'பட்டாம்பூச்சி', 'தி வெட்டிங் சாங்' என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழுவினர் - தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.
கவர்ச்சியான இசை- கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக 'தி ஒன் ரூல்' உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்... கம்பீரத்தையும்... கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் - சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாடலாகவும்.. தீப்பற்ற வைக்கும்... பொறி பறக்கும் ...பாடலாகவும் அமைந்திருக்கிறது.
இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது தாளம் போட வைக்கும் இசையில் உருவான மற்றொரு வெற்றி பாடலாக இருக்கிறது. இந்தப் பாடலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் & பாடகர் கானா காதர் இப்பாடலை எழுதி, பாடியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்து, உடனடியாக வசீகரிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும்... இந்தத் திரைப்படத்திற்கு.. திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு புதிய தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) ஆகிய நிறுவனங்களின் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து, ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம்- சுதந்திர தின வார இறுதியில்... ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்திற்கு, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் ( Marshall Robinson) இசையமைக்கிறார். அவரது இசை இப்படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.
வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள், அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments ) - ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், நடிகர் சூர்யா, நடிகை மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் பேசுகையில், ''இது போன்றதொரு பிரம்மாண்டமான நிகழ்வை முதலில் எனக்கு வழங்கியது ஜிவி.பிரகாஷ் குமார் தான். நான் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தபோது என்னை பாடலாசிரியராக்கி மிகப் பெரிய மேடையை கொடுத்தார். அவருடைய முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன்.
நான் இன்று இயக்குநராக உயர்ந்திருப்பதற்கு முதல் காரணம் சூர்யா நடித்த ஆயுத எழுத்து திரைப்படம் தான். அந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநராக வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன். இன்று அவருடைய படத்திற்கு பாடலை எழுதியிருக்கிறேன்.... அவருடைய படத்திற்கு நான் பாடியிருக்கிறேன்.... இதை நினைத்து மிகவும் சந்தோசம் அடைகிறேன்.
என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சூர்யா சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். அந்த வகையில் அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் வெங்கி அட்லூரி என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். நான் இதுவரை ஹீரோக்களை போற்றி பாடும் பாடல்களை தான் எழுதி இருக்கிறேன். அந்தப் பாடலுக்கு நான் கத்தி பாடி உயிரை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக ஒரு 'பட்டாம்பூச்சி' போதும் என்று சொல்லி பாடல் எழுத வைத்தனர். அதுவும் ஒரு காதல் பாடல். அது ரசிகர்களாகிய உங்களின் வரவேற்பால் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகவும் மாறி இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு காதல் பாடலை எழுதி இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த ஒரு பாசிட்டிவான விசயமாக எடுத்துக் கொள்கிறேன். இதற்காக வெங்கி- சூர்யா- ஜிவி பிரகாஷ் குமார் -ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை மமீதா பைஜூ பேசுகையில், '' என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பதட்டமே இல்லாமல் இயல்பாக இருப்பார். அவரின் இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
சூர்யாவுடன் ஏற்கனவே இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்பு 'மிஸ்' ஆகிவிட்டது. ஆனால் இந்த முறை கடவுள் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமான மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். அவருடைய ஒழுக்கம்- அணுகுமுறை- காட்சிக்கு தயாராகும் விதம் -திரைக்கு பின்னால் அவரின் செயல்பாடு- என பல விசயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்திலும் அவர் எனக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார். மிகவும் பெருந்தன்மையான சக நடிகர். அவருக்கு நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கும், சுனில் ரெட்டிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அது படத்திலும் எதிரொலிக்கும். நாங்கள் தற்போது ராதிகா சரத்குமார் மேடத்தை மிஸ் செய்கிறோம். அவர்கள் ஒரு அற்புதமான கலைஞர். இனிமையானவர். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார்கள் “ என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேசுகையில், '' மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த 'வாத்தி' படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா க்கு நன்றி.
'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் 'சூரரை போற்று' படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணியாற்றிருக்கிறோம். 'சூரரைப் போற்று' திரைப்படம் - எங்கள் இருவருக்கும் முதன்முறையாக தேசிய விருதை வழங்கிய படம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் அளித்த கூட்டணி.
அந்த தருணத்தில் சூர்யா சார் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவியை செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான 'வாத்தி' திரைப்படத்திற்கும் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் 'லக்கி பாஸ்கர்' என்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் இணைந்தோம். அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதனால் இந்த படத்தில் என்னுடன் இரண்டு ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் இருக்கிறார்கள்.
