ஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா

 

"பவர் ஸ்டார்" பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் "ஹரி ஹர வீர மல்லு" ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான "டாரா டாரா" வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது, 


ஏ. எம். ரத்னம் பேசியபோது,


அனைவருக்கும் வணக்கம், எப்போதும் இது போன்ற பிரம்மாண்ட படத்தை 5 ஆண்டுகள் கடினமாக எடுத்துள்ளோம். இதை கொண்டு சேர்பது பத்திரிக்கை நண்பர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. நான் சென்னை வந்து 54 ஆண்டுகள் ஆகுறது. இந்த 54 ஆண்டுகளில் நான் பல வற்றை கற்றுள்ளேன். விட்டலாச்சாரியா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பணியாற்றியுள்ளேன். பல ஆண்டுகளாக கீரவாணி சார் அவர்களை தெரியும் ஆனால் இப்போது தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நிறைய தமிழ் படங்களை தெலுங்கில் டப் செய்துள்ளேன். பின்பு சில படங்களை தயாரித்து இயக்கியுள்ளேன், பாடல்கள் எழுதியுள்ளேன். சினிமா சாதாரணம் அல்ல. அது நமக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும்.


சமீபத்தில், நான் விமானத்தில் ஒருவரை சந்தித்தேன். அப்போது, என் பக்கத்தில் இருந்த ஒருவர் என்னிடம் “சார், நான் இந்தியன் படத்தை 25 முறை பார்த்துள்ளேன், நான் 1500 ரூபாய் சம்பளத்தில் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இப்போது 5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். இது வரை ஒருபோதும் லஞ்சம் வாங்கியதில்லை”, என்றார். அதே போல் “வைஜெயந்தி IPS” படமும் பல மாற்றங்களை கொண்டு வந்தது. 


சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரான “KVN” நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்தேன். அவர் நான் பாய்ஸ் படத்தில் எழுதிய “பிரீடம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை" என்ற என் பாடல் வரிகளை கேட்டு, அவர் வீட்டை விட்டு வெளியில் வந்து பெரிய ஆளாக வளர்த்துள்ளார். சினிமா பலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும். 


ஹரி ஹர வீர மல்லு படம் 17ம் நூற்றாண்டில் நடக்கும் படம். அந்நேரத்தில் இந்தியாவில் என்னென்ன நடந்தது என்பதை புனைக்கதையாக இப்படத்தில் சொல்லியுள்ளோம்.


இப்படம் தாமதமான காரணம் என்னவென்பதை இப்படம் வெளிவந்த பின் தெரியும். இப்படத்தை கமர்ஷியலாகவும், கருத்துள்ள ஒரு படமாகவும் எடுத்துள்ளோம். இப்படத்தில் சத்யராஜ் சார் விரும்பி ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு சிறிய பாத்திரம் என்றாலும் அது படம் வெளியான பிறகு பெரிதாக பேசப்படும். இப்படத்தில் அவரை காப்பாற்ற தான் பவன் கல்யாண் சார் பயணம் செய்கிறார்.


இது பாகம்-1 தான், நாங்கள் பாகம் -2 எடுக்கவுள்ளோம். இப்படம் உருவாக முக்கிய காரணம் என் மகன் ஜோதி கிருஷ்ணா தான். என் மகன் சினிமா துறைக்கு வருவதில் என் மனைவிக்கு விருப்பம் இல்லை. அவர், ஒரு மருத்துவராக வேண்டும் என்று தான் அவர் விரும்பினார். ஆனால் என் வேலையை பார்த்துவிட்டு, லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பதற்காக விண்ணப்பித்தார். அவருக்கு அப்போது கிடைக்கவில்லை. அதன் பின் சரத் குமார் சார் உதவியுடன், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின், எனக்கே தெரியாமல் லண்டனில் படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். என் மனைவி ஒப்புதல் தரமாட்டார் என்று நினைத்த போது அவர் ஜோதி லண்டன் செல்ல ஒப்புதல் தெரிவித்தார். 


