ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் !


பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.


படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதேபோல், சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது முக்கியமான பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்திருந்தார்.


பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் ஃபர்ஸ்ட் லுக்கும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, PVCU-வில் அவரது கதாபாத்திரம் குறித்து அதிக ஆர்வத்தை உருவாக்கியது.


இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மீகப் பிரம்மாண்டத்தையும், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட அளவையும் இணைக்கும் வகையில், இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனிக்கிறார்.


தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை விரைவாக முடித்து, போஸ்ட் புரடக்சன்  பணிகளுக்கு (Post Production) செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்து வருகிறது.


படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விளம்பரப் பணிகள் தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.


தொழில்நுட்பக் குழு: 


எழுத்து : பிரசாந்த் வர்மா 

இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு

தயாரிப்பாளர்: ரிவாஸ் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல் 

பேனர்: RKD Studios 

இசை: ஸ்மரன் சாய்

ஒளிப்பதிவு : சுரேஷ் ரகது

கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா 

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி 

விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா 

மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து விறுவிறுப்பாக பேசுகிறது


 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்குகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு ,பிண்ணனி இசையும் அமைத்துள்ளார்.


2008-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அலுவலர்கள் பிரிவைச் சேர்ந்த தோ.சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றியுள்ளார். என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளியில் பொறியியல் படித்த அவர், சிறப்பான பணிக்காக 2021-ம் ஆண்டு உலக சுங்க அமைப்பு (World Customs Organization) வழங்கிய விருதைப் பெற்றுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் டி. சமய முரளி கூறுகையில், "'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை ஆகும். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம்," என்றார்.


சென்னையின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த அமர் மற்றும் தீனா என்ற இரண்டு இளைஞர்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற கனவுடன் வாழ்கின்றனர். லிங்கம் என்ற நிழல் உலக தாதா, பெருமதிப்புள்ள போதைப்பொருளை குஜராத் துறைமுகம் வழியாகக் கடத்தும் பெரிய பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார்.


துபாயில் இருந்து மேத்யூ பாய் செய்யும் இந்த போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா களமிறங்குகிறார். லஞ்சம், வஞ்சம் என உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ளும் அந்த இரு இளைஞர்களின் பயணமே படத்தின் மையக்கதை. 


மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, எழுத்தாளர், ஆய்வாளர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 'சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்', 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்', 'காக்கி' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள அவர் எழுதிய சுங்கத்துறை தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-ல் வெளியாகியுள்ளன. அவர் இயக்கிய முதல் குறும்படமான 'புதிய பார்வை', மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் 'சைலன்ட்' எனும் திரைப்படத்தில் நடித்ததுடன், அதற்கு இசையும் அமைத்துள்ளார். 


எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரிக்கும் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்', அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டிற்காக பணியாற்றும் சுங்கத்துறையின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகி வருகிறது.

 

நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம், IMDb வெளியிட்டுள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய இந்திய திரைப்படங்கள் மற்றும் ஷோஸ் (Most Anticipated New Indian Movies and Shows) பட்டியலில் 11.1% ரியல்டைம் மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.


இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய படைப்புகளின் வரிசையில் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தை இந்த அங்கீகாரம் இணைத்துள்ளது. அதைவிட முக்கியமாக பல துறைகளிலும், பல தலைமுறைகளிலும், புவியியல் எல்லைகளையும் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை திரையில் காண மக்கள் நாடு முழுவதும் கொண்டுள்ள ஆர்வத்தையும் இது வெளிப்படுத்துகிறது. படத்தின் வலுவான கதைக்களம், விரிவான வரலாற்றுப் பின்னணி, பிரம்மாண்டமான தயாரிப்பு தரம் மற்றும் ’இந்தியாவின் எடிசன்’ எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக நடிகர் ஆர். மாதவன் மேற்கொண்டுள்ள அசத்தலான தோற்ற மாற்றம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. 


