India, 6th May 2026: Tamil Zee5 continues to strengthen its slate of bold, rooted, and uncompromising storytelling with the upcoming original series ‘Warrant’, set to premiere from May 22, 2026. The series stars Prashant Pandiyaraj in the lead role, marking a significant milestone as the acclaimed director of the cult-hit series Vilangu and film Maaman makes his debut as a lead actor. Actor and Musician GV Kumar launches the first look of the series.

Link - https://youtu.be/z58t_iTcAz0?si=ObdXXelrafjs82G-

Produced by Sivan Pictures and S Studios, directed by debutant Vignesh Natarajan, with music composed by Sam C.S. The series is showrun and cast by Prasanth Pandiyaraj. Alongside, the series features a powerful ensemble cast including Balaji Sakthivel, Kousalya, Kaali Venkat, Namritha MV, Arul Jothi, Arul Dass, and Chaya Devi, among others, bringing depth and credibility to its layered narrative.

Warrant delves into the overlooked world of routine police cases that slowly spiral into danger. It follows Koattai Karuppusamy, a second-grade constable whose quiet humiliation and fear begin to shape how he enforces the law, raising unsettling questions about power, authority, and when justice starts to blur.

Speaking about his decision to debut as an actor through Warrant, Prashant Pandiyaraj shared, “Koattai Karuppusamy is not a hero written to be admired. He is uncomfortable, fragile, and deeply human. That honesty scared me, and that’s exactly why I chose to play him. As a creator, I’ve always been drawn to truth over spectacle. Acting in Warrant pushed me to confront emotions I usually explore only behind the camera. Tamil Zee5 gave this story the space to breathe, to be raw and unapologetic. I hope audiences don’t just watch Koattai Karuppusamy’s journey, but feel challenged, and moved by it.”

Stay tuned to watch ‘Warrant’ on Tamil Zee5 from May 22.

About ZEE5:
ZEE5 is Bharat’s largest homegrown video streaming platform and the multilingual storyteller for millions of entertainment seekers. ZEE5 stems from the stable of ZEE Entertainment Enterprises Limited (ZEEL), a Global Content Powerhouse. An undisputed choice of video on demand platform for consumers, it offers an expansive and diverse library comprising 4,071+ films, 1,800+ TV shows, 422+ web originals, 4,492+ music videos, and over 1.35 lakh hours of on-demand content. The content is now offered to our varied audience through 7 personalized and hyper-local subscription packs spread across 12 languages - Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada, Marathi, English, Oriya, Bhojpuri, Gujarati, and Punjabi. This encompasses our large repertoire of Originals, Indian and International Movies, TV Shows, Kids shows, News and Live TV. A strong deep-tech stack, stemming from partnerships with global tech disruptors, enables ZEE5 to deliver a seamless experience across multiple devices, ecosystems, and operating systems. Follow ZEE5 on Facebook, Instagram, LinkedIn and X.

Starring Sivakarthikeyan in a powerful new role and directed by Sivakumar Murugesan, Seyon is positioned as a grand rural commercial entertainer and one of the most anticipated releases of 2026. Backed by Kamal Haasan and R. Mahendran under the banner of Raaj Kamal Films International, the film features music by Santhosh Narayanan.

The team of Seyon extends a warm welcome to Bhagyashri Borse and wishes her a very Happy Birthday, looking forward to an exciting cinematic journey together.

 

இசை புயல் AR Rahman இசை அமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான "தென்றலில்" மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த பாடல் Divo Warner South வெளியீடு.


திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட sensational star “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  


இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக "தென்றலில்" உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.


சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை. என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன் ), Chillax (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ் ), sada nannu (keerthy suresh Mahanati), அஞ்சு வண்ண பூவே (AR Rahman, Thug Life) போன்ற superhit film songs பாடியவர் சாருலதா. இவர் ஆஸ்திரேலியா Griffith University-யில் இசையில் PhD & Postdoctoral Fellowship முடித்துள்ளார். இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.

இந்த பாடல் அனைத்து digital streaming platforms-ல் வெளிஇட பட்டுள்ளது. ஒரு அருமையான music video YouTube - ல் release ஆகி உள்ளது. VIDEO LINK: 

புது முகங்கள் மாளவிகா & தவன் நடித்து தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார்.


வெளியீட்டு விவரங்கள்:


பாடல்: தென்றலில்

இசையமைப்பு, பாடலாசிரியர் & பாடகி: Dr சாருலதா மணி

வெளியீட்டுத் தேதி: ஏப்ரல் 30, 2026

Label: டிவோ (Divo) / வார்னர் மியூசிக் சவுத் (Warner Music South)

செய்தித் தொடர்பு: நிகில் முருகன்

 

இயக்குநர் தயாள்  பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!!



விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது .



படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார்.



1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகள் படத்தின் தீவிரம், மர்மம் மற்றும் கதையின் பல அடுக்குகளைக் கொண்ட தன்மையை நுட்பமாக உணர்த்துகின்றன. முதல் பார்வையிலேயே அதன் கரடுமுரடான காட்சித் தன்மை மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், 'பருத்தி வீரன்' சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.



இந்தக் கதாபாத்திர காட்சிகளை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன் அவர்களும் தனது D Pictures நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.



சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளில் இறங்கியுள்ளது. பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் சிந்திக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் குழு


கதை, இயக்கம் & இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன் 


திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் 


ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம் 


எடிட்டிங்: V. பூபதி 


இசை & பின்னணி இசை: தர்புகா சிவா 


பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் 


ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு 


மேக்கப்: குப்புசாமி 


ஆடை வடிவமைப்பு: ரமேஷ் 


தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன் 


மக்கள் தொடர்பு (PRO): ரேகா.

 

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’


புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.


இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம்  ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்று.படத்தின் மற்ற நடிகர்கள், குறிப்பாக நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


படத்தில் உயர்தர தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. ’பிந்தம்’, ’3.33’, ’மாங்கோ முனி’ மற்றும் வரவிருக்கும் இந்தி படத்தில் பணியாற்றிய சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவை கையாண்டு்ள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹர்ஷவர்தன் படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 


’3.33’, ’சிவகுமாரின் சபதம்’ மற்றும் வரவிருக்கும் ’பிளெடி பாலிடிக்ஸ்’படங்களில் பணியாற்றிய தீபக் எஸ் எடிட்டிங்கை மேற்கொள்கிறார். ‘அன்னபூரணி’ மற்றும் பல மலையாள படங்களில் பணியாற்றிய சுகன் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார். காஸ்ட்யூம் டிசைனை ’லோகா’, ’மின்னல் முரளி’ படங்களில் பணியாற்றிய மெல்வி ஜே மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை ’அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.


இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், ”ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் ‘சூப்பர் பி மேன்’. நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன், தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறோம். இந்தக் கதையின் உலகத்தை முதல் பார்வை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தில் இருந்து இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் அடுத்தடுத்து வரவிருக்கிறது” என்றார்.


புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன், ’சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியீடு இந்த சுவாரஸ்யமான பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தில் இருந்து மேலும் பல அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்பக் குழு விவரம்:


பேனர்: பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்,

இயக்குநர்: டி. ஜீவிதா கிஷோர்,

ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன்,

இசையமைப்பாளர்:ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,

எடிட்டர்: தீபக். எஸ்,

ஸ்டண்ட் மாஸ்டர்: சுகன்,

காஸ்ட்யூம் டிசைனர்: மெல்வி. ஜே,

ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் எஸ் நாசர்.

 

எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும்.

இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது.

கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள், எதிர்காலத் தோற்றங்களையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து, இந்த ஆல்பத்தை உயிர்ப்பிக்கின்றன.

இந்த ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் தனித்தனி கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையைத் தாண்டி, ஒவ்வொரு பாடலும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான கதை அனுபவத்தையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் கிறுக்கன்’ என்ற தலைப்புக்கு ஏற்ப, இந்த ஆல்பம் ‘கிறுக்குத்தனம்’ என்பது குழப்பம் அல்ல; அது சுதந்திரமான மற்றும் ஆழமான மனித உணர்வுகளின் வெளிப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக வெளியான ‘காக்கும் வடிவேல்’ தமிழ் இன்டிபெண்டென்ட் சிங்கிள் மற்றும் ‘மெஜந்தா’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘தமிழ் கிறுக்கன்’ பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்டின் மூன்றாவது முயற்சியாகும். இந்த ஆல்பத்தின் மூலம் புதிய குரல்களை முன்னிறுத்தி, திறமையானவர்களை ஊக்குவிக்கும் தனது நோக்கத்தை நிறுவனம் தொடர்ந்து வருகிறது.

அடுத்த சில நாட்களில், இந்த ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களுக்கும் தனித்தனியான அப்டேட்கள் வெளியாக உள்ளன. ஒவ்வொரு பாடலின் கரு, இசை மற்றும் கதை குறித்த அப்டேட்கள் வெளியாகும். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும்.

‘தமிழ் கிறுக்கன்’ ஒரு ஆல்பம் மட்டும் அல்ல… அது ஒரு அனுபவம்!

தனித்துவத்தைக் கொண்டாடும் கலை முயற்சி!

பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் பற்றி:

பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்பது டாக்டர் ஜெ.பி. லீலாராம் தலைமையில், ராஜு கே, சரவணன் பா மற்றும் ரேகா எல் ஆகியோருடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். திரைப்படங்கள், இசை மற்றும் பாட்காஸ்ட் துறைகளில் புதிய தரத்தை உருவாக்கும் நோக்கில் இயங்கி வரும் இந்த நிறுவனம், புதுமை மற்றும் சக்திவாய்ந்த கதை சொல்லலின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்க முனைகிறது.

 

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். 


கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. 


சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது. 


தயாரிப்பாளர் கிதேஷ் வி கூறுகையில், “தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இது திரைக்கதை வலுவையும் எங்கள் குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். விருது வென்றிருந்தாலும் ‘என்ன விலை’ திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.ரசிகர்கள் திரையரங்கில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.


இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், “ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதைதான் ‘என்ன விலை’. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விருதிற்காக என இல்லாமல், இந்த படத்தை தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் உருவாக்கியுள்ளோம். இதனை பெரிய திரையில் படம் பார்க்கும்போது நிச்சயம் பார்வையாளர்களும் உணர்வார்கள்” என்றார்.


இந்தப் படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


’என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!


இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 


இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். 


வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் 'மொத ராத்திரி'.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்து கொண்டதாவது, "பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. 'மொத ராத்திரி' திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, "மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு 'மொத ராத்திரி' திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி" என்றார்.


என்கேஜிங்கான கதை, புது திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என 'மொத ராத்திரி' திரைப்படம் புதுமையான அதேசமயம் எண்டர்டெயின்மெண்ட் கதைக்களத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


நடிகர்கள்: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா, சுமித்ரா தேவி. எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கெளஷிக் கபிலன் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு விவரம்:


ஒளிப்பதிவு: சுரேந்திரன் பரஞ்சோதி,

படத்தொகுப்பு: அசோக் அர்ஜூனன்,

இசை: 'மண்டேலா', 'மாவீரன்' புகழ் பரத் சங்கர்,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,

கலை இயக்குனர்: ஏ. பாலுமகேந்திரா,

பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி

 

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 


நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”


டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.


இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.


நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.


நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.


ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்" என்றார்.

 

மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.


வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.


ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.


ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.


இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.


கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பு  : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்.


Pageviews