சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.
“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் “மாண்புமிகு பறை.”

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை: சுபா & சுரேஷ் ராம்
இயக்கம்: எஸ். விஜய் சுகுமார்
ஒளிப்பதிவு: ரா. கொளஞ்சி குமார்
படத்தொகுப்பு: சி. எஸ். பிரேம் குமார்
இசை: தேனிசை தென்றல் தேவா
நடன இயக்கம்: ஜானி
பாடல்கள்: சினேகன்
கலை: விஜய் ஐயப்பன்
தயாரிப்பு நிறுவனம்: சியா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: சுபா – சுரேஷ் ராம்
இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா
நிர்வாக தயாரிப்பாளர்: த. முரளி
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

 

ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு   ஆகியோரும் நடித்துள்ளனர்.


 இந்தப் 'பரிசு' திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.


ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை - ராஜீஷ்,பின்னணி இசை - சி.வி. ஹமரா ,பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,படத்தொகுப்பு - சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி, நடனம் - சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி - இளங்கோ. தயாரிப்பு: ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.


படம் எதைப் பற்றிப் பேசுகிறது?


ஜான்வி  பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி.படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவள்.அவளது தந்தை ஒரு ராணுவ வீரர்.

ஜானகியின் அழகையும் அறிவையும் பார்த்துவிட்டு அவள் படிக்கும் கல்லூரியில் சில மாணவர்கள் பின் தொடர்கிறார்கள். நெருங்கிப் பழகவும், அன்பளிப்பு கொடுக்கவும்,பூங்கொத்து  பரிசளிக்கவும் என்று சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் மீது ஆசையுடன் காதலைச் சொல்ல ஏங்குகிறார்கள்.

ஆனால் அவளோ எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு பருவக் கோளாறு என்று நினைத்து எந்த விதக் கோபமும் காட்டாமல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இலகுவாக புறந்தள்ளிவிட்டுத்  தனது இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறாள்.

விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அவள், தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறாள்.  


ஒரு நவீனப் பெண்ணாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவளாக இருக்கிறாள். விவசாய வேலைகளில் ஈடுபடுவதும் டிராக்டர் ஓட்டுவதும் என்றும் அதையும் விடாமல் செய்கிறாள்.அவளைத் தோழிகள் லேடி நம்மாழ்வார் என்கிறார்கள்.சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு.கல்லூரி மாணவர்களை  இணைத்துக் கொண்டு கிராமங்களைச் சுத்தம் செய்கிறாள்.

முறையான பயிற்சிக்குப் பின்

குறி பார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொள்கிறாள்.எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.

இவ்வளவும் செய்யும் ஜான்வி,

தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவு காண்கிறாள்.


 தனது உறவினர் சென்ட்ராயன் வீட்டு  நிகழ்ச்சிக்கு  

ஜான்வி

சென்றபோது அங்கே நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்குள் ஒரு புரிதல் உண்டாகிறது.

ராஜேஷ் அவளைக் காதலிப்பதாகக் கூறுகிறான் .ஆனால் தனது லட்சியத்திற்குப் பிறகு தான் எல்லாமே என்று அவள் தள்ளி வைக்கிறாள்.


அப்படிப்பட்டவள் ஒரு கார் மீது  லாரி மோதி விட்டு தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கிறாள்.காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறாள்.அதன் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் ஜான்வியைக் கடத்துகிறார்கள். அவள் அந்த எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? அவள் தனது ராணுவக் கனவை நிறைவேற்றினாளா?அந்தப் பாதையில் அவள் எதிர் கொள்ளும் போராட்டங்கள் தான் 130. 12 நிமிடங்கள் கொண்ட 'பரிசு' படத்தின் மீதிக் கதை.


இது  ஒரு பெண் பாத்திரத்தினை மையம் கொண்ட கதையாக உருவாகி இருக்கிறது.

 மகனோ மகளோ பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று இதில் கருத்தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படித் தனது  மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இது.அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் தான் இந்தப் படம்.


