கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.


பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனந்தா என்பது ஒரு திரைப்படைப்பு இல்லை ஒரு இறை படைப்பு. என்னுடைய திரையுலக பயணத்தில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இறைவனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே எழுதிய பாடல் என்றால் அது இந்த படத்தில் தான். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இது ஒரு பட வாய்ப்பு என்பதை விட, ஒரு காலத்தின் பதிவு இந்த அனந்தா திரைக்காவியம். இதில் எனக்கும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது என்பது இறைவன் கொடுத்த வரம். என்னுடைய திரை பயணத்தில் கருப்பு தான் என்ற பாடல் தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது தேவா அவர்களின் இசையில் வந்தது. இது அவருடன் ஒரு முழுக்க முழுக்க ஆன்மீக பயணமாக அமைந்தது. இறைவனைப் பற்றி எழுதியதை விட இறைவனுக்கே எழுதிய ஒரு படைப்பு. கிரிஷ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாபாவை பற்றி முழுமையாக எனக்கு புரிய வைக்க மிகவும் சிரமம் கொண்டார். அவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டு தான் இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுத ஆரம்பித்தோம். கிரிஷ் அவர்கள் என்னையும், தேவா அவர்களையும் ஒரு ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது இவர்கள் பாபாவை வணங்குபவர்கள் மட்டும் இல்லை, அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை ஒரு கமர்சியல் ரீதியாகவும் சிறப்பாக கையாண்டு உள்ளார். ஒரு இறைவன் ஒரு மனிதரிடம் பேசும் காட்சி படத்தில் உள்ளது. அதற்கு வசனம் எழுதுவது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த படத்தை பார்க்கும்போது பாபாவின் அருளைப் பற்றி நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.


இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா படத்தை இயக்கினார், அதன் பிறகு பாபா படத்தை இயக்கினார். தற்போது சத்ய பாபாவை பற்றி எடுத்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். ஒரு அற்புதத்தையே படமாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதுபோல ஒரு பெரிய முயற்சி எடுத்து செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா சார் எதை தொட்டாலும் அது அழகாக அமையும். அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு அதிக முயற்சி செய்தேன். அவருடைய தீவிர ரசிகன் நான். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


நடிகை அபிராமி வெங்கடாசலம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நிறைய லெஜன்ட் இங்கே பேசிவிட்டு சென்றுள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாய் பாபா அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி உடன் உள்ளேன். எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு வியாழக்கிழமை தான் வந்தது. இந்த படத்தில் நான் டான்ஸ் ஆட வேண்டி இருந்தது. ஆனால் நான் கடந்த இரண்டு வருடமாக டான்ஸ் ஆடியதில்லை. இருப்பினும் அனைவரும் எனக்கு ஊக்கமளித்தனர். அனைவரிடமும் இரக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.


இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, சாய்ராம். இப்போது எனக்கு இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை சாத்தியப்படுத்திய கிரிஸ் அவர்களுக்கு நன்றி. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கமர்சியல் படம் எடுப்பவன், ஆனால் என்னை சாய்பாபா பற்றி படம் எடுக்க சொன்னார்கள், அதுவும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். 2009 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. என் நண்பர் ஒருவர் பாபாவை பற்றி பயோபிக் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அப்போது முதல்முறையாக புட்டபர்த்தி சென்றேன். அங்கு சாய்பாபா அவர்கள் தெலுங்கில் என்னிடம், இத்தனை வருடமாக எங்கிருந்தாய்? ஏன் வரவில்லை? என்று கேட்டார்கள். அந்த இடத்திலேயே நான் அழுதுவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு சாமி அவர்கள் இறந்து விட்டார்கள். அதன் பிறகு நான் என்னுடைய வழக்கமான சினிமா பணிகளை தொடர்ந்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாலை கனவில் பாபா அவர்கள் தோன்றினார். உடனடியாக என் நண்பருக்கு இதைப்பற்றி சொன்னேன். ஆனால் அவர் உங்களை வைத்து பாபாவின் படத்தை எடுக்க நேற்று தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னார். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. அதன் பிறகு கிரீஸ் வந்தார்கள், பாபாவின் பக்தர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும், பாபாவை பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அது போல் ஒரு கதை செய்ய சொன்னார். நான் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். அடுத்த நாள் மூன்று மணிக்கு திடீரென முழிப்பு வந்தது உடனடியாக கதை எழுத ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் மொத்த கதையும் எழுதி விட்டேன்.


