Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar
Directed By : Kenthiran.V
Music By : D.Imman
PRO : Sathish Kumar ( S2 Media )
Produced By : Masani Pictures - Rajasekar.R
ஒரு கிராமத்தில் உள்ள ஊர் தலைவர் ஒருஅவ்ர் அந்த ஊரில் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த இடத்தில் வைத்து பராமரிக்கிறார்.அவரது மகனும் அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார். அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரித்து அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்தி, பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறார். இதற்கிடையே, அவரது காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவனும் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், அவனது வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, ஆகியவற்றின் மூலம் அவனது வாழ்க்கை மீண்டும் நல்வழியில் பயணிக்கிறது , இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் விமல் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் அவருக்கே உரித்தான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வழக்கம் போல் அலுங்காமல் குலுங்காமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளைகளை அடக்கும் வீரர்களாக நடித்து மாஸ் காட்டுவது தான் வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக நடித்து கெத்து காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, அழகில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்று. தன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்க்கை, தனக்கு போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி நடிகராக காட்சியளித்து வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.மேலும் நரேன் மற்றும் இந்துமதி ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
டி.இமானின் கிராமத்து பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்தப் படத்திலும் தை செய்துள்ளார். பிண்ணனி இசையும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டும், அதனை பின்னணியாக கொண்டும் பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கேந்திரன்,மேலும் மஞ்சு விரட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகனை சுற்றி நடக்கும் பகைமை நாடகத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார்.
மொத்தத்தில், ‘வடம்’ ஒரு நல்ல கமர்ஷுயல் பயணம்.
ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்:
9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம்
சென்னை, மார்ச் 6, 2026— மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.
தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது.
பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
2026-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்திய சாதனைகளை இது பிரதிபலிக்கிறது.
விருது பெற்றவர்கள் விபரம்:
திரு. வி. எம். முரளிதரன் (மாற்றத்தை நோக்கிய தலைமைத்துவத்திற்கான 'ஜெனித்' ஐகான்): தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய ஆழமான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
திரு. ஆதித்யாராம் (மனிதநேய ஐகான்): சுயமாக முன்னேறிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தையும், சமூக நலனுக்கான அவரது அயராத அர்ப்பணிப்பையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
திரு. பி. சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன்: தினத்தந்தி குழுமத்தின் தலைமைத்துவத்தின் மூலம் "மக்களின் குரலை பாதுகாப்பவர்" எனப் போற்றப்பட்டார்.
திருமதி. சிம்ரன் பக்கா: மூன்று தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக "எவர்கிரீன் ஐகான்" (Evergreen Icon) அந்தஸ்து வழங்கப்பட்டது.
திரு. பி. உன்னிகிருஷ்ணன்: கர்நாடக இசை மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டிலும் அவர் கொண்டுள்ள அபார தேர்ச்சிக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
செல்வி. தன்யா ராஜேந்திரன்: சுதந்திரமான டிஜிட்டல் இதழியலில் அவர் காட்டிய அச்சமற்ற தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
திரு. அலெக்சாண்டர் பாபு: "மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்" எனும் புதிய வகை நகைச்சுவை கலையை உருவாக்கியமைக்காகப் பாராட்டப்பட்டார்.
திரு. அஸ்வத் மாரிமுத்து: 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் சமூக ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்ததற்காகக் கௌரவிக்கப்பட்டார்.
திரு. முரளி நாராயணராவ்: விருந்தோம்பல் துறையில் உலகளாவிய நற்பெயரை உருவாக்கியதில் அவரது பங்கிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி கூறுகையில், "ஜேப்பியார் ஐகான் விருதுகள் என்பது வெற்றியை மட்டும் கொண்டாடும் விழா அல்ல, இது எங்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பும் விழுமியங்களைக் கொண்டாடும் விழா.
விருது பெற்ற இவர்கள், எங்கள் வளாகத்தில் நாங்கள் வளர்க்கும் விடாமுயற்சியின் வாழும் உதாரணங்கள்," என்றார்.
பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் கூறுகையில், "வெற்றி ஏணியில் ஏறியவர்களை மட்டும் அல்லாமல், மற்றவர்கள் கடந்து செல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர்களையும் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் நம்பிக்கை கொள்கிறது.
இன்று, வகுப்பறை பாடங்களுக்கும் நிஜ உலகச் சாதனைகளுக்கும் இடையிலான இடைவெளியை நாங்கள் இந்த விருதுகளின் மூலம் இணைத்துள்ளோம்," என்றார்.
சமூகத்தை வளப்படுத்திய, தொழில்துறையை மேம்படுத்திய மற்றும் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்திய இந்தச் சிறந்த ஆளுமைகளைக் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.
