Starring - Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sri Leela

Directed by Sudha Kongara
Produced by : Aakash Baskaran
Banner : Dawn Pictures
Music : G.V Prakash Kumar

Tamilnadu Theatrical Release by Inban Udhayanidhi - Red Giant Movies

PRO : Sathish ( Aim ) Siva

Some films in Tamil cinema stand the test of time, Some films speak to time. That to rarely some films bring time back to life. In that way We can boldly say that 'Parasakthi' has emerged as a film that stands in that line.

Sivakarthikeyan's 25th film,G.V. Prakash Kumar's 100th music score, Sudha Kongara's compelling writing and direction – these three factors make this film not just an ordinary period film, but a historical cinematic event. This film is not just a film about a language. It is a story of identity, rights, sacrifice, tears, and struggle of a race.“

Each scene continues to say that "language is not just a tool for communicating information; it is a culture, an identity, a life."
Sudha Kongara has beautifully crafted the journey of a rebellion that began as a student movement and grew into a people's revolution, using the language of cinema, against the backdrop of the language struggles of the 1950s-60s. As the scenes travel to Chennai, Madurai, Trichy, Coimbatore, Chidambaram, and Delhi, you get the feeling of reading a historical novel.

Sivakarthikeyan's portrayal of student leader Chezhiyan is an important milestone in his film career.He portrays the transformation from a young student to a thoughtful and outspoken leader very calmly, without any over-theatricalism. The character, not the star, takes the lead – this is the success of his performance.

Srileela, who plays Ratnamala, understands the pain of language rights and supports the struggle, even though she is a woman who speaks a foreign language, and is a beautiful reminder of the concept of "unity beyond language" today.

Ravi Mohan comes as the tyrannical police officer 'Thuru', a symbol of power. His portrayal of the arrogance that seeks to crush the rebels is so realistic that it instills disgust in the viewer. That is the success of the performance.

Atharvaa, Rana Daggubati, Chethan, Kali Venkat and others have filled the scenes with their respective roles. In particular, Atharvaa's character's ending, which takes the intensity of the student movement to its peak, becomes the emotional climax of the film.

Ravi kChandran's cinematography brings that period to life. 

G.V. Prakash's background score carries the weight of history. It's not just music; it's the pulse of the times.
“Unity in diversity is strength; Unity is different, uniformity is different” lines like this resonate with the mind not as cinematic dialogue, but as political thoughts. 
The clarity that we are not opposing Hindi; we are opposing the imposition of Hindi, and the slogan "Let justice spread" sound like a political thought that is relevant to today's society. The clarity that we are not opposing Hindi; we are opposing the imposition of Hindi, and the slogan "Let justice spread" sound like a political thought that is relevant to today's society. The presence of political leaders including Nehru, Indira Gandhi, Anna, and Kalaignar, their appearance, speech, and political environment – all reinforce the sense of history. This is not a propaganda film; but an awareness film that will make us remember history.
Cinema is not a history book; it is an art that makes us feel history.

 ‘Parasakthi’ has perfectly accomplished that artistic feat. 
Sudha Kongara has succeeded in honestly portraying the language struggle of an ethnic group, mixing fiction and truth, while staying within the boundaries of censorship.
If the language is destroyed, the identity is destroyed. If the identity is destroyed, the soul of that race is destroyed. ‘Parasakthi’ is a film that speaks that truth silently but deeply.

Even though the wounds of time fade, their scars continue to speak. To remind us of that pain and remind us of that history, an important film came at the right time...

- NithyaSana


*Cast* : Prabhas, Sanjay dutt, Boman Irani, Malavika Mohanan, Nidhhi Agerwal , Riddhi Kumar, Zarina Wahab

*Crew*

Written & Directed by: Maruthi
Producer: TG Vishwa Prasad, Krithi Prasad 
Co-Producer: Ishan Saksena
Music: Thaman S
DOP: Karthik Palani
Editor: Kotagiri Venkateswara Rao   
Production Designer: Rajeevan  
Costume Designer: Swetha Thanay
Creative Producer: SKN
VFX Creative Producer: Praveen Kilaru
CEP : Sujith Kumar Kolli
PMF VFX studio head: Anuraag Rajesh 
VFX head: Surya Kambhampati
VFX Company: Deccan Dreams
Stunts: Ram-Laxman, King Solomon
Colorist: Yugandhar G
DI: Deccan Dreams
Post Production : Dattu M   
Sound Mixing: T. Udaya Kumar Sound Vibe studios
Sound Design: sync cinema
Marketing: Walls & Trends
Production Controller: Kishore Surapaneni

