1. VPF Payment - கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் VPF கட்டணத்தை Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை (Discrimination in charging VPF for Tamil film) டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது. One Time Content Delivery கட்டணம் மட்டுமே ஏப்ரல் 1, 2026 முதல் தயாரிப்பாளர்கள் தருவார்கள் என டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு இந்த பொதுக்குழு தெரிவிக்க விரும்புகிறது. திரையரங்குகள் சொந்தமாகவோ அல்லது வாடகை மூலம் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவ வேண்டும். சொந்தமாக டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வைத்திருக்கும் திரையரங்குகள், One-Time Content Delivery Charge மட்டுமே வாங்க வேண்டும். VPF கட்டணம் வாங்க கூடாது என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். (From 1st April 2026, Producers will pay only the Content Delivery Charges like it is being charged currently for Hollywood films and shall not pay the Virtual Print Fee charged for Digital Projects kept in theatres. Digital projectors must be owned or hired by Theatres on their own and VPF towards that should not be charged to Producers).
2. தமிழ்நாட்டில் ஆயிரத்து நூற்றைம்பது திரையரங்கம் உள்ளது. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மைக் கொண்டு வர ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு ஒரு செண்ட்ரலைஸ்ட் பாக்ஸ்-ஆஃபிஸ் கலெக்ஷன் டிராக்கிங் சிஸ்டம் (Centralized, Online Box Office Tracking Software System) வரவேண்டுமென்று நமது சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மென்பொருளைக் கொண்டு வர தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளெஸ் உரிமையாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு தருமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. (There are incidents of wrong/under reporting of collection by theatres and to prevent any such unethical practice by theaters, it is necessary to go live with an Integrated Online Box Office collection tracking system linking all theaters in Tamil Nadu with a centralized server. That server access will be given only to the particular Producer and Distributor for their film to know the collections of their film for each show).
3. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் Book My Show, Zomato District போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமாக ஷேர் தரப்பட வேண்டும் (equal share of online ticket charges/convenience charges to be given to all three involved in a film). பார்வையாளர்கள் திரைப்படத்திற்கு தான் ஆன்லைன் புக்கிங் செய்கிறார்கள். எனவே, திரைபடத்தை எடுத்த தயாரிப்பளருக்கும் சரிசமமான ஷேர், அவ்வாறு வரும் வருவாயில் கொடுக்கப்பட வேண்டும் என இந்த பொது குழு ஆன்லைன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களையும் கேட்டு கொள்கிறது. TFAPA demands one third share of the Convenience Fee/Online Ticketing charges from companies booking tickets online like Book My Show/Zomato District as the audiences are booking tickets for a film and it is fair and reasonable Producers of such films get a fair share (one Third) along with Theatre owners and Online Ticketing companies.
4. தென்னிந்தியா தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) தொடங்கியுள்ள FESRA அமைப்பின் மூலம், SWIPE CARD உதவியுடன் தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்து அதன்படி அவர்களுக்கு வாராவாரம் சம்பளங்கள் வழங்கும் முறைக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்துள்ளனர். இந்த டிஜிட்டல் வருகை பதிவேடு மூலம் சரியான முறையில் சம்பளங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும் என்பதால், நமது சங்கம் சம்மேளனத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தர முன் வந்துள்ளது. (TFAPA is agreeing to support FEFSI to implement the Digital recording of attendance using Swipe Card by workers and making payment as per the software to the workers).
5. தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் (Single Window Clearance) மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. (TFAPA has submitted to Tamil Nadu State Government the locations and roads where the shootings can be held during the daytime (currently only during night times shooting in roads can be done) so that Producers need not go all the way to Pondicherry to shoot road scenes. We seek the TN Government to approve that request for single-window clearance for shooting approval so that Producers can shoot in Chennai and other cities during the day time and also in various locations which were listed. Currently many State Governments provide this single-window clearance to give shooting permissions and we seek the same support from TN Government.)
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை மாநில அரசிற்கும் சம்பந்தப்பட்ட திரைத்துறை சங்கங்களுக்கும் மனுவாக அனுப்ப உள்ளோம் என்பதனை இந்த பொதுக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
பொறுப்பாளர்கள்,
Office-Bearers of Tamil Film Active Producers Association
T.G. Thyagarajan - President,
T. Siva - General Secretary,
G Dhananjheyan - Treasurer
S.R. Prabhu - Vice President,
S.S. Lalit Kumar - Vice President,
Mukesh R. Mehta - Joint Secretary,
S. Vinod Kumar - Joint Secretary,
Director-Producer K.S. Ravikumar,
Director-Producer Sundar C and
EC Members of TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION.
