The title announcement event of #D55, one of the biggest anticipated films in Tamil cinema, was held in a grand manner today. The film has been titled "OM."

In this film, jointly produced by R Take Studios and Wunderbar Films, National Award-winning actor Dhanush plays the lead role. Following the success of Amaran, this new creation directed by Rajkumar Periasamy had its title announcement event held recently in a grand manner in the presence of members of the press and media, along with the film's team.

At the event,

Speaking on behalf of Wunderbar Films, Sreyas said:
“First of all, I would like to express my gratitude to the director and Dhanush sir. I will always remain indebted to you, sir. This film is one of the biggest-budget films being made in the industry. I think this is the biggest-budget film in my cinematic journey. Furthermore, I am very happy to have collaborated with R Take Studios. This is their first film in Tamil. I believe this will be the beginning of many successful collaborations in the future. This is once again an old-school Dhanush sir mass commercial film. I believe this film will definitely fulfil your expectations. I hope that the teaser and all other updates of this film will delight you. This will be a creation that satisfies everyone. We will meet all of you in theatres on October 16. Thank you!”

Speaking on behalf of R Take Studios, Shraddha said:
“Rajkumar sir, thank you very much. This has truly been a wonderful experience. I am eagerly looking forward to October 16. I am extremely happy to be working with you. This is a wonderful collaboration. For that, I would like to express my heartfelt gratitude to you. Thank you to Dhanush sir. This film will entertain everyone. Thank you.”

Speaking on behalf of R Take Studios, Azmat said:
“Other than what Sreyas and Shraddha have already said, there is nothing new for me to add. Rajkumar sir, my heartfelt thanks to you for including us as a part of this project. Being a part of this creation gives us immense pride and humility. We hope to contribute as much love and dedication as possible to this film. Thank you very much.”

Director Rajkumar Periasamy said:
“This film has begun with the title ‘OM’. From the selection of the title to the casting of the actors and actresses, the first schedule of shooting has now been successfully completed. Looking at every single thing that has happened around this film and every person who has become a part of it, I have complete confidence that this will be a very important and special journey for everyone.

Everyone associated with this film is working with the same feeling and commitment. Starting from Dhanush sir, Sreyas, and all the artists who are acting in the film, everyone is creating this film with great dedication.

In particular, Mammootty sir, Sai Pallavi, Sreeleela, Indran sir, and many other talented actors have joined this film. With the contribution of everyone, the film is shaping up very well.

A huge technical team is working behind this film. The cinematographer, camera crew, and technical artists have all given their best contributions. Cinematographer Ezhilarasu has done an excellent job. Kalaivanan, the editor of Amaran and the recently released Karuppu, is working as the editor of this film as well. He is also the one who edited this title announcement video. This video should not be viewed merely as a title announcement video. Instead of releasing a poster, we created this as an attempt to introduce the character played by Dhanush sir to the audience for the very first time. The film’s teaser, introduction teasers for each major character, and the main trailer will be released in the coming weeks and months.

October 16 will be a very important day for this film. That is the day the film is set to release. Furthermore, we have titled the film ‘OM: Chapter 1’. This is not merely a spiritual title; it is a very special title with multiple layers of meaning. There are many interesting aspects and various layers hidden within this title. I believe the audience will gradually understand them. My heartfelt thanks to everyone.”

Speaking on behalf of Divo Music, Vishu said:
“Being a part of this journey gives us immense happiness and pride. From the day this project began, we would like to thank everyone for the support and trust that has been extended to us at every stage. Being associated with any film starring Dhanush sir is always a matter of pride. We are extremely happy to be a part of this film. Director Rajkumar Periasamy sir’s Amaran, became a huge success. Following that, being associated with this film, which is being created through the collaboration of Dhanush sir and Rajkumar sir, gives us even more excitement. Our heartfelt thanks to the producers, the film team, and everyone who included us in this project as the music label. With the divine faith of ‘Om Namashivaya,’ I say this: it is my firm belief that OM will become a massive blockbuster. I believe this film will remain in the hearts of audiences through 2026, 2027, and beyond. Thank you very much.”

Speaking on behalf of Warner Music Group - India Jay Mehta said:
“Many months ago, when discussions about this film first began, my first conversation was with this team. About six months before that, we had met Dhanush sir at a hotel in Delhi. The fact that the journey which began then has today taken such a huge form is something that cannot be described in words. Everything associated with this film is extremely special. Director Rajkumar Periasamy sir is an extraordinary talent. Not only in Indian cinema, but even in world cinema, true geniuses are very rare. In that sense, I believe Rajkumar sir is a genuine genius.

