பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து, இந்தியாவின் நம்பர் 1 உள்ளாடை நிறுவனமான ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை நடிகை மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
அவர் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது மட்டுமின்றி, வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே பேசினார். வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பல்வேறு வகையான உள்ளாடைகள், ஷேப்வேர், ஸ்லீப்வேர், லவுஞ்ச்வேர் மற்றும் விளையாட்டு உடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்பது நமக்கான வசதியில் இருந்தே தொடங்குகிறது. அதில் நமது உள்ளாடைகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குப் பொருத்தமான, அழகான மற்றும் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை அளிக்கும் உள்ளாடைகளை வழங்குவதை ஜிவாமே இன்னும் எளிதாக்குகிறது என்று பேசினார்.
ஜிவாமே மார்க்கெட்டிங் தலைவர் தமன் பாலி பேசுகையில், "இந்தியப் பெண்கள், அவர்களின் தினசரி வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் முக்கியமான தருணங்களுக்கு ஏற்ப எங்களின் உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் பொங்கல் பண்டிகை என்பது எல்லோரும் ஒன்றுகூடும் நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பெண்களுடன் இணைந்து கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நேரடி அனுபவங்கள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதோடு வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குத் தேவையான புதிய உள்ளாடைகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சி ஜிவாமேவின் தயாரிப்புகள் பற்றிய கொள்கையை அனைவரின் கண்முன்னே கொண்டுவந்தது. இந்தியப் பெண்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில், சிறந்த சிந்தனையுடன் கூடிய வடிவமைப்பும் புதுமையும் எவ்வாறு இணைகின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது. தயாரிப்பு நிபுணர்களின் நேரடி விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதிலும், அவர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்யும் சூழலை ஏற்படுத்தியது.
இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர். கலாச்சாரத்தோடு கூடிய சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்ற ஜிவாமேயின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது. அதே நேரத்தில், முக்கிய நகரங்களில் தங்கள் பிராண்டை பெரும்பாலான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்தியது.
விரைவில் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ துவங்கவுள்ள நிலையில், உள்ளாடைகள் குறித்த பழைய கண்ணோட்டங்களை மாற்றுவதை ஜிவாமே தொடர்கிறது. பெண்களுக்கான வசதி, தன்னம்பிக்கை மற்றும் அவர்களுக்கானத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு இது முன்னுரிமை அளிக்கிறது. சிறந்த வடிவமைப்புகள் மற்றும் பிரபலமானவர்களின் ஆதரவு மூலம், பெண்கள் உள்ளாடைகளைத் தயக்கமின்றி நம்பிக்கையுடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்பதை ஜிவாமே இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
About Zivame: Founded in 2011, Zivame has built a category-first model that seamlessly blends deep consumer insights with innovation, technology, and trend-driven design—all while keeping women’s comfort at its core. Come 2025, with a portfolio of over 30,000 styles across lingerie, sleepwear, shapewear, and activewear and more—in 100+ sizes—and a strong retail footprint of 170+ exclusive brand outlets across India, the brand is not just a retailer, but a trusted destination for women across age groups and geographies.Since its inception, Zivame has consistently been at the forefront of innovation—from launching India’s first online FitCode to running breakthrough campaigns like Museum of Boobs. By combining tech-enabled solutions with deep consumer insight, Zivame has redefined intimatewear retail in India and built one of the most influential fashion-retail ecosystems in the country.
ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடிக்க இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ்.S, காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு, ரவி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
B. பாலாஜி & நவீன்குமார் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உதவியாளராக பணியாற்றிய சதாசிவ ஜெயராமன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரியன், பித்தன் வெங்கட்ராஜ், பூவிழி மூவரும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
பிரபல கலை இயக்குனர் V.K.நட்ராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாலுமகேந்திரா பட்டறையின் மாணவர் நவீன்குமார் எடிட்டிங் செய்துள்ளார். வி.தனசேரன் கதை விவாதம் மற்றும் CG பணிகளை மேற்கொண்டுள்ளார். அருண்கார்த்திக் நடனம் அமைக்க, பிரவீன், ரஞ்சித் இருவரும் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் - ஜே ஆர் சினி வேர்ஸ்
தயாரிப்பு - ஜெயபால் சுவாமிநாதன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக்.
