மலைக்கிராமத்தில் வாழும் பழங்குடியினச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆசை இருக்கிறது. ஆனால், அவளது கிராமத்தில் வறுமை மற்றும் அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. தன் கிராமத்திற்கே ஒரு அரசுப் பள்ளியைக் கொண்டு வர வேண்டும் என்ற இலட்சியத்தோடு, மாவட்ட ஆட்சியர் முத்துவேலை (அருள்நிதி) சந்திக்க அவள் முயற்சிக்கிறாள். அவளது போராட்டத்திற்கு ஆட்சியர் எவ்வாறு துணை நிற்கிறார், கல்வி அவளைச் சென்றடைந்ததா என்பதே படத்தின் கதை.


அருள்நிதி வழக்கமான த்ரில்லர் பாணியில் இருந்து விலகி, அமைதியான மற்றும் நேர்மையான கலெக்டராக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், மலைவாழ் மக்களின் உற்ற தோழனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரவின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், மலைவாழ் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார். படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா, கல்வி கற்கத் துடிக்கும் சிறுமியாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காளி வெங்கட், ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.


ஜி. வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும், எம். சுகுமாரின் ஒளிப்பதிவும் மலைக்கிராமத்தின் அழகையும் வலியையும் நேர்த்தியாகக் கடத்தியுள்ளன.


உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ள இயக்குநர் கணேஷ் விநாயகன், கல்வியின் அவசியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலுவாகப் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் கருணை, துணிச்சல், பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

 

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம், 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த நடிகர் - முதன்மை கதாபாத்திரம் – மம்மூட்டி, சிறந்த ஒளிப்பதிவு – ஷெஹ்னாத் ஜலால் என்ற இரண்டு முக்கியமான விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.


கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மம்மூட்டி அவர்களுக்கும், திரைப்படத்தின் கலைநயத்தையும் காட்சியமைப்பையும் தனித்துவமாக உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ஷெஹ்னாத் ஜலால் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் 72வது தேசிய திரைப்பட விருதுகளின் மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் சிறப்பான படைப்புகள் இந்திய திரைப்பட உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதோடு, இந்திய சினிமாவின் தரத்தையும் மேலும் உயர்த்தி வருகின்றன.


இந்த இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும்  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பெருமைமிகு சாதனை. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், தனித்துவமான மற்றும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற இரு நிறுவனங்களின் உறுதிப்பாட்டையும் இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


வெளியான நாள் முதல் ‘பிரம்மயுகம்’ இந்தியாவிலும் உலகளவிலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த திரைப்படம் 55 ஆவது 


இந்திய சர்வதேச திரைப்பட விழா – இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியது. மேலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட்டது. 2024 கேரள மாநில திரைப்பட விருதுகளில் பல்வேறு விருதுகளை வென்றதுடன், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அன்றாடம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் இந்தப் படம், தீவிரமான கதை, சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செய்தி ஆகியவற்றின் மூலம் தைரியம், நீதி மற்றும் விடாமுயற்சியின் பயணத்தை சித்தரிக்கிறது.


Zee Studios  வழங்க, MIG Production நிறுவனம்  இணைந்து உருவாகியுள்ள “தி இந்தியா ஸ்டோரி” படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், 2026 ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், ஆழமாக  சிந்திக்க வைக்கும் கருத்தை,  நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.


டிரெய்லர் குறித்து இயக்குநர் சேட்டன் டி.கே. கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; நாம் அவசியமாக நடத்த வேண்டிய ஒரு உரையாடல். ஒவ்வொரு வீட்டையும் அமைதியாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையை இந்தக் கதையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட விரும்பினோம். உண்மை, தைரியம் மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பயணத்தை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், நம்மைச் சுற்றியுள்ள நிதர்சனத்தை உணரவும் தூண்டும் என்று நம்புகிறோம்.”


நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும் உண்மைக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் சிறப்பாகும். டிரெய்லர் பார்வையாளர்களை கவர்ந்து, இந்த சக்திவாய்ந்த கதையை பெரிய திரையில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.”


நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது.., 


“தி இந்தியா ஸ்டோரி படத்தின் உணர்வுப்பூர்வமான மையத்தை டிரெய்லர் மிகச்சரியாக வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு சாதாரண மனிதன், அசாதாரணமான சவாலுக்கு எதிராக போராடும் கதையிது. இதன் உணர்வுகளும், கருத்தும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும் என்று நம்புகிறேன். ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் அனைவரும் இந்தப் படத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி  விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி   ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே  , படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.

 

சென்னை பெரம்பூரில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞரான பாரி இளவழகன், அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான ரம்யா ரங்கநாதனைக் கல்லூரி காலம் முதலே ஒருதலையாகக் காதலித்து வருகிறார். ரம்யா முதலில் மறுத்தாலும், பின்னர் அவரது காதலை ஏற்கும் சூழல் வருகிறது. ஆனால், பாரியின் தாயாருக்குத் தீவிரமான சாதிப் பற்று உள்ளது. சாதிப் பற்றுள்ள அம்மாவுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பெண்ணை விரும்பும் மகனுக்கும் இடையே நடக்கும் கலாச்சார மோதல்களையும், குடும்பப் பின்னணியையும் நகைச்சுவை கலந்து எதார்த்தமாகச் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.


பெரம்பூர் பையனாக பாரி இளவழகன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக வரும் ரம்யா இரண்டாம் பாதியில் மிரட்டியிருக்கிறார். சாதிப் பாசம் உடைய தெலுங்கு பேசும் அம்மாவாக நடிகை ரோஜா சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார். அவருக்கும் சேத்தனுக்குமான சென்டிமென்ட் காட்சிகள் அருமை. நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, படம் முழுவதும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தாய்மாமாவாக வரும் செல்வமுருகன், மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


ஷெல்லி காலிஸ்ட்டின் ஒளிப்பதிவு பெரம்பூரை அழகாகக் காட்டியுள்ளது. பரத் சங்கரின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.


வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரின் காதலையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், சாதி, மத எல்லைகளைக் கடந்து காதல், பாசம், குடும்பம், நட்பு, உறவு மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்தையும் அழகாகக் கலந்து, ஒரு கலகலப்பான குடும்பத் திரைப்படத்தை வழங்கியிருக்கிறார்.


*இந்திய புராண உலகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆறு மொழிகளில் புதுமையாக அறிமுகப்படுத்தும் அசல் அனிமேஷன் தொடர்*

தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது.

ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா இடம்பெறுகின்றனர். அவர்களின் விளையாட்டுத்தனமான குறும்புகள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த அசாதாரணமான சாகசப் பயணத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன.

ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான கதைகளைத் தாண்டி விரியும் புராண உலகில் அமைந்துள்ள இந்தத் தொடர், இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட புதிய கதாபாத்திரங்கள், இதுவரை ஆராயப்படாத உலகங்கள் மற்றும் மாயாஜால சாகசங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

நகைச்சுவை, அதிரடி மற்றும் வண்ணமயமான அனிமேஷன் ஆகியவற்றின் கலவையுடன், இன்றைய இளம் தலைமுறைக்காக புராணங்களை புதிய கோணத்தில் மறுவடிவமைக்கும் இந்தத் தொடர், முழுமை (Perfection) அல்ல, ஒருவர் எடுக்கும் முடிவுகளே அவரை ஹீரோவாக உருவாக்குகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.

விரிவடையவிருக்கும் மிகப்பெரிய புராண பிரபஞ்சத்தின் முதல் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள Shivlok Ke Kundakka Mandakka, புதிய கதாபாத்திரங்கள், புதிய சாகசங்கள் மற்றும் புதிய கதைகள் மூலம் தொடர்ந்து வளரக்கூடிய உலகத்திற்கு அடித்தளமிடுகிறது. இதன் மூலம், இந்திய புராணங்களை விளையாட்டுத்தனமான, எதிர்பாராத மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புதிய பார்வையில் இளம் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும்.