The protagonist, Prabhas, who is searching for his grandfather who disappeared many years ago, discovers that the formidable sorcerer Sanjay Dutt, who has mastered various magical arts, is in fact his grandfather. At the same time, as he tries to get closer to his grandfather, he uncovers several shocking truths and finds himself in a situation where he has to confront him. Why this conflict? What kind of problems does this create in Prabhas's life, and how does he overcome them? 'Raja Saab' presents all of this, blending elements of thriller, fantasy, and other genres.

After the success of 'Baahubali', Prabhas, in an attempt to join the ranks of Hollywood action heroes, starred in several big-budget action films. 

Although there are three heroines in the film – Malavika Mohanan, Nidhi Agerwal, and Riddhi Kumar.

Sanjay Dutt, who played Prabhas's grandfather, and Sarina Wahab, who played his grandmother, performed their roles adequately, Boman Irani also makes a brief appearance.

Karthik Palani's cinematography is a comforting aspect for the viewers. Although the VFX shots are of good quality, the cinematographer's work in integrating them with the scenes and presenting a colorful film.
While Thaman S.'s songs are commercially appealing but soft  listenable,

Editor Kotagiri Venkateswara Rao works fine 

Director Maruthi, who also wrote the film, has essentially given Prabhas, who is tired and aching from continuously acting in action films, a good attempt surrounding him with three heroines.


 

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 


இந்த நிகழ்வில் கே. பாக்யராஜ் அவர்கள் பேசுகையில், அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள், எனது தாயார் என அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்து நான் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சொன்னார்கள். 16 வயதினிலே படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் கமல் அவர்கள் கூட, இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது, இதுவரை எந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கும் இப்படி நடந்தது இல்லை என்று கூறினார்கள். வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரை சொல்லாமல் கோவை ராஜா என்று கெத்தாக சொல்லிக் கொள்வேன். 16 வயதினிலே படத்தில் தான் என்னுடைய பெயரை பாக்கியராஜ் என்று வைத்தேன். என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு யார் இந்த பெயர் என்று என்னுடைய இயக்குனர் கேட்டார்கள். பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று அனைவரும் சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே. பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன். நான் துணை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே பத்திரிக்கை நண்பர்கள் என்னை பற்றி எழுதி உள்ளீர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தில் போது என்னுடைய இயக்குனர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார்கள். துணை இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன். கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனை கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. அதனை பார்த்து எனது குடும்பத்தினர் கழுதை இழக்கவா சினிமாவிற்கு சென்றாய் என்று கிண்டல் அடித்தனர். அந்த சமயத்தில் எனது தாயார் உன்னுடைய இயக்குனரே உன்னை வரும் காலத்தில் வைத்து ஹீரோவாக படம் எடுப்பார் என்று சொன்னார்கள். பிறகு அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 


முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்தில் வில்லனாக நடித்தேன். பிறகு இயக்குனராக அறிமுகமானேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவிற்கு வரும் முன்பு சினிமா பார்த்த அனுபவம் மட்டும் இருந்தது. மற்றபடி சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இங்குள்ள இயக்குனர்களின் படங்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் நான் பள்ளி முடித்து வந்தவுடன் எனது தாயார் தேன் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார். அதனை அருகில் உள்ள கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருநாள் நான் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தேன், என் தாயார் இல்லை. உடனே நான் பெட்டியை திறந்து காசை எடுத்துக் கொண்டு தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் அன்று மாலை தான் எனக்கு தெரிந்தது நான் கொடுத்தது காசு இல்லை, தங்க மோதிரம் என்று. கடைக்காரர் நினைத்திருந்தால் மோதிரத்தை எடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதனை எனது தாயாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இந்த சம்பவம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு சிறுவயதிலேயே உணர்த்தியது. 


எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்கு செய்யும் நல்லதை பார்த்து அவருடைய குணாதிசயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தது. சிவாஜி அவர்களும் இயக்குனர் எவ்வளவு புதிது என்றாலும் அவருக்கான மரியாதையை கொடுப்பார்கள். இவை அனைத்தும் என் மனதில் இருந்தது. கமல் அவர்களின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார். பத்திரிகையாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான,  மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா,  “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 



உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட,  இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை,  பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார்.


மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்களான திரு. K. T. வெங்கடேசன் மற்றும் திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் மரியாதைக்குரிய விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் 108 வெள்ளி வேல்களின் திருவிழாவை திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா அவர்கள் துவங்கி வைத்தார்.


மேலும்  இந்த நிகழ்ச்சியில்,

The Jewellers & Diamond Traders Association-வின் தலைவர் திரு. ஜெயந்திலால் சல்லாணி – மகாவேல் வேல் லோகோவினை வெளியிட்டார் .


Government of Tamil Nadu-வின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) – மகாவேல் இணையதளத்தினை  துவங்கி வைத்தார். 



இந்நிகழ்வினில் 


மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா பேசியதாவது..,

இந்த 108 தெய்வீக வேல்கள் தங்கம்–வெள்ளியில் உருவான நகைகள் மட்டுமல்ல, உலகத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஆசீர்வாதங்கள். பத்து குகையில் முருகப்பெருமானின் அருள் பெற்றதும், இப்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதும், 108 மகாவேலுக்கு அளவற்ற ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை வழங்குகிறது. இது உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்கான எங்களின் பணிவான அர்ப்பணிப்பு.  இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி. 


திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) பேசியதாவது…, 

வேல் என்றால்,  தெய்வீக சக்தி, ஞானம் மற்றும் பாதுகாப்பு. தமிழ் நாட்டில் எல்லோரும் முருக பக்தர்கள் தான். ஒரு ராசிக்கு ஒரு வேல் என 108 தனித்துவமான வேல்களை ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கியிருக்கிறார் கிஷோர் கட்டாரியா. மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு சென்று  ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார். இவரின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள். 


திரு. ஜெயந்திலால் சல்லாணி பேசியதாவது.., 

கிஷோர் கட்டாரியாவின் குல தெய்வம் முருகர் அல்ல, கும்பிடும் தெய்வமும் முருகர் அல்ல, ஆனால் முருகன் மீதான பிரியத்தால், பெரிய ஆராயச்சிகள் செய்து, இந்த 108 வேலை உருவாக்கியிருக்கிறார். இது கின்னஸ் ரெக்கார்டுக்கு தகுதியான சாதனை.  அவரது ஆன்மீக பயணம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள். 


திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா பேசியதாவது.., 

இந்த நாளை வடிவமைத்து தந்த இறைவனுக்கு நன்றி. இந்த நாளின் சிறப்பாக முருகன் தெரிகிறார். திருச்செந்தூர் முருகன் தான் அனைத்துக்கும் துணை நிற்கிறார். நான் முருகரின் தீவிர பக்தன் ஆனால் எனக்கே தெரியாத பல விசயங்களைத் தேடி,  இப்படி 108 வேலை வடிவமைத்து,  ஒரு புதிய முயற்சியை செய்துள்ள கிஷோர் கட்டாரியா ஆச்சரியப்பட வைக்கிறார்.  அவருக்கு என் வாழ்த்துகள்.  ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான கடவுளான முருகனுக்கு, இப்படி ஒரு அஞ்சலி செய்துள்ள உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் கிடைக்கட்டும். இன்னும் சிறப்பாக பல சாதனைகள் நீங்கள்  செய்ய வேண்டும். 