இவர் ஜிவி பிரகாஷ் நடித்து சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் அனைவரையும் மிரட்டிய மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் இயக்குனர் பயர் கார்த்திக் பேசியதாவது...
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்கியுள்ளோம்.
உதவி இயக்குநராக இருக்கும் கதையின் நாயகனும்,அவன் நண்பர்களும் சென்னையில் இருந்து பாலக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாங்குவதற்காக, அதன் மதிப்பை சரி பார்க்க நேரில் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்க அதிலிருந்து எப்படி தப்பித்தார்களா, அவர்களுக்கும், அந்த வீட்டில் இருந்தவர்களும் என்ன நடந்தது? என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.
பாலக்காட்டில் உள்ள ஒரு வீடு மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது அந்த வீட்டின் நம்பர் 24. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில் நடப்பதால் ஜமீனுடைய பெயரையும் வீட்டின் எண்ணையும் இணைத்து இந்த படத்திற்கு " M G 24 " என்று பெயர் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் பயர் கார்த்திக்
படப்பிடிப்பு சென்னை,பாலக்காடு, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
படம் வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருப்பதால் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குவினர் தெரிவித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு 'பாகுபலி'. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.
மும்பை எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் சகோதரர் மோகன், "என் அண்ணன் தான் இந்த படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார், அதன் பிறகு படத்திற்கு வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார். நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
எடிட்டர் தேவராஜ், "இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.
கலை இயக்குநர் கமல், “நாங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களை கதையில் கொண்டு வந்து பிரம்மாண்டமாக இயக்குநர் எடுத்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர், “இந்த வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ‘திரெளபதி2’ மூலம் வந்திருக்கிறேன். நன்றி”.
வசனகர்த்தா பத்மா சந்திரசேகர், “கதைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் கொஞ்சம் குழப்பமான காலக்கட்டம். அதற்கு முன்பும் பல போர்கள் நடந்திருந்தாலும் நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தது இந்த காலக்கட்டத்தில்தான். இதில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் என் வசனத்தை பேசிய நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி”.
நடன அமைப்பாளர் தணிகா டோனி, “இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படம் என்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் சென்றேன். ஆனால், இயக்குநர் மிகவும் ஆதரவு கொடுத்தார். அனைவருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் செல்வ மீரா, “எம் கோனே பாடலுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. பாடலுக்கு கிடைத்த அதே ஆதரவு படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
’வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார், “என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.
நடிகை ஜெயந்தி மாலா, “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. வெற்றி பெற போகும் இந்த படத்தில் நான் விருதாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எல்லோருமே அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.
நடிகர் கணேஷ், “மோகன் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுபோன்ற படம் வருவது அரிதானது. அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி”.
நடிகர் ஆல்பர்ட், “படத்தில் எனக்கு முக்கியமான ராஜா கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் சேர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கஷ்டப்பட்ட மேக்கப் மேனுக்கும் நன்றி. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.
நடிகர் மாருதி, “இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி சார்தான். இந்தக் கதையை எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனை நம்பிக்கையோடு மோகன் ஜி எடுத்துள்ளார். மும்பையில் பல பெரிய படங்கள் எடுத்த ஸ்டுடியோவில்தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. சிஜி இந்தப் படத்தில் அதிகம் இருக்காது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில்தான் எடுத்திருக்கிறோம். செட் வொர்க்கும் அற்புதமாக வந்துள்ளது. விஎஃப்எக்ஸ் பணியும் அற்புதம். படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். படம் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்”.
நடிகர் அருணோதயன், “இந்தப் படத்திற்கு மோகன் ஜி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனைவரின் உடல் மற்றும் மனதை புரொடக்ஷன்ஸ் நிறைவாக வைத்திருந்தது. என்னை ஸ்டண்ட் செய்ய வைத்த இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. ரிச்சர்ட் சார் மிக எளிமையாக நடந்து கொண்டார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
நடிகர் தினேஷ் லம்பா, “இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் சொந்தமானது. படம் நன்றாக வந்துள்ளது”.
நடிகர் பரணி, “வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. என்னை வேறொரு ஜானரில் மோகன் ஜி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை எல்லோரும் பெரிதாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன். மோகன் ஜியின் கடுமையான உழைப்பிற்காகவே படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். நன்றி”.