அதற்கு முன்பு தான், கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் "நட்புக்காக" படத்தின் கதையை கூறியிருந்தார் ஜோதி. அதன்பின், படிப்பை முடித்துவிட்டு நான் இயக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். ஒரு அப்பாவாக நான் 1 கோடிக்கு சிறிய படம் ஒன்றை இயக்க சொல்லி கேட்டுக் கொண்டேன். அப்போது, எனக்கு 20 உனக்கு 18 படம் இயக்கினார். அவர் இதுவரை இயக்கிய அனைத்தும் காதல் கதைகள் தான். இப்போது தான் ஒரு பான்-இந்தியா படத்தை இயக்கியிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால், ஜோதி இப்படத்தை இயக்கிய விதம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 


இப்படத்திற்கு கீரவாணி சார் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அந்தப்பாடலை பவன் கல்யாண் சாரிடம் காட்டிய போது, 15 முறை பார்த்தார். அதன்பின், வீட்டிற்கு சென்று ஒரு 50 முறை பார்த்துவிட்டு கீரவாணி சார் அவர்களை பாராட்டியுள்ளார். டெக்னிகலாக பவன் கல்யாண் சார் அவர்களுக்கு நிறைய தெரியும். அதனால், மிகுந்த அக்கறையுடன், அவர் துணை முதலமைச்சராக இருப்பதால் படம் எந்த காரணத்திற்காகவும் குறையாக வந்துவிட கூடாது என்பதற்காக அதிக அக்கறை செலுத்தினார். 


இப்படத்தை உயர்ந்த தரத்தில் கொடுப்பதற்காக, தூங்காமல் இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜோதி. இப்படத்தில் மூலம் ஜோதிக்கு பெரிய பேர் கிடைக்கும், என்றார்.


இயக்குனர் ஜோதி கிருஷ்ணா பேசியபோது,


நான் இந்த படம் வைக்கப் பிறகு நான்கு வருடங்களாக தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை தமிழ் சினிமாவில் நான் மீண்டும் படம் இயக்குவேனா என்று சந்தேகமாக இருந்தது மேலும் இங்கு இருக்கும் பத்திரிகை யாளர்கள் சீமத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்களையும் நான்காண்டுகளுக்கு பிறகு இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி.


ஹர ஹர வீர மல்லு படத்தை இயக்கும்போது இவ்வளவு பெரிய ஃபேன் இந்தியா படமாக வரும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை.


எனக்கு முன்பு என்னுடைய அப்பா பேசினார். நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள் அது உங்களுக்கு நன்றாக வரும் என்று சொன்னார். எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் நான் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார், ஆரம்பம், என்னை அறிந்தால் மற்றும் வேதாளம். ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ் மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.


எட்டு வருடங்கள் கழித்து பவன் சாலை சந்தித்தேன் அவர் என்னிடம் எனக்கு ரத்தினம் சாரி ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியாது எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கூறினர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி தனிப்பட்ட இயக்குனரும் கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை ஆனால் இந்த படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா சாங் பாடலை அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.


பாவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16ஆம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு ஔரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபிடியோல் ஔரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.


இந்த படத்தின் கதையை எழுதும்போது ஔரங்கசீப் என்ன சொல்ல வருகிறார் இந்த என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அஜந்தா எல்லோரா போன்ற சுற்றுலா இடங்களை பார்வையிட்ட ஒரு குழுவினரை நிறைச்சவ சந்திக்க நேர்ந்தது அவர்கள் திடீரென்று அவுரங்கசீப்பை திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது மிகவும் இணையாக இருந்ததால் அவர்களிடம் பேசினேன் அப்போது அஜந்தா எல்லோரா போன்ற இடங்களில் எவ்வளவு சிற்பக் கலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள் அதை இப்போது அழித்து வருகிறார்கள் வருங்கால சந்ததியர்களுக்கு இதுபோன்ற சிற்பக்கலை இருந்தது தெரியவே கூடாத வகையில் அழைத்து வருகிறார்கள் என்று கூறினார்கள். அந்த ஒரு சின்ன பொறி தான் இப்படத்தை உருவாக்கியது. பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பதை படத்தின் கதை.


