Anthony’s Atelier நிறுவனம் சார்பில்  எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.

மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  படம்  வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து,  இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் 

கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி. ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், எங்களை வாழ்த்த வந்த தனஞ்செயன் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி.”

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.

கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.

படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.

குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.

தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது.., 

“பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்திற்காக அனைவரும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

யங் கிரியேட்டர், யங் ஹீரோ, யங் புரொடியூசராக இருக்கும் ஆண்டனியை உங்கள் சார்பாக வரவேற்கிறேன். அதேபோல், புதிய முகமாக அறிமுகமாகும் மதுமிதாவுக்கும் வாழ்த்துகள். நல்ல கிரியேட்டர்களும் தயாரிப்பாளர்களும் வரும்போது கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஆண்டனிக்கு நன்றி. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. இரண்டு இசையமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆதம் நாசர், நவ்யா சுஜி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் சரியான இடத்திற்கும், சரியான ரசிகர்களிடமும் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.”

கலை இயக்குநர் கே.கே. சுரேந்தரன் பேசியதாவது.., 

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். இது எனக்கு நான்காவது படம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கு மிகுந்த நன்றி. ஒரு அழகான காதல் டிராமாவை மிகவும் கவித்துவமான முறையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறோம். என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைத்துறை நண்பர்களுக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய சந்தோஷ், ஹரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

நடிகர் ஆலம் ஷா பேசியதாவது.., 

“இங்கு வந்திருக்கும் அனைத்து மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் வணக்கம். நான் BOFTA Film Institute-ல் நடிப்பு பயிற்சி பெற்றவன். இந்தத் தொழிலை சரியான முறையில் கற்றுக்கொடுத்த என்னுடைய வழிகாட்டியும், ஆசிரியருமான தனஞ்செயன் சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கும், என்னுடன் நடித்த ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு குழுவாக இருந்தது. நான் இதற்கு முன்பு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பரபரப்பு இங்கு இல்லை. முதலில் வசனங்களை கொடுத்து, நன்றாக ரிகர்சல் செய்த பிறகே டேக் சென்றோம். இயக்குநர் ஆண்டனி எங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நாங்கள் இம்ப்ரோவைஸ் செய்ய, அதிலிருந்து அவரும் தனது பங்களிப்பைச் சேர்த்தார். அதனால் திரையில் எங்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அன்றைய நாளுக்கான சம்பளம் உடனடியாக எங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை மிகவும் பாராட்ட வேண்டும். அதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இது ஒரு நல்ல ஃபீல்-குட் படமாக இருக்கும். நன்றி.”

நடிகை நவ்யா சுஜி பேசியதாவது..,

“வந்திருக்கிற அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி சாருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இது. இதில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். வலுவான முன்தயாரிப்புடன் மிகவும் தொழில்முறையாக பணியாற்றிய இந்தப் புதிய குழுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது.

காதல் கதை என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும். புதிய குழுவினருக்கு உங்கள் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். நன்றி.”

இசையமைப்பாளர் ஜெய்கார் ஹரிநாத்

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்காகத்தான் இயக்குநர் ஆண்டனி சாருடன் பயணம் தொடங்கியது. ஆனால், பாடல் பாடலாக அடுத்தடுத்து உருவாகி, ரீரெக்கார்டிங் வரை இந்தப் பயணம் தொடர்ந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி.

ஸ்கிரிப்டிங் முதல் மிக்சிங் வரை படத்தின் உருவாக்கத்தை நேரடியாக பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் அமைதியாகவும், சர்வதேச தரத்தில் மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. அந்த சூழலில் உருவான இந்த ரொமான்டிக் டிராமா மிகவும் அழகாக வந்திருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் முழுவதும் லைவ் சவுண்டில் உருவாகியிருப்பது. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் இன்னும் நெருக்கமான, அற்புதமான அனுபவம் கிடைக்கும். என்னுடைய முதல் பாடலுக்கு கார்த்திக் நேத்தா போன்ற ஒரு சிறந்த பாடலாசிரியர் வரிகள் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வெஸ்டர்ன் பாணியில் திட்டமிட்டிருந்த பாடலை, அவரது அழகான தமிழ் வரிகளால் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றொரு இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை; வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற வகையில் இருவருடைய இசையும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ஒரு சிறந்த இசை அனுபவமாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி, அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் அசோக் ஸ்ரீதரன் பேசியதாவது.., 