நடிகை திவி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி”.
நடிகை தேவயாணி ஷர்மா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. நான் மும்பையில் இருந்து வருகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள்”.
இயக்குநர் சரவண சுப்பையா, “மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன். கடுமையான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார். உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. எல்லோரும் கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளனர். வாழ்த்துக்கள்”.
நடிகர் சிராக் ஜானி, “தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப் படம் தொடர்புடையது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார். தமிழ்நாடு என்பது பண்பாடு, அடையாளம், மண்ணுடைய வீரம், வரலாறு, அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது. இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன். ரிச்சர்ட் சாருக்கு நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது” என்றார்.
இயக்குநர் முத்தையா, “’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம். பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் படம் பிடித்தமானதாக வர வாழ்த்துக்கள். நன்றி”.
நடிகர் வேல ராமமூர்த்தி, “மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அது கொரோனா நேரம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திர படம் இது. துணிச்சலாக சரித்திர வரலாற்று படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார். பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல். திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திர கதை இது. ‘திரெளபதி2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் நட்டி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தக் கதை மூலமாக வரலாற்றை தெரிந்து கொண்டேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை. படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள். ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நன்றி”.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ”ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்த நேரம் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது. அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது. தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய புது அனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி. ’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு நன்றி”.
நடிகை ரக்ஷனா இந்துசூடன், “நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை ‘திரெளபதி2’ படத்தில் எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்த கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது. என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதை விட்டு வெளியே போவதும் எனக்கு கடினமான ஒன்றாகதான் இருந்தது. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன். இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளை தாண்டி பொங்கலுக்கு தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை”.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி, “இந்தப் படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடின உழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி, “பல வருடங்களாக கதை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார். 31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கும் நன்றி”.
இயக்குநர் மோகன் ஜி, “பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி சார், தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்த சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது. அதை பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாக படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது. என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,
எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன், என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
நடிகர் GM சுந்தர் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றி பேச எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர் சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர். கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம். எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான் அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும். கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். கிருத்தி ஷெட்டி வெல்கம் டு தமிழ் சினிமா. நான் ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர் ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.
நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,
முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில் இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி. எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும், அதனால் இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல் சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும். புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை. ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது, பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார். இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.
நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,
ஒரு பேட்டியில் நலன் சார் ஒரே விஷயத்தை *“இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”*என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக இருந்தாலும், அதை அவரைவிட சிறப்பாக யாராலும் செய்ய முடியாது. கார்த்தி மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது, விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார் இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
கடந்த வருடம், பெரிய செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது. அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள் நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது
ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ் ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ், எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.
எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது. வன்முறையும், பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
கவிஞர் வெயில் பேசுகையில்,
'' ஜூனியர் விகடன் இதழில் 'ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்' என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ... அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்து பேசினார். அந்த சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களை குறிப்பிட்டார்.
அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். அந்த சம்பவத்தை... அவர் சொன்ன விதத்தை... பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன். அப்போது அவர், 'நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே... எப்படி தொடரை எழுத முடியும்' என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு பத்திரிக்கையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும். ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும். களத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடு குறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார். அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது. அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.
ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கிய பயிற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.
சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. இதன் காரணமாக கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.
இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் என சொல்ல... அதனை தமிழில் 'சங்காரம்' என பாரதி தாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாக தேர்வு செய்தோம். சங்காரம் என்ற ஒரு சொல் ... அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.
ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதி கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பார்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்.. குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை. குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளை தான் பார்ப்பேன்.
அதில் 'மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ... அப்போதே குற்றம் பிறக்கிறது' என்றிருக்கும்.
பாலியல் குற்றமும், அதிகாரத்தை கைப்பற்றும் குணமும் தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன்.
இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவி கிடக்கிறது.
டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள் ....அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள்--- அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் --- விசுவாசிகள்... உறவினர்கள்... இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி.... இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விட வேண்டும் என நினைத்து செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி... இதற்குள்
நிகழும் சம்பவங்கள் தான் இந்த நாவலின் கதை.
இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும்.. இதில் மனித உணர்வுகளுக்கும் , அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நிறைய உணர்ச்சிகளை பற்றி பேசி இருக்கிறார். இதில் சமூகத்தை உலுக்கி கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையை பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.
வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலின் காமமும் , ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும். காமம், வன்மம் எனும் இரு பிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.
ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சம நிகராக புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் தான் காமத்தை கண்ணியமாக எழுத இயலும். அந்த வகையில் இரா. சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.
இந்த நாவலில் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார். இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்த பின் மரிக்கொழுந்து வாசம் தான் வீசும். அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அத்துடன் இந்த கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பை செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது. இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும் போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம். இந்த சங்காரம் தொடரும். இது முடிவுறாத மானுட கதையாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.
திரு. கலைச்செல்வன் பேசுகையில்,
'' பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை. அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.
சரவணன்- இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர். அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்'' என்றார்
திரு. முருகன் பேசுகையில்,
'' சரவணன் கட்டுரை எழுதும் போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும். அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல. ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களை படிக்க வைப்பது என்பது எளிதான விசயம் அல்ல. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கதை சொல்லும் போது அது சுவைபட இருக்கும்.
சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.
இந்தக் கதையில் சூரியையும், மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.
இந்தக் கதை வன்முறை நிரந்த கதை என்பதை மேலோட்டமாக பார்த்தால் சொல்லலாம். அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ... அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானது தான்.
இந்தக் கதை சினிமாவாகவோ இணைய தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும். இது போன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,
'' சரவணனை பத்திரிக்கையாளராக தெரியும். எழுத்தாளராக தெரியும். இயக்குநராகவும் தெரியும். அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போது தான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும், காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதை பார்த்தேன். சினிமாவாக உருவாகும் போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை. நாவலில் இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம். இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்த தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்,
''புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் விடுதலை சிந்தனை கொண்ட எழுத்தாளரும், இயக்குநரும் , சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரவணிடமிருந்து இது போன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியேத் தவிர ஆச்சரியம் இல்லை. மனிதர்களை காதலிக்க கூடிய ஒரு கலைஞனுக்கு அதே மனிதர்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களை செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.
இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை. இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்த கதையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.
'எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பூ பூக்கத் தான் செய்யும்' என பிரபஞ்சன் குறிப்பிட்டதை போல்... ' தலையை காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில் ..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாக தான் நான் பார்க்கிறேன்.
அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தை குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்.. படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது'' என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில்,
'' இந்த விழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்... இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.
இந்த தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்.. 'கதை முழுவதும் ரத்தம் தான்' என சொல்வார். டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரை பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? என கேட்டேன். அவர் ஆமாம் என தலையாட்டினார்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம்.'' என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்,
'' நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன். சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என சொன்னார். எப்போது? எனக் கேட்டேன். 'நாளை' என்றார். யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என கேட்டேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் என சொன்னார். . நான் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன். நீங்கள் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றார். புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் என சொன்னார். அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்க வா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டேன். விழாவிற்கு வாருங்கள் என சொன்னார்.
விழாவிற்காக கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தைையாவது படித்துவிட்டு செல்லுங்கள் என சொன்னார். ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன். அது 43 வது பகுதி. மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை.. கட்டுக்கடதங்காத காதலை.. அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாக பார்ப்பது போல் ஆகிவிட்டது. அவரது எழுத்து நடையை வாசிக்கும் போது உருவம் தெரிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.
அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தை படித்து விட்டாயா? என கேட்டால்... என்ன பதில் சொல்வது?
என்னை பொருத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்து விட்டேன். நான் ஏன் அடிக்கடி புத்தகத்தை பார்த்தேன் என்றால் இந்த புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்தேன். சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாக்கி போய்விடும் அல்லவா..!
புத்தகம் சாதாரண விசயம் அல்ல. பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள் தான். எழுத்துகள் தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகத்திற்கு தேவையான பல நல்ல விசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது. எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.
இப்போதுதான் புத்தகத்தின் அருமையை தெரிந்து கொண்டிருக்கிறேன். :மாமன்' படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையை பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.
