வெளவல்ஸ் திரை விமர்சனம்

 

வெளவல்ஸ் திரைப்படத்தை ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். காதலை மையமாக கொண்டு ஐந்து வித்யாசமான கதைகளை கொடுத்துள்ளனர், 

 

முதல் கதை 


தனக்கு வரும் கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் முயற்சியில் ஒரு கொலை நடந்துள்ளது அதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை. 

 

இரண்டாவது கதை 


ஒருவன் ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். இது அவனது வாழ்வை எப்படி மாற்றியது என்பதே இந்த தொடரின் கதை. 

 

மூன்றாவது கதை


ஒருவன் காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும்  மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமான காதல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான், அதன் பின் என்ன ஆனது என்பதே இதன் மீதிக்கதை. 

 

நான்காவது கதை 


எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவித யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது  காதல் உடனும் பயணிக்க வைப்பது எப்படி என அறிவுறுத்தும் ஒரு கதை. 

 

ஐந்தாவது கதை


ஒரு சிலர் வெறுமன வார்த்தையால் மட்டும் காதலை சொல்லி கொள்வார்கள் , ஆனால் அப்படி இல்லாமல் மனதளவில் காதல் மெய்ப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த கதை. 


 

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. கல்லூரி மாணவராக பல படங்களில் நடித்த சின்னி ஜெயந்த், கல்லூரி பேராசிரியாக நடித்திருப்பதும், அவரது முதிர்ச்சியான வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதத்திற்கான தனி அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,  ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். 

 

இந்தப் படத்திற்கு திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், அனைவரும் காதலை கருப்பொருளாக கொண்டு எழுதியிருக்கும் கதை, மற்றும் அதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்த விதம், முழு படத்தையும் தொய்வின்றி நகர்த்தி சென்றுள்ளனர். அதற்கு பெரிய பாராட்டு.  ஐந்து கதைகளிலும் கையாளப்பட்ட மெசஜ் எளிமையானது என்றாலும், அதை காதலோடு சேர்த்து சுவாரஸ்யமாக சொன்ன விதத்தின் மூலம் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சொல்லி சற்று ரசிக்க வைத்துள்ளனர். 

0 comments:

Pageviews