சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் (Silvar Thuch India Productions )
என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு " தீர்ப்பு " என்று பெயர் வைத்துள்ளார்.
இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார்.
கலை இயக்குனர் T. K. தினேஷ்
விளம்பர வடிவமைப்பு - அகிலன்
பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இணை எடிட்டிங் - K.மாருதி
நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குனர் சிவகுமார் நாயர் கூறியதாவது..
இந்தப் படத்தை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாக்க இருக்கிறோம்.
இயக்குனர் சிவகுமார் நாயர் எழுத்தாளர் மற்றும் துப்பறியும் சேவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கிரைம் திரில்லர் படம் நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சென்னை மற்றும் அட்டப்பாடி, ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு
நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவகுமார் நாயர்.
56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது." படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.
ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் S E எசக்கி ராஜா ஒளிப்பதிவாளர், ராம் குமார் எடிட்டர், தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார்,நேரடி ஒலி வடிவமைப்பாளர் பாலா ஜீவ ரத்தினம்,சுகுமார் சண்முகம் காஸ்டிங் இயக்குநராகவும், சேகர் முருகன் CG கலை இயக்குநராகவும், டைட்டீல் ஸ்டோரிபோர்ட சந்திரன், டிரெய்லர் &புரமோஷன் எடிட்டிங் பிரேம் B,கலரிஸ்ட் ரத்தன் மற்றும் படத்தின் ஒலி வடிவமைப்பை பெப்பிள்ஸ் ஸ்டூடியோ ஹரி பிரசாத் M.A மேற்கொண்டுள்ளார்.
ஆக்காட்டி திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
English Press Release
IFFI 2025: Aakkaatti Bags the ‘Best Film Recognition Award’
The Tamil feature film Aakkaatti has been honoured with the “Best Film Recognition Award” under the WAVES Film Bazaar section at the 56th International Film Festival of India (IFFI) in Goa.
Director Jai Laxmii, Co-producer Sunil Kumar, Sound Designer Hari Prasad, and Casting Director Sugumar Shanmugam attended the ceremony and received the award in person.
Set in rural South Tamil Nadu, Aakkaatti delves into the cultural tradition of Thaaymaman Seer Varisai (the maternal uncle’s ceremonial responsibilities). The film sensitively portrays how such customs shape emotional and social pressures, revealing the fragile human emotions that unfold within these age-old practices.
Director Jai Laxmii, making her feature debut with Aakkaatti, previously participated in Nalaya Iyakkunar – Season 6, where she was recognised as a finalist for her adapted short-film screenplay.
The film stars Antony, known for his powerful performance in Merkku Thodarchi Malai, alongside Mullaiyarasi in a prominent lead role.
Technical Crew
S. E. Esakki Raja – Cinematographer
Ram Kumar – Editor
Deepan Chakravarthy – Music Composer
Manoj Kumar – Art Director
Bala Jeeva Rathinam – Sync Sound
Sugumar Shanmugam – Casting Director
Sekar Murugan – CG Director
Chandran – Titles & Storyboard
Prem B – Trailer & Promotional Editor
Rathan – Colorist
Pebbles Studio – Hari Prasad M.A. – Sound Design
Adding further depth to the film, celebrated lyricist Karthik Netha has penned two songs for Aakkaatti.
The film has already been submitted to several international film festivals, and the production team has announced that the first-look poster will be released soon, along with more exciting updates.
அம்பத்தாரில் உள்ள ஆனந்தம் அறக்கட்டளையில் ஆதரவற்ற முதியோர் , தாய் தந்தை இல்லாத குழந்தைகள் ஆகியோருக்காக ஒரு இசை கச்சேரி நடைபெற உள்ளது.
