இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது.
PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள் செயலிகள், வலைதளங்கள் மற்றும் மார்க்கெட்டிங் சேனல்களில் டிஜிட்டல் ஒருங்கிணைப்புகளுடன் அவதார்-தீம் பிராண்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. எனவே, ரசிகர்கள் தற்போது சினிமா செயலிகள், வலைதளங்கள் அல்லது நேரடியாக திரையரங்க கவுண்டர்களிலோ தங்களது ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
‘அவதார்’ திரைப்படத்தின் மூன்றாவது அத்தியாயம் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை அறிமுகப்படுத்துகிறது.
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அங்கம்மாள் ஜாக்கெட் போடமா சுருட்டை புடிச்சிகிட்டு ஊர்ல யார் பேச்சையும் கேக்காம கெத்தா இருக்குற ஒரு ஆளு. அவங்களுக்கு இரண்டு மகன்கள், அதுல ஒருத்தன் Doctor, அந்த பையன் எனக்கு புடிச்ச மாதிரி அம்மா இருக்கணும்னு ஆசைப்பட்டு சில விஷயங்களை மாத்தணும்னு முயற்சி எடுக்குறான். அங்கம்மாள் மாறுனங்களா ? இல்லையா ? படத்தின் மீதிக்கதை
அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் நடித்தது, சுருட்டு பிடிப்பது என தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு அதிகமாக உழைத்திருக்கிறார். சரண் இப்படத்தில் இன்னும் பலபடி மெருகேறி அசத்தியுள்ளார். நாடோடிகள் பரணிக்கு நின்று நிலைக்கக் கூடிய ஒரு கேரக்டர். புகுந்து விளையாடியுள்ளார். நாயகி முல்லையரசி, தென்றல் ரகுநாதன், உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் நல்ல நடிப்பின் மூலமாக அங்கம்மாளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசையும், அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு நல்ல சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து, அதை ஆகத்தரமாக மேக்கிங் செய்த விதத்தில் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஜெயித்திருக்கிறார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தலைமையிலான விஷன் சினிமா ஹவுஸ். முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் விஷன் சினிமா ஹவுஸ் சமீபத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படத்தை அறிவித்தது. இன்று (டிசம்பர் 5, 2025) தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. யாரும் இல்லாத கேலரியில் வண்ணமயமான நாற்காலிகளில் படத்தின் காதல் ஜோடி அமர்ந்திருக்க அவர்களின் கெமிஸ்ட்ரியை தெரிவிக்கும் வகையில், மேலே இருக்கும் ஹார்ட்டின் ’ஹைக்கூ’ படத்தின் ஃபீல்-குட் கதைக்கருவை அழகாக பிரதிபலிக்கிறது.
இளமை துடிப்புடன் கூடிய கதைகளை திரையில் கொண்டு வருவதற்கு பெயர் பெற்ற யுவராஜ் சின்னசாமி ’ஹைக்கூ’ திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து ஹரிஹரன் ராம் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் அதிர்ச்சி அருண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் புல்கான் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் மெல்லிசை அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும்.
‘ஜோ’ மற்றும் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு விஷன் சினிமா ஹவுஸ் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கதைகள் கேட்டு வருகிறது. முதல் காதல், நட்பு மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் படமாக ‘ஹைக்கூ’ வர இருக்கிறது.
’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு புதிய திறமையாளர்கள் மற்றும் இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் விஷன் சினிமா ஹவுஸின் தயாரிப்பாளர் டாக்டர். அருளானந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி உட்பட படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.
இந்தப் படத்திற்கு ஏகன் அருளானந்து எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து ‘ஹைக்கூ’ படத்தைத் தயாரிக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது.
மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான வாய் வழி பாராட்டையும் மறுபார்வைகளையும் உருவாக்கியுள்ளது.
புதிய படங்களிடமிருந்து போட்டி இருந்தாலும், ‘தேரே இஷ்க் மே’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல முக்கிய பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள், அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தின் காரணமாக, அடுத்த வாரத்திலும் படத்தின் வசூல் நிலைத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்னமும் திரைக்கு பெருமளவில் திரண்டுகொண்டிருப்பது, படத்தின் நீடித்த வேகத்துக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.
‘தேரே இஷ்க் மே’ தற்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.
தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.
தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார்.
நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது.
நடிகர்கள்: நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்
வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது.
குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார்.
உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும்.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படம் முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது.
இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது.
பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.