“இயக்குநர் ஆண்டனி சார் கதையை மிகவும் ஆர்வத்துடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் விவரித்தார். முதலில் நான் பின்னணி இசைக்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால், கதையை கேட்ட பிறகுதான் ஒரு முக்கியமான பாடலை உருவாக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது தெரிந்தது.

அப்படித்தான் ‘உருகாதே உயிரே’ பாடல் உருவானது. இந்தப் பாடல் தீவிரமான உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதால் பெரிய இசைக்கோவை, குறிப்பாக ஸ்ட்ரிங்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கு மேலும் வலு சேர்க்க சிறந்த பாடலாசிரியர் தேவைப்பட்டதால் கார்த்திக் நேத்தா சாரை நான் பரிந்துரைத்தேன். சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ராவை வைத்து பாடலை பதிவு செய்தது இன்னும் அழகை கூட்டியது. ‘உருகாதே உயிரே’ பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. தற்போது கேட்பது ஆண் குரல் வெர்ஷன். படத்தின் முக்கியமான கட்டத்தில் பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் மற்றொரு வெர்ஷன் இடம்பெறும். ஒரே மெட்டில், வேறுபட்ட உணர்வுகளுடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது இயக்குநரின் அழகான யோசனை.

அதேபோல் ‘ஒரு கண்ணில் தூரம்’ பாடலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற இசையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றினோம். இன்றைய சூழலில் மெலடி பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்கான நல்ல இசை அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி.”

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநரும் கதாநாயகனுமான டி. ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதும்போது, இயக்குநர் ஆண்டனி கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. குறிப்பாக, ஒரு தனிமனிதன் போதையை நோக்கி செல்வதற்கான உளவியல் காரணங்களை இப்படம் மிகவும் தெளிவாக பேசுகிறது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் மதுவை ஒரு போதையாக மட்டுமே பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையில் நம்மை மயக்கத்திற்குள் தள்ளும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. இன்றைய வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தொடங்கி பல விஷயங்கள் நம்மை அறியாமலேயே ஒரு விதமான போதைக்குள் வைத்திருக்கின்றன. இந்தப் படத்தில் ‘கார்த்திக்’ என்ற கதாபாத்திரத்துக்கு ‘மது’ என்ற கதாபாத்திரம் தெளிவைக் கொடுப்பது எனக்கு மிகவும் கவித்துவமான விஷயமாக இருந்தது. அந்த உணர்வுதான் பாடல்களிலும் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பாக ‘உருகாதே உயிரே’ பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. இசையமைப்பாளர்கள் இருவரும் பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் குறித்து இன்னும் நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். அந்த வகையில், ஆண்டனி ஒரு முக்கியமான விஷயத்தை அழகான கதை சொல்லல் மூலம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு கலைஞனாகவும், சினிமா ரசிகனாகவும், தனிமனிதனாகவும் இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.
இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.
படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது.., 

இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.

படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார். நான் தனிப்பட்ட முறையில் ஜி.வி. பிரகாஷ் சாரின் ரசிகன். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி தேர்விலும் இயக்குநர் மிகவும் கவனமாக செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மூலமாக கயாது லோஹரை பார்த்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணுகினோம். படத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகள் சவாலான சூழ்நிலைகளில் படமாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை உருவாக்குவதில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முழுமையாக உழைத்துள்ளனர். ஒரு தயாரிப்பாளராக கலைஞர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். குறிப்பாக, விஷுவல்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்காக படக்குழு மிக நீண்ட காலமாக உழைத்துள்ளது. இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக தனது முழு முயற்சியையும் அர்ப்பணித்துள்ளார். அவரது கனவு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தப் படம் இன்று மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, சவுண்ட், எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுடன் இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இம்மார்டல்’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷுவல் அனுபவத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். படம் வெளியான பிறகு உங்கள் அனைவரின் ஆதரவும், கருத்துகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது.., 

“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.

கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது.., 

“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது.., 

இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம். 

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது.., 

“இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என படக்குழுவினரின் நேர்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷ் எப்போதும் தனது பணியில் அபாரமான ஆற்றலுடன் செயல்படுபவர். எத்தனை படங்களில் நடித்தாலும், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது உழைப்பும் வேகமும் குறைவதில்லை. அவர் வாங்காத தேசிய விருது இல்லை ஆனாலும் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் விஷனும் மிகப்பெரியது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், பிரமாண்டமாக படத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தும் முயற்சியும் பாராட்டுக்குரியது. நல்ல இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

‘இம்மார்டல்’ ஒரு அழகான ரொமான்டிக் கதையுடன், பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒவ்வொரு ஃப்ரேமின் பின்னாலும் படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பை ரசிப்பார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்றார்.

நடன இயக்குநர் சபரீஷ் பேசியதாவது.., 

“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். குறிப்பாக, இது எனது முதல் படத்தைப் போன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இது எங்களின் இரண்டாவது திரைப்படமாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண் அண்ணா, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது.., 

“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்தின் பணிகளில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

மேலும், எனது குரு மற்றும் அவருடன் பணியாற்றிய அசோசியேட் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் எனது பயணத்தில் மிகவும் முக்கியமானது. ‘இம்மார்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது அனைவரும் இணைந்து உழைத்த படம் என்பதால், உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.

நடிகர் டி.எம். கார்த்தி பேசியதாவது..,

“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறினார். அப்போது பேசிய கதாபாத்திரத்தை தற்போது இன்னும் விரிவுபடுத்தி முழு நீள கேரக்டராக உருவாக்கியிருந்ததால், இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசைப் போட்டியில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு பரிசு வழங்கியது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

‘இம்மார்டல்’ மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இதில் வழக்கமான மாஸ் என்ட்ரி இருக்காது, ஆனால் மாஸ் ரசிகர்கள் உட்பட அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது.., 

“பெரும்பாலும் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்காகவே மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தமிழ் தெரியாத நிலையிலும் நாயகி தமிழ் வசனங்களை மிகவும் அழகாகப் பேசி நடித்தது என்னை வெகுவாக கவர்ந்தது.

இது மொபைல், டிவி அல்லது ஓடிடியில் சாதாரணமாக பார்க்க வேண்டிய படம் அல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது.., 

‘“ஜி.வி. பிரகாஷ் சார் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை ஆதரிப்பவர். இந்தக் கதையைக் கேட்டதுமே இது ஒரு எக்ஸ்பெரிமென்டல் முயற்சி என்பதால் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் என்று கூறினார்.

படப்பிடிப்பின்போது பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக சில இடங்களில் படப்பிடிப்பு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் எந்தவிதமான தயாரிப்பு ரீதியான தடையும் ஏற்படுத்தாமல், எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்று முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்தார். அதுவே இந்தப் படம் இவ்வளவு தரமாக உருவாக முக்கிய காரணம்.

படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ‘இம்மார்டல்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். 

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – மாரியப்பன் சின்னா
தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – AK Film Factory
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்
இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
கலை இயக்கம் – சிவசங்கர்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
நடனம் – சபரீஷ்
ஆடை வடிவமைப்பு – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
DI – Get In Dream Studio
கலரிஸ்ட் – ஸ்ரீராம்
VFX – R. மஹி
ஸ்டில்ஸ் – இ. ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்
ஒப்பனை – P. மாரியப்பன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

 

The much-awaited movie Anbe Diana is now streaming in Telugu, Tamil, Malayalam, Kannada, and Hindi on Sony LIV, following its theatrical release. Blending romance, humour, cultural and family dynamics, the film will now reach a wider audience, allowing viewers to experience this story from the comfort of their homes.