IMDb-ன் ரியல்டைம் பிரபலத்தன்மை தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பதன் மூலம் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் அபாரமான வாழ்க்கைப் பயணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரது சாதனைகள் மட்டுமல்லாது புதுமை, விடாமுயற்சி, உயர்ந்த லட்சியம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றையும் இந்த திரைப்படம் கொண்டாடுகிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


திரைக்கதை: கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன்,

ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அரவிந்த் கமலநாதன்,

இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா,

படத்தொகுப்பாளர்: பிஜித் பாலா,

நிர்வாகத் தயாரிப்பாளர்: முரளிதரன்,

தயாரிப்பு மேலாளர்: ஹக்கிம் சுலைமான்,

வசனம்: முகில்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிரில் குருவில்லா,

ஆடை வடிவமைப்பாளர்: ஜிஷாத் ஷம்சுதீன்,

ஒலி வடிவமைப்பு & தயாரிப்பு ஒலி கலவை: சித்தார்த் சதாசிவ்,

தலைமை மேக்கப் கலைஞர்: ரஞ்சித் அம்பாடி

 

சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது.


 முக்கிய அம்சங்கள்:


  ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு சிறப்புச் செய்தி:


ஸ்பைடர்-மேன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் டாம் ஹாலண்ட் (Tom Holland) இந்திய ரசிகர்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.


  150-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்:


 சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (Sony Pictures Entertainment) நிறுவனத்தின் புகழ்பெற்ற 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் ஆங்கிலப் படங்கள் இப்போது சோனி லைவ் தளத்தில் அனைவரும் பார்க்க பிரத்தியோகமாக ஸ்ட்ரீம் ஆகிறது


 பிரபலமான திரைப்படங்களின் பட்டியல்:

   ஸ்பைடர்-மேன் திரைப்படங்கள் (Spider-Man films) & ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் (Spider-Man: Into the Spider-Verse)

   

ஜுமான்ஜி (Jumanji)

   

தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (The Pursuit of Happyness)

   

மைக்கேல் ஜாக்சனின் திஸ் இஸ் இட் (Michael Jackson's This Is It)


   தி டா வின்சி கோட் (The Da Vinci Code)


   தி கராத்தே கிட் (The Karate Kid - 2010) மற்றும் பல...


சுருக்கமாக:

நீங்கள் விரும்பி வளர்ந்த, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் இப்போது சோனி லிவ் (Sony LIV) தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.


டாம் ஹாலண்டின் இன்ஸ்டாகிராம் வீடியோவை இந்த இணைப்பில் காணலாம்.

 

ஃபர்ஸ்ட் டைமா,  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு  வரப்போற 'DC' படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட்.

ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.


ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும்.


என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக் கொடுத்த 'DC' படக்குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். 


நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணி இந்த பாட்டை உருவாக்கினோமோ, அதே மாதிரி கேக்குற உங்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.

பாட்டோட ரிலீஸ்க்காக நான் ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாங்க பண்ண வொர்க்கை நீங்க எல்லாரும் கேக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். 


அன்புடன்,

வேடன்

 

‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமான இளம் நடிகர் ஈசா – தனது திரைப்பயணம், வெற்றி மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறக்கிறார்


தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதாநாயகன் ஈசா.


மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர். அதேநேரத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் பரிசுகளையும் வென்ற விளையாட்டு வீரரும் ஆவார். விளையாட்டின் மூலம் பெற்ற ஒழுக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றையே சினிமாவிலும் தனது பலமாக மாற்றிக் கொண்டுள்ளார்.


திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலம் தொடங்கினார்.


“திரைப்படம் எப்படி உருவாகிறது, ஒரு காட்சியை எப்படி வடிவமைக்கிறார்கள், நடிகர்களிடமிருந்து இயக்குநர் எப்படி நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் அப்போது நேரடியாகக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் இன்று ஒரு நடிகராக என்னைத் தயார்படுத்தியது,” என்கிறார் ஈசா.