இந்த கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்ட கூடிய ஒரு படம் தான்.


அவன் சாரி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் யாராவது ஒருவர் பிரச்சனையோடு வந்தால் மற்றவர் பிரச்சனையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும்போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டு செல்வார்.


அடுத்து, நான் எப்படி உயர்ந்த தரத்தில் ஒரு படத்தை நினைப்பேனோ அதேபோலத்தான் வருணும். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படம் பிடித்தோம். இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறார் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காக தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.


நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் போது சிறிது பதட்டமாக இருந்தால் ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராத விதமாக நிஜகத்தியை வைக்கும் போது பயந்துவிட்டார் அந்த காட்சி படத்தில் யதார்த்தமாக அற்புதமாக வந்திருக்கிறது.


நாசர் சாருக்கு நன்றி சத்தியராஜ் சாருக்கும் நன்றி நான் சத்யராஜ் சாருடைய மிகப்பெரிய ரசிகன் அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாக தான் பார்ப்பேன். சோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.


கீரவாணி சாரிடம் ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் இசையமைப்பாரா என்று தயங்கினேன். அவர் பார்த்ததுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று இசையமைத்தார். மேலும் அந்த பாடலை பவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். இதைக் கேட்டதும் பவன் சாரும் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனால், இவர் விஜயவாடாவிலும் அவர் ஹைதராபாதிலும் இருந்தார்கள். உடனே தன்னுடைய குழுக்களை அழைத்து விஜயவாடாவிற்கு சென்று பவன் கல்யாண் சாரை நேரலையில் பாட வைத்து பதிவு செய்தார்.


தோட்டதரணி சார் இந்த வயதிலும் ஆர்வமாக உழைப்பதே பார்க்கும்போது சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினர் 25% கூட வேலை செய்வதில்லை.


ஜூன் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2ஆம் பாகமும் வெளியாகும்.



இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது,


அனைவருக்கும் வணக்கம், இப்படம் 5 வருடங்கள் காத்திருந்து பவன் கல்யாண் அவர்கள் துணை முதலமைச்சரான பின்பு வெளியாகிறது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். ரத்னம் சார் அவர்கள் விஜய், அஜித்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரே ஆண்டில் நான் 3 படங்கள் இயக்கியுள்ளேன். நட்புக்காக படத்தில் மட்டுமல்லாமல், படையப்பா படத்திலும் ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அந்த காலம் வேறு, இப்போது நிறைய மாறியுள்ளது. இக்கட்டத்தில், VFX கூடிய பிரமாண்ட படத்தை இயக்கிய ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின், நிறைய வெற்றிப் படங்கள் தான் நீங்கள் இயக்க வேண்டும். "ஜோதி இனி பிரகாசமாக இருக்கும், நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ரத்னம் சார்", என்றார். 


