அந்தரன் திரை விமர்சனம்

 

இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், ப்ரஜின் பத்மநாபன் மற்றும் இவானா வருண் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'அந்தரன்'.


செழியன் (ப்ரஜின் பத்மநாபன்) ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி. நகரில் தொடர்ச்சியாக அரங்கேறும் மர்ம மரணங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையான கொலையாளி யார் என்பதை அவர் தேடிச் செல்லும்போது, கார்த்திகா (இவானா வருண்) கதாபாத்திரமும் இந்த மர்மத்திற்குள் நுழைகிறது. இறுதியில், பல திருப்பங்களைக் கடந்து கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா, அதன் பின்னணியில் இருக்கும் சமூகக் கருத்து என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.


காவல் அதிகாரியாக வரும் ப்ரஜின், அதிகப்படியான ஹீரோயிசம் இல்லாமல், எதார்த்தமான மிரட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் இவானா வருண், வழக்கமான காதல் காட்சிகளைத் தாண்டி படத்தின் மையப்புள்ளியாக அழுத்தமான நடிப்பைத் தந்துள்ளார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும்எம் கே சாம்பசிவம் , அனுபமா குமார், பத்மன் , செந்தில்குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான சஸ்பென்ஸ் மற்றும் பதற்றத்தை அழகாகக் கடத்துகிறது. கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.


முதல் பாதியில் வழக்கமான பாணியில் நகர்ந்தாலும், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. குறிப்பாக, கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாதபடி இயக்குநர் சந்தோஷ் ராவணன் திரைக்கதை அமைத்துள்ளார்.  கிரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்புபவர்கள் 'அந்தரன்' படத்தை தாராளமாகத் திரையரங்குகளில் பார்க்கலாம்.

0 comments:

Pageviews