ஆகஸ்ட் 15 முதல் Sony LIV செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தலாம்
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Tamil Idol’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் Sony Vizha அறிமுகப்படுத்துகிறது.
Sony vizha மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தற்போது ‘Tamil Idol’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இது இசை மற்றும் திறமையை மையமாகக் கொண்ட ஒரு புதிய பயணமாக இருக்கும். சிறந்த குரல் வளம், மேடை நிகழ்த்தும் திறன், தனித்துவமான திறமை ஆகியவற்றை கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தேடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கின்றார்..தமிழகத்தின் சிறந்த குரலை கண்டுபிடித்து அதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ' Tamil Idol ’ உருவாகிறது. சோனி விழாவின் முக்கியமான உலகளாவிய நிகழ்ச்சியாக உருவாகும் Tamil Idol, உலக அளவில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி வடிவங்களை தமிழர்களிடம் கொண்டு வருவதோடு தமிழகத்தின் உள்ளூர் திறமைகளையும் கலாச்சாரத்தையும் முன்னிலையில் வைக்க உதவுகிறது.
Fremantle India நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கின்றது...இந்த நிகழ்ச்சி Sony Vizha மற்றும் Sony LIV ஆகிய இரு தளங்களிலும் ஒளிபரப்பாகும்...இதன் மூலம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகத் தரத்தில் நிகழ்ச்சிகளும் தமிழ் கதைகளும் ஒரே இடத்தில் ரசிகர்களை சென்றடையும் வகையில் உள்ளது.
'Tamil Idol' நிகழ்ச்சிக்கான Audition ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள பாடகர்கள், Sony LIV செயலி மூலம் பதிவு செய்து ஆடிஷனில் பங்கேற்கலாம்.
ஏ ஆர் ரகுமான் கூறுகையில்..,
புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இசையின் முக்கியமான பயணம்...அந்தக் குரல்கள் ஒருநாள் பல லட்ச மக்களைச் சென்றடையலாம். இந்த பயணத்தின் மூலம் புதிய திறமைகள்..புதிய கோணம் மற்றும் பல தலைமுறைகளின் சொல்லப்படாத கதைகளை நாம் கண்டுபிடிக்கின்றோம்.
'Tamil Idol' மூலம், முதன்முறையாக தமிழ்நாட்டின் Extraordinary குரல்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமையை கொண்டாடுவதற்கான ஒரு மேடையை வழங்குகின்றோம்.
தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், Sony LIV செயலி மூலம் Tamil Idol ஆடிஷனில் பங்கேற்கலாம்.
பங்கேற்பது எப்படி?
Sony LIV செயலியில் உள்ள Tamil Idol Audition பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும் முதலில்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பல வகையான பாடல்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் 3 வீடியோக்களை அதில் பதிவேற்ற வேண்டும்.
முதல் ‘Tamil Idol’ யார்?
அதற்கான தேடல் தற்போது தொடங்குகிறது..
தமிழகத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் நினைவில் நிற்கும் அடுத்த குரல் இருக்கிறது.. அந்தக் குரல் உங்களுடையதாக கண்டிப்பாக இருக்கலாம்
Sony Vizha என்பது Sony Pictures Networks India (SPNI) நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தளமாகும்.
தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் ரசிகர்களுக்காக Sony Vizha உருவாக்கப்பட்டுள்ளது.
‘விழா’ என்ற தமிழ் சொல்லின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சேனல், அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.
'Celebrity MasterChef Tamil' மற்றும் 'Tamil Idol' போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, தரமான புதிய தலைமுறைக்கு ஏற்ற வித்தியாசமான பொழுதுபோக்கை வழங்க சோனி விழா உறுதியாக உள்ளது.
Sony Pictures Networks India Private Limited (SPNI) என்பது ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும்.
SPNI நிறுவனம் SD மற்றும் HD என மொத்தம் 29 பிரீமியம் சேனல்களை கொண்டுள்ளது. இதில் Sony Entertainment Television, Sony SAB, Sony PAL, Sony Marathi, Sony AATH, Sony VIZHA, Sony MAX, Sony MAX 1, Sony MAX 2, Sony WAH உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட சேனல்கள் இடம்பெற்றுள்ளன.
