கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் " welcome to wildlife " கார்த்திக் ராஜு இயக்குகிறார்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே 'Ninu Veedani Needanu Nene', சமீபத்தில் வெளியான சிங்கிள் 'Single' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார்.
பிரமாண்டமான பான் - இந்தியா படமாக தயாராகிவரும் இந்த படத்தை KVK Productions சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவராஜ்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.
இந்த போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்:
“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலிசெய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர்.
இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது இடுப்பில் உள்ள பெண்குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண்குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும். அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து.
பிழைக்கவந்த வடுகபட்டியில் வகுப்பு அவனுக்கு எழுத்துக்களைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன.
நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். “விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு” என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பாவிட்டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்
இது 60ஆம் ஞானபீடம்.
என் அரைநூற்றாண்டு எழுத்துக்களைப் பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமைகொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு, ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு, ஒரு கிராம் கம்பருக்கு, பாரதிக்கு, பாரதிதாசனுக்கு, அண்ணா, கலைஞர், கண்ணதாசனுக்கு ஆளுக்கொரு சொட்டு. அவர்களுக்கு மட்டுமா? காளிதாசனுக்கு ஒருசொட்டு, வேதவியாசருக்கு ஒரு சொட்டு. வால்மீகிக்கு ஒரு சொட்டு, தாகூருக்கு, ஷேக்ஸ்பியருக்கு, ஃபிர்தெளசிக்கு, மில்டனுக்கு. ஷெல்லி, பைரன், கீட்ஸூக்கு, டி.எஸ்.எலியட்டுக்கு, எஸ்ராபவுண்டுக்கு கடைசியாய் ஒரு சொட்டு கலீல் ஜிப்ரானுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்ததுபோகக் கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு ஆகலாம்.
இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்.
எனக்குச் சில கேள்விகள் உண்டு.
இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப்பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா?
ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது?
இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
என்று பேசினார்.
Foot Note:
டெல்லியில் நடந்த விழாவில் 60ஆவது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண்சிங் விருது வழங்கினார். ஞானபீடத்தின் நிர்வாக அறங்காவலர் அகிலேஷ் ஜெயின், தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிரதிபா ராய் மற்றும் நிர்வாகிகள் உடனிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார்.
ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைஃப் டைம் ஸ்டோரி”யாக ‘ஆண்ட’ உருவாகிறது. இதில் இடம்பெறும் தட்சணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையமாக அமைகிறது.
வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகள் மாறக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களே நடிக்க உள்ளனர். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களுடனான ஆலோசனைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாழ்க்கையை, மனித உறவுகளை, சமூகப் பொறுப்பை மற்றும் காலத்தின் மாற்றங்களை ஆழமாகப் பதிவு செய்யும் ‘ஆண்ட’, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு திரைப்பட வட்டாரங்களில் நிலவுகிறது
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டம் அமைத்திருக்கிறோம். விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர் அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அடிமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
மிஷ்கின்
நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி.
விஜய் சேதுபதி
இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தா இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச் கொடுத்தார் பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம்தான் ட்ரெயின் மூவி நடிச்சேன் செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட அடிச்சா எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க.
படத்தில் நடித்த நடிகை ப்ரீதி கரன் அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் ட்ரெயின் படம் வெளியாக போகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஹார்டுவேர் எல்லாம் விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள். என்ன தேர்ந்தெடுத்ததற்கு மிஷ்கின் சாரிக்கு நன்றி. எந்த இடையூறும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கிறேன் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் யுகி சார் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தானு சாருக்கு நன்றி.
படத்தில் நடித்த நடிகை ஐரா தயானந்த் அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் நன்றி ட்ரெயின் என்னுடைய முதல் படம். நான் இங்கே மிகவும் பயத்திலிருந்து இருந்தேன் ஆனா மிஷ்கின் சாரும் அவர்களின் டீமு என்ன சௌகரியம் செய்தார்கள். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி இருந்தது. விஜய் சேதுபதி சார் கூட நடிக்கும் போது மிகவும் நடுக்கமா இருந்தது அவர் என்ன சௌகரியம் செய்தார். விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது கனவு பலித்தது மாதிரி இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது என்னை இந்தப் படத்தின் நடிக்க வைத்ததற்கு தானு சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாசர் சார் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல ஆனாலும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு எனக்கு கட்டிக்கொண்டு வந்தாரு பவுசியா மேடம்க்கு என்னுடைய நன்றி.