இந்த படத்தில் நிறைய பேரின் கதைகளை சொல்லி உள்ளோம். அதில் பாபாவின் பங்கும் இருக்கும். இந்த படத்திற்கு தேவா அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெறும் பத்து நிமிடத்தில் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் அதிசயத்திற்கு மேல் அதிசயம் நடந்தது. எனக்கு இந்த படத்தில் ஒரு அருமையான டீம் செட் ஆனது. அவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.


பாடகர் மனோ பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் சிறு வயதில் சாய்பாபா நாடகத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளேன். பாபா அவர்கள் எனக்கு ஏதாவது கையில் கொடுக்க மாட்டாரா என்று ஆசைப்பட்ட பக்தர்களின் நானும் ஒருவன். இந்த படத்தில் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.


தயாரிப்பாளர் S தாணு பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சென்னையில் சத்ய சாய்பாபா அவர்களை பார்த்து ஆசி பெற்றேன். அவருடைய பாடல்களும் நினைவுகளும் என்றும் என் மனதில் உள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்ற சொல்லுக்கு உதாரணம் பாபா அவர்கள் தான். பல மருத்துவமனைகளையும் கல்லூரிகளையும் உருவாக்கினார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் இருக்க வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டும். தேவா மற்றும் பா விஜய் அவர்களின் பணி மிகச் சிறந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும். கடவுள் நிச்சயம் அருள் புரிவார். பாபா அவர்களின் அன்பு உங்களை கவசம் போல் காக்கும் நன்றி.


சுகாசினி மணிரத்னம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த கதையைப் பற்றி சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் என்னிடம் சொன்ன போதும்,  இந்த படத்தில் பணியாற்றும் போதும் ஒரு மாய வலையில் இருந்து விலகி தூய்மை கிடைத்தது போல் உணர்வு ஏற்பட்டது. அனைவருக்கும் ஈகோ இருக்கும் ஆனால் நாம் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கும்போது ஒரு அதிசயம் நடக்கும். இந்த கதை மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த படம் முழுக்கவே ஒரு ஆன்மீக அதிர்வலை இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்க சுரேஷ்கிருஷ்ணா மற்றும் கிரீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.


இசையமைப்பாளர் தேவா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபா அவர்களுக்கு உள்ளனர். அவருடைய படத்திற்கு நான் இசையமைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பூர்வ ஜென்மத்து பாக்கியம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. ரீ ரெக்கார்டிங் பணிகளுக்காக படத்தைப் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளனர். அனைவரும் அற்புதமான நடிகர்கள். இந்த படத்திற்கு வியாழக்கிழமை அன்று இசைப்பணிகளை ஆரம்பித்தோம். இந்த படம் மிகப்பெரியதாக வளர்ந்ததற்கு காரணம் பாபாவின் அருள் தான். ஒவ்வொரு பாடலையும் பாடகர்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா அவர்களுடன் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் அல்ல பாடலை சாய்பாபா அவர்களின் பக்தர்கள் அனைவரும் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அனைவருக்கும் நன்றி.


நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அன்பு, அகிம்சை, அமைதி போன்ற பல விஷயங்களை சொன்னவர் தான் சாய்பாபா அவர்கள். அவர் மக்களிடமிருந்து எந்த காலத்திலும் விலகி இருந்ததில்லை. மக்களோடு தான் பயணித்து இருப்பார். அவருடைய திரைப்படம் ஜெனரஞ்சகமாக இருப்பது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களை அனந்தா படத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன். இது ஒரு மிகப்பெரிய குருவைப் பற்றிய படம். யார் ஒருவர் குருவின் மீது அதிக மரியாதை வைத்துள்ளாரோ அவரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும். தன்னுடைய குருவான பாலச்சந்தர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டுவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. தனது குருவை அதிகமாக மதித்தார் என்பதால் தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சுரேஷ் கிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் சினிமாவின் சூப்பர் ஸ்டாரையும், ஆன்மீகத்தின் சூப்பர் ஸ்டாரையும் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்கள். எனக்கு வேண்டப்பட்ட அனைவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். தேவாவை போன்ற இசையமைப்பாளரை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவரைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை நீங்கள் பார்க்க முடியாது. திறமை இருந்தால் இந்த திரையுலகம் உங்களை கைவிடாது என்பதற்கு நடிகை சுகாசினி ஒரு உதாரணம். ஏற்கனவே வெற்றி என்று உறுதி செய்த படம் தான் அனந்தா. நன்றி