அதனைப்போல, Sony Sports Network மூலம் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் Sony YAY மூலம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும்..,Sony PIX மூலம் ஆங்கில திரைப்படங்களையும், Sony BBC Earth மூலம் அறிவியல் மற்றும் ஆவணப்பட நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.
இதனுடன் Sony LIV என்ற டிஜிட்டல் OTT தளமும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான அசல் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் Studio NEXT நிறுவனமும் SPNI-யின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த network இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றது.SPNI தனது 31-வது ஆண்டு செயல்பாட்டை இந்தியாவில் நிறைவு செய்து வருகிறது. மேலும் ஊழியர்களுக்கான சிறந்த பணிச்சூழல் மற்றும் நிறுவன கலாச்சாரத்திற்காக பல்வேறு விருதுகளை SPNI பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்ச்சியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற ராபர்ட் டவுனி ஜூனியர் (விக்டர் வான் டூம்/டாக்டர் டூம்), கிறிஸ் எவன்ஸ் (ஸ்டீவ் ரோஜர்ஸ்) மற்றும் ஹேலி அட்வெல் (பெக்கி கார்டர்) ஆகியோர் மேடையில் இந்த ஸ்பெஷல் புரோமோவை அறிமுகப்படுத்தினர்.
முதன்முறையாக டாக்டர் டூம் இந்த புரோமோவில் முக்கியத்துவம் பெறுகிறார். இதன் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியர், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய சூப்பர் வில்லனாக உருவெடுப்பது தெளிவாகிறது. வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம், டாக்டர் டூமின் வில்லன் கதைக்களத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறார். அதே நேரத்தில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் வில்லனான டாக்டர் டூமுக்கும் தோருக்கும் இடையே நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான மோதலையும் இந்த புரோமோ காட்டுகிறது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தை ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி'எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பேக்ராக், வயாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான் கேமன், ரெபெக்கா ரோமிஜன், மேபெல் கேடனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தில், மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த பிரபல சூப்பர் ஹீரோக்கள், இதுவரை எதிர்கொண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஒன்றிணைகின்றனர். அவர்களின் உலகங்கள் ஒன்றோடொன்று மோதும் நிலையில், உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய போராட்டம் தொடங்குகிறது.
’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்தை தருகிறது. இதன் மூலம் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
சுதீர் யாதுவன்ஷி தனது ஈர்க்கும் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார். ‘துரந்தர்’ படத்தின் டைட்டில் பாடல் மற்றும் ’துரந்தர்: தி ரிவென்ஜ்’ படத்தின் ‘ஆரி ஆரி’ பாடல் மூலம் பிரபலமான அவர், ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தீவிர கதை களத்திற்கும் ஏற்ற வகையில் இந்தப் பாடலை பாடியுள்ளார். இர்ஷாத் தலால் எழுதியுள்ள பாடல் வரிகளில் தேசப்பற்று நிறைந்துள்ளது. படத்தின் இயக்குநரான ரதீஷ் வேகா, இசை மற்றும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.
ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கும் 'ஆபரேஷன் டிரால்’, தேசிய புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் உருவாகியுள்ள புலனாய்வு திரில்லர் திரைப்படமாகும். ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் வலுவான தேசப்பற்று நிறைந்த கதைக்களம் ஆகும்.
ஜெயசூர்யாவுடன் முரளி ஷர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சார், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ’ஆப்ரேஷன் டிரால்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.
ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார். ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.
’ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் இசை வெளியீடாக வந்துள்ள ‘ஜெய் ஹோ’, படத்தின் தேசப்பற்று மற்றும் அதிரடி நிறைந்த உலகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்
மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. 'காட்டாளன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து மகிழலாம்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சிறப்பான நடிப்பு மற்றும் இசை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘காட்டாளன்’ திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகத்தை மையமாகக் கொண்ட மோதலின் பின்னணியில் இப்படத்தின் கதை நகர்கிறது. அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சக்திகள், பழிவாங்குதல் மற்றும் உயிர்வாழ்தலுக்காக கடுமையாக மோதுகின்றன. இரக்கத்திற்கு இடமில்லாத இந்தப் போரில், கொடூரமானவர்களே இறுதியில் நிலைத்திருக்கின்றனர்.
