மிடில் கிளாஸ் திரை விமர்சனம்

 

முனீஸ்காந்தும் விஜயலட்சுமியும் கணவன் மனைவி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஸ்காந்த் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


நாயகனாக முனீஷ் காந்த் சரியாகப் பொருந்தி உள்ளார். முனிஷ்காந்த், இந்தப் படத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பாத்திரத்தின் வலியை, குறிப்பாக நிதி நெருக்கடியால் அவர் படும் துன்பங்களை, மிக யதார்த்தமாகக் கடத்தியுள்ளார். விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்ப பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடித்திக்ருகிறார். துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, ஆட்டோ ஓட்டுநராக வரும் குரோஷி, காளி வெங்கட், கோடங்கி வடிவேலு உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.


பிரணவ் முனிராஜின் பின்னணி இசையில் கதைக்களத்தின் தன்மையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவேண்டும், முடிந்தளவு பிறர்க்கு உதவவேண்டும் என்கிற உயரிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம்.


மிடில் கிளாஸ் - நடுத்தர மக்களின் வாழ்வியல்.

0 comments:

Pageviews