ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.
இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.
இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,
“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்
சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.
தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.
மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்
சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது.
இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.
திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம் பாடலுக்கு தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, பாடலை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் சிறப்பு சேர்க்கும் திறமை அவருக்கு உண்டு. ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற பல ஹிட் பாடல்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது ‘வெள்ளிச்சுடரே’யும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்து, இசை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாக மாறியுள்ளது.
’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘இரண்டு வானம்’. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
’வெள்ளிச்சுடரே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்,
வழங்குபவர்: டிஜி தியாகராஜன்,
தயாரிப்பு: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
ஒளிப்பதிவு: தினேஷ் கே பாபு,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது.
2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கதாபாத்திரமும் அவரது ஈர்க்கும் திரையிருப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.
படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும். குறிப்பாக, இன்றும் பலரின் காலர் டியூனாக இருக்கும் படத்தின் தீம் மியூசிக், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. ஸ்டைல், கதை சொல்லல், திறமையான நடிகர்கள் என ஆக்ஷன் திரில்லர் ஜானரை ‘பில்லா’ திரைப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்தது. ’பில்லா’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் மீண்டும் பார்த்து கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, புதிய தலைமுறைக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்துகிறது.
’பில்லா’ திரைப்படத்தின் மறுவெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களைக் கவர இருக்கிறது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான பி. ஆண்டனி தாஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியா ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் நிறுவனரான இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் தனித்துவமான சினிமா முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டமிடல், முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறார்.
சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சன் நெட்வொர்க்கில் அவர் செய்த விரிவான பணியின் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். காட்சிப் பதிவு, லைட்டிங் டிசைன் மற்றும் உயர் தரமான தயாரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான துரந்தர் பழிவாங்கல் தனது அசாதாரண பாக்ஸ் ஆபிஸ் பயணத்தை தொடர்ந்துள்ளது, திரையரங்குகளில் ஒரு மாதத்தை நிறைவு செய்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்பை-ஆக்ஷன் திரைப்படம் தனது ஐந்தாவது வார இறுதியிலும் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை
இந்தியாவில் ரூ.1,153 கோடி மற்றும் உலகளவில் ரூ.1,783 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
வசூல் விவரம் (இந்தியா)
வாரம் 1 மொத்தம் (8 நாட்கள்) – ரூ.690.00 கோடி
வாரம் 2 மொத்தம் – ரூ.271.00 கோடி
வாரம் 3 மொத்தம் – ரூ.120.00 கோடி
வாரம் 4 மொத்தம் - ரூ.58.00 கோடி
ஐந்தாவது வார இறுதி
நாள் 30: வெள்ளி – ரூ.3.00 கோடி
நாள் 31: சனி – ரூ.5.00 கோடி
நாள் 32: ஞாயிறு – ரூ.5.50 கோடி
ஐந்தாவது வார இறுதி மொத்தம் – ரூ.13.50 கோடி
இந்திய நிகர வசூல் (NBOC) – ரூ.1,153 கோடி
இந்திய மொத்த வசூல் (GBOC) –
ரூ.1,360 கோடி
வெளிநாட்டு மொத்த வசூல் (Overseas GBOC) - ரூ.423 கோடி
உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் - ரூ.1,783 கோடி
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'பிளாஸ்ட்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், "அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்," என்றார்.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றியுள்ளனர்.
ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
ராப் பாடகராக இருக்கும் அர்ஜுன் பிரபாகரன் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சித்தோடு இருக்கிறார். ஒருநாள் சிறுமிருக்கு அர்ஜுன் செய்யும் உதவியை பார்த்து அவர் மீது நாயகி ஆராத்யா காதல் கொள்கிறார் . இந்நிலையில் உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டியில் நாயகன் அர்ஜுன் வெற்றி பெறுகிறார். அர்ஜுன் திறமையை பார்த்து தனிப்பாடல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவரை ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இதையடுத்து அர்ஜுன் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதோடு மக்கள் மனதிலும் இடத்தை பிடிக்கிறார். இதையடுத்து அந்நிறுவனம் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக அர்ஜுனை ஒப்பந்தம் செய்கிறது. இதே சமயம் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் அவலங்களை ராப் பாடல் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யா நினைக்க அர்ஜுன் பிரபாகரன் அதை நிறைவேற்ற நினைக்கிறார். ஆனால் இதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் முட்டுக்கடடை போடுகிறது. இதை அறியும் தனியார் பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவா ஆராத்யாவை கொலை செய்ய நினைக்கிறார். அவரை காப்பாற்ற நினைக்கும் அர்ஜுன் மிகபெரிய விபத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். இறுதியில் நாயகன் அர்ஜுன் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா ? இல்லையா? பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா ? இல்லையா? அர்ஜுன் – ஆராத்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’பேட்டில்’ படத்தின் மீதிக்கதை.
அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். ஆசிரியராக நடித்திருக்கும் நாயகி ஆராத்யா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். பள்ளி தாளாளராக வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கமான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜீவா இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாராயணன்.பி.ஏ இத்திரைப்படத்தில் ராப் பாடலை மட்டும் சொல்லாமல் தனியார் பள்ளிகளால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்த வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.