இப்படத்தில் ஆண்டனி (பெப்பே) வர்கீஸ், சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பால் ஜார்ஜ், ஷரீஃப் முஹமது மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் வெளியாகியுள்ளதன் மூலம், ‘காட்டாளன்’ திரைப்படத்தை அதன் தாய்மொழியைத் தாண்டி ரசிகர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பை மனோரமாமேக்ஸ் வழங்குகிறது. அதே நேரத்தில், படத்தின் பிராந்திய அடையாளத்தையும் தக்கவைத்துக் கொண்டு, மேலும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையவும் இந்த முயற்சி உதவுகிறது.
‘காட்டாளன்’ திரைப்படம் தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்!
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது.
பிரபு தேவாவின் ஸ்டைலான தோற்றமும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மாஸ் அம்சத்தை கொடுக்க, வடிவேலுவின் காமெடி அதற்கு நேர்மாறான சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த இருவரின் கூட்டணி ஜாம்பி கதைக்களத்துடன் எப்படி பயணிக்கிறது என்பதே படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூட்டணியாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள டீசர், படம் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியிருப்பதை காட்டுகிறது.
சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கம் செய்கிறார்.
இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மொத்தத்தில், பிரபு தேவா – வடிவேலு கூட்டணி, ஜாம்பி களம், எரிமலை பின்னணி, ஆக்ஷன் மற்றும் அதற்குள் கலக்கும் வடிவேலுவின் காமெடி என “பேங் பேங்” டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது
'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான 'சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட் புரொடக்ஷன்) படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றும் படக் குழுவினர் அறிவித்துள்ளனர். பண்டிகை கால வெளியீடு என்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சாய் துர்கா தேஜ் மிகவும் தீவிரமான மற்றும் கரடு முரடான தோற்றத்தில் தோன்றுகிறார். உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன் கையில் ஆயுதத்தை ஏந்தி ஆக்ரோஷமான முகபாவனையுடன் தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் அவர் அச்சமின்றி நடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எரியும் கட்டிடங்கள்- புகை - பரபரப்பான சூழல் - ஆகியவை மோதல்கள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்தை பிரதிபலிக்கிறது.
'அசுர ஆகமன'- Asura Aagamana எனும் முன்னோட்ட காட்சி மற்றும் பிற விளம்பரப்படுத்தப்பட்ட போஸ்டர்கள் மூலம் கிடைத்த சிறப்பான வரவேற்பின் ஊடாக இப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக் குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படபிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் படத்தின் தொழில்நுட்ப மற்றும் காட்சி அம்சங்களுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ' சம்பராலா ஏடி கட்டு- SYG' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று உள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கங்கள் மற்றும் பெரிய அளவிலான ஆக்சன் காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. நீண்ட தயாரிப்பு பயணம்... தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
சாய் துர்கா தேஜ் இதில் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான- உணர்ச்சிகரமான- அம்சங்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் காட்சிகள்.... விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்... ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக இயக்குநர் ரோஹித் கே. பி. உருவாக்கி வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இப்படத்தின் பான் இந்திய அளவிலான ரசிகர்களின் கவன ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இவர்களுடன் ஐஸ்வர்ய லெட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப குழுவினரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெற்றிவேல் பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய , பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சண்டை பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன்- சேத்தன் - ப்ருத்வி ஆகியோர் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி உள்ளனர்.
நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு , சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ரோஹித் கே. பி.
தயாரிப்பாளர்கள் : கே நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு : வெற்றி பழனிச்சாமி
இசை : பி. அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு : நவின் விஜய் கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிக்குடிகர்
சண்டை பயிற்சி இயக்குநர்கள்: பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன் - கேத்தன் - ப்ருத்வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா
Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s Pan India Movie SYG (Sambarala Yeti Gattu) Shoot Wrapped Up, Set For Sankranthi Release On January 12, 2027
Mega Supreme Hero Sai Durgha Tej’s much-awaited Pan-India film Sambarala Yeti Gattu (SYG) has successfully wrapped up its entire shooting. Directed by debutant Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under the prestigious Primeshow Entertainment banner, the highly ambitious action drama is now racing through its post-production phase at a brisk pace. The makers have also announced to release the movie on January 12 for Sankranthi, 2027. The festival release is expected to further amplify the excitement around the project.