நடித்த நடிகை மாளவிக்க சுந்தர் அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் சார் என்னை அழைத்த போது பாடல் பாடுவதற்கு என்று நினைத்தேன் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது நடிப்பதற்காக என்று மிஷ்கின் சார் ரொம்ப நன்றி இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. பல பரிணாமங்கள் பார்த்தேன் இவர் இயக்கத்தில். நான் நிறைய நல்ல வார்த்தைகள் பேசுவேன் என்று கூறுவார்கள் என்னை விட சுத்தமான வார்த்தைகள் பேசுபவரிடம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய கற்றுக் கொடுத்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் அடுத்த நிமிடம் மறந்து விடுவார். சூட்டிங் முடிந்ததும் 2000 ரூபாய் கொடுப்பார். உள்ளத்தில் ஒரு குழந்தை மிஷ்கின். ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய கடவுளை வேண்டி வாழ்த்துக்கள் சொல்கிறேன்.
நடிகர் அஜய் ரத்னம் அவர்கள் பேசும் பொழுது
இந்தப் படத்தினுடைய தாய் தானு. பெரிய தயாரிப்பார்கள் என்னை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி. மிஷ்கின் ஒரு மாஸ்டர் கடினமான மனிதர் அதிக புத்தகங்கள் படிப்பார். ஆஃபீஸ் நிறைய புத்தகங்கள் தான் இருக்கும். இப்பொழுது அவர் இசை அமைப்பாளர் இந்தப் படத்தில். விஜய் என்றால் வெற்றி தான் விஜய் சேதுபதி ரொம்ப வித்தியாசமாக நடித்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.
நடிகர் சுரேஷ் மேனன் அவர்கள் பேசும் பொழுது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
நடிகர் ஷாஜி அவர்கள் பேசும்பொழுது இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய கதாநாயகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். உயிரை கொடுத்து படம் எடுத்து இருக்கிறார் மிஷ்கின். என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.
நடிகர் செல்வா அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார் உடன் இது எனக்கு மூன்றாவது படம். யூதம் செய், முகமூடி, இப்போ ட்ரெயின். மிஷ்கின் எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்து இருக்கிறார் அவருக்கு ரொம்ப நன்றி. தானு சார் ரொம்ப நன்றி.
இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம் புலி அவர்கள் பேசும் பொழுது அனைவருக்கும் வணக்கம் சைக்கோ நடிச்சேன் இப்போ ட்ரெயின். இது தானு சார் படம் மிஷ்கின் படம் தானு சார் பாலா சார் தயாரிப்பில் நான் மாயாவி படம் இயக்கினேன். நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். மிஷ்கின் முதலில் கேமரா படித்தால் பிறகுதான் டைரக்ஷன் படித்தார். அடுத்ததாக நான்கு லட்சம் ரூபாய்க்கு துணி வாங்கி கொடுத்தார். நல்ல மனிதர் இவருடைய உயரத்திற்கு காரணம் அவர் நல்ல குணம். இந்த படத்தில் பணியாற்றியஅனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய தம்பி விஜய் சேதுபதிக்கு இது மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்.
நடிகை ஜனனி அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் வணக்கம் ஐயோ படம் நடிக்கும் பொழுதே என்னிடம் கூறினார் இந்த படத்தில் நடிக்க வைப்பேன் என்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது பயமாக இருந்தது இயக்குனர் அதை சரி செய்தார். படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன்.
