இந்த புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடரை உருவாக்கியவர் சாம் ரெய்மி! தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! அதன் வெற்றியின் அடிப்படையில், தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது! ஈவிள் டெட் ரைஸ் (2023) வெளியானது! ஈவிள் டெட் பர்ன் (2026) என்பது ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சி மற்றும் ஈவிள் டெட் தொடரின் 6வது பாகமாகும்! 2028ல் வெளிவரவிருக்கும் 7வது பாகத்தை எதிர்நோக்குங்கள்!


SYNOPSIS-

இதுவரை காணாத மிகவும் பயங்கரமான திகில் பயணமாகக் கருதப்படும் இப்படத்தின் திரைக்கதை, தன் கணவனை இழந்த பிறகு தன் மாமியார் வீட்டில் தனிமையாக வசிக்க முடிவெடுக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது! ஆனால் அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, அது நரகத்திலிருந்து வந்த ஒரு குடும்ப சந்திப்பாக மாறுகிறது…


தயாரிப்பாளர்கள் –

இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக்


நடிகர்கள் – சொஹைலா யாகூப், டேண்டி ரைட், ஹண்டர் டூஹான், லூசியான் புக்கானன், ஏரல் ஷாண்ட் மற்றும் பலர்.


ஒளிப்பதிவு – பிலிப் லோசானோ        இசை – டபுள் டேஞ்சர்


CC        சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு — ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் & தெலுங்கு மொழிகளில்


 

வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட " திருக்குறள் - 2 படத்தின் மாதிரி காட்சி.


‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.


அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம்  தயாராகிறது.


ஆங்கிலத்தில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது.


திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர்.


VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார்.


திருக்குறள் முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


எழுதி இயக்குகிறார் A. J. பாலகிருஷ்ணன்.


இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்,

அமெரிக்க தமிழ் சங்க பேரவை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ் சங்கத் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் திருக்குறள் படம் திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு திருக்குறள் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான  ஆங்கில மொழியில் உருவாகும் " Once Upon a Time in Hindustan " படத்தின் நான்கு நிமிட மாதிரி காட்சி திரையிடப்பட்டது.


அதில் வரும் அறம் சார்ந்த காட்சிகளை பார்த்த அனைவரும் திகைத்துவிட்டனர். இன்றைய நவீன காலகட்டத்திற்கு இந்த அறம் எப்படி சாத்தியம் என்று இயக்குனர் A.J. பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு,


இயக்குனர் பாலகிருஷ்ணன்..


நாகரீகம், செயல்கள், எண்ணங்கள் மாறும் ஆனால் அறம் ஒருபோதும் மாறாது என்று பதிலளித்துள்ளார்.

 

வெர்டிக்கல் சினிமாவை மையமாகக் கொண்டு படைப்பாளர்களை ஊக்குவிக்கும் கதைஷார்ட்ஸ் (Kadhaishorts) நிறுவனத்தின் படைப்பாளர் சமூகமான ‘கதை கிளப்’ (KadhaiClub), டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 60 விநாடி வெர்டிக்கல் குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.



இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டி, புதிய மற்றும் அனுபவமிக்க திரைப்படப் படைப்பாளிகள் வெர்டிக்கல் திரைப்பட வடிவின் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, 60 விநாடி குறும்படங்கள் மூலம் தங்களது படைப்பாற்றல், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.



போட்டியில் பங்கேற்போர், 60 விநாடிகள் கொண்ட வெர்டிக்கல் குறும்படம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு மக்கள் எவ்வாறு ஆளாகிறார்கள், இத்தகைய மோசடிகளால் ஏற்படும் உணர்வுபூர்வமான மற்றும் நிதி ரீதியான பாதிப்புகள் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை கதை வடிவில் சித்தரிக்க வேண்டும்.


ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் இதற்கான பிரத்யேக இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தங்களின் படைப்புகளை வரும் ஜூலை 15-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக 98400 15719 என்ற எண்ணிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.