Set against the backdrop of Perambur, Chennai, Anbe Diana follows a conservative young man whose world takes an unexpected turn when he falls in love with a free-spirited Anglo-Indian girl. As two contrasting worlds come together, what follows is a journey shaped by family expectations and the complexities of finding your own voice. 


Catch Anbe Diana, now streaming exclusively on Sony LIV

 

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (Fipchain Technology Private Limited) நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்ட சேவைகள் பிரிவான ஐபி கிளைம்ப் (IP Climb), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association - SWAN) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, அவர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உரிமை மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.


இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அறிமுக நிகழ்ச்சி மற்றும் சேவைகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தில் பங்கேற்றனர்.


நிறுவனத்தின் பயணத்தை அறிமுகப்படுத்திய ஃபிப்செயின் நிறுவனர் ஜி. கே. திருநாவுக்கரசு, புரொடியூசர் பஜார் மற்றும் ஐபி கிளைம்ப் உள்ளிட்ட சேவைகள் மற்றும் முன்னெடுப்புகளின் வளர்ச்சி குறித்தும் பேசினார். பொழுதுபோக்குத் துறைக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதில் ஃபிப்செயினின் பணிகள் மற்றும் மாறிவரும் அறிவுசார் சொத்துரிமைத் தேவைகளை எதிர்கொள்வதற்கான அதன் முயற்சிகள் குறித்த கண்ணோட்டத்தை அவர் வழங்கினார்.


ஐபி கிளைம்ப் பிரிவின் தலைவரான அர்ச்சனா கவில், "எழுத்தாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புத் தொகுப்பு" (Writer’s Legal Protection Toolkit) என்ற தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்தினார். எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சட்ட மற்றும் அறிவுசார் சொத்துரிமைச் சிக்கல்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது. காப்புரிமைப் பாதுகாப்பு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிலையான, நீண்டகால காப்புரிமை ஊதியம் (ராயல்டி) கட்டமைப்புகளை நிறுவுவதன் முக்கியத்துவம் ஆகியவை இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டன.


எழுத்தாளர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கவலைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாதுகாப்பதற்கும், படைப்பாளிகள் தங்கள் உரிமைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து நிர்வகிக்க உதவும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் சாத்தியமான கூட்டுத் தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டது.


எழுத்தாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி உறுப்பினர்களுக்கான பிரத்யேக இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் முறையான ஒப்பந்தக் கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களை எளிதாக நிர்வகிக்க முடிவதோடு நீண்ட காலத்திற்கு அவர்களின் படைப்புகளைப் பாதுகாப்பாகப் பதிவு செய்து, கண்காணித்து மற்றும் நிர்வகிக்கலாம்.


ஐபி கிளைம்ப் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் இடையிலான இந்தக் கூட்டு முயற்சி, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும், நீண்டகாலத்திற்கு அவர்கள் தங்கள் படைப்புகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும் நடைமுறை வழிமுறைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் இரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


IP Climb/Fipchain தரப்பிலிருந்து அர்ச்சனா கவில், கீர்த்தனா, வெற்றிச்செல்வன், ஜி. கே. திருநாவுக்கரசு, மதனிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


SWAN அமைப்பின் சார்பில் தலைவர் சேரன், செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்: சிநேகன், வேல்முருகன், பழனி பாரதி, யார் கண்ணன், பாலசேகரன், செல்வபாரதி, நவீன், கே. பி. ஜெகன், வின்சென்ட் செல்வா, ரஞ்சித், பிரபாகர், சலங்கை துரை, ஜே. பி. ஜெயப்பிரகாஷ், அரவிந்தன் .


IP Climb பற்றி


IP Climb என்பது Fipchain Technology Private Limited நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்டச் சேவைகளுக்கான பிரிவாகும். படைப்பாளிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்தவர்கள் தங்கள் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் அவற்றிலிருந்து நீண்டகால மதிப்பைப் பெறவும் உதவுவதில் கவனம் செலுத்தி, அறிவுசார் சொத்து மேலாண்மைக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை இது வழங்குகிறது.


