சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.


இப்படத்தின் கதை என்ன?


பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்.


ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது .நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.'உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே' என்றார் புத்தர்.'நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன' என்கிறது தம்மபதம்.


நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.


நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  'ராபர்'படத்தின் கதை.


இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

 'ராபர்' படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஊடகத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறவர்.இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.

'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். அதை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலை தளத்தில்  வெளியிட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து 'தாத்தா' என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார் .அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் விரைவில் வெளியாக உள்ளது.


தயாரிப்பாளர் கவிதா 'ராபர்' படம் பற்றிப் பேசும்போது,


"உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.


'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.

நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.


இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.


இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

 இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.


படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.


அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை

அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.


இவ்வாறு ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.


கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 


'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, 'ஸ்டார்' எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌ இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

 

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா. 



பிருத்தவி போலவரபு - தயாரிப்பாளர்.


சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரனமாக இருந்தவர் கனி அண்ணந்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 


நடிகை மோக்‌ஷா... 


தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் பிடிக்கும் தமிழ்ரசிகர்கள் கட்டாயம் ஆதரவு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  



ஒளிப்பதிவளர். 


அண்ணன் சமுத்திரக்கனி எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடியவர். அப்பா கதாப்பாத்திரத்தில் அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது அதே போல் இந்த படமும் வெற்றி பெற என் வாழ்த்துகள். 


நடிகர் தீபக். 


கனி சார் எடுக்கக்கூடிய நடிக்கக்கூடியப் படங்கள் எப்போதும் சிறந்த கருத்துகளை அடங்கிய படங்களாக இருக்கும் இந்த படத்திலும் நல்ல கருத்துகளோடு வருகிறார் என்று ரசிகர்களைப் போல் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 


நடிகர் ஹரிஷ். 


ஒரு நேர்மையான கதைக் களத்தோடு இந்தப்படம் வருகிறது. எப்போதும் possitive vibe உடையவர் கனி அண்ணன்.எல்லா படங்களைப் போலவும் இந்தப் படத்திற்கு அவரது முழு உழைப்பை அளித்திருப்பார் கட்டாயம்  இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள். 


நடிகர் பாபி சிம்ஹா. 


ராமம் ராகவம் படத்தின் இயக்குநர் தன்ராஜ் என்னுடைய நண்பர். கடுமையாக உழைக்கக்கூடியவர்  7 

மகனுக்கும் அப்பாவுக்கும்மான உறவு பற்றிய கதையை என்னிடம் சொன்னார். வியப்பாக இருந்தது. அப்பா கதாபாத்திரம் யார் என்று கேட்டேன் கனி அண்ணன் என்று சொன்னார். இனி இந்தப் படம் அவருடையது இந்தப் படத்தை அவர் எப்படி கொண்டு போகிறார் என்பதை மட்டும் பாருங்கள்  என்றேன். அதைப் போலவே இந்த படம் அருமையாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.


இயக்குநர் பாண்டிராஜ். 


 கூட பிறக்காத அண்ணன் கனி அண்ணன். கதைகளைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக செல்வோம். அப்படி சசி குமார் அண்ணன் அலுவலகத்தில் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தார் வாவா உனக்கு முன்னாடியே வந்துட்டேன்னு சொன்னாரு. அப்படிதான் அண்ணனோடு எனக்கு அறிமுகம் . 


பசங்க படத்தில் அன்பு அப்பாவின் கதாபாத்திரத்திற்கு கனி அண்ணா தான் டப்பிங் பண்ணி கொடுத்தார். அண்ணன் கிட்ட ஒரு குணம் இருக்கிறது.

பெரிய கம்பெனி கிட்ட வாங்கி இல்லாதவங்களுக்கு கொடுப்பாரு சின்ன கம்பெனி புது இயகுநர் படத்திற்கு சும்மா நடித்து கொடுப்பார். அப்படி நான் என்னுடைய பல படங்களுக்கு உதவி இருக்கிறார். தன்னுடைய படமாக இருந்தாலும் சரி வேறொருவர் இயக்குகிற படமாக இருந்தாலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்கக்கூடியவர். இந்த படத்திலும் அவருடைய உழைப்பை டீசரில் பார்க்க முடிந்தது.   இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 


நடிகர் தம்பி ராமையா


அரசியலில் கிங்மேக்கர்கள் எத்தனை காலம் கடந்தும் தடம் பதிப்பார்கள், அதுபோல தமிழ் சினிமாவில் ஹீரோ மேக்கர்ஸ்  பாலா சார், தம்பி பாண்டிராஜ் ஆகியோர்கள். 


அன்பினால் எல்லோரிடமும் உறவுக்காரராக மாறிவிடுபவர்  சமுத்திரக்கனி என்னுடைய அருமை தம்பி. அவர் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றய சூழலில் அப்பா செண்ட்மெண்ட் திரைப்படங்கள் தேவைப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.


நடிகர் சூரி.


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நம்பராக அறிமுகமானார். 


அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும்.  ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 


இயக்குனர் தன்ராஜ். 


இந்த நாளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. சிவபிரசாத் எழுத்தாளரின் கதை இது. இந்த கதை குறித்து கனி அண்ணனிடம் கூறினேன்.  கதையை நீயே இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது நான் நடித்த படங்களில் வேலை பார்த்த இயக்குனர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்த படம் உருவாகி இருக்காது. 


அண்ணனைப் போல நல்ல கதைகள் ஆதரித்து ஊக்கம் அளித்தால்   சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும். 


ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை  பாருங்கள். 



சமுத்திரக்கனி. 


 நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை. 

தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன். 

வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன். 


ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம். 


தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படபிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி. 


இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேரொரு இயக்குநரை அழைத்து வந்தார். இந்த படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வாருங்கள் என்றேன். இயக்குனர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார் நீயே படம் பண்ணுனு சொன்னேன் இயக்குனராக மாறி இருக்கிறார். 


இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 


இயக்குனர் பாலா...


சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர்.  மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

 

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.


நிகழ்வில் ஓவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 


வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே!


நாம் கலைகள் வழியாக இங்கு வெருப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும் , சமத்துவத்தையும் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , தொடர்ந்து பேசுவோம். என்றார்.

 

ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம்  செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​


ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.


ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது. மே 1, 2024 அஜித்குமார் சாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட ஏடிஎம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர். 


விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்


தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது..
இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதைச் செய்துள்ளார். சாம் சி எஸ் இசைப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின், அவர்த் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம், இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். நான் ஒரு தமிழ் அமெரிக்கன், ஏன் அமெரிக்கர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட் எப்படிப் பெஸ்ட் கொடுக்கிறார்கள் அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம். நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்தக்கம்பெனி. இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.


BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசியதாவது…
பிடிஜி நிறுவனத்தின் பாபிக்கு முதல் நன்றி. சினிமாவில் வந்தது 8 வருஷம் ஆகிவிட்டது, அதில் பீக் இந்த வருடம் தான். பிடிஜி நிறுவனம் மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. பாபியும் நானும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பாபியை எப்போதும் பிரமிப்பாகப் பார்க்கும் அளவு, பணிகள் செய்துகொண்டே இருப்பார். நான் ஒரு மருத்துவன் என்றாலும் எங்கள் குடும்பம் மொத்தமும், பாபியைப் பிரமிப்பாக பார்க்கிறோம். பாபி படம் எடுக்கப்போகிறேன் பார்த்துக் கொள் என்று சொன்ன போது எந்த மறுப்பும் என்னிடம் இல்லை. பாபியின் ஷெட்யூல் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் அத்தனை வேலைகளை முடித்துவிட்டு, என்னுடன் இரவில் படம் பற்றிப் பேசுவார். என் மனைவியே என்னைவிட பாபியிடம் தான் அதிகம் பேசுகிறீர்கள் என்பார். ஆனால் நாங்கள் பேசினால் தான் அடுத்த ஸ்டெப் என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். எங்கள் உழைப்பும், பேச்சும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும் அது மாதிரி தான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள் இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். அடுத்தடுத்து திட்டமிட்டபடி பல படங்கள், எங்கள் நிறுவனம் மூலம் வரும். ஜெயம் ராஜா என் நீண்ட கால நண்பர், எனக்காக எங்களை வாழ்த்த வந்துள்ளார் நன்றி. அஜய் ஞானமுத்து எங்கள் நிறுவனத்தில் மிரட்டலான படத்தைச் செதுக்கி வருகிறார். டிமாண்டிக் காலனி 2 உங்களை மிரட்டும். அருண் விஜய் நான் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர், அப்போதும் இப்போதும் அண்ணன் என அன்பாக இருப்பார். அவர் எங்கள் படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக்கதை வந்தவுடன் அவரிடம் தான் முதன் முதலில் கதைச் சொல்லச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். திருக்குமரன் மிகச்சிறந்த திறமைசாலி, அவரிடம் பெரிய பிளானிங் இருக்கும். அது அவரது பிளஸ். இந்தப்படம் கண்டிப்பாகத் திருக்குமரனுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும். அவர்ப் பெரிய வெற்றிப் பெற்றால் எங்களுக்கு மகிழச்சி. சித்தி இத்னானி பலரது மனதைக் கொள்ளை கொண்டவர். இந்தப்படம் முடியும் போது தமிழ்ப் புலவர் ஆகிவிடுவார். தான்யா இப்படத்தில் பங்குகொண்டது மகிழ்ச்சி. சாம் சி எஸ் பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. நடிகர்ப் பாலாஜிக்கு இது பெரிய திருப்புமுனையாக இருக்கும். எடிட்டர் ஆண்டனி எப்போது கேட்டாலும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்பார், எங்களை வாழ்த்த வந்த ஆண்டனிக்கு நன்றி. எல்லாப்படமும் பிரம்மாண்டமாக வரும் எனச்சொன்னால் உங்களுக்குப் போரடிக்கும், ஆனால் அது தான் உண்மை. இந்தப்படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யம் தரும், டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும். நன்றி.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.