படத்தின் பிரதான ஜான்வி பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார்.

பல்வேறு தோற்றங்களில் வெளிப்பட்டு அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர வைக்கிறார்.


எதையும் புன்னகையுடன்  எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார். இப்படி  ஆறு பேருடன் மோதும் காட்சிகளில் அவர் எகிறிக் குதித்து தனது சாகசத்தைக் காட்டி வியக்க வைக்கிறார். விவசாயம் செய்பவராக டிராக்டர் ஓட்டிக்கொண்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று காட்டுகிறார் .அது மட்டும் அல்ல ராணுவ வீரராக மிடுக்குடன் தோன்றுகிறார். இவர் ஆர்ப்பாட்டமான வசனங்கள் பேசாமல் மென்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.வன்மையான மனதுடன் மென்மையான முறையில் தான் சவால்களைச் சந்திக்கிறார்.


இவரது பாத்திரம் பெண்களுக்கு  நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள்  சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் விதைக்கிறது.


ஜான் ஜான் என்று கதாநாயகியை வளைய வளைய கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண்பிரதாப் நடித்துள்ளார். தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும் அவர் சிரிக்க வைக்கிறார்.

ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.


 மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.ஆனால்  பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே  உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.


ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,

அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார்.

தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.


மருத்துவமனை நடத்திக் கொண்டு உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் நடித்துள்ள சுதாகரும் தனது வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.


படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. படம் தொடங்கியதும் அருவியின் அழகுடன் முதல் பாடல்காட்சி வருகிறது. அதற்குப் பிறகு இடம் பெறும் பாடல்களின் பின்புலங்களும் ரசிக்கும் படி உள்ளன.


படத்துக்குத் தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.


'நன்னாரே' பாடலின் சாயலில் ஒரு பாடல் ஒலித்தாலும் பிற பாடல்களின் மெட்டுகளை ரசிக்கும்படி  இசையமைத்துள்ளார் ராஜீஷ்.

குறிப்பாக 'ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே ','கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா ?' 'போராடலாமா ?' போன்ற பாடல்கள் இசையாலும் வரிகளாலும் கவனிக்க வைக்கின்றன.ஒரு பாடலில்

தூய்மை இந்தியா பற்றிய கருத்துகள் வருகின்றன.

வரிகள் ராஜேந்திர சோழன்.


ஆர்ப்பாட்டம் இல்லாத ஹமரா வின் பின்னணி இசை,  படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது.


 திரைக்கதையின் போக்குக்கு ஊறு செய்யாமல் படத்தொகுப்பாளர்கள்

 சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி படத்தொகுப்பு செய்துள்ளனர்.


சண்டை இயக்குநர்கள் கோட்டி மற்றும் இளங்கோ இருவரும்

கதாநாயகி டூப் இல்லாமல் போடும் சண்டை காட்சிகளை இயல்பாக அமைத்துள்ளனர்.


 'ஆர்மி என்பது ஒரு கலாச்சாரம்' என்று ராணுவத்தை உயர்த்திப் பிடித்து, இந்திய ராணுவத்தின் நூற்றாண்டு கடந்த வரலாற்றையும் சில வசனங்கள் பேசுகின்றன.


பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்படி பல வசனங்கள் உள்ளன.ஒரு  கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஜான்விகா பேசும் வசனம் ஒரு உதாரணம்.

அவர் பேசும்போது,

'1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசும்போது பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார்.ஜான்சி ராணி லட்சுமி பாய் வாளேந்தி சண்டையிட்டது போல் பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும்  'என்றதை  நினைவூட்டிப் பேசும் வசனம் பெண்களுக்குச் சரியான ஊக்கமும் உந்துதலும் தரும்.


 வணிக ரீதியிலான படம் தான் என்றாலும் ஆபாசமோ இரு பொருள் வசனங்களோ தேவையற்ற வன்முறையோ இல்லாமல் பெண்களுக்கு நம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கும் வகையில்  இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.