கதையின் மையமாக இரண்டு குறும்புத்தனமான அசுர கதாபாத்திரங்களை வைத்து, விளையாட்டுத்தனமான குழந்தைகளுக்கு மதிப்புகளோ ஒழுக்கமோ இல்லை என்ற பொதுவான கருத்தை இந்தத் தொடர் சவாலுக்கு உட்படுத்துகிறது. குண்டக்கா மற்றும் மண்டக்காவின் சாகசங்கள் மூலம், ஆர்வமும் குறும்புத்தனமும் கருணை, தைரியம் மற்றும் பரிவு போன்ற உயரிய பண்புகளுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை பார்வையாளர்கள் உணர்கிறார்கள்.

KidZ மூலம், இந்திய கலாச்சாரத்தையும் சமகாலக் கதையம்சங்களையும் அடிப்படையாகக் கொண்ட, பாதுகாப்பான மற்றும் வயதுக்கேற்ற பொழுதுபோக்கை வழங்கும் நம்பகமான தளத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக ZEE5 உருவாக்கி வருகிறது.

குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாகக் கண்டு ரசிக்கும் குடும்பப் பார்வை அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பொழுதுபோக்குடன் காலத்தால் அழியாத வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டாடுகிறது.

Shivlok Ke Kundakka Mandakka தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகிறது.

டிரெய்லர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY

இந்த அறிமுகம் குறித்து KidZ, ZEE5-ன் Business Head சந்தன் கந்தேல்வால் கூறியதாவது:

"ZEE5-இல், தலைமுறைகள் கடந்து மக்களால் நேசிக்கப்பட்ட கதைகளே நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், ஆனந்த் நீலகண்டன் போன்ற புகழ்பெற்ற கதைசொல்லிகளுடன் இணைந்து, அந்த உலகங்களை இன்றைய இளம் பார்வையாளர்களுக்காக உயிர்ப்பிக்கிறோம்.

Shivlok Ke Kundakka Mandakka மூலம், அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த புராணங்களைத் தாண்டி, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நகைச்சுவை, சாகசம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகள் நிறைந்த புதிய உலகத்தை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.

இந்திய புராணங்களின் செழுமையையும், ஈர்க்கக்கூடிய கதையம்சங்களையும், உயர்தர அனிமேஷனையும் இணைத்து, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சமமாக மகிழ்ச்சியளிக்கும், அர்த்தமுள்ள குடும்பப் பார்வை அனுபவத்தை உருவாக்கியுள்ளோம்.

KidZ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் கதை சொல்லும் பாரம்பரியத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் புதிய வடிவில் வழங்கும் படைப்பாளிகளுடன் இணைந்து, இந்தியாவில் உருவாகும் புதிய பிராண்டு கதைகளை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்."

இந்தத் தழுவல் குறித்து எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் கூறியதாவது:

"என்னுடைய The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids என்ற நூலை KidZ, Shivlok Ke Kundakka Mandakka என்ற அனிமேஷன் தொடராக உயிர்ப்பித்து, புதிய தலைமுறை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் இவ்வளவு பெரிய தளங்கள் முதலீடு செய்து, குழந்தைகளுக்காக அவற்றை இவ்வளவு சுவாரஸ்யமான முறையில் மறுவடிவமைப்பதைப் பார்ப்பது உற்சாகமளிக்கிறது.

நான் குண்டக்கா மற்றும் மண்டக்காவை உருவாக்கியபோது அனுபவித்த மகிழ்ச்சியைப் போலவே, இளம் பார்வையாளர்களும் அவர்களின் திரை சாகசங்களை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த குறும்புக்கார கதாபாத்திரங்களும் அவர்களின் உலகமும் அனிமேஷன் மூலம் புதிய உயிர் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது."

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் உலகளாவிய பொழுதுபோக்கு தளமாகவும் விளங்குகிறது.

