Actor Suriya, who is immensely loved and supported by the masses and his devoted fans, is set to star in S-48, directed by filmmaker T.J. Gnanavel, known for crafting impactful stories that resonate with audiences across all sections. The film is being produced by Vijay Kiragandur under the banner of Hombale Films, the production house that has consistently delivered grand cinematic experiences to Indian audiences.
Director T.J. Gnanavel and Suriya previously collaborated on the critically acclaimed Jai Bhim, a film that created a significant impact across India. The reunion of this successful duo has already generated tremendous anticipation among cinema lovers, and the excitement has been elevated further with the project being backed by Hombale Films, one of India’s leading production houses behind blockbuster successes such as KGF, Kantara, and Salaar.
Speaking about the project, producer Vijay Kiragandur said:

“Suriya has been celebrated by audiences for over three decades and stands as one of Indian cinema’s finest stars. Hombale Films is proud and delighted to collaborate with an actor who has consistently balanced commercial success with critical acclaim.
Director T.J. Gnanavel, who helmed the globally acclaimed Jai Bhim, has proven his ability to present powerful stories and deliver impactful cinema with star actors. At Hombale Films, we remain committed to creating films that transcend linguistic and cultural boundaries and connect with audiences across the world. We are thrilled to produce a film that is poised to receive immense appreciation and success across India. We warmly welcome Suriya and T.J. Gnanavel to the Hombale Films family.

Hombale Films has always focused on understanding audience expectations and delivering quality cinema on a grand scale. We are constantly looking to collaborate with actors, directors, and technicians who share our vision. The one Suriya and T.J. Gnanavel coming together with us, expect the unexpected.”

For S-48, music will be composed by Sai Abhyankkar, the young sensation currently ruling the hearts of music lovers. Actress Kayadu Lohar, who has garnered attention across Tamil, Telugu, and Malayalam cinema, plays the female lead.

The film also features an impressive supporting cast, including Prakash Raj, Yogi Babu, and Kumarevel in pivotal roles.

S.R. Kathir handles cinematography, K. Kadhir serves as the production designer, Philomin Raj takes care of editing, and B.Krithika contributes to the screenplay.

The film’s shoot set to commence on July 22 2026.

 

Newly formed production banner Rayra Ventures has officially announced its entry into the cinematic landscape with its debut feature film, Achyuta Avataaram. Launched by founder and passionate filmmaker Punith, the banner is introduced with a core vision focused on bold storytelling, experimental filmmaking, and culturally rooted narratives tailored for a wide audience appeal.

For its maiden project, Rayra Ventures has joined forces with co-producers and longtime supporters Ramesha C, RudraMurthy, and Rakesh under the banners of MR Film Factory & RR Combiness to bring a unique, high-concept narrative to the silver screen.

A Bold Blend of Spirituality and Modern Technology

Written and directed by Punith, Achyuta Avataaram is a female-centric feature film that aims to achieve a rare thematic crossover. The project features an experimental narrative structure that seamlessly blends deep-rooted spirituality, family drama, and intense cultural emotion with the dark, fast-paced world of technology and cybercrime.

The story charts the harrowing yet empowering journey of Achyuta, a traditional and culturally grounded young woman whose life is abruptly shattered by a devastating personal tragedy rooted in a digital scam. Refusing to succumb to her circumstances or remain a victim, Achyuta chooses to weaponize the very element that broke her world. The plot follows her high-stakes transformation as she masters modern technology to wage a relentless, protective crusade against digital fraud and cybercrime networks.

Trailer Out Now; July Release Slated

Building momentum ahead of its theatrical run, the official trailer for Achyuta Avataaram has been released across digital platforms, offering audiences a glimpse into its tense, tech-driven atmosphere and emotional core.

With post-production entering its final phases, the makers have confirmed that the film is locked and all set for a grand theatrical release in July 2026.

To watch the grand musical and promotional celebration of the movie's unveiling, you can check out the Vaikkom Vijayalakshmi At Achyutha Avatharam Trailer Launch video, which captures the complete audio event and crew press meet.

 

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது. 


கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில், பாரம்பரிய கிராம விருந்துடன் விழா நிறைவடைந்து. இது அனைவருக்கும் மறக்க முடியாத மகிழ்வான மாலையாக அமைந்தது. 