I do not have enough words to speak about Dhanush sir. From Kadhal Kondein to the biggest Hindi films he has acted in, he stands as a powerful artist who has proven his talent on a global scale. Furthermore, a very strong star cast including Sreeleela, Sai Pallavi, and Mammootty sir has joined this film. It is very rare to witness such a huge ensemble of stars in a single film. This film possesses all the elements required to become a massive blockbuster. I firmly believe that it has every qualification to become a huge success not only across India but also on a global level. According to my personal belief, this will not only be one of the biggest films in the history of Tamil cinema, but it will also become a landmark work that will be spoken about for all time. My heartfelt wishes to the entire team. Thank you, everyone.”

Sai Pallavi and Sreeleela are playing the female leads alongside Dhanush in this film. Malayalam cinema superstar Mammootty’s presence in a pivotal role has increased expectations for the film even further.

Having gained nationwide recognition through Amaran, director Rajkumar Periasamy is this time creating a grand action film with an innovative screenplay that is expected to captivate audiences. This marks the first collaboration between Dhanush and Rajkumar Periasamy, and the combination has already received tremendous response from fans.

The film’s music is composed by young sensation Sai Abhyankkar, who has captured the hearts of the younger generation. While the first schedule of shooting has already been completed, work on the next stages of production is progressing at a rapid pace.

With the title officially announced as OM, fans are eagerly awaiting the film’s upcoming updates and shooting-related announcements. Created by the grand combination of Dhanush, Rajkumar Periasamy, Sai Pallavi, Sreeleela, and Mammootty, the film is emerging as one of the most anticipated projects in Tamil cinema.

The film is scheduled for a worldwide theatrical release on October 16.

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
 
பிரபல இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்த பாடலை பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” வேடத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன், சாத்தானை பிரதிபலிக்கும் வித்தியாசமான தோற்றமானது, பாடலை பார்த்து முடித்த பின் நம் மனதுடன் நாமே பேசும் உணர்வை உருவாக்கியுள்ளது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளல்இசையும், துடிப்பான பின்னணி ஒலிகளும் பாடலின் உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.
ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர் கவனித்துள்ளனர். நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளார். மாங்கோ போஸ்ட் நிறுவனம் கலர் கோர்ப்பு பணியையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனம் அனிமேசன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவின் தொழில்நுட்ப பங்களிப்பு பாடலின் உணர்வை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா சாத்தானாகவே அருண்ராஜா காமராஜை மேக்கப்பின் மூலம் உருவாக்க உழைத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த இசையிலும், வீரியமிக்க வரிகளிலும் உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற படைப்பாக மாறியுள்ளது.

🔗https://youtu.be/6cY-B-GDYoo

 

முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். 


இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது. 


ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது... கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன. 


ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை ( Ragul Bose)  எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன். 


விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி- அங்கீகாரம் -முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு- ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்... இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்... வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது'' என்றார்.

 

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது.


‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.


இவ்வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.


இந்நிலையில், 'திரிஷ்யம் 3' தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு வரும் வரை இப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


“சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்,” என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

 

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.


ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.


பாடலாசிரியர் சாரதி பேசுகையில், '' 'அயோத்தி' படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,'' என்றார் .


நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ''இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்," என்றார்.


நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ''என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.


நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ''இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,'' என்றார்.


படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ''ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும்  கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,'' என்றார்.


இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,'' என்றார்.


நடிகை இமயா டி பேசுகையில், '' இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.  


இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,'' என்றார்.


நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ''இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். 'ஹார்ட்டின்' படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,'' என்றார்.


கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ''இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்... லவ் பண்ணனுமா  என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,'' என்றார்.


இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.


என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.


'காதலும் கடந்து போகும்' படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.


இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌


இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ 'டேர்ம்ஸ்' வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,'' என்றார்.


நடிகர் சனந்த் பேசுகையில், '' ஹார்ட்டின்... பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.


இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,'' என்றார்.

 

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்!


நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த கட்டத்தை ரசிகர்கள் இதுவரை காணாத வகையில் மிகவும் விறுவிறுப்பாகக் காட்டுகிறது.


டிரெய்லரைப் பார்க்க: https://youtu.be/hGSZPc9AA1g


'ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்' (Spider-Man: No Way Home) படத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், ஹாலண்ட் மீண்டும் அந்தச் சிறப்பான ஸ்பைடர்-மேன் உடையில் தோன்றுவதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. பீட்டர் பார்க்கரின் அடையாளத்தை உலகம் மறந்துவிட்ட நிலையில், தனது பகுதியைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டே, புதிய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளும் சூப்பர் ஹீரோவை இந்த டிரெய்லர் சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஜெண்டயா (Zendaya) ஏற்று நடித்துள்ள MJ கதாபாத்திரத்துடனான அவரது சிக்கலான உறவையும் இது ஒரு சிறு காட்சியில் வெளிப்படுத்துகிறது.