The Court of the Chief Judge, City Civil Court, Hyderabad, through Order dated 26th September 2025, in I.A. No.6275 of 2025 in O.S.No.441 of 2025, has granted an ad-interim injunction in favour of renowned film actor and philanthropist Konidela Chiranjeevi. The order restrains multiple named parties and in general, any person, from infringing upon Chiranjeevi’s personality and publicity rights, including the unauthorised commercial use of his name, image, voice, and other recognisable attributes.
Chiranjeevi, whose distinguished career spans over four decades and includes numerous honours such as the Padma Bhushan and Padma Vibhushan, sought the court’s intervention to stop widespread unpermitted usage of his identity on merchandise, online platforms, and through the application of artificial intelligence technologies.
The court recognised Chiranjeevi as one of the most iconic personalities in the Indian film industry, whose reputation and public esteem have suffered due to the defendant parties’ actions—specifically naming, imaging, video-memes, and merchandise sales without consent. The order emphasises that such exploitation and misrepresentation, especially through digital and AI mediums, pose severe, irreparable harm to Chiranjeevi’s reputation and economic interests.
The injunction immediately restrains defendants No.1 to 33 and defendant No.36 (John Doe) from directly or indirectly using Chiranjeevi’s name, stage titles (including "MEGA STAR", "CHIRU", and "ANNAYYA"), voice, image, or any other exclusive personality attribute for any commercial or personal gain, across all formats and media. The order also directs urgent notification to all respondents, with further proceedings scheduled for 27th October, 2025.
Any infringement of personality or publicity rights, or acts of defamation, will unleash severe consequences under both civil and criminal law. All persons and entities including but not limited to television channels, digital platforms and media organizations are expressly cautioned that direct or indirect use, misrepresentation, or distortion of Chiranjeevi’s name, image, voice, likeness, or personality attributes for the purpose of increasing viewership, enhancing TRPs, or deriving any commercial or reputational benefit, without explicit written consent, will be met with the strictest remedies available under law, ensuring robust enforcement of rights and protection against reputational harm.
On 11th October, 2025, Chiranjeevi met Mr. Sajjanar, Commissioner of Police, Hyderabad, and personally handed over a copy of the Court Order to him. During the meeting, Chiranjeevi sought Mr. Sajjanar’s expert advice regarding the process of setting criminal law into motion in this context. The two engaged in a constructive discussion on the need for penal laws to be made fiercer and more coercive to effectively address and deter such violations, reflecting Chiranjeevi’s commitment to combatting unauthorised exploitation of personality rights and also invasion of privacy. Mr. Sajjanar reiterated that the legal action taken by Chiranjeevi serves to reinforce the importance of personality and publicity rights within the Indian entertainment industry, ensuring respect for the individual’s reputation and intellectual property.
Chiranjeevi profusely thanks Sri. S. Nagesh Reddy, Advocate and his legal team for their effort and professional expertise. Their commitment, and attention to detail were instrumental in achieving this landmark protection of personality and publicity rights.
For further information or seeking authorization to use Chiranjeevi’s personality rights, pls email to Mr. Sar. Chagla, General Counsel and Chief Legal Officer for the Konidela Family (czzarr@moiralegal.com)
சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக திகிலூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது பிரிடேட்டர். மத்திய அமெரிக்காவின் காடுகளில் கமாண்டோக்களைப் பின்தொடர்வது முதல் எதிர்கால நகரங்கள் மற்றும் வேற்றுகிரக உலகங்கள் வரை, யௌட்ஜாவின் கொடிய வளர்ச்சி மனிதகுலத்தின் ஆதிக்கத்திற்கான போராட்டத்தை பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் நவம்பர் 7, 2025 அன்று வெளியாகும் பிரிடேட்டர்:
பேட்லேண்ட்ஸ் சாப்டர் மீண்டும் கதையைத் திருப்புகிறது. முதல் முறையாக பிரிடேட்டர்
உயிர்வாழப் போராடுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
தி ஆர்ஜின் ஆஃப் ஹண்ட்: 1987'ஸ் ஜங்கிள் நைட்மேர்
ஜான் மெக்டியர்னன் 1987-ல் இயக்கிய பிரிடேட்டருடன் இது அனைத்தும் தொடங்கியது. மழைக்காடுகளின் ஆழத்தில், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் டச்சுக்காரர்களும் அவரது கமாண்டோக்களும் வெப்ப பார்வை, மறைத்தல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்மா ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொண்டனர்.
