திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா பிரசாத் Lab அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது
தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
நிகழ்வின் துவக்கத்தில் " தமிழ் பிலிம் பேக்டரி " திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில் துணை, ஆலம்நாட், அரைவேக்காடு, Coffee with Avanthika, shadow, Lowgun, கடல்கொண்டான், Love Lust retro, காஞ்சனா, மீண்டும் மழை ஆகிய சிறந்த 10 குறும்படங்கள் திரையிடப்பட்டன.
அரைவேக்காடு, கடல்கொண்டான், காஞ்சனா, நீயே யாவுமாகி ஆகிய படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்பட்டது
சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த editor, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சமுக விழிப்புணர்வு, சமுக உணர்வு, சிறப்பு நடுவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன
ஆலம்நாட் குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு ரூ 25000 வழங்கப்பட்டது, Love Lust retro- கடல்கொண்டான் படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை தலா 25000 வழங்கப்பட்டது
மீண்டும் மழை படத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், பரிசுத்தொகை ரூ 1 லட்சமும் வழங்கப்பட்டது. பரிசுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்றவர்களுடன் அனைவரும் இணைந்து கொண்டாடியது மகிழ்வான தருணமாக இருந்தது.
Firstframe- 2025 விருது விழாவில் முதல் பரிசு வாங்கும் அணியுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக Gembrio pictures MD திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அறிவித்தது மிகவும் முத்தாயப்பான விஷயமாக இருந்தது. அரைவேக்காடு படத்தையும் தயாரிக்க விரும்புகிறோம் என்று ஒரு தயாரிப்பாளர் அறிவித்தார். தயாரிப்பாளர் இமயம் கலைப்புலி S தாணு அவர்களும் படங்களை பார்த்துவிட்டு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக பேசினார்.
இயக்குநர் K பாக்யராஜ் பேசும் போது Firstframe- 2025 இளம் இயக்குனர்களுக்கும், கலைஞர்களும் மிகவும் அருமையான ஒரு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது. அதேபோல் மிகவும் திறமையான இயக்குநர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்களை காணமுடிகிறது. இந்நிகழ்வு மூலமாக இவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்
இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதிபெருமாள், இயக்குநர் குட்டிரேவதி, இயக்குநர் ராகவ் மிர்தாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததோடு இயக்குனர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திரைக்குரலின் Editor-in-chief ஆதவன் UK, அறம் மீடியாவின் நிர்வாக செயல் அதிகாரி சுகுமார் K ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்கள்.










0 comments:
Post a Comment