அதன்பிறகு இயக்குநர் அஸ்லம் மூலம், இயக்குநர் மீரா கதிரவன் தனது ‘ஹபீபி’ திரைப்படத்திற்கான நடிகர் தேர்வை நடத்துவதாக அறிந்து ஆடிஷனில் பங்கேற்றார். ஆடிஷனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் எந்தத் தகவலும் இல்லாத நிலையில், ரிகர்சலுக்கு அழைப்பு வந்தபோதுதான் கதாநாயகனாக தேர்வாகியிருப்பது உறுதியானது.


“முதல் நாளிலிருந்தே இயக்குநரின் நம்பிக்கையை எந்தக் காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. அதற்காக ஒவ்வொரு நாளும் முழு அர்ப்பணிப்புடன் தயாராகி சென்றேன்,” என்று கூறுகிறார்.


நடிப்பு பயிற்சிகள், ஒர்க்ஷாப்கள் மற்றும் தொடர்ச்சியான ரிகர்சல்கள் மூலம் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்ட ஈசா, “நான் ஹீரோ” என்ற மனநிலையோடு அல்லாமல், கதையின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே தன்னை அணுகியதாகக் கூறுகிறார்.


“கதைக்குத் தேவையான மனிதராக இருக்க வேண்டும் என்பதைத்தான் நினைத்தேன். அதனால் என் நடிப்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டது,” என்கிறார்.


‘ஹபீபி’ திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களையும், மனநிலைகளையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஈசா, அதற்காக தனது உடல் எடையை கதாபாத்திரத் தேவைக்கேற்ப பலமுறை மாற்றியுள்ளார். முதலில் உடல் எடையைக் குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்துள்ளார்.


“ஒரு கதாபாத்திரம் உண்மையாகத் தோன்ற வேண்டுமென்றால், அதற்காக நடிகரும் மாற வேண்டும். அந்த மாற்றத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறுகிறார்.


படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசும்போது, இணைந்து நடித்த கஸ்தூரிராஜா மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோரின் ஒத்துழைப்பு தனது நடிப்பை மேலும் இயல்பாக்க உதவியதாக ஈசா குறிப்பிடுகிறார்.


‘ஹபீபி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்த்த இயக்குநர்கள் மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, பாலாஜி சக்திவேல், அமீர், சேரன், சசிகுமார், வெற்றிமாறன், மிஷ்கின், சீனு ராமசாமி, கே. பாக்யராஜ், மகிழ் திருமேனி, சுசீந்திரன், நாசர், பி.சி. ஸ்ரீராம், பாண்டிராஜ், அஸ்லம், பா. ரஞ்சித், ராம், வி.இசட். துரை, தங்கர் பச்சான், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், அவரது இயல்பான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளனர்.


குறிப்பாக, முதல் படத்திலேயே இளம் வயது மற்றும் நடுத்தர வயது தோற்றங்களில் குரல், உடல்மொழி, முகபாவனைகளில் வித்தியாசம் காட்டி நடித்தது மிகப்பெரிய சாதனை என்றும், “இது எல்லோருக்கும் கிடைக்காத பாக்கியம்” என்றும் பலரும் பாராட்டியதாக ஈசா மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.


தனது வெற்றிக்குக் காரணம் குறித்து பேசும்போது ஈசா நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:


“‘ஹபீபி’ திரைப்படம் மூலம் இன்று எனக்குக் கிடைத்திருக்கும் அத்தனை அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான். ஒரு புதுமுக நடிகரை நம்பி இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை ஒப்படைத்து, என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர் அவர்தான். இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் அவருக்கே சேரும். இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என் மிகப்பெரிய பொறுப்பு.”


‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஈசா ஒப்பந்தமாகியுள்ளார். அந்த இரண்டு படங்களும் வணிக அம்சங்களுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும் பேசும் படங்களாக உருவாகி வருவதாகவும், அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.


மேலும், “இன்றைய சூழலில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் நல்ல திரைப்படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே உரிய ஆதரவு கிடைப்பதில்லை. படம் வெளியான பிறகுதான் அதன் தரமும் மதிப்பும் பேசப்படுகிறது. அந்த நிலை மாறினால் இன்னும் பல தரமான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்,” என்றார்.