நடிகர் நரேன் அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கினுடன் இது என்னுடைய நான்காவது படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்து திறமைகளும் உள்ளது. அவருடைய வெற்றி என்னுடைய வெற்றி மாதிரி. விஜய் சேதுபதி மாதிரி ஒரு நடிகர் தானு மாதிரி ஒரு தயாரிப்பாளர் மிஷ்கின் இந்த பயணத்தில் கடைசி நடிகர் நான் தான் மிஷ்கின் எப்பொழுதும் தெளிவான ஒருத்தர் அனைவருக்கும் நன்றி
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் அவர்கள் பேசும்பொழுது டிரெயின் பிரேம் எல்லா புதுமையாக இருக்கும். இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் ரொம்ப நன்றி சார்
நடிகர் அன்பு ராஜா அவர்கள் பேசும் பொழுது
இந்த படம் இந்திய மக்களுடைய மனசாட்சி ஆகவும், இந்தியா மக்களுடைய மேன்மைகளை பேசக்கூடிய மிக முக்கியமான படம். சேது அண்ணன் ரொம்ப அருமையா நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நடிகர் நாசர் அவர்கள் பேசும்பொழுது உண்மையாகவே ஒரு தந்தை மகனை பார்த்து சந்தோஷப்படுவது போல் எனக்கு இருக்கிறது. சில சமயம் இப்படி ஒரு மகன் பிறந்ததற்காக கோபமும் வருகிறது. இந்தப் படம் உருவாக உதவியாக இருந்த தானு அண்ணன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். ஏனென்றால் இந்த படம் வழக்கமான படங்கள் போன்று இல்லை. இந்தப் படத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பதற்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றி. மிஷ்கின் பற்றி பேசினால் பல மணி நேரம் பேசலாம் மேடை நாகரிகம் கருதி இப்பொழுது கூறுகிறேன் ஐ லவ் யூ மிஷ்கின். எனக்கு மிஸ்கியிடம் மிகவும் பிடித்தது அவருடைய ப்ரொபஷனலிசம். கதை எழுதி முடித்ததும் நான்கு பேரிடம் கொடுத்து படிக்க சொல்வார் அதில் நானும் ஒருவன். நிறம் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளது ஒன்று நடிகர்களுக்கான அழகான பாதை போட்டு வைத்திருப்பார் மற்றொன்று நம் விருப்பம் போல் நடிக்க வைப்பார். மிஷ்கின் கவிதைகளை கேட்டு மைக் கண்ணீர் விட்டது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத பிரேம் இந்த படத்தில் இருக்கும். எல்லாருக்கும் என்னுடைய நன்றி
இயக்குனர் மற்றும் நடிகர் யுகி சேதூ அவர்கள் பேசும்பொழுது தானு சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தானு தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் ஒருவர். இந்த ட்ரெயின் நல்ல ஓடும் மிக்க நன்றி சார். மிக சிறந்த தயாரிப்பாளர் நீங்க உங்களுக்கு ஆயுள் உயர்ந்த கட்டவுட் நாங்கள் வைக்க வேண்டும். நாசர் சுயசரிதை எழுத நான் தான் சரியான ஆள். நாசர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். என்னுடைய எல்லா படங்களிலும் நாசர் தான் கதாநாயகன். விஜய் சேதுபதி உடைய வெற்றிக்கு காரணமும் அவருடைய உழைப்பு தான். படிப்படியா முன்னுக்கு வந்தவர் கமலஹாசன் படியிலேயே முன்னுக்கு வந்தவர் ரஜினி. மிஷ்கின் என்னை சைக்கோ படம் நடிக்க சொன்னார் நான் மறுத்து விட்டேன். மீண்டும் இந்த படத்தில் நடிக்க சொன்னார் நான் ஏற்றுக் கொண்டேன். விஜய் சேதுபதி மிக சிறந்த நடிகர் மிகச்சிறந்த ஆளுமை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.
படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபௌசியா அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார்க்கு என்னுடைய முதல் நன்றி. முதலில் எனக்கு பயமாக இருந்தது பிறகு அதை மிஷ்கின் சரி செய்தார். இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு ஒளிப்பதிவாளரின் பெயரை பதிவு செய்த முதல் படம் இது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் உங்களுடைய படம் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. விஜய் சேதுபதி சார் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நீங்கள் நடிக்கும் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
இயக்குனர் தமிழரசு பச்சமுத்து அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி மிஷ்கின் சார். உங்களுக்கு ஒரு மனு மட்டும் வைத்துக் கொள்கிறேன் தயவு செய்து எங்களையும் படங்களை பாருங்கள்.