இதற்காக பிரபல இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், கவிஞருமான கங்கை அமரன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை முதல் இரவு வரை மூன்று பகுதிகளாக யு.கே. முரளியின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இதில் கங்கை அமரன், கங்கா, ரெகனா சூப்பர் சிங்கர் சில் பிரபலமான பாடகர்கள் பாட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் பகீரதி ராமமூர்த்தி, சேஷாத்திரி, வினோத், ஆர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர். இதன் மூலம் வரும் வருமானம் ஆனந்தம் அறக்கட்டளைக்கு மேடையில் வழங்கப்படும் என்றார் யு.கே.முரளி
குறையுலகில் யு.கே. முரளிக்கு இது 40 வக வருடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை | காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், மேடை நிகழ்ச்சி கலைஞர் மற்றும் Udhaya Raagam UK Murali Innisai Mazhai எனும் முன்னணி லைட் ம்யூசிக் ஆர்க்கெஸ்ட்ராவின் தலைவர் ஆகிய UK முரளி அவர்கள் இசைத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ்விசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி 3 அட்டவணைகளில் நடைபெறும்:
காலை 10.00 – மதியம் 1.00
மதியம் 2.00 – மாலை 5.00
மாலை 6.00 – இரவு 10.00
இந்நிகழ்ச்சி அம்பத்தூரில் செயல்படும் ஆனந்தம் டிரஸ்ட் நலனிற்காக நடத்தப்படும் நிதி திரட்டும் விழாவாகும்.
அனாதை முதியோர், குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூக நலத்திற்காக பல சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வரும் திருமதி பகீரதீ ராமமூர்த்தி அவர்களின் சேவையை மதித்து, குறிப்பாக உயிரிழப்பு நெருங்கிய நோயாளிகளுக்கான ‘Palliative Care Centre’ கட்டுமானத்திற்கான நிதி திரட்டமே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில் இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும்.
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்டீபன்' கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின் துணிச்சலான, மாறுபட்ட இந்திய கதைகள் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது, "என்னுடைய முதல் படம் இதைவிட சிறப்பானதாக அமைய முடியாது! ஸ்டீபன் வழக்கமான கதாநாயகன் கிடையாது. பல அடுக்குகள் கொண்ட, கணிக்க முடியாத, உங்களை யோசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சவாலானதாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. படத்தின் கதையை இணைந்து எழுதியிருப்பதால் அந்த கதாபாத்திரமாக மாறுவது இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தது. இந்த கடினமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் மிதுனுக்கும் உலகப் பார்வையாளர்கள் மத்தியில் என்னுடைய திறமையை காட்டுவதற்கு களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கும் நன்றி. என்னுடைய பயணம் நெட்ஃபிலிக்ஸின் 'ஸ்டீபன்' படத்துடன் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, "'ஸ்டீபன்' ஒரு அமைதியான படம். ஆனால், அது குற்றவுணர்ச்சி, நினைவுகள் என பல விஷயங்களை உங்களிடம் பேசும். இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல் ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. இந்தக் கதையை நாங்கள் எப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கேற்றவாறு கோமதி தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான என்னை நம்பி வாய்ப்பு கொடுத்து இந்த த்ரில்லர் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி" என்றார்.
குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'. படத்தில் உள்ள அனைத்தையும் கேள்வி கேட்கத் தயாராகுங்கள்! டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்குநர் : மிதுன்,
நடிகர்கள் : கோமதி ஷங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்ம்ருதி வெங்கட்,
தயாரிப்பாளர்கள் : ஜெயக்குமார் & மோகன்,
எழுத்தாளர்கள் : மிதுன், கோமதி சங்கர்,
தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்ஷன் ஹவுஸ்
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் 'அவதார்' படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவுகளில் 'அவதார்: ஃபயர் & ஆஷ்' திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அவதார்: ஃபயர் & ஆஷ்' திரைப்படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், 'ஆஷ் பீப்பிள்' குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்.
20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்த படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியீடு செய்கிறது.
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன் மகேந்திரா, நாயகி நீமா ரே இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில் இருவரையும் புதிய கடையை திறந்து வைக்க அழைப்பு வருகிறது. இந்நிலையில் புதிய கடையை திறந்து வைப்பதற்காக மகேந்திரா, நீமா ரே இருவரும் அந்த அடைந்த காட்டு வழியாக செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகிறது. நாயகன் மகேந்திரா மயக்கத்தில் இருக்க நாயகி நீமா ரேவை முகமூடி அணிந்த மர்ம நபர் தூக்கி சென்றுவிடுகிறார். முடிவில் முகமூடி மனிதரிடம் இருந்து நாயகி நீமா ரேவை மகேந்திரா காப்பாற்றினாரா ? இல்லையா ? முகமூடி அணிந்த மர்ம மனிதர் யார் ? அந்த மர்ம மனிதர் யூடியூப் பிரபலங்களை கொலை செய்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.