இறுதியாக, “பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே தடகளப் போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளேன். தற்போது சினிமா காரணமாக அதற்கான நேரம் குறைந்தாலும், நடிகராக மட்டுமல்ல, ஒரு விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல சினிமா – அதுவே என் அடுத்த இலக்கு,” என்று நம்பிக்கையுடன் கூறி உரையாடலை நிறைவு செய்தார்.

 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.  


அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி  உருவாகி வரும் முழு நீள திரைப்படம் " அவிரா " 


சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை  இயக்கிய பிரபாகரன். இவர்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது. 


முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சேரும். இதன் தயாரிப்பாளர்களாக கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.


படம் பற்றி இயக்குனர் பிரபாகரன் பகிர்ந்தவை....


அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள்.


புராண காலத்து  கதையை அடிப்படையாக கொண்டு கற்பனை கதையாக வரும் இந்த படத்தை  ஃபான் இந்தியா திரைப்படமாக தயாரித்திருக்கிறேன்.


Photo realistic Ai Technology  கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் பேண்டஸி திரைப்படமாக உருவாக்கியுள்ளேன்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

 

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான 'மாறுவேஷம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது.


விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். ஆனால், அவரது திறமைக்கு சவால் விடும் வகையிலான வழக்குகள் எதுவும் தனக்குக் கிடைக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அப்படியான தருணத்தில் அவரது எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட பல திருப்பங்கள், ரகசியங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கொண்ட ஒரு வழக்கு அவருக்கு வருகிறது. அந்த வழக்கின் பயணம்தான் ‘மாறுவேஷம்’ திரைப்படம்.


படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி பகிர்ந்து கொண்டதாவது, “எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த ‘மாறுவேஷம்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பே ரசிகர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. யார் எதை மறைக்கிறார்கள், ஏன் ஒரு கதாபாத்திரம் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது, அது வெறும் வெளிப்புற மாற்றமா அல்லது ஆழமான உணர்வுப்பூர்வமான பயணமா, பழிவாங்கலா, உயிர் பிழைப்பதற்கான போராட்டமா, காதலா அல்லது மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியா என இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரங்களின் இரட்டை முகங்கள், வெளிப்படும் ரகசியங்கள் மற்றும் இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சவால்தான் இப்படத்தின் மையம். முகம் மாறலாம். ஆனால், ஒருவரால் தனது கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா?” என்றார்.


நடிகர்கள்: வியானா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழுவினர்:  


ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா, 

இசை: ராஜ்குமார் அமல், 

படத்தொகுப்பு: என்.பி. ஸ்ரீகாந்த், 

கலை இயக்கம்: மணிகண்டன் சீனிவாசன்,

கூடுதல் திரைக்கதை: எஸ். இசையமுதன்

 

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி (  (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌஜி' திரைப்படம் - எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் பிரபாஸை இதுவரை காணாத ஒரு புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது


'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ஃபௌஜி' திரைப்படம் - பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


வெளியீட்டு தேதி அறிவிப்புடன் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது 'ஃபௌஜி' திரைப்படத்தின் தீவிரமான தன்மையையும்... அதன் பிரம்மாண்டமான அளவையும்... உணர்வுபூர்வமான ஆழத்தையும்... வெளிப்படுத்துகிறது. இதில் பிரபாஸ் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கரடு முரடான தோற்றத்தில் உணர்ச்சிகரமாக காட்சியளிக்கிறார். 


கடுமையான போருக்குப் பிறகு ரத்தக்கறை படிந்தும்.. காயங்களுடனும்... மிகுந்த சோர்வுடனும்.. காணப்படும் அவர் - போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் வீரர்களுக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். தலை குனிந்த படி துப்பாக்கியை இறுக்கமாக பிடித்திருக்கும் அவரது தோற்றம்-  விதிக்கு அடிபணிய மறுக்கும் ஒரு போர் வீரனின் தியாகம்- வலி- மன உறுதி- ஆகியவற்றை நேர்த்தியாக உணர்த்துகிறது. 