இயக்குனர் PS வினோத் ராஜ் அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் வணக்கம் எனக்கு விஜய் சேதுபதி மிஷ்கின் இவர்கள் இரண்டு பேரையும் சிறந்த மனிதர்களாக எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய் சேதுபதி என் மேல் ரொம்ப அக்கறையா இருப்பார். நான் தொடர்ந்து நன்றி சொல்ற மாதிரி மிஷ்கினிக்கும் மிக்க நன்றி இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்
இயக்குனர் ராம்குமார் பாலசுப்பிரமணியம் அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் சார் இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர பார்த்து வளர்ந்து தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன். இந்தப் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் சேதுபதி உங்கள பார்க்கவும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
இயக்குனர் மடோன் அஷ்வின் அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் ஒன்று கூறினார் இப்பொழுது படங்கள் நடிக்கிறேன் நிறைய சம்பாதிக்கிறேன் ஆனால் வருத்தமாக உள்ளது காரணம் என்னுடைய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் இப்பொழுது இவருடைய படைப்பு வெளிவர போகிறது எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் சேதுபதி அண்ணாக்கு என்னுடைய வாழ்த்துக்கள், படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
நடிகை மற்றும் பாடகி ஷ்ருதி ஹாசன் அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் கிரியேட்டிவ் மைண்ட் உள்ள ஒருத்தர். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்புக்கு நன்றி சார்.
இயக்குனர் அமீர் அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் இறைவன் இடத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட ஒருத்தர். எந்த விமர்சனத்தையும் கடந்து வருவார். எது செய்தாலும் அது என்னுடைய ஸ்டைல் என்று சொல்லுவார். நம்ம எல்லாரும் பாக்கியராஜ் பாரதிராஜா பாலச்சந்தர் படங்கள் எல்லாத்தையும் பார்த்து வளர்ந்திருக்கும் இவர் படம் ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணும் அப்படி தனக்கான ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணிக்குவார். என்னை கூப்பிட்டு போய் டான்ஸ் ஆட விட்டுட்டார். விஜய் சாராய விட்டுட்டு விஜய் சேதுபதி ரசிக்க வைத்தார். TR சார் க்கு பிறகு மிஷ்கின் தான். மிஷ்கின்ஒரு செல்ல கிறுக்கன் அவருக்கு எந்த விமர்சனம் பற்றியும் கவலை இல்லை போலி இல்லை. மிஷ்கினை நான் ரசித்துக்கொண்டே இருந்தேன். வாழ்த்துக்கள் மிஷ்கின். விஜய் சேதுபதி மாதிரி மரியாதையா பேசுவதற்கு இனை யாருமே இல்லை. விஜய் சேதுபதி படம் என்றாலே நம்பிக்கை. தானு மிகை படுத்தி சொல்ல மாட்டாரு. இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இயக்குனர் சசி அவர்கள் பேசும் பொழுது
இந்த படத்தை நான் பார்க்கப் மிக முக்கியமான காரணம் மிஸ்கின் உடைய இசை. மிஷ்கின் நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குவது வித்தியாசமா இருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது. தானு சார் இந்த படம் நீங்கள் நினைப்பது போல் வெற்றி படமாக அமையும்.
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அவர்கள் பேசும்பொழுது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பது விசில் சத்தம் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா நடக்கறதுக்கு காரணம் ரசிகர்கள் உங்களுடைய விசில் சத்தம். ரயிலர் பார்க்கும் பொழுது ஆங்கிலம் படம் பார்ப்பது போல் இருந்தது. ஒவ்வொரு மனிதனும் உள்ளே ஒரு மாதிரி வெளியே ஒரு மாதிரி இருப்பார்கள் ஆனால் மிஷ்கின் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பார். என்ன நினைக்கிறாரோ அதை தான் பேசுவார். கொஞ்சம் கூட தயக்கம் இருக்காது. நிஜமான மனிதனா நான் அவரை ரசிக்கிறேன். எம் ஆர் ராதாவும் மிஷ்கினும் ஒரே மாதிரியானவர்கள். விஜய் சேதுபதி பிலாசபி ஜிலேபி மாதிரி பேசுறீங்க. தோல்வி உங்களுக்கு சந்தோசமா இருக்கும் வெற்றி பயமா இருக்குனு சொன்னீங்க, இந்த படம் உங்களுக்கு மாபெரும் பயம் கொடுக்க போகுது அவ்வளவு பெரிய வெற்றி அடையப்போகுது இந்த படம். மிஷ்கின்க்கு நன்றி சொல்லணும் பவுசியா ஒளிப்பதிவாளரா தேர்ந்தெடுத்ததற்கு. தானுக்கு எனக்கும் நிறைய இருக்கு என்னுடைய முதல் கதை இவருக்கு தான் சொன்னேன். எல்லார்கிட்டயும் என்ன பத்தி இவர் டைரக்டரா வரப்போறாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பார், அந்த நன்றி கடனுக்காக தான் நான் வந்திருக்கிறேன். அந்த அளவு அன்பு உங்க மேல வச்சிருக்கேன். மிஷ்கின் பயணம் மிக நீண்டது அந்த பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் வாழ்த்துகள் மிஷ்கின் சார் இந்த படத்தில் நடிக்க அழைத்தேன் அவர் மறுத்துவிட்டார். சார் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார். நானும் ரவுடிதான் படம் இல்லன்னா நான் யாருன்னு யாருக்குமே தெரியாது. அந்த படத்திற்கு ஒரே காரணம் விஜய் சேதுபதி சார் மட்டும்தான். நான் போடா போடி படம் இயக்கிய போது எனக்கு கால் பண்ணி வாழ்த்துக்கள் கூறினார். இன்னைக்கு இயக்குனராக இருக்கிற பல பேர் விஜய் சேதுபதி னால தான் இயக்குனர் ஆகியிருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றி சார்.