படம் உருவாக்கத்தில் சில குறைகள், கேள்விகள் இருந்தாலும் கலா அல்லூரியின் நல்ல கருத்து சொல்லும் நோக்கத்தைப் பாராட்டலாம்.


குடும்பத்துடன் குறிப்பாகப் பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிற வகையில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.

 

’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.


டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்‌ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது.


இந்தப் படத்தில் எல்லே ஃபேன்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி ஆகியோருடன் திறமையான பல நடிகர்களும் நடிகத்துள்ளனர். படம் பற்றி நடிகர் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி பகிர்ந்து கொண்டதாவது, "ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரிடேட்டர் ஃபிரான்சைஸின் இந்தப் படத்தைப் பார்த்து திருப்தி அடைவார்கள் என்று நம்புகிறேன். புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை அறிமுகப்படுத்தவதும் ஐகானிக் கதாபாத்திரங்களை கொண்டாடவும் இந்தப் படம் நிச்சயம் வழிவகுக்கும்” என்றார். 


20த் செஞ்சுரி ஸ்டுடியோ  நவம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது.

 

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான 'பிரமயுகம்' (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. 


இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும்.


ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய 'பிரமயுகம்' திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. 


‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியர் இசை, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு, ஜெயதேவன் சக்கடத் ஒலி வடிவமைப்பு, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலி கலவை, டி.டி. ராமகிருஷ்ணன் வசனம், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ். ஒப்பனை, பிரீத்திஷீல் சிங் டி'சோசா புரோஸ்தெடிக்ஸ் மற்றும் மெல்வி ஜெ ஆடை வடிவமைப்பையும் கவனித்துக் கொண்டனர். 


பிரமயுகம் பற்றி:


ராகுல் சதாசிவன் எழுதி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் 'பிரமயுகம்'. ஹாரர்- த்ரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பு இந்தப் படம். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தை வழங்கியது. 


'பிரமயுகம்' படத்தின் இயக்குநர் மற்றும் அதே அணியினரோடு நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் தனது இரண்டாவது படமாக பிரணவ் மோகன்லால் நடிப்பில் அக்டோபர் 31, 2025 அன்று வெளியான 'டைஸ் ஐரே' என்ற படத்தை தயாரித்தது. 


தி அகாடெமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் பற்றி:


கலை, அறிவியல் மற்றும் திரைக்கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மியூசியம் இந்த அகாடெமி மியூசியம். இந்த அகாடெமியில் கண்காட்சிகள், திரையிடல்கள், நிகழ்ச்சிகள், புதிய முயற்சிகள் மற்றும் கலெக்‌ஷன்ஸ் மூலம் சினிமாவைப் புரிந்துகொள்வது, கொண்டாடுவது மற்றும் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது. பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இந்த அகாடெமியின் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்டு புத்துயிர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சபான் கட்டிடம் (முன்னர் மே கம்பெனி கட்டிடம் (1939) அழைக்கப்பட்டது) உள்ளது. 


இந்த கட்டிடங்களில் ஒன்றாக, 50,000 சதுர அடி கண்காட்சி இடங்கள், இரண்டு அதிநவீன தியேட்டர்கள், ஷெர்லி டெம்பிள் எஷூகேஷன் ஸ்டுடியோ மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாகவும் திறந்திருக்கும் அழகான பொது இடங்கள் உள்ளன. இவற்றில் வால்ட் டிஸ்னி கம்பெனி பியாஸ்ஸா மற்றும் ஸ்பீல்பெர்க் ஃபேமிலி கேலரி, அகாடமி மியூசியம் ஸ்டோர் மற்றும் ஃபான்னி உணவகம் மற்றும் கஃபே ஆகியவற்றைக் கொண்ட சிட்னி போய்ட்டியர் கிராண்ட் லாபி ஆகியவை அடங்கும். அகாடமி மியூசியம் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.