The release poster presents Sai Durgha Tej in an intense and rugged avatar. Covered in blood and bruises, the actor is seen walking fearlessly through a setting engulfed in flames, holding a weapon and sporting a fierce expression. The burning structures, smoke and dramatic atmosphere suggest a world filled with conflict and high-voltage action.
The film has already generated considerable anticipation with the impressive response to the Asura Aagamana glimpse and other promotional material. With the complete shoot now brought to a successful conclusion, the makers have shifted their focus towards post-production, working extensively on the film’s technical and visual aspects to deliver a grand cinematic experience.
Mounted on a lavish scale, Sambarala Yeti Gattu has been shot across multiple locations with elaborate sets and large-scale action episodes forming a major part of the film. The extensive production journey has now culminated in a complete wrap, marking a significant milestone for the team.
Sai Durgha Tej is set to appear in a powerful and intense role that promises to showcase him in a strikingly different avatar. Director Rohith KP is crafting Sambarala Yeti Gattu as an ambitious action drama that combines strong emotional elements with spectacular visuals and high-octane sequences.
A top Bollywood actor is playing a crucial role in the movie, further adding to its Pan-India appeal. Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth and Ananya Nagalla are also part of the ensemble cast and will be seen in prominent roles.
The film boasts an accomplished technical crew. Vetrivel Palanisamy is handling the cinematography, while B Ajaneesh Loknath is composing the music. Editor Nawin Vijay Krishna, production designer Gandhi Nadikudikar and Fight Masters Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi are part of the key technical team, contributing to the film’s ambitious visual canvas.
Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth, Ananya Nagalla
Technical Crew:
Writer, Director: Rohith KP
Producers: K Niranjan Reddy, Chaitanya Reddy
Banner: Primeshow Entertainment
DOP: Vetri Palanisamy
Music: B Ajaneesh Loknath
Editor: Nawin Vijay Krishna
Production Designer: Gandhi Nadikudikar
Fights: Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi
Costume Designer: Ayesha Mariam
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media
பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது.
பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புகை, தீப்பிழம்புகள், சிதைந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் நிறைந்த அந்தக் காட்சியில், தொலைவில் சார்மினார் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது.
பிரபாஸின் முகம் இதில் காட்டப்படவில்லை என்றாலும், அவர் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது ஆடைகள் முழுதும் ரத்தமும் அழுக்கும் படிந்திருக்கின்றன. அவரது உடல் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது. சிதைந்த தெருக்களின் வழியாக காலில் செருப்பு ஏதுமின்றி நடந்து வரும் அவர், இரு கைகளிலும் இரண்டு குறுகிய துப்பாக்கிகளை ஏந்தியிருக்கிறார். அவருக்கு முன்னால் பாரம்பரிய இந்திய உடையணிந்த மற்றொரு கதாபாத்திரம் நீண்ட கைத்தடியுடன் நடந்து செல்கிறது.
இந்தக் காட்சி, வன்முறை நிறைந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மத்தியில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் உணர்வை வெளிப்படுத்துகிறது. படக்குழு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியே இந்த போஸ்டரின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது:
“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!”
இன்றைய தலைமுறை அனுபவித்து வரும் சுதந்திரம், பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம், துணிச்சல் மற்றும் தியாகத்தின் விளைவாக கிடைத்தது என்பதை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.
“நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற வார்த்தைகள் இந்த அஞ்சலியை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த வாசகம் படத்தின் தலைப்பையே, எதிர்காலத்தை உருவாக்கிய போராளிகளுக்கான உணர்வுப்பூர்வமான அஞ்சலியாக மாற்றுகிறது.
இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மூத்த ஆளுமைகளான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பானு சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜி கையாள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனித்துள்ளார்.
நடிகர்கள்:
பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: ஹனு ராகவபூடி
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர்கள்: குல்ஷன் குமார், பூஷண் குமார் & டி-சீரிஸ்
தயாரிப்பாளர்கள்: நவீன் ஏர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார்
ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC
இசை: விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு: கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்
பாடல்கள்: கிருஷ்ண காந்த்
நடன இயக்கம்: பிரேம் ரக்ஷித்
ஆடை வடிவமைப்பு: ஷீத்தல் இக்பால் ஷர்மா, டி. விஜய் பாஸ்கர்
VFX: ஆர்.சி. கமலா கண்ணன்
பப்ளிசிட்டி டிசைனர்கள்: அனில்-பானு
PRO: யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
திரையுலகில் நுழையும்போதே புதுமையான முயற்சிகளுடன் அடியெடுத்து வைக்கும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் தான் இயக்குநர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ல் அறிவியல் கதையம்சத்துடன் வெளியான படம் '3.6.9'.
உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் படமாகவும் இது அமைந்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், முறையான விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இப்படம் மக்களிடையே பெரிதும் சென்றடையாமல் போனது.
இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் மிகப்பெரிய நடிகர்களை வைத்து, ஒரு பிரம்மாண்டமான கமர்சியல் மற்றும் அறிவியல், பேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் ஷிவ் மாதவ்.
இப்படத்தின் ப்ரீ-புரொடக்சன் பணிகள் மற்றும் மினியேச்சர் ஒர்க்குகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
படம் குறித்து இயக்குநர் ஷிவ் மாதவ் கூறும்போது,
"என்னுடைய முதல் படம் '3.6.9'. தமிழ்நாட்டில் இரண்டு உலக சாதனை செய்த முதல் படமாக அமைந்தது. ஹாலிவுட்டில் கூட யாரும் இதை முயற்சி பண்ணல. 81 நிமிஷத்துல 100 பேர் நடிச்ச ஒரு படத்தை ஒருத்தர் எடுத்தாருங்கிறது மக்களுக்கு தெரியாமயே போயிருச்சு. அந்த ரெண்டு உலக சாதனை கிடைச்சதுக்கு அப்புறம் நாம பெரிய அளவுல போயிருவோம் அப்படின்னு நினைத்த போது, நான் நினைத்த எதுவுமே இங்க நடக்கல. என்னுடைய கனவுகள் எல்லாம் அப்படியே தகர்ந்த மாதிரி ஆயிருச்சு.
நார்த்ல, கேரளாவுல இப்படி ஒரு சாதனை படம் எடுத்தது தெரிஞ்சதும் அவ்வளவு வரவேற்பு கொடுக்கிறாங்க. ஆனா, என்னோட தமிழ்நாட்டுல எனக்கு அந்த மரியாதை இல்லை.
அதேசமயம் கடந்த மூணு வருஷமா, வேற பல தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி மீண்டும் சாதனை படங்களை எடுக்கலாம் என்று கூறி என்னைத் தேடி வந்தார்கள். ஆனால் திரும்பவும் சாதனை படம் எடுக்கிறேன் என என்னுடைய அடையாளம் தெரியாமல் போக நான் விரும்பவில்லை. காரணம், சாதனைக்கு இங்கே மரியாதையே இல்லாம போயிருச்சு. சினிமா என்பதே வணிகம் தான். அதனால், வணிகத்தை நோக்கி நாமும் பயணிப்போம் என்கிற புரிதலுடன் தற்போது புதிய படத்திற்குத் தயாராகி விட்டேன்.
இந்தப் புதிய படத்தின் கதைக்களமும் விஞ்ஞான பின்னணியில் தான் உருவாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் முதன்முதலா, அதிக செட் போட்டு, சிஜி இல்லாம நிறைய முயற்சிகளை உள்ள கொண்டு வருகிறேன். மினியேச்சர்களை பயன்படுத்தி பெரிய பட்ஜெட்டில் கமர்சியலா, ஜாலியா, அதே நேரம் எண்பதுகளில் நடக்கிற ஒரு கதையை மையமா வச்சு, அதுல ஒரு விஞ்ஞானம், ஒரு ஃபேண்டஸி கலந்த ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இது இருக்கும். அந்தவகையில் நான் எதிர்பார்த்து வந்த சினிமா, இப்ப எனக்கு கிடைக்கப் போகுது என்கிற நம்பிக்கையுடன் நான் பயணிக்கிறேன்.