இந்தப் படம் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து பார்க்க வேண்டிய படம். ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இன்று சூர்யாவின் ரசிகர்களுக்காக அவர்கள் விரும்பிய தி ஒன் (The One) பாடலை வெளியிடுகிறோம். அது சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கான ஆக்ரோஷமான பாடல்.
நடிகை மமீதா பைஜூவை நான் ஐந்து ஆண்டுகளாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அன்பானவர். 'பட்டாம்பூச்சி' பாடலை அவர் தன்னுடைய நடனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளார். இந்த பாடல் வெளியான பிறகு அவருடைய நடனத்திற்கு கிரேஸ் அதிகமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் அவருடைய நடன அசைவுகளை ரீ கிரியேட் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இவற்றையெல்லாம் கடந்து சூர்யா சார். இந்த படத்தில் எமோஷனலாக... அழகாக... அற்புதமாக ...நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் பிடிக்கும். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்க்கலாம். இந்தப் படம் ஒரு இதயபூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது தமிழ் படம். நாங்கள் இந்த திரைப்படத்தை கோவையில் தான் தொடங்கினோம். இங்கு வருகை தந்து, இங்கிருந்து பழனிக்குச் சென்று, முருகனை தரிசித்து விட்டு, அதன் பிறகு கோவையில் தான் படப்பிடிப்பை தொடங்கினோம். படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் நிகழ்வையும் கோவையில் தான் தொடங்கி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை கோயம்பத்தூர் மிகவும் வெற்றிகரமான- வெற்றியை வழங்கக் கூடிய இடம்.
என் மீதும், இயக்குநர் வெங்கி மீதும் நம்பிக்கை வைத்ததற்காக சூர்யாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் சூர்யா மிக இளமையாக நடித்திருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களுக்கு நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இந்தப் படத்தில் ஒரு 'சஞ்சய் ராமசாமி'யை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்கலாம்.
நான் தெலுங்கு தாய் மொழியை கொண்டிருந்தாலும் எனக்கு ஏராளமான தமிழ் மக்கள் நண்பர்கள். தமிழ் மக்கள் அனைவரும் எங்களது தயாரிப்பில் உருவான 'அலகொண்ட வைகுந்தபுரம்' படத்தை கொண்டாடினார்கள். நான் இதை ஒரு ஒப்பிடுவதற்காக சொல்லவில்லை. நாங்கள் இந்த படத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த வகையில் இந்த படம் தமிழில் உருவாகி இருக்கும் ஒரு 'அலகொண்ட வைகுந்தபுரம்' என சொல்வேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
ஜென் ஸீ இளைஞர்களுக்கு பிடித்த நடிகையாக மமீதா பைஜூ இருக்கிறார். அவர்களின் பேரன்பினை சம்பாதித்து இருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பாதியில் சூர்யா- மமீதா- ராதிகா சரத்குமார் - ஆகியோர் இடம்பெறும் ஒரு காமெடி காட்சி வரும். இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் அது உங்களுடைய உணர்வுகளை எப்படி பாதித்தது என்பதை.... உங்களது நினைவுகளை எப்படி கிளறியது என்பதை... அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் மூன்றாவது திரைப்படம். ஹாட்ரிக் வெற்றியை பெறும். சூர்யாவின் ரசிகர்களுக்காக அவருக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், '' இந்தப் படத்தின் பணிகளை பழனி முருகனின் ஆசியுடன் கோவையில் தான் தொடங்கினோம் என தயாரிப்பாளர் குறிப்பிட்டார். ஏனெனில் இந்த இடம்... இந்த ஊர்... இந்த மக்கள்... அனைவரும் சூர்யா சாரின் சொந்தங்கள்.
இந்த படத்தின் இந்த நிகழ்வை இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் எங்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் சூர்யாவின் சொந்த மண்ணில்... அவருடைய அன்பான ரசிகர்களுக்காக... இங்கு நடத்த தீர்மானித்தோம். உங்களின் வருகையால் இந்த நிகழ்ச்சி திருவிழா போல் அமைந்து, எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகரிடம் சொன்னபோது.. அவர் கதையைக் கேட்டு சில இடங்களில் கண்ணீர் விட்டார். உடனடியாக சூர்யாவை சந்தித்து கதை சொல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ராஜசேகருக்கு நன்றி.