அடுத்தடுத்த அப்டேட் மற்றும் அறிவிப்புகளுக்கு இன்ஸ்டாகிராம், எக்ஸ், த்ரெட்ஸ், முகநூல் மற்றும் யூடியூபில் @allnightshifts -ஐ  பின்தொடருங்கள்!

 

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தேவையான சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது. அந்த வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.


எடிட்டர் ஆண்டனி கோன்சால்வஸ், “வாய்ப்பு கொடுத்த துல்கர் சார், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வா எல்லோருக்கும் நன்றி. ‘காந்தா’  படத்தின் செட் நான் பார்த்தபோதே அசந்துவிட்டேன். எல்லா நடிகர்களும் அசத்தி விட்டார்கள். கதாநாயகி கதாபாத்திரம் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சிம்ரன் மேம் போல இவரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இரண்டாவது பாதியில் ராணா சார் வருவார். துல்கர்-ராணா-சமுத்திரக்கனி எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். நான் இதுவரை எடிட் செய்த படங்களிலேயே ‘காந்தா’ படம்தான் மிகவும் சவாலானது. நிச்சயம் இந்தப் படமும் இயக்குநர் செல்வாவும் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள்”.


ஸ்பிரிட் மீடியா, பிரஷாந்த், “2018ஆம் வருடத்தில் நானும் செல்வாவும் இந்தப் படத்திற்காக இணைந்தோம். எல்லோருக்கும் டிரைய்லர் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சினிமாவை கொண்டாடும் படமாக இது இருக்கும். உயிரைக் கொடுத்து இதற்காக வேலை பார்த்திருக்கிறோம். நடிப்பு சக்ரவர்த்தியாக துல்கர் படத்தில் அசத்தியிருக்கிறார். ராணா கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சமுத்திரக்கனி அய்யா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பாக்கியஸ்ரீயும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்”. 

 

இயக்குநர் செல்வமணி, “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க பிடிக்கும். எந்தப் புத்தகமும் தனி மனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா சொல்லித்தந்தது. நேற்று இருந்ததை விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என சொல்லித் தந்தது இந்த சினிமாதான். சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக் கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன். 1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன். என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால்தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது. 2016-ல் நான் எழுதிய இந்தக் கதையை 2019-ல் ராணாவிடம் சொன்னேன். அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால்தான் ‘காந்தா’ ஆரம்பிக்க முடிந்தது. ராணாவும் துல்கரும் என் போன்ற புதுமுக இயக்குநருக்கு அமைந்தது பெரிய விஷயம். நாங்கள் எல்லோரும் ரசித்து எடுத்த இந்தப் படத்தை நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். அய்யா கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்கியஸ்ரீ தமிழைக் கற்றுக் கொண்டு சின்சியராக நடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


நடிகர் சமுத்திரக்கனி, “என்னுடைய சினிமா பயணத்தையே ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்னால் எனக்கு காய்ச்சல் வருவது மாதிரி இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை. என் பிள்ளை மகாதேவன், குமாரி, என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை. துல்கரின் மகாதேவன் என்ற கதாபாத்திர பெயரை உச்சரிக்கும்போதே எனக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்தப் படைப்பு எங்களை இயக்கியது. சினிமா மாறிக்கொண்டிருப்பதை ‘காந்தா’வில் உணர்ந்தேன். இயக்குநர் செல்வா பெரிய இடத்திற்குப் போவார். துல்கர் சிறப்பாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். நல்ல படைப்பில் இருக்க வேண்டும் என்பது ராணாவின் எண்ணம். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.


நடிகை பாக்கியஸ்ரீ, “’காந்தா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். என்னைப் போலவே இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி. துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை!”.


நடிகர் ராணா, “சிறுவயதில் சினிமா பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்தப் படம் மூலம் நேரில் இயக்குநர் செல்வா என்னைப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு பாக்கியஸ்ரீயை வரவேற்கிறேன். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கர் நடிப்பு சக்ரவர்த்தியாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.