கலாமயா சினிவர்ஸ்  சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்திருக்கும் ’என்ன விலை’ திரைப்படத்தை சஜீவ் பாழூர் எழுதி இயக்கியுள்ளார். சமூக, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த குடும்ப த்ரில்லர் திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜீ. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இந்தத் திரைப்படம் வென்று பெருமை சேர்த்துள்ளது. இதனால், படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.


தயாரிப்பாளர் ஜித்தேஷ் பகிர்ந்து கொண்டதாவது, "ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் நன்றியுணர்வோடு தொடங்கும் வாய்ப்பு சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்களாலோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியாகிறது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு அளவற்ற அன்பும் ஆதரவும் கொடுத்த பாலம் கிராம மக்களே எங்கள் படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது ஒரு விளம்பர நிகழ்வு மட்டுமல்ல, அவர்களுக்கு நாங்கள் தெரிவித்த மனமார்ந்த நன்றியாகும்" என்றார்.


இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது கதைக்கான இடத்தை தேர்வு செய்வோம். ஆனால், சில நேரங்களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும் அந்தக் கதையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றனர். 'என்ன விலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்கள் எங்களை குடும்பமாக அரவணைத்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சந்திப்பதற்கு முன், இந்த திரைப்படம் முதலில் அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, என்றென்றும் எங்களுக்கு மகிழ்ச்சியான நினைவு” என்றார்.


திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, ’என்ன விலை’ திரைப்படம் தனது முதல் ரசிகர்களை கண்டுபிடித்துவிட்டது. இந்த திரைப்படத்தை தங்களுடையதாக ஏற்றுக்கொண்ட பாலம் கிராம மக்கள்தான் முதல் பார்வையாளர்கள். அவர்களை கௌரவிப்பதன் மூலம், இந்த திரைப்படத்தின் பயணம் சமூக ஒற்றுமை மற்றும் இனிய நினைவுகளுடன் தொடங்கியுள்ளது.

 

படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின்  படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது.


விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில்  தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின் ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது. 


இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், "‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் திருப்திகரமான தருணமாகும். இந்தக் கதையை ஆரம்பம் முதலே நம்பி, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நம்பிக்கையால்தான் நாங்கள் நினைத்தபடியே இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது. ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஹைக்கூ’ திரைப்படம் ரசிகர்களுக்கு மனதை வருடும், இதமான, தென்றல் போல இலகுவான, உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. அதை விரைவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு இயக்குநரின் கனவுகளை நனவாக்க தயாரிப்பாளரின் ஆதரவு மிக அவசியம். அந்த வகையில், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட எனது தயாரிப்பாளர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். எதிர்காலத்தில் பல இளம் இயக்குநர்களுக்கு விஷன் சினிமா ஹவுஸ் வாய்ப்பளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.


தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து பகிர்ந்து கொண்டதாவது, "‘ஹைக்கூ’ திரைப்படம் முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆரம்பம் முதலே இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தப் படத்தை மிகத் தெளிவான பார்வையுடனும் நேர்மையான அணுகுமுறையுடனும் உருவாக்கினார். அவர் மீது முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பிலும் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது அருமையான அனுபவம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தவுடன் இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம். தரமான படைப்பும், திட்டமிட்ட நேரத்தில் அதை நிறைவு செய்வதும்தான் தயாரிப்பாளருக்கு உண்மையான மகிழ்ச்சி. இதனை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி சரியாக செய்து முடித்தார். இயக்குநராக அவருக்கு எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றனர்.


படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே 'ஹைக்கூ' திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தற்போது டிஜிட்டல் உரிமைகள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சூழலில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது இப்படத்தின் கதை மீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் இணைக்கும் பொதுவான இந்த கதை, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


நடிகர்கள்: ஏகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, 'மெய்யழகன்' புகழ் இந்துமதி, 'லப்பர் பந்து' புகழ் ஜென்சன், 'சிறை' புகழ் இஸ்மத்தா பானு, 'டாக்டர்' சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


எழுத்து, இயக்கம்: யுவராஜ் சின்னசாமி,

கூடுதல் திரைக்கதை: ஹரி ஹரன் ராம்,

ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி,

படத்தொகுப்பு: சக்தி பிரணேஷ்,

இசை: சித்து குமார்,

கலை இயக்கம்: பிரேம்

 

புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!