அதன் பிறகு சூர்யாவை சந்தித்து முழு கதையையும் விவரித்தேன். அதைக் கேட்டு விட்டு உடனடியாக எனக்கு ஆசி வழங்கி, இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார். 2023 ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு அவருடன் இந்த படத்தில் இணைந்து அழகான படத்தில் பணியாற்று இருக்கிறேன். இதற்காக அவருக்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சின்ன தங்கச்சியாக மமீதா பைஜூ துறுதுறு என்று இருந்தார். அவர் வந்தால் படப்பிடிப்பு தளமே உற்சாகமாக மாறிவிடும். அவர் இருந்தால் நடிகை என்கிற எண்ணம் இல்லாமல் குடும்பத்தினரோடு இருக்கிறோம் என்று உணர்வை ஏற்படுத்தி விடுவார். அவர் ஒரு நம் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர் போல் அனைவர் மீதும் அக்கறை காட்டுவார். சூர்யா சார் சகோதரரை போலும்... ராதிகா மேடம் தாயைப் போலவும் ...மமீதா தங்கையை போலும்... இருப்பார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும்.... ஒவ்வொரு விசயத்திற்கும்... என்னை அவர் எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எதிர்பார்ப்பை விட எப்போதும் சிறந்த ஒன்றைதான் அவர் எனக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நான் படத்தை பின்னணி இசையுடன் முதல் பாதியை பார்த்து விட்டேன். மிக சிறப்பாக இருக்கிறது. சூப்பர்ப். அதனால்தான் இப்படத்தைப் பற்றி நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். இந்த திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்ல... அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால் நான் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள். அனைவரும் மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் மனதில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கும்.
அருண் ராஜா காமராஜ் எழுதிய 'பட்டாம்பூச்சி' பாடல்- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ்களால் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அவருக்கும் நன்றி.
இது சூர்யாவுக்கு ஒரு நியூ ஏஜ் ஃபிலிம். இந்த திரைப்படம் ஜென் ஸீ ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் படத்தின் முதல் பாதியில் இடம் பெறும் ஒரு காமெடி காட்சியை பற்றி குறிப்பிட்டார். அது வீட்டில் இருக்கும்போது சிகரெட்- ட்ரிங்க்ஸ்- போன்ற விசயத்தை மறைத்து மறைத்து செய்யும் போது.. அதற்காக ராதிகா- சூர்யா -மமீதா- ஆகிய மூவருக்கும் இடையே ஏற்படும் புரிதல் தொடர்பான காட்சி. அது பத்து நிமிடம் வரை நீடிக்கும். இது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அனைவரும் இதனை கடந்து வந்திருப்பார்கள். அதனால் இந்தக் காட்சியை பார்த்தவுடன் உங்கள் வாழ்க்கை இது போல் நடந்திருந்தால்.... அதனை ட்வீட் செய்யுங்கள் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார்'' என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், '' கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்த தருணம் வரை இதனை ஒரு திருவிழாவை போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி.
ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... என்ன செய்தீர்கள்... என்பதை நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானத்தை வழங்கியுள்ளீர்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறீர்கள். குட்டி குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறைய 'பிளாஷ்பேக்'குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர் -காசி கவுண்டர் புதூர்- புளியம்பட்டி- கவுண்டம்பாளையம் - இளையராஜாவின் பாடல்கள் - ஆடு மாடு மேய்ப்பது- மாட்டு வண்டி ஒட்டுவது - வயலில் நடப்பது- வரப்பில் உறங்குவது- கிணற்றில் குதிப்பது.. என எல்லா செயல்களையும் செய்திருக்கிறேன்.
கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்து... இந்த புளிய மரத்தில் தான் விளையாடினேன்.... இந்த கிணற்றில் தான் குதித்தேன்.... இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்... என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்... நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களை சுற்றி உள்ள மக்களைப் பற்றி... ஊரைப் பற்றி... உறவுகளைப் பற்றி... நிறைய விசயங்களை பேசி, கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
'கருப்பு' படத்திற்கு பிறகு இப்போது தான் உங்களை நான் சந்திக்கிறேன். 'கருப்பு' படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட போது உடன் நின்று ஆதரவு அளித்து படத்தை வெளியிட ஒத்துழைப்பு வழங்கிய விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள்- ஃபைனான்சியர்கள்- என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் நூறாவது நாள் விழா விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வம்சி சார்- இந்த நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும்.... ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகள் குறித்து அவருக்கு எல்லா விசயங்களும் தெரியும். அவர் பணத்தை மட்டும் முதலீடு செய்யாமல்... மக்களுக்கு எந்த மாதிரியான படத்தை வழங்குகிறோம்..? எப்படி வழங்க வேண்டும்..? என ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பாளர்.