தயாரிப்பாளர் கிரிஷ் பேசும்போது, இந்த படத்தின் முழு பயணமும் ஒரு அதிசயம் தான். என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பாபா அவர்கள் தான் நிகழ்த்துகிறார். சாய்பாபா அவர்களின் பக்தர்கள் இந்த படம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் சுரேஷ் கிருஷ்ணா அவர்களை இந்த படத்திற்கு தேடவில்லை, எல்லாம் அதுவாக நடந்தது. இந்த படம் கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு பதிலாக இருக்கும். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்த படம் பார்த்த பிறகு சாய்பாபா பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 150 நாடுகளுக்கு மேல் உள்ள மக்கள் சாய்பாபா அவர்களை வணங்குகிறார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நடிகர்கள்

ஜெகபதி பாபு

சுஹாசினி மணிரத்னம்

Y Gee மகேந்திரன்

தலைவாசல் விஜய்

நிழல்கள் ரவி

ஸ்ரீ ரஞ்சனி

அபிராமி வெங்கடாசலம்


தொழில்நுட்பக் குழுவினர்

எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா

தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி

வசனம் & பாடல்கள்: பா. விஜய்

இசை: தேவா

ஒளிப்பதிவு: சஞ்சய் BL

படத்தொகுப்பு: S. ரிச்சர்ட்

தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்

நடன அமைப்பு: கலா

ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்

விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்

நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

 

இளமைப் பருவத்திலிருந்து இளம் வயது மாற்றத்திற்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 

"இரண்டாவது முகம்"



இளம் பருவத்திலிருந்து முதிர்ந்த வயது வரையிலான மாற்றத்திற்கான தமயந்தி குமாரவேலின் பயணத்திலிருந்து பிறந்த இந்தியாவின் முதல் இளம் தலைமுறை தோல் பராமரிப்பு பிராண்ட் 

அழகு தொழில்நுட்பத்திற்கு அப்பால், தோலை உடனடியாக ஸ்கேன் செய்து அதன் தன்மையை விளக்கும் கேமரா மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்தியாவின் முதல் நிறுவனம்.

இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்.


சென்னை, நவம்பர் 13,2025: இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை சுமார் 40 சதவீதம் வாங்கினாலும், அவர்களின் வாழ்க்கை முறையை சார்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களுக்கான குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. அதை போக்கும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளம் தலைமுறையினருக்கான தோல் பராமரிப்பு பிராண்டான நெக்ஸ்ட்பேஸ், இளமைப் பருவத்திலிருந்து இளம் வயதுக்கு மாறும் 'இரண்டாவது முகம்' மாற்றத்தை மேம்படுத்துவதற்காக இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் இந்த காலக்கட்டம் உடலில் மாற்றத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, அடையாளம் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.


அந்த மாற்றத்தை உணர்ந்த நேச்சுரல்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளம் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரான தமயந்தி குமாரவேல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸ்ட்பேஸ், புதுமை மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்தியாவின் அழகுப் புரட்சியின் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கிறது. டீன் ஏஜ் பருவத்திற்குப் பிறகு தனது சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை அனுபவித்த தமயந்தி, சுமார் இரண்டு வருடங்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, விஞ்ஞானிகளைச் சந்தித்து, ஹார்மோன்கள், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் இளம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்தார்.


அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர், பல வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைகளின் மூலம் அதிநவீன சூத்திரங்களை உருவாக்குவதில் சிறந்த அனுபவமுள்ள உலகளாவிய தலைவரான கானெல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இளம் தலைமுறையினரின் தோலுக்கு ஏற்றதாகவும், இந்திய தோல் நிறங்கள் மற்றும் காலநிலைக்கு ஏற்ற நெக்ஸ்ட்பேஸ் பிராண்ட்டை உருவாக்கினார்.