உலகத்திலேயே யாரும் பண்ணாததை நாம பண்ணனும், அப்படின்னு நினைச்சு வரும்போது, நான் நினைச்ச விஷயத்தை விஷுவலா சொல்ல முடியாம போகுது. இந்த புதிய படத்தில் வழக்கமான சினிமா அம்சங்கள் எல்லாமே இருக்கும். அதே நேரம், நான் ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன், அதுவும் இதுல உள்ள இருக்கு. இதிலும் உலக சாதனைதான் பண்ண முயற்சிக்கிறேன். ஆனால் அது என்னோட முயற்சியில், ஹாலிவுட்டுக்கு நிகரா, நிறைய விஷயங்கள், படத்தோட மேக்கிங்ல பண்ணனும்னு நினைக்கிறேன்.
இந்த மூணு வருஷத்துல விஎஃப்எக்ஸ்ல இருந்து, ஏஐ உட்பட டெக்னிக்கலா நிறைய என்னென்ன பண்ணலாம்னு எல்லாம் கத்துக்கிட்டு வந்துட்டு, இப்ப படம் பண்றதுக்கு தயாராகி களத்துல இறங்குறேன்.
அதற்கேற்ற மாதிரி நடிகர்கள், டெக்னிஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆளுங்கதான். இப்ப முன் தயாரிப்பு பணிகள் முடிஞ்சு, மினியேச்சர் ஒர்க் எல்லாம் நடந்துட்டு இருக்கு. படப்பிடிப்பு அக்டோபர்ல துவங்க இருக்கு. இது முழுக்க முழுக்க எல்லாமே ராமோஜி ஃபிலிம் சிட்டிலதான் நடக்கப் போகுது.
என்னுடைய முதல் படத்தில் பாக்யராஜ் சார் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் இப்போ நம்முடன் இல்லை. நான் சில சமயம் சோர்ந்துபோன நேரங்களில் கூட பாக்கியராஜ் சார், "ஷிவா, உன்கிட்ட ஒரு பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோட ஓடு, உன்னால முடியும்"னு சொல்லி எனக்கு உந்து சக்தி கொடுத்தாரு. பல சமயங்களில் அவரோட வீட்டுக்கு கூப்பிடுவாரு, என்னை வரவச்சு, மோட்டிவேஷன் பண்ணி அனுப்புவாரு. அந்த மாதிரி ஒரு குருவை இழந்தது ஒரு பெரிய வேதனை.
அவர் இறந்த தினத்தன்று அவரது கால்மாட்டிலேயே தான் நின்றுகொண்டு இருந்தேன். என் முதல் படம் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அவரும் அந்த படத்தைப் பத்தி எனக்காக நிறைய பேசி இருக்காரு. இப்பவும் சாரோட ஆசீர்வாதம் எனக்கு இருக்குன்னு நம்புறேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் நிகழ்ச்சியான MasterChef தமிழர்களின் உணர்வுகளோடும் சுவைகளோடும் புதிய வடிவில் உருவாகின்றது.
Samantha Ruth Prabhu முன்னிலையில் தமிழ் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து உணவு, சுவை, உணர்வு மற்றும் கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் Celebrity MasterChef Tamil, Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகிறது..
Sony Pictures Networks India இன்று Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை அறிவித்து இருக்கின்றது..
உலகப் புகழ்பெற்ற இந்த சமையல் நிகழ்ச்சி, Samantha Ruth Prabhu தலைமையில் தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவத்தில் உருவாகியுள்ளது..
Sony VIZHA-வின் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி இடம்பெறும். மேலும் Sony LIV மற்றும் டிஜிட்டல் தளங்களில் Exclusive குறும்படங்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் வெளியாகும். இதன் மூலம் பிரபலங்களின் சமையல் பயணம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமையலறையில் நிகழும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்கள் காண முடியும்.
நிகழ்ச்சி குறித்து Samantha Ruth Prabhu கூறுகையில்,
இந்த நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்...நான் இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுவகையில் இருக்கிறது Celebrity MasterChef Tamil..
அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு என்னை வெகுவாக ஈர்த்தது
உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும், அழகான நினைவுகளை உருவாக்கும், கேமராக்கள் வழக்கமாக நமக்குக் காட்டாத நம்முடைய ஒரு பக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்டது..
நமக்குப் பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து, தவறுகளைச் செய்து தங்களையே ஆச்சரியப்படுத்தி நாம் எதிர்பார்ப்பதைவிட அதிக ஆர்வத்துடனும் உணர்வுடனும் போட்டியிடுவதைப் பார்ப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன்..