'ஜெர்சி', 'லக்கி பாஸ்கர்' என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்த அவர் , அடுத்து என்ன மாதிரியான படத்தை வழங்கலாம் என்று யோசித்து, அவர் தயாரித்த திரைப்படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதற்காக என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். பார்த்த பிறகு அவருக்கு எனக்கு ஒரு நல்ல படத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.
நானும், சுனிலும் ஒன்றாக படிக்கவில்லை. ஆனால் நிறைய ஊர் சுற்றி இருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் 25 வருடத்திற்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறோம்.
எனக்கு மீசை முளைக்காத நாட்களில் பார்த்து வியந்த இன்றைய விழாவின் நாயகன் ஜீவி பிரகாஷ் குமார்.
ரேடியோ மிர்ச்சியில் ஜிங்கிள்ஸிற்கு இசையமைத்தது இவர் தான் என சிறுவனாக இருந்த இவரை காட்டிய போது நான் வியந்து ரசித்தேன்.
அது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடி, ஆடி நடித்த முதல் இசையமைப்பாளர் இவர்தான். 'ஆடுகளம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை மேடையில் பாடி ஆடியதை நான் பார்த்து 'அட!' என வியந்திருக்கிறேன். அந்த தருணத்திலிருந்து அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். அதில் 'சூரரை போற்று' மிக முக்கியமான படம். உச்சக்கட்ட காட்சியில் பாடலை வைத்து இன்னும் மெருகேற்றினார். அந்தப் படத்திற்கு தேசிய விருது எனும் மரியாதையும் கிடைத்தது. அவருடனான ஏராளமான நல்ல நினைவுகள் - அனுபவங்கள் பசுமையாய் இருக்கிறது. என் மீது அவர் காட்டும் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி.
இந்தப் படத்தில் ராதிகா மேடத்திற்கும் மமீதாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே ஆப்ஷனாக செலக்ட் செய்தது மமீதாவை தான். நாங்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க இருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. ஆனால் இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மமீதா ஒரு மேஜிக் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அற்புதமாக ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் அவரே பின்னணியும் பேசியிருக்கிறார். தமிழிலும் நன்றாக பேசியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் வெங்கி பிரார்த்தனை செய்ததாக சொன்னார். நானும் பிரார்த்தனை செய்தேன். நான் அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தைப் பார்த்து பிரமாதமாக இருக்கிறதே..! என வியந்து ரசித்தேன்.
எனக்கு வெவ்வேறு இயக்குநர்கள்- வெவ்வேறு அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள். அதில் 'விஸ்வநாதன் & சன்ஸ்' எனக்கு ஒரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது இயக்குநர் வெங்கி. நான் இதைப் போன்றதொரு படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய எழுத்தின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. இந்தப் படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அந்த மூன்று கதாபாத்திரங்களையும் எழுத்தில் அழகாக உருவாக்கியிருக்கிறார். உறவுகளைப் பற்றி அற்புதமாக பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது உங்களின் உதட்டோரம் சின்ன புன்னகை எட்டிப் பார்க்கும். இது படம் முழுவதும் இருக்கும்.
இந்தப் படத்தில் ரொமான்ஸ்- ஃபேமிலி- காமெடி- என எல்லாம் இருக்கும். ஹீரோயிசமும் இருக்கும். எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும். இயக்குநர் வெங்கி சொன்னது போல்.. இது என்னுடைய ரசிகர்களுக்கான படம் மற்றும் என்னுடைய ரசிகர்களின் குடும்பத்தினர்களுக்கான படமும் கூட. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. உங்களுடைய அன்பும், ஆதரவும் இந்தப் படத்திற்கும் வழங்குங்கள்.
இன்று நண்பர்கள் தினம். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். எனக்கு கிடைத்த வெற்றியை போல் உங்கள் அனைவருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் இதற்கும் மேலான வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அதே தருணத்தில் நீங்கள் ஆசைப்பட்ட அனைத்து விசயங்களும் நடந்தேற வேண்டும் என்றால் ..முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். இவை அனைத்தும் கிடைக்க ஆண்டவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்றார்.
பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார்.
ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற நடிகரான கிருஷ்ணா குலசேகரனுக்கு, அவரது 25வது படம் ஒரு ஈர்க்கக்கூடிய புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. அதிகாரப்பூர்வமாக 'மர்டர் இன் டவுன்' (Murder in Town) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைல்கல் திட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் 'மர்டர் இன் டவுன்' படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். அவர் இப்படத்தை ஒரு விறுவிறுப்பான புலனாய்வு குற்றத் திரில்லராக உருவாக்கியுள்ளார். தலைப்பே ஆர்வத்தை தூண்டினாலும், ஒவ்வொரு துப்பும் முக்கியத்துவம் வாய்ந்த, ஒவ்வொரு முடிவுக்கும் விளைவுகள் உண்டு, ஒவ்வொரு வெளிப்பாடும் ஒரு ஆழமான மர்மத்திற்கு இட்டுச்செல்லும் ஓர் உலகத்தை பற்றிய அதே அளவு ஈர்க்கும் ஒரு பார்வையை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வழங்குகிறது.
அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடுக்குகள் கொண்ட காட்சி விவரிப்பால் உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது. கிருஷ்ணா, நடுத்தர வயது காவல்துறை அதிகாரி அதியமானாக தோன்றுகிறார்; ஒரு சவாலான விசாரணையின் உணர்ச்சிபூர்வமான சுமையை உணர்த்தும் தீவிரமான அதே சமயம் ஆழ்ந்த சிந்தனையுள்ள முகபாவனையுடன் அவர் காணப்படுகிறார். சாதாரண உடையில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு குற்ற நிகழ்விடத்தில் நடந்து செல்லும் நடிகரின் மற்றொரு புகைப்படம், மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. சிதறிக் கிடக்கும் ஆதாரங்கள், இரத்தக்கறை படிந்த ஒரு கோப்பு, கைவிடப்பட்ட ஒரு காவல்துறை தொப்பி, கண்காணிப்புக் கருவிகள், ஒரு பேரழிவுகரமான வெடிப்பு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஒரு மர்மமான சூழலை உருவாக்குகின்றன. இது 'மர்டர் இன் டவுன்' ஒரு வழக்கமான மர்ம கதையை விட மிகவும் மேலானது என்பதை உணர்த்துகிறது.
இந்தப் படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், கலைமாமணி சரவணன், ‘பத்ம ஸ்ரீ’ ஐ.எம். விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா, பேபி நைனிகா, ஆகியோர் நடித்துள்ளனர்.
மர்டர் இன் டவுன் படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார், மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் சார்பில் மகேந்திரராஜ் சந்தோஷ் குமார், கருணாநிதி வேலப்பன் மற்றும் சுபா வெங்கட் ஆகியோர் தயாரித்துள்ளனர். ரஞ்சன் இசையமைக்க, டி.கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கவின் ஆதித்யா படத்தொகுப்பை கவனிக்கிறார். வெங்கட் பாலா கலை இயக்குநராகவும், வினோத் சுந்தர் மற்றும் ஸ்வேதா ராகுல் ஆடை வடிவமைப்பாளர்களாகவும் உள்ளனர். 'கோடங்கி' வடிவேல் வசனங்களை எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளாக, கிருஷ்ணா தனக்கு பழக்கமான பாத்திரங்களை தாண்டி, ஒரு நடிகராக தனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். 'மர்டர் இன் டவுன்' திரைப்படம் அந்த பயணத்தை தொடர்வது போல் தெரிகிறது. அதிகாரம், பலவீனம் மற்றும் புலனாய்வு திறமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு பாத்திரத்தில் அவரை இது முன்வைக்கிறது. மேலும், அவரது வளர்ந்து வரும் திரைப்பயணத்தில் இது மற்றொரு மறக்க முடியாத நடிப்பை உறுதியளிக்கிறது.
குற்றாலம் மற்றும் கேரளாவின் அழகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஈர்க்கக்கூடிய திரைக்கதை, விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் காட்சி அமைப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சியான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இப்படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீட்டு திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்!
தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில், நட்புகள்கூட வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிவிடுகின்றன.
ஆனால், சிலர் மட்டும் உண்மையான வெற்றி என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல, தங்களுடன் பயணித்தவர்களையும் அந்த உயரத்திற்குக் கொண்டு செல்வதுதான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அல்லு அர்ஜுன்.
சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'AA23' திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அந்தப் படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த ஒரு விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அல்லு அர்ஜுனின் நெருங்கிய நான்கு நண்பர்களும் அந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இது வெறும் தயாரிப்பாளர் பட்டியல் அல்ல. இது நட்புக்கு அவர் அளித்த மரியாதையாகும்.
அவர்களில் ஒருவரான பன்னி வாஸ், அல்லு அர்ஜுனின் வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் பல கட்டங்களாக அவருடன் இணைந்து பயணித்தவர். மேலும், பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்களாக இருக்கும் சந்தீப் ராமினேனி மற்றும் நட்ராஜ் ஆகியோரும் இந்தத் படத்தில் இணைந்துள்ளனர். அல்லு அர்ஜுனின் உறவினரும் சிறுவயது தோழியுமான ஸ்வாதியும் இதில் இணைந்துள்ளார்.
இந்த உறவுகள் அனைத்தும் அல்லு அர்ஜூன் புகழுக்கும், சாதனைகளுக்கும், இந்தியா முழுவதும் கிடைத்த அங்கீகாரத்திற்கும் முன்பே உருவானவை.
வெற்றி பலரையும் விலக்கி வைக்கும் இந்தத் திரையுலகில், அல்லு அர்ஜுன் மட்டும் தனது வெற்றியின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படத்தின் தயாரிப்பிலும், அவரது தாய்வழி உறவினர்களுக்குச் சொந்தமான முத்தம்செட்டி மீடியா நிறுவனம் பங்கேற்றிருந்தது. அவர் உயரும்போது, தன்னுடன் இருந்தவர்களையும் முன்னேற்றுவதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதுதான் நண்பர்கள் தின கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தம். நட்பு என்பது பழைய நினைவுகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல. புதிய சாதனைகளை ஒன்றாக உருவாக்குவதும்தான். உலகமே நம்மை நம்புவதற்கு முன்பே நம்மை நம்பியவர்கள்மீது நம்பிக்கை வைப்பதுதான் உண்மையான நட்பு.
கோடிக்கணக்கான ரசிகர்கள் அல்லு அர்ஜுனை ஒரு சிறந்த நடிகராகவும் பொழுதுபோக்கு கலைஞராகவும் நேசிக்கிறார்கள்.
ஆனால், இதுபோன்ற சம்பவங்கள்தான் அவரது இன்னொரு பக்கத்தையும் வெளிக்காட்டுகின்றன.சாதனைகளுக்கு இணையாக உறவுகளையும், புகழுக்கு இணையாக நட்பையும் மதிக்கும் மனிதராக அவரை உயர்த்தியுள்ளன.
ஒரு திரைப்படம் சாதனைகளை உருவாக்கலாம். ஆனால், நட்புதான் வரலாற்றை உருவாக்குகிறது.
'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம் குறித்தான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் படமாக இது அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சில கதைகள் ஒரு கேள்வியிலேயே ஆர்வத்தைத் தூண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் 'சிக்னல் அட் 11.30'. படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், படத்தலைப்பின் அர்த்தத்தை இதுவரை வெளிப்படுத்தாமல், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்திற்காக படக்குழு அதனை சஸ்பென்ஸோடு வைத்திருக்கிறது.
இப்படம் குறித்து எழுத்தாளர் - இயக்குநர் மலர்விழி நடேசன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்த தலைப்பு கதையின் கருவோடு நேரடியாக இணைந்துள்ளது. அதன் அர்த்தத்தை இப்போது வெளிப்படுத்தினால், படத்தின் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று முன்கூட்டியே தெரிந்துவிடும். இந்தக் கதையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கிறது. 'சிக்னல் அட் 11.30' என்பது காதல், சஸ்பென்ஸ், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ரொமான்டிக் த்ரில்லர். கதை முழுவதும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நகரும்" என்றார்.