சென்னை/புதுச்சேரி (24-06-2026):

பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். 


இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு:


நூலின் முக்கிய நோக்கம்:

* பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது கேமரா, எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் ‘தொழில்நுட்பக் கல்வி’ அன்று; மாறாக, மனித உணர்வுகளையும், வாழ்வியல் அறத்தையும், கலை நுணுக்கங்களையும் ரசிக்கக் கற்றுத்தரும் ‘திரைப்பட ரசனைக் கல்வி’ (Film Appreciation Education) ஆகும். 

* மனநலன் காக்கும் தடுப்பூசி: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் போதையற்ற, வன்முறையற்ற, பிறருக்கு நன்மை செய்யும் நல்மனங்களாக உருவாவதற்குக் கலை ரசனை மிகவும் முக்கியமானது. 

* ஆசிரியர்களுக்கான வழிகாட்டி: இது குழந்தைகள் படிப்பதற்கான பாடநூல் அல்ல; மாறாக, மாணவர்களுக்குத் திரைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி (Guide) ஆகும். ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.


முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள்:


1. நூலகங்களில் கட்டாய இடம்: இப்புத்தகத்தை ஒவ்வொரு பள்ளியின் நூலகத்திலும், ஆசிரியர் அறையிலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் (Teacher Training Institutes) மற்றும் கல்லூரிகளிலும் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

2. பள்ளிகளில் ‘ஹோம் தியேட்டர்’ வசதி: குழந்தைகளின் உலக சினிமா பற்றிய புரிதலை வளர்க்கவும், பன்னாட்டுச் சிறார் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும், ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கெனப் பிரத்தியேக ‘ஹோம் தியேட்டர்’ (Home Theater) வசதியை ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.


எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்காக, திரைப்படக் கல்வியை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று இயக்குநர் சீனு ராமசாமி இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகிறது.


இந்த நகைச்சுவை கலந்த கதையில் சுப்பிரமணியம் ’சுப்பு’ சில்லுகுரி ராவ், எந்தவொரு ஆசிரியரும் செல்ல விரும்பாத ஒரு இடமான 'மாகிபூர்' (முற்றிலும் கற்பனையான) கிராமத்தில் பணி அமர்த்தப்படுகிறார். குடும்பத்தினர் மத்தியில் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உறுதியுடன் அங்கு செல்லும் சுப்புவுக்கு, அக்கிராமத்தினருக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற மிகவும் சங்கடமான பணி காத்திருக்கிறது. அவரது வகுப்பறையில் ஒவ்வொரு கேள்வியும் விவாதமாக மாறுகிறது. ஒவ்வொரு வதந்தியும் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ரகசியமாக எதுவும் நீண்ட நேரம் இருக்காது. அனுபவம் குறைவாக இருந்தாலும் நல்ல எண்ணங்களுடன் செயல்படும் சுப்பு, தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத நட்புகளின் மத்தியில் கிராம மக்களுக்கு வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை கற்பிக்க முயல்கிறார். ஆனால் மாக்கிபூரை மாற்ற முயற்சிக்கும் சுப்புவையே அந்த கிராமம் மாற்றத் தொடங்குகிறது. 


சுப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது பற்றி சந்தீப் கிஷன் பகிர்ந்து கொண்டதாவது, "மக்கள் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை நகைச்சுவை, அன்பு மற்றும் நேர்மையுடன் அணுகும் தொடர்தான் சூப்பர் சுப்பு. சுப்பு ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும்போது, அதைவிட அதிக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் நபர். வேலை தொடர்பான ஏமாற்றங்கள், காதல் சிக்கல்கள், தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சி, கிராம மக்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை என அவருக்கு எப்போதும் பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர் எப்போதும் நல்லதே செய்ய விரும்புகிறார். மாகிபூரில் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்களும், ஒவ்வொரு தவறான புரிதலும் இந்த தொடரின் நகைச்சுவையையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான இதில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் சுப்புவை சந்தித்து இந்த மறக்க முடியாத பயணத்தில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார். 


