இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம்.
179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வேண்டுகோளை ஏற்று தன்னிடம் உள்ள பாரதியார் பாடல்களின் உரிமையை பெருந்தன்மையாக அரசுக்கு நன்கொடையாக ஏவிஎம் வழங்கியது (1949), பாடல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம் ‘அந்த நாள்’ (1954), குழந்தைகளுக்கான திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு தேசிய தங்கப் பதக்கத்தை வென்ற ‘ஹம் பஞ்சி ஏக் டால் கே’ (1957), எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் - ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ‘சிவாஜி’ (2007), இந்தியாவில் முதன்முதலாக Dolby Atmos தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘சிவாஜி 3D ’ (2012) போன்ற பல மைல்கற்களை எங்கள் நிறுவனம் படைத்துள்ளது.
மேலும், ஆறு முதலமைச்சர்கள் எங்கள் திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையையும் பெற்றுள்ளோம். அறிஞர் சி. என். அண்ணாதுரை ‘ஓர் இரவு’ (1951), Dr. கலைஞர் மு. கருணாநிதி ‘பராசக்தி’ (1952), Dr. எம். ஜி. இராமச்சந்திரன் ‘அன்பே வா’ (1966), Dr. என். டி. ராமாராவ், ஐந்து திரைப்படங்கள் (1954-1970), Dr. செல்வி ஜெ. ஜெயலலிதா, நான்கு திரைப்படங்கள் (1962-1970) மற்றும் திரு. சி. ஜோசப் விஜய் ‘வேட்டைக்காரன்’ (2009) ஆகிய திரைப்படங்கள் மூலம் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக 2023ஆம் ஆண்டு, “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்”-ஐ நாங்கள் தொடங்கினோம். அதில் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், உபகரணங்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஹெரிடேஜ் கார்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு பெருமை வாய்ந்த வரலாற்றை உணரும் வாய்ப்பை கொடுக்கும்.
அடுத்த முயற்சியாக “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்” என்ற அரங்கத்தை தொடங்கி உள்ளோம். பல்வகை நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகவும் தாராளமான பார்க்கிங் வசதியுடனும், பிரம்மாண்ட மேடை அமைப்புடனும் அமைத்து உள்ளோம்.
பொருட்காட்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், பெருநிறுவன அரங்க கூட்டங்கள், திரையுலக இசை வெளியீடு நிகழ்ச்சிகள், திருமண நிச்சயதார்தங்கள், திருமணம், திருமண வரவேற்பு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு இந்த சிறப்பு மிகுந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களில் இல்லாத வசதியாக, அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் சைவ மற்றும் அசைவ சமையலுக்கான தனி தனி அடுப்பறைகள் உள்ளன.
இந்த புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடரை உருவாக்கியவர் சாம் ரெய்மி! தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! அதன் வெற்றியின் அடிப்படையில், தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது! ஈவிள் டெட் ரைஸ் (2023) வெளியானது! ஈவிள் டெட் பர்ன் (2026) என்பது ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சி மற்றும் ஈவிள் டெட் தொடரின் 6வது பாகமாகும்! 2028ல் வெளிவரவிருக்கும் 7வது பாகத்தை எதிர்நோக்குங்கள்!
SYNOPSIS-
இதுவரை காணாத மிகவும் பயங்கரமான திகில் பயணமாகக் கருதப்படும் இப்படத்தின் திரைக்கதை, தன் கணவனை இழந்த பிறகு தன் மாமியார் வீட்டில் தனிமையாக வசிக்க முடிவெடுக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது! ஆனால் அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, அது நரகத்திலிருந்து வந்த ஒரு குடும்ப சந்திப்பாக மாறுகிறது…
தயாரிப்பாளர்கள் –
இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக்
நடிகர்கள் – சொஹைலா யாகூப், டேண்டி ரைட், ஹண்டர் டூஹான், லூசியான் புக்கானன், ஏரல் ஷாண்ட் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – பிலிப் லோசானோ இசை – டபுள் டேஞ்சர்
CC சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு — ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் & தெலுங்கு மொழிகளில்
வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட " திருக்குறள் - 2 படத்தின் மாதிரி காட்சி.
‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
ஆங்கிலத்தில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது.
திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர்.
VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார்.
திருக்குறள் முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
எழுதி இயக்குகிறார் A. J. பாலகிருஷ்ணன்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்,
அமெரிக்க தமிழ் சங்க பேரவை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ் சங்கத் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் திருக்குறள் படம் திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு திருக்குறள் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஆங்கில மொழியில் உருவாகும் " Once Upon a Time in Hindustan " படத்தின் நான்கு நிமிட மாதிரி காட்சி திரையிடப்பட்டது.
அதில் வரும் அறம் சார்ந்த காட்சிகளை பார்த்த அனைவரும் திகைத்துவிட்டனர். இன்றைய நவீன காலகட்டத்திற்கு இந்த அறம் எப்படி சாத்தியம் என்று இயக்குனர் A.J. பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு,
இயக்குனர் பாலகிருஷ்ணன்..
நாகரீகம், செயல்கள், எண்ணங்கள் மாறும் ஆனால் அறம் ஒருபோதும் மாறாது என்று பதிலளித்துள்ளார்.