Zee Entertainment Enterprises Ltd.-இன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான ZEE5, மொழி முதன்மை (Language-first) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் தேவைகளுக்கேற்ற உள்ளடக்கம், மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் வழங்குகிறது.

Originals, இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடி விளையாட்டுகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், செய்திகள், Live TV மற்றும் Micro Dramas உள்ளிட்ட மிகப்பெரிய உள்ளடக்கத் தொகுப்புடன், பல மொழிகளில் பொழுதுபோக்கும் நேரடி விளையாட்டு அனுபவங்களையும் வழங்கும் முன்னணி தளமாக ZEE5 விளங்குகிறது.

2034 வரை FIFA-வுடன் Zee Entertainment கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் FIFA World Cup 2026™ மற்றும் 2030 உள்ளிட்ட FIFA-வின் முக்கிய கால்பந்து போட்டிகளின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தளமாகவும் ZEE5 செயல்படுகிறது.

 

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் !


பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.


படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதேபோல், சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது முக்கியமான பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்திருந்தார்.


பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் ஃபர்ஸ்ட் லுக்கும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, PVCU-வில் அவரது கதாபாத்திரம் குறித்து அதிக ஆர்வத்தை உருவாக்கியது.


இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மீகப் பிரம்மாண்டத்தையும், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட அளவையும் இணைக்கும் வகையில், இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனிக்கிறார்.


தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை விரைவாக முடித்து, போஸ்ட் புரடக்சன்  பணிகளுக்கு (Post Production) செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்து வருகிறது.


படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விளம்பரப் பணிகள் தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.


தொழில்நுட்பக் குழு: 


எழுத்து : பிரசாந்த் வர்மா 

இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு

தயாரிப்பாளர்: ரிவாஸ் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல் 

பேனர்: RKD Studios 

இசை: ஸ்மரன் சாய்

ஒளிப்பதிவு : சுரேஷ் ரகது

கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா 

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி 

விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா 

மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து விறுவிறுப்பாக பேசுகிறது


 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்குகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு ,பிண்ணனி இசையும் அமைத்துள்ளார்.


2008-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அலுவலர்கள் பிரிவைச் சேர்ந்த தோ.சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றியுள்ளார். என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளியில் பொறியியல் படித்த அவர், சிறப்பான பணிக்காக 2021-ம் ஆண்டு உலக சுங்க அமைப்பு (World Customs Organization) வழங்கிய விருதைப் பெற்றுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் டி. சமய முரளி கூறுகையில், "'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை ஆகும். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம்," என்றார்.


சென்னையின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த அமர் மற்றும் தீனா என்ற இரண்டு இளைஞர்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற கனவுடன் வாழ்கின்றனர். லிங்கம் என்ற நிழல் உலக தாதா, பெருமதிப்புள்ள போதைப்பொருளை குஜராத் துறைமுகம் வழியாகக் கடத்தும் பெரிய பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார்.


துபாயில் இருந்து மேத்யூ பாய் செய்யும் இந்த போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா களமிறங்குகிறார். லஞ்சம், வஞ்சம் என உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ளும் அந்த இரு இளைஞர்களின் பயணமே படத்தின் மையக்கதை. 


மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, எழுத்தாளர், ஆய்வாளர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 'சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்', 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்', 'காக்கி' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள அவர் எழுதிய சுங்கத்துறை தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-ல் வெளியாகியுள்ளன. அவர் இயக்கிய முதல் குறும்படமான 'புதிய பார்வை', மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் 'சைலன்ட்' எனும் திரைப்படத்தில் நடித்ததுடன், அதற்கு இசையும் அமைத்துள்ளார். 


எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரிக்கும் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்', அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டிற்காக பணியாற்றும் சுங்கத்துறையின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகி வருகிறது.

 

நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம், IMDb வெளியிட்டுள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய இந்திய திரைப்படங்கள் மற்றும் ஷோஸ் (Most Anticipated New Indian Movies and Shows) பட்டியலில் 11.1% ரியல்டைம் மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.


இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய படைப்புகளின் வரிசையில் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தை இந்த அங்கீகாரம் இணைத்துள்ளது. அதைவிட முக்கியமாக பல துறைகளிலும், பல தலைமுறைகளிலும், புவியியல் எல்லைகளையும் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை திரையில் காண மக்கள் நாடு முழுவதும் கொண்டுள்ள ஆர்வத்தையும் இது வெளிப்படுத்துகிறது. படத்தின் வலுவான கதைக்களம், விரிவான வரலாற்றுப் பின்னணி, பிரம்மாண்டமான தயாரிப்பு தரம் மற்றும் ’இந்தியாவின் எடிசன்’ எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக நடிகர் ஆர். மாதவன் மேற்கொண்டுள்ள அசத்தலான தோற்ற மாற்றம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. 


IMDb-ன் ரியல்டைம் பிரபலத்தன்மை தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பதன் மூலம் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் அபாரமான வாழ்க்கைப் பயணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரது சாதனைகள் மட்டுமல்லாது புதுமை, விடாமுயற்சி, உயர்ந்த லட்சியம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றையும் இந்த திரைப்படம் கொண்டாடுகிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


திரைக்கதை: கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன்,

ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அரவிந்த் கமலநாதன்,

இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா,

படத்தொகுப்பாளர்: பிஜித் பாலா,

நிர்வாகத் தயாரிப்பாளர்: முரளிதரன்,

தயாரிப்பு மேலாளர்: ஹக்கிம் சுலைமான்,

வசனம்: முகில்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிரில் குருவில்லா,

ஆடை வடிவமைப்பாளர்: ஜிஷாத் ஷம்சுதீன்,

ஒலி வடிவமைப்பு & தயாரிப்பு ஒலி கலவை: சித்தார்த் சதாசிவ்,

தலைமை மேக்கப் கலைஞர்: ரஞ்சித் அம்பாடி

 

சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது.


 முக்கிய அம்சங்கள்:


  ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு சிறப்புச் செய்தி:


ஸ்பைடர்-மேன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் டாம் ஹாலண்ட் (Tom Holland) இந்திய ரசிகர்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.


  150-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்:


 சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (Sony Pictures Entertainment) நிறுவனத்தின் புகழ்பெற்ற 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் ஆங்கிலப் படங்கள் இப்போது சோனி லைவ் தளத்தில் அனைவரும் பார்க்க பிரத்தியோகமாக ஸ்ட்ரீம் ஆகிறது


 பிரபலமான திரைப்படங்களின் பட்டியல்:

   ஸ்பைடர்-மேன் திரைப்படங்கள் (Spider-Man films) & ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் (Spider-Man: Into the Spider-Verse)

   

ஜுமான்ஜி (Jumanji)

   

தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (The Pursuit of Happyness)

   

மைக்கேல் ஜாக்சனின் திஸ் இஸ் இட் (Michael Jackson's This Is It)


   தி டா வின்சி கோட் (The Da Vinci Code)


   தி கராத்தே கிட் (The Karate Kid - 2010) மற்றும் பல...


சுருக்கமாக:

நீங்கள் விரும்பி வளர்ந்த, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் இப்போது சோனி லிவ் (Sony LIV) தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.


டாம் ஹாலண்டின் இன்ஸ்டாகிராம் வீடியோவை இந்த இணைப்பில் காணலாம்.

 

ஃபர்ஸ்ட் டைமா,  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு  வரப்போற 'DC' படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட்.

ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.


ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும்.


என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக் கொடுத்த 'DC' படக்குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். 


நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணி இந்த பாட்டை உருவாக்கினோமோ, அதே மாதிரி கேக்குற உங்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.

பாட்டோட ரிலீஸ்க்காக நான் ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாங்க பண்ண வொர்க்கை நீங்க எல்லாரும் கேக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். 


அன்புடன்,

வேடன்

Pageviews