுயாதீன குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குழுவின் அமைதியான ஒத்துழைப்பே படத்தின் இயல்பையும் உணர்ச்சி நுட்பத்தையும் காக்க உதவியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர்கள்: இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்கம் – ஏஆர்கே சரவன் ,
இசை – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,
கலை இயக்கம் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,
வசனம் – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,
உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,
நடன அமைப்பு – ரகு தாபா,
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,
தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,
ஒலி கலவை – உதயகுமார்,
விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,
மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,
சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.
கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார்.
கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி, மீனா சப்ரியா பேசியதாவது, “கோடைகால சிறப்பு வகுப்புகளும் இங்கு நிறைய தொடங்க இருக்கிறோம். ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்றவற்றை குழந்தைகளை எண்டர்டெயின் செய்யும் விதமாக டிப்ளமோ கிளாஸஸ் எடுக்க இருக்கிறோம். இங்கு கட்டணம் எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட ரூ. 400 மதிப்பிலான புத்தகத்தை வாங்கி நீங்கள் அதில் பயிற்சி பெறலாம். இந்தியாவில் முதன் முறையாக 34-க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் ஒரு டிரெயினிங் மாடல் இங்கு இருக்கிறது. குழந்தைகளின் படிப்பிற்கென்று பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் ஸ்டோர் இதுதான். 3300 சதுர அடியில் அமைந்திருக்கிறது. அடுத்த வருடம் ஐந்து ஸ்டோர் இந்தியாவில் தொடங்க இருக்கிறோம். கற்றலும் குழந்தைகளின் மகிழ்ச்சியுமே ‘கலர் பென்சிலி’ன் நோக்கம்” என்றார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு பேசியதாவது, “இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நான் உள்ளே வரும்போதே நிறைய குழந்தைகள் குதூகலமாக இந்த ஸ்டோரில் இருந்ததை பார்க்க முடிந்தது. இது தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
கலர் பென்சில் பிராண்ட் அம்பாசிடர், மைக்செட் ஸ்ரீராம் பேசியதாவது, “சென்னையில் மிகப்பெரிய முயற்சியாக ‘கலர் பென்சில்’ தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள்! அறிவும் மொழியும் குழந்தைகள் சிறப்பாக வளர முக்கியமான விஷயங்கள். அதை அனுபவத்தின் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வது சிறப்பான விஷயம். என்னை கலர் பென்சிலின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததற்கு நன்றி” என்றார்.
ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார்.
படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணி ரத்னம் பகிர்ந்து கொண்டதாவது, “பிஜாய் நம்பியாரின் எனர்ஜி இந்தப் படத்திற்கு பெரும் பலம். பெரிய திரையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும்போது அதை முழுமையாக அனுபவிக்க முடியும்” என்றார்.
விறுவிறுப்பான மற்றும் அதிரடி தருணங்கள் நிரம்பியுள்ள ‘து யா மெயின்’ சிறந்த திரையரங்க அனுபவம் தரும் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு சர்மா தலைமையிலான கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், வினோத் பானுஷாலி மற்றும்
கமலேஷ் பானுஷாலி ஆகியோரின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் நேரடியாக பொருந்திப் பார்த்துக் கொள்ளும்படியான உணர்வுகளையும், சீட்டின் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டுள்ள இந்த திரைப்படத்தை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்,
ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award - விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து பெற்ற நிலையான வளர்ச்சி கவுன்சிலுடன் (
Sustainable Development Council) இணைந்து நடத்தப்பட்டது.
GCE 2026 மாநாட்டில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், , உலகம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் முன்னிலையில் ரூஹி தனது ஆழமான மற்றும் வலிமையான உரையை வழங்கினார்.
“குழந்தைகள் நாளைய எதிர்காலம் மட்டுமல்லர். இன்றைய பூமித் தாயின் காவலர்களும் ஆவர்" என்ற முழக்கத்தை அவரது உரை எடுத்துரைத்தது.
UNESCO தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் காலநிலை செயற்பாட்டில் ரூஹியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டியது.
யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய மேடையில் ரூஹி மொஹசப் பெற்ற இந்த அழைப்பு, தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல — இந்தியாவிற்கே ஒரு வரலாற்று தருணமாகும்.
வயது தலைமைத்துவத்திற்கோ, தைரியத்திற்கோ, தாக்கத்திற்கோ தடையல்ல என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த அங்கீகாரத்தின் மூலம், யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய அரங்கில் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராக ரூஹி மொஹசப் வரலாறு படைத்துள்ளார்.