'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படம் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள், ஆபத்தான புதிய வில்லன்கள் மற்றும் பீட்டர் இதுவரை எதிர்கொண்டிராத சவால்களை உறுதியளிக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படம் உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது; இதில் இந்தியாவும் இப்படத்தின் வலுவான சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்தபோது ரசிகர்களிடையே உற்சாகம் உச்சத்தை எட்டியது.


பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு 'புதிய நாள்' (Brand New Day). தன்னை நினைவில் கொள்ளாத உலகில் முழுநேர ஸ்பைடர்-மேனாகக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் தன்னை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் பழைய நண்பர்களைப் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தம் ஆகியவை பீட்டரிடம் ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றன; அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரிடம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மாற்றமே நகரத்திற்கும் அவர் நேசிப்பவர்களுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சிகரமான புதிய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான ஒரே வழியாகவும் அமையலாம் - அது யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லன். உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை.


டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கியுள்ள இப்படத்தில், பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேனாக டாம் ஹாலண்ட் நடிக்க, அவருடன் ஜெண்டயா, ஜேக்கப் பட்டலோன், ஜான் பெர்ன்தால் மற்றும் சேடி சிங்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், ஜூலை 30 அன்று 2D, 4DX 3D, 3D SCREEN X, DOLBY CINEMA 3D, ICE 3D, DOLBY CINEMA 2D, MX4D 3D, 3D, P[XL] மற்றும் BIGPIX ஆகிய வடிவங்களில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

 

Tom Holland Swings Into a New Era in Spider-Man: Brand New Day Trailer And This Time, Stakes Are High


The second trailer for Spider-Man: Brand New Day has finally arrived, bringing Tom Holland's beloved superhero back into action after a four-year wait. Unveiled amid much fanfare at a special event in Amsterdam, the trailer offers fans their most exciting look yet at the next chapter in Peter Parker's journey.

                                                                                                                 

The trailer showcases Holland donning the iconic Spider-Man suit again as he faces new threats while navigating life in the aftermath of Spider-Man: No Way Home. With the world having forgotten Peter Parker's identity, the trailer hints at the superhero who is learning to embrace a new reality while continuing to protect his neighbourhood. The trailer also offers a glimpse at his complicated relationship with MJ, played by Zendaya.


Spider-Man: Brand New Day promises bigger action, menacing new villains, and challenges unlike anything Peter has faced before. Among the most highly anticipated films of the year, Spider-Man: Brand New Day enjoys a massive global following, India being one of the franchise's strongest markets. The excitement reached a new height when Sony Pictures Entertainment announced that the Spider-Man: Brand New Day's release date had been moved up by a day, sparking a frenzy among fans.


It's a BRAND NEW DAY for Peter Parker. Fighting crime full-time as Spider-Man in a world that doesn’t remember him—and the pressure of seeing his old friends move on without him—sparks a change in Peter he may not have the power to control. But that transformation might also be the only thing that can stop a shocking new threat to the city and those he loves - a powerful villain no one can even see. The world may have forgotten Peter Parker, but he hasn’t forgotten them.


Directed by Destin Daniel Cretton, Spider-Man: Brand New Day stars Tom Holland as Peter Parker/Spider-Man, alongside Zendaya, Jacob Batalon, Jon Bernthal, and Sadie Sink. 


Sony Pictures Entertainment India will release Spider-Man: Brand New Day in theatres in English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada on 30th July in 2D, 4DX 3D, 3D SCREEN X, DOLBY CINEMA 3D, ICE 3D, DOLBY CINEMA 2D, MX4D 3D, 3D, P[XL], and BIGPIX.

 

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.


போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.


‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.


‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.


ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்-குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.


“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.


ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,


இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.


பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.


டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.


நடிகை கௌதமி பேசியதாவது,


“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.


இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.


சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.


இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.


பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.


சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.


நடிகை சமந்தா பேசியதாவது,


“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.


இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.


‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.


இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.


ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.


ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.


படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

 

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன.


இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.


'AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


’AA23’ திரைப்படம் பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தருணங்கள்தான் அல்லு அர்ஜுன் அசல் பான் இந்தியா நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.

Pageviews