காடு வெறும் பின்னணி மட்டுமல்ல. ஆனால் அங்கு அதுவும் ஒரு எதிராளியானது. அங்கு வீரர்களின் பலம் பறிக்கப்பட்டதால், வேற்றுகிரகவாசிகள் தீங்கிழைத்து கொல்லவில்லை, விளையாட்டுக்காகக் கொல்லுகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிந்துகொண்டனர்.
தி கான்கிரீட் ஜங்கிள்: பிரிடேட்டர் 2 (1990)
1990 இல் பிரிடேட்டர் பிரான்சிஸ் அதன் முதல் ரிஸ்க்காக 'பிரிடேட்டர்2' எடுத்தது. லாஸ் ஏஞ்சல்ஸின் நகர்ப்புற விரிவாக்கம் மழைக்காடுகளை மாற்றியது. மேலும், வெப்ப அலையால் எரிந்த நகரம் புதிய காடாக மாறியது. இந்த முறை, பிரிடேட்டர் கும்பல் போலீசார் மற்றும் குற்றவாளிகளை ஒரே மாதிரியாகப் பின்தொடர்ந்தது. யௌட்ஜா வேட்டைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக பூமிக்கு வருகை தந்து, மனிதர்களிடமிருந்து கோப்பைகளை சேகரித்தனர் என்பதைக் குறிக்கிறது.
தி கேம் பிரிசர்வ் அண்ட் பியாண்ட்: பிரிடேட்டர்ஸ் (2010)
இருபது வருடங்களுக்குப் பிறகு பிரிடேட்டர்ஸ் (2010) மீண்டும் மறுவரையறை செய்தது. ஒரு வேற்று கிரகத்தில் உயரடுக்கு மனித போராளிகளின் குழு ஒன்று சேர்ந்தது. அது பல பிரிடேட்டர் குலங்களால் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய வேற்றுகிரகம். இந்த சாப்டர் போட்டி இனங்கள் அல்லது சூப்பர் பிரிடேட்டரின் சொந்த மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் சடங்குகளுடன் இருப்பதை வெளிப்படுத்தியது.
ஒரு காலத்தில் உதவியற்ற இரையாக இருந்த மனிதர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கினர். முதல் முறையாக, பிரிடேட்டர் வேட்டைக்காரர்களாக இல்லை.
ஏ ரிட்டர்ன் டு ரூட்ஸ்: ப்ரே (2022)
2022 இல் வெளியான பிரே பார்வையாளர்களை 1719 இல் வட அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. கோமான்சே நேஷனில் அமைக்கப்பட்ட இது, ஆரம்பகால யௌட்ஜா பார்வையாளரை எதிர்கொண்ட இளம் போர்வீரரான நருவை (ஆம்பர் மிட்தண்டர்) பின்தொடர்ந்தது. இதன் விளைவாக அதன் பூர்வீக பிரதிநிதித்துவம், கதைசொல்லல் மற்றும் உயிர்வாழும் தொனி ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்ட ஃபிரான்சிஸ் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.
தி அல்டிமேட் எவல்யூஷன்: பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ் (2025)
வரவிருக்கும் பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் திரைப்படம் துணிச்சலான, எதிர்பாராத திசையில் சீரிஸை எடுத்துச் செல்கிறது. ஆரம்பகாலத்தின்படி கதை டெக் என்ற இளம் பிரிடேட்டரைப் பின்தொடர்கிறது. அவர் எல்லே ஃபான்னிங் நடிக்கும் ஆண்ட்ராய்டு போர்வீரரான தியாவுடன் கூட்டணியை உருவாக்குகிறார். பிரபஞ்சத்தின் மிகவும் ஆபத்தான கிரகம் என்று விவரிக்கப்படும் ஒரு மிருகத்தனமான வேற்றுகிரக உலகத்தை மையமாகக் கொண்ட இந்த படம், பாரம்பரிய முன்மாதிரியை மாற்றியமைக்கிறது. இந்த முறை பிரிடேட்டர் வேட்டையாடப்படுகிறது.
பிரிடேட்டருக்குப் பிறகு இந்தப் படத்தில் திரும்பும் இயக்குநர் டான் டிராக்டன்பெர்க், பேட்லேண்ட்ஸ் யௌட்ஜா கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ந்து அவர்களின் ஒழுக்க நெறிமுறைகள், உள் போட்டிகள் மற்றும் பாதிப்புகளை வெளிப்படுத்துவார்.