நீண்ட கலைந்த தலைமுடி- அடர்த்தியான தாடி -போரினால் காயம் பட்ட உடல்வாகு மற்றும் ரத்தம் தோய்ந்த வெள்ளை வேட்டி என அவரது தோற்ற மாற்றம்.. பார்வையாளர்கள் இதுவரை காணாத வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது கம்பீரமான திரை தோற்றத்தின் மூலம் துக்கம் -உறுதி- தைரியம் மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவற்றை பிரபாஸ் நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.


அவரை சுற்றியுள்ள சூழல் படத்தின் மீதான தாக்கத்தை கூடுதலாக அதிகரிக்கிறது. போர்க்களம் முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்திருக்க... வெகு தூரம் வரை பரவியிருக்கும் வீரர்களின் சடலங்கள்- கதையின் பின்னணியாக அமைந்திருப்பது.. அந்த பயங்கரமான போரின் கோர முகத்தை விவரிக்கிறது. பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்ட அதிரடி காட்சிகளையும், அதே தருணத்தில் ஆழமான உணர்ச்சிகளையும் இப்படம் வழங்கும் என்பதையும் இந்த போஸ்டர் எடுத்துரைக்கிறது. இந்த திரைப்படம்- திரையரங்குகளில் மிகப்பெரிய ஈர்ப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. அதிலும் மிக முக்கியமான சண்டை காட்சியில் இருந்து தான் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ஃபௌஜி திரைப்படம் - சாதாரணமான போர் சார்ந்த திரைப்படம் மட்டுமல்ல... இது பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளும் அழுத்தமான கதைக்களமும் இணைந்த ஒரு உணர்வுபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறது. 


வெளியீட்டுத் தேதி அறிவிப்பு - இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது ஒரு போஸ்டரே இவ்வளவு உற்சாகத்தை ஏற்படுத்தும் போது... திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் அனுபவம் சிறப்பானதாகவும் அதிரடியானதாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுவரை வெளியாகி உள்ள தகவல்கள்- பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்- நெஞ்சை தொடும் உணர்வுகள்- கண்கவர் காட்சிகள் மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட ஒரு திரைப்படமாக இது அமையும் என்பதையே காட்டுகிறது. 


ஃபௌஜி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 


இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்  கையாள்கிறார். 


வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்ட நிலையில்.. பிரபாஸின் இதுவரை காணாத புதிய தோற்றம் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் போஸ்டர் ஆகியவற்றால்... ஃபௌஜி இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படமாகவும்... வசூல் சாதனை படைக்கும் படமாகவும்... உருவெடுத்து வருகிறது. 


நடிகர்கள்:  பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா ,பானுச்சந்தர் மற்றும் பலர். 


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி

தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் 

வழங்குபவர்கள் : குல்சன் குமார் - பூஷன் குமார் - டி சீரிஸ் பிலிம்ஸ் 

தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி- ஒய் ரவிசங்கர் - பூஷன் குமார் 

ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி 

இசை : விஷால் சந்திரசேகர் 

தயாரிப்பு வடிவமைப்பு :அனில் விலாஸ் ஜாதவ் 

படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ் 

வி எஃப் எக்ஸ்- VFX-  ஆர். சி

கமலா கண்ணன்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில்  ஒன்பதாவது படமான வாணவேடிக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன்  இனிதே துவங்கியது...


 சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக  நடிக்கும் இப்படத்தின்  பூஜையில் 


  பிரேமதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய,

தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்MP அவர்கள் மனைவியார்  பூர்ண ஜோதி  கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.


இப்படத்தை நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்குகிறார்..


 

இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்..


மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன்,கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்..


இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். கலை இயக்கம் ராஜ்கமல்,

படத்தொகுப்பு பிரேம்குமார்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது..



இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறுகையில்..


இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்த படத்தில் பார்ப்பீர்கள்..


இப்படம் தந்தைக்கு மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம் என்றவர் படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்புகளை படபிடிப்பு முடிந்தவுடன் அறிவிக்கிறோம் எனக் கூறினார்...

Pageviews