பொய்க்கால் குதிரை விமர்சனம்

 


பிரபுதேவா சாமானியர், மனைவியைப் பறிகொடுத்தவர், விபத்தில் ஒரு காலையும் இழந்தவர். அவருக்கு, இதயத்தில் வினோதமான பிரச்சனையை சுமந்துகொண்டு ஆபரேஷன் செய்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ஒரு மகள். மகளின் ஆபரேஷனுக்கு தேவையான 70 லட்சத்தை திரட்ட பல வழிகளில் முயற்சிக்கும் பிரபுதேவா, நல்ல வழிகள் எதுவும் சரிவர கைகொடுக்காத நிலையில் சூழ்நிலைக் கைதியாகி குறுக்கு வழியொன்றை யோசிக்கிறார். அந்த வழி என்ன? அது தந்த பலன் என்ன? குழந்தை உயிர் பிழைத்ததா? என்பதே படத்தின் கதை.


பிரபுதேவா ஒற்றைக் காலில் அவர் ஆடும் நடனத்திலும், அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் அத்தனை எனர்ஜி. ஏற்கும் பாத்திரம் எதுவானாலும் தனித்துவ கம்பீரம் காட்டும் வரலெட்சுமி சரத்குமார் இந்த படத்திலும் நடிப்பால் தனித்துத் தெரிகிறார். பிரபுதேவாவுக்கு நண்பனாக ஜெகன். தனது ஸ்டைலில் காமெடி செய்ய கதையில் இடமில்லை என்பதை உணர்ந்து, கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

பிரபுதேவாவின் மகளாக சிறுமி ஆழியா. அந்த குட்டிக் குழந்தையின் சிரிப்பும், செயற்கைக் கால் பொருத்திக் கொள்ள அன்பால் வலியுறுத்தி தன் தந்தையைச் சம்மதிக்க வைப்பதும் அத்தனை அழகு.


ஒன்றிரண்டு காட்சிகளில் தலை காட்டுகிறார் பிரகாஷ்ராஜ். மின்னல் போல் வந்து மறைகிறார் ஷாம். ‘பிக்பாஸ்’ ரைசா வில்சனும் படத்தில் உண்டு. இமான் இசையில் ‘செல்லமே செல்லமே’ பாடல் இதயத்தில் நிறைகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம். உதவி தேவைப்படுபவர்களை நுதன திருட்டுக் கார்ப்பரேட் கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை போகிற போக்கில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!


0 comments:

Pageviews