இரா. சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய எழுத்தில் உருவான இந்த புத்தகம் விரைவில் திரைப்படமாக உருவாகும் என நான் நம்புகிறேன்'' என்றார்.
திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில்,
'' என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன் இலக்கியவாதியாக அறிமுகமாகி இன்றுவரை நட்பை தொடரும் இரா சரவணன் எழுதிய சங்காரம் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் புத்தகத்தை என்னுடைய இரண்டு நாள் பயணத்தின் போது கிடைத்த ஓய்வு நேரங்களில் ஓரளவு வாசித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.
இந்த நாவல் நாவலின் மையப்புள்ளி ... கதைக்களம் என்ன? கதை மாந்தர்கள் ஊடாக தொட்டுச்செல்லும் பாதை என்ன? இதைப் பற்றி எல்லாம் எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
சரவணன் இலக்கியவாதியாக உருவெடுத்து விடுவார் என கவிஞர் வெயில் குறிப்பிட்டார். அதற்கான அத்தனை அடையாளங்களும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சரவணனிடம் இருந்தன.
என்னுடைய எல்லா எழுத்துக்கும் முதல் விமர்சனம் சரவணனிடம் இருந்து தான் வரும். அவருடைய பாராட்டு எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.
இலக்கியத்தில் உள்ள படைப்புகளில் கருப்பொருள் என்ன என்றால்... எப்போதும் அது சாமானிய மனிதனாகத்தான் இருக்கும்.
இந்த நாவலில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் குறிப்பாக கீரை துறை என மதுரையில் உள்ள பகுதியில் பகுதியைச் சார்ந்த சம்மணச்சி எனும் கதாபாத்திரம் அதாவது மார்ட்டினின் தாய் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது .அதேபோல் அனைவருக்கும் பிடித்த மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது.
மார்ட்டினும், அவரது தாயாரும் உரையாடும் உரையாடல் என்னை கவர்ந்திருந்தது.
சூரி- குற்ற உலகத்தில் இருந்து விலகி இருப்பதற்காக பட்டினி இருக்கும் விசயம் குறித்து பேசுவதும் என்னைக் கவர்ந்தது.
இந்த நாவலில் கதை மாந்தர்கள் பேசும் பல விசயங்களை என்னுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன்.
நான் மிகவும் மதிக்கின்ற அமெரிக்க நாவலாசிரியரான திம்மோ பிரெய்ன் ஒரு ராணுவ வீரராக வியட்நாமில் தன் வாழ்க்கையை கழித்தவர். அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் போர் பற்றிய உண்மை சம்பவங்களாகத்தான் இருக்கும். 'கதைகளால் நம்மை காப்பாற்ற இயலும்' என ஒரு மேற்கோளை அவர் அடிக்கடி குறிப்பிடுவார். இந்த நாவலை வாசிக்கும் போதும் அந்த உணர்வு ஏற்பட்டது.
நான் வாசித்த வரை இந்த நூல் பெண்களைப் பற்றிய கதை தான். பெண்கள் என்றால் சூழலுக்கு பலியாகிய பெண்கள். இவர்களின் வாழ்வியல் இருந்து என்னால் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
இந்த நாவலின் கதை அரசியல் - காவல்துறை - குற்ற பின்புலம் - இதனை சுற்றி தான் பின்னப்பட்டிருக்கிறது. இதில் எம்முடைய எளிய அறம் சார்ந்த வாழ்க்கையை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் இதில் எழுத்தாளரின் கிராஃப்ட்டும், கன்டென்டும் கரெக்டா செல்கிறது என புரிந்து கொண்டேன். இதற்காக சரவணனுக்கு என்னுடைய அன்பான பாராட்டுக்கள்.
'அருவா மனையும் ஒரு ஆம்பள போல..' என்ற ஒரு பெண்ணின் சொல்லாடலை கடந்து செல்ல எனக்கு வெகுநேரமானது.
லியோ டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு ' என்ற நாவலில் இடம்பெறும் மாஸ்லாவா எனும் கதாபாத்திரத்தை.. மரிக்கொழுந்து நினைவு படுத்தினாள்.