9-வது பதிப்பு ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026, புதுமை மற்றும் தலைமைத்துவத் திறனுடன் வழிநடத்துபவர்களை அங்கீகரிப்பதில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பணிபுரியும் ஒருவன், ஒரு டாக்டர் பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்கின்றனர், இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்ற்னர், இந்த சமயத்தில் நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் அவன், இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில்,யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில் அவருடன் இருப்பது யார் , அவருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருதியில் திருமனம் நடந்ததா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை'
நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வரும் சதிஸ் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள் என் இந்த கால இலைஞன் எப்படி பிரச்சினைகளை கையாள்வானோ அதே போல் படத்தில் நடித்துள்ளார்,
நாயகி மோனிக்கா படம் முழுக்க நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், மேலும் இப்படத்தில் சதீஷின் நண்பராக சுரேஷ் ரவி நடித்துள்ளார், படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது இருப்பு காட்சிக்கு பலமாக அமைந்துள்ளது. அதைத்தவிர நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பவர், படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். மேலும் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரி னடித்துள்ளார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பார்ட்டி இசை நடனம் ஆடும் வண்ணம் இருந்தது , அதே போல மற்ற பா பாடல்களும் நன்றாக இருந்தது, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மேலும் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவ்ய் செய்துள்ளார், படம் முழுவதும் கலர்புல்லாக இருந்தது.
எதிர் பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் காமெடியாக தொடங்கி இறுதி வரை ஒரு பதட்டம் கலந்த காமெடி கொடுத்து நம்மை ரசிக்க செய்துள்ளார்
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.
ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் மற்றும் கூர்மையான வசனங்களுடன், இதுவரை காணாத பிரம்மாண்டமான ஒரு பழிவாங்கும் படமாக இது உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல் என்ற வசனங்கள் இந்த இரண்டாம் பாகம் எந்த அளவிலான பழிவாங்கும் கதையாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது.
அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.
திருமணமான கௌரி (நிவேதிதா சதீஷ்) தனது கணவர் அர்ஜுனுடன் (அட்டுல்) கொடைக்கானல் செல்கிறார். அங்கு தனது பழைய காதலைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உளவியல் ரீதியான சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.
நிவேதிதா சதீஷ் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அட்டுல் மற்றும் சிபி சந்திரன் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர் சிறிய பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் குறைவாக இருந்தது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் காட்சிகளை நுட்பமாக கையாண்டுள்ளார்.
ஒரு பெண்ணின் மன உலைச்சல் அந்தப் பெண்ணை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே முக்கிய கரு. அவளின் சிந்தனை மாறி மாறி ஒரு சமயத்தில் அனைத்திற்கும் பொறுப்பை அவள் தலையில் போட்டுக் கொள்கிறாள். அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.
ஓ பட்டர்பிளை திரைப்படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் .
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்படும் இந்தப் படம், இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடப்படுகிறது
அறிவியல் புனைகதை ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய பிறகு, 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' பார்வையாளர்களை ஒரு அசாதாரண விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது. ஆண்டி வீரின் (தி மார்ஷியன்) அதிகம் விற்பனையாகும் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், தான் யார் அல்லது அவரை அங்கு அழைத்து வந்த பணி என்ன என்பது பற்றிய நினைவுகள் இல்லாமல் ஒரு மர்மமான விண்கலத்தில் எழுந்திருக்கும் தனிமையான விண்வெளி வீரரான ரியான் கோஸ்லிங் நடிக்கும் ரைலேண்ட் கிரேஸைப் பின்தொடர்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 26, 2026 அன்று வெளியாகிறது.
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோரால் இயக்கப்பட்ட, ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, அறிவியல், காட்சி மற்றும் இதயப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றின் ஒரு சிலிர்ப்பூட்டும் கலவையை உறுதியளிக்கிறது.
சாண்ட்ரா ஹுல்லர், லியோனல் பாய்ஸ், கென் லியுங் மற்றும் மிலானா வெய்ன்ட்ரப் உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களைக் கொண்ட இந்தப் படம், பெரிய திரைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சினிமா அனுபவத்தில் அளவு, உணர்ச்சி மற்றும் பிடிமான சாகசத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸிலிருந்து சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங்கால் விநியோகிக்கப்பட்ட, ரியான் கோஸ்லிங் நடித்த ப்ராஜெக்ட் ஹெயில் மேரி, மார்ச் 26, 2026 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை "
அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை.
ஒரு ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா? என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறேன்.
தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில் பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.
சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக "மரகதமலை " இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் S.லதா.
எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.
இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது..,
பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.
இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி.
நடிகர் ஜெகன் பேசியதாவது..,
என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..
இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது. குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது..,
இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,
இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.
நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம். நன்றி.
இயக்குநர் S.லதா பேசியதாவது…,
இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.
தடா ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.
மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.
இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி.
தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.
இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.