இயக்குனர் ராம் அவர்கள் பேசும்பொழுது
ஒரு ஆறு வருடம் கழித்து மிஷ்கின் காக நடக்கிற ஒரு இசை வெளியீட்டு விழா. இந்த ஆறு வருஷத்துல இரண்டு படம் எடுத்து முடிச்சிட்டான். ஒரு இயக்குனர் எவ்ளோ கஷ்டப்படணுமோ அதை எல்லாமே அவர் பட்டு இருக்கிறார். இந்த ஆறு வருஷத்தில் அவருடைய அவமானங்கள் அவதூறுகள் எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்திருக்கேன். எல்லாத்தையும் தாங்கிக் கொண்ட ஒரு மனிதர். ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அத்தனையும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்துல தாக்கினால் காணாமல் போயிடுவார். மிஷ்கின் இடது கையில் தள்ளிவிட்டு நிற்கிறார். அது அவர் மனிதர்கள் மேலே வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கை. மிஷ்கின் படம் குற்றம் நம்பிக்கை இரண்டும் இருக்கும். தமிழ் சினிமாவின் திரில்லர் படத்தினுடைய தந்தை இவர்தான் நீங்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த உலகத்தில் நடக்கிற தீமைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கு. மிஷ்கின் கொலையை ரசித்து ரசித்து எடுப்பார் அவர் படத்தில் அவர்களுடைய நியாயம் புரிய வைக்கும். செத்துப் போவதற்கு காரணம் அவர்களாகவே இருப்பா இறுதியில் அவர்கள் மீது கருணை வரும் அதுதான் மிஸ்கின் உடைய மொத்த உலகம். விஜய் சேதுபதி நகைச்சுவை கதாபாத்திரங்களை மிக சிறப்பாக கையாளுகிறார், கமல் சாருக்கு பிறகு நல்ல கையாண்டு இருக்கிறார். அவருடைய படம் பார்க்கவும் ஆர்வமா இருக்கேன். தானு எல்லாத்துக்குமே ரெடியா இருக்கக் கூடிய புலி தான் ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் இசையமைப்பாளர் அதைப்பற்றி தான் பேசணும். அவர் எப்பொழுதும் புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார். மிஷ்கின்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிஷ்கின் உடைய ஸ்பெஷல் உங்களுக்குள்ளையும் ஒரு கிரேட் இருக்கும் அதை எதிர்பார்க்காத இடங்களில் காட்டுவார். எல்லா படங்களிலும் தொடர்ந்து அது இருக்கும். நாம் அவர் படங்களை பார்க்கும் போது அதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம். பெரிய திரைக்கதை எழுத்தாளர் அவருடைய படங்களுக்கு 100% உழைப்பை கொடுப்பார். தானு சார் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சேது என்னுடைய பயணங்களில் ஒரு அங்கமாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்ல ஒரு நல்ல மனிதர். மிஷ்கின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்,சேதுவும் அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ற செட்டு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எல்லாரும் என்ஜாய் பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் உருவாகிறது.
ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் விறுவிறுப்பான மற்றும் சிறப்பான கதை கொண்ட இப்படத்தை தயாரிக்க, எஸ். எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்துள்ளனர்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, இப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவில், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கு இடையேயான மகிழ்ச்சியான தருணங்களும், அன்பான பிணைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சங்களாகும். பின்னர் அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது.
அதன் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கருவாக அமைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் மனதிற்கு நெருக்கமான தருணங்களுடன் கூடிய இந்த டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஃபஹத் பாசிலின் திரை இருப்பும், அவரது கலகலப்பான திரை தோற்றமும் டீசருக்கு மிகுந்த ஆற்றலை சேர்க்கின்றன. அந்த அழகான சிறுமியும் தனது வசீகரமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். காள பைரவாவின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. மேலும் ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' ஒரு சிறந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார்.
