ரக்க்ஷகர்களுக்கு ராக்கி


எங்கள் குழந்தைகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தை பார்வையிட்டோம்.24/7 எங்களைப் பாதுகாக்கும் காவல்துறையினர் தான் எங்களுக்கு உண்மையான ரக்ஷகர்கள் என்ற உண்மையை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தினோம்.

நாங்கள் அங்குள்ள 50 காவல்துறையினர்க்கு ராக்கிகளைக் கட்டி இனிப்புகளை விநியோகித்தோம்.  இன்ஸ்பெக்டர் திரு.ரவி குழந்தைகளுக்கு காவல் நிலையத்தை சுற்றிக்காண்பித்தார் மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்துவதையும் மக்களைப் பாதுகாக்க அவர்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கை பற்றி குழந்தைகளுக்கு விளக்கினார் மற்றும் காவல்துறையினரை நண்பர்களாகக் கருத வேண்டும் என்றும் அவர்களை அழைக்க ஒருபோதும் தயங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வருட ரக்க்ஷபந்தனை  காவல்துறையினருக்கு சமர்ப்பிக்கிறோம்.

0 comments:

Pageviews