எல்லா வகையான கதாபாத்திரங்களையும் இடம்பெறச் செய்து வாசிப்பவர்களுக்கு அவர்களுடன் இணைந்து பயணிக்க வைக்கும் வகையில் ஒரு புதினம் இருப்பது தான் ஒரு புதினத்தின் மிகப்பெரிய வெற்றி என நான் கருதுவேன்.
இதில் நிறைய கிளைக் கதைகள் இருக்கிறது. அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணமும், நிறமும் இருக்கிறது.
இது உங்களுடைய முதல் நாவல் என்றார்கள். தொடர்ந்து எழுதுங்கள் என நான் கேட்க மாட்டேன். ஏனென்றால் இது சிறந்தது. இது ஒன்றே உங்களது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில்,
'' 2010 ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவின்போது இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன் அருகே அமர்ந்தேன். அதன் பிறகு இன்று தான் அவருடன் ஒன்றாக மேடையில் இருக்கிறேன். அந்த மேடையிலும் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஏராளமான குறிப்புகளுடன் பேசுவதற்கு தயாராக இருந்தார். இன்றும் அவர் புத்தகத்தில் நிறைய குறிப்புகளை வைத்து பேசுதற்கு தயாராக இருந்தார். அன்று அவரிடம் இருந்து ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். நான் இந்த முறை சங்காரம் புத்தகத்தை முழுமையாக படித்து விட்டேன்.
சரவணன் என் நண்பர் மட்டுமல்ல. அவர் தனக்காக எதுவும் எப்போதும் கேட்டதில்லை. அவரை 2010 ஆம் ஆண்டில் தான் சந்தித்தேன். அன்று அறிமுகமான நட்பு இன்று வரை தொடர்கிறது. எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னுடன் தோளுக்கு தோளாக நின்று உதவுபவர். நான் மனதளவில் உடைந்து போயிருந்த போது ஆறுதல் சொல்லி தேற்றியவர் சரவணன்.
சங்காரம் நாவலை படித்த பிறகு இது நன்றாக இருக்கிறது இதை திரைப்படமாக உருவாக்குவோம். இந்த கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் இதில் சூரி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்திற்கு சூரி என்றே பெயர் வைத்திருக்கிறேன் என்றார். நிச்சயமாக இந்த நாவல் திரைப்படமாக உருவான மிகப்பெரிய வெற்றியை பெறும். சுப்பிரமணியபுரம் படத்தை போல் இந்த சங்காரம் நாவலும் படமாக உருவாகி வெற்றி பெறும். என்னைப் பொறுத்தவரை சங்காரம் நாவலை ஒரு திரைக்கதை புத்தகமாக தான் நான் பார்க்கிறேன்.
இந்த சங்காரம் நாவலை படித்தவுடன் சூரி - மார்ட்டினுக்கு என்ன ஆச்சு? மரிக்கொழுந்துக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி.. எல்லார் மனதிலும் எழும்'' என்றார்.
எழுத்தாளர் இரா சரவணன் பேசுகையில்,
'' இந்த புத்தக வெளியீட்டு விழா வேண்டாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய நண்பரும் நடிகருமான 'சசிகுமார் இப்படி ஒரு விழா வேண்டும். சங்காரம் பெரிய அளவில் பேசப்படுவதற்கு ஒரு விழாவை முன்னெடுக்க வேண்டும்' என வலிந்து சொன்னதால் இதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு இந்த விழாவை என்னுடைய நண்பரும் பத்திரிக்கையாளருமான கலைச்செல்வனுக்கான விழாவாக முன்னெடுப்போம் என நானும் கூற இப்போது இந்த விழா நடைபெறுகிறது.
பிரபலமான வார இதழின் ஆசிரியராக இருந்தாலும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நேரில் சந்திப்பதை தவிர்ப்பதுடன் மட்டுமல்லாமல் பேசுவதையும் குறைத்து நிதானமாக பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர் கலைச்செல்வன் இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தி பேசியதை நான் வெற்றியாக கருதுகிறேன்.
நக்கீரன் கோபால் கலந்து கொண்டால் அது குடும்ப விழா தான்.
நான் விகடனை விட்டு வெளியேறுகிறேன் என்றால் பத்திரிக்கை துறையில் இருந்து வெளியேறுகிறேன் என்பதுதான் உண்மை என அங்கிருந்து பணியாற்றி விடைபெற்ற இறுதி நாளன்று தெரிவித்தேன். என்னுடைய எல்லாவற்றுக்கும் விகடன் தான் உரம்.