இயக்குநராக ஏற்கனவே தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துள்ள ஷிவானி செந்தில், இந்தப் புதிய படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளது. சமீபத்தில் படத்தைப் பற்றிப் பேசிய நிமிஷா சஜயன், இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரான விதம், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தைப் பற்றிய தனது பார்வையை முழுமையாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
படத்தில் நடித்துள்ள அனுபவம் பற்றி நடிகை நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, "இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால், ’என்ன விலை’ திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள வழக்கு விசாரணைகளை இயக்குநர் சஜீவ் பழூர் நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் நேரில் பார்த்தபோது அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அந்த அனுபவமே, நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களைப் பேசும் விதத்தை மாற்றியது" என்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிமிஷா சஜயனும் சஜீவ் பழூரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக அறிமுகமான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்' திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். தற்போது 'என்ன விலை' படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இது குறித்து நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, ”நான் கதாநாயகியாக அறிமுகமான ’தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ படத்தின் கதையாசிரியர் சஜீவ் பழூர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி இயக்கிய ’என்ன விலை’ படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவருடைய எழுத்து மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. ஆனால், இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அவருடைய பார்வையையும் திறமையையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இந்த முக்கியமான பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது 'என்ன விலை' திரைப்படம். ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் பலர் கடலில் நாணயங்களை வீசும் பழக்கம் கொண்டவர்கள். கடலுக்குள் கிடக்கும் அந்த நாணயங்களை எடுக்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களே கதையின் மையமாகும். தன்மானம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தக் கதை, பின்னர் ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக மாறி, நாடு முழுவதும் கவனம் ஈர்க்கக்கூடிய நீதிமன்றத் தீர்ப்பை நோக்கிச் செல்கிறது.
நடிகர்கள்: இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'என்ன விலை' திரைப்படத்தை சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
சமூக அக்கறை கொண்ட கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள், மனித கண்ணியமும் நீதியும் பேசும் யதார்த்தமான திரைக்கதை 'என்ன விலை' திரைப்படம். நிமிஷா சஜயனுக்கு இந்தப் படத்தில் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் மற்றுமொரு முக்கியத்துவதும் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். மேலும், பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்களான கலைப்புலி எஸ். தாணு, கெளதம் வாசுதேவ் மேனன், கே.இ. ஞானவேல் ராஜா, என். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், டி. சிவா, எஸ். நந்தகோபால், ஸ்வரூப் ரெட்டி, பி. ஆறுமுககுமார், 7ஜி சிவா, ஏ.எல். அழகப்பன், எஸ். முருகானந்தம் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சஜித் குரேஷி திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். மேலும், தொழில், சட்டம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
சென்னையின் தொழில் மற்றும் திரைப்படத்துறையினருடன் லால்வானி குடும்பம் கொண்டுள்ள நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த திருமண வரவேற்பு விழா அமைந்தது. கலந்து கொண்ட விருந்தினர்கள், மணமக்கள் ஹர்ஷ் மற்றும் சந்தனாவின் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் லால்வானி குடும்பத்தினர் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,
“இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும் முன்பே நான் நடிப்பதாய் ஒத்துக்கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ‘அருவி’ படத்திலேயே அவருடைய ஒளிப்பதிவை மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். ‘அன்பே டயானா’ படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
நடிகை ரோஜா பேசியதாவது:-
“இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும்.
இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும், படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும், கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன் பேசியதாவது:-
“இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ‘அன்பே டயானா’ ஒரு சாதாரண காதல் படம் மட்டும் அல்ல; குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை என அனைவரையும் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கையுடன் பணியாற்றிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இந்தப் படத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்து இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.
‘அன்பே டயானா’ அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். நன்றி.”
எடிட்டர் பார்த்தா பேசியதாவது:-
“ இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றி.
நான் பாரி இளவழகனுடன் ‘ஜமா’ படத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள். இந்த மேடை, இந்த தருணம் எல்லாமே பல வருட கனவு என்று சொல்லலாம்.