முன்னணி கதாபாத்திரங்களின் தேர்வு குறித்து அவர் மேலும் பேசுகையில், "திரைக்கதை எழுதும்போதே கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆழமும், திரை ஆளுமையும் குறித்து எனக்கு தெளிவான பார்வை இருந்தது. அந்த இரண்டையும் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களில் சந்தோஷ் பிரதாப்பும் ஒருவர். அவரது அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும் அந்தக் கதாபாத்திரத்தை மேலும் செழுமையாக்கியது. பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடாவும் அர்ப்பணிப்புடன் திறமையாக நடித்துள்ளனர். இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்பக் கலைஞருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். 'சிக்னல் அட் 11.30' வழங்கும் ஒவ்வொரு திருப்பத்தையும், உணர்வுகளையும், ஆச்சரியத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
ஆர்வத்தைத் தூண்டும் கதைக்களம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களுடன், 'சிக்னல் அட் 11.30' ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். நடன அமைப்பை ஷெரீஃப் கவனித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை உலகளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்சன்ஸ் விநியோகம் செய்கிறது.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரெய்லர், இன்று (ஜூலை 30, 2026) அதிகாலை இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ பற்றி:
தயாரிப்பாளரும், இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’, உலகின் மிகப் பழமையான மற்றும் காலத்தால் அழியாத மகாகாவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும், இரண்டு பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான திரைப்படம்.
படைப்பின் கடவுளான பிரம்மா, காத்தருளும் கடவுளான விஷ்ணு, அழிவின் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் மூவுலகையும் ஆட்சி செய்து வருகின்றனர். தேவலோகம், பூலோகம் உள்ளிட்ட உலகங்கள் குழப்பத்தை எட்டும் வேளையில், தர்மத்தை நிலைநிறுத்த விஷ்ணு, மனித அவதாரமாக பூமியில் பிறக்கிறார். இந்த முறை அவர் இராமராக (ரன்பீர் கபூர்) அவதரிக்கிறார்.
அவருக்கு எதிராக நிற்பவர், மும்மூர்த்திகளின் வரங்களைப் பெற்ற, அளவற்ற ஞானமும் அசைக்க முடியாத வலிமையும் கொண்ட, அழிக்க முடியாத அசுர மன்னன் இராவணன் (யஷ்). அகங்காரமும் பழிவாங்கும் உணர்வும் நிரம்பிய அவரது சக்தி, பிரபஞ்சத்தையே சிதைக்கக் கூடியது.
இராவணனை எதிர்கொள்ள விதிக்கப்பட்டவன் என்பதையும், தனது உண்மையான தெய்வீக நோக்கத்தையும் அறியாத இராமர், தர்மத்தின் உருவாகவும் அயோத்தி மக்களால் மிகவும் நேசிக்கப்படும் இளவரசராகவும் வாழ்கிறார். தனது அன்பு மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் விசுவாசமான தம்பி லட்சுமணன் (ரவி துபே) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக விதிவசத்தால் அவரது வாழ்வு வனவாசத்திற்குத் தள்ளுகிறது. அதுவே இறுதியில் உலகின் விதியை நிர்ணயிக்கும் இருவரின் மோதலுக்குக் காரணமாகிறது.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இந்திய உணர்வுகளையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் அவரது கதை சொல்லும் பாணி, 'தங்கல்' போன்ற திரைப்படங்கள் மூலம் சீனா உள்ளிட்ட உலக சந்தைகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
இந்தப் படத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியத் திரையுலகின் சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்அருண் கோவில், தனது மறக்க முடியாத ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார்.
மேலும், ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
முதன்மை கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் பகவான் ஸ்ரீ ராமராக நடித்துள்ளார். தலைமுறைகள் கடந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படும் தர்மத்தின் உருவமாக அவர் திரையில் தோன்றுகிறார்.
சீதா தேவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கருணை, தைரியம் மற்றும் உயர்ந்த பண்புகளின் அடையாளமாக மதிக்கப்படும் சீதையின் கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார்.
ராக்கிங் ஸ்டார் யஷ், தனது மான்ஸ்டர் மைம்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பாளராகவும் இந்தப் படத்திற்கு உள்ளார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மறக்க முடியாத எதிரி கதாபாத்திரங்களில் ஒருவரான இராவணனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் எழுதியுள்ளார். மேலும், இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட உலகின் மிகப்பெரிய கூட்டணியாக, ஆஸ்கர் விருது பெற்ற இசை மேதைகள் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்தப் படைப்பின் மூலம், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள், உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, மனிதகுலத்தின் மிகப் பழமையான மகாகாவியங்களில் ஒன்றை இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் நோக்கமாகும்.
