ஏஸ் திரை விமர்சனம்

 

படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி சிறையிலிருந்து வெளிவந்து மலேசியாவிற்கு போகிறார். அங்கு யோகி பாபு மூலமாக தன் பெயர் மாற்றி சமையல் வேலைக்கு போகிறார். இதற்கு இடையில் தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் கதாநாயகி ருக்மணி வசந்த்தை பார்த்ததுமே விஜய் சேதுபதிக்கு காதல் வந்தது. பின் தன்னுடைய காதலை ருக்மணியிடம் விஜய் சேதுபதி சொல்லிவிட்டார். ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்கிறார்கள். 

பின் ருக்மணிக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்காக ரவுடி அவினாஷ் இடம் விஜய் சேதுபதி கடன் கேட்க சொல்கிறார். அங்கு சூதாட்டம் மூலமாக விஜய் சேதுபதி அதிக பணம் சம்பாதிக்கிறார். இதை பார்த்த அவினாஷ், விஜய் சேதுபதியை ஏமாற்றி பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டு அவரை கடனாளி ஆக்குகிறார். கடைசியில் அவினாஷ் இடமிருந்து விஜய் சேதுபதி பாஸ்போர்ட்டை மீட்டாரா? ருக்மணிக்கு பணம் கொடுத்தாரா? ருக்மணிக்கு அவ்வளவு பணம் தேவைப்பட காரணம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.


எந்த வேடம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிப்போகும் விஜய்சேதுபதி இந்தப்படத்திலும் அப்ப்டியே இருக்கிறார்.ஸ்டைலிஷான தோற்றம் மட்டுமின்றி காதல்,மோதல்,நகைச்சுவை ஆகிய எல்லா இடங்களிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.


நாயகி ரருக்மணி வசந்த் அழகான புதுவரவு.நடிப்பிலும் நன்று.விஜய்சேதுபதியுடனன காதல் காட்சிகளில் கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்.


யோகிபாபு ஏற்றிருக்கும் வேடமும் அதைச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்று அவர் காட்டியிருக்கும் முனைப்பும் இரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்க்கிறது.


நாயகனின் நண்பியாக வரும் திவ்யா பிள்ளை, காவலதிகாரியாக வரும் பப்லு, எதிர்மறையாளராக நடித்திருக்கும் கேஜிஎஃப் அவினாஷ் உள்லிட்டோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.


கிரன்பக்தூர்ராவத் ஒளிப்பதிவில் மலேசியாவின் அழகுகள் மேலும் அழ்காகப் பதிவாகியிருக்கின்றன.காட்சிகளுக்கேற்ற ஒளியமைப்பிலும் நற்பெயர் பெறுகிறார்.


ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. சாம்.சி.ஏஸ் பின்னணி இசை படத்தின் தன்மைக்கும்ப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.


எழுதி இயக்கியிருக்கிறார் ஆறுமுககுமார்.எடுத்துக் கொண்ட விசயத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல வேண்டும் என்கிற முனைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.

0 comments:

Pageviews