இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.


தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.


தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார். 


நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது. 


நடிகர்கள்: நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,

மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,

இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,

இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

 

வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது. 


குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 



நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார். 


உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும். 


டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.

 

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படம்  முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது. 


இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது. 


பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்,  சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும்  அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

வெளியாகவிருக்கும் 'திரௌபதி 2' படத்தின் முதல் தனிப்பாடலான 'எம் கோனே' சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார்.


இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய  சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். 


சின்மயி வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவிற்கு இயக்குநர் மோகன்.ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலுக்கு சின்மயி குரலை தனிப்பட்ட முறையில் தான் தேர்ந்தெடுத்ததாகவும், இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டார். மேலும், பாடலுக்குத் தேவையான பாணி குறித்து மட்டுமே சின்மயியிடம் விளக்கப்பட்டதாகவும் படத்தின் கருத்தியல் விவரங்களும் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 


சின்மயி தன்னிடமோ அல்லது இசையமைப்பாளரிடமோ விளக்கம் கேட்காமல் தனது கருத்தை வெளியிட்டது ஆச்சரியமாக இருப்பதாகவும் சின்மயி தனது கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டும் அல்லது ட்வீட்டை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.  


படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை குறிவைக்க வேண்டாம் என்றும், விமர்சனங்கள் தன்னை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மோகன் ஜி. ஒட்டுமொத்த படக்குழுவினரை குறிவைத்து பேசுவது கோழைத்தனம் என்றும் அவர்  குறிப்பிடுகிறார். 


சின்மயி குறிப்பிடும் முரண்பாடான சித்தாந்தங்கள் பற்றி கேள்வி எழுப்பும் இயக்குநர், உண்மை மற்றும் நம்பிக்கை எனப் பொருள்படும் 'ஸ்ரீபாதா' என்ற குடும்பப் பெயரை  சின்மயி எதற்காக தனது பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்றும், அவர் குறிப்பிடும் சித்தாந்த வேறுபாடுகள் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.


SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.


கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.


பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.


தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம் 


இயக்கம் ; ஷாம்


ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல் 


இசை ; அம்ரீஷ் 


படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர் 


நடனம் ; ஸ்ரீதர் 


பாடல் ; ஜெகன்


கலை ; வி.ஆர் ராஜவேல் 


ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ் 


ஆடை வடிவமைப்பு ; நிரா 


ஒப்பனை ; வீரசேகர் 


விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக் 


மக்கள் தொடர்பு ; A. ஜான்

 

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை...

அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்...

கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி  கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை..

யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து  இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்..

இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:

நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க  முக்கிய காரணம் யாரும் கெட்ட வார்த்தையை உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்.. இதில்  முக்கிய கதாபாத்திரத்தில் தா.முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர் ‌‌

இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஜேசன் வில்லியம்ஸ்,

இசை அருணகிரி படத்தொகுப்பு ஷான் லோகேஷ்  கலை இயக்குனர் என்.கே ராகுல் 

இப்படம் முழுக்க முழுக்க  ஒரே நாள் சென்னை  வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது..

 

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.AVM. சரவணன் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.


தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கோலோச்சி வரும் AVM Productions-ன் நிறுவனர் திரு.ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன், தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் பல முக்கிய, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1980-களில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, வணிக ரீதியில் பல வெற்றி படங்களை உருவாக்கியவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் K. பாக்யராஜ் என பல முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர். எளிமைக்கும், பண்புக்கும், நட்புக்கும், தூய்மையான எண்ணங்களுக்கும் சொந்தக்காரர். தமிழ் நாட்டின் பல முதலமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர். சென்னை நகரின் SHERIFF-ஆக பணியாற்றியவர்.


இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் (Film Federation of India) தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். தனது  தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்தவர். 


திரைப்பட தயாரிப்பு துறையை பற்றி தெரிந்து கொள்ள அவர் எழுதிய 'நானும் சினிமாவும்' மற்றும் 'முயற்சி திருவினையாக்கும்' போன்ற புத்தகங்களையும், அவரின் பேட்டிகளை பார்த்தாலே போதும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்து வாடும் AVM குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,


T.G. தியாகராஜன், T. சிவா.

தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள்

 

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.


இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.


மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.


நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.


“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். 


“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. 


இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.


நடிப்பு:

விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்


தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா

தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி

ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S

இசை – அபே, ஜுனைத் குமார்

ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்

எடிட்டிங் – R.C. பிரணவ்

CEO – வாசு பொடினி

 

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.


தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.


இந்நிகழ்வினில்..,


நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது..,


ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார். பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சக்தி, அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார். இப்படம் எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 300 படங்கள் நடித்துள்ளேன், நான் அகண்டா படமும் செய்துள்ளேன் Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம், நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள், அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப்பெரும் பெருமை. அனைவருக்கும் நன்றி.


நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,


அகண்டா 2 குழுவை சென்னைக்கு வரவேற்கிறேன். ஹைதராபாத் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, சென்னையில் விழா நடக்கிறது என்றவுடன் நான் ஷீட்டிங்கில் இருந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அகண்டா 2 படத்தில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. என்னை தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்த போயபாடி ஶ்ரீனு சாருக்கு நன்றி. அந்தப்படத்தில் நடித்தது சிவனின் அருள், எனக்குள் வந்த மாதிரி இருந்தது. எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தனர். நான் 2,3 காட்சிகள் நடித்தாலும், இப்படத்தில் முழுமையாக வருவது போல் செய்துள்ளார். சிவன் இப்படி தான் இருப்பார் என பாலைய்யா சாரை காட்டி என் பேரக்குழந்தைகளுக்கு சொல்வேன். வெட்ட வெளியில் செருப்பு கூட இல்லாமல் அவர் உழைத்த உழைப்பை நேரில் பார்த்து பிரமித்தேன். தமன் எல்லோரையும் அதிர வைக்கும் படி ஒரு அற்புதமான இசையை தந்துள்ளார். கமர்ஷியல் தாண்டி தெய்வீகத்தை தர போயபட்டி ஶ்ரீனுவால் தான் முடியும். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினி சாரையும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலைய்யா சாரையும் இணைத்து படம் செய்யுங்கள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி. அகண்டா 3 யும் கண்டிப்பாக செய்யுங்கள் நன்றி.


இணை தயாரிப்பாளர் : கோடி பருச்சுரி


பத்திரிக்கை ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையாகவே ஒரு பான் இந்திய படம். நம் எல்லோரும் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும். இயக்குநர் போயபாடி ஶ்ரீனுவுக்கும், பாலைய்யா சாருக்கும் என் நன்றிகள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி.


போயபாடி ஶ்ரீனு பேசியதாவது..,


அனைவருக்கும் வணக்கம், என் 3 படங்கள் கேமராமேனாக வின்சன் சார் செய்தார். அவர் மூலம் தமிழ் தெரிந்தாலும், அதிகம் பேசத் தெரியாது. அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல அதே போல தான், அகண்டா 2, இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம். தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். ஆனால் அதை கமர்ஷியலாக தந்துள்ளோம் அனைவருக்கும் நன்றி.


நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது..,


என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள் நன்றி.


தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.


இப்படத்தில் ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.


படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.


அகண்டா 2 - தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிப்பு :


நந்தமூரி பாலகிருஷ்ணா

சம்யுக்தா

ஆதிப் பினிசெட்டி

ஹர்ஷாலி மால்ஹோத்ரா


தொழில்நுட்பக் குழு :


எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி

இசை : S. தமன்

ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி

கலை : A.S. பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

சண்டை அமைப்பு : ராம் - லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது.


நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார். தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை.


அவரது உடல் இன்று மாலை 3.30 மணி வரை, ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், மூன்றாம் தளத்தில் பொதுமக்கள், உறவினர்கள், தொழில்துறை நண்பர்கள்  அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பார்வையாளன், ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி ஆகிய ஏ வி.எம். சரவணன் ஐயாவின் இழப்பு முழுத் திரைப்படத் துறையினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

Pageviews