சமூகவலைதள இன்ஃப்ளூயன்சரும் நடிகையுமான மிதிலா பல்கர் பகிர்ந்து கொண்டதாவது, “நகைச்சுவையையும் மனித உணர்வுகளையும் 'சூப்பர் சுப்பு’ மிக அழகாக கையாண்டுள்ளது.குழப்பங்கள், ஆர்வம், மகிழ்ச்சி, உறவுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளும் மனிதர்களின் கதை இருக்கிறது. மாலிக் ராம் உருவாக்கிய இந்த உலகம் தனித்துவமானது, உயிரோட்டமிக்கது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்தப் பயணத்தில் நினைவில் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மனதுக்கு நெருக்கமானது. நெட்ஃப்ளிக்ஸின் ஆரம்பகால ஒரிஜினல்களில் ஒன்றான ‘லிட்டில் திங்ஸ்’ தொடரில் நான் நடித்தேன். இப்போது அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’விலும் நடித்திருப்பது முழுமையடைந்த பயணமாக பார்க்கிறேன்" என்றார். 


சுப்புவின் தந்தை குகடேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் முரளி சர்மா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை உங்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், பலர் தவிர்க்கும் உரையாடல்களை இயல்பாக்கவும் உதவும். நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் சமூக கருத்துக்களை இதன் மைய உணர்வை இழக்காமல் மிக இயல்பாக இந்தக் கதை பேசியிருக்கிறது. மாகிபூரில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்கள் தங்களை இணைத்து கொள்ள முடியும். திறமையான நடிகர்களுடன் பணியாற்றியதும், நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரின் நடித்ததும் மகிழ்ச்சியான அனுபவம். மாக்கிபூரின் நகைச்சுவை, ஆச்சரியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார். 


மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் ஷிவானி தோபல் ஆகியோர் திரைக்கதை எழுதி, சிலகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் சுப்பு' தொடரில் கெட் அப் சீனு, மானசா சௌத்ரி, ஜீவன் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


'சூப்பர் சுப்பு' தொடர் ஜூலை 2 அன்று நெட்ஃபிளிக்ஸில் மட்டும் வெளியாகிறது

 

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். 


இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.


திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் சீக்வலில் இருண்ட மற்றும் மர்மமான உலகிற்குள் மீண்டும் பார்வையாளர்கள் செல்ல இருக்கிறார்கள். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து கதையை இன்னும் விரிவுபடுத்தியுள்ளார். சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை.


சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், ‘டிமான்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். படம் வெளியான பிறகு, ஒரு ரசிகர் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘தி ஷைனிங்’ பட அனுபவத்தை ‘டாக்டர் ஸ்லீப்’ எவ்வாறு தொடர்ந்ததோ, அதைப் போலவே இந்த அனுபவம் இருந்தது என்று அவர் கூறினார். அத்தகைய கருத்துகளை கேட்கும்போது, இந்த சீக்வலின் அங்கமாக நானும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலும் அதிகரித்தது. இன்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் இணைந்திருப்பதை பெருமையாக உணர்கிறேன். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்கவுள்ளோம்" என்றார். 


ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவற்றுடன் இணைந்து, பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் டங்கல் டிவி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு படம் வழங்கப்படுகிறது.


நடிகர்கள்: அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர். 


தொழில்நுட்பக்குழு விவரம்:


தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை: ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்,

எழுத்து, இயக்கம்: அஜய் ஆர். ஞானமுத்து, 

இசை: சாம் சி.எஸ்.,

ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன்,

படத்தொகுப்பு: குமரேஷ்.டி

 


கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ்  ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. 


நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு  மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. 

'ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை' என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும்  திருப்பங்களுடன் படமாகியுள்ளது .


அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.


ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.


சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்

'எ சித்து இன்வெஸ்டிகேஷன்'என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.


இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.


விழாவில் ட்ரெய்லர்,   பாடல்கள் திரையிடப்பட்டன.


விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.


தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,


"இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில்  ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் 'தி டார்க் ஹெவன்' நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

உப்புமா படங்களால்,

தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான  இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக  இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ''என்றார்.


இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,  


" நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்" என்றார்.


தயாரிப்பாளர் கோபால் பேசும் போது, 


"இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.


நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,


"இந்தப் படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம் .அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம் .சில காட்சிகளை  ரீஷூட் செய்தார். அவர் நினைத்தது சரியாக வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார் .இந்தப் படத்தின் போது அவருக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தது . அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியே  மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார்.கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும்.

இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.


கேமராமேன் சிரிக்கவே மாட்டார் 

காரியத்தில் கண்ணாக இருப்பார் .

இந்தப் படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள். அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும்" என்றார்.


நடிகர் ஜெயக்குமார் பேசும்போது 


"நடந்து போக கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு  நடத்தினார். அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.


ஒவ்வொரு காட்சியையும் மூன்று முறை எடுப்பார். சரியானது வரும் வரை விட மாட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின் போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் 'என்றார்.


நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும் போது,


" இன்று இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு.  கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார்.

 இப்போது இல்லை. 

அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.


இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள்  திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார் .வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன். நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.


 படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி  எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை" என்றார்.


இயக்குநர் மித்ரன் பேசும் போது ,


"இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது  எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி  திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.


நடிகர் புகழ் பேசும்போது,


 " இந்தப் படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும்  அன்பாகப் பழகுவார் .என்னை டார்லிங் என்று தான் கூப்பிடுவார். இந்தப் படத்தின் கான்செப்ட் பார்க்கும் போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் "என்றார்.


இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


" நான் இதற்கு முன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப்  பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப் படம் இது.

வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல  பெருமையாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே சூழலுடன் தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு  ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்" என்றார்.


நடிகர் ரித்விகா பேசும்போது,


" இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.


எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார்.

அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.


 கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்" என்றார்.


நடிகர் மைம் கோபி பேசும்போது,


" தம்பி சித்து இந்த அளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் .சினிமா ஒரு அழகான துறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது .அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.


சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.

 எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம் "என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


" இயக்குநர் பாக்யராஜ்  சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.


இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான  இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்

தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா  வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும்  சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். "

என்றார்.


படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,


" எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன்.  அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.


இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். 'திருமணம்' தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் "என்றார்.


'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

 

“பாகுபலி: தி பிகினிங்”  திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது.


Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி ‘பாகுபலி’ எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடித்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், உலகின் பல பகுதிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்தார்.


“இத்தாலியில் கூட மக்கள் என்னை பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு நான் அறப்பணிக்காகச் சென்றபோதும், அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’ படத்தை எவ்வளவு விரும்புகிறோம் என்று கூறினார்கள். ‘பாகுபலி’க்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது,” என்று பிரபாஸ் தெரிவித்தார்.


மேலும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.


“நார்வேயில் ஒருவர் ராஜமௌலி சாரிடம் வந்து, ‘நீங்கள் ஒரு இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள்தான் பாகுபலி படத்தின் இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். ‘பாகுபலி’ உலகின் எத்தனை இடங்களை சென்றடைந்திருந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயாஜாலம்.”


இந்த திரைப்படம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையே எவ்வாறு மாற்றிவிட்டது என்பதையும் பிரபாஸ் பகிர்ந்தார்.


“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்போது நான் ராஜமௌலி சாருக்கு போன் செய்து, ‘என்னை இந்த ஜென்மத்தில் சுதந்திரமாக பயணம் செய்ய விட மாட்டீர்களா? எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை வேண்டாமா?’ என்று நகைச்சுவையாகக் கேட்பேன். முன்பெல்லாம் ஓய்வாக இருக்க மும்பை அல்லது டெல்லி செல்வோம். இப்போது அது கூட முடியவில்லை. உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.” என்கிறார்.


பத்து ஆண்டுகள் கடந்தும், பாகுபலியின் மரபும் தாக்கமும் இன்னும் ஈடு இணையற்றதாகவே திகழ்கிறது. இந்திய சினிமாவின் மைல்கல்லாக நிலைத்து நிற்கும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய தூதுவராக பிரபாஸ் தொடர்ந்து இருந்து வருகிறார். பான்-இந்தியா சினிமாவின் முகமாகவும், உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராகவும் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் வலுவடைந்துள்ளது.

 

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்களை வலுவாக சித்தரிக்கிறது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதை, பலரின் கவனத்திற்கே வராமல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.


இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,

“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.


நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,


“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”



நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,


“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.

Pageviews