விநியோகிஸ்தர் சக்திவேல் பேசியபோது,


ஏ.எம்.ரத்னம் சார் என்ற இருக்கு ஒரு சக்தி உள்ளது. ஒரு உச்ச நடிகருக்கு திரையில் பெயர் வரும் போது எந்த அளவிற்கு கைத்தட்டல் வருமோ, அதே அளவிற்கு ஏ.எம்.ரத்னம் என்ற பெயர் வரும் போது ரசிகர்கள் கொண்டாடும் பெயர் அது. "இவர் ஏதோ ஒன்னு ரெண்டு சம்பவம் செய்து வந்த தயாரிப்பாளர் இல்லை, இவர் செய்த அனைத்துமே சம்பவம் தான்". தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்ததில் ஏ.எம்.ரத்னம் சார் அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இவரால் தான், தமிழ்நாட்டு திரையரங்குகளில் DTS தொழில்நுட்பம் வந்தது. நான் சினிமாவை இந்த அளவிற்கு கற்றுக் கொண்டுள்ளேன் என்றால், ரத்னம் சார் என்ற பல்கலைக்கழகத்துடன் பயணித்தது தான் காரணம். இவர் ஒரு பிரமிக்கத்தக்க ஆளுமை. நடிகர்களுக்கு கிடைக்கும் அதே அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்திருந்தால், ஏ.எம்.ரத்னம் சாரின் பெயர் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு முதல் இடத்தில் இருந்திருக்கும். இம் மேடையில் பேச வாய்ப்பளித்த ஏ.எம்.ரத்னம் சாருக்கும், ஜோதி கிருஷ்ணா சாருக்கும் நன்றி, என்றார்.


நடிகர் நாசர் பேசியபோது,


நான் முதல் நாள் இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது, இப்படத்தின் செட் தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய செட், அதன் பின் மழை வந்தது, கொரோனா வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. நான் இந்த படத்தை மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து இப்படத்தை மீண்டும் தயாரித்து வெளியிடுகிறார் ஏ.எம்.ரத்னம் என்றால் அவரின் துணிச்சலுக்கு பெரும் பாராட்டுக்கள். அந்த தைரியத்திற்கு இப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமைய வேண்டும். ரத்னம் சாருக்கு பிறகு நான் பாராட்ட வேண்டியது ஜோதியை தான். காரணம், இப்படம் ஆரம்பித்தது வேறு ஒரு இயக்குனர், அதன் பின் அவர் வேறு ஒரு நிலைக்கு சென்று விட்ட காரணத்தால் இப்படத்தை ஜோதி இயக்கினார். இப்படம் இந்த அளவிற்கு வந்துள்ளது என்றால் அதற்கு ஜோதியின் அறிவு தான் காரணம்.


ஜோதி இயக்கத்தில் இப்படத்தின் செட்டுக்கு முதல் நாள் சென்றேன். அப்போது அந்த செட்டில் எதுவும் இல்லை,  நான் பயந்தேன். அதற்கு பிறகு இப்படத்தை எப்படி எடுக்கப் போகிறேன் என்று ஜோதி என்னிடம் கூறினார், அது மிகத் தெளிவாக இருந்தது. அப்போதும் அதை அவர் எப்படி சரியாக எடுப்பார் என்ற பயம் இருந்தது. ஆனால் இப்படத்தின் டப்பிங் சென்ற போது நான் ஒவ்வொரு காட்சியையும் வியந்து பார்த்தேன். ஜோதி என்ன சொன்னாரோ அதை செய்து விட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். 


மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளரா? இல்லை மேஜிசியானா? என்ற எண்ணம் உள்ளது. எப்போதும் நாங்கள் ஒரு கேமராவுக்கு தான் ஷாட் வைத்து நடிப்போம், ஆனால், இப்படத்தில் 6 முதல் 7 கேமராக்களை பயன்படுத்தினார் மனோஜ். எந்த கேமராவுக்கு நடிக்க வேண்டும் என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது. இப்படம் பெரும் தடைகளை தாண்டி வந்துள்ளது. ரத்னம் சார் என்னை அழைத்த போதெல்லாம் நான் வெவ்வேறு இடங்களில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்தேன். ஏனென்றால், பவன் ஒரு நாள் நடிக்க வருகிறார் என்றால் நாங்கள் அனைவரும் வந்து விடுவோம், நடிகர் சுனிலும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்து 2 காட்சிகள் நடித்துவிட்டு மீண்டும் சென்று விடுவார். அந்த அளவிற்கு அனைவரும் உழைப்பை கொடுத்துள்ளோம். நிதி அகர்வாலும் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.


