Shri Bramha Kumar, IFS, Joint Secretary OE division & PGE visited Chennai on 15th November 2023

 

நவம்பர் 15, 2023 அன்று சென்னை வந்த ஸ்ரீ பிரம்ம குமார், IFS, இணைச் செயலாளர் OE பிரிவு & PGE, சென்னை பிராந்தியத்தின் ஆட்சேர்ப்பு முகவர்களை (Recruiting Agents) சந்தித்தார். சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வு பற்றிய தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார். சென்னையில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் (Protector of Emigrants) ஸ்ரீ ராஜ்குமார் எம், ஐஎஃப்எஸ் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுருக்கமான விளக்கத்தை அளித்தார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விரைவில் இதை செயல்படுத்த இருப்பதையும் அவர் விவரித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம் நிறைவுற்றது. தமிழ்நாடு பிராந்திய முகவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு இறுதியில் நன்றி தெரிவித்தனர்.

0 comments:

Pageviews