South Asia Book of Records சார்பில், திரு பாலவிநாயகம் பேசியதாவது…, 

South Asia Book of Records சார்பில் எவ்வளவோ பேருக்கு விருது வழங்கியுள்ளோம். ஆனால் இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 


வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது.., 

மகாவேல் விழாவிற்கு அழைத்ததற்கு என் நன்றிகள். முருகனை மிக ஆழமாக நேசித்து, சிந்தித்து, இந்த சாதனையை செய்துள்ள நண்பர்  கிஷோர் கட்டாரியா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.  என் தந்தை பேர் கதிர்வேலன் சினிமாவில் நடித்த பிறகு, ஐசரி வேலன் என மாறியது. அப்பாவின் பேரில் ஆரம்பிக்க வேண்டும்  என்றுதான் வேல்ஸ் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது. 58 கல்வி நிலையங்கள் வெளிநாடு முதலாக நடத்தி  வருகிறோம். அதற்கு காரணம் நான் ஒரு முருக பக்தன். அது மட்டுமல்ல என் அப்பா பெயருடன் முருகன் பெயரும் உள்ளது தான் காரணம். என்னை எப்படி கிஷோர் அழைத்தார் எனத் தெரியவில்லை. 108 வேல் பற்றி அவர் விளக்கி சொன்ன விசயம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. முருகருக்கு உகந்த இந்த நன்நாளில் இவ்விழா நடப்பது மகிழ்ச்சி.  கிஷோர் அவர்களின் முயற்சி உலகம் போற்றும் பெரிய முயற்சியாக மாற என் வாழ்த்துகள். 



இந்த சாதனையின் ஆன்மீகப் புனிதத்தன்மையை மேலும் உயர்த்தும் வகையில், 108 தெய்வீக வேல்களின் முழுத் தொகுப்பும், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 29.12.2025 அன்று சிறப்பு பூஜைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. இந்தியா வெளியே உள்ள மிக சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பத்து குகை, இந்த முயற்சிக்கு மிகுந்த தெய்வீக மகிமையைவழங்குகிறது.

108 தெய்வீக மகாவேல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வேலும் தனித்தனியாக ஆன்மீக ஆய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டு, ஆலய ஆசீர்வாதம் பெற்றதாகவும், புனித எழுத்துகள், ரத்தினங்கள், ராசி குறியீடுகள் மற்றும் புராண அர்த்தங்களுடன் அலங்கரிக்கப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்தத் தொகுப்பு, இந்துத் தத்துவம், ஜோதிடம், வானியல்மற்றும் ஆன்மீக அறிவியலில் மிக முக்கியமான “108” என்ற புனித எண்ணை அடிப்படையாகக் கொண்டது.


இந்த புனிதமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நிகழ்வு, பக்தி, தெய்வீகம்  மற்றும் அசாதாரண கைவினைத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 108 மகாவேல்கள் ஆன்மிக உலகில் ஒரு புதிய மைல்கல்லாக உருவெடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 108 வேல்கள்  பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

 



நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”  திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில்,  கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது.


கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.


தற்போதைய தமிழ்ப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய தமிழ் படத்தில் ஐஸ்வர்யா KS நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தனது திரையுலகப் பயணம் குறித்து பேசும் ஐஸ்வர்யா KS.., 

“சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.


மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் தன்னை பெரிதும் ஈர்த்துள்ளதாக கூறிய அவர்,

“அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதே நேரத்தில், புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.


‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ மூலம் கிடைத்த அங்கீகாரம், நடிகை ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, தெளிவான கனவுகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சி – இவை அனைத்தும், அவரை அடுத்த கட்ட உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

 

யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான 'டாக்ஸிக்' பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ' என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.


' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!' யாஷ்ஷின் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில்  தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது


'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.


யாஷ் 'டாக்ஸிக்' திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா - ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் 'டாக்ஸிக்' திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.


அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.


ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்... அசைக்க முடியாத உறுதியுடனும்... முழுமையான கட்டுப்பாடுடனும்... ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun)  அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.


அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல... அவர் நோக்கம் - தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.


அதன் முதல் காட்சியிலிருந்து' டாக்ஸிக்' ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.


இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது... 'டாக்ஸிக்' ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல... அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.


பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்... சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான... அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.


'டாக்ஸிக்' அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.


நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்... இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம்  பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும்,  நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.


கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.


தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) -  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.


கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ்  ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் 'டாக்ஸிக்' படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.


இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற  முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !!

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர்  யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.