ஆனால் திரை விழா எனும் நிகழ்வின் நக்கீரன் கோபாலை சந்தித்த பிறகு அவசரப்பட்டு வாக்குறுதி வழங்கி விட்டோமோ..! என எண்ணி இருக்கிறேன். அந்த அளவிற்கு நக்கீரன் கோபால் என்னை ஈர்த்தார். அதனால் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அவரை மட்டும் நான் நேரில் சென்று அழைப்பு விடுத்தேன்.
ஒரு சிறுகதை கூட எழுதாத என்னை நிர்பந்தத்தின் பெயரில் ஒரு தொடர்கதை எழுத வைத்த நண்பர் கலைச்செல்வன், வெயில் மற்றும் வேலுக்கும் இந்த தருணத்தில் நன்றி.
2025 எனக்கு மிகக் கடுமையான போராட்டங்களையும், சங்கடங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தது. இதிலிருந்து என்னை மீட்டு இந்த விழா மேடை வரை இழுத்து வந்தது நண்பர் வெயிலின் அறிவுரை தான். இதற்கு மாற்றாக இந்த 2025 தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு சிறந்த நண்பனாக மாற்றி இருக்கிறது.
இந்த நாவலின் முகப்புரையில் 'சமர்ப்பணம் என் மரிக்கொழுந்து' என இருக்கும். இதைப் பார்த்த வாசகர்கள் பலரும் என்னிடம் யார் அந்த மரிக்கொழுந்து? என கேட்டனர். அது இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் மட்டும்தான்.
சங்காரத்தை எழுதத் தூண்டியது ஒரே ஒரு சம்பவம் தான் . அதனை எழுத்தாளர் வெயில் குறிப்பிட்ட சம்பவம் தான். அந்த சம்பவத்தை நிகழ்த்திய ஒரு இளைஞன் என்னுடைய நண்பர் தான் அவர்தான் அதனை விவரித்தார். நாங்கள் ஆறு பேர் ஒருவனை வெட்டி வீழ்த்துவதற்காக கையில் அருவாளுடன் அவனை விரட்டி சென்று கொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருந்தவன் ஒரு இடத்தில் யு டேர்ன் போட்டு எங்களை எதிர்த்து நின்று விட்டான். நாங்கள் பயந்து விட்டோம் இதுபோல் ஓடிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திடீரென்று எதிர்த்து நிற்பதில்லை. அவன் நின்றதால் நாங்கள் பயந்தோம். அப்போது அந்த இளைஞன் என்னை கொலை செய்யாதீர்கள் என்று கெஞ்ச போவதில்லை. உங்களிடமிருந்து தப்பிக்கவும் முடியாது. தாராளமாக வெட்டுங்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் யார்? நான் உங்களை பார்க்கவே இதற்கு முன் பார்க்கவே இல்லை. என்னை கொலை செய்ய சொன்னது யார்? எனக் கேட்டான். கேட்கும் தருணத்தில் அவன் மீது அருவாள் வெட்டு விழுகிறது. அவன் இறந்து போகிறான். அந்த இளைஞரிடம் அவன் சாவதற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கலாமே? எனக் கேட்டேன். அப்போது அந்த இளைஞன் எனக்குத் தெரியாதே என பதில் அளித்தார். சாகிறவனுக்கு எதற்காக சாகிறோம் என்று தெரிவதில்லை. கொல்பவனுக்கு ஏன் கொல்கிறோம்? என்றும் தெரியாது. கூலிக்கு வேலை செய்வது போல் கூலிக்கு கொலை செய்கிறார்கள். இந்த கொடூரம் இந்த அளவிற்கு இந்த மண்ணில் பரவி இருக்கிறது. இது ஆபத்தானது. இந்த ஆபத்தை மக்களுக்கு புரிய வேண்டும் என நினைத்தேன்.
குறிப்பாக யார் வேண்டுமானாலும் யாராலும் கொல்லப்படலாம். அற்ப தொகைக்காக கூட கொலை செய்யப்படலாம் எனும் அபாய சூழலை சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
இப்படி கதை இருந்தாலும் இந்த நூலில் இடம் பிடித்திருக்கும் கார்த்திகா - மரிக்கொழுந்து - சுமதி - என நிறைய பெண் கதாபாத்திரங்கள் தான் ஒவ்வொரு சூழலையும் தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பார்கள். ஏனெனில் பெண்களை ஒருபோதும் கணிக்க இயலாது.
