தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது.

உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி, ஒரு துணையைத் தேட விரும்பும் அவளது முடிவு, குடும்பம், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தைரியம் ஆகிய கேள்விகளை அவளுக்கு முன்வைக்கிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் மற்றும் பாலாஜி சக்திவேல் நடித்துள்ள இந்த திரைப்படம், நுணுக்கமான கதை சொல்லலையும் இயல்பான நடிப்பையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதன் மூலம், பிராந்திய சந்தைகளில் உள்ள பார்வையாளர்களையும் திரைப்படம் சென்றடைந்துள்ளது.

திரைப்படத்தின் டிஜிட்டல் வெற்றியைப் பற்றி பேசிய ZEE5 தமிழ் & மலையாளம் வணிகத் தலைவர் லாய்ட் சேவியர் கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு தமிழ் ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள அன்பான வரவேற்பைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது ஒரு சிறப்பான மைல்கல், குறிப்பாக மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதைக்கு இது மிகப் பெரிய சாதனையாகும். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்கும் வாய்ப்பைப் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இந்த உணர்வுகள் பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருப்பதைப் பார்ப்பது மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

தனது நன்றியைத் தெரிவித்த இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நேர்மையுடனும் உணர்வுடனும் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த கதை இத்தனை பேருடன் இணைந்து, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இந்த திரைப்படத்தை பார்த்து, ஆதரித்து, அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

100 மில்லியன் பார்வை நிமிடங்கள் என்ற இந்த மைல்கல், டிஜிட்டல் தளங்களில் உணர்வுபூர்வமான பிராந்திய கதைகளுக்கான பார்வையாளர்களின் வளர்ந்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது. குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புக்கான விருப்பத்தை நேர்மையாக சித்தரிக்கும் நூறு சாமி, அதன் திரையரங்கு பயணத்தைத் தாண்டியும் புதிய பார்வையாளர்களை தொடர்ந்து சென்றடைந்து, அவர்களுடன் தனது உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”  மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனையும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அட்லி – விஜய் சேதுபதி மீண்டும் இணையும் கூட்டணி


இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது அட்லி வழங்கும் தமிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருவரின் முந்தைய கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.


‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்திற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி. முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அஷ்வின் முருகன் பணியாற்றுகிறார்.


முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

பன்முகரி திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி  இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது. 


ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.


“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”  ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பாராட்டுகளைப் பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான படைப்பை தயாரிக்கின்றனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தையும் அவரது வித்தியாசமான பைத்தியக்காரத்தனத்தையும் ஒரு தனித்துவமான பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. 


கால பைரவா, ஃபஹத் பாசில்  மற்றும் சாரா ஆகியோர் இடம் பெறும் சிறப்பு இசை வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் கூலான பாடலாகத் தொடங்கும் இது, கால பைரவா தனது துள்ளல் நிறைந்த இசையுடன் களமிறங்கியதும் முழுக்க முழுக்க வித்தியாசமான உற்சாகமான அனுபவமாக மாறுகிறது. இளம் இசையமைப்பாளரின் மின்னல் வேக இசையமைப்பும், அவரது நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்கின்றன.


கால பைரவா மற்றும் வாசி இணைந்து இந்தப் பாடலுக்கான கவர்ச்சிகரமான வரிகளை எழுதியுள்ளனர். சூரியின் துணிச்சலான தன்மையையும், எந்தவொரு சவாலான பணியாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் எளிதானது என்பதையும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களே பாடலையும் மிகுந்த உற்சாகத்துடன் பாடியுள்ளனர். பகத் பாசிலின் எனர்ஜியும், அவரது வைப்பும் ‘ஆவேசம்’ படத்தின் ரங்கா சேட்டாவை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரது அழகான நடன அசைவுகள், அனைவரையும் கவரும் புன்னகை மற்றும் வசீகரம் ஆகியவை பார்ப்பதற்கு விருந்தாக அமைந்துள்ளன. சாராவும் இந்த வேடிக்கையான இசை வீடியோவில் இணைந்து, பாடலை மேலும் சிறப்பாக்குகிறார்.


மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆல்பத்தின் தொடக்கமே ஒரு சார்ட்பஸ்டர் வெற்றியாக அமைந்துள்ளது. “டோன்ட் டிரபிள் த டிரபிள்”  ( Don’t Trouble the Trouble )  திரைப்படம் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படம் 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. 


நடிகர்கள்:


ஃபஹத் பாசில் , சாரா, சௌரப் சச்தேவா மற்றும் பலர்


தொழில்நுட்பக் குழு:


இயக்கம்: ஷஷாங்க் எலெட்டி

பேனர்கள்: Arka Mediaworks & Showing Business

தயாரிப்பாளர்கள்: ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா

இசை: கால பைரவா

 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார். 


ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் - Wayfarer Films தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்-  துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா - இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா - ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 


'அருகே அருகே..' எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌ முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான இந்த ட்ரெய்லர் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. 


அற்புதமான காட்சிகள் - பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்-  விறுவிறுப்பான சேசிங் காட்சிகள்-  என படத்தின் ட்ரெய்லர் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒரு ஸ்டைலான ஃபேண்டஸி திரில்லர் படமாக இது அமையும் என்றும்  உறுதியளிக்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் தோன்றுகிறார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ' ஐ அம் கேம்' மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. இப்படத்தின் ஸ்டைலான போஸ்டர்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 


துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட்டிலான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை - ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் - ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன. 


மாபெரும் வெற்றி படமான லோகா ( Lokah) படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films) தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'RDX -ஆர் டி எக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


லைன் புரொடியூசர் : பிபின் பெரும்பில்லி 

ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலீத் 

இசை : ஜேக்ஸ் பிஜாய் 

படத்தொகுப்பு : சமன் சாக்கோ 

தயாரிப்பு வடிவமைப்பு : அஜயன் சாலிசேரி

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : தீபக் பரமேஸ்வரன் 

VFX : தௌஃபீக் ( Eggwhite) 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் ஹெட் : விஜித் விஸ்வநாதன்

 

தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது.


புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய காட்சியமைப்புகள் நவீன ஹிப்ஹாப் பாணியுடன் இணைகின்றன. குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே, பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. தமிழ் கலாச்சாரத்தை புதிய மற்றும் துடிப்பான இசை மூலம் கொண்டாடும் இந்தப் பாடல், தமிழ் பாரம்பரியத்தை இன்றைய கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வருகிறது. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைக்கும் இந்த இசை மற்றும் காட்சியமைப்பு, தமிழ் மரபுக்கு மரியாதை செலுத்துவதோடு, அதை இன்றைய தலைமுறைக்குள் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறது.


தமிழ் ஹிப்ஹாப் உலகில் தங்களுக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ள இந்த இரு கலைஞர்களின் இயல்பான கூட்டணியாகவே இந்தப் பாடல் அமைந்துள்ளது. அன்றாட தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியல் அனுபவங்களை தனது இசையில் பிரதிபலித்து வரும் பால் டப்பா, தமிழ் ஹிப்ஹாப் உலகின் முக்கியமான குரல்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதேபோல், கூர்மையான கதை சொல்லல், நகைச்சுவை மற்றும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதையாடல்கள் மூலம் கில்லா கே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இருவரின் நீண்டகால நட்பும், ஒரே மாதிரியான படைப்புச் சிந்தனைகளும் ‘அடடா’ பாடலை மற்றுமொரு கூட்டணிப் பாடலாக மட்டும் இல்லாமல், அவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களின் இசை மூலம் முன்னிறுத்தி வரும் தமிழ் கலாச்சாரத்திற்கான கொண்டாட்டமாக மாற்றியுள்ளது. 