இது குறித்து நெக்ஸ்ட்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தமயந்தி குமாரவேல் கூறுகையில், நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று திரும்பி வந்ததும், என் பெற்றோரை சந்தித்தேன். அப்போது அழகின் எதிர்காலம் அனுபவத்தால் மட்டும் வராது என்று அவர்களிடம் சொன்னேன். அது புத்திசாலித்தனத்திலிருந்தும், இளமையை பற்றிய புரிதலிலிருந்தும் வர வேண்டும். நமது பெற்றோர் பயன்படுத்தியது நமது தலைமுறைக்குத் தேவையில்லை; நமது உருமாறும் சருமத்தைப் புரிந்துகொள்ளும் ஒன்று நமக்குத் தேவை. அதை எனது நெக்ஸ்ட்பேஸ் சரியாகச் செய்கிறது. இது பளபளப்பு அல்லது பொலிவு மட்டுமல்ல, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. நீங்கள் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது உங்கள் தோல் மற்றொரு மாற்றத்திற்கு உட்படுகிறது, அது உங்கள் இரண்டாவது முகம். எங்கள் தலைமுறை அந்தக் காலக்கட்டத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்காகவே எங்களின் புதிய நெக்ஸ்ட்பேஸ் பிராண்ட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், நெக்ஸ்ட்பேஸ் இந்தியாவின் முதல் நிகழ்நேர, கேமரா மூலம் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தோல் பராமரிப்பு முறையை அறிமுகப்படுத்துகிறது, அங்கு பயனர்கள் தங்கள் திரையைப் பார்த்து உடனடியாக, தோல் சம்பந்தமான பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதோடு வாழ்க்கை முறை பரிந்துரைகளையும் பெறலாம். AI, ML மற்றும் LLM தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பதிவேற்றங்களுக்குப் பதிலாக காட்சித் தரவை பகுப்பாய்வு செய்து, சருமத்தைப் புரிந்துகொள்கிறது.


தொழில்நுட்பம் குறித்து அவர் மேலும் கூறுகையில், எங்கள் செயற்கை நுண்ணறிவு அழகை மதிப்பிடுவதில்லை, அது உயிரியலை விளக்குகிறது. இது பயனர்கள் தங்கள் தோலை தெளிவாகப் பார்க்க உதவுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க நான் உற்சாகமாக இருக்கிறேன். இது ஒரு உயர்ந்த மனித மூளை போன்றது, இது மில்லியன் கணக்கான தரவுகளை நிமிடங்களில் பகுப்பாய்வு செய்து பாரபட்சமற்ற மற்றும் உண்மையான தகவல்களை அதனால் வழங்க முடியும். இன்றைய நுகர்வோருக்கு இது மிகவும் முக்கியமானது, அதனால்தான் செயற்கை நுண்ணறிவை எங்கள் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற முடிவு செய்தேன். எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதைப் பயன்படுத்துவதன் 


மூலம், ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களின் தோல் நிறம், வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மற்றும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் இளம் தலைமுறையினரின் வளர்ந்து வரும் தேவைகளைப் புரிந்துகொள்வதில் எங்களால் அதிக கவனம் செலுத்த முடிகிறது.


எங்களின் நெக்ஸ்ட்பேஸ், ஆழமான ஊடுருவல் மற்றும் விரைவான உறிஞ்சுதலை செயல்படுத்த மேம்பட்ட சிறிய மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இதனால் ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் அதிகபட்ச திறனில் செயல்படுவதை உறுதி செய்கிறது. எங்கள் சூத்திரங்கள் முன்னெச்சரிக்கை, தகவமைப்பு மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை – இன்றைய நிலையில் தோலுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் வருங்காலத்திற்கு ஏற்ப அதைத் தயார்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களின் குறிப்பிட்ட தயாரிப்புகளில் எக்ஸோசோம்கள் உள்ளன, அவை சிதைந்த செல்களை சரி செய்வதோடு தோலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன. நெக்ஸ்ட்பேஸ் அடுத்த தலைமுறை தோல் பராமரிப்புக்கு ஏற்ப சிறந்த பலன்களை வழங்கும்.இந்த பிராண்டில் தற்போது சீரம், சன்ஸ்கிரீன் (ஜெல், ஸ்ப்ரே மற்றும் குச்சிகள்), லிப் பாம், டே க்ரீம், ஸ்லீப்பிங் மாஸ்க் மற்றும் பேஸ் வாஷ் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.  இதன் விலை ரூ.550 ஆகும். இவை அனைத்தும் நச்சுத்தன்மை அற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் தமயந்தி குமாரவேல் தெரிவித்தார்.