ஒரு பெண் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். வெறுப்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.. உளவியல் பகுப்பாய்வு செய்தாலும் பெண்களின் மனதை ஒருபோதும் கண்டுபிடிக்க இயலாது. அதனால் பெண் மீது நம்பிக்கை வையுங்கள். காதல் செய்யுங்கள். அன்பு செலுத்துங்கள்.
இந்த சங்காரம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.
ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது.
1.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம்
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
2. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது.
3.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது - இயக்குனர் ஆர். பார்த்திபன் .
4. "லயன் லேடி" புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது - மிஸ். கௌதமி
5. புரட்சி தலைவர் எம்ஜி.ஆர் விருது- இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்
6. நடிகர் திலகம் சிவாஜி விருது - இயக்குனர் திரு பி. வாசு
7. ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது - இயக்குனர் எஸ்பி. முத்துராமன்
8. புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது - திருமதி நளினி
9.பிரான்ஸ் நாட்டின் சசெவாலியர் விருதினை பெற்ற பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்களை பாராட்டி விருது
10. தியாகச்செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான "தேசிய தலைவர்" படத்தை திறம்பட இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் அவர்களுக்கு விருது.
11.பிறந்தநாள் வாழ்த்து படத்தில் நடித்த அப்பு குட்டி க்கு சிறப்பு விருது.
12. ஆணிரை படத்திற்காக ஈவி.கணேஷ் பாபு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப் பதிவாளர் செல்லயா - அவர்களுக்கு சிறப்பு விருது
13. டெக்கன் கிரானிக்கல் என்டர்டைன்மென்ட் ஆசிரியர் திருமதி அனுபமா வின் 25 ஆண்டு கால சேவையை பராட்டி சிறப்பு விருது..
1.சிறந்த நடிகர் - விக்ரம் பிரபு - சிறை
சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்முக பாண்டியன் - கொம்பு சீவி
2.சிறந்த நடிகை - பிரிகிடா சகா- மார்கன்
சிறந்த நடிகை சிறப்பு பரிசு - சேஷவிதா
3.சிறந்த படம் - சத்யஜோதி பிலிம்ஸ் தலைவன் தலைவி-சத்யஜோதி தியாகராஜன்
சிறந்த படம் சிறப்பு பிரிவு டூரிஸ்ட் ஃபேமிலி...மகேஷ் ராஜ்
4சிறந்த இயக்குனர் சிறப்பு பிரிவு - திரு. பொன்ராம். கொம்பு சீவி
5.சிறந்த கதை - குடும்பஸ்தான் - பிரசன்னா பாலசந்திரன் -
6 சிறந்த திரைக்கதை ஆசிரியர் - திரு. ஸ்ரீ கணேஷ்.. 3பி ஹெச்.கே - த
7. சிறந்த இசையமைப்பாளர் - நிவாஸ் கே. பிரசன்னா - பைசன்
8. சிறந்த ஒளிப்பதிவாளர் - திரு எம். சுகுமார் - தலைவன் தலைவி
9. சிறந்த எடிட்டர் - பரத் விக்ரமன்- டூரிஸ்ட் பேமிலி
10. சிறந்த கலை இயக்குனர் திரு.பி.சண்முகம். தேசிய தலைவர்
11. சிறந்த லிரிஸிஸ்ட் - விஷ்ணு எடவன் - கூலி
12. சிறந்த பின்னணி பாடகர் திரு ஹரிச்சரன் - வீரதீர சூரன்
13.சிறந்த நடன இயக்குனர் சேண்டி மாஸ்டர் - கூலி
15.சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் - திலீப் சுப்பராயன் - பைசன்
மற்றும் பலர்.....
வந்து வாழ்த்தியவர்கள் ...பிரபு, கலைப்புலி.எஸ். தாணு,வி, சி.குகநாதன், காற்ற கட பிரசாத், கங்கை அமரன், விக்ரமன், டி. சிவா, ஆர். கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில், மன்சூர் அலிகான்
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்” விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு, உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.
“காந்தாரா சேப்டர் 1” தற்போது இந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.