நடிகர் சத்யராஜ் பேசியபோது,


சினிமாவிலிருந்து முதலமைச்சரானவர்கள் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் அவர்களும், ஆந்திராவில் என்.டி.ஆர். அவர்களும் தான். தற்போது, பவன் கல்யாண் அவர்கள் துணை முதலமைச்சராகியுள்ளார். என்.டி.ஆர். அவர்களின் பிறந்த நாள் அன்று பவன் கல்யாண் படத்தின் நிகழ்ச்சி நடப்பது எனக்கு பெருமையாக உள்ளது. 


ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தை நாசர் வியந்தது போல் நானும் பார்த்து ப்ரம்மித்துவிட்டேன். இப்படத்தின் ஹீரோயின் நிதி இல்லை நான் தான். ஒரு படத்தில் ஹீரோவின் வேலை, ஹீரோயினை காப்பாற்றுவது தானே, அப்படி என்றால் இப்படத்தில் பவன் கல்யாண் என்னை தான் காப்பாற்ற வருவார். அதனால் இப்படத்தின் ஹீரோயின் நான் தான். இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இப்படம் நிச்சயம் வெற்றி பெறும், வாழ்த்துக்கள் என்றார்.


கதை ஆசிரியர் பூபதி ராஜா அவர்கள் பேசியபோது,


இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்காக நான் ஜோதி கிருஷ்ணா அவர்களுடன் 5 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். "ஹரி ஹர வீர மல்லு" என்ற தலைப்பே இப்படத்தின் கதையை சொல்லும். அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல். என்பதுதான் இப்படத்தின் கரு. நம் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக ஒரு மனிதனின் போராட்டம் தான் இப்படத்தின் கதை.


இப்படத்தின் கருத்தை சொல்ல சரியான ஆள் யார் என்றால் அது பவன் கல்யாண் அவர்கள் தான். நான் கதாசிரியர் பாலமுருகனின் மகன், இப்போது தெலுங்கு சினிமாவில் இருக்கிறேன். சிரஞ்சீவி சார் அவர்கள் என்னை அறிமுகப்படுத்திய காரணத்தால் எனக்கு 30 ஆண்டுகளாக பவன் கல்யாண் சார் அவர்களை தெரியும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருக்கிறார் எவ்வித மாற்றமும் இல்லை. 


இக்கதையை சரியாக சொல்ல ஒரு ஆள் வேண்டும் அது ஜோதி கிருஷ்ணா அவர்கள் தான். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தியவர். அவ்வளவு கச்சிதமான வேலை அவருடையது. அதற்கு பிறகு தான் அவர் வெளிநாடு சென்று படித்ததெல்லாம் எனக்கு தெரியும்.


பான்-இந்தியா படங்களின் காரணகர்த்தா தான் ஏ.எம்.ரத்னம் சார் அவர்கள். அவ்வளவு பெரிய உழைப்பு அவருடையது. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அவர் போரடிக் கொண்டிருக்கிறார், அந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். கீரவாணி சார் அவர்களின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது பத்திரிக்கை நண்பர்களின் கடமை, அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன், நன்றி என்றார்.


நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியபோது,


என் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு நன்றி தெரிந்துகொண்டு என் உரையை ஆரம்பிக்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. பலரும் சொன்னது போல், ஏ.எம்.ரத்னம் சார் அவரின் படத்திற்காக பெரும் பங்கை செய்வார் அந்த வகையில் இப்படத்தின் "டாரா டாரா" பாடலுக்கு நடன இயக்குனராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பாடலின் பாதி நடனம் ஷோபி மாஸ்டர் இயக்கியிருந்தால் மீதியை ஏ.எம்.ரத்னம் சார் தான் இயக்கியுள்ளார். இந்த வாய்ப்பளித்ததற்கு ஏ.எம்.ரத்னம் சார் அவர்களுக்கு நன்றி, என்றார். 


நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் பேசிய போது,


இப்படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் உணருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், எல்லோரும் வருவதற்கு முன் அவர் ஸ்பாட்டுக்கு வந்து அமர்ந்திருப்பார். அங்கு இருக்கும் அனைத்து வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வார். அவரின் உயரத்திற்கு அவர் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. 


