ரெட் சாண்டல் வுட் விமர்சனம்

 

திருப்பதி வனப்பகுதியில் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவ என்று பொய் சொல்லி தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து செல்லும் புரோக்கர்கள், அவர்களை அங்கு செம்மரம் வெட்டுவதற்கு பயன்படுத்துவதோடு, போலீசில் சிக்கினால் அதன் பின்னணியில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக அந்த தொழிலாளிகளை பலிகடாவாக்கிவிடுகிறார்கள். இந்த விசயம் தெரியாமல் திருப்பதிக்கு வேலைக்கு செல்லும் நாயகியின் அண்ணனை தேடி, நாயகன் வெற்றி திருப்பதிக்கு செல்கிறார். ஆனால், அவரை செம்மரம் கடத்தலில் ஈடுபடுபவர் என்று நினைத்து போலீஸ் கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க, அங்கு எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தும் போலீஸார், பிறகு அவர்களை என்கவுண்டரில் கொலை செய்ய திட்டமிட, அப்போது நாயகன் வெற்றி உள்ளிட்ட அங்கிருக்கும் அனைவரும் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், அவர்களை விடாமல் துறத்தும் போலீஸ் திட்டமிட்டபடி ஒவ்வொருவரையும் சுட்டுக்கொலை செய்ய, அவர்களிடம் இருந்து நாயகன் வெற்றி தப்பித்தாரா?, இல்லையா, தனது நண்பனை கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, தனது ஒவ்வொரு படங்களிலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். அதன்படி, இந்த படத்தில் ஆக்‌ஷன், நடிப்பு என இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.


விவசாயிகளின் அவல நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவமான நடிப்பினால் அசத்துவதோடு, கண்கலங்க வைக்கிறார்.

0 comments:

Pageviews