தயாரிப்பாளரும் ‘ராமாயணம்’ படத்தின் படைப்பாற்றல் வடிவமைப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் என்பது நமது மிகச் சிறந்த இதிகாசங்களில் ஒன்று மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். நமது பண்பாடு, விழாக்கள், வாழ்க்கை மதிப்புகள் ஆகியவற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயிரோட்டமிக்க காவியமாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி திருவிழாக்கள் இருளை ஒளி வெல்வதும், அதர்மத்தை தர்மம் வெல்வதும் என்ற ராமாயணத்தின் நிலையான செய்தியை நமக்கு நினைவூட்டுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வையும் சிந்தனையையும் தொடர்ந்து வழிநடத்தும் கதைகள் உலகில் மிகவும் அரிது. ராமாயணம் அத்தகைய மகத்தான காவியம்.
உலக திரைப்படத் துறையில் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்ட அனுபவத்தில், இந்தியாவின் மகத்தான கதைகள் உலகின் மிகப்பெரிய திரைகளில் சொல்லப்பட வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் எனக்கெப்போதும் இருந்தது. இன்று, அந்தக் கனவை நனவாக்குவதற்குத் தேவையான கலைஞர்கள், தொழில்நுட்பம், கைவினைத் திறன் மற்றும் ஒருங்கிணைந்த படைப்பாற்றல் நம்மிடம் உள்ளது.
இந்தியாவின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தை அதன் உண்மைத்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும், உலகத் தரமான சினிமா தரத்துடனும் உலக மக்களிடம் கொண்டு செல்லும் தருணம் இது.
இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பண்பாட்டு செழுமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இந்தியாவில் இந்தக் கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இப்போது அதை உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொள்வது எங்களின் பெருமையும் பொறுப்பும் ஆகும்" என்றார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல. அது எடுத்துரைக்கும் காலத்தை வென்ற மனித மதிப்புகள்தான்.
ஒரு திரைப்பட இயக்குநராக, இந்தக் கதையை உலகளாவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், அது ஏற்கனவே உலகளாவிய கதையாகவே உள்ளது. என் பொறுப்பு, அதை முழுமையான நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் மிகுந்த மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதே!
திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் எடுக்கப்பட்ட அனைத்தும் ஒரே எண்ணத்தால் வழிநடத்தப்பட்டன! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம். அதே சமயம், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் தொழில்நுட்பங்களுடன் அதை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் இலக்காகக் கொண்டோம்.
உலகின் தலைசிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதை சொல்லிகளுடன் இணைந்து இந்தக் கனவை நனவாக்கியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன்.
ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் வெறும் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்ல, ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை உயிருடன் வைத்திருக்கும் அதன் ஆன்மாவையும் திரையில் கண்டு மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
DNEG பற்றி:
DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் 'சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்' பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது.
தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.
பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த 'தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது.
தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட 'ராமாயணம்' கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான 'டிரான்ஸ்மீடியா' உலகத்தையும் உருவாக்கவுள்ளது.
மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:
நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.
2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையத்தின் செயல் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாஹித் அக்தர், ஹிமாலயா பரிவார் தேசிய துணைத் தலைவர் விஜய் சங்கர் மிஸ்ரா, மாநிலங்களவை உறுப்பினர் மிதிலேஷ் குமார் கதேரியா, புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஜீத் தாலிகோட்டி, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தென்னிந்திய பொறுப்பாளருமான எலியாஸ் அகமது மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகமது மாலிக் வடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் தனது வலுவான செயல்பாடுகளை நிறுவியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றியவர்கள குறிப்பிட்டனர். தற்போது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அமைப்பின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, அதன் நோக்கங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.
அமைப்பின் செயல்பாடுகள் தஅலீம் (கல்வி), தரக்கி (முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி), மற்றும் தஹ்ஸீப் (நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் நாகரிகம்) என்ற மூன்று அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன என்று அவர்கள் விளக்கினர். கல்வியே நல்ல மனிதநேயத்திற்கும் பொறுப்புணர்விற்கும் அடித்தளம் என்றும், முன்னேற்றமும் உயர்ந்த பண்பாடும் சமூக ஒற்றுமை மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினர்.
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதிகமான மக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடல் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அகமது மாலிக் வடையார், தம்மை தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்த தேசிய தலைமையினருக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அமைப்பின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகள் மற்றும் சமூக நல முயற்சிகளை முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.
மேலும், அமைப்பின் செயல்பாடுகள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிற நிர்வாக நிலைகளில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
ஜன்சபை நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிமொழியுடன் நிறைவடைந்தது. கல்வி, சமூக நலம், ஆக்கப்பூர்வ உரையாடல் மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிகழ்வில் உறுதி எடுக்கப்பட்டது.