பவன் கல்யாண் சார் அவர்களுடன் பணியாற்றியது சந்தோஷமாக இருக்கிறது, அவர் மிகவும் எளிமையாக தான் இருப்பார். நிதி அகர்வால் சிறப்பாக நடனமாடியுள்ளார். ஜோதி அவர்களின் படத்தில் நான் நடனமாடியிருக்கிறேன், ஆனால் அவர் படத்தில் நடன இயக்கம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஜோதி அவர்களுக்கு இணையாக இருப்பது மனோஜ் அவரின் வேலையும் மிக சிறப்பாக இருந்தது. 


நான் தெலுங்கில் நடன இயக்கம் செய்த முதல் படம் கீரவாணி சார் அவர்களின் இசையில் தான். அதன் பின்பு அவர் தான் என்னை ராஜமௌலி சாரிடம் சிபாரிசு செய்தார். உங்களின் இசையில் பணியாற்றியது மகிழ்ச்சி.  இப்படம் எப்படி இருந்தாலும் தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பை பெரும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் தமிழ் மக்களும் இப்படத்தை கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி என்றார். 


நடிகை நிதி அகர்வால் பேசியபோது,


ரத்னம் சார் சினிமாவின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவதும் அவர் தான் கடைசி ஆளாக கிளம்புவதும் அவர் தான். அவர் இப்படத்தை 5 ஆண்டுகளாக தோளில் சுமந்து சென்றுள்ளார். அவருக்காகவே இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். 


ஜோதி கிருஷ்ணா சார் இப்படத்தில் நுழைந்த முதல் நாள் முதலே அவர் என்னை வழிநடத்த ஆரம்பித்து விட்டார். அவர் எனக்கு மிகப்பெரும் பலமாக துணை இருந்தார். கீரவாணி சார் அவைகளை பற்றி நான் முந்தைய மேடையில் பேசவில்லை. இப்படி ஒரு இசையை எங்களுக்காக அமைத்ததற்கு மிக்க நன்றி சார்.  உங்களின் இசைக்கு பலரும் விரைவில் நடமாடுவார்கள். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.


என்னை இந்த அளவிற்கு சிறப்பாக நடனமாட வைத்த ஷோபி மாஸ்டர் அவர்களுக்கு நன்றி. நான் இது வரை பணியாற்றியதில் மிக சிறந்த தொழிநுட்ப கலைஞர் என்றால் அது மனோஜ் சார் தான். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆசைப்படுகிறேன். இப்படத்தில் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு மிகவும் பெருமையாக உணருகிறேன். இப்படத்தின், கதை மீதும், திரைக்கதை மீதும் அதீத நம்பிக்கை உள்ளது. இப்படத்தை அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், நன்றி என்றார்.


இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி அவர்கள் பேசியபோது,


இந்த உலகத்தில் இருவர் கோபப்பட்டு நான் பார்க்க ஆசைப்படுகிறேன், அதில் ஒருவர் சித்ரா மேடம் அவர்கள், மற்றொருவர் ஏ.எம்.ரத்னம் அவர்கள், என்ன நடந்தாலும் கோபப்படாமல் சாந்த மூர்த்தியாக இருப்பார் அவர். இப்படத்தின் ஹீரோ அவர் தான், அவருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை தரவேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன். இப்படம் வெற்றி பெற்றால், அதற்கு அதிக சந்தோசப்படும் நபர் நான் தான். 


அனைவரும் நான் நன்றாக இசையமைத்திருக்கேன் என்று கூறுகிறார்கள், நன்றாக செய்வது ஒரு விஷயம் என்றால். நன்றாக செய்ய விடுவது ஒரு விஷயம். என்னை இயக்குனர் ஜோதி நன்றாக இசையமைக்க விட்டார். நான் நினைத்ததை செய்ய விட்ட ஜோதிக்கு நன்றி. என்றார். 

0 comments:

Pageviews