இது குறித்து நெக்ஸ்ட்பேஸ் விளம்பர தூதரும் நடிகருமான கயாடு லோஹர் கூறுகையில், நெக்ஸ்ட்பேஸ்  நாம் அனைவரும் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை அறிந்ததால் நான் அதன் விளம்பர தூதராக அந்த பிராண்டுடன் இணைந்துள்ளேன். இது அதை மறைப்பது அல்லது அதை எதிர்த்துப் போராடுவது பற்றியது அல்ல, மாறாக அதை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது. அதுதான் தோல் பராமரிப்பை விட மேலானது. அது சுய புரிதல் என்று தெரிவித்தார். இந்த பிராண்ட் இந்தியா முழுவதும் பல்பொருள் அங்காடிகள், மருந்தக கடைகள், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் கிடைக்கும். மேலும் 800க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்கள் மூலமும் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'.  


இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை,  ஊடக  மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். 



இந்நிகழ்வினில் 


தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது.., 


மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன்.  அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. 



ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது.., 


ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா மேடம் நிறைய சப்போர்ட் செய்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். 


நடிகர் லோகு பேசியதாவது.., 


ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள  படத்தில், எனக்கு  வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது.., 


தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது.  எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. நேற்று அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி. 


தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது..,


இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது..,


தினேஷ் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம்  வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி



நடிகை அபிராமி பேசியதாவது..,


இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி.  நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 



நடிகர் தங்கதுரை பேசியதாவது..,


இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது..,


தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் நன்றி. 



பிரவீன் ராஜா பேசியதாவது..,


சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஓகே சொன்ன பிறகு தான் அர்ஜூன் சார் ஐஸ்வர்யா மேடமுடன் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தது. உண்மையில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் உடன் நடித்த போது இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. 4 மொழிகளில் படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். 



எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,


தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.  ஐஸ்வர்யா ராஜேஷ்  மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..,


அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது..,


நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் நன்றி. 


தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது..,


சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.


விசிக கட்சி துணை பொதுச் செயலாளர்  திரு வன்னியரசு பேசியதாவது..,


தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள். 


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,


மீடியா நண்பர்களுக்கு என் முதல் நன்றி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.


இயக்குநர்  தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது..,


என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த  நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி.  அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய  கரக்சன் சொல்வார்,  அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது  தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



நடிகர் அர்ஜூன் பேசியதாவது.., 


எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார்.  அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும். நன்றி. 


சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து  நடித்துள்ளனர்.


சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.


இப்படம்  தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.


இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.


கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும். 


படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.


ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர். 


பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்


இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிப்பு :


நந்தமூரி பாலகிருஷ்ணா

சம்யுக்தா

ஆதிப் பினிசெட்டி

ஹர்ஷாலி மால்ஹோத்ரா


தொழில்நுட்பக் குழு :


எழுத்து, இயக்கம் :  போயபாடி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :  ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி

இசை : S. தமன்

ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி

கலை : A.S. பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

சண்டை அமைப்பு : ராம் - லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார்.


தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார  காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு வருடந்தோறும் இலவச நடனப் பயிற்சி வழங்கப்படும். எதிர்கால நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் திறமைகளை  உருவாக்கும் நோக்கத்துடன், தொழில்முறை வழிகாட்டல் துறையைச் சார்ந்த அனுபவங்களை வழங்குவது இந்த தளத்தின் குறிக்கோள்.


