ரெட்ரோ திரை விமர்சனம்

 

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) - சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், ஒரு சம்பத்துக்கு பிறகு அவரை தன் மகனாக ஏற்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) கரம் பிடிக்க, அனைத்தையும் கைவிட்டு புது வாழ்க்கைக்குத் தயாராகிறார். ஆனால், ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதனால், திருமணம் நிற்கிறது. காதலி கோபித்துக் கொண்டு வேறு நாட்டுக்கு செல்ல, சூர்யா சிறைக்கு போகிறார். அவரின் சண்டை போடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி. ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக் கதை..


சூர்யா மீதே மொத்த கதையும் பயணமாகிறது. படத்தின் ஆரம்பத்தில் சூர்யாவின் இண்ட்ரோ காட்சி, ஆக்‌ஷன் காட்சி என படத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்குத் தேவையான அனைத்தும் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. காதலுக்கென்ற சிறப்பு வசனம், காதல் தோல்விக்கென்று சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடல், எமோஷன்ஸ், காமெடி என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. ருக்மணியாக நடித்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் குறை வைக்கவில்லை.


வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். கிங் மைக்கலாக நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி இரசிகர்களை மகிழ்விக்கிறார்.


படத்தின் மேக்கிங், ஆக்சன் காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக கொடுத்து ஒரு மூன்று மணி நேர ஆக்சன் கேங்ஸ்டர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.




0 comments:

Pageviews