‘ஜமா’ முடித்த பிறகு, ‘அன்பே டயானா’ படத்தின் ஒன்லைனை பாரி என்னிடம் முதன்முதலாக சொன்னபோதே மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், நாங்கள் இருவருமே பெரம்பூரைச் சேர்ந்தவர்கள். பெரம்பூரை மையமாக வைத்து ஒரு அழகான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.
அதன்பிறகு, இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்று சொன்னபோது இன்னும் அதிக நம்பிக்கை வந்தது. யுவராஜ் பிரதருக்கும், நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றி. இந்தக் கதை சரியான கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது என்று அப்போதே தோன்றியது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரம்யா, பரிதாபங்கள் கோபி, சேத்தன் சார் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் சங்கர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். அவருடைய இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு அழகாக படமாக்கியிருக்கிறார். அது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”
இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசியதாவது:-
இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பாரி முதன்முதலில் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோதே பெரம்பூரைப் பற்றி அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நான் சென்னை பையன். பெரம்பூருக்கு நிறைய முறை சென்றிருக்கிறேன். ICF-ல் பஸ் ஏறியிருக்கிறேன், 29C பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெரம்பூரை விவரித்த விதம், அது தனி உலகம் போல இருந்தது. அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருடைய கதை எனக்குள் உருவாக்கியது.
அந்தக் கதையை என் நண்பர்களிடமும் மிகவும் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறேன். அப்போதுதான், இந்தக் கதையின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தேன். அதனால், பட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே மூன்று, நான்கு முறை பெரம்பூருக்குச் சென்று, பாரி குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தேன். நமக்குத் தெரிந்த சென்னை நகரத்திலேயே, இதுவரை கவனிக்காமல் விட்ட ஒரு புதிய உலகத்தை கண்ட உணர்வு அது.
இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும், பாரி தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை மனிதர்களிடமிருந்து ஈர்க்கப்பட்டவை. அதனால்தான் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இசை, பின்னணி இசை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையான திருப்தியுடன் வேலை செய்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்ல, படம் பார்த்த ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய யுவராஜ், நரேன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினர், ஷார்ஜன், விவேக் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அதேபோல் பாரி, எடிட்டர் பார்த்தா, ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆகியோருக்கும் சிறப்பு நன்றி. அவர்களுடைய பணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
ரம்யா, சேத்தன் சார், ரோஜா மேம், கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.
இந்தப் படத்தில் பணியாற்றி முடித்தபோது எனக்கு ஒரு நிறைவான, மனநிறைவான உணர்வு ஏற்பட்டது. அதே உணர்வை படம் பார்க்கும் ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இப்போது நீங்கள் கேட்டிருக்கும் பாடல்கள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னும் இந்தப் படத்தில் நிறைய சோல்ஃபுல் பாடல்களும், இசை தருணங்களும் உங்களை காத்திருக்கின்றன. அவை வெளியாகும்போது ‘அன்பே டயானா’ இசையின் முழு வலிமையையும் நீங்கள் உணர்வீர்கள். நன்றி.”
சிறப்பு விருந்தினர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. பாரி இளவழகனின் பயணத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர். சினிமா மீது இருக்கும் காதலும், விடாமுயற்சியும் தான் இன்று அவரை இந்த மேடைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதில் இருக்கும் உணர்வுகளும், கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருந்தன. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. ‘அருவி’ படத்தில் அவரது பணியை ரசித்தது போலவே, இந்தப் படத்திலும் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷன், பப்ளிசிட்டி டிசைன், டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழுவின் அக்கறை தெரிகிறது. அதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
‘அன்பே டயானா’ ரசிகர்களின் மனதை கவரும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
நடிகர் சேத்தன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, ‘நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’ என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.
ஆனால், முழுக் கதையையும் கேட்ட பிறகு, ‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை; தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார்.
என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
அதேபோல், அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பாரி மட்டுமல்ல, ரம்யா, கோபி, பரத் ஆகியோருக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக அமையும். பரத் ஏற்கனவே நல்ல உயரத்தில் இருக்கிறார்; இன்னும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம், சரவணன் சார், யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார், சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.”
சிறப்பு விருந்தினர் நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது..,
“சேத்தன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். திரையில் அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார். நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.
இயக்குநர் பாரியை பார்க்கும்போது, சினிமா மீது இருக்கும் அவரது காதலும், அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும், புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள். அவர் இந்தப் பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படம் ரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். நன்றி.”