இத்தளத்தை நேற்று அகரம் ஜெயஸ்ரீ அவர்கள் அறிமுகப்படுத்தினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் கல்வியை ஆதரிக்கிறது மற்றும் பல கல்வி முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், இத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார். இதுகுறித்து தமிழ் திரைப்படத் துறையின் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்:


நடிகர் ரவி மோகன்


பாடகி கினீஷா


இயக்குநர் பொன்ராம்


இயக்குநர் கார்த்திக் யோகி


நடிகர் கருணாகரன்



இந்த அறிமுகம் SDC ஆண்டு விழா 2025 நிகழ்வின்போது நடைபெற்றது. “Dance with Purpose” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாணவர்கள் சமூக பொறுப்பு, விழிப்புணர்வு, மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை ஆற்றினர்.


நிகழ்ச்சியில் மாணவர்களின் தீம் அடிப்படையிலான நடனங்கள், SherifMoves.com தள அறிமுகம், விருந்தினர்கள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன.

 

தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமான‌ 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு மண்ணின் கதையை திரையில் பேசுகிறது. இப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் இயக்கியுள்ளார். கொங்கு வட்டார மக்களின் வாழ்வியில் முறை, சிறு தெய்வ வழிபாடு நம்பிக்கை, அவர்களின் நிலத்தின் இன்றைய நிலமை பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்தில் வாழ்த்து வந்த உணர்வை நிச்சயம் கொடுக்கும் நல்ல படமாக இது உள்ளது என்று இது வரை இத்திரைப்படத்தை பார்த்த எழுத்தாளர்களும் திரை பிரமுகர்களும் பாராட்டியுள்ளனர்.


புதிய சிந்தனைகள், புதிய நடிகர்கள், புதிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில்  'ஒண்டிமுனியும் நல்லபாடாவும்' திரைப்படம், சமகால யதார்த்தத்தைப் பேசும் ஓர் உன்னதக் கதைக்களம். அதிகாரப் போட்டிகள், உழைப்புச் சுரண்டல் மற்றும் நிலவுரிமைப் போராட்டங்களை மிக நுட்பமாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. 


இப்படத்தில் நல்லபாடனாக 'பரோட்டா' முருகேசன் நடிக்க கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை ஜெ.டி. விமல் கவனிக்க, 'மூடர்கூடம்' நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை 'மாஸ்' மோகனும், படத்தொகுப்பை சதிஷ் குரோசோவாவும் கையாண்டுள்ளனர். இணை தயாரிப்பு: அமராவதி


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், "நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்றும் அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது. ஒண்டிமுனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்த்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார். 


திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' திரைப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்

தயாரித்த “தலித் சுப்பையா  கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம், ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறை

(Academy Screening Room)க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு

செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் IDSFFK 2025 விழாவில் சிறந்த நீள ஆவணப்படம்

விருதைப்பெற்றுள்ளது. தற்போது அகாடமி உறுப்பினர்கள் மற்றும்

சர்வதேச திரைப்பட வட்டாரங்களுக்கு நேரடியாகக் காணக்கூடிய

வகையில் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆவணப்படம் சுருக்கம் -

இந்த படம், தலித் சுப்பையாவின் கலைப்பயணம், சமூக அநீதிகளுக்கு

எதிரான உறுதியான எதிர்ப்பு ஆகியவற்றை நேர்காணல்கள், ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.


வழங்குபவர்  பா. ரஞ்சித் 

இயக்கம்- 

கிரிதரன் MKP

 

டெமாக்ரடிக் சங்காவின் 'சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்' விழா: அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK!


'டெமாக்ரடிக் சங்கா' அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க 'சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்' வழங்கப்படும்.


கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைக்கும் இந்த அரங்கம், ஜனநாயகத்தின் தற்போதைய நிலையை விவாதிக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மறை, புதிய நடைமுறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உயர்மட்ட விவாதங்கள் நடைபெறும்.


ஆட்சி முறை மற்றும் பொது நிதி குறித்த அமைச்சர் PTR அவர்களின் கருத்துக்கள் பலமுறை அர்த்தமுள்ள விவாதங்களை தூண்டியுள்ளதால், இந்த மன்றத்தில் அவர் பங்கேற்பது நிகழ்வுக்கு பெரும் மதிப்பை சேர்க்கும் என ரெஜினா மற்றும் சைதன்யா கருதுகின்றனர்.


