அஸ்திரம் திரை விமர்சனம்

 

படத்தில் ஷாம் கொடைக்கானல் பகுதியில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். படத்தினுடைய ஆரம்பத்திலேயே மக்கள் அதிகமாக இருக்கும் பார்க்கில் ஒரு நபர், கத்தியை தன்னுடைய வயிற்றில் தானே குத்திக்கொண்டு இறந்து விடுகிறார். இந்த கேசை விசாரிக்க அதிகாரிகள் ஷாமிடம் கொடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் இதே மாதிரி கையில் கத்தியுடன் வயிற்றை கிழித்து இரண்டு பேர் இறந்து இருக்கிறார்கள். இதை லீடாக வைத்து தான் ஷாம் வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். எதற்காக இப்படி இறக்கிறார்கள்? யார் தூண்டுதலின் பேரில் இந்த மர்ம கொலை நடக்கிறது? இதை ஷாம் கண்டுபிடித்து முறியடித்தாரா? அவருக்கு வெற்றி கிடைத்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.


துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஷாம் வருகிறார். தற்கொலை பின்னணியை தெரிந்து கொள்ள தற்கொலை செய்து கொண்ட மூவர் குடும்பத்திலும் அவரது விசாரணை ஸ்டைல் தேர்ந்த போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறது. அவரது ஜோடியாக நிரா அந்த கேரக்டருக்குள் முழுசாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.


நாயகன் ஷாம் உடன் வரும் காவலராக நடித்திருக்கும் புதுமுகம் சுமந்த் கவனம் ஈர்க்கிறார்.

நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர்,ஜீவா ரவி,ஜே.ஆர்.மார்ட்டின் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுக்கும் ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.


கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.


கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பதட்டம் காட்சிகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.


எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால், ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

0 comments:

Pageviews