இயக்குநர், தயாரிப்பாளர் சரவணன் பேசியதாவது..
“அனைவருக்கும் வணக்கம். நான் எப்படி தயாரிப்பாளர் என பலரும் கேட்டார்கள் அது யுவராஜ் கணேசனால் நடந்தது. நான் பணம் எல்லாம் போடவில்லை, பாரி மீதான அன்பில் இந்த குழு மீதான அன்பில் இணைந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு அழகான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளையும், தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘அன்பே டயானா’வும் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை மிகுந்த அன்புடனும் நேர்மையுடனும் உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் உழைப்பும் டிரெய்லரிலேயே தெரிகிறது. இந்த விழாவிற்கு எனக்காக வந்ததற்கு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சாருக்கு நன்றி.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் மேடையில் அதிகமாக பேச மாட்டேன். ஆனால் இந்த மேடையில் எப்படியாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நினைத்துத்தான் வந்திருக்கிறேன்.
ஒரு சிறிய கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு இளைஞன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். வேலை இல்லை, வீடு இல்லை, எதுவுமே இல்லை. தினமும் ரயில் நிலையத்தில் அமர்ந்து, தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒருநாள் ஒரு வயதான பாட்டி அவனிடம் வந்து, ‘இந்த டீயை குடி’ என்று கொடுக்கிறார். ‘என்னிடம் பணம் இல்லை’ என்று அவன் சொன்னபோது, ‘நான் உன்னிடம் பணம் கேட்கவில்லை. நீ தனியாக இல்லை என்பதை உணர்த்தத்தான் இந்த டீயை வாங்கிக் கொடுத்தேன்’ என்று அந்தப் பாட்டி சொல்கிறார்.
அவன் அந்த டீயை குடிக்கிறான். அதன் சூடு உடம்பை மட்டும் அல்ல, மனதையும் தொட்டது. மறுநாள் அந்தப் பாட்டியைத் தேடுகிறான். அதற்குப் பிறகும் தேடுகிறான். ஆனால் அவர் வரவில்லை. ஆனாலும், அந்த டீயின் சூடு மட்டும் அவனுடன் இருந்துகொண்டே இருந்தது. ‘நீ தனியாக இல்லை… உனக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை அது அவனுக்குக் கொடுத்தது.
என்னுடைய வாழ்க்கையிலும் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக சரவணன் சாருக்கு மிகவும் நன்றி. பல நேரங்களில் நான் தடுமாறியபோது, எனக்கு துணையாக இருந்தவர் அவர். அவர் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.
என்னுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
சரவணன் சார் எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு, சுற்றியிருந்த சூழலே பாஸிடிவாக மாறியது என்று நான் நம்புகிறேன். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு நல்ல ஆற்றல் இருக்கும்.
‘அன்பே டயானா’ எங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நன்றி.”
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
முதலில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர். ‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், யுவராஜ், நரேன், ஷார்ஜன், மணி, நாகராஜ் சார், விவேக் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப் படத்திலும் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment, ஆதிகா ப்ரோ, சரவணன் சார், ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி சார் மிகவும் திறமையானவர். அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர், தொழில்முறை அணுகுமுறை கொண்டவர். பெரம்பூரை அவர் திரையில் பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் முதல் காட்சிகள் வெளியானபோதே அந்த விஷுவல்ஸை அனைவரும் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பரத் சங்கர் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும். அவருடைய பணி உண்மையிலேயே மாயாஜாலம் போல இருக்கிறது.
ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
சேத்தன் சார், பரிதாபங்கள் கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக கடினமாக உழைத்து வரும் PRO குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றி. குறிப்பாக வெங்கட் ரமணன் சார் மற்றும் அவருடைய குழுவினர் புதுமையான யோசனைகளுடன் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும்.
‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம்.
இந்த மேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
முதலில் யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.
குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு, தினேஷ், ராஜன் மற்றும் முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.
சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.
என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.
சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.
இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசிவிட்டார்கள். அதற்கு நான் தகுதியானவனாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி.”
‘அன்பே டயானா’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும்.
இயக்குநர் சசிகுமார் பேசியதாவது..,
“நான் நன்றி சொல்ல வரவில்லை… வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள். அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
என்னுடைய நண்பர் சரவணன், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார். இந்தப் படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும், தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி. ‘ஜமா’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. அந்தப் படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார். இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான், இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.