இந்த நிகழ்வின் முக்கிய அம்சமான 'வருடாந்திர சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்', தங்கள் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பால் சமூகங்களை வலுப்படுத்திய தனிநபர்களையும், அமைப்புகளையும் கௌரவிக்கும். ஒத்துழைப்பு மற்றும் கருணையை மையமாக கொண்டு, மேலும் நியாயமான ஜனநாயக எதிர்காலத்திற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் 'தேரே இஷ்க் மே' படத்தின்  டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான 'தேரே இஷ்க் மே' ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.


'தேரே இஷ்க் மே' இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காதல் ஒரு காவியமாக உயர்கிறது.


ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, 'தேரே இஷ்க் மே' படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர் மற்றும் முக்தியின் யதார்த்தமான, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் கணிக்க முடியாத உலகத்திற்குள் ஆழமாக அழைத்து செல்கிறது. இது காரணம், காலம் மற்றும் விதியை மீறிய ஒரு காதல் கதை.


இந்த புதிய காட்சிகள், காதல், இழப்பு மற்றும் மீட்பு போன்ற படத்தின் முக்கிய கருப்பொருள்களை பற்றிய ஒரு அழுத்தமான பார்வையை வழங்குகின்றன. டீஸர் மற்றும் பாடல்கள் சுட்டிக்காட்டியதை விட இருண்ட, மேலும் ஆழமான கதைக்களத்தை இது வெளிப்படுத்துகிறது. ஆனந்த் L ராயின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ்  யாதவின் எழுத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்துடன் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்திற்கு களம் அமைக்கிறது.


இந்த உலகின் இதயத்தில் AR ரஹ்மானின் இசை உள்ளது. இது ஏற்கனவே ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, படத்தின் வெளியீட்டிற்கான மேடையை அமைத்துள்ளது.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

படத்தில் தமிழகமே கொண்டாடும் ஒரு நாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததே சமுத்திரக்கனி தான். ஆனால், தன்னுடைய சிஷ்யன் துல்கர் சல்மானுடைய புகழ் தன்னை விட உயர்ந்ததாக இருப்பதால் சமுத்திரகனி பொறாமைப்படுகிறார். அந்த நேரத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் துல்கர் நடிக்கிறார். அந்த படத்தில் துல்கர் இறப்பது போல காட்சிகள் வருகிறது. இது வேண்டாம் என்று துல்கர் சொல்கிறார். ஆனால், சமுத்திரக்கனி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஈகோ முட்டி படம் நின்று போகிறது. பின் அந்த ஸ்டுடியோவை இழுத்து மூடுகிற நிலைமை வருகிறது. அதற்காக அந்தப் படத்தை எடுக்க இருவருமே சம்மதிக்கிறார்கள். துல்கரை போலவே பாக்கியஸ்ரீபோஸையும் சமுத்திரக்கனி தான் உருவாக்குகிறார். ஆனால், அவர் மீது காதலில் விழ அதைத்தொடர்ந்து எல்லோர் வாழ்வும் திருப்பி போடும் அளவுக்கு பல சம்பவங்கள் அடங்கியிருக்கிறது. பின் பாக்கியஸ்ரீ கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை யார் செய்தார்கள்? துல்கர் சல்மான் என்ன ஆனார்? சமுத்திரக்கனி தன்னுடைய உச்சத்தை அடைந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.


இப்படத்தில் துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைப்பார்கள். இப்படத்தின் மூலம் உண்மையாகவே இவரை நடிப்பு சக்ரவர்த்தி என்றே அழைக்கப்படுவார் என்று அடித்து கூறலாம்.  சமுத்திக்கனி இதுவரை பார்த்திராத வேறு ஒரு பரிணாமத்தில் பயணித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ அந்தக்காலத்துக் கதாநாயகிகளைப் பிரதியெடுத்தது போலவே இருக்கிறார். நடிப்பிலும் வியக்க வைத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி அந்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.


துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி,மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி,ரவீந்திர விஜய்,ஆடுகளம் நரேன்,பக்ஸ் மற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள். 


இசையமைப்பாளர் ஜானுசந்தர், பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.


செல்வமணி செல்வராஜ் – எழுத்து மற்றும் இயக்கத்தில் இரண்டிலும் திறமையைக் காட்டியுள்ளார். ஒரு நடிகரும் இயக்குநரும் இடையே உருவாகும் ஈகோ மோதலை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வெளிப்படுத்தியுள்ளார். 

Pageviews