குலசாமி விமர்சனம்

 

தமிழ்நாட்டிலேயே பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த தனது தங்கையை மருத்துவராக்கத் துடிக்கிறார் விமல். அதற்காக, அக்கிராமத்தினரே செலவு செய்து விமல் தங்கையை படிக்க வைக்கிறார்கள்.


ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சென்று தனது தங்கையை சேர்க்கிறார். கல்லூரி அருகிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார் விமல்.


கல்லூரியில் படிக்க வந்து, கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் சில பெண்களுக்கு உதவுவது போல் உதவிக்கரம் நீட்டி விட்டு, பின் அவர்களை வைத்து பிராத்தல் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறது ஒரு கும்பல்.


அக்கும்பலிடம், பல கல்லூரி பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வரிசையில் விமலின் தங்கையை சிக்க வைக்க நினைக்கிறார்கள்.


இந்த சூழலில் விமலின் தங்கை கற்பழித்து கொல்லப்படுகிறார்.


தங்கையின் நினைவாகவே பித்து பிடித்தாற்போல, தங்கையை போல் இருக்கும் பலருக்கும் தன்னால் இயன்றதை செய்து வருகிறார் விமல்.


தங்கைக்கு ஏற்பட்டதை போல, இன்னும் சில கல்லூரி பெண்களுக்கு ஏற்படும் சூழலில் விமல் அங்கு சென்று கயவர்களை கண்டறிந்து பழிதீர்த்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.


படத்தின் திரைக்கதையில் இயக்குனராக சரவண சக்தி வென்றிருக்கிறார். பல படங்களில் பார்த்த ஒரு கதையையே கொடுத்து வழக்கமான படம் தானா என்று கடந்து செல்லும் படியாக நம்மையும் கடந்து செல்ல வைத்து விட்டார் இயக்குனர்.


விமலின் நடிப்பு பெரிதான ஒரு தாக்கத்தை கொடுக்கவில்லை. எப்போதும் சோக கீதம் வாசிக்கும்படியாகவே முகத்தை வைத்திருக்கிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளிலும் கூட.


தன்யா ஹோப் பெரிதாக ஜொலிக்கவில்லை. விஜய் சேதுபதியின் வசனங்களும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.


ரவிஷங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். க்ளைமாக்ஸ் காட்சி சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு ரசிக்க வைத்தது.


மகாலிங்கம் இசையில், அறிமுக பாடல் ஆட்டம் போட வைத்தது. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

0 comments:

Pageviews