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) பற்றி


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) எழுத்தாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், திரைப்படத் துறையில் உள்ள எழுத்தாளர்களின் தொழில்முறை நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்படுகிறது. IP Climb உடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், தனது உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு, ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த SWAN திட்டமிட்டுள்ளது.

 

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.


‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு  கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர்  மேலவளவு கருப்பு  கோயிலில் கிடா வெட்டி,  பொதுமக்களுக்கு விருந்து வழங்கி,  அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக்குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.


சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.


தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணி கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது



‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது.


இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது.


குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலின் அடுத்த கட்டமாக அமைந்துள்ள திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் பாடல், ரசிகர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருசேரக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.


இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் ‘மீசைய முறுக்கு 2’, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசை என அனைத்து அம்சங்களையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.


‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.


முதல் பாகத்தின் இசை மற்றும் இளைய தலைமுறையினருடன் ஒன்றிணைந்த அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ‘கலைவாணியே’ பாடலும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் நடிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவருடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இசை, காதல், நட்பு, குடும்பம், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, திரையரங்குகளில் ஒரு திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு இசைக் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


நடிகர்கள்

* ஹிப்ஹாப் தமிழா

* சைத்ரா ஜே ஆச்சார்

* கேதிகா ஷர்மா

* ரம்யா ரங்கநாதன்

* ஹர்ஷத் கான்

* கருணாஸ்

* நாசர்

* ஆடுகளம் நரேன்

* கருணாகரன்


தொழில்நுட்பக் கலைஞர்கள்

கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா

தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்

இசை: ஹிப்ஹாப் தமிழா

படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார்

நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்

ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்

புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி

நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா

சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்

DI: Knack Studios

கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்

VFX: 85FX, Hocus Pocus

கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D

டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார்

மார்க்கெட்டிங்: Bonk Digital

புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz

முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன்

காஸ்ட்யூமர்: அருண்

ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா

ஒலிக்கலவை: கண்ணன் கணபத்

ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார்

புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C

புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

 

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.


இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.


இன்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.


பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.


50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை ஊடகங்கள் முன்னிலையில் தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் மக்களிடம் சென்றடையவும், ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.

 

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா அளவிலான ரசிகர்கள் வரவேற்பு மற்றும் உலகளவிலான அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம், அல்லு அர்ஜுன் பிராந்திய சினிமாவின் எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடங்கிய அவரது பயணம், இன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட உச்ச நட்சத்திரமாக உள்ளார். இது இந்திய சினிமாவின் மாறிவரும் சூழலையும் பிரதிபலிக்கிறது.


’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியிலிருந்து, சாதனை படைத்த ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படத்தின் தாக்கம் வரை, பல்வேறு மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ரசிகர்களுடன் வலுவான தொடர்பை அல்லு அர்ஜுன் உருவாக்கியுள்ளார்.


அவரது திரைத்துறை சாதனைகளைத் தாண்டி, கலாச்சாரம், முன்னணி பிராண்டுகள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு துறையிலும் அவரது செல்வாக்கு விரிவடைந்துள்ளது. அவரது தனித்துவமான ஸ்டைல், ஐகானிக் மேனரிசம் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் ஆகியவை, இன்றைய இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக அவரை மாற்றியுள்ளன.


ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ அட்டைப்படத்தில் இடம்பெற்றிருப்பது, அவரது நட்சத்திர அந்தஸ்தையும் உலகளாவிய மேடையில் இந்திய நட்சத்திரங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அட்டைப்படம் ஒரு நடிகராக அல்லு அர்ஜுன் பெற்ற வெற்றியை மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த கலாச்சார அடையாளமாக அவர் மாறியுள்ளதையும் கொண்டாடுகிறது.


இந்திய சினிமாவையும் தன் நட்சத்திர அந்தஸ்தையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வகையிலான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு, ஃபோர்ப்ஸ் இந்தியா ஷோஸ்டாப்பர்ஸ் 2026 அட்டைப்படம் அவரது பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.

Pageviews