எந்த விதமான முன் முடிவுகளும் இல்லாமல், பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை பிரிடேட்டரின் பார்வையில் இருந்து கதையை அனுபவிக்க அழைக்கிறார். அறிவியல் புனைகதையின் மிகவும் அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றை எதிர்பாராத கதாநாயகனாக மாற்றுகிறார்.
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான “ஃபௌசி” படத்தின், அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸ் போர்விரனாக காட்சி தரும் ஃபௌசி பட ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணி குறித்து, ரசிகர்கள் இணையம் முழுக்க விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் இயக்குநர் ஹனு ராகவபுடி படம் குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பகவத்கீதையைச் சேர்ந்த குறிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதே ஏன் ?
நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம், போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அவை ஆழமான பொருள் தருகிறது மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே. ஃபௌசி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான அதிரடி டிராமா. இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும்.
ஃபௌசி டைட்டில் போஸ்டரில் அர்ஜுனன், கர்ணன் போன்ற புராண வீரர்களின் பெயர்கள் இருக்கிறதே அதற்கான அர்த்தம் என்ன?
ஃபௌசியில் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய வீரராக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தில் புராண வீரர்களின் சிறப்புகளை கலந்து காட்ட விரும்பினேன். அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் ஆகியோர் திறமை, தியாகம், பக்தி என சக்திவாய்ந்த பரிமாணங்களைக் குறிக்கிறார்கள் அதை தான் டைட்டில் பயன்படுத்தினேன். “கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?” என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு. இப்போதைக்கு கதை பற்றி அதிகமாக சொல்ல முடியாது, ஆனால் இப்படம் 1940களின் காலனித்துவ பின்னணியில் நடக்கும் அதிரடி டிராமாவாக இருக்கும்.
ஃபௌசி பல மொழிகளில் உருவாகும் உலகளாவிய படமா?
பிரபாஸ் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும்போது, படம் தானாகவே உலகளாவியதாகி விடுகிறது. அவருக்கு எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கதை இந்திய மண்ணில் வேரூன்றியிருந்தாலும், அதன் உணர்ச்சி மற்றும் மனிதநேயம் எல்லா மக்களையும் தொடும் வகையில் அமைந்துள்ளது. பிரபாஸ் உலகளவில் படத்தை எடுத்துச் செல்லுவார், ஆனால் உண்மையில் இதயத்தைத் தொடும் கதையும் உலகளாவிய வகையிலான உணர்வுகளுமே அனைவரையும் இணைக்கும்.
நீங்கள் உணர்ச்சி மிகுந்த காதல் கதைகள் செய்வதில் வல்லவர், இப்படத்தில் ரொமான்ஸ் இருக்கிறா?, இமான்வியின் பாத்திரம் எப்படி இருக்கும் ?
“அந்தால ராக்ஷசி” முதல் “சீதா ராமம்” வரை என் காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஃபௌசியிலும் காதல் இருக்கிறது. அது வேறுவிதமான வகையில், தீவிரமான, உணர்ச்சிகரமான வடிவில் இருக்கிறது. பிரபாஸ் மற்றும் இமான்வி இடையேயான காதல் உங்கள் இதயத்தைத் தொட்டுவிடும். இமான்வி “பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ” என பரவி வரும் வதந்திகளை முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் உண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அவரது தந்தை அங்கு ஹோட்டல் துறையில் பணியாற்றுகிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது? அவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாரா ?
பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர் தனது இயக்குநர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குகிறார். அவர்களின் கற்பனைக்கு முழு ஆதரவு தருகிறார். அவரது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தினையும் மீறி, அவர் எளிமையானவர், கடினமாக உழைப்பவர், மிகுந்த பணிவுடன் இருப்பவர். என் முழு திரை வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட படைப்புச் சுதந்திரம் கிடைத்ததில்லை. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் அவர் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, T-Series நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்குகிறார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின் பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும், ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற, மேஸ்ட்ரோ A.R. ரஹ்மான் இசையைமைக்கிறார்.
“பெத்தி” படம், இயக்குநர் புச்சி பாபு சானாவுக்கு மிகவும் பெருமைக்குரிய முயற்சி ஆகும். இதில், ராம் சரணை இதுவரை காணாத புதிய தோற்றங்களிலும் பல்வேறு வித்தியாசமான லுக்குகளிலும் காட்டத் திட்டமிட்டுள்ளார். தனது கதப்பாத்திரத்திற்காக முழு அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன், அதிரடி காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்.
கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.
“பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.
