ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு

 

காலை வணக்கம், மாணவர்களே! செய்தி தெரியுமா? மாகிபூருக்கு ஒரு புதிய ஆசிரியர் வருகிறார்!


15 ஜூன் 2026: மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 'சூப்பர் சுப்பு' ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.


நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான 'சூப்பர் சுப்பு', சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையாடல் என சிக்கிக் கொள்கிறார். சுப்புவுக்கு இந்த குறுகிய காலப் பணி, வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறுகிறது. ஆனால் அவர் தன்னிடமே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது, இந்த புதிய சூழ்நிலையில் வாழ்வதற்காக தனது காதல், குடும்பம் மற்றும் தொழிலை ஆபத்தில் விட்டுவிட அவர் தயாரா எனபதுதான் அது. 


நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “'சூப்பர் சுப்பு' என்பது மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தொடர். மாகிபூர் கிராமத்தின் வண்ணமயமான உலகமும், அன்பான கதாபாத்திரங்களையும் இதில் நீங்கள் கண்டு ரசிக்கலாம். பாலியல் கல்வி மற்றும் அதனை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தை இயக்குநர் மாலிக் ராம் நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். பாலியல் கல்வி ஆசிரியராக இந்த உலகில் தனது இடத்தைத் தேடும் அப்பாவியான சுப்பு என்ற கதாபாத்திரம் எதிர்கொள்ளும் நகைச்சுவை அனுபவங்களே இந்தக் கதை. சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா செளத்ரி மற்றும் லெஜெண்ட்ரி பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான 'சூப்பர் சுப்பு' ஒரு சிறந்த கதைக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த கதை நிச்சயம் பார்வையாளர்களின் நினைவில் நீண்ட நாள் நீடித்திருக்கும்" என்றார். 


இந்தத் தொடரைப் பற்றி இயக்குநர் மாலிக் ராம் பகிர்ந்து கொண்டதாவது, “'சூப்பர் சுப்பு' மூலம் நாங்கள் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம். அதே நேரத்தில், பாலியல் கல்வி குறித்த உரையாடல்கள் மறைத்து பேசாமல், இயல்பாகப் பார்க்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டோம். அதற்கான சிறந்த வழி நகைச்சுவைதான். ஏனெனில், சிரிப்பு உடனடியாகத் தயக்கத்தை உடைத்துவிடுகிறது. இந்தக் குழப்பங்களின் மையத்தில், உலகில் தனது இடத்தைத் தேடும் மிகவும் அப்பாவியான சுப்பு இருக்கிறார். இந்தத் தொடர் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் மனித உறவுகளை பற்றியும் பேசுகிறது. திறமையான நடிகர்கள் மாகிபூருக்கு உயிர் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நெட்ஃபிளிக்ஸ் மூலம் இந்த கிராமத்திற்குள் நுழைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார். 


மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் சிவானி தோபால் ஆகியோர் எழுதியுள்ள இந்தத் தொடரை ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி தயாரித்துள்ளனர். சிலகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் கெட் அப் ஸ்ரீனு, மானசா சௌத்ரி, ஜீவன், மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  


ஜூலை 2 முதல் 'சூப்பர் சுப்பு' நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

0 comments:

Pageviews