நடிகர் துல்கர் சல்மான், “இந்தப் படத்தின் கதை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும். நவம்பர் 14 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இசையமைப்பாளர் ஜானு சந்தார், “ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தக் கதையில் செல்வா பயணித்துக் கொண்டிருக்கிறார். ராணா, துல்கர் எல்லோருக்கும் நன்றி. சில படங்கள் மட்டுமே உங்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அதில் ஒன்று” என்றார்.

 

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தேவையான சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது. அந்த வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.


எடிட்டர் ஆண்டனி கோன்சால்வஸ், “வாய்ப்பு கொடுத்த துல்கர் சார், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வா எல்லோருக்கும் நன்றி. ‘காந்தா’  படத்தின் செட் நான் பார்த்தபோதே அசந்துவிட்டேன். எல்லா நடிகர்களும் அசத்தி விட்டார்கள். கதாநாயகி கதாபாத்திரம் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சிம்ரன் மேம் போல இவரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இரண்டாவது பாதியில் ராணா சார் வருவார். துல்கர்-ராணா-சமுத்திரக்கனி எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். நான் இதுவரை எடிட் செய்த படங்களிலேயே ‘காந்தா’ படம்தான் மிகவும் சவாலானது. நிச்சயம் இந்தப் படமும் இயக்குநர் செல்வாவும் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள்”.


ஸ்பிரிட் மீடியா, பிரஷாந்த், “2018ஆம் வருடத்தில் நானும் செல்வாவும் இந்தப் படத்திற்காக இணைந்தோம். எல்லோருக்கும் டிரைய்லர் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சினிமாவை கொண்டாடும் படமாக இது இருக்கும். உயிரைக் கொடுத்து இதற்காக வேலை பார்த்திருக்கிறோம். நடிப்பு சக்ரவர்த்தியாக துல்கர் படத்தில் அசத்தியிருக்கிறார். ராணா கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சமுத்திரக்கனி அய்யா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பாக்கியஸ்ரீயும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்”. 

 

இயக்குநர் செல்வமணி, “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க பிடிக்கும். எந்தப் புத்தகமும் தனி மனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா சொல்லித்தந்தது. நேற்று இருந்ததை விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என சொல்லித் தந்தது இந்த சினிமாதான். சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக் கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன். 1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன். என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால்தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது. 2016-ல் நான் எழுதிய இந்தக் கதையை 2019-ல் ராணாவிடம் சொன்னேன். அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால்தான் ‘காந்தா’ ஆரம்பிக்க முடிந்தது. ராணாவும் துல்கரும் என் போன்ற புதுமுக இயக்குநருக்கு அமைந்தது பெரிய விஷயம். நாங்கள் எல்லோரும் ரசித்து எடுத்த இந்தப் படத்தை நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். அய்யா கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்கியஸ்ரீ தமிழைக் கற்றுக் கொண்டு சின்சியராக நடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


நடிகர் சமுத்திரக்கனி, “என்னுடைய சினிமா பயணத்தையே ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்னால் எனக்கு காய்ச்சல் வருவது மாதிரி இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை. என் பிள்ளை மகாதேவன், குமாரி, என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை. துல்கரின் மகாதேவன் என்ற கதாபாத்திர பெயரை உச்சரிக்கும்போதே எனக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்தப் படைப்பு எங்களை இயக்கியது. சினிமா மாறிக்கொண்டிருப்பதை ‘காந்தா’வில் உணர்ந்தேன். இயக்குநர் செல்வா பெரிய இடத்திற்குப் போவார். துல்கர் சிறப்பாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். நல்ல படைப்பில் இருக்க வேண்டும் என்பது ராணாவின் எண்ணம். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.


நடிகை பாக்கியஸ்ரீ, “’காந்தா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். என்னைப் போலவே இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி. துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை!”.