வெற்றி பெறும் சிறந்த குறும்படத்திற்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அத்துடன், அந்த குறும்படம் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தில் அவர்களின் கதை சொல்லும் திறமையை உலகறியச் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும்.


குறுகிய கதைகள் மூலம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை உருவாக்குவதில் 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தத் தளம் சமீபத்தில் 'தி அவுட்லாஸ்' என்ற குறு-நாடகத் தொடரை வெளியிட்டது. டிஜிட்டல் அரெஸ்ட் பிரச்சனை குறித்தும், அப்பாவி மக்கள் எவ்வாறு இதுபோன்ற மோசடிகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள் என்பது குறித்தும் இந்தத் தொடர் விளக்குகிறது. விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான கதை சொல்லும் முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், இந்த முக்கியமான பிரச்சனை குறித்த தங்களின் பார்வையை வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தப் படைப்பாளிகளை 'கதை கிளப்'  ஒன்றிணைக்கிறது.


மொபைல் போன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதால், மக்கள் கதைகளைப் பார்க்கும் விதம் மாறி வருகிறது. இதனால், இது ஒரு சக்திவாய்ந்த கதை சொல்லும் ஊடகமாக உருவெடுத்துள்ளது. இது, படைப்பாளிகளை தங்களின் எளிமையான கதைகள் மூலம் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற முயற்சிகள் மூலம், இளம் படைப்பாளிகளை உருவாக்குவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குத் தேவையான முக்கியமான விவாதங்களை இந்த தளத்தின் மூலம் கொண்டு செல்லவும் 'கதை கிளப்' திட்டமிட்டுள்ளது.


கதை கிளப் பற்றி: கதை கிளப் என்பது 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனத்தின் வெர்டிக்கல் சினிமா படைப்பாளர்களுக்கான சமூக தளமாகும். வெர்டிக்கல் கதை சொல்லும் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றல், வழிகாட்டுதல், புதிய வாய்ப்புகள் மற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேடையை வழங்கி, வளர்ந்து வரும் வெர்டிக்கல் பொழுதுபோக்கு உலகின் ஒரு அங்கமாக அவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

 

Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music  கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.


டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music  கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.


ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.


மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக, ஜூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கினர். டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம், “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்று பதிவிட்டு கியாரா அத்வானி-யை குறிப்பிட்டது. அதற்கு கியாரா ஒரு வார்த்தையில் “தபாஹி” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து ஜீ மியூசிக் கம்பெனி, அவரது பதிலை மேற்கோள் காட்டி “Stay Tuned…” என்று பதிவிட்டது. இந்த சுவாரஸ்யமான சமூக வலைதள பரிமாற்றம், அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களான யோகராஜ் பட் (கன்னடம்), ராமஜோகைய்யா சாஸ்திரி (தெலுங்கு), விக்னேஷ் சிவன் (தமிழ்), மற்றும் ரஃபீக் அகமது (மலையாளம்) ஆகியோர் தங்களது மொழிகளில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இது டாக்ஸிக் திரைப்படத்தின் உண்மையான பான்-இந்திய படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், ஜீ மியூசிக் கம்பெனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியாக நாடு முழுவதும் இசை வெளியீட்டை முன்னெடுத்து வருகிறது.


இந்த திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.


பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறியதாவது:


”‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது சிதைவாகவும், முழுமையான சரணாகதியாகவும், அனுமதி கேட்காமல் எரியும் நெருப்பாகவும் இருக்கும் காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படம் அதே தீவிரத்தை தாங்கும் இசையை வேண்டியது—ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும். யாஷ் பாய் திரையில் வெளிப்படுத்தும் உறுதியை இசையிலும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பதிவு செய்ய முயன்றேன். எனக்கு ‘தபாஹி’ என்பது காதலின் வடிகட்டப்படாத, கட்டுப்படுத்த முடியாத துடிப்பைத் தேடும் ஒரு இசைப் பயணம். ஆறுதல் அளிப்பதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் உணர்வே இந்தப் பாடலின் மையம்.”


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள டாக்ஸிக், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.


சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.


‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக  ( Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது.


இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில்  தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .



மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும்  தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்-  ஆண்டனி பாக்யராஜ் - ராஜா -  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.


அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.


'பைசன்' படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற இளம் நடிகரான துருவ் விக்ரம் தற்போது பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.


அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி ', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட் 'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

 

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.


ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.


லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். 


இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, "இதற்கு முன்பு 'பிரின்ஸ்', 'லவ் டுடே' போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்" என்றார்.


கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை. 


இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.


தொழில்நுட்பக் குழு விவரம்:


ஒளிப்பதிவு: ஓம் நாராயண், 

இசை: பிரணவ் முனிராஜ், 

படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ், 

கலை இயக்கம்: பாவனா கோவர்தன், 

ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார், 

ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன், 

நடனம்: அசார், 

ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,

சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன்,

இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்,

தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்,

கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.,

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன், 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.,

நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.

 

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. 


இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்...’, ’அல்மோஸ்ட் டன்...’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும் அந்த வார்த்தைக்கு முக்கிய இடம் உண்டு. 


இன்று (ஜூலை 6, 2026) காலை பூஜையுடன் இப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பிரம்மா, ஹாட்ஸ்டார் சபரி, திங்க் மியூசிக் சந்தோஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக், ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் லலித் குமார், அபிஷேக் கீதம், ரங்கராஜ் பாண்டே, விது, இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "புதிய கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தயாரிப்பாளருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம். அந்த வகையில் ஹெச். வினோத் மற்றும் ராஜு ஜெயமோகனுடன் 'அல்மோஸ்ட் நல்லவன்' படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மண்ணின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் இயல்பான நகைச்சுவை இந்தப் படத்தில் உள்ளது. ராஜு இந்தக் கதையை சொன்னபோதே, திரையரங்கில் ரசிகர்கள் நிச்சயம் சிரித்து மகிழ்வார்கள் என்பது உறுதியானது. இயல்பான நகைச்சுவை, புதிய திரைக்கதை மற்றும் முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்குகிறோம்" என்றார். 


தயாரிப்பாளர் ஹெச். வினோத் கூறியதாவது, "நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. குறிப்பாக, இந்த வருடம் வெளியான பல நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். நான் நினைத்ததை விடவும் மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமா எனக்கு கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் என்னை தொடர்ந்து நல்ல கதைகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. அதனால்தான் புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிப்பாளராகவும் பயணிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது. 'அல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார். 


நடிகரும் இயக்குநருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது. "'அல்மோஸ்ட் நல்லவன்' என்ற தலைப்பே இந்தப் படத்தின் மையக் கருத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம். சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்று கூட நம்பத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். 


அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய வித்தியாசமான டார்க் காமெடி மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இது. முதலில் இந்தக் கதையை சுதன் சார் மற்றும் வினோத் சாரிடம் கூறினேன். சினிமா பற்றிய அவர்களின் அனுபவமும் அறிவும் இந்தக் கதையை முழுமையான திரைக்கதையாக உருவாக்க என்னை ஊக்குவித்தது. இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தை நம்பி ஆதரவு அளித்த ஹெச். வினோத் சார், ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ், சுதன் சுந்தரம் சார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தற்போது தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம்" என்றார். 


இப்படத்திற்கு டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் அவர்களிடம் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ’ஜெயிலர்’, ’ஜெயிலர் 2’, ’டாக்டர்’ போன்ற படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். கலை இயக்குநராக பாலா ஜெயபிரதா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளை ஓம் அமைத்துள்ளார். ’96’, ’மெய்யழகன்’ போன்ற படங்களில் பணியாற்றிய கோவிந்த் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஆடை வடிவமைப்பை ஜெஃபர்சன் மற்றும் ராஜி தேனப்பன் கவனிக்கின்றனர். நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தின் வி எஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது.


வலுவான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் புதுமையான திரைக்கதையுடன் உருவாகி வரும் ’அல்மோஸ்ட் நல்லவன்‘ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது.