எடிட்டர் ஆண்டனி பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி. இது நல்ல படமாக இருக்கும். அருண்விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் யோகி பேசியதாவது…
பாபி சார், மனோஜ் சார் மற்றும் திருக்குமரன் சாருக்கு நன்றி. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. எனக்குத் தந்துள்ள கதாப்பாத்திரத்தைச் சிறப்பாக செய்வேன். அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
திருக்குமரன் சார், பாபி சார், மனோஜ் சார் அனைவருக்கும் நன்றி. என்னை இந்தப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அருண்விஜய் சாரை ரொம்ப காலமாகத் தெரியும், பல நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. பிட்னெஸாக உடம்பை வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம் எனத் தெரியும். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் குவியும். என் படக்குழுவினருக்கும் மீடியாவிற்கும் என் நன்றிகள்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது. தயாரிப்பாளர்ப் பாபி சின்ன சின்ன விசயங்களுக்கும் எனக்குக் கால் செய்வார், தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப்பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும். ஒரு படம் ஹிட்டாகக் கதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிடிவிட்டி இருந்தாலே அந்தப்படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள். சாம் சி எஸ் என்றாலே பின்னணி இசையில் மிரட்டுவார் என்பார்கள் அதற்காக நான் பாடல்கள் நன்றாகச் செய்ய மாட்டேன் என அர்த்தம் இல்லை. நான் ஒவ்வொரு வருடமும் நல்ல பாடல்கள் தந்து வருகிறேன். இந்தப்படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும். இயக்குநர் ஒவ்வொரு பாடலின் போதும் தரும் பாராட்டுக்கள் எனக்குப் பெரும் ஊக்கம் தரும். இந்தக்கம்பெனிக்கு யார்ப் படம் செய்தாலும் ஹிட் படமாகத்தான் இருக்கும் இவர்களிடம் அத்தனைத் திட்டமிடல் இருக்கிறது. அருண் விஜய் சார் மிகப்பெரிய உழைப்பாளி, எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார். அவருடன் வேலைப் பார்ப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…
ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது…
பாபி பாலச்சந்திரன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை உயரம் எட்டியுள்ளார். உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். டாக்டர் மனோஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள். படத்தில் உழைக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரன் பேசியதாவது…
இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார். இந்தப்படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லப் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு. தான்யா, சித்தி இத்னானி அழகாக நடிக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அருண்விஜய் பேசியதாவது…
பாபி சார் மனோஜ் சார்ப் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன், நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன். திருக்குமரன் இந்தக்கதைச் சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார். 
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.   

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 
தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

 

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.


இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  தயாரித்துள்ளார்.


ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற

கண்ணுக்குத் தெரியாத அந்த  ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.


இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். அதில் உணர்ச்சிகரமான காட்சிகளும் உள்ளன.மூச்சைப் பிடித்துக் கொள் பின்னால் பதுங்கி இரு என்கிற பரபரப்போடு இந்தப் படம் இருக்கும்.


இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.


 அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை பாவக்குட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ஷிஜா ஜினு தயாரித்துள்ளார்


இதற்கான படப்பிடிப்பு கேரளாவில் திருச்சூர், வாகமன் ,குட்டிக்கானம், மூணார் , ஏலப்பாறா போன்ற இடங்களில் 40 நாட்கள் நடைபெற்றுள்ளன.

இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்உருவாகிறது.


 அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.


சுமார் இரண்டு மணி நேரம் கால அளவு கொண்ட இந்தப் படத்தை  பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.


படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.அதனைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும்.

 

மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து  ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது  உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். 


சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா?


இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் 'தீட்டு' என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது.


 'தீட்டு' ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது,


"நமது அறிவார்ந்த முன்னோர்கள்  இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தனிமைப் படுத்தினர்.


அதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தின இதையே பெண்களுக்குக் காலங்காலமாக இழைத்து வருகின்றனர்.


இதைப் பற்றிய விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் ஏற்பட வேண்டி உள்ளது. அதற்காகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம். நல்லதொரு துள்ளல் இசையில் பாடலாக்கி, 

பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம்.


பாடல் விரைவில் வெளியாக உள்ளது" என்றார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் நவீன் லக்ஷ்மன்.இதில்

ஆதேஷ் பாலா,ரதி நடித்துள்ளனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

பாடலை வி.ஜே.பி ரகுபதி எழுதியுள்ளார்.

பாடலை கானா பாலா பாடியுள்ளார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை

அருண்குமார், மோனிஷா நவீன் தயாரித்துள்ளனர்.

 

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. 


அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். 


இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.


வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது


‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி. மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் நூறு சதவீதம் கனெக்டாகும் என நினைக்கிறேன். 


இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார். வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக,தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.

Pageviews