நடிகர்கள் :
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா
தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி
அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர்
வாலி பதிப்பகம் சார்பில்காவிய க் கவிஞர் வாலியின் 94 வது பிறந்தநாள் விழா 1.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில் பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது.
வருடம் தோறும் 50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்களுக்கும் கவிஞர் கங்கை அமரன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது விருதுகளை திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் வழங்குகிறார்.
திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார். ஊற்றங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன்அவர்கள் நூலி னைப் பெற்றுக்கொள்கிறார் வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலாளர் திரு நா.பிரகாசம் அவர்கள் கவிஞர் வாலியின் திருவுருவப்படத்தினை திறந்து வைக்கிறார்.
மேடையில் உள்ள மேன்மையாளர்களை பம்பர் திரைப்பட தயாரிப்பாளர் திரு தியாகராஜன் கௌரவிக்கிறார். வாலி பதிப்பக நிர்வாக இயக்குனர் பொறியாளர் பாரதி சங்கர் வரவேற்புரை ஆற்றும் இந்த நிகழ்ச்சியை திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் திரு சிவகுருநாதன் ஒருங்கிணைக்கிறார்.
முன்னதாக மாலை 5 மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் தாயன்பன் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பங்கேற்று வாலியின் திரை இசை ப் பாடல்களை பாடுகிறார்கள்.
அனுமதி இலவசம் அனைவரும் வருக
'சக்தி திருமகன்' படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை கிட்டுவின் (விஜய் ஆண்டனி) எழுச்சியை காட்டுகிறது. தனிப்பட்ட இழப்பில் இருந்து மீண்ட ஒருவன் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்படுகிறான். வாழ்க்கை அவனை அரசியல், நேர்மை மற்றும் அதிகாரத்தின் வழியில் பயணப்பட வைக்கிறது. நீதி, லட்சியம் மற்றும் ஊழலால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மாற்றத்தின் விலை பற்றிய கேள்விகளை இந்தப் படம் ஆராய்கிறது.
தனது திறமையான நடிப்பால் 'சக்தி திருமகன்' கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்பான ஒளிப்பதிவும் இசையும் பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது. பல அடுக்குகள் கொண்ட இந்தக் கதை சிறப்பான அரசியல் ஆக்ஷன் டிராமா என ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலை தைரியமாகவும் நேர்மையுடனும் பதிவு செய்திருக்கும் 'சக்தி திருமகன்' படத்தை ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் கண்டு மகிழுங்கள்!
ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படத்தின் OTT உரிமையை Zee5 பெற்றுள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை வெளிப்படுத்தி, பல்துறை திறமையாளர் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் திரையை பகிர்ந்து கொள்ள உள்ளார். முதன்முறையாக, ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் “கண்ணுமுழி” அதன் ஊக்கமூட்டும் நாட்டுப்புற தாளத்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் விகர்னன் அசோக், தனது தனித்துவமான குரலை மாஸ்க் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். சென்னை நகரின் புத்துணர்ச்சியான பின்னணியில் நடக்கும் இந்த படம் உணர்ச்சி, நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஒரு டார்க் காமெடி த்ரில்லர் ஆக அமைந்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் RD ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், R ராமர் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் M விஜய் அய்யப்பன் மேற்கொண்டுள்ளனர். உடை வடிவமைப்பை பூர்த்தி பிரவீன் மற்றும் விபின் சங்கர் கவனித்துள்ளனர். சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மற்றும் விக்கி இயக்கியுள்ளனர். நடன அமைப்பை அசர் மற்றும் விஜி மேற்கொண்டுள்ளனர்.
சிறந்த நடிப்பு, வித்தியாசமான கதை, உயர்தர தொழில்நுட்ப குழு ஆகியவற்றால் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், நவம்பர் 21, 2025 அன்று வெளிவரும் போது பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை அளிக்கவுள்ளது.
நடிகர்கள்:
கவின்
ஆண்ட்ரியா ஜெரமையா
ருஹாணி ஷர்மா
சார்லி
ரமேஷ் திலக்
கல்லூரி வினோத்
VJ அர்ச்சனா சந்தோக்
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனங்கள்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
எழுத்து & இயக்கம்: விகர்ணன் அசோக்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: RD ராஜசேகர்
படத்தொகுப்பு: R ராமர்
கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன்
பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி
நடன அமைப்பு: அசார், விஜி
சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி
ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர்
தயாரிப்பாளர்கள்: ஆண்ட்ரியா ஜெரமையா & SP. சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்