வெர்டிக்கல் சினிமாவை மையமாகக் கொண்டு படைப்பாளர்களை ஊக்குவிக்கும் கதைஷார்ட்ஸ் (Kadhaishorts) நிறுவனத்தின் படைப்பாளர் சமூகமான ‘கதை கிளப்’ (KadhaiClub), டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 60 விநாடி வெர்டிக்கல் குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டி, புதிய மற்றும் அனுபவமிக்க திரைப்படப் படைப்பாளிகள் வெர்டிக்கல் திரைப்பட வடிவின் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, 60 விநாடி குறும்படங்கள் மூலம் தங்களது படைப்பாற்றல், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.
போட்டியில் பங்கேற்போர், 60 விநாடிகள் கொண்ட வெர்டிக்கல் குறும்படம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு மக்கள் எவ்வாறு ஆளாகிறார்கள், இத்தகைய மோசடிகளால் ஏற்படும் உணர்வுபூர்வமான மற்றும் நிதி ரீதியான பாதிப்புகள் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை கதை வடிவில் சித்தரிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் இதற்கான பிரத்யேக இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தங்களின் படைப்புகளை வரும் ஜூலை 15-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக 98400 15719 என்ற எண்ணிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றி பெறும் சிறந்த குறும்படத்திற்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அத்துடன், அந்த குறும்படம் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தில் அவர்களின் கதை சொல்லும் திறமையை உலகறியச் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும்.
குறுகிய கதைகள் மூலம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை உருவாக்குவதில் 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தத் தளம் சமீபத்தில் 'தி அவுட்லாஸ்' என்ற குறு-நாடகத் தொடரை வெளியிட்டது. டிஜிட்டல் அரெஸ்ட் பிரச்சனை குறித்தும், அப்பாவி மக்கள் எவ்வாறு இதுபோன்ற மோசடிகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள் என்பது குறித்தும் இந்தத் தொடர் விளக்குகிறது. விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான கதை சொல்லும் முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், இந்த முக்கியமான பிரச்சனை குறித்த தங்களின் பார்வையை வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தப் படைப்பாளிகளை 'கதை கிளப்' ஒன்றிணைக்கிறது.
மொபைல் போன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதால், மக்கள் கதைகளைப் பார்க்கும் விதம் மாறி வருகிறது. இதனால், இது ஒரு சக்திவாய்ந்த கதை சொல்லும் ஊடகமாக உருவெடுத்துள்ளது. இது, படைப்பாளிகளை தங்களின் எளிமையான கதைகள் மூலம் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற முயற்சிகள் மூலம், இளம் படைப்பாளிகளை உருவாக்குவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குத் தேவையான முக்கியமான விவாதங்களை இந்த தளத்தின் மூலம் கொண்டு செல்லவும் 'கதை கிளப்' திட்டமிட்டுள்ளது.
கதை கிளப் பற்றி: கதை கிளப் என்பது 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனத்தின் வெர்டிக்கல் சினிமா படைப்பாளர்களுக்கான சமூக தளமாகும். வெர்டிக்கல் கதை சொல்லும் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றல், வழிகாட்டுதல், புதிய வாய்ப்புகள் மற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேடையை வழங்கி, வளர்ந்து வரும் வெர்டிக்கல் பொழுதுபோக்கு உலகின் ஒரு அங்கமாக அவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.
டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.
மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக, ஜூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கினர். டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம், “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்று பதிவிட்டு கியாரா அத்வானி-யை குறிப்பிட்டது. அதற்கு கியாரா ஒரு வார்த்தையில் “தபாஹி” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து ஜீ மியூசிக் கம்பெனி, அவரது பதிலை மேற்கோள் காட்டி “Stay Tuned…” என்று பதிவிட்டது. இந்த சுவாரஸ்யமான சமூக வலைதள பரிமாற்றம், அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களான யோகராஜ் பட் (கன்னடம்), ராமஜோகைய்யா சாஸ்திரி (தெலுங்கு), விக்னேஷ் சிவன் (தமிழ்), மற்றும் ரஃபீக் அகமது (மலையாளம்) ஆகியோர் தங்களது மொழிகளில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இது டாக்ஸிக் திரைப்படத்தின் உண்மையான பான்-இந்திய படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், ஜீ மியூசிக் கம்பெனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியாக நாடு முழுவதும் இசை வெளியீட்டை முன்னெடுத்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.
பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறியதாவது:
”‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது சிதைவாகவும், முழுமையான சரணாகதியாகவும், அனுமதி கேட்காமல் எரியும் நெருப்பாகவும் இருக்கும் காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படம் அதே தீவிரத்தை தாங்கும் இசையை வேண்டியது—ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும். யாஷ் பாய் திரையில் வெளிப்படுத்தும் உறுதியை இசையிலும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பதிவு செய்ய முயன்றேன். எனக்கு ‘தபாஹி’ என்பது காதலின் வடிகட்டப்படாத, கட்டுப்படுத்த முடியாத துடிப்பைத் தேடும் ஒரு இசைப் பயணம். ஆறுதல் அளிப்பதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் உணர்வே இந்தப் பாடலின் மையம்.”
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள டாக்ஸிக், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.
சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.
‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக ( Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது.
இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் - ராஜா - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.
'பைசன்' படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற இளம் நடிகரான துருவ் விக்ரம் தற்போது பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி ', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட் 'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, "இதற்கு முன்பு 'பிரின்ஸ்', 'லவ் டுடே' போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்" என்றார்.
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை.
இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.
தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ஓம் நாராயண்,
இசை: பிரணவ் முனிராஜ்,
படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ்,
கலை இயக்கம்: பாவனா கோவர்தன்,
ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன்,
நடனம்: அசார்,
ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,
சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன்,
இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்,
தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்,
கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.,
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.