கர்ணா கதாபாத்திரத்தில் மஹேந்திரன், முதல் படமே என்றாலும் நிச்சயமாக கவனிக்க வைக்கும் நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் போன்ற அனுபவசாலிகள் தங்கள் வேடங்களில் நம்பகத்தன்மையை கூட்டியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாஸ்கர் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. இயக்குநர் – சிக்கல் ராஜேஷ் சோசியல் மீடியா புகழுக்காக எல்லை மீறும் இளைஞர்களின் போக்கை கண்டிக்கும் வலியமான கருத்தை அதிரடி த்ரில்லர் வடிவில் சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது.
கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை தேர்வு செய்துள்ளது படக்குழு. பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாமல் கூட வலுவான திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை தக்கவைக்க முடியும் என்பதை நிரூபிப்பதே குறிக்கோளாக உள்ளது.
இந்த கதையின் தனித்துவத்தை நம்பிய தயாரிப்பாளர்கள் தீபா ராணி மற்றும் இஸ்மாயில், இதனை தயாரிக்க முன் வந்துள்ளனர். எதிர்மறை முன்னணி பாத்திரத்தில் நடித்த இஸ்மாயில், இந்த திட்டத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பட்ஜெட் வரம்புகள் மற்றும் பெரிய சவால்கள் இருந்தபோதிலும், குழு வெற்றிகரமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து, மெருகூட்டப்பட்ட தியேட்டர் அனுபவத்தை அடைந்தது.
பலராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர் சி. சத்யாவின் (எங்கேயும் எப்போதும், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அரண்மனை 3) ஈடுபாடு படத்தின் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. படக்குழுவின் வித்தியாசமான முயற்சியை உணர்ந்து, இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்டுள்ளார். இது படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.
படத்தொகுப்பு ஸ்ரீநாத், ஒளிப்பதிவு ஸ்டான்லி ஜான், டிஐ ஆனந்த் கிருஷ்ணன், சவுண்ட் என்ஜினியர் பாலாஜி மற்றும் இணை இயக்குநர் ஹரிஷ் உட்பட பல்வேறு திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் பணி புரிந்துள்ளனர்.
செர்பன்ட்டின் ஃபர்ஸ்ட் லுக்கை மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார். இது குழுவிற்கு ஒரு மைல்கல்லாகவும், திரைப்படத் தயாரிப்புக்கான அவர்களின் புதிய அணுகுமுறையின் அங்கீகாரமாகவும் நிற்கிறது. பாம்பை போல விஷமுள்ள மற்றும் கணிக்க முடியாத ஒரு பாத்திரத்தை டைட்டில் குறிக்கிறது, இப்போது படம் அதன் டீஸர் வெளியீடு மற்றும் இறுதி திரையிடலை நோக்கி முன்னேறுகிறது.
கதைசொல்லலில் இந்த தனித்துவமான பரிசோதனை பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் மற்றும் முன்னால் பெரிய வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
நடிகர்கள்:
இஸ்மாயில், ராஜேஷ் VGR, வெற்றி, விக்னேஷ் ராமமூர்த்தி, விக்கி சந்திரன், குணா ஆறுமுகம், கார்த்திகேயன், ஆமோத் சக்ரபாணி
குழுவினர்:
கதை மற்றும் இயக்கம்: பாபி ஜார்ஜ்
தயாரிப்பு: தீபா ராணி, இஸ்மாயில்
ஒளிப்பதிவு: ஸ்டான்லி ஜான்
படத்தொகுப்பு: ஸ்ரீநாத்
இசை: சி. சத்யா
டிஐ: ஆனந்த் கிருஷ்ணன்
சவுண்ட் என்ஜினியர்: பாலாஜி
இணை இயக்குநர்: ஹரிஷ்
PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்