யார் யார் சமைக்கப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன்... ஆனால், அதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் எங்கே இருக்கும்.. Sony VIZHA உடன் நாங்கள் என்ன சமைத்து வைத்திருக்கிறோம் என்பதை அனைவரும் பார்ப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை...
Celebrity MasterChef Tamil விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் வெளியாகிறது. மேலும் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களில் பிரத்யேக உள்ளடக்கங்களும் வெளியாகும்..
Sony VIZHA, Sony Pictures Networks India-வின் தமிழ் பொழுதுபோக்கு தளமாக்கும்... தமிழ் கலாச்சாரம், கதை சொல்வது, இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் ரசிகர்களுக்காக இது உருவாக்கப்பட்டு உள்ளது...
‘விழா’ என்ற தமிழ் சொல்லின் கொண்டாட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்ட Sony VIZHA, அசல் நிகழ்ச்சிகள், reality formats, திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பல தலைமுறை தமிழ் ரசிகர்களுக்காக வழங்குகிறது.
Celebrity MasterChef Tamil மற்றும் Tamil Idol போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுடன் கலாச்சாரத்துடன் இணைந்த புதிய தலைமுறை ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட தரமான மற்றும் வித்தியாசமான தமிழ் பொழுதுபோக்கை வழங்க Sony VIZHA உறுதி அளித்துள்ளது.
முன்னதாக Culver Max Entertainment Private Limited என அறியப்பட்ட Sony Pictures Networks India Private Limited (SPNI), ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation-ன் மறைமுகமாக முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும்.
முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான SPNI, SD மற்றும் HD வடிவங்களில் 29 Premium சேனல்களைக் கொண்டுள்ளது. இதில் முக்கிய இந்தி General Entertainment சேனல்களான Sony Entertainment Television, Sony SAB மற்றும் Sony Pal, மராத்தி General Entertainment சேனலான Sony Marathi பெங்காலி General Entertainment சேனலான Sony AATH தமிழ் General Entertainment சேனலான Sony VIZHA ஆகியவை அடங்கும்.
மேலும் Hindi Movie சேனல்களான Sony MAX, Sony MAX 1, Sony MAX 2 மற்றும் Sony WAH; விளையாட்டு ரசிகர்களுக்கான Sony Sports Network-ன் Sony Sports Ten 1, Sony Sports Ten 2, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 மற்றும் Sony Sports Ten 5; Kids Entertainment சேனலான Sony YAY!; English Movie சேனலான Sony PIX; Factual Entertainment சேனலான Sony BBC Earth; அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான Free Ad-Supported Streaming Television (FAST) சேனலான Sony KAL டிஜிட்டல் பொழுதுபோக்கு OTT தளமான Sony LIV தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாவுக்கான Original Content மற்றும் IP-களை உருவாக்கும் Studio NEXT ஆகியவையும் SPNI-யின் கீழ் செயல்படுகின்றது.
இந்த நெட்வொர்க் இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது...
ஊடகத் துறையிலும் அதற்கு வெளியிலும் சிறந்த பணியிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள SPNI, பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று இருக்கின்றது..
இதில் Great Place to Work® Institute, India வழங்கிய India’s Best Companies to Work For 2021, AVTAR & Seramount-ன் Most Inclusive Companies Index 2024 – Exemplars of Inclusion, மேலும் AVTAR & Seramount-ன் 100 Best Companies for Women in India பட்டியலில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இடம்பெற்றது ஆகியவை அடங்கும்.
நிறுவனத்தின் தனித்துவமான பணியிட கலாச்சாரம் மற்றும் சிறப்பான மனிதவள நடைமுறைகளுக்காக SPNI, ET Future Skills 2024 – Best Learning Program Supporting Change Transformation Business Strategy விருதையும் TISS LeapVault CLO Awards 2024 – Best Employee Engagement Program மற்றும் Best Games Based Learning Program விருதுகளையும் வென்றுள்ளது.
SPNI இந்தியாவில் தனது 31-வது ஆண்டு செயல்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு துணை நிறுவனங்களுடன் இந்தியாவில் MSM-Worldwide Factual Media Private Limited என்ற துணை நிறுவனத்தையும், Bangla Entertainment Private Limited என்ற இணை நிறுவனத்தையும் கொண்டு இருக்கின்றது..