கோயம்புத்தூர்: இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.


ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தர நிகழ்ச்சி தொடங்கியது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது. இதனுடன், நவீன சொகுசு அதிவேக கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜி.டி. நாயுடுவின் காலத்தைத் தாண்டிய கண்டுபிடிப்புகளையும், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இணைக்கும் விதமாகவும் இது அமைந்தது.


மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகம் வரை சென்ற அதிநவீன சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்களை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றது நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அதிவேக பயணம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் மீதான பேரார்வத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது. சூரியன் மறையும் மாலை நேரத்தில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, பார்வையாளர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.


கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைய்லர் பார்வையாளர்களின் உற்சாகத்துடன் அவர்களுக்கு திரையிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான விவரங்கள் மற்றும் பிரம்மாண்டமான திரையனுபவத்துடன் கூடிய இந்த டிரெய்லர் ‘இந்தியாவின் எடிசன்’ என்று கொண்டாடப்பட்ட ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, கண்டுபிடிப்பு ஆர்வம், தேசப்பற்று மற்றும் அவரது வரலாற்று சாதனைகளை கண்முன் காட்டியது. ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவனின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, "ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது" என்றார்.


நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டதாவது, "பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது, பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகள் அவரது சாதனைகளைப் பாராட்டி வருகின்றன. ஆனால், 'ஜி.டி.என்’ திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்த அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனிதரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்" என்றார்.


இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த நாள்தான் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பப்புள்ளி. அவரது சாதனைகள், போராட்டங்கள், யாருக்கும் தெரியாத வாழ்க்கை அத்தியாயங்கள் என்னை ஆழமாக பாதித்தன. இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறு பெரிய திரைக்கும் கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது" என்றார்.


இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டனர்.


இந்தப் படத்தில் ஆர். மாதவன் உடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். திரைக்கதையை கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் கிரியேட்டிவ் புரொட்யூசராக அரவிந்த் கமலநாதன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பாளராக பிஜித் பாலா, நிர்வாகத் தயாரிப்பாளராக முரளிதரன், தயாரிப்பு மேலாளராக ஹக்கீம் சுலைமான், வசனகர்த்தாவாக முகில், கலை இயக்குநராக சிரில் குருவில்லா, ஆடை வடிவமைப்பாளராக ஜிஷாத் ஷம்சுதீன், ஒலி வடிவமைப்பாளராக சித்தார்த் சதாசிவ், ஒப்பனை கலைஞராக ரஞ்சித் அம்பாடி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


தேசிய விருது பெற்ற 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.


’இந்தியாவின் எடிசன்’, ’வெல்த் கிரியேட்டர் ஆப் கோயம்புத்தூர்’ எனப் போற்றப்படுபவர் கோபாலசாமி துரைசாமி நாயுடு (1893–1974). சுயமாகக் கற்றறிந்த கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மற்றும் கல்விசார் கொடையாளர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்மோட்டார், ராசண்ட் ரேசர், வாக்குப் பதிவு இயந்திரம், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரு இருக்கை பெட்ரோல் கார் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது சாதனைகள் சர் சி.வி. ராமன், சர் எம். விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டன. 1967 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. உணர்வுபூர்வமான டிரெய்லர், உயர்தர தயாரிப்பு தரம் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை கொண்டாடும் கதையுடன், ’ஜி.டி.என்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

 

சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின்  கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.


புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக 'பலூன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக 'டிக்கிலோனா' மற்றும் தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக 'சூப்பர் ஹீரோ' உருவாகியுள்ளது. 


வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். 'லோகா – சாப்டர் ஒன்', சமீபத்தில் வெளியான 'பரிமளா & கோ' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று. 


இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், 'பலூன்' திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு 'டிக்கிலோனா' மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


'சூப்பர் ஹீரோ' திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் 'குஷி', மலையாளத்தில் 'ஹிருதயம்', தமிழில் 'ஒன்ஸ் மோர்' உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Pageviews