நடிகர் ராணா, “சிறுவயதில் சினிமா பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்தப் படம் மூலம் நேரில் இயக்குநர் செல்வா என்னைப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு பாக்கியஸ்ரீயை வரவேற்கிறேன். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கர் நடிப்பு சக்ரவர்த்தியாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.


நடிகர் துல்கர் சல்மான், “இந்தப் படத்தின் கதை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும். நவம்பர் 14 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இசையமைப்பாளர் ஜானு சந்தார், “ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தக் கதையில் செல்வா பயணித்துக் கொண்டிருக்கிறார். ராணா, துல்கர் எல்லோருக்கும் நன்றி. சில படங்கள் மட்டுமே உங்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அதில் ஒன்று” என்றார்.

 

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது


நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது,


என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம்.


நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.


இயக்குனர் நிதிலன் பேசும்போது,


இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஓடாத நல்ல படம் வேண்டாம், ஓடுகின்ற மோசமான படம் வேண்டாம், ஓடுகின்ற நல்ல படம் வேண்டும் என்று பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் சார் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.

கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப்படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன்.


பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள்.


கும்கி -1 படம் வெற்றிபெற்றது போல, அதைவிட பெரிதாக கும்கி-2 வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


இயக்குனர் மடோன் அஸ்வின் பேசும்போது,


நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு இப்போதும் வருகிறது. ஏனென்றால், நீதிபதியாக இருந்த பிரபு சாலமன் சார் இருக்கிறார். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கீகீ-யும் இருக்கிறார். அந்த சீசனில் கலந்து கொண்ட நான், நிதிலன், பாக்கியராஜ் கண்ணன், அஸ்வத் மாரிமத்து போன்ற ஒரு குழுவை வழி நடத்தி இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்தவர் பிரபு சாலமன் சார் தான்.


என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை சொல், நான் தயாரிக்கிறேன் என்றார். நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என்னிடம் இப்போது கதை இல்லை, ஆகவே உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்றேன்.


அவருக்கு பிடித்த கதை சொல்லும் இடம் அவருடைய இன்னோவா கார் தான். தொடரி படம் முதல் இன்னும் வெளியாகாத மேம்போ படம் வரை ஒரு வரி கதை தெரியும். அதில் கும்கி -2 மட்டும் பேசவில்லை. பேசியிருந்தால் இந்த கதையையும் நான் படித்திருப்பேன்.


கும்கி-1 படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது போல இப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொண்டாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்.


என்னுடைய மண்டேலா மற்றும் மாவீரன் படங்களில் இருக்கும் குறை நிறைகளை கூறிய லிங்குசாமி சாருக்கு நன்றி.


இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.


இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,


லிங்குசாமி படத்திற்கு தொடர்ந்து நான் தான் வசனம் எழுதி வருகிறேன். நன்றாக எழுதுவேன் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய நண்பன் என்ற காரணத்தினால் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.


அவரது குடும்பத்தில் இருந்து மதி இரண்டாவது தலைமுறையாக சுலபமாக சினிமாவிற்கு வந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பதை கொரோனா சொல்லியிருக்கிறது. மதி இதுபோல நல்ல கதைகளைக் கேட்டு நிறைய படங்கள் நடித்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு காட்டைப் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்து அழகாக காட்டியிருக்கிறார் சுகுமார். வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார்.


சமீபத்தில் நான் அதிகமாக கேட்ட பாடல் தீக்கொளுத்தி. இப்பாடலும், பைசன் படமும் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு மிகப்பெரிய கதவு திறந்திருக்கிறது. இந்த சமயத்தில் கும்கி-2 வருவது இன்னமும் சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்.


மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படம் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன் என்றார்.


இயக்குனர் சரண் பேசும்போது,


இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது லிங்குசாமி அலுவலகத்தில் பார்த்தேன். படம் முழுவதும் காடாகவே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகு தான் ஜெயந்தி லால் காடா காரணம் என்று தெரிந்தது.


நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனிப் போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கிறது.


பிரபு சாலமன் படத்தில் உணர்வுபூர்வமாக இருக்கும். அவர் கைப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.


10 வருடமாக மறைந்திருந்து இசையமைத்துக் கொண்டிருந்த நிவாஸ் கே பிரசன்னா இன்று பாடுகிறார். நீண்ட வருடத்திற்குப் பிறகு நல்ல இசையை பைசன் படத்தில் தான் கேட்டேன்.


அதேபோல், மண்டேலா படத்தைப் பார்த்து வியந்தேன். பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.


நாயகியின் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும். அவர் நாயகியின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஷ்ரதாவை வரவேற்கிறேன்.


லிங்குசாமி ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக நுணுக்கமாக செதுக்குகிறார் என்று அருகில் இருந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் இப்படத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.


பலருடைய வெற்றிக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக திருப்பதி பிரதர்ஸ் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். அவர்களின் 100வது படத்தின் விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.


கும்கி-1 படத்தை என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் திருநெல்வேலியில் இருந்தேன். திரையரங்கில் சென்று பார்க்கும் போது நீர்வீழ்ச்சி காட்சியில், சூப்பர் ஸ்டார் படத்திற்கு போடுவது போல திரையை சுற்றி லைட் போட்டு இப்பாடலை படமாக்கியவர் சுகுமார் என்று பெயர் போட்டார்கள். திரையரங்கில் அனைவரும் கொண்டாடினார்கள்.


யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார்.


நடிகர் மதி பேசும்போது,


இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி.


பிரபு சாலமன் சார் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.


இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன் சார், பிருந்தா சாரதி சார், சரண் சார், ஜெகன், விஜய் பாலாஜி சார், என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி சார் தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி சார் மற்றும் போஸ் சார் தான்.


சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள்.


பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.


இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது,


என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் சார் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம்.


இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் சார் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி.


நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார்.


இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.


தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது,


கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.


கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்.


இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.


இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது,


என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது.


இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.


அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள்.


இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.


முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.


எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.


தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.


என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி.


அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள்.


டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.


படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.


இயக்குனர் லிங்குசாமி பேசும்போது,


காடா சார் எங்களுக்கு காட் மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்.


காடா சார் இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார்.


ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா அவர்கள்.


கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி சார் மற்றும் கமல் சார் வந்து வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை ஹிந்தியில் வெளியிட கூடியவர் ஜெயந்திலால் காடா சார். அவர் மதியை அறிமுகப்படுத்தியிக்கிறார். ஹிருத்திக் ரோஷன் என்று மதியை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.


இப்படம் மிகவும் காலதாமதமாகியிருக்கலாம். ஆனால், காடா சார் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமனை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார்.


கும்கி-1 படம் திருவண்ணாமலையில் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பதற்காக போய் இருந்தேன். எங்கள் திரையரங்கில் இதற்கு முன் உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, முரட்டுக் காளை இதுபோன்ற படங்களுக்குத்தான் இதுபோன்ற கூட்டம் வந்தது. அந்த பட்டியல் கும்கி படமும் இடம்பெற்றிருக்கிறது என்று கூறினார்கள்.


 கும்கி-1 படத்தின் பாடல்களை விட கும்கி-2வில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவின் முந்தைய படம் போல இப்படத்தில் இருந்துவிட்டாலே போதும். சினிமாவின் ஒட்டுமொத்த வெளிச்சமும் நிவாஸ் கே பிரசன்னா மீது தான் இருக்கிறது.


நிதிலன் இயக்கிய மகாராஜா படம் என்னுடைய 10 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.


கும்கி-2 நிச்சயம் மாபெரும் வெற்றியடையும்.


இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்



தொழில்நுட்பக் குழு:


இயக்கம் – பிரபு சாலமன்

தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா

இசை – நிவாஸ் கே. பிரசன்னா

ஒளிப்பதிவு – எம். சுகுமார்

எடிட்டிங் – புவன்

கலை இயக்கம் – விஜய் தென்னரசு

சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா

ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்

தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்

ஸ்டில்ஸ் – சிவா

புரமோஷன் – சினிமாபையன்

மக்கள் தொடர்பு  – யுவராஜ்

 

பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு,  பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.


நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில்,  உருவாகும்  மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ்  வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.


“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன்  பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.


இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர்.  இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.


முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.


இந்த கும்பா  கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.


முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,


“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன்  காத்திருக்கிறேன் .”


இயக்குநர்  தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter  நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.


பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( Announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.


இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

GRAND PICTURES ‘OTHERS’

CAST

ADITYA MADHAVAN
GOWRI KISHAN
ANJU KURIAN
‘NANDU’ JAGAN
‘MUNDASUPATTI’ RAMADASS
R SUNDARRAJAN
MALA PARVATHY

CREW

WRITTEN & DIRECTED BY : ABIN HARIHARAN
DOP: ARAVINND SINGH
EDITOR : RAMAR 
MUSIC DIRECTOR : GHIBRAN VAIBODHA
STUNT DIRECTOR : PHANTOM PRADEEN
CHOREOGRAPHER: SANTHOSH
PRO : SATHISH (AIM)
CO-PRODUCER : ADIRAJ PURUSHOTHAMAN – UP7 Ventures
PRODUCER : GRAND PICTURES

A van crashes into a large rock on a main road at night and shortly after catches fire, leaving three women and a man burned beyond recognition.

Following this, senior police officer Aditya Madhavan arrives to investigate the case, assisted by Inspector Anjukurian and Sub-Inspector Ramadoss.

Aditya Madhavan, who is investigating the case intensively, decides that this is not an accident but a murder and begins an investigation, finding many shocking details.

On the other hand, the heroine Gauri Kishan, who works at a fertility clinic, is being hunted down by two men who are trying to kill her when she discovers irregularities happening at the hospital and tries to tell Aditya about it.

Did the hero Aditya find the real murderer in the end? Or not? What was the reason for the murder? Did he save the heroine Gauri from the murderer? Or not? This is the crux of the film 'Others'.

Aditya Madhavan, who plays the police officer, impresses with his natural acting. Unlike a debutant, he has delivered an excellent performance. He is especially intimidating in the fight scenes.

The heroine, Gauri Kishan, who plays the role of a doctor, has done the job given to her flawlessly. She has played a key role that takes the story to the next level, rather than being a heroine in name only.

Anju Kurian as the police inspector, Ramadoss as the sub-inspector, R. Sundarajan, Jagan, who played the villain, and Harish Peradi, all of whom played the role in the film, are the perfect choices for the story.

Music composer Ghibran has provided the necessary background score for the suspense thriller. The cinematography is a huge strength of the film.

Kudos to the director, Abin Hariharan, for moving the story forward so quickly that no one can guess it from beginning to end.

Cast : 
Aditya Madhavan, Gauri Kishan, Anju Kurian, Jagan, Mundasupatti Ramadoss, R Soundararajan Music: Ghibran Director: Abin Hariharan.
 Public Relations: Sathish & Siva (AIM)

 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. 

 இதில் 
இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் 
(Official Selection) தேர்வாகி இருக்கிறது.

இப்படம் பற்றி இயக்குனர்  
இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது 

  உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை*

 இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி

 இவ்வாறு
 இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

 ஏற்கனவே
 இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீகாந்த்தேவா* இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
 அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனாதமிழ்ச்செல்வி,மீரா, கௌரிசங்கர், காமாட்சிசுந்தரம்,
இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு
 p.செல்லத்துரை, படத்தொகுப்பு T.பன்னீர்செல்வம், ஆடியோகிராபி UKI ஐயப்பன் செய்துள்ளனர்.
 ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.

Pageviews