‘அடடா’ பாடல் மூலம் பாரம்பரியமும் புதுமையும் எவ்வாறு இயல்பாக ஒன்றிணைய முடியும் என்பதை இருவரும் மீண்டும் நிரூபித்துள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்தை பெருமையுடன் கொண்டாடுவதோடு, உலகளாவிய ரசிகர்களையும் கவரும் வகையில் தமிழ் ஹிப்ஹாப் இசை தொடர்ந்து வளர்ந்து வருவதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது. தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற கிளாசிக் படங்களில் ஒன்றிலிருந்து உத்வேகம் பெற்று, சமகால இசைத் தயாரிப்பு, கூர்மையான வரிகள் மற்றும் நகைச்சுவை கலந்த கதை சொல்லலுடன் உருவாகியுள்ள ‘அடடா’, மாறிவரும் காலத்திற்கேற்ப பரிணமித்தாலும், அதன் உண்மை தன்மையை இழக்காமலும் இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


பாடல் குறித்து கில்லா கே பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் கலாச்சாரத்தை துடிப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் மாற்றும் அனைத்தையும் கொண்டாடும் விதமாக ‘அடடா’ பாடலை உருவாக்கியுள்ளோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதே நேரத்தில் அதன் ஆன்மாவையும் உணர்வையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க விரும்பினோம். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் மக்கள் ரசிக்க வேண்டும், தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், மேலும் நமது கலாச்சாரத்தை புதிய விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது” என்றார்.


பால் டப்பா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் பாடலுக்கான யோசனையை முதன்முதலில் கேட்டபோதே, இது சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் ‘அடடா’ பிரதிபலிக்கிறது. கில்லா கே உடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. உண்மையான, பொழுதுபோக்கு நிறைந்த, தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களது இருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது” என்றார். 


டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியாகியுள்ள ‘அடடா’, இந்தியாவின் சமகால இசைச் சூழலில் தமிழ் ஹிப்ஹாப் தனது தனித்துவமான இடத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் வெளியாகியுள்ளது. பிராந்தியக் கதையாடல் மற்றும் கலாச்சாரப் பெருமையை தங்களது இசையில் உண்மைத்தன்மையுடனும் தனித்துவத்துடனும் வெளிப்படுத்தி வரும் இந்த இரு கலைஞர்களின் கூட்டணி, நமக்கு மிகவும் நெருக்கமான இடங்களில் இருந்து உருவாகும் கதைகளே பல நேரங்களில் மிகவும் வலிமையானவை என்பதை நினைவூட்டுகிறது. இதன் மூலம், பிராந்திய இசை உள்ளூர் தன்மையுடன் இருந்தாலும், உலகளாவிய ரசிகர்களையும் இணைக்கும் என்பதை ‘அடடா’ மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

 

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.


முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையை எதிர்பார்க்க வைக்கிறது.


‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மையத்தில், ராயா மற்றும் அவரது மகன் டிக்கெட் ஆகியோருக்கு இடையிலான சிக்கலான உறவு இடம்பெற்றுள்ளது. இது பிரம்மாண்டமான கேங்ஸ்டர் உலகிற்கு ஒரு வலுவான உணர்வுபூர்வமான அடித்தளத்தை வழங்குகிறது. அதேபோல், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் மோதல்களின் வலையையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தனித்துவமான பரிமாணத்தையும் தீவிரத்தையும் வழங்கியிருப்பது டிரெய்லரில் அழுத்தமாகத் தெரிகிறது.


விருது பெற்ற திரைப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ், தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காட்சி அணுகுமுறையின் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ஒரு ஆழமான மற்றும் கணிக்க முடியாத உலகத்தை உருவாக்கியுள்ளார். டிரெய்லரில் ‘Yash vs Yash’ என்ற மோதல் முக்கியமாக இடம்பெறுகிறது. யாஷ், ராயா மற்றும் டிக்கெட் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தந்தை மற்றும் மகன் என இருவரும் எதிரெதிர் அணிகளில் நிற்கும் நிலையில், அவர்களுக்கு இடையிலான வெடிக்கும் மோதலே கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.


இந்த மைய மோதலைத் தாண்டி, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பரபரப்பான காட்சித் தொடர்கள், பிரம்மாண்டமான கலை இயக்கம் மற்றும் சூழலை உணர வைக்கும் காட்சியமைப்புகள் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உலகத்தையும் டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு, இருண்ட மற்றும் அடர்த்தியான உலகத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், கண்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது. ஆக்‌ஷன், உணர்வு மற்றும் சிக்கலான கதாபாத்திர உறவுகளை ஒன்றிணைத்து, கீது மோகன்தாஸ் ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கியிருப்பது டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.


ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் ஆக்‌ஷன், பரபரப்பு மற்றும் பிரம்மாண்டமான கதை சொல்லல் நிறைந்த இப்படத்தின் உலகம் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.


கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “டாக்ஸிக்” ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு 'வாரணாசி- #VARANASI''- 'ருத்ரா'வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு


தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு - 'ருத்ரா'வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக  புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார்.


இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest)  விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத -  அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார்.


இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி- #VARANASI  படத்தின் ஆன்மாவை நமக்கு உணர்த்துகின்றன. இது உலகம் முழுவதும் பயணிக்கும்... ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாகும்.  இதில் ஒரு மனிதனின் அசாதாரணமான பயணம் - அவரை இந்தியாவின் புனித நீர் நிலைகளில் இருந்து பூமியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.


இது தொடர்பாக இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி குறிப்பிடுகையில்.., ''தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். அவன் தான் கோராத ஒரு விதியை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். அதே தருணத்தில் மென்மையானவனும் கூட. அத்துடன் அவன் மிகக் கடுமையானவனும் ஆவான்.  அந்த பரிமாணங்களை தான் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்தார். யாராலும் கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும்... மென்மையையும்... வெளிப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே.


இந்த காட்சிகள் எங்களின் ஆப்பிரிக்க படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. எந்த ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கங்களாலும் தர இயலாத ஒன்றை... அந்த நில பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா சமவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது... நான் வியந்து போனேன். காலை நேரங்களில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை 1:43:1 ஐமேக்ஸ் ( IMAX) திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என்று நான் உணர்ந்தேன்'' என்றார் .


எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் எம். எம். கீரவாணியின் இசையில் உருவாகும் 'வாரணாசி-#VARANASI' திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் ( Sri Durga Arts) மற்றும் ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் ( IMAX) தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.

 

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார்.


பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.


‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.


பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆபரேஷன் டிரால்’, தேசிய உளவுத்துறை நடவடிக்கைகளைப் பின்னணியாகக் கொண்ட இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், ஆக்‌ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை பேசுகிறது. 


கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகிறது.


இப்படத்தில் ஜெயசூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார்.


ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.


முரளி ஷர்மா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், ‘ஆபரேஷன் டிரால்’ படக்குழு, அவருக்கு தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அவரது சிறப்பான நடிப்பை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

 

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் 'AAA சினிமாஸை' பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்.


விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 'AAA சினிமாஸ்' இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை 'AAA சினிமாஸ்' உருவாக்கியுள்ளது.


'AAA சினிமாஸ்' என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா அனுபவத்தை தரும் முயற்சிதான் இது. அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய தலைமுறைக்கான பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குவதே இந்த பிராண்டின் நோக்கமாகும்.


திரையைத் தாண்டியும் பல்வேறு பிரீமியம் வசதிகளை 'AAA சினிமாஸ்' வழங்குகிறது. ரெக்ளைனர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்காக பிரத்யேக ஐகான் ஸ்டார் லெளன்ச், தனி விஐபி நுழைவாயில் மற்றும் பிரீமியம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. சினிமா மூலம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்தையே இந்த புதிய தொடக்கம் பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் திரைப்படங்களை இன்னும் நெருக்கமாகவும், பிரம்மாண்டமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் ரசிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


'AAA சினிமாஸி'ன் தொடக்கம், விசாகப்பட்டினத்தின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், பிரீமியம் வசதி மற்றும் சினிமாவின் மாயாஜாலம் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் புதிய அனுபவத்தை இது வழங்குகிறது.


விசாகப்பட்டினத்தில் 'AAA சினிமாஸ்' மூலம், அல்லு அர்ஜுன் திரைக்கு அப்பாற்பட்ட தனது பொழுதுபோக்கு பயணத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

Pageviews