வரும் ஜனவரி 8 அன்று நடிகர்  யாஷ்  பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில்,  நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி, ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 மெட்ரோ பெங்களூர் நகரத்தின் மையப்குதிகளைக்  கடந்து செல்லும் போது, அது வெறும் பயணிகளை மட்டுமல்ல — உணர்ச்சி, பெருமை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நேசத்தையும் எடுத்துச் சென்றது. திரையரங்குகளைத் தாண்டி, சமூக-கலாச்சார அடையாளமாக யாஷ் இன்று உருவெடுத்திருப்பதற்கான உறுதியான சான்றாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வின் நேரம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் நடிகைகள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியதிலிருந்து, யாஷின் அடுத்த சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்படத்தில் யாஷின் தோற்றம் குறித்த சில வலுவான புகைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் முழுமையான  தன்மை இன்னும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மமே ரசிகர்களிடையே தீவிரமான ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

நடிகர் யாஷின் பிறந்தநாளில் அந்த பெரும் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு வரலாற்று காலகட்டப் பின்னணியுடன், தீவிரமும் ஆழமும் நிறைந்த உலகை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது. நெறிமுறைகளின் எல்லையில் நிற்கும் ஒரு சிக்கலான நாயகன் — அவன் யார்? என்பதை வெளிப்படும் அந்த  தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 Instagram Reel: https://www.instagram.com/reels/DTKmQVwkSTG/

(ரசிகர்கள் நடத்திய மெட்ரோ மரியாதை நிகழ்வு)

 

After receiving an overwhelming and heartening response to its official promo, the makers of “Happy Raj” have now successfully completed the entire shooting schedule of the film. The team marked the shoot wrap on a joyful note, reflecting the same warmth and positivity that the film promises to deliver on screen.



Produced by Jayavardhan under the banner of Beyond Pictures, “Happy Raj” marks Production No.1 of the production house. The film has been envisioned as a wholesome, feel-good entertainer that resonates with audiences across age groups. Directed by Maria Elanchezian, the film has taken shape exactly as conceived—rooted in optimism, light-hearted emotions, and relatable moments that celebrate happiness in everyday life.



The shoot was completed smoothly across planned schedules, with the director expressing gratitude to the cast and crew for their dedication, discipline, and collaborative spirit throughout the journey. The team shared that the filming experience was filled with positive energy, mirroring the soul of the story itself.



GV Prakash Kumar essays the titular role of Happy Raj, bringing charm, freshness, and a breezy screen presence to the character.Sri Gouri Priya plays the female lead, adding warmth and emotional depth to the narrative. A major highlight of the film is the return of evergreen actor Abbas to Tamil cinema after a long sabbatical, whose presence has already generated significant curiosity among audiences.



The ensemble supporting cast includes George Mariyam, Prarthna, Adhirchi Arun, Madurai Muthu, Sofa Boy Rasool, and others, each playing pivotal roles that contribute to the film’s vibrant narrative.



Written and directed by Maria Elanchezian, the film is co-produced by Jaikanth Suresh. The technical crew features Madhan Christopher as cinematographer, Justin Prabhakaran as music composer, RK Selva as editor, Kumar Gangappa as art director, and Praveen Raja handling costume design. Public Relations for the film is managed by Rekha.



With shooting now wrapped and post-production work set to commence, “Happy Raj” is gearing up to move into its next phase. Backed by the encouraging response to the promo and the positive energy from the completed shoot, the film promises to be a refreshing, feel-good entertainer that will bring smiles, laughter, and heartfelt moments to audiences.

 

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக  திரையில் தோன்றுகிறார்.


இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது,  முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற  ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது.


முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி வசந்தின் அறிமுகம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் உலகத்தை மேலும் அழகுபடுத்துகிறது.


1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட பார்ட்டி சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக  இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட,  அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில்,  சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.


இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:


“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை,  அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது.  சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும்  மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது  சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என  எனக்கு ஆசை கூட வருகிறது.”


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.


தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி  (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.


வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும்  மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

 

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 


’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார். 


திரவ் எழுதி இயக்கியுள்ள ’மெல்லிசை’ படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது. ’மெல்லிசை’ 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Pageviews